nanban-foundation-webinar-january-2022

Friends, There is Nanban Enterprise, they teach a financial strategy (for free) to grow your money in your account. Nanban Foundation is a non-profit organization tasked with providing free, high-quality financial education to all. Every quarter, Nanban Foundation conducts webinars that offer the opportunity to learn GK Level-1 and Level-2 strategies for free. By the end of the webinars, participants can immediately apply the strategies to their own accounts in order to generate cash flow. Our vision is to bring “complete financial freedom” to our Nanbans and celebrate the journey together.

https://www.facebook.com/nanbanfdn
https://www.facebook.com/nanbanfdn/photos/a.596211697739674/900582017302639/

Upcoming GK Strategy Level 1&2 Webinar Info :
DATE  >   JAN 22nd 23rd, 29th & 30th of 2022
TIME  >   11AM CST ( 3  hours each day of the 2 weekends.)
 *Please click the below link to join our Telegram interest group:*
https://t.me/+pcr6k41p4os2MGMx

 




There is Nanban Enterprise (Dallas, TX) run by three - S. Gopalakrishnan (GK), Mani and Sakthi in Dallas.
The Fund Factor | GK Strategies for Generating Consistent Passive Income
Please listen to GK, https://youtu.be/KyKkcsELMOw
How GK financial strategy won more than 25,000 people’s confidence?
https://www.youtube.com/watch?v=3tSUGScBPn4
Making A Killing With Index, Options, and The AND Asset with CEO of Nanban Investments
https://www.youtube.com/watch?v=lXsvLwzVyxw

Arun Ponnusamy interviews GK, https://www.youtube.com/watch?v=3tSUGScBPn4
Mr. Gopala Krishnan (GK) will share his story on how he started Nanban Enterprise and impacting 1000s of families with his FREE investment strategy education and helping busy people get high returns through his proven strategy.

 
https://nanbanfoundation.org/
https://nanbanfoundation.org/about-us/
We conduct FREE GK Strategies™ Webinar every quarter. To attend the next session, Please signup using the link below
https://nanbanfoundation.org/gk-strategies/

There is an India team teaching GK strategy to do the same strategy in Indian stock market. Attending this Webinar is needed to take that Webinar class also.  

Please share with your family and friends, as this will help grow their savings. Thanks!


------------------------

NRI Talk Show with Preetha Prabhakar | Nanban Foundation helping Farmers in India |
https://www.youtube.com/watch?v=gInAlQPQ29k

Listen to Kutraleesvaran, Nanban Sports Foundation:
https://tamil.abplive.com/videos/sports/kutraleeswaran-speech-15017
https://nanbansportsfoundation.org/


 



திருச்சி அருகே குண்டூரில் கல்வெட்டோடு கூடிய வாமனக்கல்

 This is an important Vaamanakkal inscription found in Kundur near Trichy. Engineer Tiru. S. C. Bose published it in Pazhangkaasu journal edited by Prof. M. Rajasekara Thangamani (Dept. of History, Karur Arts College). Note the Vaamana Trivikrama with an umbrella of Rgvedic Brahmins (Cf. Nambuthiris of Kerala) made of pandanus leaves (thaazangkuDai), Vaamana wears a panchakaccam veshTi, holds a kamaNDalam and sports puuNuul/yagnopavitam in his chest. This paper is from 2001, subsequently more Vaamanakkal boundary stones with and without writing have been discovered.

Thanks to Sri. S. C. Bose for sending me this important find.   ~N. Ganesan


















திருவள்ளுவர் விழாவா? பயனென்ன? - பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1969)

திருவள்ளுவர் விழாவா? பயனென்ன?

     - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

[திருவாரூரில் (2. 3. 1969) கும்பம் 16 அன்று தொடங்கி நடந்த திருவள்ளுவர் ஈராயிரமாண்டு விழாவில் முதல்நாள் நடந்த பாட்டரங்கத்தின் தலைமையுரை. கனிச்சாறு - எட்டாம் தொகுதி.]

பேரன்புடைய பெரியோரே! தாய்மாரே!
சீரன்பு கொண்டிருக்கும் மாணவச் செல்வங்காள்!
பாட்டரங்கம் ஏறவந்த பாவலர்காள்! அன்பர்காள்!
கூட்டிருக்கும் ஆவி குழைய வணங்குகிறேன்.

இங்கு, திரு வள்ளுவரின் ஈரா யிரமாண்டு
பொங்கி நிறைந்தவொரு பூரிப்பால் நம்முள்ளம்
விம்மும்; புளகமுறும்; வெற்றி விழாவெடுக்கும்!
எம்மூரும் எந்நாடும் எவ்வினமும் வள்ளுவரைத்
தம்மூரான் தம்நாட்டான் தம்மினத்தான் என்று கொள்ளும்
பெற்றித் திருமான், பெறலரிய மெய்ப்புகழோன்,
வற்றியநம் வாழ்க்கை வளம் பெருக்கும் நல்லாசான்,
நல்லறத்தின் வித்து, நடுவூர்ப் பழுத்தமரம்!
இல்லறத்தைக் காத்த எழில்தந்தை, நற்செவிலி,
ஆட்சி வகுத்த அறவாணன், செந்தமிழ்க்கு
மாட்சி கொடுத்துயர்ந்த மாப்புலவன், பாட்டிறைவன்,
கல்விக் கதிரோன், கருத்துக்குச் சொல்லுழவன்,
பல்துறைக்கும் உள்ளொளியால் பாட்டுரைத்த செம்புலவன்
தன்பெயரைக் கூறாத் தனித்தகையோன், கல்விவள்ளல்,
அன்புரையால் தீமை அறக்கடியும் நன்னெஞ்சன்,
ஆழ்ந்தகன்ற பேரறிவால் ஆன்ற முதல்நூலான்,
காழ்த்த அறிவுமணி, கங்குகரை யற்றகடல்!

அன்ன பெரும்புலவர்க் கான்ற திருவிழவில்
என்னை, சிறியேனை, எற்றுக்கும் பற்றாத
துன்னுஞ் சிறுதுரும்பைத் தூணென்று கொண்டது போல்
மன்னும் பெருவிழவின் மன்றத் தலைவனெனக்
கொண்டு புகழ் கொண்டீர் கூற்றிற் குறைபொறுப்பீர்!
தொண்டே எம் வாழ்வெனலால் தோல்வியும் எம் வெற்றியன்றோ?

வாழுந் தமிழ்க்குலத்தீர்! வாழ்க்கை பலகோடி!
சூழுகின்ற வாழ்க்கையெலாம் சோற்றுக்கே என்போம் நாம்!
நல்லறங்கள் செய்யோம்; நலந்தேடி நாம்போகோம்,
வல்லமற நெஞ்சால் வருந்துயருக் காட்பட்டோம்!
ஈட்டலெல்லாம் தீநெறியே! ஈவதெல்லாம் தீநெறிக்கே!
நாட்டலெல்லாம் பொய்யுரையே! நாடலெல்லாம் போலிகளே!

மெய்யுரைக்கச் சொல்லிடுவோம்; மெய்பேச நாம் விரும்போம்!
பையுறைக்குள் பைவைத்துக் காசைப் பதுக்கிடுவோம்!
தொண்டைக் குழிநிறைந்து துப்பித் தொலைத்தாலும்
அண்டையயல் உள்ளார்க் கணுவளவும் நாம் கொடுக்கோம்!

பட்டென்றும் சீமைப் பருத்தித் துணியென்றும்
கட்டிக் கிழித்தாலும் கட்டாது போனாலும்
இல்லாத ஏழையர்க்கோர் கந்தையினை ஈந்தறியோம்!

கல்லாத நூலில்லை; கண்ட அறம் பல்கோடி!
என்றாலும் நாமோ இருந்தபடி யேயிருப்போம்!
குன்றாத செல்வம்! குலையாத நல்விளைவு!
தெய்வங்கள் கோடி! திருவிழா பல்கோடி!
மெய்யாக எண்ணுங்கள்! மேன்மை அடைந்தோமா?
என்ன நிலையால், என்ன நிகழ்ச்சியினால்
என்னபடி நாமுயர்ந்தோம் என்றே உரைப்பீர்கள்?
நாம்பெற்ற நாகரிகம் எல்லாம் அயல்நாட்டார்
தாம்கண்டு ஈந்த தவப்பயனா இல்லையா?

நாளிரவாய்க் கண்விழித்தும் நல்லவுணா வுண்ணாதும்
ஆளரவங் காணா நடுக்காட்டில் ஆன்றலைந்தும்
கண்டளித்த நற்பொருள்கள் அல்லால்நாம் கண்டதென்ன?
பெண்டளித்த இன்பமும் பிள்ளைப்பே றும் அல்லால்
நாம்கண்ட தென்னவென நாட்டுதற்கு வல்லோமா?
ஆம் கண்டோம் என்றொன் றறைதற்கே உண்டென்றால்
அன்பும் அறனுமல்லால் வேறென்ன? ஆய்ந்தறிவீர்!
இன்பமெல்லாம் இவ்விரண்டே என்றே குறள் முழங்கும்!
பண்பும் பயனுமதாம் என்னும் பழநூற்கள்!

