சென்னை வாழ் பதிவர்கள் கணியம் கருத்தரங்கம் (இலயோலா கல்லூரி) பங்குபெற்று என்ன பேசினார்கள் என்று பதிவும், ஒலிக்கோப்பும் உலகத்திற்கு அளிக்கமுடியுமா?
அன்புடன்,
நா. கணேசன்
http://thamizhthottam.blogspot.com/2009/02/blog-post_09.html
தமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்
சென்னை இலொயோலா கல்லூரியில் வருகிற பிப் 12-13 நாட்களில் கணியம் எனப்படும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் பொறியியல்/அறிவியல் கல்லூரி கணினித்துறை மாணவர்கள் தங்கள் இறுதி ஆண்டு திட்டப்பணி ஒப்படைப்பில் தமிழில் கணினி சார்ந்த ஆய்வுகளை மென்பொருட்களை உருவாக்குவது எப்படி, தமிழ்கணினி துறையின் அவசியம், தேவை, பணி வாய்ப்பு என பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.
இக்கருத்தரங்கை கணித்தமிழ் சங்கம், தமிழ் இணைய பல்கலைக்கழகம், இலொயோலா கல்லூரி இணைந்து நடத்துகின்றன.
பங்கேற்பு:
முனைவர் மன்னர் சவகர், துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்
முனைவர் அனந்த கிருட்டிணன், முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்
முனைவர் நக்கீரன், இயக்குனர், தமிழ் இணைய பல்கலைகழகம்
அருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை, முதல்வர், இலொயோலா கல்லூரி
திரு ஆண்டோபீட்டர், தலைவர் கணித்தமிழ் சங்கம்
திரு இளங்கோவன், முன்னாள் தலைவர் கணித்தமிழ் சங்கம்.
முனைவர் டி.வி. கீதா, பேராசிரியர், அண்ணா பல்கலை கழகம்
திரு. ஜெ.ஜெரால்டு இனிகோ, லொயோலா கல்லூரி
திரு இ.இனியநேரு, தொழில்நுட்ப இயக்குனர், தேசிய தகவல் மய்யம்.
முனைவர். வி.கிருட்டிண மூர்த்தி, பேராசிரியர் , கிரசண்ட் பொறியியல் கல்லூரி
முனைவர் பத்ரி சேசாத்ரி, இயக்குனர், நியூ ஆரிசான் மீடியா
திரு. டிஎன்சி. வெங்கட்ரங்கன், வட்டார இயக்குனர், மைக்ரோசாப்ட் நிறுவனம்
இடம்:
இலொயோலோ கல்லூரி
இலாரன்சு சுந்தரம் கூடம்,
ஜூபிலி கட்டிடம், கீழ்த்தளம்,
சென்னை - 600 034
நாள்:
பிப் 12 மற்றும் பிப் 13
தொடர்புக்கு: திரு . ஜெ.ஜெரால்டு இனிகோ, லொயோலா கல்லூரி 9444637478
WORKSHOP ON TAMIL COMPUTING TECHNOLOGY
Date: Feb 12-13, 2009
(Thursday & Friday)
Time: 10.30 to 17.00 Hrs
(Final Year College Tamil Projects Meet : 4th Year
Venue: LOYOLA COLLEGE
Lawrence Sundaram Auditorium, Jubilee Building
Ground Floor, Chennai - 600 034
Tamil Virtual University
www.tamilvu.org
Kani Thamizh Samgam
www.kanithamizh.in
Loyola College- Computer Society of India
WORKSHOP ON TAMIL COMPUTING TECHNOLOGY
A workshop on Tamil Computing Technology will be conducted jointly by Kani Thamizh Sangam, Tamil Virtual University and Loyola College. The workshop will deliberate on the tools and interfaces available for the Tamil language Computing and will discuss about the localization of Tamil in Computer system in order to reduce the digital divide. The workshop is organized to encourage the students to take up projects in Tamil Software Development and will also indicate the job opportunities for those who are involved in Language Computing Technology especially in Tamil. Experts working in this field will demonstrate the ways of working on language computing, the problems that could arise in for Projects etc., The members of Kanithamizh Sangam will also guide in doing the Projects.
Who can Participate?
IT and Computer Science students in Engineering and Arts & Science Colleges in State, who have to take up their project work as partial fulfillment of their degree, in the academic year 2009-10 along with their project guides. Teaching Faculties are also welcomed with the same participation procedure.
