கவிஞர் அமிர்த கணேசன் நூல்வெளியீட்டு விழா

கவிஞர் அமிர்த கணேசன், அவரது குரு ஈரோடு தமிழன்பன் நூல்கள் வெளியீடு டல்லஸ் மாநகர மெட்ரோபிலெக்ஸ் தமிழ்ச் சங்கத்தாரால் நடத்தப்பெற்றது. ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைய பெருநிதி நல்கிய  மரு. ஞானசம்பந்தன், பால்பாண்டியன், கால்ட்வெல் வேள்நம்பி, சங்கத் தலைவர் அருண் பொன்னுசாமி கலந்துகொண்டனர். பல தமிழ் இருக்கைகள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அமைத்தால் தமிழர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளும், தமிழ் ஆய்வு வளர்ச்சியும் இருக்கும் என்றும், திராவிட ஒப்பீட்டு மொழியியல், சிந்துவெளி அகழாய்வும், அதில் திராவிடப் பண்பாட்டின் கூறுகளும் ஆராய்ந்து நூலெழுதும் அறிஞர்களை வளர்க்கும் நாற்றங்கால்களாக இவை விளங்கும் என எனதுரையில் குறிப்பிட்டேன்.

மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச் சங்கம் ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதைகளை “ நா 100 பா 1000 “ எனும் கவிதை வாசிப்பு நிகழ்வின் மூலமும் , வெளியிட்ட  நூல்கள் வாயிலாகவும் அவரின் கவித்துவ மேன்மையை ஆய்ந்தறிந்து, உணர்ந்து, மகிழ்ந்து மேனாள் இன்னாள் ஆட்சியாளர்கள் கலந்தாய்வு செய்து ஒன்று கூடி மகாகவி பட்டத்தை வழங்கினார்கள். அதனைக் கவிஞர் அமிர்தகணேசன் பெற்று சென்னை வந்தார். அங்கு   நிகழ்ந்த விழா ஒன்றில்  மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு கால்டுவெல் வேள்நம்பி , நியுயார்க் சண்முகம் பெரியசாமி ஆகியோர்  தோழர் நல்லக்கண்ணு மூலம் மகாகவி பட்டத்தை ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு வழங்கி பெருமையாக உரையாற்றி மகிழ்ந்தார்.
இச்செய்தி 23.11.19 அன்று மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்ட நூலிலும் ( புகைப்படம் பக் 7 மற்றும் பக்33) குறிப்பிடப்பட்டுள்ளது. விழாவில் தோழர் நல்லக்கண்ணு உரையாற்றும் போது ,” பாரதிக்கும் மகாகவி பட்டம் எளிதாக கிட்டவில்லை ...முன்னெடுத்தவர்களே பின்வாங்கிய காலத்தில் இடதுசாரி இயக்கமே வெற்றியடைந்தது. தமிழகம் தமிழன்பனுக்கு அஅளிக்க இருந்த அங்கீகாரத்தை அயலக நாடு அமெரிக்கா அளித்த செயல் பாராட்டுக்குரியது..” என்றார்
டல்லஸ் மெட்ரோப்லெக்ஸ் தமிழ்ச்சங்கம், டெக்சாஸில் ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்துக்குப் பின்னர் தோன்றிய அமெரிக்காவின் மூத்த தமிழ்ச்சங்கங்களில் இடம்பெறுவது. அவர்கள் “வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதை டாக்டர் சம்பந்தனுக்கும், எனக்கும் அளித்து கௌரவித்தனர். சில ஒளிப்படங்களை இணைக்கிறேன்.
நா. கணேசன்

சித்திரம் + சரித்திரம் = மணியம்

சித்திரம் + சரித்திரம் = மணியம்

கலாரசிகர் கவிஞர் சு. பசுபதி அவர்கள் (  http://s-pasupathy.blogspot.com/) ஓவியர் மணியம் திடீரென மறைந்தபோது ஓவியர் கோபுலு எழுதிய கட்டுரை கிட்டுமா என வினவியிருந்தார். பெட்னா விழாவுக்கு சிகாகோ வந்திருந்த திரு. மணியம் செல்வன் ஹூஸ்டனில் சில நாட்கள் தங்கி இருந்தார். அவரைக் கேட்டிருந்தேன். கோபுலுவின் பழைய கட்டுரையை (தினமணி கதிர், 11-அக்டோபர்-1968) தேடி எடுத்து அனுப்பினார். எழுத்தாளர் சாவி முயற்சியால் வெளியான கட்டுரை என்றார் ம.செ. அவர்கள். சீரிய ஓவியர் ம.செ.வுக்கு  என் நன்றிகள்.  ~நா. கணேசன்

சித்திரம் + சரித்திரம் = மணியம்

அமரர் கல்கியின் இலக்கியக் கச்சேரிகளுக்குப் பக்க வாத்தியம் இசைக்க அவர் அருகிலேயே ஒருவர் அமர்ந்திருந்தார். பாட்டுக்கு ஏற்ப வாத்தியம் தட்டி, கச்சேரியை ரஞ்சகமாகச் செய்து கொண்டிருந்தார். வித்வான், ராகம், தானம், பல்லவியைச்சேர்த்துப் பின்னிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த கலைஞர் அந்த ராகத்தின் வர்ணத்தை, உயிரை, அப்படியே பிரதிபலித்து, வித்வானின் கச்சேரிக்கு ஜீவ களையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

'பேஷ்... பேஷ்..பேஷ்!'' கல்கியின் ஊக்குவிக்கும் புகழ்ச்சி, பக்கவாத்தியக் கலைஞருக்கு மேலும் குதூகலம்...கச்சேரி முழுமை பெறுகிறது. அது அமரர் கல்கி செய்த சரித்திரப் புகழ் பெற்ற கச்சேரி. அருகே அமர்ந்து இசைத்த கலைஞர் திரு. மணியம். இன்று திரு மணியமும் அமரர் ஆகிவிட்டார்.

கலைஞர் மணியம், கல்கி பத்திரிகையில் இருபது ஆண்டுகளுக்கு மேல் ஒருங்கிசைத்த சேவையில் தனது உள்ளத்தையும், மனோதர்மத்தையும் கைத்திறனையும் வாரி வழங்கி, அந்தப் பத்திரிகையைக் கண்கவர் ஓவியச் சிறப்பிதழ்களாகச் செய்து கொண்டிருந்தார்,

பல்லவ, சோழர் காலக் கலை மாட்சியின் காம்பீர்யத்தைக் கைப்பிடித்து மீண்டும் நம் மனதில் புத்தொளி பிறக்கச் சித்திரித்துக் காண்பித்தார்.