இத்தகைய அன்பெங்கே? இற்றை அறமுண்டா?
பொத்தகத்துள் அல்லாமல் போக்கினிலே பண்புண்டா?
எங்ஙன் பயன் கிடைக்கும்? ஏனிவ் விழிந்தநிலை
உங்கள் மனமழுந்த எண்ணி உரைத்திடுங்கள்!
வள்ளுவரைக் கொண்டாடி வான்முட்டப் பேசிடுவோம்!
கொள்ளளவே அவ்வுரையை நம்முளத்துக் கொண்டோமா?

நூலெங்கே? நூல்கள் நுவன்ற அறமெங்கே?
கோலெங்கே? நேர்மைக் குணமெங்கே? பண்பெங்கே?
மெய்யெங்கே? வாழ்வென்னும் மேன்மைச் சிறப்பெங்கே?
வெய்ய கொடுவாழ்க்கை! வீணான பொய்வாழ்க்கை!
ஒவ்வொருவர் இல்லத்தும் ஒவ்வொருவர் உள்ளத்தும்
இவ்வினா நிற்கட்டும்! இன்பத் தமிழ் எங்கே?

மெய்வருந்த நாமுழையோம்! மேலோட்ட வாழ்வறிந்தோம்!
பொய்யஞ்சா நெஞ்சும் புளுகுரைக்கும் நாவுமல்லால்
இன்றைக்கு மீந்ததென்ன? ஏன்இம் மறவாழ்க்கை !
அன்றைக்கு யாத்த அறநூல் திருக்குறள்தான்!
ஆனாலும் அந்த அறநூல் உரைத்தவற்றை
ஏனோ மறந்தோம்; இனைய நிலைக்கிழிந்தோம்!
செப்பவாழ் வென்றுரைத்தோம்; செப்பமுற்று வாழவில்லை!
ஒப்புரவு கூறினோம்; நாம்காண ஒப்பவில்லை !

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை நன்றென்றோம் நாம் செய்ய எண்ணவில்லை!
அல்லவை தேய அறம்பெருகும் என்றுரைத்தோம்!
சொல்லியவை நூலிலுள; வாழ்விற்குச் சோறென்றோம்!
ஒல்லும் வகையால் அறவினைகள் ஓம்பென்றோம்!
சொல்லும் வகையெல்லாம் பொய்சொல்லி வாழுகின்றோம்!
ஓம்பும் ஒழுக்கம் உயிரென்றோம்; அம்மாவோ
தீம்புச் செயலே ஒழுக்கமெனத் தேர்ந்துவிட்டோம்!
வெஃகாமை வேண்டும் பிறன்பொருளென் றோதினோம்!
அஃகாவென் றங்காந் தலைகின்றோம் செல்வமெனில்!

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கென்றோம்; ஆனாலும்

நம்பால் ஒருவன் நடையாய் நடந்தாலும்
இம்மி யளவும் எடுத்தீய ஒப்புகிலோம்!

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவென்றோம் என்றாலும்
பத்துருபாத் தாள்களைநான் நூறாக்கு வேனென்றால்
ஒத்தவன்பின் ஓடி ஒருநூறு தாள்தந்தே
ஏமாறிப் பல்லிளித்தே இல்லம் திரும்புகின்றோம்!
நாமாறிப் போனோம்; நமதுள்ளம் மாறியது!

நாகரிக ஆர்ப்பரிப்பில் நல்லுளத்தை மாய்த்து விட்டோம்!
ஈகம் அறிந்தோம்; இரப்பு மேற் கொண்டோம்;
குடிமை நலனழித்தோம்; கூட்டுணர்வை விட்டோம்;
அடிமை மனங்கொண்டோம்; ஆளுடைமை நீக்கி விட்டோம்;
வள்ளுவனார் யாத்தளித்த வாய்மைத் திருக்குறள் போல்
வெள்ளம் போல் நூல்கள் விளங்கக் கற்றாலும்
நம்கீழ்மை நம்மைவிட் டிம்மி நகரவில்லை;
நம் மான நல்லுணர்வு நாற்றுத் துளிர்க்கவில்லை;

அன்புடையீர் என்சொல் அழல்போற் பாய்ந்தாலும்
மன்பதையுள் நாம் விட்ட மாண்பை நினையுங்கள்
ஓர்மின் குறளை! உணர்மின் பொதுநோக்கு!
பார்மின் உலகம்! பழிதுடைமின்! மக்கட்கே
தொண்டு புரிமின்! துடைமின் துயரங்கள்!
பண்டு மொழிந்த நலங்கள் பலகோடி!
எண்ணம் புதுக்குமின்! இன்பம் பெருக்குமின்!
பண்ணும் புதுமையினும் பண்டைப் பழமையினும்
நல்லவற்றைத் தேர்மின்! நயன்மை கடைப்பிடிமின்!
அல்லவற்றை நீக்குமின்! அன்புணர்வை வித்துமின்!

- இன்ன விளைவுக்கு எருப்போலும் நற்கருத்தைக்
கன்னல் தமிழால் கவின்பெறவே கூறுதற்குப்
பாவலர் இங்கே பலர்வந்து நிற்கின்றார்
ஆவல் பெருக அருந்தமிழ்த்தேன் பெய்வார்கள்!
நல்லமைச்சு சொல்வார்; நயன்பெறவே ஆசிரிய
வல்லாண்மை கூறுவார்; வாய்மைச்சான் றோர் விரிப்பார்
நண்பர் உழவர் நறுங்காத லர்துறவி
என்னுந் தலைப்பெடுத்தே எந்தமிழிற் பாவடிப்பார்
இவ்வரிய பாவிருந்தை இங்கிருக்கும் பாவலர்கள்
ஒவ்வொருவ ராய்ப்படைப்பார் உண்பீர்! அவர்நாவில்
தவ்வி அமர்வாளெந் தாய்!

---------------------

இவ்வரிய பாடலைத் தேடியனுப்பிய புலவர் கடவூர் மணிமாறன் அவர்களுக்கு என் நன்றி. நா. கணேசன்

 

தமிழ் பிராமி எழுத்து: இணையத்தில் தொல்காப்பியத்துப் புள்ளி (Tamil Brahmi's Tolkappiyar PuLLi in Unicode)

Role of Two Tamils in Indic Computing: IIT, Kanpur was formed as a pioneer engineering institution with a model quite different from traditional engineering colleges under the Indian university system. The consortium model was advocated by the first director, Dr. P. K. Kelkar in 1960. Prof. P. Kashinath Kelkar was instrumental in securing USA's technical collaboration in the establishment of IIT Kanpur, by persuading the then USA ambassador, John Kenneth Galbraith to locate the fledgeling institution on the outskirts of Kanpur, in North India. Just a fresh PhD from University of Minnesota, Prof. M. Ananthakrishnan joined the IIT, Kanpur in Civil Engineering department. In his late years played a role in making the Unicode encoding the only encoding for Tamil in the internet, by convincing the Tamil Nadu government. This happened in 2010 at the World Classical Tamil Conference, Coimbatore. Prior to that, I was also involved in all of INFITT proposals to improve Tamil in Unicode, originally modeled on ISCII. ISCII was developed by Prof. Vai. Rajaraman, IIT, Kanpur and his students.

"Both Rajaraman and Mahabala had obtained their computing education on the fly, without formal training. They subsequently spent time at leading centers of academic computing in the United States under the auspices of the Kanpur Indo-American Program—Rajaraman at UC Berkeley and Mahabala at MIT. Despite their extensive experience in U.S. universities, the program they conducted at Kanpur was much different than those conducted in the United States. Rajaraman and Mahabala undertook research, but their focus was teaching—teaching not only IIT students, but education more broadly. Rajaraman, who came to be recognized as the leading figure in computing education in India, wrote an introductory textbook on programming and usage in 1969 and later authored books on FORTAN and COBOL programming. While Rajaraman and Mahabala published research, they never specialized narrowly. Instead they covered a wide range of areas and acted to facilitate Indian computing in whatever ways were necessary." (from Ross Bassett, Aligning India in the Cold War Era: Indian Technical Elites, the Indian Institute of Technology at Kanpur, and Computing in India and the United States.  Technology and Culture, Volume 50, Number 4, October 2009, pp. 783-810)

Soon after the five IITs were set up, Prime Minister Pandit Jawaharlal Nehru had realized that to keep pace with the ever changing world of science and technology, it is necessary to collaborate closely with the outside world. The Kanpur Indo-American Programme (1962-1972) at IIT-Kanpur was a stride in this direction. Now India is a powehouse in software of about ~ 200 billion $. Here, I include two rare photos of PM Nehru's visit to USA in November, 1961. It was during this visit that American academic collaboration was consolidated with Govt. of India officials. 


பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் - மலரஞ்சலி:
---------------------------------------
தமிழுக்கு யூனிகோட் எழுத்துரு என்னும் ஐஎஸ்ஓ தரப்பாடு உருவாகியதால் தான் இன்று திறன்பேசிகளிலும் நல்ல முறையில் தமிழ் இயங்குகிறது. இந்தியாவின் பாரிய லிபிகள் யாவும் ISCII (https://en.wikipedia.org/wiki/Indian_Script_Code_for_Information_Interchange ) என்னும் தரமுறையில் முதலில் ஒருங்கு குறியீட்டை அமைத்தனர். ISCII ஏற்பட, பேரா. வை. ராஜாராமன் ( https://en.wikipedia.org/wiki/Vaidyeswaran_Rajaraman ) போன்றோர் காரணர்கள்.  இன்றும், பேரா. ராஜாராம் எங்கள் ஐஐஎஸ்சி கம்ப்யூட்டர் லேபுக்கு (வெங்காலூர்) வருகிறாராம். அண்மையில் மறைந்த பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைந்த உத்தமம் (http://infitt.org) ISCII வழிவந்த யூனிகோட் தரப்பாட்டை மேம்படுத்தியது. யூனிகோட் நிறுவனம் ஏற்றுக்கொண்ட தமிழ் புரப்போசல்கள் எல்லாவற்றிலும் என் பங்கு உண்டு. என் மடல்களுக்கு ”Brilliant" எனப் பதில் எழுதுவார். அவரும், நானும் எண்ணற்ற பலரும் பயின்ற அண்ணா பல்கலையில், பேரா. வா. செ. குழந்தைசாமி பரிசு  நான், பிரேமா நந்தகுமார், சலபதி - (ரூ. ஒரு லக்‌ஷம் ஒவ்வொருவர்க்கும்) பெற்றபோது வந்து ஆசீர்வதித்தருளினதை மறக்கவியலாது.  தமிழில் பிரணவ மந்திரத்தை வெள்ளுரையில் ஓர் எழுத்தாக எழுத யான் எழுதிய ஆவணம்: ஐஎஸ்ஓ தளத்தில் http://std.dkuug.dk/jtc1/sc2/wg2/docs/n3119.pdf ; அதுவே,  யூனிகோட் தளத்தில் https://www.unicode.org/L2/L2006/06184-tamil-om.pdf  பாரதியார் பாடலில்  ௐ இருப்பதைக் காட்டியிருந்தேன்: ௐசக்தி ௐசக்தி ௐசக்தி.  ௐசக்தி பத்திரிகையில் வெளிவர தமிழ்ப் புரவலர் அருட்செல்வர் நா.ம. உதவினார்.

2007-ல் எழுதி இருந்தேன்: https://groups.google.com/g/mintamil/c/ynsHZ-zap2M/m/0aTBiHlV7jUJ
தமிழ்நாட்டிலே, கோயிற் கருவறைகளிலும், டி-சட்டைகளிலும் இந்தி ௐ போட்டுக்கொண்டு திரிவது பரவிவருகிறது. தமிழ் ௐ நிலைப்படுத்த சில முயற்சிகளை மேற்கொண்டோம். முக்கியமாக, யுனிகோடில் வைத்துவிட்டால் வரும் தலைமுறைக்கு மறக்காதல்லவா? இதில் வெற்றியும் கிடைத்துள்ளது, இந்தி ௐ என்பதற்கு சரிநிகர் சமானமாகத் தமிழ் ௐ-உம் காலமெல்லாம் விளங்கும். ஹூஸ்டன் மீனாட்சி ஆலயத்தில், மதுரை சிவாச்சாரியர்கள் பழைய தமிழ் அருச்சனை செய்வர். மீனாட்சி அர்ச்சனை, ௐ எழுத்துடன், http://nganesan.blogspot.com/2011/04/meenakshi-tamil-archanai.html தமிழ்நாட்டுக் கோவில்களில், பேரூர் திருமடம், குன்றக்குடி அடிகளார் எடுத்த முயற்சிகளால் தமிழ் அர்ச்சனை ஏற்பட்டது.

பிரணவம் பற்றி ஃழான் செவ்வியார் (பிரான்சு) கேட்ட கேள்விக்கு என் மடல்:
http://nganesan.blogspot.com/2012/01/letters-u-o-and-om-in-pillaiyarcuzi.html

மு. ஆனந்தகிருஷ்ணன் ஐயா மறைவால் தமிழ்க் கணிமைத் தேவைகளை அரசாங்க மந்திரிகளுக்கு தெரிவிக்கும் ஒரு நல்ல எஞ்சினீரை, நெறியாளரை நாங்கள் இழந்தோம்.

பிராமி லிபியை யூனிகோடில் எழுதும்போது தொல்காப்பியர் தரும் தமிழ்-ப்ராமிப் புள்ளி/விராமம்:

இப்போது யூனிகோட் டெக் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டு, பிராமி லிபியில் தமிழ் எழுத ஆறு எழுத்துக்கள் தனி கோட்பாய்ண்ட் பெறுவதில், தொல்காப்பியர் கால நிர்ணயம் (கி.பி. 2-ம் நூற்றாண்டு, ஐராவதம் மகாதேவன், ஹார்வர்ட் பல்கலை தமிழ் எபிகிராபி நூல்) செய்யும் தமிழ் பிராமிப் புள்ளியை அநுஸ்வாரத்துடன் சேர்த்துவிட்டார்கள். அது வேண்டாம், தனியாக தமிழ் பிராமிக்குப் புள்ளி வேண்டும் எனக் கேட்டிருந்தேன். ஏற்றுக்கொண்டு, இனி தொல்காப்பியர் புள்ளி தமிழ் பிராமி இலிபியில் தமிழை இணையத்தில் பொறிக்க ஒருங்கு குறியீட்டில் இயங்கும். யூனிகோட் டெக் குழுவில் இன்று எழுதினேன்:

Just taking a look at the six characters (L2/19-402) to represent Tamil language in the Brahmi fonts of Unicode. They are encoded from Unicode 14.0 onwards. This will enable those who want to write Tamil in Brahmi script. The Beta Review Draft the new Tamil Brahmi characters are at,
https://www.unicode.org/charts/PDF/Unicode-14.0/U140-11000.pdf

The only issue was about a separate Virama for Tamil. Instead of merging with Anusvara, I submitted a proposal to encode it individually:
https://www.unicode.org/L2/L2020/20129-tamil-brahmi-virama.pdf

Back in the year 2012, I mentioned the problems of LLA in Northern Brahmi and in Tamil Brahmi and their origin and evolution being quite different. Now, I am glad that Tamil Brahmi characters are getting encoded atomically: http://unicode.org/L2/L2012/12165-brahmi-lla.pdf
Just taking a look at the six characters (L2/19-402) to represent Tamil language in the Brahmi fonts of Unicode. They are encoded from Unicode 14.0 onwards. This will enable those who want to write Tamil in Brahmi script. The Beta Review Draft the new Tamil Brahmi characters are at,
https://www.unicode.org/charts/PDF/Unicode-14.0/U140-11000.pdf

N. Ganesan

 

நவ்வி மரை (= Chinkara antelope)

நவ்வி மரை (Chinkara Antelope) – சங்க இலக்கியத்தில்
Abstract: 'navvi', the name of the Chinkara anteope in Tamil Sangam literature is analyzed. 'marai' is the name for antelopes in Tamil, as ‘tiruku-marai’ is spiraling screw in Tamil. The defining feature of “marai” (= antelope) is that their horns are screwed in to their skulls always. On the other hand, for deer, the branching antlers 'kavaik kōḍu' are shed and then the antlers regrow each year. Tolkāppiyam sūtra-s relevant to the deer and antelope species are 
discussed.

மரை (antelope):

கலை - கருமை நிறத்தால் வரும் பெயர். Kalai, due to black color, is applied both for antelopes (Blackbucks) as well as deer (Sambur). கலைமானில் இருவகை: (i) மரை (=antelope) இனத்தில் இரலைக்கு வரும். மரை எனும் பெயர் கொம்பு மண்டையோட்டில் நிரந்தரமாய் இருப்பதால். ‘அவனுக்கு மரை கழன்று போனது’, மரையாணி (=திருகாணி), மரையாடு (=கேழையாடு, muntjac) (ii) மான் (deer) இனத்தில் கடமானுக்கு வரும். கடமான் கலை நிறத்தில் (=கலங்கிய கரு நிறம்). சங்க இலக்கியத்தில் கலை என்ற சொல்லை ஆராய்ந்த தெளிவு இஃது. 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்). இரலை (Cf. இருள்) = Blackbuck [Ref. 1]. புல்வாய் = மரை (antelopes) + கலை (deer, esp. Sambur = kalaimān); பொதுப்பெயர். புல்வாய் இப்போது நாம் மான் என்று உபயோகிக்கிறோமே, அப்பொருளில் வழங்கிய பழம்பெயர்: pulvāy, an all encompassing term for deer and antelopes (Tolkāppiyar says so.)