Participation Fee: Rs. 300/- (includes lunch and tea). Fees has to be paid in the form of a Demand Draft drawn in favour of "Kani Thamizh Sangam" payable at Chennai along with the application.
Since the number of seats are limited, students will be registered on "First Come First Served" basis. The applications along with the DD should reach on or before Feb 6, 2009.
Send your confirmation and DD to:
Kani Thamizh Sangam, (Valli Software Solutions)
421.Anna Salai, Teynampet,(Teynampet Signal),Chennai-18
Tel: 044 - 2435 5564
Download all info at www.kanithamizh.in
WORKSHOP ON TAMIL COMPUTING TECHNOLOGY
Date: Feb 12 - 13, 2009 (Thurs & Fri) Time: 10.30 to 17.00 Hrs
Venue: LOYOLA COLLEGE
Day 1: Registration - 8.30 am Inaugural Function - 10.30 am
About the event
Mr.M. Anto Peter
President- Kani Thamizh Sangam
Tamil in Mobile phones & Students projects
Dr. T.V. Geetha
Professor, Anna University, Chennai
OS, Font Encoding & Unicode :
Mr.A. Elangovan
Former President, Kani Thamizh Sangam
Projects in TVU & Online Tamil Learning
Dr.P.R. Nakkeeran
Director, Tamil Virtual University
Language input and fundamental tools & Students projects
Dr V. Krishnamorthy
Professor Crescent Engg College & Former Prof Anna University
Tamil & Microsoft Initiatives
Mr.T.N.C. Venkatrangan
Regional Director, Microsoft - Director, Vishwak pvt Ltd
Opportunities in Tamil Computing and open source
Dr.Badri Seshadri
Chairman, New Horizon Media pvt Ltd
Government initiatives
Mr.E.IniyaNehru
Technical Director, National Informatics Centre
OPPOURTUNITIES FOR TAMIL COMPUTING PROJECTS:
Tamil Computing Projects will attract the leading software companies like Microsoft, who are now concentrating in Local Language Developments. More Job opportunities on localisation Tamilnadu Govt. encourages Tamil Software development by providing
grants to individuals, Colleges and Industries. Tamilnadu Govt. provides Cash awards for best Tamil Software Applications every year.
For Event & Hostel facility, contact Mr.J.Jerald Inico, SBC-CSI,
Loyola College Mobile: 9444637478
தமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்
Posted by
நா. கணேசன்
at
2
comments
கூகுள் இணையப் பேருந்து ~ தமிழ்நாட்டு நகர உலா
நீங்களோ, உங்கள் நண்பர்களோ கூகுள் இணையப் பேருந்தைச் சென்று பார்த்தால் அதனைப் பற்றி விரிவாகப் பதிவெழுதுங்கள்.அதன் மூலம் அடுத்த ஊர்களுக்கு, கூகுள் இணையப் பேருந்து செல்லும்போது இன்னும் கூடுதலாக மக்கள் சென்று பார்க்க வசதியாய் இருக்கும். நிறையச் செலவு செய்து பஸ் அனுப்புகிறார்கள், நம் தமிழ்மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தமிழில் இணைய எழுத்துக்கள், வலைப்பதிவுகள், ... கூடக்கூட இணையத்தில் தமிழின் ஆழம் அதிகம் ஆகும். நாட்டு நடப்புகள் தமிழ் மக்களுக்குச் சாதகமாக மாறும்
மேலும் தகவல்கள் (உ-ம்: பிரேம் ராமசாமி தொலைபேசி எண்) கிடைத்தால் தருவேன்.
நன்றி!
நா. கணேசன்
http://www.google.co.in/intl/en/landing/internetbus/
The Internet Bus Project is an attempt to educate people about what the Internet is, and how it may be beneficial to their lives, by taking the Internet experience to them through a customised Internet-enabled bus, which will travel to several towns and cities across India.
Google Internet Bus schedule in Tamil Nadu:
03 Feb Chennai
05 Feb Vellore
06 Feb Krishnagiri
07 Feb Salem
11 Feb Erode
12 Feb Tiruppur
14 Feb Coimbatore
18 Feb Dindigul
19 Feb Madurai
23 Feb Tirunelveli
25 Feb Nagercoil
27 Feb Tuticorin
02 Mar Pudukkottai
03 Mar Tiruchirappalli
06 Mar Thanjavur
08 Mar Kumbakonam
10 Mar Neyveli
12 Mar Cuddalore
13 Mar Tiruvannamalai
The bloggers, googlegroupers can arrange to meet with Google bus folks by taking groups of interested folks and teach them to write blogs, ggroups, etc., Tomorrow, Google internet bus is reaching Salem.
http://www.bangaloreinc.com/2009/02/03/google-launches-internet-bus-i
“Much of Tamil content is actually created and consumed by the Tamil Diaspora; but that can be simplified and made relevant for the local population,” said Google India product manager Prem Ramaswami. The company plans to customise some of its major products in Tamil, and demonstrate the ones already available in Tamil during its tour.