பல்லக்கில் ராணிகள் புடைசூழ வந்து பல்லவ மல்லர் பேசினார். சிவகாமி ஆடினாள். சிற்றுளி நாதம் இசைத்தது. சதங்கை கொஞ்சியது. வாத்தியம் முழங்கினார்கள். வானவர்கள் மேகத்தின் ஊடே பவனி வந்தனர். சிவநேசச் செல்வர்கள் திருநீறு பூசிய முகத்துடன் தேவாரம் இசைத்தனர். யாளிகள் கூர்மையான பற்கள் தெரியச் சிரித்தன. தாமரை பூத்து மணம் சிந்தியது. யானைகள் நடை போட்டன. அஜந்தா அழகிகள் தலைமுடியை வண்டுகள் அலங்கரித்தன. துந்துபிகள் முழங்கின.

வேல் கொண்டு வீரர்கள் மோதினர். நாவாய்களும், கலன்களும் நீர் மீது உழுது கொண்டு நகர்ந்தன. அணிகளும், படைகளும் கொத்துக் கொத்தாக நின்றனர். முத்துக்களும், மணிகளும், ஆடை ஆபரணங்களும், பெட்டகம் பெட்டகமாக எங்கும் நிறைந்தன. எங்கே, எல்லாம் எங்கே?

 திரு. மணியத்தின் கருத்தில் உதித்துக் கை வழி வந்து ரசிகர் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கும் எழில் ஓவியங்களிலே, வரை சித்திரங்களிலே!

மணியத்தின் சித்திரங்கள் காலம் வென்ற கலைப்படைப்புகள். அவர் கைத்திறன் சரித்திர மணத்தையும், பழம் தமிழ்க் கலையையும் சுகந்தமாகப் பரப்பியது தமிழ் அறிந்த நாட்டிலே.

திரு மணியத்தின் உழைப்புக்குக் கால அளவே கிடையாது. இருபத்து நான்கு மணி நேரம், அவருக்காக நாற்பத்து எட்டு மணியாக விரிந்து கொடுத்தது. காலை ஆறு மணி: மணியம் என்ன செய்து கொண்டிருக்கிறார்? சித்திரம் எழுதிக்கொண் டிருக்கிறார்.

மாலை ஆறு மணி: மணியம் என்ன செய்கிறார்? வர்ண ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கிறார்.

இரவு இரண்டு மணி: அவர் அறையில் விளக்கு எரிகிறது. தூக்கமா இல்லை, சித்திரங்கள் படைத்துக் கொண்டிருக்கிறார். உழைப்பு, உழைப்பு.... உழைப்பு, அது ஒன்றைத் தான் அவர் அறிவார். கலைக்குக் காலம் கிடையாது. இத்துணை இளம் வயதில், தன் காலம் முடிவடைந்து விடும் என்று திரு மணியம் எண்ணினாரோ என்னமோ, அசுர வேகத்தில் அமர சித்திரங்களைப் படைத்து வாரி வழங்கிச் சென்று விட்டார்.

விண்ணுலகில் இன்று அமரர் கல்கி புது சரித்திரத் தொடரை எழுதிக் கொண்டிருக்கிறாரோ? அதற்கு அமரர் மணியம் உயிர்ச் சித்திரங்கள் வரைய விரைந்து விட்டாரோ? 

- கோபுலு

மங்கள நூலகம் ‘பொன்னியின் செல்வன்’ கதையை அற்புத அழகோடு புஸ்தகத்தை அமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். மணியம் வரைந்த சித்திரங்கள் யோக்கியர்களைக்கூடத் திருடத் தூண்டும்.

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி


ஹூஸ்டன் பல்கலையில் தமிழ்ப்பீடம் - கால்கோள்

ஹூஸ்டன், டல்லஸ், ஆஸ்டின், சான் ஆண்டானியோ போன்ற டெக்சாஸ் தமிழர்களும், ஏனை அமெரிக்கா வாழ் தமிழர்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் சிறுதொகை நன்கொடை அளித்தால் அமெரிக்காவின் தென்திசையில் தமிழிருக்கை ஹூஸ்டன் பல்கலையில் உறுதியாக அமைந்துவிடும். இப்பொழுது தமிழ் இருக்கை அமைக்க முயற்சி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்காகத் தான் நிகழ்ந்துகொண்டுள்ளது. மேற்கே பெர்க்கிலி, வடக்கே ஹார்வர்ட், போல, தெற்கே ஹூஸ்டனில் தமிழ் வாழ வகை செய்வீர்! அப் பெரும்பணிக்கு உங்கள் கொடைவழங்க வலைப்பக்கங்கள்: website : https://www.houstontamilchair.org ( Donors can donate from default page or visit donation link. Donation link from website : https://www.houstontamilchair.org/donors/
Facebook : https://www.facebook.com/HoustonTamilStudiesChair/
Facebook Fundraiser : https://www.facebook.com/fund/HoustonTamilStudiesChair/
 Youtube : https://www.youtube.com/channel/UClg7oQJnTc8zVaY5znt2TLw
Houston Tamil Chair events: https://www.youtube.com/channel/UClg7oQJnTc8zVaY5znt2TLw/videos

University of Houston Receives $2M Commitment to Support Study of Tamil Language and Culture India-West Staff Reporter, Oct 17, 2019 https://www.indiawest.com/news/global_indian/university-of-houston-receives-m-commitment-to-support-study-of/article_2344e7f2-f046-11e9-b2de-f71484c68ee6.html 





