வானத்தில் ஒரு மௌனத் தாரகை - சுஜாதா சிறுகதை (1980)

 வானத்தில் ஒரு மௌனத் தாரகை

              - சுஜாதாவின் சிறுகதை, 1980   

 For the first time in four decades, Indian Air Force Captain Shubhanshu Shukla will journey to the International Space Station aboard a SpaceX rocket. ISRO has paid $ 60 million for this. 

 In 1980, Tamil writer Sujatha penned a short story envisioning Dhruva conducting an EVA (Extravehicular Activity) to repair an INSAT satellite. Dhruva, meaning 'stationary' like the Pole Star, reflects ancient Indian astronomy from Harappan times, which identified the 27/28 Lunar Mansions (Nakshatra) and influenced celestial observations in China and Mesopotamia. Ref.s given. 

 Having worked on Shuttle Missions, I’m thrilled to share this rare story by the celebrated author, accompanied by unique EVA mission images. Wishing India and Capt. S. Shukla triumph in their space endeavors! ~NG

வானத்தில் ஒரு மௌனத் தாரகை

              - சுஜாதாவின் சிறுகதை, 1980

காலையிலேயே போட்டோ எடுக்க வந்தார்கள். துருவா நளினியையும் வினோத்தையும் தொட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்க, ஸ்டில் காமிராக்கள் 'க்ளிக் க்ளிக் க்ளிக்' என்று பேசின. ஆர்க் விளக்கை ஒருத்தன் உயர்த்திப் பிடிக்க திரைப்படக் காமிராக்கள் விர்ர்ரின

"ஆல்ரைட், ஆல்ரைட், நீங்க போகலாம். அவருக்கு ஏகப்பட்ட வேலையிருக்கு" என்று நாராயண் ராவ் அதட்ட, மேஜைமேல் டெலிபோன் ஒலித்தது.

ராவ் சட்டென்று உஷாரானார். "ஷ்ஷ்" என்று மற்றவர்களை அதட்டினார். "எஸ் ஸார்! இருக்கார் ஸார் ! இதோ ஸார்! கூப்பிடறேன் ஸார்!" என்று டெலிபோனின் வாயைப் பொத்தி 'தலைவர்' என்றார். துருவா பாய்ந்து டெலிபோனை வாங்கிக்கொண்டான்.

"குட்மார்னிங் ஸார்! துருவா ஹியர்!"

தலைநகரிலிருந்து தலைவரின் குரல் துல்லியமாக ஒலித்தது. "குட்மார்னிங் துருவா! எப்படி இருக்கிறாய்?"

"மிகவும் சந்தோஷமாக! மிகவும் ஆர்வமாக!"

"எல்லாம் தயாரா?"

"தயார் ஸார்!"

"துருவா! இந்தத் தேசமே உன்னைப் பற்றிப் பெருமைப்படுகிறது."

"அதெல்லாம் பெரிய வார்த்தைகள். நான் என் கடமையைச் செய்கிறேன் ஸார்! கீழே நீங்கள் இருக்கும்வரை எனக்கு என்ன ஸார் கவலை?"

"உன் துணிச்சலுக்கும் இளமைக்கும் கட்டுப்பாடான மனத்திற்கும் நவீன இந்தியா அஞ்சலி செய்கிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தலைசிறந்த இந்தியர்களின் வரிசையில் நீ பிரதான இடம்பெறுவாய். நீ செய்வது ஒரு மகத்தான காரியம்!"

"உங்களைப் போன்ற சிறந்த தலைவரிடமிருந்து, இந்த நாட்டின் முதல் குடிமகனிடமிருந்து இந்தப் பாராட்டு வார்த்தைகளைப் பெற நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!"

"துருவா! உன் பிரயாணத்தின் ஒவ்வொரு கணத்தையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். உன் மனைவிக்கு என் நமஸ்காரங்கள். உன் மகனுக்கு என் அன்பு முத்தங்கள். ஆண்டவன் உன்னோடு இருக்கட்டும்!”

போனை வைத்தபோது துருவாவுக்குப் பெருமிதம் நெஞ்சு பூரா நிரம்பி வழிந்தது. தலைவர் ! அகில இந்தியாவையே அரசாளும் ஆட்டிப் படைக்கும் ஜெனரல் விக்ரம் என்னை மதித்து என் வீட்டு நம்பருக்கு டெலிபோன் செய்து, அன்பாக விசாரித்து, அவ்வளவு கீர்த்தி பெறுவதற்கு நான் என்னத்தைச் செய்யப்போகிறேன். கேவலம் ஒரு ஸாட்டிலைட்டை, செயற்கைக் கிரகத்தை மேலே சென்று பழுதுபார்க்கப் போகிறேன்.

"மிஸ்டர் துருவா, வாருங்கள்!" என்றார் நாராயண் ராவ். பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட பொதுஜனத் தொடர்பு ராவ் "டெலிவிஷனில் உலகப் பத்திரிகை நிருபர்களைச் சந்திக்கப் போகிறீர்கள். பதில்கள் ஜாக்கிரதையாகவே இருக்கட்டும். என்ன?"

"கவலைப்படாதீர்கள்."

அறைக்குள் நுழைந்தவுடன் மறுபடி, பளிச் பளிச் பளிச்... "மிஸ்டர் துருவா ! எப்படி இருக்கிங்க?"

"சந்தோஷமா!" அறையில் நூறு பேர் இருந்தார்கள்.

"நாளைக்குக் கிளம்பப் போகிறோமோ என்று உங்க மனசிலே கொஞ்சம்கூட ஒரு ஒரு..."

"பயமா? ம்ஹும்!"

"பயம் இல்லை! ஒருவிதமான பதட்டம்.?"

"பதட்டம்கூட இல்லை. ஒருவித எதிர்பார்ப்பினால் என் உடம்பு பூரா ஒரு மின்சாரம் மாதிரி உணர்கிறேன்."

"நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க நளினி?"

"எனக்குப் பயமாத்தான் இருக்குது. நல்லபடியா திரும்பி வந்து சேரணுமேன்னு கடவுளை வேண்டிக்கிட்டிருக்கேன்!"

ஹாரிஸன் ஃப்ரம் நியூயார்க் டைம்ஸ்!

"மிஸ்டர் துருவா நீங்க போகிற மிஷன் தோல்வி அடைவதற்கும் சாத்தியம் இருக்கிறது என்கிறார்களே?"

"இருக்கிறது. ஆனால் வெற்றி அடைய அதிகப்படியான சாத்தியம்?"

"அப்படித் தோல்வி அடைந்தால் நீங்க போய் வருவதே முழுக்க விரயமாகிவிடும். இல்லையா?"

கோபம் வந்தது. நாராயண் ராவ் சைகை செய்யச் சற்று அடக்கிக்கொண்டான். திமிர்! "மிஸ்டர் ஹாரிஸன்! 'இன்ஸாட் ஒன்பது' என்று இப்போது விண்வெளியில் எங்கள் செயற்கைக் கிரகம் ஒன்று பறக்கிறது. 36,000 கிலோ மீட்டரில். இதற்கு மொத்தம் இந்திய அரசாங்கம் செலவழித்தது இருபது கோடி ரூபாய். இருபத்து நாலாயிரம் டெலிபோன் இணைப்புகள். நான்கு டெலிவிஷன் இணைப்புகள்..."

ஹாரிஸன் "எல்லாம் தெரியும் எங்களுக்கு! பிரமாதமான ஸாட்டிலைட்தான். ஆனால், அது வேலை செய்தது..”

"பதினைந்து நாள்"-க்ராலி ஃப்ரம் டெய்லி டெலிகிராஃப் .

துருவாவுக்கு இப்போது சலிப்பு ஏற்பட்டது. இருந்தும் பொறுமை வேண்டும்!

"டெலிகமாண்டுகள் டெலிமெட்ரி மூலம் ஸாட்டிலைட் உயிருடன் இருப்பது தெரிகிறது. ஸோலர் பானல்களில் ஒன்று ஒரு தப்பான ஆணையை எங்கோ பெற்று, தன்னைத்தானே மூடிக்கொண்டு விட்டது..."

"எனவே வானத்தில் உலவும் மௌனத் தாரகையாகிவிட்டது."

"சுலபமாக என்ன தவறு நிகழ்ந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிகிறது. ஒரு மைக்ரோ ஸ்விட்சை அழுத்தி ஒரு ஓவர்ரைடு கொடுக்க வேண்டும். அஞ்சு நிமிஷ வேலை. ஆனால் 36,000 கி.மீ. தள்ளி இருக்கிறதே! ஸோ நியர் பட் ஸோ ஃபார்!" 

"இதற்குப் பதில் புதிய ஸாட்டிலைட்டையே நல்லதாக ஒன்று அனுப்பிவிடலாமே!"

"புதிய ஸாட்டிலைட் செய்வதற்கு மூன்று வருஷம் ஆகும். செலவு இருபத்திரண்டு கோடி ஆகும். இப்போது என்னை, ஒரு முழு இன்ஜினியரை அனுப்புவதற்கு... எவ்வளவு செலவு மிஸ்டர் ராவ்?"

"மூன்றரைக் கோடி."

"எனக்கு விஷயம் தெரியும்.எந்த இடத்தில் பழுது என்பதும் தெரியும். ஸாட்டிலைட்டிற்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்குச் சாத்தியக்கூறுகள் மிக அதிகம்."

"நீங்கள் ஓர் இன்ஜினியர். ராக்கெட் செலுத்தப் பயிற்சி பெற்றீர்கள். அதுபற்றி ஏதாவது...?”

"பயிற்சி பயிற்சி பயிற்சி! ஆறு மாதம் நெக்கு வாங்கிவிட்டார்கள். ஸிமுலேட்டரில், ஸென்ட்ரி ஃப்யூஜில், பற்பல ஜெட் விமானங்களில்..."

"தலைவர் உங்களிடம் என்ன சொன்னார்?"

"'உன்னால் எங்களுக்கு இப்பெருமை' என்றார். எனக்கு உடம்பெல்லாம் பூரித்தது... ஆண்டவன் உன்னோடு இருக்கட்டும் என்று ஆசி கூறினார்."

"ஆண்டவன் என்றா சொன்னார்?"

"ஆம்."

"தனியாகப் போகிறீர்களே, பயமாக இல்லை?" 

“இந்தக் கேள்வி மீண்டும் வருகிறது. ரேடியோ தொடர்பு எப்போதும் இருக்கிறது. டெலிவிஷன் இருக்கிறது. எப்போதும் நான் என் மனைவி மகனிடம் பேச முடியும். பூமித் தொடர்பு அறுகாது." 

"ஸாட்டிலைட்டை அணுகி ரிப்பேர் செய்கையில்?"