தொல்திராவிடர்கள் வைத்த கலைச்சொல்: மரை = antelope. மரையா/மரையான் (lit. “cow-like antelope”, Nilgai), கன்னடத்தில் மராவு, மரவி என்கிறார்கள். ஆக, antelope என்பதற்கு மிகப்பழைய த்ராவிட வார்த்தை ‘மரை’ என்பது உறுதி.

For representative, typical species in zoology, we see the scientific names repeated twice: Axis Axis deer (puḷḷi mān), Gazella Gazella (African gazelle) etc.,
https://en.wikipedia.org/wiki/List_of_tautonyms#Mammals
அதுபோன்ற நூற்பா மேற்சொன்ன தொல்காப்பிய நூற்பா ஆகும். தமிழகத்தில் உள்ள Antelopes-ல் சிறந்த இரலை-யும், Deer-ல் சிறந்த கடமானையும் குறித்து, புல்வாய் என்பது இரண்டையும் சேர்த்த பொதுப்பெயருள் அடங்கும் என்கிறார்: 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்). பல இடங்களில் மனிதன் என்றால் பெண்ணையும் சேர்த்துத்தான். அதுபோன்ற சூத்திரம். Mankind என்றால் பெண்ணும் உளப்படத் தானே.

பின்னர், இருபாலுக்கும் பொதுவான பெயர் கொண்ட நவ்வி (chinkara), உழை (spotted deer) இரண்டுமே புல்வாய் என்பதாகவும் ஒரு சூத்திரத்தில் சொல்கிறார். அதாவது, இங்கே முன்னர் சொன்ன ராஜ-மரை (representative antelope) ஆகிய இரலை, ராஜ-மான் (representative deer) ஆகிய கடமான் இரண்டையும் விட்டுவிட்டு நவ்வி மரை + புள்ளிமான் இரண்டும் புல்வாய் என்கிறார். இது பேராசிரியர் உரையால் தெரிகிறது.
”தொல்காப்பிய மரபியலில்,
“யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே”

என்று வரும் சூத்திரத்திற்கு (தொல்-மரபு-12) உரை கூறும் பேராசிரியர் ’நவ்வியும் உழையும் புல்வாயும் அடங்குமன்றே. அவற்றை மூன்றாக ஓதியதேன்?’ என்று தாமே கேள்வி கேட்டு விடை கூறுவது போலப் புல்வாயில் மடனுடைய நவ்வி யெனவும், இடைநிகரன உழை எனவும் கொள்க என்று எழுதுகிறார்.” (பி. எல். சாமி).

இரண்டு சூத்திரங்களாலும் புல்வாய் என்பது பொதுப்பெயர். சில இடங்களில் சிறப்புப் பெயராக இரலைக்கும் வரும் என அறியலாகிறது. கலை என்பது கருமை நிறம்பற்றின பெயர். இது கடமானுக்கும், இரலைக்கும் பெயராக சங்க இலக்கியத்திலும் பின்னரும் வரும். மரை (Antelope) நிலையான கொம்புகள் பொருந்தியவை. ஆனால், deer உள்துளை உள்ள "அறுகோடு" (deer's antlers) ஆண்டுதோறும் விழுந்து முளைப்பவை, கவைகள் (branches) கொண்டவை. கலைமான் என்னும் கடமானுக்கும், புள்ளி மானுக்கும் உள்ள கவைக்கொம்பு அறுகோடு (வினைத்தொகை) என்கிறது சங்க இலக்கியம். கலை என்னும் கடமாவின் கவைக்கோடு போல புள்ளிமானுக்கும் உண்டு. சங்க நூல்களில் கலைக்கு முன்னே புகர் (அ) புள்ளி எனக் குறிப்பிட்டிருந்தால் அந்த மான் Axis deer (புள்ளிமான்). புள்ளிமா கருமை இல்லையே, ஏன் கலை என்றனர் என்ற கேள்வி எழலாம்: எண்ணெய் (எள் +நெய்) மற்றவற்றிற்கும் எண்ணெய் (Oil) ஆவது போல. கலை கருமையால் இரலைக்கும், கடமாவிற்கும் முதலில் உருவாகி, புள்ளிக்கலை என்று பொருள் விரிந்தது. அராகம் என்று மனத்தைப் பண்படுத்தும் பண் சிவப்பு நிறத்தால் ஏற்பட்டு, மற்ற எல்லா நிறங்களுக்கான பண்களுக்கு பொதுப்பெயர் ஆக இசையில் ராகம் என்று ஆனாற்போல எனக் கொள்க (Cf. Rāgamālā paintings).

உழை என்பது புள்ளிமானுக்குப் பெயர். உழுகிற உழவுக் காலத்தில் (before sunrise, until sun gets hot) மேயும் புல்வாய் இது. தொல்லியல் அகழாய்வுகளில் மான் கொம்புகள் கலப்பையின் கொழுவாகப் பயன்பட்டமை கிடைக்கிறது. கலூஉழ் என்பது கலூஷ (Th. Burrow), திருவிழாவை திருவிஷா எனல், சூரியன் ஒரு நட்சத்திரத்தில்/ராசியில் வீழ்வது விழு (>> விஷு, ஸம்ஸ்கிருதம், மலையாளம்), இதனால் விழவு/விழா எனப்பெயர்கள். இவற்றை எல்லாம் நோக்குங்கால், உழை “மான் மேயுங் காலம், உழவன் உழுங் காலம்” என்பது உஷத் காலம் என ஸம்ஸ்கிருதம். இக் கருதுகோளை உறுதிப் படுத்த ஆப்கானி, பாரசீக மொழிகளில் உஷத் காலம் இல்லையா எனப் பார்க்கணும்.

நவ்வி மரை (Chinkara antelope) ~ Indian Gazelle:
தும்மு செம்மரை – Chinkara ‘the sneezer’ :: Ballerina of the Desert

நாவு/நவ்வு என்பதன் பொருள் அங்குமிங்கும் அசைதல். நாவு- < நேமி/நேம்பு- (Cf. நேமிநாத தீர்த்தங்கரர்) இதில் இருந்து நவ்வி என்ற சிறிய (நுண்ணிய), மடம்பொருந்திய, எழில் மரைக்கான பெயர் தோன்றியிராது. அப்படிப் பார்த்தால் நவ்வி என்பது எல்லா மானுக்கும் பொருந்தும் பொதுச்சொல் ஆகிவிடும். சங்க இலக்கியம் தெளிவாக நவ்வி/நௌவி என்றால் Chinkara மரைக்கே பொருந்தும் எனக் காட்டுகிறது.

கோவை/கொவ்வை கனி, மோது-/மொத்து- ... போல, நூவு/நுவ்வு என்றால் எள், தினை எனும் நுண்கூலங்கள் என அறிவோம். எனவே தான் மரையா/ன் (= Nilgai, மாடு போன்றது), இரலை (Blackbuck, Ref. 1) போன்ற மரைகளை விட, அளவில் சிறுத்ததும், அழகுடையதுமான மரைக்கு நுவ்வி என்ற பெயர் ஏற்பட்டு, சங்க காலத்தில் நவ்வி என மாறிற்று என்ற கருதுகோள் வலுப்பெறுகிறது. விவசாயம், மக்கட்டொகை பெருக்கத்தால், நுவ்வி/நவ்வி மரையினம் தென்னிந்தியாவில் அழிந்துவிட்டது. யா என்னும் (ராஜ)சாலம், அகில் போன்ற மரங்கள் இன்று தென்னிந்தியாவில் இல்லை. அதுபோன்றதுதான். முதலைகளில் மூன்று இனங்கள் என்பார் பேராசிரியர் உரையில்: “மூன்று சாதிகள்”. இன்று அவை தமிழ்நாட்டில் இல்லை: முதலை, இடங்கர், கராம். மகர இனங்களில் விடங்கர்/இடங்கர் (Gharial) இல்லை, கராம் “உவர்நீர் முதலை” கடற்கரையில் இல்லை. அதுபோல் தான் நுவ்வி/நவ்வி மரையும் அருகிற்று. புல்லி > பல்லி போல, நுவ்வி > நவ்வி.

Ref. 1: இரலை ரோஹிணீ நக்ஷத்ரத்தின் சின்னமாக 4700 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய வானியலில் இருந்தமை பற்றி ஆராய்ந்து அறிவித்துள்ளேன். This Blackbuck as the mount/symbol of Koṟṟavai (< kol-), later Durgā, has an amazing continuity in Tamil country: http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

சங்க நூல்களிலும், பின்னரும் நவ்வி மரை:
நவ்வி (= Chinkara) நளினம் மிக்க மரை இனம் இது. வட நாட்டில் மெலிசாகத் தும்முவது என்ற பொருளில், சிங்காரா எனப் பெயர். இக்கட்டுரையில் உள்ள காணொளியில் நவ்வி மரை தும்மக் காணலாம். நவ்வி/நௌவி மரையைத் தும்முமரை, தும்மு செம்மரை என்றலும் பொருத்தமே. கருமரை என்பது இரலை. கருமரை பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் புராணத்தில் ஆளப்பெற்ற பழைய பெயர். செம்மரை என்பது நவ்வி.
https://en.wikipedia.org/wiki/Chinkara இந்த மரையைச் “சிறுதலை நவ்வி” என்றார் சங்கப்புலவர். “நாறு உயிர் நவ்வி” என்பதும் சங்கம். நாறு உயிர் = தும்முவது போல மூச்சு விடல். இங்கே, உயிர் = மூச்சு. எதற்கும் அஞ்சித் தாவும். இந்த நவ்வி மரையைப் பெண்களுக்கு உவமை கூறுவர்.

கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக, வரும் பாடல் முரஞ்சியூர் முடி நாகராயர் பாடல். புறநானூற்றின் மிகப் பழைய பாடல்கள் முதலில் கோக்கப்பட்டுள்ளன. எனவே, புறம் முதலாம் பாடலில் பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்த உதியன் சேரலாதனைப் போற்றும் பாடல். இதில் தான் முதன் முதலாக, அச்சமும், மடப்பமும் உடைய நவ்வி மரை பற்றிச் சங்க இலக்கியங்களில் பேசப்படுகிறது. நான்மறை அந்தணர்கள் வேள்விகளை இமயமலைச் சாரலில் வேட்கின்றனர். குளிர் காய்ந்து நவ்வி மரையின் பிணை (பெண்மான்) துஞ்சுகின்றனவாம். மரையான் (Nilgai), இரலை (Blackbuck), மரையாடு (கேழையாடு, Muntjac), நாற்கோட்டு மரை (Chousinga), சருகுமான் (mouse deer), கலை (Sambur), புள்ளிக்கலை (Spotted deer) இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, துடுக்குற்று திடுமென்று பாய்ந்து தாவி ஓடிவிடும் நவ்வி மரைகளைச் (Chinkara antelope) முடி நாகராயர் பாடியிருப்பது பாடலின் சிறப்புகளில் ஒன்று. பாரத உபகண்டத்தின் தம்பங்களாக விளங்கும் வட, தென் குலபருவதங்களைக் குறிக்கும் பாடலில் நௌவி இடம்பெறுதல் அருமை. சேர மன்னன் ஆகட்டும், வடக்கே அரைசன் ஆகட்டும் அறவழிப்பட்ட ஆட்சியில் நவ்வியும் அச்சமின்றி இருந்தது என்பது குறிப்பு.
”சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!”
- புறம் 2 (சோறு அளித்த சேரன், கிவாஜ).

மரை இனங்களில், மடப்பத்தை உடையதும், எதையும் கண்டவுடன் துடுக்குற்று அஞ்சுவதும், பெரிய கண்களை உடையதும் ஆகியது நவ்வி மரை ஆகும். சிறு கூட்டங்களாக மேயும், https://youtu.be/ew-lxbMuoK0 . அதன் தும்மும் குணாதிசயத்தை, “நாறு உயிர் நவ்வி” என்று அகநானூறு 7-ம் பாட்டில் காண்கிறோம். உயிர் என்பது மூச்சுக்காற்று. தும்மும் ஓசை ’நாறு உயிர்’. நவ்வி - அழகுக்குத் தமிழில் ஓர் பெயர் (திவாகர நிகண்டு).
" ... இன்சிலை
ஏறுடை இனத்த நாறுயிர் நவ்வி
வலைகாண் பிணையில் போகி” அகம் 7

ஒரு காட்சியைக் கண்டதும், துடுக்குற்று, திடுமெனக் குதித்துக் காற்றில் பாய்ந்து வேற்றிடத்துக்குச் செல்லும்:
“கட்படர் ஓதி நிற்படர்ந் துள்ளி
அருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப்
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென” - அகம் 39

“செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த
கவ்வை நாற்றின் காரிருள் ஓரிலை
நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும்” - குறுந்தொகை

”பெருங்கவின் பெற்ற சிறுதலை நவ்வி
மடக்கண் பிணையொடு மறுகுவன உகளச்” - மதுரைக் காஞ்சி
உகளுதல் - Sprint of the Indian gazelle (Chinkara).

”முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர்
நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி” - நற்றிணை 124
நோன்றல் = தாங்குதல். ஒரு விநாடியே மண்ணில் பதிந்து தாவும் வலிமை படைத்த கால்களை “நோன் குளம்பு” என்று விவரிக்கிறார். குதிரைப் பந்தயங்களில் ஓடும் குதிரையின் கால்கள், “நோன்கால் வண்பரி”. இதனை அகநானூற்றின் கடைசிப்பாடல் பேசுகிறது:

   பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
   மதியுடைய வலவன் ஏவலின் இகுதுறைப்
   புனல்பாய்ந் தன்ன வாமான் திண்தேர்க்
   கணைகழிந் தன்ன நோன்கால் வண்பரி அகம் 400

The scientific name of the chinkara is "gazelle bennettii". There are at least 4 subspecies, one subspecies has the longest horn among them. E. T. Bennett was secretary, London Zoological Society: https://en.wikipedia.org/wiki/Edward_Turner_Bennett

இந்தச் செம்மரைகளில் இருபாலுக்கும் வளையங்கள் கொண்ட கொம்புகள் உண்டு. நௌவி என்ற பாடபேதமும் நவ்வி என்ற இந்த மரையின் பேருக்கு உண்டு (உ-ம்: மதுரைக்காஞ்சி). தொல்காப்பிய நூற்பா உதாஹரணமாக, நௌவி எனப் பழைய உரைகளில் காட்டுவர். http://www.tamilvu.org/slet/l0121/l0121oin.jsp?st=1722&ed=1722&sno=61
"61. கதந பமவெனு மாவைந் தெழுத்து
மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே.
[..]
நந்து நாரை நிலம் நீலம் நுகம் நூல் நெய்தல் நேமி நைவளம் நொச்சி நோக்கம் நௌவி எனவும், படை பால் பிடி பீடு புகழ் பூமி பெடை பேடை பைதல் பொன் போது பௌவம் எனவும், மடி மாலை மிடறு மீளி முகம் மூப்பு மெலிவு மேனி மையல் மொழி மோத்தை மௌவல் எனவும் வரும்."

நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,
கவ்வை கூர்தரச் சானகியாம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்தடைந்த
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை! - கவிச்சக்கிரவர்த்தி கம்பர்

திருக்கோவையாரில், நவ்வி எனும் மரையை மிக அழகாக வர்ணிக்கிறார் மாணிக்கவாசகர். அவர் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனின் ஸர்ஜன் ஜெனெரல் என்னும் மந்திரியாக இருந்தவர். எனவே, நவ்விக்கும், மற்ற மான்களுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாக உணர்த்துகிறார்:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=82120&padhi=12&startLimit=4&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
”எழில் தொண்டைச் செவ்வாய் நவ்வி”
தொண்டைக்காய் போலும் எழிலையுடைய செவ்விய வாயினையுமுடைய நவ்வி. செம்மரையின் முகத்தில் தொண்டைக் காய்கள்போல வரிகள் உள்ளன என உவமிக்கிறார் மணிமொழியார். இது நவ்வி மரை என்றால் Chinkara என உறுதிப்படுத்த நல்ல சான்று. இந்தியாவின் மற்ற மரையினங்களாகிய மரையான், இரலை, மரையாடு (Muntjac) இவற்றுக்கு முகவாயில் தொண்டைக்காய் போன்ற வரிகள் இல்லை. https://growerjim.blogspot.com/2014/08/tindora-coccinia-grandis.html

இலங்கையில், வவுனியா பகுதியில் நவ்வி என்ற நெய்தல் பிரதேசம் இருக்கிறது. இது நவ்வி மரை (Chinkara antelope) காரணமாக வைத்த இடப்பெயர்.

நவ்வி (< நுவ்வி) :: பெயர் ஆய்வு
-------------------------------------

நூ-/நோ- மெலிதலைக் குறிப்பது. நோ(ய்)தல்/நோலுதல்/நோற்றல் நோன்பு (பட்டினி-விரதம்) . நூ - எள்; நூநெய் நூனெ என்றால் எண்ணெய். எள் - நுண்ணிய விதை எனவே, நூ(வு) என்ற பெயர். நுவணை = எள்ளுண்டை, இடித்த மாவு. நுண்ணியது என்ற பொருளில், ”நூஞாயம் பேசறாள்” என்பது நுணையாடல். -ல் விகுதி ஏற்று, நூல் ‘thread' என்ற சொல் தோன்றுகிறது. சிலந்தி வாயில் நூல் பிறக்கும். நூல்- என்றாலே முன்பு குருமுகமாகக் கேட்டுப் பயில்வதுதான். குரு தன் நூலை நுவல்வார். நூல்- > நுவல்-தல்.