“We are also looking at licensing useful information like bus routes and ticket availability; as well as including more of Tamil media content like newspapers in our archives and search,” Mr.Ram said.
http://www.internetworldstats.com/stats3.htm#asia
http://royal.pingdom.com/2008/04/04/how-we-got-from-1-to-162-million
http://tamilwikipedia.blogspot.com/2009/02/blog-post.html
உசாத்துணை:
(1) தமிழ் எழுத்து பிறந்த காலத்தில் இருந்தே மக்களிடம் பரவலாகக் கற்பிக்கப்பட்டுள்ளது.
Orality to literacy: Transition in Early Tamil Society
http://www.hinduonnet.com/fline/fl2007/stories/20030411001208100.htm
தமிழ் எழுத்தின் எளிமை அது எல்லாக் குடிகளையையும் சென்றடைய ஏதுவாக அமைந்துள்ளது. ஒரு தனிக்கூட்டம் தமிழ் எழுத்தறிவைத் தனி உடைமையாக்கவில்லை. இந்தியாவில் இருக்கும் கல்வெட்டுக்களில் 70-75 விழுக்காடு % நம் தமிழில் தானே இருக்கிறது. அண்மையில் கூட, தில்லை சபாநாயகர் கோவில் நிர்வாக மாற்றம், வள்ளுவர் புத்தாண்டு தினம் இரண்டுக்கும் 2009-ன் முக்கியக் கல்வெட்டுக்கள் அமைக்கப்படுவதாகத் தமிழன்பர்கள் அறிவித்தனர்.
தொழில் நுட்பம் வந்தபோதெல்லாம் தமிழ் அவற்றைத் தன்மயம் ஆக்கி முன்னேறியுள்ளது. அச்சு, தட்டச்சு, கணினி, இணையம், ... ஒரு இலட்சம் பேர் தமிழ்நாட்டில் இருந்து வலையாடினால் தமிழ் நவீனமடையும். அறிவியல் செய்திகள் உடனுக்குடன் தமிழில் ஏறும். சமூக வளர்ச்சி உடனே கிடைக்கும்.
(2) தமிழ்க் கணிக்கல்வி எளிமையாக:
(அ) தமிழ் ஒரு பாடமாக எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயம்.
(ஆ) தமிழ்99 விசைப்பலகை.
(இ) இணைய வசதி இலவசமாய் பள்ளி, நூலகம், ஊராட்சி அலுவலகங்களில் தருதல்.
(ஈ) பிணைபட்ட உ/ஊ ஏறிய உயிர்மெய் எழுத்துக்களை உடைத்தெழுதுதல்
- இதனைச் செய்யும் திரட்டிகள், அரசாணையின் அவசியம்:
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html
Posted by
நா. கணேசன்
at
1
comments
முத்துக்குமார் தீக்குளிப்பு - தினமணி தலையங்கம்
அதேநேரத்தில், தீக்குளிப்பது, உயிரை மாய்த்துக் கொள்வது, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது, இன்னும் ஒரு படி மேலே போய் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது என்று உணர்ச்சிக்கு வடிகால் தேடுவதை மக்களாட்சியில் நம்பிக்கையுடைய எவருமே ஏற்றுக்கொள்ள முடியாது.
முத்துக்குமாரின் மரணம், அவர் மீது அனுதாப உணர்வைத் தூண்டுமே தவிர இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிடுமா என்ன?
பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் முல்லைத்தீவில் மிருகங்களைப்போல அலைந்துகொண்டிருப்பதைப் பற்றியே கவலைப்படாத இலங்கை அரசு, முத்துக்குமார் தீக்குளித்துவிட்டார் என்பதற்காக தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவா போகிறது?
பொறுப்புள்ள பத்திரிகையாளராக முத்துக்குமார் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஏனைய இளைஞர்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை அல்லவா காட்டியிருக்கிறார். ஒற்றுமையுடன் பிரச்னைகளுக்காகப் போராடாதவர்கள் என்ற ஏளனக் குரலுக்கு இதுநாள் வரை உள்ளாகியிருந்த தமிழகம், இப்போது துணிவுடன் போராடத் தெரியாத கோழைகளின் பூமி என்கிற அவமானத்தையும் அல்லவா சுமக்க நேரிடுகிறது.
தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் சமுதாயத்தின் கவனத்தை ஈர்ப்பது என்கிற நோய், 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்தான் அறிமுகமானது. அப்படி இறந்தவர்களுக்கு மொழிப்போர் தியாகிகள் என்று கௌரவம் வழங்கப்பட்டது முதல் தீக்குளித்து இறப்பது பெரிய தியாகம் என்பதுபோலவும், ஆட்சியாளர்களுக்கு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இதுதான் சரியான வழி என்பதுபோலவும் ஒரு தவறான கண்ணோட்டத்தை இளைஞர்கள் மத்தியில் அது ஏற்படுத்தியது.
சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டவர்கள் அடக்குமுறை ஆட்சியாளர்களின் பெருங்கொடுமைச் சிறையையும், தடியடியையும், துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொண்டு போராடினார்களே தவிர, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
அதற்குப் பெயர்தான் தியாகமே தவிர, ஒருங்கிணைந்து போராடுவதற்குப் பதிலாக உயிரை மாய்த்துக்கொண்டு இறப்பதற்குப் பெயரா தியாகம்?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களை மட்டும் தியாகிகளாகக் கருதாமல், தீக்குளித்து இறந்தவர்களையும் தியாகிகளாக வர்ணித்ததன் விளைவுதான் இன்றுவரை உணர்ச்சிவசப்படும் இளைஞர்கள் தீக்குளிப்பதை ஏதோ வீரதீர சாகசம் என்று நினைத்துச் செயல்படுகின்றனர்.
எல்லா திராவிட பாரம்பரியக் கட்சிகளுமே வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற தீக்குளிப்புகளை ஆதரித்தன என்பதுதான் கசப்பான உண்மை. இப்படித் தீக்குளித்து இறப்பவர்களின் குடும்பங்களுக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுப்பது என்கிற கலாசாரமும் தொடங்கப்பட்ட பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் தீக்குளிப்பதன் மூலம் தங்களது குடும்பத்தின் வறுமையைப் போக்க முயன்ற சம்பவங்களும் உண்டு.
அதைவிட உண்மை, நமது தலைவர்களும் சரி, தங்களுக்காக இன்னின்னார் தீக்குளித்தார்கள் என்கிற செய்தி வெளிவருவதை விரும்புகிறார்கள் என்பதுதான். தீக்குளித்து இறப்பவர்களிடம் எங்களுக்கு அனுதாபம் கிடையாது என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு நமது அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் திட்டவட்டமாகச் சொன்னால் ஒழிய இந்த முட்டாள்தனமான கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது.
முத்துக்குமார் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்துமே நியாயமானவை. அவரது நான்கு பக்க வாக்குமூலம் அற்புதமான ஒன்று. சந்தேகமே இல்லை. அதற்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அவரது முட்டாள்தனம் "பகுத்தறிவு"ள்ள யாருக்கும் ஏற்புடையதல்ல. இதற்கு "தியாகம்" என்கிற முலாம் பூசி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் நமது அரசியல்வாதிகள் தமிழகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி.
இந்தத் தவறு முத்துக்குமாருடன் முடிந்துவிடட்டும். இனிமேலும் இது தொடரக்கூடாது!
நன்றி: தினமணி, (1/31/2009)
சில எதிர்வினைகள்:http://groups.google.com/group/panbudan/msg/87022b2bf72ad13c
http://panimalar.blogspot.com/2009/02/blog-post.html
ஆங்கிலப் பத்திரிகைகளில் முத்துக்குமாரின் தியாகம் எப்படி இந்தியர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது?
http://www.telegraphindia.com/1090201/jsp/nation/story_10469009.jsp
DTP operator turns Lanka Tamil icon
G.C. SHEKHAR
Muthukumar
Chennai, Jan. 31: An ordinary DTP operator who used only a Tamil calendar in his room, read obscure Tamil literature and wanted to be a film director has emerged as the symbol of protests in support of Sri Lankan Tamils.
K. Muthukumar, who immolated himself in front of a central government office complex on Thursday, has by his one singular act relegated to the background various other protests — fasts, human chains, resignation dramas — staged by politicians, film stars and others demanding a ceasefire by the Lanka military.
His funeral procession this afternoon was attended by hundreds of college students who distributed copies of his pamphlet appealing for greater support to the Eelam cause.