"அப்போதுகூட! தாய்க் கப்பலிலிருந்து நான் வெளியே வந்தாலும் ஸாட்டிலைட்டை அணுகும்போது ஒரு தொப்புள் கொடி போலத் தக்க இணைப்பு எப்போதும் இருக்கவே இருக்கும்." 

"தாங்க்ஸ் ஜென்டில்மென்!" என்று வெட்டினார் நாராயண் ராவ். 

நான்கு மணிக்கு லிஃப்ட் ஆஃப். ஒன்பது மணியிலிருந்தே ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. நளினிக்கும் வினோத்துக்கும் டாட்டா காட்டிவிட்டு காங் ப்ளாங்க்கில் நடந்தான். ராக்கெட்டைத் தழுவிக்கொண்டிருந்த எட்டு மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் நுழைந்தான். கண்ணாடி அறைக்குள் சென்று கல்யாண மாப்பிள்ளை போல் அவனை அலங்காரம் செய்ய மூன்று பேர் வந்தார்கள். கண்ணைப் பறிக்கும் வெண்மையில் ஸ்பேஸ் உடை அணிந்தான். அணிந்து அதன் அக்ரிலிக் மூடியிலிருந்து கண்சிமிட்டி, சிரித்தான். ஹெல்மட் தலைமேல் இந்தியச் சிங்கம் பொறித்திருந்தது. அதேபோல் புஜத்திலும். ஆக்ஸிஜன் இணைப்பு முதுகுப் பகுதியில். ஒரு குட்டி டிரான்ஸ்மிட்டர் இடதுகை விரல்களில். செயல்பாட்டில் சின்னச் சின்ன ராக்கெட் குழந்தைகளின் ப்ஸ்ஸ் சப்தம் கேட்க... ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாகப் பகுதி பகுதியாக சாதனங்கள் பொறுத்தப்பட்டு, ராக்கெட்டின் எட்டாவது மாடி உச்சிக்கு மிக மெதுவாகத் திறந்த லிஃப்ட்டில் சென்றான். கீழே டெக்னிஷியன்கள் பலர் அவனுக்குச் சந்தோஷத்துடன் சைகை செய்து விடைகொடுத்தார்கள்.

பம்பர வடிவத்தில் இருந்த உச்சிப் பகுதியில் ஒரு கதவுச் சுளையைத் திறந்து அவனை இறக்கினார்கள். மூடினார்கள். அவனைச் சுற்றிலும் ஒரே டயல்கள், ஸ்விட்சுகள், எண்கள், எழுத்துகள், விளக்குச் சிமிட்டல்கள், மெதுவான "வ்ரூம்.. .காரம்."

அந்தத் தனிமையில் வயிற்றில் சற்றுத் திகிலாக உணர்ந்தான். சற்றுதான்.

ஹம்ஸா !

அதுதான் அவன் செலுத்தப்போகும் கலத்தின் பெயர். இப்போது அவன் ஏற்பாடு செய்ய வேண்டியது அதிகமில்லை. எல்லாம் பிற்பாடுதான். அவனுக்குக் கீழே இருக்கும் ராட்சச மூன்று பகுதி ராக்கெட். தொண்ணூறு சதவிகிதம் பிரயாணத்தை அதுதான் பார்த்துக்கொள்ளப்போகிறது...

காதில் சரிபார்க்கும் சங்கேதங்கள் ஒவ்வொன்றாகக் கேட்டன.

செக் ஃப்யூல் ப்ரெஷர்.

செக் பெர்கஷன் ஸ்விட்ச்.

செக்

மூன்று மணி நேரமாகும். ஆயிரம் விஷயங்கள் பார்க்க வேண்டும்.

10. என் அருமை ஆண்டவனே!

9. எவ்வளவோ நாங்கள்

8. விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும்

7. உன் கருணையின்றி

6. நாங்கள் வெற்றி காண

5. முடியாது

4.திரும்பவும்

3. பத்திரமாய்

2. வந்து சேர அருளும்.

1. வரம் அருளும்.

திடுதிடுவென்று பூமி நடுங்கும் சப்தம். ஜன்னல்கள் அதிர ஏதோ ஒரு சோம்பேறி ராட்சசன் போலப் புறப்பட்டு வாலில் ஆரஞ்சு ஒளி, ஆரஞ்சுக்குள் வெண்மை நெருப்பு, அதற்குள் சிறிய வெண்மை... என்று நடுவானத்தில் ஒரு செங்குத்துக் கவிதை போல ராக்கெட் உயிர்த்து உயர்ந்தது!

துருவாவுக்கு ஜி சக்திகளின் அழுத்தம் வயிற்றைப் பந்தாக்கியது. இன்னும் இன்னும் இன்னும் சக்தி...

இன்னும் இன்னும் வேகம்!

இந்தியா முழுவதும் ரேடியோவிலும் டெலிவிஷனிலும் கேட்டு தெரிந்து கொண்டிருந்த மகத்தான அம்புப் பாய்ச்சல்!

பர்ஃபெக்ட்! ஆல் சிஸ்டம்ஸ் கோ !

பூமியின் ஆகர்ஷணச் சக்தியை மீறும்போது புதிதாகப் பிறந்தது போல உணர்ந்தான். உட்கார்ந்திருந்தும் உட்கார்ந்தது போலில்லாத பஞ்சு நிலை, கனவு மெத்தை நிலை ...

"ஹம்ஸா. கண்ட்ரோல்."

"கம் இன்."

"எப்படி?"

"எல்லாம் ஒழுங்காகச் செயல்படுகின்றன."

"வெரிகுட்."

"நீ மெதுவாக மெதுவாக இன்ஸாட்டை அணுகுகிறாய். நூறு மைல் இருக்கும்போது சொல்கிறேன்."

"அதுவரை ?"

“தூங்கு.”

"என் மனைவியோடு பேசலாமா ?"

"தாராளமாக சானல் தருகிறேன், இரு!"

"நளினி !"

"என்னங்க!”

"பார்த்தியா?”

"பார்த்தேங்க... அப்பா"

"ஹாய் வினோத்!"

"எவ்வளவு ஸ்பீட் போறீங்க?"

"பதினெட்டாயிரம் மைல்."

"நிறைய இல்லை?"

"ஸாரி த்ருவா, கட் பண்ண வேண்டியிருக்கிறது. தலைவர்."

"ஹலோ துருவா!"

"ஹலோ ஸார்!”

"எப்படி உணர்கிறாய்?”

"உலகத்தின் உச்சியில்!"

"எடையற்ற தன்மை எப்படி இருக்கிறது?"

"குளுகுளு என்கிறது. மிதக்கிற மாதிரி இருக்கிறது."

"ரொம்ப நன்றி துருவா. ஜெய்ஹிந்த்!"

அன்புள்ள கடவுளே! என்ன ஓர் அற்புதக் காட்சி. வானம் இவ்வளவு வெல்வெட் கருப்பா? அதில் பதிந்து பதிந்து இதோ எட்டிப் பிடிக்கிற மாதிரி இத்தனை நிறங்களா? பூமி விளிம்பில் இவ்வளவு வெளிச்ச வித்தியாசங்களா? அதோ ஆப்ரிக்கா. என் சுட்டு விரல் அளவு! இது இந்தியா. என் சுண்டுவிரல்! மேகங்களை இவ்வளவு மேலே இருந்து பார்ப்பதில் அந்தத் திட்டுகளின் பிசிறல். கடவுள் ஒரு மாடர்ன் ஆர்டிஸ்ட்!

கடவுள்! என்னை இவ்வளவு தூரம் கொண்டுவந்தவர் அவர்! என்னை அங்குக் கொண்டுசென்று கடமை முடிந்த பின் திரும்ப பத்திரமாக அழைத்துச் சென்று வீட்டுக்குச் சேர்ப்பிக்கப் போகிறவரும் அவரே !

இத்தனை உயரத்தில் இத்தனை விண்வெளி வீச்சில் துருவா தன் வீட்டில் ஓர் அறையில் ஒரு கட்டிலில் உட்கார்ந்துகொண்டு தன் கால் விரல்களைத் தொட்டுத் தொட்டு நளினி நகம் வெட்டும் அந்த இன்பமான 'சுருக்'கை நினைத்துப்பார்த்தான்.

"துருவா! ரெடியா?"

“ரெடி !”

"இன்னும் ஒரு நிமிஷத்தில் நீ இன்ஸாட் ஒன்பதைப் பார்ப்பாய்

"சரி!"

ஐம்பது செகண்டு, நாற்பத்தைந்து செகண்டு..

"கான்டாக்ட்!"

"மை காட்! தேர் ஷி இஸ்?"

"குட்! தெரிகிறதா?"

"நன்றாக."

"துருவா, ஸோலர் பானர்கள் எல்லாம் திறந்திருக்கின்றனவா?"

"ஒரு நிமிஷம். இல்லை. நான்கில் இரண்டுதான் திறந்துள்ளன. இரண்டு மூடியிருக்கின்றன. நாம் நினைத்தது சரியே. என் விரல்கள் துடிக்கின்றன, உடனே போய் அதைச் சரிப்படுத்த!”

அதோ அது!

அவன் கலத்தின் வேகம் குறையக் குறைய அருகே மிக அருகே தொட்டு முத்தம் கொடுக்கிற மாதிரி இன்ஸாட் மிதந்துகொண்டிருந்தது,

"துருவா உன் கலத்தைவிட்டு வெளியே வர ரெடியா?”

"ரெடி."

"படிப்பினை ஞாபகம் இருக்கிறதா?"

"ஒரு வரி விடாமல்."

"எங்கே சொல்லு!"

"முதலில் காரிலேட்டர் பட்டனை அழுத்த வேண்டும்."

“சரி...”

அடுக்கிக்கொண்டே சென்றான். ஒன்பது மாசப் படிப்பினை மறந்துவிட முடியுமா? அவன் செய்ய வேண்டியது மெதுவாக தன் தாய்க் கலத்தைவிட்டு வெளிவந்து, விண்ணில் மிதந்து இன்ஸாட்டை அணுகி, அதைச் சரி பார்த்து... சரி பார்க்க ஒன்பது நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு ஆக்ஸிஜன், அவ்வளவு உணவுமாத்திரைகள் உள்ளன.

ஒன்பது நாட்கள் ஆகாது. சரியாக ஐந்து நிமிஷ வேலை. இங்கிருந்தே தெரிந்தது. ஒரு பெர்க்கஷன் பித்தான் செயல்படாமல் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதை அழுத்தினால் போதும், உள்ளே இருக்கும் மருந்து வெடித்து பானல்கள் இரண்டும் விரிந்து கொண்டுவிடும்.