நூ = நுண்ணிய என்ற வேர். உ-ம்: நூ- : நூல். நூ = மிகச்சிறு கூலம். நூல் = எள் எனவுமுண்டு. நூலை/நோலை = எள்ளுருண்டை
“புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்கெழுந்தாடி” - (சிலம்பு: 5: 68 - 70)
நோலை < நூலை = எள்ளுருண்டை.

நோய்தல்.- பெருமாள் முருகனின் மேத் திங்கள், 2000-ஆம் ஆண்டு பிரசுரமான “கொங்கு வட்டாரரச் சொல்லகராதியில்” உள்ள வினைச்சொல் இதனைச் சற்று ஆராய்வோம். பக். 110, “நோய்(தல்) - வி. உராய்தல். ‘எதுக்கு இப்படி மேல வந்து நோயற?’ கொங்குநாட்டுப்புறத்தில் இந்த வினைச்சொல்லை சாதாரணமாகக் கேட்கலாம். இன்னொரு உதாரணம்: “கழுதை குட்டிச்செவுத்தில நோஞ்சிட்டிருக்கு”. நோய்தல்/நோஞ்சுதல் = உரைசுதல்/உராய்தல்/உரோசுதல் என்னும் பொருளில் வழங்கும் தொன்மையான வினைச்சொல். நோப்பு- உரசுதல் - ரோஷம், கோபம், சினம்.

கொங்கு வட்டார நாவல்கள், சிறுகதைகளை ஆராயும் ஆய்வேட்டில், சில சொற்கள் உள்ளன. நோப்பாளம் = ரோஷம்.
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/106531/13/13_appendix%201.pdf
MTL: நோப்பாளம் nōppāḷam , n. < நோ-. Irritation, anger, offence; கோபம். ’உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்’.
பெருமாள் முருகன் அகராதி: நோப்பாளம் - பெ. பிணக்கு. ‘என்ன சொல்லீட்டன், நோப்பாளம் வந்திருச்சு.’ நொய்யல், நொய்மணல் கொண்ட கொங்கு நாட்டின் ஆறு.

நூப்பு nūppu , n. perh. நூக்கு-. Reduction, subduing, abatement; தணிப்பு. (யாழ். அக.)
நூதல் nūtal, n. cf. நுது-. Being extinguished; அவிகை. (யாழ். அக)
நூபுரம் ‘சிலம்பு, பாதசரம்’:
நூபுரம் nūpuram, n. < nūpura. 1. Anklets formed of little bells; பாதகிண்கிணி. (திவா.) 2. Tinkling anklets; சிலம்பு. (சூடா.) ஆடுவார் பொருவி னூபுரத்தை (கம்பரா. நகர. 56).
நூ- என்னும் தாதுவுக்கு தாழ்ந்த, மெல்லிதான என்ற பொருளை, ஒலிக்கு ஏற்றி “நூபுரம்” என்ற சொல் தோன்றியுள்ளது. நூப்புரம்/நூபுரம்: தூம்பு தூபு என்றே சோழர் கல்வெட்டுகளில் காண்கிறோம்.


சிறிய/நுண்ணிய தலை, வாய் உடைய மரை, நூவு- > நுவ்வி எனப் பெயர் அமைந்திருக்கும். புல்லி > பல்லி ஆவது போல, நுவ்வி > நவ்வி ஆகிறது. இதற்கோர் காரணம் உண்டு. நுவ்வை = நும் + அவ்வை (தமக்கை) என்ற உறவுப்பெயர் வழங்கிய காலம்.
  ”நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
   அன்னை கூறினள் புன்னையது சிறப்பே”
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai172.html#.YMZmukxOnVI
நுவ்வை, நுவ்வி இரண்டும் பொருள்மயக்கம் உண்டாக்கும். எனவே, அப்போதே அருகி வந்த நுவ்வி மரையை, நவ்வி மரை என அழைக்கலாயினர் எனக் கருதவேண்டி உள்ளது.

மான் வகைகள்:

கலைமா (black buck), மரைமா (antelope), கடமா (sambur), உழை (axis deer)These are all the four major mān jāti-s of India's forests.

  தாளறுவன இடைதுணிவன தலைதுமிவன கலைமா
  வாளிகளொடு குடல்சொரிதர மறிவனசில மரைமா
  நீளுடல்விடு சரமுருவிட நிமிர்வனமிடை கடமா
  மீளிகொள்கணை படுமுடலெழ விழுவனபல உழையே. (சேக்கிழார்)

இப்பாடல் சுந்தரரின் பின்வரும் தேவாரத்தில் ஒரு பாடலின் முதலடியில் முதற்சீர் மாவும் எனத் தொடங்கும் எனத் தெளிவிக்கிறது.
சுந்தரர் தேவாரம்:
----------------------

தமிழிலே மூன்று அன்றில் பறவைச் சாதிகளுக்கும் உள்ள பெயரை விளக்கினேன்:
https://groups.google.com/g/houstontamil/c/_4FfKRzq0ww/m/Lrp1CwW-AQAJ
அப்போது (WA group), சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் இரண்டைக் குறிப்பிட்டேன்,

சுந்தரர்: (clearly, distinction between deer "mā/mān" vs. antelopes "marai" is made)

மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே

மற்ற அடிகளின் எதுகையை நோக்கினால், முதல் அடி “மாவும்” எனத் தொடங்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆ/ஆன், மா/மான் என்பதாக மாவும் = மான்களும் என்ற பொருளில் இருந்த பாட்டில், காலப்போக்கில்
ஏடுபெயர்த்தோர் மாவும் என்பதை “மானும்” எனத் திருத்திவிட்டார்கள். கவரிமா (குறள்) கவரிமான் ஆகிறது. அது போல.

'கடமா தொலைச்சிய கானுறை வேங்கை' - சங்கம். கடமா = கடமான், Sambur deer.

கீழ்வரும் அதே பதிகப் பாடலில் “மானும் மரை இனமும்” வருகிறது. எதுகை சரியாக இருக்கிறது. ஆனால், மேலே கொடுத்துள்ள பாடல் "மாவும் மரை இனமும்" எனத் தொடங்க வேண்டும். மாவும் = மானும் எனப் பொருள். எனவே, மாவும் என்பதை மானும் என்று திருத்தத் தேவையே இல்லை.

ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும்
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம்
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே

நவ்வி மரை தென்னிந்தியாவில் கி.பி. 1000-க்குப் பின்னர் அழிந்துபோனது. எனவே, நவ்வி என்ற பழைய விலங்கினப் பெயர் மான் என்ற பொதுப்பொருள் ஏற்றது. எ-டு: புள்ளி நவ்வி (திருப்புகழ்)

References:
(2) பி. எல். சாமி, சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1970 (அதிகாரம்: மான்கள்).

(3)Antelopes, Global Survey and Regional Action Plans. Part 4: North Africa, the Middle East and Asia.
https://portals.iucn.org/library/efiles/documents/2001-024.pdf

(4) Dookia, S. and Goyal, S. P. (2007). Chinkara or Indian Gazelle. In “Ungulates of Peninsular India” (Eds. K. Sankar and S. P. Goyal), ENVIS Bulletin, Wildlife Institute of India. 103-114 pp.

(5) Chinkara: The Dainty Desert Ballerina
https://sustain.round.glass/species/chinkara-thar-desert/

(6) Indian Gazelle Chinkara in Dhawa Doli Wildlife Sanctuary
https://youtu.be/H5gRDpEeZ1g

(7) Genetic diversity of the Chinkara, of the Indian gazelle
https://slideplayer.com/slide/10604505/

(8) https://www.naturepl.com/stock-photo-bishnoi-holy-man-or-priest-feeding-chinkara-indian-gazelle-gazella-image01209514.html
https://www.naturepl.com/stock-photo/the-bishnoi-woman-breastfeeding-an-orphaned-indian-gazelle--chinkara-fawn/search/detail-0_01604001.html
https://www.naturepl.com/stock-photo/the-bishnoi-woman-holding-and-kissing-indian-gazelle-or-chinkara-fawn-(gazella/search/detail-0_01604003.html

 

ஒரு லட்சம் புத்தகங்கள் (மே 31, 1981 யாழ் நூலகம் எரிப்பு பற்றிய சுஜாதா சிறுகதை)

யாழ்ப்பாணப் பொது நூலகம் இலங்கை அரசினால் எரிக்கப்பட்ட நாள். மே 31, 1981.