The 26-year-old, who worked in a Tamil magazine, had said his last wish was “his body be used as a trump card in the battle for the Eelam”. That may not quite be realised as the ceasefire is nowhere in sight and the Lankan army is on its final march.
But Muthukumar, a bachelor who lived with his sister, has become the symbol of the struggle with politicians competing with one another to hail him as the “ultimate Tamil hero”.
P. Rathinathurai, head of the cultural wing of the LTTE, even penned a eulogy that “the flames that enveloped his body would light up the Eelam struggle”.
Although chief minister M. Karunanidhi urged that his “sacrifice” should not be politicised, Muthukumar’s death has given the pro-Tamil campaigners a handle to re-ignite the protests that had become meaningless in the face of the LTTE’s capitulation and Delhi’s refusal to push for ceasefire.
The protests, observers felt, could now gather momentum in view of the emotions whipped up by politicians, the sudden hero-worship that Muthukumar has attracted and also the compensation of Rs 2 lakh offered by the state.
Suicide as an expression of protest or sorrow has been a regular feature of Tamil Nadu’s polity for decades.
Anti-Hindi agitators of the sixties, MGR’s followers during his illness in 1984, Vaiko’s supporters when he was expelled from the DMK in 1993, ADMK cadre unable to stand Jayalalithaa’s defeat in 1996 — all resorted to self-immolation out of anger or anguish.
Even before Muthukumar’s burial came the news that one more person near Dindigul, in south Tamil Nadu, had attempted self-immolation in support of the Lankan Tamils.
Ravi, 39, was admitted to the Madurai general hospital with severe burns last night. Police, however, said he was a history-sheeter who had suffered the burns in a stove burst in his kitchen.
Colleges shut
The Tamil Nadu government today ordered indefinite closure of colleges and hostels — both private and government — in the state in the wake of student unrest on the Lankan Tamil issue. The decision was taken two days before the students’ proposed state-wide strike from Monday.
Posted by
நா. கணேசன்
at
1
comments
தில்லை நடராசர் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு எடுப்பதற்காக தடை நீக்கம்
http://www.paristamil.com/tamilnews/?p=26165
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு எடுப்பதற்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று நீக்கியது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், அதை நிர்வகிக்க செயல் அதிகாரி நியமிக்கவும் தமிழக அரசு 1987ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கோயிலில் உள்ள பொது தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அப்பீல் செய்யாமல் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தவறு என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதன் பின்னர் பொது தீட்சிதர்கள் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அப்பீல் செய்யப்பட்டது. அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது என்று அறநிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து 2006ஆம் ஆண்டு பொது தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உத்தரவை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தார்.
இந்த சூழ்நிலையில், சிவனடியார் ஆறுமுகசாமி என்பவர் கோயிலின் கருவறை முன்பு தேவாரம் திருவாசகத்தை பாட முயன்றார். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அரசு ஏற்று நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.பானுமதி முன்னிலையில் நடந்து வந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, பல தீட்சிதர்கள் மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலை தீட்சிதர்கள் நிர்வகிக்க உரிமையில்லை. அரசுக்கு தான் உரிமை உண்டு என்று வாதாடினார்.
ஆறுமுகசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.காந்தி, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆர்.பானுமதி தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பார்வதி, சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு எடுப்பதற்கான தடையை நீக்கி உத்தரவிட்டார்.
ஒரு வாரத்தில் நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் செயல் அதிகாரி வசம் பணிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
----------
http://news.webindia123.com/news/Articles/India/20090202/1167531.html
HC upheld TN Government order to take over temple admin
Chennai Monday, Feb 2 2009 IST
Madras High Court today upheld the order of the State Government to take over the administration of the Sri Sabanayagar temple, popularly known as Chidambaram Natarajar temple.
While dismissing a writ petition filed by Temple Podhu Deetchidhars Sangam(PDS), Ms Justice R Bhanumathi said that to streamline the mismanagement and rectify the mistakes, the Government had appointed an administrator.
The PDS challenged the order of the Government dated July 31, 1987 to appoint an Executive Officer (EO) through Hindu Religious and Charitable Endownment Board(HR&CE) for the temple u/s (45)(1) of the board.
In its counter, the Government submitted that the EO was appointed following allegation against PDS.
The petitioner contended that they are maintaining the temple for centuries and the appointment of EO amounted to intereference in the religious affairs with malafide intention and goes against Article 26 of the Constitution.
The petitioner further submitted that the temple was not a public one and they enjoyed special status as per Article 26 of the Constitution. Therefore, the order is not sustainable and they enjoyed complete autonomy in administering temple proprities, the petitioner added.