வேலை முடிந்ததும் தாய்க் கப்பலுக்குத் திரும்பி வந்து கதவை மூடிக்கொண்டால் அப்புறம் வீடு நோக்கிச் செல்லும் பறவைதான்!

"துருவா!"

"கம் இன்."

"தயார் என்றால் நீ வெளியே செல்லலாம். பெஸ்ட் ஆஃப் லக்!"

அவன் வலது கை விரல்கள் செயல்பட, மெதுவாகக் குடுவையின் கதவு திறக்க, துருவா ஓர் எம்பு எம்பி வெளியே மிதந்தான். தங்க நிறத் தொப்புள் கொடி அவனுடன் சுழன்று வந்தது. தாய். நவீன விஞ்ஞானத் தாய் ! அவளுடன் நான் இணைந்திருக்கும் கொடி இது. இது இருக்கும்வரை எனக்குத் தொடர்பு பற்றிக் கவலையே இல்லை. தாய்க் கப்பலிலிருந்து என் உடலைச் சுற்றி இணைக்கப் பட்டிருக்கும் அத்தனை சாதனங்களும் மின் சக்தி!

மெல்ல மெல்ல துருவா இன்ஸாட்டை அணுகினான். வினோத நடனம் அது. வெல்வெட் இருட்டில் எந்தவிதக் கட்டுப்பாடும் ஈர்ப்பும் கவர்ச்சியும் இன்றித் தனியாக மிகத் தனியாக மிதக்கும் உன்னத நிலை. துருவாவுக்கு உற்சாகம் தடம்புரண்டது. எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவன் நான்! இந்தக் காட்சியை அனுபவிப்பதற்கு.. ! முதலில் வந்த காரியத்தைப் பார். அப்புறம் காட்சிகள்...

துருவா தான் பழுது பார்க்கவேண்டிய இன்ஸாட் ஒன்பதின் அருகே வந்து... என்ன ஒரு வினோத சந்திப்பு இது ! பூமியில் பங்களூரில் ஏறக்குறைய ஒரு வருஷத்திற்கு முன் பார்த்தது. இப்போது 36,000 கிலோ மீட்டர் உயரத்தின் தனிமையில் ஒரு ஜியோ ஸ்டேஷனரி சந்திப்பு! விதி. நவீன விதி இருபத்தோராம் நூற்றாண்டு விதி.

மேன்யுல் ஓவர்ரைடு என்று இருக்கும் சாதனம் எங்கிருக்கிறது என்று தெரியும் துருவாவுக்கு. அதை அழுத்தினால் சரியாய்ப் போய்விடும். இங்கே வந்து ஒரு பட்டனை அழுத்த மூன்று கோடி ரூபாய்! மூன்று கோடி ரூபாய் சின்ன மீன். இது இருபது கோடி மீன்! இது செயல்பட்டால் நாட்டுக்கு எவ்வளவு லாபம்! இருபத்தி நான்காயிரம் இணைப்புகள்.

மெதுவாக ஜாக்கிரதையாக அதை அணுகி ஹாண்ட் செட்டைத் திறந்து அந்தச் சிறிய திறப்பில் விசையைச் செலுத்தி அந்தப் பட்டனை அழுத்த...

மௌனமாக ஆனால் வேகமாக அந்த ஸோலார் பானல்கள் விரிந்து திறந்துகொண்டன. அதன்மேல் சூரிய ஒளி பட்டு, புதிய சக்தி பெற்று, ஸாட்டிலைட்டின் பத்து மாத உறக்கம் கலைந்து அது செயல்பட...

பூமியில் கன்ட்ரோல் கேந்திரத்தில் திடுதிப்பென்று கைதட்டல் ஒலி கேட்டது. ப்ரொபசர் சர்மா தன் ப்ரொபசர்தனத்தை மறந்து வாயில் விரல் வைத்து உய் உய் என்று விசில் அடித்தார்...

இன்ஸாட் ஒன்பதுக்கு உயிர் வந்துவிட்டது. அதன் சர்வ சக்திகளும் பெற்று, அதன் சாட்சியாகப் பூமிக் கேந்திரத்தில் பற்பல வண்ண விளக்குகள் கண் சிமிட்ட ...

"ஹீரோ துருவா வாழ்க!"

"துருவா தி கிரேட் !"

" மன்னன்யா! ஒரு நிமிஷத்தில கண்டுபிடிச்சுட்டான் பாரு."

"துருவா!”

மௌனம்.

"துருவா ஃப்ரம் கன்ட்ரோல்!”

மௌனம். ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து கேட்கும் விந்தை மௌனம்.

 "துருவா ஃப்ரம் கண்ட்ரோல்! துருவா... துருவா!”

சர்மா வெடித்தார். "ட்ரை தி ஸ்டான்ட்பை சானல் ! ட்ரை வி எச் எஃப்! 

அந்த இடத்து உற்சாகம் அடங்கிப்போய்ச் சட்டென மௌனம். 

துருவா துருவா துருவா என்று ரேடியோ அலைகள் விண்வெளியில் ஆழப்பதிந்து தேடின.

அதே சமயம் துருவாவும் "கன்ட்ரோல். கன்ட்ரோல்" என்று கூவிக்கொண்டிருந்தான்.

ஏன் பதில் இல்லை? ஏன்? என்ன ஆயிற்று, இந்த மடையர்களுக்கு பதில் சொன்னால் என்னவாம்?

"கன்ட்ரோல், கன்ட்ரோல்!"

ஏன் பதில் இல்...

முதல் தடவையாக அதைப் பார்த்தான். கத்திக்குத்து போல வயிற்றில் உணர்ந்தான்.

தாய்க் கப்பலையும் தன்னையும் இணைக்கும் தங்க நிறக் கொடி அறுந்திருந்தது!

எப்படி? எப்படி இது சாத்தியம்?

ஸோலார் பானல்கள் திடுதிப்பென்று விரிந்து திறந்து கொண்டபோது... அந்த வேகத்தில் அந்தக் கூர்மையான முனைபட்டு அறுந்துபோயிருக்கிறது...

அறுந்தால் என்ன?

பூமியுடன் என் செய்தித் தொடர்புதானே அறுந்துவிட்டது! அதனால் என்ன? பேசாமல் மிதந்து தாய்க் கப்பலுக்குப் போய் விடலாம்.

அதோ தாய்க்கப்பல். அதோ தெரிகிறது! அதோ என் தாய்!

வெட்ட வெளியில் நீந்தி அதை அடைய வேண்டும், அவ்வளவுதானே?

அவன் கையைக் காலை உதைத்துக்கொள்ள, அவன் என்னதான் செய்தாலும் அவனுக்கும் தாய்க்கப்பலுக்கும் தூரம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. விண்வெளியின் வினோத பௌதிகத்தில் காற்றற்ற நியூட்டன் விதிகளின் ஆதிக்கத்தில் கையைக் காலை உதைத்து மெதுவாக மிக மெதுவாக தாய்க்கப்பலை அணுகினான்.

கிட்ட வந்ததும் அவனுக்குத் திகீர் என்று வயிற்றில் தீப்பற்றிக் கொண்டது.

அதன் சுளைக் கதவு மூடிக்கொண்டிருந்தது. அந்தக் கொடி இணைப்பு அறுந்ததில் ஏற்பட்ட குழப்பமான ஆணைகளில் கதவுமூடும் ஆணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டு...

அய்யோ!

நான் எப்படி உள்ளே நுழைவேன்? என்ன செய்வேன்? யாரைக் கூப்பிடுவேன்! ரேடியோத் தொடர்பு அற்று தாயின் மடிக்குத் திரும்ப முடியாமல் தனியாக மிகத் தனியாக அவன் சர்வ அங்கங்களும் சிலிர்க்க ஸ்பேஸ் உடைக்குள் குப்பென்று வியர்த்தது. மூளைக்குள் உஷ்ணம் பரவி முப்பத்தாறாயிரம் கிலோ மீட்டரில் மிதந்தான். 

துருவா ! துருவா! பயப்படாதே! முதலில் நீ சுதாரித்துக்கொள். என்ன ஆகிவிட்டது இப்போது?

அவர்கள் உன்னிடமிருந்து சென்ற பதினைந்து நிமிஷமாகச் செய்தி ஒலிக்கவில்லை என்றால் என்ன செய்வார்கள்? டெலிகமான்ட் மூலம் அந்தக் கதவைத் திறக்க முயற்சிப்பார்கள் ! அப்படி முடியவில்லை என்றால், ஒன்றுமே சாத்தியமில்லை என்றால், இன்னொரு ரிலீஃப் ராக்கெட் அனுப்புவார்கள்! பொறு பொறு!

எவ்வளவு நாளாகும்?

ஒன்பது நாள்.

ஒன்பது நாளைக்கு என்னிடம் முதுகில் ஆக்ஸிஜன் இருக்கிறது. உணவு மாத்திரைகள் இருக்கின்றன. மற்றொரு கலம் வந்து என்னைக் காப்பாற்றும்வரை நான் உயிர் வாழ்ந்தால் போதும்!

காத்திருக்க வேண்டும். பதறாதே! மறுபடி அந்தக் கதவை முயன்றுபார். முயற்சி முயற்சி. அவர்கள் உன்னை அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தானே நீ இந்தப் பிரயாணத்திற்கு ஒப்புக்கொண்டாய்?

ப்ரொபசர் சர்மாவின் அசகாய சூரர்கள் எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிடுவார்கள். நிச்சயம் அவர்கள் மாய வித்தைகளில் ஒன்றைச் செய்து மற்றொரு ராக்கெட் அனுப்பமாட்டார்களா?

தலைவர் என்னை எவ்வளவு விரும்புகிறார்! இந்நேரம் தலைவருக்குத் தகவல் தெரிந்திருக்கும்.

ப்ரொபசர் சர்மா! என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், துருவா திரும்ப வேண்டும் என்று அடித்துச் சொல்லிவிடுவார்!

******************************

பூமியில் கன்ட்ரோல் சென்டரிலிருந்து பத்திரிகை டெலிவிஷன் ஆசாமிகள் நீக்கப்பட்டார்கள். "அனாவசியக் கூட்டம் வேண்டாம். வெறும் கம்யூனிகேஷன் தொடர்பு சாதனத்தில் பழுது என்று நினைக்கிறோம். கூடிய விரைவில் துருவாவுடன் பேசலாம். பேசிவிடுவோம்! அதுவரை எங்களைத் தனியாகவிடுங்கள். விஞ்ஞானிகளுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் தொந்தரவு ஏதும் கூடாது. ப்ளீஸ்! வெளியே வெளியே !"