The University of Houston Oct. 1 announced that the Indian American nonprofit Houston Tamil Studies Chair Inc. has gifted $2 million that will establish endowment for research and an endowed professorship. (photo provided)
The University of Houston Oct. 1 announced the signing of a gift agreement to establish endowment for research and an endowed professorship to support the study of the Tamil language and culture.
The Texas Indian American nonprofit organization with a mission to promote Tamil language, culture and literature, Houston Tamil Studies Chair Inc., has made a $2 million commitment to the university to establish an endowment supporting the study of Tamil heritage. The Tamil language is considered the oldest in the world — spoken by more than 70 million people worldwide — primarily in India, Sri Lanka, Malaysia and Singapore, the release said.
The nonprofit was founded in 2019 with the goal of establishing the Tamil studies chair at the University of Houston and providing a forum for the growing population of Tamil Americans in the United States — approximately 250,000 people.
The initial $1 million pledge will create The Houston Tamil Studies Chair Inc. Research Endowment in the UH College of Liberal Arts and Social Sciences. These funds will support research program costs, equipment and seminars with invited scholars who are experts on Tamil societies and the Tamil diaspora in the United States, the release said.
The donor will later pledge an additional $1 million and the endowment will be renamed The Houston Tamil Studies Chair Inc. Endowed Professorship. The educator who will hold this professorship will be a global research trailblazer with expertise on the rich diversity of Tamil culture and its global diaspora, according to Antonio D. Tillis, dean of the College of Liberal Arts and Social Sciences, it said.
“This gift serves as a new resource for global research opportunities for our faculty and students,” said Antonio D. Tillis, dean of the College of Liberal Arts and Social Sciences. “It affords expanding knowledge on a region that has interdisciplinary academic appeal with local and global contexts.”
The Houston Tamil Studies Chair Inc. was established through the vision of its founding members, Indian Americans Sockalingam Sam Kannappan, Dr. S.G. Appan, Sockalingam Narayanan, Perumal Annamalai, Dr. Nagamanickam Ganesan, Tupil V Narasiman and Dr. Thiruvengadam Arumugam. They have been leading community fundraising efforts in the Greater Houston area, Texas and beyond, the release added.
“Tamil has a rich social and political history. Through exploring Tamil traditions, we are facilitating understanding of a special and unique culture,” said Eloise Brice, vice president for University Advancement.
According to Appan, “As Tamil American families assimilate into the fabric of the multi-cultural society in this great nation, and as all our children get educated in American universities, HTSC takes great pride in leading this initiative to expand awareness of the rich Tamil culture, language and literature within an educational setting.”
Dr. Naga Ganesan said, “Tamil, one of the two classical languages of India along with Sanskrit, is vibrant and growing in American culturescape. We are proud to endow a professorship at University of Houston to study Tamil in all its aspects across the globe.”

'கோடியர்’ கதிரி கோபால்நாத் (1949 - 2019)

’கோடியர்’ கதிரி கோபாலநாதன்
----------------------------------------------------------

கோடு என்பது கொம்பு. விலங்கு, மரம் இரண்டுக்குமே கோடு உண்டு. மரம், மூங்கில் போன்றவற்றால் செய்யப்படும் காற்றிசைக் கருவிகளை வயிர் என்று சங்க இலக்கியத்தில் காண்கிறோம். வயிர் < வெதிர். மூங்கிலில் உருவாகும் புள்ளாங்குழல்/புல்லாங்குழல், ஆச்சா மரத்தில் உருவாகும் நாதஸ்வரம் இவற்றின் முன்னோடி தான் “வயிர்”. தாவரத்தைக்கொண்டு செய்த காற்றிசைக்கருவிகளை இசைப்போர் வயிரியர் ஆவர்.

மாடு, மான், எருமை, யானை, ... போன்ற விலங்குகளின் கோடுகளை/கொம்புகளை ஊதுவோர் கோடியர் எனப்படுவர். நியோலித்திக் காலத்திலே விலங்குக் கொம்புகளை வைத்து உருவான வடிவங்களில் இன்னும் இசைக்கருவிகளாகப் புழங்குபவை தென்னிந்தியாவில் அதிகம் எனத் தொல்லியலாளர் தெரிவிக்கின்றனர். எருமைக்கு வேதத்தில் வழங்கும் கௌர- என்ற பெயரே கோடு என்ற சொல்லுடன் தொடர்புடையது. கவரி மாவின் பெயர்: கவரி < கவடி << கோடு. http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

இவ்வாறு, கோடு மாட்டுக்கும், எருமைக்கும் தொடர்புடையது எனினும், கோவினம் என்று ஸம்ஸ்கிருதச் சொல்லால் மாடுகளையும், கோட்டினம் என்று தமிழ்ப் பெயரால் எருமைகளையும் கலித்தொகை குறிப்பிடுகிறது. இந்தியாவின் பழைய சமய் நெறிகளில் எத்தனையோ கடவுளர் உண்டு. எனினும், திணைமாந்தர்கள் கோடுகளை வைத்து, வணங்கும் பெருந்தெய்வங்கள் இரண்டு தான். (1) சுறாக் கோடு கொண்டு பூசிக்கும் வருணன் (2) அவன் மனை கௌரி/கொற்றவை எருமைக்கோட்டை வைத்து புதுமணல் பரப்பி, மணவறை சோடித்து நிகழும் கலியாணச் சீர்களில் வழிபடுவதை முல்லைக்கலிப் பாட்டு அறிவிக்கிறது. முதலாகுபெயருக்குச் சிறந்த உதாரணம் இச்செய்யுள். இந்தப் பாவை வழிபாடு பற்றி ஏனை விவரங்கள் திருமணத்தை விவரிக்கும் இரண்டு அகநானூற்றுப் பாடல்களால் விளங்குகிறது. சைவர், வைணவர், சமணர் பாடிய பாவைப்பாடல்களுக்கு இக் காத்யாயனி வழிபாடே அடிப்படை. திருப்பரங்குன்றில் கிடைத்துள்ள தமிழ் ப்ராமிக் கல்வெட்டு வருணன் - கௌரி ஜோடியைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டாகும். பிற்கால வருணனுக்கான சிந்துவெளி எழுத்து (மகர விடங்கர்) இப்போது கீழடி பானையோட்டில் கிடைத்துள்ளது. ஏற்கெனவே, செம்பியன் கண்டியூர் (கல் கோடரி), சாணூர், சூலூர், தாய்லாந்து தேசம் - எனத் தமிழர் செய்த கலங்களில் குறியீடாக சங்க காலத்தில் எழுதியுள்ளனர்.