The judge said under the circumstances, the PDS can claim protection only under Artice 25 of the Constitution. But the right to manage the temple is not part of the religious practice, and as such comes under the statutory control of HR & CE. It has been consistenly held by the Supreme Court that the secular activities are subject to statutory control, judge added.
The judge further said, considering the facts, the PDS is not entitled to protection under clause (b) and(d) of Article 26 of the Constitution.
-- (UNI) -- 02MS30.xml
-----------------------------------------------------------------------------
While searching for the Chidambaram temple judgement made at The Madras High Court, I came across an article published in Ananda Vikatan last year. At that time, there were some controversies whether Tevaram can be sung at Thillai temple.
Here is the views of Agnihotram Ramanuja Thathachariyar, said to be very learned in Vedas, published in Vikatan:
http://subudu.blogspot.com/2008/03/blog-post_12.html
I guess there will be appeal by Deekshitar club at the Supreme Court. It will be seen whether the Tamilnadu govt. can appoint an Executive Officer or its proposed action will be given a stay at the supreme court.
2009 seems an important year - Ceylon, Govt. changing to Valluvar day as New Year officially, and now Srimati. Justice Bhanumathi declaring Thillai temple is a Govt. property rather than a small group of Deekshitars' private holdings legally.
Regards,
N. Ganesan
நந்தன் இல்லாமல் நடராஜரா?
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20511252&format=html
தில்லை தீட்சிதர்கள் விவரணப்படம்:
http://nganesan.blogspot.com/2008/03/chidambaram-dikshitars.html
EO takes over Chidambaram temple
http://www.hindu.com/2009/02/03/stories/2009020357940100.htm
தமிழர்களுக்கு, அதுவும் முக்கியமாகச் சைவர்களுக்கு, கோவில் என்றாலே சிதம்பரம் தான். 1000 ஆண்டுகளாய் நாம் அறிந்த முறை நீதிமன்றத்தால் அரசு நிர்வாகம் ஆகிறது. மேலும், சுப்ரீம் கோர்ட்டிலும் இவ்வழக்கு கொண்டு போகப்படும்.
பலவகையில் இன்று பல சமயங்களின் கடவுள் வாழும் இடங்களுக்கு பணங் காசு, தங்கம், ... நன்கொடையாக வருகின்றன. அதிலும், வெளிநாட்டில் இருந்து கடவுள் இருப்பிடங்களுக்கு இந்தியா வரும் நிதிகள் மிகுதியும் அதிகரித்துள்ளன. அவை எல்லாவற்றையும் முறைகேடுகள் இன்றி செலவளிக்கப் படுகின்றனவா? என்று அரசின் மேற்பார்வை உருவாகுமா?
நா. கணேசன்
சிதம்பர ரகசியம் - முடிவுரை!
http://aanmiga-payanam.blogspot.com/2009/02/blog-post.html
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு நிர்வகிக்க அனுமதி: ஐகோர்ட்டு பரபரப்பு
தீர்ப்பு
http://www.vikatan.com/vc/2009/jan/vc0188.asp
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்றது!
http://kosukumaran.blogspot.com/2009/02/blog-post.html
நா. கணேசன்
Posted by
நா. கணேசன்
at
4
comments
நகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்
தாராபுரம் கொழிஞ்சிவாடியில் குழந்தைப் பருவத்தில் வளர்ந்து, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்து இணையற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்த நாகேஷ் இயற்கை எய்திவிட்டார். பலருக்கும் இரண்டு பெயர் வீட்டில் இருக்கும்: official பெயர் (கல்வி, கோயில், ...) பயன்பட நாகேஸ்வரன். முதன்முதலில் நடித்த நாடகத்தில் நாகேஸ்வரனுக்கு முதற்பரிசு அளிக்கிறேன் என்று இந்த official பெயர் சொல்லிப் பரிசளித்தவர் எம்ஜிஆர். நாகேஷைக் கூப்பிடச் செல்லப்பெயர்: குண்டுராவ்.
மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் 'தை நாகேஷ்' ஆனது. ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றிவிட்டார்கள்" என்பர். தை, தக்கா என்று மேடையில் குதித்து அமர்க்களம் செய்து எம்ஜிஆரிடம் பரிசு பெற்றவர் நகைஞர் நாகேஷ்!