சர்மாவின் ஒரு புருவம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. ஒயர்லஸ் டெலிபோன் ஒலித்துக்கொண்டிருந்தது. தாய்க் கப்பலில் பொருந்தியிருந்த டெலிவிஷன் காமிராவின் மூலம் தெரிந்த பிம்பம் அவருக்குப் பிரமிப்பை அளித்தது. கதவு மூடியிருக்கிறது. கலம் காலியாக இருக்கிறது. எப்படிச் சாத்தியம்?'

துருவா இன்ஸாட்டைச் சரி பண்ணிவிட்டான். சரி பண்ணும்போது ஏதாவது விபத்து நிகழ்ந்து கொடி அறுந்திருக்குமோ? அதுதான். அதுதான் எந்தத் தொடர்பும் இல்லை! ஓ மை காட்! அப்படி என்றால்? துருவாவை எப்படிக் காப்பாற்றுவது?

"கதவைத் திறப்பதற்கு ஆணைகள் கொடு" என்று கதறினார்.

"முயன்று பார்த்துவிட்டோம் டாக்டர். ஆணைகளை எடுத்துக் கொள்ளமாட்டேன் என்கிறது."

"எல்லா விஞ்ஞானிகளையும் உடனே கூப்பிடுங்கள்."

"ஸார், தலைவர் ஜெனரல் விக்ரம்!" என்று அவர் அருகில் ஒரு டெலிபோனைக் காட்டினான் ஒருவன்.

அதை எடுத்து,

“எஸ் ஸார்... எஸ் ஸார். நாங்கள் எங்களால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறோம்... இன்னும் இல்லை... ஸாட்டிலைட் சரியாகி விட்டது. ஐந்து நிமிஷத்தில் சரிபண்ணிவிட்டான்!"

"நாங்கள் இப்போது கூடிப் பேசி முடிவெடுத்து அரை மணி நேரத்தில் உங்களுக்குத் தகவல் சொல்கிறோம் ஸார்... அவனால் இன்னும் ஒன்பது நாட்கள் பதினேழு மணி நேரம் உயிர் வாழ முடியும்."

டெலிபோனை வைத்துவிட்டு கான்ஃப்ரன்ஸ் அறைக்கு ஓடினார் சர்மா.

நீண்ட சதுர மேஜை. சுவரில் பற்பல ராக்கெட்டுகளின் படம்.  வரைபடங்கள். சாதனைப் பட்டியல்கள். சோதனைப் பட்டியல்கள்.

டாக்டர் சர்மா தன் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றார்.

"ஜெண்டில்மென் நாம் எதற்கு இங்குக் கூடியிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு கேள்வி, 'துருவாவை எப்படிக் காப்பாற்றுவது?' இப்போதுதான் ஜெனரல் என்னிடம் பேசினார். அவர் நம் பதிலுக்குக் காத்திருக்கிறார். டாக்டர் பிரகாஷ்?"

டாக்டர் பிரகாஷ் எழுந்து "டாக்டர் சர்மா கேட்டது ஒரே ஒரு கேள்வி. அதற்கு ஒரே ஒரு பதில்தான் இருக்க முடியும்.  அவனைக் காப்பாற்ற மற்றொரு ராக்கெட் அனுப்ப வேண்டும்."

அதன் முனையில் ?" "

"இருவருக்கான விண்வெளிக் கப்பல்."

"பரணி இரண்டா?"

"ஆம்."

“அது நம்மிடம் ஒன்றுதான் இருக்கிறது. அதுவும் சரியாக சோதிக்கப்படவில்லை.”

"பறக்கிறது அல்லவா?"

"பறக்கும். ஆனால் இன்னும் முற்றுப்பெறவில்லைங்களே !"

"என்ன முற்றுப்பெறவில்லை?”

"ரேடியேஷன் ப்ரூஃபிங்"

"பரவாயில்லை. இப்போது நாம் போராடுவது காற்றுடன். ஒரு முக்கியமான இந்தியனின் உயிரைக் காப்பாற்ற இருப்பது ஒரே ஒரு வழி. பரணியை அனுப்புவது!”

"டாக்டர் ஃபெர்னாண்டஸ்! எத்தனை நாளாகும் உங்களுக்கு ராக்கெட்டுகளைக் கிளப்ப?"

"ஏழு நாட்கள்."

"எக்ஸ்லண்ட் ஜெண்டில்மென்! இதில் நம்மிடம் எந்த அபிப்ராய பேதமும் இல்லையல்லவா?"

"துருவாவைக் காப்பாற்ற மற்றொரு ராக்கெட் செல்லும். அதன் முனையில் பரணி."

"யார் ஓட்டப்போகிறார்கள்?"

"எட்டுப் பேர் காத்திருக்கிறார்கள்."

'இருப்பதற்குள் சிறந்த ஆசாமியை அனுப்பலாம். போகும்போது ஒன்றியாகச் செலுத்த வேண்டும்."

"விங் கமாண்டர் ஜெயசீலன்!"

"வெரிகுட், நான் தலைவருக்குச் சொல்லிவிடுகிறேன். அவரிடமிருந்து அனுமதி வேண்டும்."

அந்தச் சிவப்பு டெலிபோனில் தலைவர் ஜெனரல் விக்ரமை மறுபடி அழைத்தார் டாக்டர் சர்மா.

"ஸார்! டாக்டர் சர்மா ஹியர்."

"எஸ் டாக்டர் சர்மா! துருவாவுடன் தொடர்பு ஏற்பட்டதா?"

"இல்லை. இன்னும் இல்லை."

"பின் என்ன செய்வதாக உத்தேசம்?"

"அவரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழி மற்றொரு ராக்கெட் அனுப்புவதுதான். இன்னும் எட்டு நாட்களில் அது சாத்தியம்!"

"வாட்? மற்றொரு ராக்கெட்டா?"

"ஆம். அதன் முனையில் பரணி என்னும் கலம் அமைத்து அதில் மற்றொரு விண்வெளி விமானியை அனுப்ப வேண்டும். பரணியில் இரண்டு பேர் உட்காரலாம்..!"

"பரணி! என்ன, அது புதுப் பெயர்?”

"இன்னும் இது முழுவதும் பரிசோதிக்கப்படாத கலம் "

"பறக்குமா? அல்லது நீங்கள் தொடர்ந்து அனுப்பும் டப்பாக்கள் போல ஏதாவது கோளாறு ஏற்பட்டுப் பாதியில் நின்றுபோய்ப் பரணியைக் காப்பாற்ற மற்றொரு தரணியை அனுப்ப வேண்டுமா?"

"அப்படி நடக்காது சார்." சர்மாவுக்குப் புருவங்கள் அதிகம் துடிக்க ஆரம்பித்தன.

“அப்படி நடக்காது என்று எப்படிச் சொல்ல முடியும் உங்களால்? முதலில் இருபது கோடி செலவழித்தோம். இன்ஸாட் ஒன்பது என்ன ஆச்சு? பதினைந்து நாள். பதினைந்தே நாள்! சரி! 'அதில் ஒரு சின்ன பழுது. ஒரு ஆளை அனுப்பினால் சரியாகிவிடும்' என்றீர்கள். மூணு கோடி செலவழித்து ஒரு ஆளை அனுப்பியாயிற்று. அதிலும் கோளாறு. இப்போது பரணி! இதற்கு எவ்வளவு செலவாகும்?"

"நான்கு கோடியாவது ஆகும் ஸார். துருவா சென்றதன் குறிக்கோள் நிறைவேறிவிட்டதல்லவா? இன்ஸாட் சரியாகிவிட்டது."

"சரியாகிவிட்டது. ஆனால் ஆள் திரும்பவில்லையே..."

"அது ஒரு அம்ப்லிக்கல் கார்டில் வெட்டு ஏற்பட்டு.."

"லுக் ப்ரொபசர்! உன் விஞ்ஞான வியாக்கியானத்தைக் கேட்டுக் கேட்டு அலுத்துப்போய்விட்டது. ஸாட்டிலைட் சரியாகிவிட்டது. நிறைய டெலிவிஷன் டெலிபோன் இணைப்புகள் ஏற்பட்டுவிட்டன. ரொம்ப நல்லது. துருவாவை அனுப்பிய காரியம் நிறைவேறிவிட்டது. சரி அவ்வளவுதான்! விட்டுவிடுங்கள்!"

"ஸார்! துருவா?" என்றார் அதிர்ந்து.

"துருவா அங்கேயே இருக்கட்டும். இன்னொரு நாலு கோடி செலவழித்து அவனை நம்மால் மீட்க முடியாது. மிக அதிகச் செலவு. அவன் சென்ற காரியம் நடந்துவிட்டது."

"ஸார் இது அநியாயம். மனிதத்தன்மை அற்ற செயல். தப்பாக ஏதாவது ஆகிவிட்டால் நாம் எப்படியாவது அவனைக் காப்பாற்றுவோம் என்கிற நம்பிக்கையில்தான் துருவா சென்றிருக்கிறான். நம்பிக்கை மோசடி!"

"அந்த மாதிரி பொதுப் பணத்தை விஞ்ஞான முன்னேற்றம் என்று செலவழித்து வார்த்தைகளை வைத்து ஏமாற்றுவது எவ்வளவு நியாயம்? எவ்வளவு மனிதத்தனம்? எவ்வளவு நம்பிக்கைக்குரிய காரியம்?"

"ஸார் அவன் ஒண்டியாக அங்கே சுற்றிக்கொண்டிருக்கிறான்." 

“சுற்றட்டும்.”

"நாம் அவனுக்கு உதவி அனுப்பப் போகிறோம் என்று எதிர்பார்த்து ஆவலுடன்...” 

"எதிர்பார்க்கட்டும் ! ப்ரொபசர், இந்த நாடே என்னை எதிர்பார்த்து இருக்கிறது. நூறு கோடி மக்கள் ! அவர்களில் இன்னும் எவ்வளவு வறுமை, எவ்வளவு ஏழ்மை தெரியுமா ? அரசியல்வாதிகள் சென்ற இருபது வருஷங்களாக நாசம் பண்ணி வைத்துவிட்டுப் போன இந்த நாட்டை எடுத்து நடத்தி ஏதோ ஒப்பேற்றி வைத்திருக்கிறேன். இப்போதுதான் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறோம். இருந்தும் வெட்டிச் செலவு இரட்டித்திருக்கிறது. கம்யூனிகேஷன் முக்கியம். ஒப்புக்கொள் கிறேன். 24,000 இணைப்புகள் முக்கியம். நீங்கள் தரப்போகும் டெலிவிஷன் இணைப்புகள் முக்கியம். எல்லாம் எனக்குத் தேவை. கல்விக்கு, பிரச்சாரத்திற்கு, சமூக மாற்றத்திற்கு. ஆனால் அந்தத் துருவா? அவன் இப்போது எனக்கு முக்கியமில்லை. அவன் நாட்டுக்குச் செய்ய வேண்டியதைச் செய்தாகிவிட்டது. இனி அவனுக்காக நான்கு கோடி செலவழித்தால் இந்த ஊதாரித்தனத்தினால் சோறு கிடைக்காமல் கீழே இறக்கப்போகும் இந்தியர்களுக்கு யார் பொறுப்பு? எனவே, துருவா சுற்றட்டும்! ஒன்பது நாளோ பத்து நாளோ சுற்றிவிட்டு இறந்துபோகட்டும்! அவனுக்கு எல்லா மரியாதைகளும் செய்வோம். அவன் மனைவிக்கு பென்ஷன் அளிப்போம். மகனுக்கு நல்ல கல்வி தருவோம். அவன் பெயரில் ஒரு நினைவுச்சின்னம் அமைப்போம். ஒரு தெருவுக்குப் பெயரிடுவோம். அவ்வளவுதான். கேட்கிறதா? அதற்குமேல் ஒன்றும் கிடையாது."