எருமைக்கோடு பலவற்றையும் சேர்த்து S வடிவில் தூம்பு போலச் செய்து கோடியர் ஊதுவர். கொட்டாங்கச்சி வயலின் எனப்படும் ராவணஹஸ்தம் மூலமாகத்தான் முதலில் வில்லை நாணில் தேய்க்கும் நரம்பிசைக்கருவி முதன்முதலாக உலகில் தோன்றியது என்பர். பின்னாளில் மத்தியகிழக்கு நாடுகளில் பரவி, ஐரோப்பாவில் வயோலா, வயலின் என வளர்ச்சி அடைந்தது, அதே போல, ஸாக்சபோன் கருவியும் சங்க இலக்கியம் கோடு, கோடியர் எனப்படும் விலங்குக்கொம்புகளின் பரிணாம வளர்ச்சி ஆகும். விலங்குக் கொம்புகள் மறைந்தாலும், “ஹார்ன்” என்னும் பெயர் ஸாக்சபோன் போன்ற கருவிகளுக்கு இன்றும் நிலைத்துள்ளது, நியூ ஆர்லியான்ஸ் நகரில் கருப்பின மக்கள் வாசிக்கும் ஜாஸ் இசையில் ஸாக்ஸ் என்னும் ஹார்னுக்குப் பெரிய இடம் உண்டு.

நாதசுரக் கலைஞர்கள் இசையில் பாடல்களின் வார்த்தைகளை நாகசுரம் பேசும். குன்னக்குடி வயலினில் தமிழ்ப் பாடல்களின் சொற்கள் கேட்கலாம். அதுபோல, சாக்சபோனை கர்நாடக இசையின் “தொகுசொல்” கருவியாக இசைத்துக்காட்டி வாழ்ந்த பெருங்கலைஞர் கதிரி கோபாலநாதன் மறைந்துவிட்டார். கதிரியின் இசையில், கருநாடக சங்கீத சாகித்தியங்களின் சொற்களை உணரலாம்.

     மழையென மருண்ட மம்மர் பலவுடன்
     ஓய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை
     தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் - அகநானூறு

”பட்டத்து யானையானது, தன்மேற் கொண்டிருக்கின்ற துகிற் கொடியினைப் போல, ஓடை என்னும் குன்றத்தேயுள்ள. காய்ந்த தலையினையுள்ள ஞெமை மரத்தின்மீது, சிலம்பியானது வலையினைப் பின்னியது. மேற்காற்றால், அவ்வலையும் அசைந்து கொண்டிருந்தது. அதனை மேகம் எனக் கருதி, ஒருங்கே மருட்சியுற்றன மயக்கத்தினையுடைய இளைத்த களிறுகள் பலவும். வருத்தத்தை யுடையனவாக அவை உயர்த்த நெடுங்கைகள், புகழினைத் திரட்டிக் கூறும் கோடியரின் தூம்பினைப்போலத் தோன்றி ஒலிக்கும்.”

தொகுசொல் கோடியர் தூம்பு - இந்தச் சங்கப்பாட்டின் தொடரை அறிய,
“தொகுசொல் கோடியர் கதிரிகோபாலின் ஸாக்ஸ்” என வைத்து, அவரது இசையைக் கேட்டால் போதும்.
 சில கலியாணங்களிலும் (கோவை, திருப்பூர்) கேட்டிருக்கிறேன். சென்ற முறை அண்ணா பல்கலையில் பேரா. வா. செ. குழந்தைசாமி பரிசில் பெறச் சென்றபோது விமானத்தில் கதிரி கோபாலனின் அருகே இருக்கை. பலர் அவருடன் பேசி “அம்மாவுக்கு அனுப்பணும்”என்று தன்னி (Selfie) எடுத்துக்கொண்டனர், மறக்க முடியாத புதுப் பாட்டை போட்ட இசைவாணர் கதிரி மறைவுக்கு எம் அஞ்சலிகள்.

நா. கணேசன்

சாக்ஸபோனின் தனிமை இரக்கம்!
               -------------

உன்மூச்சும் என்மூச்சும் ஒன்றாய் இணைந்ததை 
ஊர்கேட்டுத் தலையாட்டவும்,

         ஓடிடும் ஸ்வாசத்தை உள்ளே அடக்கியே
         ஒன்றாக நின்றாடவும்,

தன்னாலே தழுவிடும் தனிவிரல் ஸ்பரிசத்தில்
தளிர்த்திட்ட தன்யாசியும்

           சங்கரா பரணமும் சரஸ்வதி தோடியுடன்
           சண்முகப் பிரியராகமும்,

முன்னால் அமர்ந்திடும் குமரியின்  வயலினும்
முகர்சிங்கின் மூர்த்தியழகும்,

            முடியவேமுடியாதென்   றேங்குமிரு தங்கமும்,
            முடங்கிட்ட கடவாத்யமும்,

மின்னாமல் இடித்தெங்கள்  கண்ணீரில் கரைந்ததே!
வேதனை நிலையாச்சுதே!
           வித்துவச் சித்தனே, கதிரிகோ பாலனே
               விட்டெமைப் பிரிந்த தேனோ?  

-ஆழ்ந்த வருத்தத்துடன்
புலவர் இராமமூர்த்தி. 

மவுனித்தது சாக்சபோன் இசை.. கத்ரி கோபால்நாத் காலமானார்!
By Mathivanan Maran

மங்களூரு: சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக்
குறைவால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.
கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம்
ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத்
தொட்டவர் கத்ரி கோபால்நாத்.

தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்ளிட்ட விருதுகளைப்
பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின்
சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக கத்ரி
கோபால்நாத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மங்களூரு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர்
காலமானார்.

கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகந்த் கத்ரி, இசை
அமைப்பாளராக உள்ளார். மற்றொரு மகன் குவைத்தில் இருக்கிறார்.