ஆட்டுக்கல்லைப் போல் தான் - ஆண்டவன்! ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், "உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே... எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?' என்றார். சிரித்தபடியே நாகேஷ், "உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா... அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா... மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல் தான். ஆண்டவன் "அம்மை' என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது' என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. "சிரித்து வாழ வேண்டும்' என்ற தன்வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருக்கிறார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் நாகேஷைக் கவிஞர் கண்ணதாசன் வாழ்த்திய விருத்தம் ஒன்று உண்டு. சூரி என்ற மருத்துவராக மறைந்த நாகேஷ் நடிக்க, கவியரசர் தானாகவே வருவார்.
அந்த விருத்தத்தைத் தருகிறேன்:
அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர்
பெருமருந்து உயர்பக்தி என்பதைப் பெரியவர்பலர் பேசுவர்
சுரமருந்தென எதனையோதரும் சூரி என்ற மருத்துவர்
கரிமெலிந்தது போல்மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே !
சுர மருந்து = medicine for fever (சுரம் = காய்ச்சல் நோயின் வடசொல்). 'யானை மெல்லிசானால் தோல்போர்த்திய உடம்பிருக்குமே அப்படி நாகேஷின் உடல்வாகு, அவர் காலமெல்லாம் வாழி' என மங்கலிக்கிறார். பாட்டைக் கேட்டு நாகேஷ் 'அதுதான் கண்ணதாசன்' என்று வியப்பார், 'அதுதான் (டாக்டர்) ஃபீஸ்' என்று அதிர்வெடியைப் போட்டுவிட்டு எழுந்து செல்வார் கவிஞர் :-) தமிழர் நெஞ்சினில், காணொளிகளில் காலமெல்லாம் வாழ்க!
நா. கணேசன்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அரும ருந்துகள் போன்ற வர்தமிழ்
அரச ராம்திரு வள்ளுவர்
பெரும ருந்(து)உயர் பக்தி என்பதைப்
பெரிய வர்பலர் பேசுவர்
சுரம ருந்தென எதனை யோதரும்
சூரி என்றம ருத்துவர்
கரிமெ லிந்தது போல்மெ லிந்தவர்
கால காலங்கள்* வாழ்கவே!
(*இங்கு, மெல்லின ஒற்று 'ங்'' அலகிடப்படாமல் விளச்சீராக ஒலிக்கும்).
வாய்பாடு: புளிமா விளம் மா விளம் மா விளம் விளம்
1,5 மோனை. நன்றி: சந்தவசந்தம் குழுமம்
நாகேஷின் பேட்டி (வானொலியில்):
http://radiospathy.blogspot.com/2009/01/blog-post_31.html
http://tfmpage.com/forum/archives/23209.5180.07.11.34.html
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=4739&postdays=0&postorder=asc&start=90
நடிகர் நாகேஷ்
''ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகன் ஆக்கினார்கள்!''
தமிழ்ப்பட உலகில் தான் பெரிய நகைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில் கூட நினைத்தது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னால், மாம்பலம் கிளப் ஹவுஸ் விடுதியில், படுக்க இடமின்றி 'மொபைல் நாகேஷா'கத் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் தனக்கு ஒருநாள் பங்களா வாசமும் கார் சவாரியும் கிடைக்கும் என்று அவர் கற்பனைகூடச் செய்து பார்த்தது கிடையாது.
''காரியாலய நாடகங்களிலும் அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள்; கைதட்டினார்கள். 'நாகேஷ் வந்தால் சிரிக்க வைப்பான்' என்று அவர்களே முடிவுகட்டிவிட்டார்கள். ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே, முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான்'' என்கிறார் நாகேஷ்.
1933-ம் வருஷம் செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர் நாகேஷ். நிஜப்பெயர் குண்டுராவ். 1951-ம் வருஷம் மார்ச் மாதம் 17-ம் தேதியைத் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார். அன்றுதான் அவருக்கு வைசூரி போட்டது. அதன் பலனாக அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிக் அழுதார். தன் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று நினைத்தார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர், படிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத் சென்று ரேடியோ கம்பெனி ஒன்றில் சிறிது காலம் பணியாற்றினார். பிறகு சென்னையில் குடியேறி, ரயில்வே ஆபீசில் என்.ஜி.ஓ-வாக வேலைக்கு அமர்ந்தார்.