ஸ்தம்பித்த ப்ரொபசர் சர்மா, "ஸார் மன்னியுங்கள். நான் உங்களுடன் உடன்படவில்லை."

“உங்கள் துரதிருஷ்டம் ப்ரொபசர்!"

"நான் இந்த நிமிஷமே ராஜினாமா செய்கிறேன்."

"சந்தோஷம். இந்த நிமிஷமே உங்களைக் கைது செய்வதற்கு ஏற்பாடு செய்கிறேன். ஜெய்ஹிந்த்!"

*****************

"அம்மா! அப்பா எப்பம்மா திரும்பி வருவா?"

"வினோத் தொந்தரவு செய்யாதே."

நளினி நடுங்கும் விரல்களால் இருபதாவது முறையாக ஸ்பேஸ் நிலையத்திற்கு டெலிபோன் செய்தாள்.

ஊம் ஊம் ஊம் என்று பிஸி டோன் நளினிக்குப் புரியவில்லை.

ஏன் டெலிவிஷனில் நிகழ்ச்சியை மாற்றிவிட்டார்கள்?

ஏன் விண்வெளிக் கேந்திரத்துடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை?

"அம்மா, அப்பா எப்பப் பேசுவா ? எப்ப வருவா ?"

"வந்துருவார்! வந்துருவார்!”

**********

முப்பத்தாறாயிரம் கிலோ மீட்டரில் துருவா சுற்றிக்கொண்டிருந்தான். ஒன்பதாவது உணவு மாத்திரையை விழுங்கினான். மெதுவாக மூச்சுவிடு. பிராணவாயுவை விரயம் செய்யாதே. வந்துவிடுவார்கள். இன்னும் ஒன்பது நாள்! நிச்சயம் வந்துவிடுவார்கள்!

                                                                            - 1980


ரெடியா கலாம் ? –சுஜாதா (with an English translation)

இன்று (23-4-2025) உலகப் புத்தக தினம்! இருவரும் புஸ்தகப் பிரியர்கள். சேர்ந்து புத்தகம் எழுதுவதாக இருந்தது. 

ரெடியா கலாம் ? –சுஜாதா

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் (சென் ஜோசப்) பி.எஸ்ஸி. படிப்பில் என் வகுப்புத் தோழர். அந்தக் கல்லூரியில் மதிய இடைவேளைகளில் லாலி ஹால் என்னும் பெரிய அரங்கத்தில் பெல் அடிக்கும் வரை அரட்டையடித்துக் கொண்டிருப்போம். அப்போதிலிருந்தே அப்துல் கலாமை எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதிகம் பேச மாட்டார். ஏதாவது கலாட்டா செய்தால் சிரித்து மழுப்பிவிடுவார். எங்களுடன் சினிமாவுக்கெல்லாம் வரமாட்டார்.

பி.எஸ்ஸி. படிப்புக்குப் பிறகு நான் எம்.ஐ.டி-யில் எலெக்ட்ரானிக்ஸ் சேர்ந்தபோது அதே வருடம் அவர் ஏரோநாட்டிக்ஸில் சேர்ந்தார். இருவருக்கும் பொதுவாக இருந்த தமிழ் ஆர்வத்தால் அடிக்கடி சந்தித்துப்  பேசியது நினைவிருக்கிறது. பாரதி பாடல்களிலும் திருக்குறளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அப்போதே அவருக்கு விமான இயல், ராக்கெட்ரி போன்ற துறைகளில் எதையாவது நடைமுறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததை அறிய முடிந்தது. எம்.ஐ.டி-யின் ஜெர்மானிய ப்ரொபசர் ரெபந்தின், பேராசிரியர் பண்டாலே போன்றவர்கள் வழிகாட்ட (நாட்டிலேயே முதன் முதலாக என்று எண்ணுகிறேன்), ஒரு கிளைடர் என்னும் எஞ்சின் இல்லாத விமானத்தை செய்து முடித்தார்கள். அதை மீனம்பாக்கத்துக்கு பார்ட் பார்ட்டாக கழற்றி எடுத்துச் சென்று மறுபடி பூட்டி ‘விஞ்ச்’சின் மூலம் இழுத்து காத்தாடி போல உயர்த்த, அது தர்மலை (உஷ்ணக் காற்றைப்) பிடித்துக் கொண்டு பறந்தபோது கல்லூரியில் நாங்கள் அனைவரும் பெருமிதத்தில் பறந்தோம். கலாம் அதில் பங்கு வகித்தார்.

எம்.ஐ.டி-யில் இயற்பியல் பேராசிரியர் ராகவாச்சாரி, தமிழில் ஈடுபாடு உள்ளவர். அவர், தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு போட்டி வைத்தார். நானும் கலாமும் அதில் கலந்து கொண்டோம். கலாம் எழுதிய கட்டுரை ‘ஆகாய விமானம் கட்டுவோம்‘ என்பது. நான் எழுதியது ‘அனந்தம்‘ என்னும் Infinity Mathematics பற்றிய கட்டுரை. கலாமுக்குப் பரிசு கிடைத்தது. எழுதுவதுடன் நிறுத்தி விடவில்லை. பிற்காலத்தில் விமானம் என்ன, ராக்கெட்டே கட்டி முடித்தார்.

எம்.ஐ.டி-க்குப் பின் சில வருடங்கள் அவருடன் தொடர்பு இல்லை. இடைவருடங்களில் விக்ரம் சாராபாய் போன்றவர்களின் கண்காணிப்பில் அவர் வளர்ந்திருக்கிறார். நாசாவில் பயிற்சி பெற்றிருக்கிறார். கலாமை நான் பாரத் எலெக்ட்ரானிக்ஸில் சேர்ந்ததும் மீண்டும் வேலை தொடர்பாக சந்திக்க வாய்ப்புக்கள் கிடைத்தன. அவர் ஐ.எஸ்.ஆர்.ஓ-வின் ‘எஸ்.எல்.வி’ போன்ற ராக்கெட்டுகளின் வடிவமைப்பில் பங்கு கொண்டிருந்தார். அப்போதே கடினமான உழைப்பின் அடையாளங்கள் தெரிந்தன. கலாம், அரசாங்க ஏணியில் விரைவாக உயர்வார் என்பதை சுற்றுப்பட்டவர்கள் அப்போதே சொன்னார்கள். பின்னர் அவர் ஸ்பேஸ் டிபார்ட்மெண்டிலிருந்த ஐதராபாத் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று இந்திய அரசின் ‘ப்ருத்வி’, ‘அக்னி’ ‘ஆகாஷ்’, ‘நாக்’ போன்ற ஏவுகணைகளின் வடிவமைப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அதன்பின் டெல்லியில் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அரசின் மிகமிக தாமதமாகிவிட்ட எல்.சி.ஏ. விமானத்தை ஹாங்கரைவிட்டு வெளியே இழுத்து வந்து பறக்கவைத்ததில் கலாமின் பங்கு கணிசமானது.

எங்களுடன் அந்த பாட்ச்சில் எம்.ஐ.டி-யில் படித்த மற்றவர்களுடன் ஒப்பிட்டால் கலாமின் வளர்ச்சி பன்மடங்கானது. நாங்கள் யாரும் ‘பாரத ரத்னா’ ரேஞ்சுக்கு உயரவில்லை. கலாமின் வெற்றிக்கு முக்கியக் காரணம், செய்யும் தொழில் மேல் பக்தியும் அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும்தான்.

கலாம், டி.ஆர்.டி.ஓ-வில் இருந்தபோது  அவர் நடத்திய   ரெவ்யூ மீட்டிங்குகளில் கலந்து கொண்டிருக்கிறேன். மிகச் சுருக்கமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காரியம் நடந்ததா என்று அந்தந்த ப்ராஜெக்ட் லீடரைக் கேட்பார். தாமதமானால் கோபித்துக்கொள்ளவே மாட்டார். சத்தம் போட மாட்டார். எப்படியோ அவரிடம் கொடுத்த வாக்குத் தவறுவதில் சங்கடத்தை உண்டு பண்ணுவார். அவரே அவ்வளவு கடுமையாக 24/7/365 என்று வேலை செய்யும்போது மற்றவர்கள் அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது கட்டாயமாகியது. Leading by example.

அவருடைய சொந்தத் தேவைகள் எளிமையானவை. பிரம்மச்சாரி. சைவ உணவு. எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. இதனுடன் ஆதாரமான முஸ்லீமின் நல்லொழுக்க குணங்களும் சேர்ந்து அவரை அத்தனை பெரிய பதவியின் சபலங்களிலிருந்து வெகு தூரம் தள்ளிவைத்தன. தெஹல்கா டேப்களில் கலாம் பெரிய இடத்து லஞ்சங்களுக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

ஒரு சம்பவம் எனக்குத் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஐதராபாத்தில் அவருடன் ஒரு மீட்டிங் சென்றிருந்தபோது சில ரஷ்ய தொழில்நுட்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு பஞ்சாரா ஓட்டலில் ஒரு டின்னர் இருந்தது. என்னையும் அழைத்திருந்தார். ரஷ்யர்கள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மகிழ்ச்சியில் இருந்தனர். கலாம் கையில் ஒரு வோட்காவைத் திணித்து வற்புறுத்தினார்கள். கலாம் எந்தவித லாகிரிப் பழக்கமும் இல்லாதவர். சங்கடத்துடன் அவசரமாக என்னை அணுகி ‘கையில என்ன?’ என்றார். ‘வாட்டர்.. ஜஸ்ட் வாட்டர் கலாம்’ என்றேன். ‘கொண்டா’ என்றார். நான் வைத்துக் கொண்டிருந்த கிளாசை மின்னல் வேகத்தில் பிடுங்கிக் கொண்டு வோட்கா கிளாசை என் கையில் திணித்தார்.