கர்நாடகாவின் பாதவிங்கடி என்ற இடத்தில் கத்ரி கோபால்நாத்தின் இறுதிச்
சடங்குகள் நடைபெற உள்ளன. குவைத்தில் இருக்கும் மற்றொரு மகனின் வருகைக்காக
குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். கத்ரி கோபால்நாத்தின் மறைவு
தென்னிந்திய திரை உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமூக வலைதளங்களில்
கத்ரி கோபால்நாத் மறைவுக்கு திரைபிரபலங்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த
இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

 https://tamil.oneindia.com/news/mangalore/saxophone-legend-kadri-gopalnath-passes-away-365284.html

ஹூஸ்டன் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியர் இருக்கை ஒப்பந்தம்

யுனிவெஸிட்டி ஆஃப் ஹூஸ்டன் பிரெசிடெண்ட் ரேணு கட்டோர், வைஸ்-சான்சிலர் எலாய்ஸ் ப்ரைஸ், அகடமிக் டீன் டில்லிஸ் என்னும் உயர் அதிகாரிகளுடன், ஹூஸ்டன் தமிழ் ஸ்டடீஸ் சேர் குழுமம் 2 மில்லியன் டாலர்கள் தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ் கற்பிக்கும் பேராசிரியரின் சம்பளம் டெக்சாஸ் அரசாங்க நிதியுதவியுடன் ஹூஸ்டன் பல்கலை அளிக்கும். இருக்கைக்குத் தமிழர்கள் அளிக்கும் பணத்தின் வருவாய் ஆராய்ச்சிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப் பெறும். பெர்க்கிலி பல்கலை, ஹார்வர்ட் பல்கலை, மூன்றாவதாக ஹூஸ்டன் பல்கலையில் தமிழர்கள் நிதி அளிக்கை மூலம் தமிழ்ப்பீடங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. சங்கத் தமிழ், தமிழ் இலக்கியங்களுக்கும் தொல்லியல், இந்திய சமயம், சமூகம், தமிழரின் உலகளாவிய பராவல், அடுத்த தலைமுறையினர் தமிழில் வல்லுநர்கள் ஆதல், ஒப்பீட்டு திராவிட மொழியியல், சிந்துவெளி - திராவிடர் தொடர்புகள், ... போன்ற பல்வேறு துறைகளில் கல்வி, ஆராய்ச்சி, கருத்தரங்குகள் நிகழ்த்த வாய்ப்பாக ஹூஸ்டன் பல்கலை தமிழ் இருக்கை அமையும்.



ஹூஸ்டன் யுனிவெர்ஸிட்டி வைஸ்-சான்சிலர் ப்ரைஸ் “நன்றி”
எனத் தமிழை நவில வைத்தோம் :-) 😊 😊 😊
Press Release from Houston Tamil Studies Chair, Inc.,. This was widely reported in the media (TV and print) both in Tamil Nadu and in Texas, USA.

UH Receives $2 Million Commitment to Support Study of Tamil Language and Culture

HOUSTON, Oct 1, 2019- A Gift agreement was signed on October 1st 2019  to Establish Endowment for Research, Endowed Professorship to support study of Tamil language and culture.


A Texas nonprofit organization with a mission to promote Tamil language, culture and literature has made a $2 million commitment to the University of Houston to establish an endowment supporting the study of Tamil heritage. The Tamil language is considered the oldest in the world — spoken by more than 70 million people worldwide — primarily in India, Sri Lanka, Malaysia and Singapore.

Houston Tamil Studies Chair, Inc., (HTSC)  which is the donor, is a nonprofit that was founded in 2019 with the goal of establishing the Tamil studies chair at the University of Houston and providing a forum for the growing population of Tamil-Americans in the United States — approximately 250,000 people.

Dr. Renu Khator, Chancellor, UH System spoke about the long term relationship between UH and HTSC’s board members. Sockalingam Sam Kannappan spoke that Kaniyan Pungundranar’s poem starts with the lines of “Yaadhum Oore Yavarum Kelir” speaks about unity. Indian Prime Minister Modi ji spoke about these lines in the United Nations Organization on September 27th 2019. Dr. S.G Appan talked about achievements of Tamil Americans. Tupil Narasiman presented the financial status of HTSC.
The initial $1 million pledge will create The Houston Tamil Studies Chair, Inc. Research Endowment in the UH College of Liberal Arts and Social Sciences. These funds will support research program costs, equipment and seminars with invited scholars who are experts on Tamil societies and the Tamil diaspora in the United States.
The donor will later pledge an additional $1 million and the endowment will be renamed The Houston Tamil Studies Chair Inc. Endowed Professorship. The educator who will hold this professorship will be a global research trailblazer with expertise on the rich diversity of Tamil culture and its global diaspora, according to Antonio D. Tillis, dean of the College of Liberal Arts and Social Sciences.

“This gift serves as a new resource for global research opportunities for our faculty and students,” said Tillis. “It affords expanding knowledge on a region that has interdisciplinary academic appeal with local and global contexts.”  

Houston Tamil Studies Chair Inc. was established through the vision of its founding members Sockalingam Sam Kannappan; Dr. S.G. Appan; Sockalingam Narayanan; Perumal Annamalai; Dr. Nagamanickam Ganesan; Tupil V Narasiman and Dr. Thiruvengadam Arumugam. They have been leading community fundraising efforts in the Greater Houston area, Texas and beyond.
 “Tamil has a rich social and political history. Through exploring Tamil traditions, we are facilitating understanding of a special and unique culture,” said Eloise Brice, vice president for University Advancement.

According to Dr. S.G Appan “As Tamil-American families assimilate into the fabric of the multi-cultural society in this great Nation, and as all our children get educated in American Universities, HTSC takes great pride in leading this initiative to expand awareness of the rich Tamil culture, language and literature within an educational setting.”

Dr. Naga Ganesan says “Tamil, one of the two classical languages of India along with Sanskrit, is vibrant and growing in American culturescape. We are proud to endow a professorship at University of Houston to study Tamil in all its aspects across the globe.”

----------
https://www.thehindu.com/news/national/houston-university-receives-2-mn-commitment-to-support-tamil-language/article29592339.ece
NATIONAL

Houston University receives $ 2 mn commitment to support Tamil language


The Houston Tamil Studies Chair’s mission is to promote the oldest language, spoken by more than 70 million globally, a release said