எழுத்தாளர் சுஜாதா இந்தக் கொடுமை பற்றி ஓர் சிறுகதை எழுதினார். அவர்
மறைந்தபோது, தமிழ் நூலகங்களுக்கு ஏற்பட்ட மூன்று போகூழ் நிகழ்வுகளைப்
பற்றி எழுதினேன். 2008-ல் எழுதிய பதிவு:
http://nganesan.blogspot.com/2008/02/writer-sujatha.html


தமிழன்னை அழுத தருணங்கள் சில. சென்னையிலே கலெக்டராயிருந்த பிரான்சிஸ் வைட் எல்லிசு திருவள்ளுவனாரைச் சமணத் துற்வியாகத் தங்கக் காசுகள் வெளியிட்டவர். திராவிட மொழிக் குடும்பம் சமற்கிருத்தினின்று வேறுபட்ட மூலத்தில் தோன்றியது என்று உலகுக்கு அறிவித்தவர் எல்லீசனே. 35 ஆண்டு கழித்து 1856-ல் நூலாக விரித்தவர் கால்டுவெல் பாதிரியார். எல்லிஸ் இராமநாதபுரஞ் சென்றபோது நஞ்சுண்டு இளவயதில் மாண்டார். அடுத்து வந்த வெள்ளை ஆட்சியருக்குத் தமிழின்பால் நாட்டமில்லை. எல்லிஸ் அகாலத்தில் அகன்றதால், புலவர்கள் அவரிடம் ஒப்படைத்த பொக்கிசங்களைக் கலெக்டர் மாளிகை 'பட்லர்' சுடுதண்ணீர் அடுப்பெரிக்கப் பயன்படுத்தினான். அத்தனை ஓலைச்சுவடிகளும் ஒன்றில்லாமல் ஒழிந்தன, சமணக் காவியங்கள் (உ-ம்: வளையாபதி), பௌத்தப் பொத்தகங்கள், .... 1820களில் தீக்கிரையாயின.

ஏராளமான பழந்தமிழ்ப் புலவர்கள் சேதுபதி, பாலவநத்தம் பொன்னுசாமித் தேவர், பெத்தாச்சி வள்ளல் போன்ற புரவலர்களை நாடித் தஙகியிருந்த சோலை மதுரைத் தமிழ்ச் சங்கம். அன்றைய தாழ்நிலையில் தமிழ்த் திறமையைக் கொண்டு சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என்றெல்லாம் சந்தைப்படுத்திக் காசுபார்க்க முடியாது. 20 - சனவரி - 1920ல் மதுரைத் தமிழ்ச் சங்க நூலகம் தீப்பற்றி எரிந்தது, எண்ணிறந்த கருவூலங்களைத் (எ-டு: குறளின் பழைய உரைகள் பல) தமிழ் அன்றும் இழந்துபட்டது. பின்னர் சிங்களக் காடையர்கள் 31- மே- 1981ல் கொளுத்திய யாழ்ப்பாணப் பொது நூல்நிலைய இழப்பு. இத் தீயழிப்பு பற்றிச் சுஜாதா 'ஒரு லட்சம் புத்தகங்கள்' என்னும் சிறுகதை எழுதியுள்ளாராம்.  ~NG, 2008

----------------
ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா சிறுகதை
https://azhiyasudargal.blogspot.com/2012/06/blog-post.html

இந்தச் சிறுகதை பற்றிய திறனாய்வு - பேரா. அ. ராமசாமி
https://ramasamywritings.blogspot.com/2009/08/blog-post_5649.html

ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா

சிங்களத் தீவினுக்கோர்

பாலம் அமைப்போம்

-மகாகவி

Welcome to delegates of Bharathi International

நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட்  பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.

"தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..."

"இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?"

"பேரறிஞர் அண்ணாங்களா?"

"இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்று’ன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க"

"அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க, ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்"

டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக "வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்."

"எதுக்கு?" என்றார் டாக்டர்.

"அ. தெரியாத மாதிரி கேக்கறிங்க."

"உண்மையிலேயே தெரியாதுங்க"

"பாரதி பல்கலைக் கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்."

"ஓ. அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது."

"இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க"

"சேச்சே. அமைச்சருக்கு பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க"

"உங்களை விட்டாப் பொருத்தமா வேற யாருங்க...?"

"எதோ பார்க்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைங்க. அரசியல் வேற கலக்குது.." டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக..

"வள்ளுவர் சொல்லிக்காரு-

`மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`னு.

இப்ப யாருங்க பார்ப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில் தான் பாரதி சொல்லியிருக்காரு..."

ரிஸப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக் கொள்ளும்போது அந்தப் பெண், "ஸர் யூ ஹேவ் எ மெஸேஜ்" என்று புறாக் கூட்டிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள். "செல்வரத்னம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்" நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்னம்? புரியவில்லை. "தாங்க்ஸ்" என்று அவளைப் பார்த்தபோது "யூ ஆர் வெல்கம்" என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது.

கூடிப் பிரியாமலே - ஓரிராவெல்லாம் கொஞ்சிக் குலவியங்கே

ஆடி விளையாடியே - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை

நாடித் தழுவி...

"டாக்டர் வணக்கம்"

"ஓ. பெருமாள். வாங்க, எங்க இருக்கிங்க இப்ப?"

"உத்கல்ல. புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சுருக்காங்க..."

"உத்கல் எங்க இருக்குது?"

பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண் பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து `ஹலோ` என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்தி வைத்தார்.

"இது வந்து கத்தரினா. ரஷ்யாவில் இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி"

"ஆ. ஐ ஸீ" என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண் போல ஏராளமாக இருந்தாள். ஒல்லி இடையில்லை. ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.

"யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட்யூ?"

"நோ... ஐம் பிரிஸைடிங். மத்தியானம்... ஆஃப்டர்நூன். யூ நோ டாமில்?"

"எஸ். காண்ட் ஸ்பீக்."

"இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாடவிட்டாங்க தமிழங்கன்னு கேக்குது"

"அவர் காலத்து தமிழங்க அவர் பெருமையை உணரலை.."

"டாக்டர்.. உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?"

"சேச்சே. இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா?"

"ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருநது எப்படியாவது ரீடரா கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா....? என்னுடைய பைல்ஸுக்கு ஒத்துக்கிடலை."

"பாக்கலாங்க. முதல்ல ஆகட்டும்" செல்வரத்னம்... எங்கேயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே. ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்து விட்டு டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.

மணிமேகலைக்குச் செய்தி சொல்லதான் வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே. அதற்குள் எத்தனை கோட்டைகள்.

மெஸ்ஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்தால் உள்ளே பேச்சுக் கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளேயிருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிபருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது "அவன் சர்வதேசக் கவிஞன். பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்.. என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிப் பாடினான் அவனன்றோ" என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயமில்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான். நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயமுள்ளவர்கள் யாரும் கிடையாது. `பாரதி கவிதைகளில் சமத்துவம்` என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல். மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம். முடிந்தால் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்து விடலாம்.

டாக்டர் லேசாக,

`காதல் செய்தும் பெறும்பல இன்பம்,

கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,

பூதலத்தினை ஆள்வதில் இன்பம்...`

என்று பாடிக் கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும் போது அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனைக் கவனித்தார்.

"வணக்கம் ஐயா"

"வணக்கம். நீங்க"

இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

"கண்டு கன காலம்" என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.

எங்கோ பார்த்திருக்கிறோம்? மையமாக... "வாங்க. எப்ப வந்தீங்க?"

"இஞ்சாலையா?"

இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.

"நீங்கதானா செல்வரத்னம்?"

"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்." இப்போது முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. இவன் வீட்டில் யாழ்பாண உலகத் தமிழ் மகாநாட்டின் போது டாக்டர் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்.

"எங்க வந்தீங்க?"

"சும்மாத்தானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்." மனசுக்குள் மொழிபெயர்த்துக் கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும் "வாங்க வாங்க. உள்ள வாங்க." என்றார்.

அறைக்குள் ஆஷ்-டிரே தேடினான். டாக்டர் அவனை நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.

"விழாவில எண்ட பேச்சும் உண்டு," என்றான்.

"அப்படியா. சந்தோஷம், விழாவில கலந்துக்கறதுக்காக வந்திங்களா சிலோன்ல இருந்து?"

"ஆமாம்."

"ரொம்ப பொருத்தம். சிங்களத் தீவினிக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப.."

இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடு கொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் `நெஞ்சில் உரமுமின்றி` பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன...

"உக்காருங்க. ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?"

"ஊர்ல யாரும் இல்லிங்க"

"அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?"

"தங்கச்சி இல்லைங்க," என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.

"என்ன சொல்றீங்க?"

"எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க"

"அடப்பாவமே. எப்ப? எப்படி?"

"ஆகஸ்ட் கலகத்திலதாங்க"

"ஐயையோ, எப்படி இறந்து போனாங்க?"

"தெருவில வெச்சு... வேண்டாங்க, விவரம் வேண்டாங்க. நான் ஒருத்தன் தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்."

டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,

"ஏதாவது சாப்பிடறீங்களா?"

"கோப்பி" என்றான்.

"இத்தனை நடந்திருக்குன்னு நினைக்கவே இல்லை, அதும் நமக்குத் தெரிஞ்சவங்க, நாம பழகினவங்க இதில பலியாகி இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது."

"அதைப் பத்தி இப்ப பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக,"

"சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்தில என்ன உதவி தேவையா இருக்குது?"

"நிகழ்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?"

"அப்படியா?"