‘சாப்பிட மாட்டேன்னு சொன்னா அவங்களுக்குப் புரிய மாட்டேங்குதுய்யா…’ சற்று நேரத்தில் ‘சியர்ஸ்’ என்று வோட்கா கிளாஸ்களுடன் கலாமின் தண்ணீர் கிளாஸும் சேர்ந்து க்ளிங்கியது.

கலாமும் நானும் இணைந்து ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருக்கிறோம். இந்திய ராக்கெட் இயல் பற்றித் திப்புசுல்தான் காலத்திலிருந்து ஆரம்பித்து எழுதலாம் என்றார். ‘நான் ரெடி…நீங்க ரெடியா கலாம்?’ என்று எப்போது பார்த்தாலும் கேட்பேன். ‘இதோ வந்து விடுகிறேன்…அடுத்த மாதம் துவக்கிடலாம்யா’ என்பார்.

இப்போது அவர் ஓய்வெடுத்த பின் அந்தப் புத்தகத்தை எழுதிவிடுவார் என்று எண்ணுகிறேன். இந்திய அரசும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அரிமா ரோட்டரி சங்கங்களும் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் அவரை விட்டு வைத்தால்!

------------------

What made Kalam great: In the words of his classmate Sujatha

Hindustan Times, Jul 31, 2015. Translated from Tamil by N. Madhavan

(The following is a translation of a piece by celebrated Tamil writer, the late S Rangarajan, who wrote under the pseudonym Sujatha – after his wife. “Sujatha” (https://en.wikipedia.org/wiki/Sujatha_Rangarajan) was a classmate of A.P.J Abdul Kalam through their university years and is also the inventor of the electronic voting machine for Bharat Electronics Ltd, where he worked, apart from being a script writer for hit movies by Tamil film maker Mani Rathnam. This piece was written before Kalam became the President of India)

APJ Abdul Kalam was my classmate in the BSc course at Trichy’s St Joseph’s College. During lunch breaks in the big assembly hall, we used to banter until the bell rang for the lectures. I remember him from those times. He would not talk much then, and if someone poked fun, he would gently laugh it off. And he would not come with the rest of us to watch movies.

After our BSc,, when I joined the Madras Institute of Technology to study electronics, I saw him join the aeronautics course in the same year. We both shared a common passion for Tamil and I recall our frequent meetings on that count. I recall his interest in the songs of Subramania Bharathi (nationalist poet) and Tirukkural (Tirvalluvar’s omnibus of couplets). Right at that stage, it was clear that he wanted to accomplish something practical in the field of aeronautics or rocket science. Our professors (one German, one Indian) showed the way – and I think it was the first time in India. They made an engineless-glider and took it to the Meenambakkam airport – part by part – and put it all together again. Then they used a winch to pull it and hoisted it like a kite in the sky. It caught the hot winds and soared. And so did our feelings in the college. Kalam played a role in that.

Professor Raghavachari, who taught us physics, was passionate about Tamil. He held a competition that invited essays in Tamil on science. Kalam and I took part, of course. Kalam’s essay was titled “We will build a plane”. Mine was on Infinity Mathematics, titled “Anantham.” He got the prize.

Kalam did not stop with his writing. Forget the plane. He built a rocket!

I lost touch with him for a few years after our MIT days. In the interval, he grew up under the supervision of figures such as Vikram Sarabhai, training in NASA. After I joined Bharat Electronics Ltd, I found opportunity to meet him on many counts for official work. He was a part of ISRO’s SLV rocket project. I could now see strong signs of hard work. There were people saying right then that he was destined to climb the ladder in the government hierarchy. Later, he moved to become the head of the DRDO (Defence Research and Development Organisation) at Hyderabad in the Department of Space. He successfully accomplished a series of missile projects: Prithvi, Agni, Akash, Nag et al. Then he became advisor to the prime minister and played a significant role in the stalled light commercial aircraft (LCA) project, pulling it finally out of the hangar and actually making it fly.

If I were to look back and compare ourselves with our batch mate, Kalam’s rise is manifold. None of us quite rose to become a Bharat Ratna. The main reason for his success was his dedication towards work, tireless labour and self-confidence.

When he was in the DRDO, I have taken part in his review meetings – and they were brief. He would ask a project head if a certain task was done. If it was delayed he never got upset. No shouting – but somehow he would make the person responsible for missing the deadline squirm in discomfort. When he was working 24/7/365, others were compelled to match up. He led by example.

His personal needs were few. He was a bachelor and a vegetarian with no “bad” habits. To top this he had a devout Muslim’s sense of good conduct. These kept him away from the temptations of a big office. In all of Tehelka’s tapes that exposed doings inside the government, he came out as a figure who stood in the way of corruption in high places.

I particularly recall one incident. When I went to Hyderabad for a meeting with him, some Russian technicians were visiting and there was a dinner at the Taj Banjara. I was invited as well. The Russians were gloating in the joy of having signed an agreement and forced a glass of vodka on Kalam, who avoided any intoxicant. He approached me quickly and asked in an embarrassed tone, “What’s that in your hand?”.

“Water. Ice water, Kalam,” I replied.

“Give it to me,” he said.

In a flash he had taken my glass and thrust the vodka glass into my unsuspecting hands.

“Those guys simply don’t understand that I don’t drink,” he said.

In a while I heard them say “Cheers” – and a glass of ice water went up with the vodkas!

Kalam and I plan to write a book together. He said we could do one on India’s rocket science since the times of Tipu Sultan. “I am ready, Kalam. Are you?” I would ask him. “I am almost ready. Let us start next month,” he would say – everytime.

Now that he has retired, I expect him to write it – if only the Indian government, US universities, colleges, Lions and Rotary clubs, schools and social organizations would leave him alone!

Translated by N. Madhavan

From Kattradhum Pettradhum (The Learned & The Received), a collection of Sujatha’s writings, published by Ananda Vikatan Publications.


Indus Makara Crocodile sign in Stone Bangles (Mohenjo Daro) and in a Rakhigarhi seal

 Indus Makara Crocodile sign in Stone Bangles (Mohenjo Daro) and in a Rakhigarhi seal

------------------------------------------------------------------------------------

There is an important Crocodile "Makara Viṭaṅkar" sign in the Indus script. It represents the Crocodile of the Sky "the Pole Star". His spouse is the Earth goddess "Kolli/Koṟṟavai" with Tiger or Blackbuck as her symbol. Stone bangles were a specialty of the Indus civilization. From Mohenjo Daro, two stone bangles have the Makara sign, at the right most position.  Source: https://x.com/Vritrahan2014/status/1453705462612852740









.




Mohenjo Daro bangle (stoneware). 3 signs (a) crab (b) man with javelin (c) makara (L to R).
A bangle from Mohenjo Daro, Sindh with three characters of Sarasvati-Sindhu/ Harappan Script on it. A rare & beautiful find. Should be of Integration Harappan period ~2800-2000 B.C.E. Bangles are still popular among Hindus of the subcontinent. © Irshad Ali Solangi
The bangle below shows two right most signs: a man, Makara.


IVC religion in Iron Age Tamil Nadu:
Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai. https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Indus Makara sign variants (A. Parpola)



Indus Creation Mythology in the Iron Age Tamil Nadu:
https://cenkantal.medium.com/indus-creation-mythology-in-the-iron-age-tamil-nadu-e4834c8ecbd7
This year (2024) excavations by Dr. S. K. Manjul's team have yielded a small seal of the Harappans from Rakhigarhi. It shows a Sindh wild goat (Sindh ibex = Capra aegagrus blythii) or a Himalayan ibex with a single sign of the Indus script above the animal. The sign is the Makara Viṭaṅkar sign. A very important find.




https://www.induscaravan.com/blog/sindh-ibex-hingol-national-park/

https://www.wilddocu.de/sindh-wild-goat-capra-aegagrus-blythi/

https://link.springer.com/article/10.1007/s10344-024-01776-5




தமிழிசைப் பாடல்களில் சந்தக் குழிப்பு – தோற்றமும், வளர்ச்சியும்

     தமிழிசைப் பாடல்களில் சந்தக் குழிப்பு – தோற்றமும், வளர்ச்சியும்

                            டாக்டர் நா. கணேசன்

               ஜான்சன் விண்ணாய்வு நிலையம், ஹூஸ்டன், அமெரிக்கா

1.        இசை இலக்கணத்தில் சந்தம்

சங்க காலத்திலேயே இயற்கை தான் இசையைத் தோற்றுவிக்கும் முதல் ஆசிரியன் என்று கண்டு பாடியுள்ளனர். மூங்கில் துளையில் காற்று, அருவி, வண்டுகள், பறவைகள் சங்கீதம் பாடும். ஓசை ஒலி உடையது இயற்பா, இசை ஒலி உடையது இசைப்பா என்று இலக்கணம் வகுத்தனர். சங்கீதத்தின் பல கூறுகளைத் தொல்காப்பியத்தில் காண்கிறோம். வண்ணம் என்று தொல்காப்பியர் சந்தத்தைக் குறிப்பிடும் 44 இடங்கள் அமைந்துள்ளன.  ‘வண்ணங்கள் என்பன சந்த வேறுபாடுகள்’ எனப் பேராசிரியர் உரை தந்துள்ளார். வண்ணம் தூய தமிழ்ச்சொல் தான். நிறம் எனப் பொருள்படும் வர்ணம் என்ற வடசொல் அன்று. பகு-/வகு-, பழுதி/வழுதி, பால்/வால், பாடிவாசல்/வாடிவாசல், பயலை/வயலை இத்தகைய சொல்லிணைகள் போல, பண்-  பண்ணம்/வண்ணம் என்னும் சொல்முதல் பகரம் வகர எழுத்து மாற்றம் இது. காரைக்கால் அம்மையார் பண்களில் அமைத்தும், ஏழு சுரங்களைக் குறித்தும், இசைக்கருவிகளைத் தொகுத்தும் பாடினமையால், தமிழிசையின் தாய் எனப் புகழ்பெறுகிறார்.