The Houston Tamil Studies Chair (HTSC) has made a $ 2 million pledge to the University of Houston to establish an endowment supporting the study of Tamil heritage.
The HTSC is a non-profit organisation founded 2018 to establish the Tamil studies chair at the Houston University and provide a forum for the growing population of over 250,000 Tamil-Americans in the United States, a release said.
Its mission is to promote the oldest language, Tamil, which is spoken by more than 70 million globally.
HTSC founding members Sockalingam Sam Kannappan, Dr S G Appan, Sockalingam Narayanan, Perumal Annamalai, Nagamanickam Ganesan, Tupil V Narasiman and Dr Thiruvengadam Arumugam have been leading community fundraising efforts in the Greater Houston area, Texas and beyond, it said.
“As Tamil-American families assimilate into the fabric of the multi-cultural society in this great nation, and as all our children get educated in American Universities, HTSC takes great pride in leading this initiative to expand awareness of the rich Tamil culture, language and literature within an educational setting,” said Sam Kannappan who is also the board president of HTSC said.
“Through this generous gift, we are able to enrich our academic programmes and introduce our students to Tamil’s special and unique culture,” said Eloise Brice, vice president for University Advancement.
The initial $ 1 million pledge will create HTSC research endowment in the UH College of Liberal Arts and Social Sciences.
Funds will support research programme costs, equipment and seminars with invited scholars who are experts on Tamil societies and the Tamil diaspora in the United States.
An additional $ 1 million will rename the endowment HTSC Endowed Professorship.
The educator who will hold this professorship will be a global research trailblazer with expertise on the rich diversity of Tamil culture and its global diaspora, according to Antonio D Tillis, dean of the College of Liberal Arts and Social Sciences.
“This gift serves as a new resource for global research opportunities for our faculty and students,” said Tillis.
“It affords expanding knowledge on a region that has interdisciplinary academic appeal with local and global contexts.”
The gift is part of the ‘Here, We Go’ campaign, the University of Houston’s first major fundraising campaign in more than 25 years.
The University has raised more than $ 1 billion to address key priorities, including scholarships, faculty support and strengthening the university’s partnership with Houston and the momentum continues as UH moves beyond its original billion dollar goal.

https://www.hindutamil.in/news/world/518561-houston-university-receives-usd-2m-commitment-to-support-tamil-language-culture.html

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை: தமிழர்கள் முயற்சியால் ரூ.14 கோடி நிதி திரண்டது


ஹூஸ்டன்
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ளஅ ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென தனியாக இருக்கை உருவாக்குவதற்காக தமிழர்கள் மேற்கொண்ட முயற்சியால் இதுவரை ரூ.14.17 கோடி (20 லட்சம் டாலர்கள்) நிதி திரட்டப்பட்டுள்ளது.
இதற்கான பணியா தி ஹூஸ்டன் தமிழ் கல்வி இருக்கை (ஹெச்டிஎஸ்சி) செய்து வருகிறது. அமெரிக்காவில் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கென ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை உருவாக்க ஹெச்டிஎஸ்சி அமைப்பு முயன்று வருகிறது. கடந் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு அரசு சாராத ஒரு தொண்டு நிறுவனமாகும்.
இந்த ஹெச்டிஎஸ்சி அமைப்பின் உறுப்பினர்களான சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், டாக்டர் எஸ் ஜி அப்பன், சொக்கலிங்கம் நாராயணன், பெருமாள் அண்ணாமலை, நாகமாணிக்கம் கணேசன், துபில் வி நரசிம்மன், டாக்டர் திருவேங்கடம் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் இந்த நிதி திரட்டும் பணிகள் கிரேட் ஹூஸ்டன் பகுதி, டெக்சாஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்தது.
உலகத் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இதையடுத்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான பணிகளை அங்குள்ள தமிழ்ச் சங்கம் மூலம் தமிழர்கள் தொடங்கினர்.
ஹூஸ்டன் பல்கலைக்கழக்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.42 கோடி தேவைப்படுகிறது. இதில் ரூ.21 கோடியை அமெரிக்க அரசு தரும் நிலையில், தமிழர்கள் சார்பில் ரூ.21 கோடி அளிக்க வேண்டும். அந்தவகையில் தற்போது ரூ.14.71 நிதி திரட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹெச்டிஎஸ்சி அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பன கூறுகையில், "அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பன்முக கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும், அவர்களின் குழந்தைகள் அமெரிக்கப் பல்கலை.யில் படித்தாலும், ஹெச்டிஎஸ்சி அமைப்பு, செழுமை மிக்க தமிழ் கலாச்சாரம், மொழி, இலக்கியம் ஆகியவற்றைத் தமிழர்கள் மட்டுமின்றி அமெரிக்க மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.
தமிழின் சிறப்பையும், தனித்துவமான கலாச்சாரத்தையும் நமது மாணவர்கள் கற்கவும், பல்வேறு விஷயங்களையும் அறியவும் இந்த தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடக்கத்தில் 10 லட்சம் டாலர் சேரும் பட்சத்தில் ஹூஸ்டன் பல்கலை.யில் ஹெச்டிஎஸ்சி ஆய்வுத்துறை உருவாக்கப்படும். அதன் மூலம் திட்டங்களுக்கான செலவு, ஆய்வுகளுக்கான செலவு, கலந்துரையாடல் நிகழ்ச்சி, சொற்பொழிவுகள், சிறப்பு விருந்தினர்களை அழைத்துப் பேசுதல் போன்றவை செய்யப்படும்.
கூடுதலாக 10 லட்சம் டாலர் திரட்டுதல் என்பது, ஹெச்டிஎஸ்சி அமைப்பை தமிழ் இருக்கையாக மாற்றுவதாகும். இந்தத் தமிழ்த் துறையில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் உலக அளவில் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட முடியும்.
பிடிஐ

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கையொப்பம் இட்ட சிறப்பு நாள் .

October 3, 2019, Dinamalar, Chennai.

 “எண்ணிய முடித்தல் வேண்டும்
   நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
   தெளிந்த நல்லறிவு வேண்டும்
நண்ணிய உரிமை வேண்டும்
   நாமதை பெறவும் வேண்டும்
கண்ணிலே ஒளியும் வேண்டும்
  கன்னித்தமிழைக் காக்க வேண்டும்” - பாரதியார்

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை பல மாதங்களாய் நடந்து கொண்டிருந்தது. அதன் விளைவாக நேற்று அக்டோபர் 1ம் தேதி, இதற்கு உழைத்த காரணகர்த்தாவாக தலைவர்கள் இணைந்து உறுதியளித்து கையொப்பமிடும் விழா நிகழ்ச்சி, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் சமூக அறிவியல் மற்றும் கலைத்துறை பிரிவின் டீன் திரு.அன்டோனியோ டில்லிஸ் மற்றும் ஹிஸ்பானிக் ஆய்வுப்பிரிவின் பேராசிரியர் திரு. ஆண்டர்சன் வரவேற்புரை ஆற்றினர்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை இன்று நிலைபெற்றிருக்க பெரும் காரணமாய் இருக்கும், தமிழ் மேல் தீரா பற்றுக் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் தாய்மொழியை மறவாதிருக்க தொடர்ந்து அருந்தொண்டு ஆற்றிவரும் திரு. சாம் கண்ணப்பன் அவர்களும், டாக்டர் திரு.அப்பன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