"அருமையான புத்தகங்கள். பாரதியாரே சொந்த செலவில் பதிப்பித்த `ஸ்வதேச கீதங்கள்` 1908-லேயோ என்னவோ வெளியிட்டது. இதன் விலை ரெண்டணா-ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி. லட்சம் புத்தகங் களானா எத்தனை தமிழ் வார்த்தைகள். எண்ணிப்பாருங்க. அத்தனையும் தெருவில எரிச்சாங்க."

"அடடா"

"அதை நான் சொல்ல விரும்பறேன். அப்பறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினைஞ்சு நாளா தமிழ்நாட்டில பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்."

"எங்க சொல்ல விரும்பறீங்க?"

"இன்றைய கூட்டத்திலதான்"

"இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே"

"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?"

"கட்டாயம். கட்டாயம்"

"அதைத்தாங்க சொல்லப் போறேன்."

"அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே.."

"இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்திய தமிழறிஞர்கள் எல்லாரும் வர இந்த மேடையிலே எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கேன்."

டாக்டர் சற்றே கவலையுடன் "குறிப்பா என்ன சொல்லப் போறீங்க?" என்றார்.

"சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்."

"புரியலீங்க"

"ஐயா. நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க. அவங்களை எப்படி றீட் (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறத்துக்கு.. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ? டிரான்ஸிஸ்டர் வெச்சிருக்கியா? டேப்ரிக்கார்டர் கொண்டு வந்திருக்கியா?

தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்தில கலைஞ்சு போயிருதுங்க. அந்தக் காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை. சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்தில் க்வாரண்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக் காங்க. இரண்டு ரூமுக்கு பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுன்னு பேரு. எல்லாம் அப்பிளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சமில்லாம வாராது. இவங்க உடமைகளை கொண்டு வந்த அற்பப் பணத் தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும், கிடைக்கிறது நாப்ப த்தஞ்சு பைசாதான். எல்லாரும் திரும்பப் போயிரலாம். அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்ப சேர்த்துக்க மாட்டாங் க. போக முடியாது.

1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க. திடீர்னு `இது உன் தாயகம் இல்லை. தமிழ்நாட்டுக்குப் போன்னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டுக் கப்பலில் அனுப்பிச்சுட்டா ங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை இல்லையா?"

"எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்திதான் எனக்கு..."

"வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல்வாதிவாதிங்ககிட்டயா? ஏடிஎம்கே-காரங்க `இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூராவும் கதவடைப்பு செஞ்சோமே` ங்கறாங்க, டிஎம்கே `இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே`ங்கறாங்க"

"இல்லை.. இதைத் தமிழ்ப் பத்திரிக்கைகளில ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க..."

"சொல்றேங்க. எல்லாப் பத்திரிகையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க - நாங்க அட்டைப் படமே கண்ணீர் த்துளியா ஒரு இஷ்யூலே போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்தில விகடன்லே வந்துருச்சேன்னாங்க. ராணில இதைப் பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதுகிட்டிருக் கமேன்னாங்க.."

"நீங்க என்ன எழுதறாதா சொன்னீங்க."

"அந்தப் புத்தகங்களை எரிச்சதைப் பற்றித்தாங்க. ஒரு லட்சம் புத்தகங்க. அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சு போய் ரா த்திரி பூரா வெளிச்சமா இருந்ததை. ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கன்னு.. ஆனா அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க.. அவங்க கலர் ட்ரான்பரன்ஸி இருந்தா கொடுங்க. அட்டையிலே போடுவேம்.. கொஞ்சம் ஹ்யூமன் இன்டரஸ்ட் இருக்கும்னாருங்க. அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பமில்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க. முதல்ல பக்கத்து வீட்டில சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க.. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தது. அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப் போயிருச்சுங்க. சந்துல வெச்சுப் பிடிச்சுத் தெருவில நடுத் தெருவில.. என் கண் முன்னாலலே.. கண் முன்னாலயே. .." அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.

"ரொம்ப பரிதாபங்க"

கொஞ்ச நேரம் அழுதுவிட்டு "எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பமில்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லேயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சமில்லை. ஆனா அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்பில இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க. " சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக் கொண்டு, "எனக்கு ஒரு நாட்டுக் குடிமகன்கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு பேரும் இந்தியாவில இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம், சக்கிலியங்களாம், இதையெல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?"

டாக்டர் மூக்கைச் சொறிந்து கொண்டார். "இவ்வளவு விவரமா சொல்ல வேண்டாங்க. ஏன்னா இது இலக்கியக் கூட்டம். இதில அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க..."

"அரசியல் இல்லைங்க. மனித உரிமைப் பிரச்சினை இல்லையா?

சொந்த சகோதரர்கள்

துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடீ – கிளியே

செம்மை மறந்தாரடீ

-ன்னு பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?"

"அதும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்.."

"எனக்கு இதை விட்டா வேறு வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்தில நடந்ததைச் சொன்னா கண்ணில ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப் போறதில்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்கும் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப் போறேன்."

"என்ன புத்தகம்?" என்றார் கவலையோடு.

"இந்த மாநாட்டு மலரை"

"எதுக்குங்க அதெல்லாம்...?"

"பாரதி சொன்னதை எதும் செய்யாம ஏர்கண்டிசன் ஓட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு பாரதி சொன்னதை நடைமுறையில செய்து காண்பிங்கன்னு சொல்லப் போறேன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலமில்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க. அப்பத்தான் பளிச்சுனு எல்லார் மனசிலையம் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்கு இல்ல கூட்டம்?" அவன் எழுந்து வணங்கி விட்டுச் சொன்றான் செல்வரத்தினம்.

டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது `செல்வரத்தினம், ஸ்ரீலங்கா` என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போலிருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். "பிப்பி கால்.. டாக்டர் மணிமேகலை"

பத்து நிமிஷத்தில் கால் வந்தது.

"மணி.. நான்தான்"

"என்ன, விசாரிச்சிங்களா? கிடைச்சிருச்சா?"

"ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரட்டேரியட்டிலேயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்."

"அப்ப இனிப்பு செய்துட வேண்டியதுதான். இந்தக் கணத்தில் உங்ககூட இருக்க..."

"மணி. ஒரு சின்ன சிக்கல்..."

"என்னது? அருணாசலம் மறுபடி பாயறாரா?"

"அதில்லை மணி, இன்னிக்கு கூட்டத்தில் அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்பாணத்தில உலகத் தமிழ் மகாநாட்டில சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்."

"பேசட்டுமே. உங்களுக்கென்ன?"

"அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்தில கலகத்தில ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்பில இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியா கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்."

"என்ன செய்யப் போறான்?"

"யாழ்ப்பாணத்தில் லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப் போறேங்கறான். கேக்கறத்துக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா கூட்டத்தில கலாட்டா ஆகி எங்கயாவது எனக்கு சந்தர்ப்பம் வரதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா அமைச்சர் வந்து..."

"த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்"

"எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க"

"என்ன. கேக்குதா?"

"கேக்குது, கேக்குது. இதப் பாருங்க, உங்க பேச்சை இன்னைக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்."

"எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே. தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?"

கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.

"என்ன செய்யச் சொல்றீங்க?"

"எப்படியாவது உங்க அண்ணன் கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு.."

"அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. வெச்சுருங்க"

"எப்படியாவது.."

"வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்."

"சரி மணிமேகலை"

"கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்ச மாதிரித்தான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சை கேட்டுட்டா போதும்னாரு.."

டெலிபோனை வைத்து விட்டு டாக்டர் சற்று திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள்.. இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவள் சக்தி.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி

மாநிலம் காக்கும் மதியே சக்தி

தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி

சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி

இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப் புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு "எண்ணிய முடிதல் வேண்டும். நல்லதே எண்ணல் வேண்டும்..." என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்திருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன. ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, வரவேற்புரைஞர் "தலைவர் அவர்களே. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே.." என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்குமிங்கும் வணங்கிக் கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.

இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம். பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.

"முதற்கண் பிஜித் தீவிலிருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்." என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.

"ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் பெல்லோ டெலிகேட்ஸ். ஐம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐம் ஸாரி ஐம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில், பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி..."

டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசையில் ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த் தார்.

பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான். ஒரு மணிநேரத்தில் சாதித்து விட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.

"அடுத்து பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால் சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்."

தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது.

டாக்டர் இரா.நல்லுசாமி தன் தலைமையுரையின் போது "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல, மனப்பாலத்தை.." என்றார். அமைச்சர் தன் உரையில் அரசு புதிதாகத் துவக்கப் போகும் பாரதி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற செய்தியை அறிவித்தார்.

செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை.

*****

பாரதி நூற்றாண்டு நினைவுத் தொகுப்பாக, பாரதி பதிப்பக வெளியீட்டில் சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய "பாரதி சிறுகதைகள்" முதற்பதிப்பில் (1982) இருந்து.