வண்ணம் நூறும் பலவும் ஆகி வேறுபடினும், தொல்காப்பியச் சூத்திரத்தின் இருபதுள் அடங்கும் என்பார் பேராசிரியர். மனஸ்/மனம், தபஸ்/தவம் போல, சந்தஸ்/ சந்தம். சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப்பாடல்கள் அனைத்தும் சந்தப் பாடல்கள். சந்தத் தமிழின் தந்தை இளங்கோ அடிகள் பாடிய கந்துகவரி தமிழின் முதல் சந்தப்பாடல். இதே திசிரநடைச் சந்தத்தில் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம், சிவவாக்கியம், கம்பனின் ‘உறங்குகின்ற கும்பகன்ன’ பாடியுள்ளனர்.‘சந்தம் மலி பாடல்’, ‘சந்தமே பாட வல்ல தமிழ் ஞான சம்பந்தன்’, ‘சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை எனப் பரவு பாடல்இவ்வாறு எல்லாம் பக்தி இலக்கியக் காலத்திலே, சந்தஸ் வடசொல் சந்தம் தொல்காப்பியரின் வண்ணம் தமிழ்ச்சொல்லுக்கு நேர் ஆகிறது. சிந்தாமணி, சூளாமணி, கம்பன் என காப்பியங்களில் சிலப்பதிகாரத்தின் சந்தப் பாடல் மரபு தொடர்ந்துள்ளது. பரணி நூல்களில் சந்த அமைப்பு பெரிதாகி இருக்கிறது.

2.        ஒலிக்குறிப்பாக இயற்கைச் சந்தம்

  தும்பி போன்ற வண்டுகள் , தேனீக்கள் இசை முரல்வன. இந்த உயிரிகளுக்கு அளி (Bees) என்பது சங்ககாலப் பொதுப்பெயர். ‘அளிவழக்கம்’ என்று அளிகள் பாடுவதைப் பரிபாடலில் பார்க்கிறோம். தென்னா, தெனா என வண்டுகள் முரலுவதால், தென்னானே, தேன்னானே என நாட்டார் இசையில் சந்தத்தைப் பாடுகின்றனர். தென்னாதெனா என இசை பாடும் தேனீக்கள் மலரில் இருந்து எடுத்துக் கூட்டில் சேர்ப்பதற்குத் தேன் என்ற பெயர் பிறந்தது. இதுவே, தே(ம்)/தீ(ம்) = இனிமை என்ற பொருள் பெறக் காரணம் ஆயிற்று: தேம்பாகு (தேன்பாகு) இனிய பாகு. தேனளிகள் போன்றவை எழுப்பும் இசையைப் பக்தி இலக்கியங்கள் முறையாகத் தொகுத்துள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

தென்ன (4)

தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் - நாலாயிரம்:682/3

தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே - நாலாயிரம்:1149/4

தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை - நாலாயிரம்:1375/4

தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்  - நாலாயிரம்:1756/4

தென்னா (2)

தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து - நாலாயிரம்:3209/3

தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே - நாலாயிரம்:3961/4

தெத்தென (1)

தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர் - தேவாரம்-சம்:3714/3

 தெத்தே (2)

தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே - தேவாரம்-சம்:2249/4

தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் - தேவாரம்-அப்:166/2

தேத்தென (2)

தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து - தேவாரம்-அப்:785 /3

தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே - தேவாரம்-அப்:323 /4

தெத்தெனா (1)

தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே - தேவாரம்-சுந்:1027/4

தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் - தேவாரம்-சுந்:16/1

தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் - தேவாரம்-சம்:1536/3

தென்னென (2)

தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் - தேவாரம்-சம்:1150/3

தென்னென இசை முரல் சரிதையர் திகழ்தரும் மார்பினில் - தேவாரம்-சம்:3717/3

சங்க காலச் சேரர் தலைநகர் கரூர். இந்த ஆய்வு முடிபு “சேரன் செங்குட்டுவன்”, “வஞ்சி மாநகர்” என்ற இரு புகழ்பெற்ற நூல்களில் சங்க இலக்கியத்தை முழுதும் ஆய்ந்து ஒரு நூற்றாண்டு முன்னரே நிறுவப்பெற்றது. பின்னர் கரூரில் நடந்த தொல்லியல் ஆய்வுகள், நாணயவியல் சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி என்பது கரூர் தான் என உறுதிப்படுத்தின. கொங்கர் கோன், கொல்லி காவலன் என்றெல்லாம் தன்னைக் கூறும் குலசேகர ஆழ்வார் காலம் ஈறாக, கரூர் சேரர் தலைநகராக இருந்தது. பின்னர் சோழர்கள் எழுச்சியால், சேரர் தலைநகர் தாராபுரம், கொச்சிக்கு இடம்பெயர்ந்தது. இந்தியாவின் செம்மொழிகள் இரண்டு: (1) தமிழ் (2) வடமொழி. பன்னிரண்டு ராசிகளில் முதலாவதாக, மேட மாதப் பௌர்ணமியில் சித்திரை விண்மீன் என்பதற்கான வானியலை நிறுவிய சேரன் “ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்” எனப் புகழ்பெற்றான். சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் மீது போர் தொடுத்து, இமயமலையில் வில் சின்னம் பொறித்தான் எனப் புகழ்கிறார் இளங்கோ அடிகள். கரூரில் இருந்த அரண்மனையில் வளர்ந்த அடிகள் செம்மொழிகள் இரண்டையும் பழுதறக் கற்றார். முத்தமிழ்க் காப்பியத்தில் கதாமாந்தர் பெயர்களை அமைத்த விதம் பற்றி விரிவாய்க் குறிப்பிட்டுள்ளேன் [1]. தம் சமண சமயக் கோட்பாடுகளை விளக்குவதற்காகவே, கவுந்தி அடிகள் பாத்திரத்தைப் படைத்து நாடுகாண் காதை பாடியுள்ளார்.

இளங்கோ அடிகள் தம் வடமொழி அறிவால், தமிழ்ச் செய்யுள் யாப்பின் அசை, சீர், தளை அடுக்கின் மேல் அடுக்காக, சந்தம் என்னும் கணக்கையும் சேர்த்து அமைத்தார். இதனைச் சிலப்பதிகாரத்தில் இசைப்பாக்களாக உள்ள வரிப்பாடல்களில் காண்கிறோம். சந்தப் பாக்களின் இலக்கணம் சமணர்கள் இயற்றிய யாப்பருங்கல விருத்தி, பௌத்தர் செய்த வீரசோழியம் இரண்டிலும் முதன்முதலாக விளக்கம் பெறுகிறது.

வடமொழி யாப்பிலக்கணம், விருத்தங்களுக்கு எழுத்துக்களையும் மாத்திரைகளையும் கணக்கிடும் வகையால் கூறும் அடிப்படைகள் இலகுவும் குருவும் ஆகும். லகு (< இளகு), குரு விருத்த பேதங்களை உண்டாக்குபவை. சந்த இலக்கணத்தின் வேரான இந்த அடிப்படை கொண்டு, சந்தக்குழிப்பினை அமைத்துள்ளனர். தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய என அடிப்படைச் சந்தம் எட்டு. சிலம்பின் வரிப்பாட்டுகளுக்குச் சந்தக் குழிப்பு இட இயலுகிறது. திருப்புகழில் சந்தக் குழிப்பு அசைகளைப் பாடியுள்ளமை போற்றத்தக்கது.

அடிப்படைச் சந்த வாய்பாடு எட்டின் பெயர்களுக்கும் அடிப்படையாக, அளிவழக்கம் என்று அளிகள் (தேனீ, தும்பி, வண்டு, மதுகரம், ...) முரலும் இசையின் அசைகள் அடிப்படையாக அமைந்துள்ளன. இசைத்தமிழுக்கு எழுத்தில் சந்தக் குழிப்பு அமைத்துத்தந்த இலக்கணிகளின் மேதமை வியக்கத்தக்கது. வேறெந்த மொழியிலும் இந்தத் தாள உறழ்வு (தாளப் பிரஸ்தாரம், Rhythmic pattern) விளக்கம் பெறவில்லை. ஷ்வா’ (ə, Schwa) எனப்படும் எழுத்தாக, பல பழைய சொற்களில் தமிழ் மொழியில் இயங்கியிருக்கிறது. ரங்கநாதன் ரெங்கநாதன் ஆகிவிடுவது இந்த  ə (Schwa) ஒலிப்பால் தான். சயசய/செயசெய, ஜயந்தி/ஜெயந்தி, தைவம்/தெய்வம், கல்லு/கெல்லு, கங்கை/கெங்கை இவை போல ‘ஷ்வா’ மாற்றம் எனக் கொள்வர். அளிவழக்கம் என்னும் இயற்கை இசை தென்னா, தெனா, தெத்தா, ...  என்பதை மாற்றி, தன, தான, தன்ன, தத்த, தந்த எனக் கொண்டு, சந்த வாய்பாடுகள் அமைத்தனர். சந்தப் பாவலர் பெருமான் அருணகிரிநாதர் இச்சொற்களைப் பாடியுள்ளார். ராக மாலிகை பாடுவது ராகப் பிரஸ்தாரம். சரிகமபதநி எனும் ஏழிசைத் தான உறழ்வு (தானப் பிரத்தாரம்) மட்டுமல்லாது திருப்புகழ்  எட்டுச் சந்த அசைகொண்டு தாள உறழ்வுக்கு இலக்கியமாக, தாளமாலிகையாய் வண்ணப்பாடல்களைத் தருகிறது.

3.        சந்தக் கோலாகலம் திருப்புகழ்

தெய்வத் தமிழ் இலக்கிய வரலாற்றில் "சந்தம்' என்னும் பேராறு பாய்ந்து ஓசையும் இசையும் இணைந்து வளப்படுத்திய பெருமை அருணகிரிநாத சுவாமிகளுக்கு உரியது. பட்டினத்தார் கோயில் நான்மணி மாலையில் பாடிய வண்ண விருத்தங்களுக்குத் தொங்கல் என்னும் சொல்லையும் சேர்த்துத் திருப்புகழின் புதுவடிவம் தருகிறார். பேரா. இ, அங்கயற்கண்ணி “திருப்புகழ்ப் பாடல்களைத் தாள இலக்கணத்தோடு தொடர்புபடுத்தி ஆராய்ந்ததன் மூலம், மொத்தமாக 857 சந்தங்களும், அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன” என்று திருப்புகழிசை ஆய்வுநூலில் முடிபு தந்துள்ளார். ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணியின் சந்தங்களை ஆழக் கற்றவர் அருணகிரி.

   “தமது இசைப்பாடலுக்கு அருணகிரிநாதர் ஒட்டக்கூத்தரால் பெரும் பயனடைந்தார் என்று உறுதியாய்ச் சொல்லலாம். ஒன்று, மேலே காட்டியவாறமைந்த விஸ்தாரமான சந்த அமைப்பு. இந்த அமைப்பை இவர் அவரிடமிருந்து பெற்றார் என்று கருதுவதற்கு மற்றொரு சிறந்த சான்று சம்பந்தர் வரலாறு. ஒட்டக்கூத்தர் தான் சம்பந்தரை முருகன் அவதாரம் என்று வைத்து அவருடைய மதுரை வாதத்தைப் பரணியுள் ஒரு சிறப்புக் கிளைக்கதையாக, வலிந்து, ஆனால் மிகவும் சுவையும் நயமும் பொருந்த அமைத்திருக்கிறார். இதனால் அருணகிரிநாதர் தமது நூல்கள் அனைத்திலும் சம்பந்தரை முருகன் அவதாரம் என்று பாடுவது ஒட்டக்கூத்தரைப் பின்பற்றியது என்று தெளிவாக நாம் காண இயலுகிறது.” (மு. அருணாசலம், தமிழ் இசை இலக்கிய வரலாறு).