''உண்மையைச் சொல்கிறேன்... எனக்குக் கொடுத்த சம்பளம் தண்டம். நான் ஒழுங்காகவே வேலை செய்யமாட்டேன். நாடக வசனம்தான் உருப்போட்டுக்கிட்டிருப்பேன். நாலு மணி அடிச்சா ஏதாவது சாக்கு சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன். ஒரு நாள், மேல் அதிகாரி எனக்கு அனுமதி கொடுக்கமாட்டேன்னுட்டார். 'அப்படின்னா நான் போன வாரம் கடனா கொடுத்த எட்டணாவைத் திருப்பிக் கொடுங்க, சார்!' என்று கேட்டு எல்லார் எதிர்லேயும் அவர் மானத்தை வாங்கிவிட்டேன். பாவம், அவர்கிட்டே எட்டணா கூட இல்லே. மரியாதையா என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார்.
எப்படி எனக்கு நடிப்பில் ஆசை வந்ததுன்னு கேட்கறீங்களா... சொல்றேன். ஒரு நாள் மாம்பலம் தேவி பாடசாலையில் ஒரு நாடக ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அதுலே ஒரு காரெக்டர் சரியா டயலாக் பேசவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான் டைரக்டரைப் பார்த்து 'இப்படிப் பேசினால் நன்றாக இருக்குமே' என்று சொல்லிப் பேசிக் காட்டினேன். ஆனால், அவர் என்னை அலட்சியப்படுத்திவிட்டார். அன்று முதல் எனக்கு நாடகத்திலே நடிக்கணும்னு ஒரு வெறி ஏற்பட்டது. ஆபீஸ்லே 'எங்கே இன்பம்?' என்று ஒரு நாடகம் போட்டாங்க. அதுலே ஒரு சீன்லே நடிச்சு நல்ல பெயர் வாங்கினேன். அவ்வளவு தான்... நாடகப் பித்து நல்லா பிடிச்சுடுச்சு. அப்போதுதான் வீரபாகு என்கிறவர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி, 'தாமரைக் குளம்' என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே வேலையை விட்டுட்டுப் போய் அதுலே நடித்தேன். ஆனால், பெயரும் வரல்லே; எதிர்பார்த்த பணமும் வரல்லே..!''
அதற்குப் பிறகுதான் நாகேஷ் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவருக்குக் கைகொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. நாகேஷை தன் வீட்டிலேயே இருக்கச் சொல்லி, சாப்பாடும் டானிக்கும் கொடுத்து, நல்ல பர்ஸனாலிட்டியாக்கப் பாடுபட் டார். பட முதலாளிகளிடமும் டைரக்டர்களிடமும் முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி, ''சார், இவனுக்கு ஒரு சிறு பாகம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டு மானால் என் கான்ட்ராக்டில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக்கொள் ளுங்கள்'' என்று சொல்லுவாராம். ''பாலாஜி எனக்குச் செய்த உதவி களை நான் சாகும்வரை மறக்க முடியாது'' என்று சொன்னபோது நாகேஷின் கண்கள் கலங்கின.
எல்லோரையும் சிரிக்க வைக்கும் தான், சொந்த வாழ்க்கையில் சிரிக்கமுடியவில்லை என்கிறார் அவர். அதுவும் இந்த சினிமா வாழ்க்கையின் காரணமாக, சாகும் தறுவாயில் இருந்த தன் தாயாரைக் காணமுடியாமலேயே போய் விட்டதை நினைத்து நினைத்து ஏங்குகிறார். ''இந்தப் போலி வாழ்க்கை அருவருப்பைத் தருகிறது. மனைவியுடன் பேசும்போதுகூட சினிமாவில் நடித்த ஒரு சீன்தான் ஞாபகம் வருகிறது. ஆப்த நண்பனிடம் 'நாளைக்குக் கட்டாயம் ஆறு மணிக்குச் சந்திக்கிறேன்' என்றால், அவன் 'என்னடா, உண்மையா சொல்றயா, இல்லே இதுவும் நடிப்பா?' என்கிறான். எது அசல், எது போலி என்றே புரியமாட்டேங்குது சார்'' என்கிறார் அவர்.
''வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். 'கலையைக் காப்பாற்றுகிறேன்' என்று நான் சொல்லத் தயாராக இல்லை. 'கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது' என்று எல்லோரும் நினைத்தால், கலையும் பிழைக்கும்; நாமும் பிழைக்கலாம்'' என்கிறார்.
மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் 'தை நாகேஷ்' ஆயிற்றாம். ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றிவிட்டார்களாம்.
நாகேஷூக்கு ஒரே ஒரு ஆசை... 'அமெரிக்கா சென்று நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும்!'
Posted by
நா. கணேசன்
at
7
comments