அதன் பின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பிரெசிடெண்ட் திருமதி. ரேணு கதோர் உரை ஆற்றுகையில் தான் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாகக் கூறினார். பின்னர் காத்திருந்த அந்த கையொப்பமிடும் தருணம் இனிதே நிகழ்ந்தேறியது.தமிழ் சார் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

சோழன் காசுகள் (தமிழ் கிரந்த எழுத்தில்)

கல்வெட்டு ஆய்வாளர் துரை சுந்தரம் (கோவை) அவர்களிடம் இரண்டு முக்கியமான சோழன் பொற்காசுகளின் ஒளிப்படங்கள் அளித்தேன். அவற்றில் உள்ள விருதுப் பெயர்களை ஒவ்வொரு எழுத்தாக விளக்கினார். அவருக்கு என் நன்றி.

’முடிகொண்டசோழன்’ என எழுதிய காசில், ‘ட’ 11-ஆம் நூற்றாண்டில் தமிழிலும், தமிழ் கிரந்தத்திலும் இருந்த வடிவைப் பார்க்கலாம். அப்படியே, முடிகொண்ட என்ற தமிழ் வார்த்தையை எழுத்துப்பெயர்ப்பாய் (transliteration) வெளியிட்டுளனர். சோழர்கள் தாம் சமணர்கள் உருவாக்கிய வட்டெழுத்தைக் கைவிட்டு, கிரந்த லிபியைத் தமிழுக்கு முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள். சேர நாட்டில் அதற்கப்புறமும் வட்டெழுத்து சில காலம் வாழ்ந்தது. அதனால், இணையம், அச்சு நூல்களில் பயன்பாட்டில் உள்ள ஜ, ஶ, ஷ, ஸ, ஹ ஐந்தெழுத்தையும் வடவெழுத்து எனத் தொல்காப்பியர் வழியில் குறிப்பிடல் முறையானதாகும். தமிழல்லா நூல்களை, சொற்களைத் தமிழ்லிபியில் எழுத இவ்வைந்து வடவெழுத்தும் அவசியம் எனத் தமிழறிஞர் தெரிந்தெடுத்துக் கணிகளிலும், அகராதிகளிலும் தந்துள்ளனர். இவற்றின் விழுக்காடு எவ்வளவு உள்ளது என வடமொழி நூல்களின் தமிழ்லிபிப் பதிப்புகளில் கணிஞர்கள் ஆராய்ந்து தெரிவிக்கலாம். அதே போல, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ... போன்ற நூல்களின் தமிழ்லிபிப் பதிப்புகளில் வடவெழுத்தின் எத்துணைப் பங்கு என ஆராயலாம்.

‘முடிகொண்ட சோழன்’ காசில் பாண்டியன் மீன் சின்னமும், சோழன் புலிச் சின்னமும் உள்ளது. எனவே, “பாண்டியன்” முடிகொண்ட சோழன் என்பது பொருள். பாண்டியநாடு முற்றாக சோழர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டது.

இவைபோல, இன்னும் பல காசுகளின் எழுத்துகளை எழுத்தெண்ணிக் கற்போம்.

நா. கணேசன்

----------

சோழர் கால நாணயம்- முடிகொண்ட சோழந்

வணக்கம்.


நீங்கள் அனுப்பிய சோழர் கால நாணயத்தின் படம் அருமையான எழுத்துப்பொறிப்புகளைக் கொண்டுள்ளது. எழுத்துகள்,  சோழர் காலத்தில் வழக்கிலிருந்த கிரந்த எழுத்து வகையைச் சார்ந்தவை.  ”முடிகொண்ட சோழன்”  என்னும் பெயர் எழுதப்பட்டுள்ளது.   கிரந்தத்தில், தமிழின் சிறப்பு  “ழ”கரமும் ”றன்ன”கரமும் இல்லாமையாலும்,  சோழர் காலத்தில் ஒகர ஓகார இரு உயிர் மெய்யெழுத்துகளுக்கும் பொதுவில் ஒற்றைக்கொம்பு மட்டுமே பயன்பாட்டில் இருந்தமையாலும் , ”முடிகொண்ட சோழன்” என்னும் சொல்  கிரந்தத்தில் ”முடிகொண்ட சொளந்”  என எழுதப்படும். அதுவே, இந்த நாணயத்திலும் எழுதப்பட்டுள்ளது.



முடிகொண்ட சோழந் - நாணயம்

https://thehinduimages.com/details-page.php?id=133226134
Caption : CHENNAI, 18/05/2012: A gold coin belonging to 1014-1-44 CE of Rajendra Chola which was found in Dharmapuri district is on display at Egmore Museum on the occasion of 150th year celebration of the Archaeological Survey of India, on May 18, 2012. Photo: S.R. Raghunathan


மேற்படி நாணய எழுத்துகளில்,  “ண்ட”  ஆகிய இரு எழுத்துகள், தமிழ் எழுத்துப்போல் தனித் தனியே எழுதப்படாமல் கூட்டெழுத்தாக (ஒன்றின் கீழ் ஒன்றாக) எழுதப்பட்டுள்ளது.  ”ண” கரத்தை ஒட்டி வரும் ”ட” கரம் கிரந்த வழக்கில் மெல்லோசையுடைய  வர்க்க எழுத்தான மூன்றாம் ”ட” கர எழுத்தாகவே எழுதப்படுதல் மரபு. இந்த நாணயத்தில், அம்மரபு  காணப்படவில்லை.  மாறாக, வர்க்க எழுத்தில் முதல் “ட”கர எழுத்து எழுதப்பட்டுள்ளது.  அதுபோலவே, ”முடி”   என்னும் சொல்லிலும் வர்க்க எழுத்தில் முதல் “ட”கர எழுத்து எழுதப்பட்டுள்ளது. “சோளந்”   என்னும் சொல்லில்  “சொ”  என்பதை எழுத ஒற்றைக் கொம்பு, சகரம், கால்  என்னும் முறையில் எழுதவேண்டும். ஆனால், கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் சில இடங்களில், ”கால்” என்னும் ஒட்டு, தனியே எழுதப்படாமல்   முதன்மை எழுத்துடன் சேர்த்து எழுதப்படுதல் உண்டு. அவ்வாறே, இந்த நாணயத்திலும் எழுதப்பட்டுள்ளது.

கிரந்த எழுத்துகளின் வரிவடிவம் பல்லவர் உருவாக்கியதாகும்.  பின்னர் சோழர் காலத்தில் அந்த வரிவடிவம் சற்று மாற்றம் பெறுகிறது. அது போலவே, பாண்டியர் காலத்திலும், விஜய நகரர் காலத்திலும்  மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது,  நிலை நிறுத்தப்பெற்ற அச்சு வடிவ  எழுத்துகளின் வரிவடிவத்தில், “முடிகொண்ட சொளந்”  என்பது  எவ்வாறு எழுதப்படுகிறது என்பதைக் கீழே காணலாம்.  நான்கு வரிகளில் எழுதப்பட்ட இச்சொல்லின் வரிவடிவங்களில் முதலாவது, இந்த அச்சு வடிவம். திருவனந்தபுரத்தில் இயங்கிவரும் “திராவிட மொழியியல் கழகம்”  (DRAVIDIAN LINGUISTICS ASSOCIATION) என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள  "THE GRANTHA SCRIPT"  என்னும் நூலை (நூலாசிரியர்: பி.விசாலாட்சி) அடிப்படையாய்க் கொண்டு இந்த அச்சு வடிவம் எழுதப்பட்டுள்ளது. அடுத்து, இரண்டாம் வரியில், நாணயத்தில் எழுதப்பட்ட வரிவடிவம் அமைகிறது. மூன்றாம் வரி இன்றைய தமிழ் எழுத்து வடிவம். நான்காம் வரியில்,  ஆங்கில எழுத்துகளில் உரிய  ஒலிக்குறிப்புடன் எழுதப்பட்ட வடிவம் உள்ளது.


கீழ்வரும் பகுதியில் சோழர் கால கிரந்த எழுத்துகள் சிலவற்றின் வடிவங்கள்  தரப்பட்டுள்ளன. இவை, தொல்லியல் துறையில் (1935-1965)  பணியாற்றிய தொல்லியல் அறிஞர் சி. சிவராமமூர்த்தி அவர்கள் எழுதிய "INDIAN EPIGRAPHY AND SOUTH INDIAN SCRIPTS"  என்னும் நூலையும்,  தஞ்சைக் கல்வெட்டுகளையும்  பார்வையிட்டுப் பெற்ற  எழுத்துச் சான்றுகளாகும்.



1       “ம”   எழுத்தின் வரிவடிவம்

இது தஞ்சைக் கல்வெட்டொன்றில் காணப்படும் வடிவம்.


தஞ்சைக்கல்வெட்டில்  கிரந்த எழுத்து “ம”


கீழுள்ளது  நூலில் குறிப்பிடப்பெறும் வரிவடிவம்.








”ம”  கிரந்த எழுத்தின் மாற்று வடிவங்கள்



2      ”க”   எழுத்தின் வரிவடிவம்



தஞ்சைக்கல்வெட்டில்  கிரந்த எழுத்து “க”







3    “ட”   எழுத்தின் வரிவடிவம்


இராசேந்திர சோழன் கால எழுத்து-திருவாலங்காட்டுச் செப்பேடு


நூலில் குறிப்பிடப்பெறும் வடிவம் 
இந்த “ட”  எழுத்து  (வர்க்க எழுத்துகளில் முதலாவது) ,  நாணயத்தில் எழுதப்பட்டுள்ளது.

4      ”ண்ட”  - கூட்டெழுத்தின் சரியான வடிவம்

மேலே,
”ண” கரத்தை ஒட்டி வரும் ”ட” கரம் கிரந்த வழக்கில் மெல்லோசையுடைய  வர்க்க எழுத்தான மூன்றாம் ”ட” கர எழுத்தாகவே எழுதப்படுதல் மரபு. இந்த நாணயத்தில், அம்மரபு  காணப்படவில்லை.  மாறாக, வர்க்க எழுத்தில் முதலாம்  “ட”கர எழுத்து எழுதப்பட்டுள்ளது - என்று குறிப்பிட்டுள்ளேன்.

மரபுப்படி,   ”ண்ட”  - கூட்டெழுத்தின் சரியான வடிவத்தைக் கீழ்க்கண்ட சான்று மூலம் அறியலாம்.


”ண்ட”  - கூட்டெழுத்தின் சரியான வடிவம்

”ட” கரத்தின் மூன்றாம் வர்க்க எழுத்தின் வடிவத்தைக் கீழுள்ள  எழுத்து காட்டும்.


நூலில் குறிப்பிடப்பெறும் வடிவம் 


”ம”, ”க”, “ட”(ta)  ஆகிய மூன்று கிரந்த எழுத்துகளின் வரி வடிவத்தையும் கீழுள்ள  கல்வெட்டுச் சொல் குறிக்கும்.




மகுடம் -  MAKUTAM

இராஜேந்திர சோழனின் நாணயம்





நீங்கள் அனுப்பிய இராஜேந்திர சோழனின் நாணயத்தின் படத்தில் வட்டச் சுற்றில் எழுதப்பட்ட எழுத்துகளின் நேர் வடிவம்  கீழே தரப்பட்டுள்ளது.






இந்த எழுத்துகளில்,  முதல் எழுத்தான “ர”கர நெடிலுக்குரிய கால் “ர”கர எழுத்துடன் சேர்த்தே எழுதப்பட்டுள்ளது. இது “முடிகொண்ட சொளந்”  நாணயத்தில் உள்ள முறையிலேயே அமைந்துள்ளது. “சொ” எழுத்திலும் அவ்வாறே.  ஒற்றைக்கொம்பு  சற்று மாறுபட்ட தோற்றம் பெறுகின்றது;  எனினும்,  ஒற்றைக்கொம்புதான் என எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் அளவிலேயே எழுதப்பட்டுள்ளது.  ”ஜ”  எழுத்தும்  எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.  “ந்த்ர”    ("NDRA")   என்பது கூட்டெழுத்து முறையில் எழுதப்பட்டுள்ளது.  


சுந்தரம், கோயமுத்தூர்.