   சந்தப் பாடல்களுக்கு ஆதியான சமணர் செய்த சிலப்பதிகாரம், இலக்கண நூல் யாப்பருங்கலம், வடமொழியில் இலக்கணமாக உள்ள பார்சுவதேவர் செய்த சங்கீத ரத்னாகரம் போன்றவை, சைவர்களான சம்பந்தர், பட்டினத்தார், ஒட்டக்கூத்தர், அருணகிரிநாதர் பாடல்களுக்கு அடிப்படையாய் இருந்துள்ளன. திருப்புகழ்ப் பாடல்களுக்கு இலக்கணத்தை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் "வண்ணத்தியல்பு" என்ற நூல்செய்து தமிழன்பருக்கு உதவியுள்ளார். வண்ணச்சரபம் செய்த அறுவகை இலக்கணம், வண்ணத்தியல்பு நூல்கள் அச்சானபின், வண்ணப் பாக்களுக்குச் சந்தக் குழிப்புடன் பதித்து வெளியிடுவது வழக்கமாயிற்று.  சந்தக் குழிப்பு என்ற பெயரை வண்ண விருத்தங்களுக்கு ஏற்படுத்தியவர் வண்ணச்சரபம் ஆவர்.

1898-ம் ஆண்டில், மாயூரம் வித்வான் கிருஷ்ணய்யர் இயற்றிய தில்லை ஸ்ரீ நடராஜர் திருப்புகழ்ச் சந்தவிருத்தமும், அழகுமுத்துப் புலவரின் ஸ்ரீ மெய்கண்ட வேலாயுத சதகம் திறப்புகழ் 1900-ம் ஆண்டிலும்  சந்தக் குழிப்புடன் அச்சாகியுள்ளது. இதன் பின்னர் பல நூல்கள்: மதுரை மீனாட்சியம்மை மீது சந்தத் திருவடி மாலையும் திருவடிப்பத்தும்,  சோழவந்தான் சிதம்பரவிநாயகர் மாலையும் (அரசஞ் சண்முகனார், மதுரை : விவேகபாநு அச்சியந்திரசாலை , 1914). இதன் பதிப்பாசிரியர் மு. ரா. கந்தசாமிக் கவிராயர். அவரே திருப்புகழ்ப் பாடல்களைச் சந்தக் குழிப்புடன் வெளியிட்டார். எல்லாத் திருப்புகழ்ப் பாக்களுக்கும் சந்தக்குழிப்புடன் பதிப்பித்தவர் தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை ஆவர்.  தாள இலக்கியமாக, இந்தியாவின் எந்த மொழிகளிலும் இல்லாத அளவு இலக்கியங்கள் உருவாக இளங்கோ அடிகள் மூலவர். சம்பந்தர் விரித்தார். தமிழ்க் கடவுள் முருகனின் அடியார்களில் அருணகிரிநாதர் ராஜபாட்டை போட்டு நடந்தார். தண்டபாணி சுவாமிகளும், பாம்பன் சுவாமிகளும் தொடர்ந்துள்ளனர்.

4.        ஆய்வுத்துணை

(1)   இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு

https://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html

(2)  V.N. Muthukumar, Beyond Tālaprastāra in Indian Music: Prosody as a Generating Function of Rhythmic Complexity in Aruṇakirinātar's Tiruppukaḻ. Asian Music, 41, 1, 2010, pp. 60-88.





அரங்கநாதன் சீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு எழுதிய பிரணய பத்திரிகை (1454 CE கல்வெட்டு)

தமிழ்க் கல்வெட்டுகளில் ஓர் அழகிய காதல் கடிதம் இருக்கிறது. சீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாளுக்குக் கி.பி. 1454-ம் ஆண்டு திருவரங்கம் பெரியபெருமாள் எழுதிய பிரணய பத்திரிகை. ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் இந்த அரிய கல்வெட்டினைக் கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் தமிழறிஞர்  கோவைகிழார் ஆவார். பல ஆண்டுமுன், கோவையில் அச்சாகும் ஓம்சக்தி இதழில் கட்டுரை எழுதினேன். கல்வெட்டுப்படி, சாசனமாலை (1960: எஸ். ராஜம்) இங்கே.
   இன்றோ திருவாடிப் பூரம்! எமக்காக
   அன்றோஇங்கு ஆண்டாள் அவதரித்தாள்! – குன்றாத
   வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னைஇகழ்ந்து,
   ஆழ்வார் திருமகளா ராய்!
                                       - மணவாள மாமுனிகள்
கோதையின் தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஐந்து வடிவங்களில் அருள் பாலிக்கிறாள். மூலவருக்கு சூடிக்கொடுத்தாள் என்பது திருப்பெயர்.

கௌதுக பேரம் எனப்படும் (செல்வ) ஆண்டாளின் திருப்பெயர் மல்லி வளநாடி. முற்காலத்தில் இந்த பகுதிக்கு 'மல்லி வளநாடு’ என்பது பெயர். இந்த நாட்டை ஆள்பவள் எனும் பொருளில் இப்பெயர் வழங்குகிறது. இந்தத் திருமேனி வெள்ளியால் செய்யப் பட்டது. இவளை மல்லிநாடாண்ட மடமயில் என்பர்.

ஸ்நான பேரம் எனப்படும் திருமஞ்சனத் திருமேனிக்கு புதுவை ஆண்டாள் என்பது பெயர். புதுவை என்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் பெயர்களில் ஒன்றாகும்.

வீதி கண்டருள்வாள் எனும் உற்ஸவத் திருமேனிக்கு 'திருப்பாவை பாடினாள்’ என்பது பெயர்.

நித்தியோற்ஸவராக (பலிபேரம்) உள் வலம் வந்து ஸ்ரீபலி சாதிக்கும் ஆண்டாளுக்கு, 'வேயர் பயந்த விளக்கு’ என்பது பெயர்.

----------------------------
தமிழ் இந்தியாவின் பழமையான செம்மொழி. பாரத பார்லிமெண்ட்டால் செம்மொழி என்று முதன்முதலாக அறிவித்த மொழி. எப்பொழுதுமே, ஒரு மொழியின் பரப்பளவு விசாலமாகிக்கொண்டே இருக்கவேண்டும். இந்தியாவின் பக்தி இலக்கியங்களிலே, இந்தியாவின் செம்மொழி ஆகிய ஸம்ஸ்கிருதத்தில் உள்ள ஆகச் சிறந்த பக்தி இலக்கியம் ஸ்ரீமத் பாகவதம். இதன் அடிப்படையாக, தமிழ் ஆழ்வார்களின் பாசுரங்கள் திகழ்கின்றன. ஒரு மொழியின் அழிவு, சொல்வளத்தை இழப்பதால் ஏற்படும். ஆழ்வார்கள், ஸ்ரீதர என்னும் வடசொல்லைச் சீதரன், சிரீதரன் என்று மொழிபெயர்ப்பர். என் முன்னோர் ஒருவர் பெயர் சீரங்கசாமி. சீரங்கம், சீவைணவம், சீவில்லிபுத்தூர், சீகத்தம் (< ஸ்ரீஹஸ்தம், திருமந்திரம்), சீகாரியம் (ராஜராஜீசுவரம் உடையார்கோயில் சீகாரி யஞ் செய்வானுக்கும் (S. I. I. ii, 311)), சீதனம், சீதாளி (தாளிப்பனை), சீதேவி, சீபாதம், சீமங்கலி (பாணன், நாவிதன்), சீமான், சீபலி, சீபண்டாரம்,, சீமத்து (செல்வம்), சீமந்தம் (சீர்), சீமுகம் (கடுதாசி) சீவலி (ஸ்ரீபலி), ... என்றெல்லாம் எழுத்திலும் சொல்லிலும் தமிழிலும் பயன்படுத்துவது வழக்கம்.

சீவில்லிபுத்தூர் என இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பல நூற்றாண்டுகளாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை மக்கள் சீலத்தூர் (அ) சீலுத்தூர் என்று பேச்சில் சொல்லுவது வழக்கம்.
தமிழின் சில முக்கியமான கல்வெட்டுகளைச் சாசனமாலையில் (1960) கற்கலாம்:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0021978_சாசன_மாலை.pdf

சீவில்லிபுத்தூர்க் கல்வெட்டு, வாணாதிராயர்கள் ஆட்சிக் காலத்தில் எழுதப்பெற்றது. முனைவர் வெ. வேதாசலம், தொல்லியற்றுறை நூல் (1987):
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009492_வாணாதிராயர்கள்.pdf
Here is a rare Tamil inscription, dated 1454 CE. A Love Letter from Ciivilliputtuur to Tiruvarangam. சீவில்லிபுத்தூர்ச் சிலாலிகிதத்தை வாசிப்போம்.  வெள்ளுரையாக (Plain-text) இணையத்தில் முதல்முறை:
உறங்காவில்லி தாசனான மாவலி வாணாதிராயன் (கி.பி. 1454)

     ஏதத் த்ரைலோக்ய நிர்மாண த்ராண ஸம்ஹார காரணம், 
    ஸ்ரீமன் ஸ்ரீரங்கநாதஸ்ய சாசனம் சாஸ்வதம் பரம்.  
ētat trailōkya nirmāṇa trāṇa saṁhāra kāraṇam |
śrīman śrīraṅganāthasya śāsanaṁ śāśvataṁ param ||

   'பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும்
           புதுவையர் கோன் விஷ்ணுசித்தன்'[1]
   கோதைக்கு நாம் வரக்காட்டின ப்ரணய பத்திரிகை :

'பக்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
       முனிவர்களும் பரந்து, நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்ச, திசை விளக்காய்
       நிற்கின்ற' [2]

'நல்லார்கள் வாழும் நளிர் அரங்கப் பெரு நகருள்,' நம் வீட்டில், சேரனை வென்றான் மண்டபத்துச் சுந்தர பாண்டியன் பந்தல்கீழ், அரிய ராயன் கட்டிலில் இருந்து, உம்பரும் தும்புரு நாரதர் வந்து முகம் காட்ட, அவர்களுக்கு அழகு ஒலக்கம் கொடுத்து இருக்கச் செய்தே. நம் வீட்டில் - குடவர், கோவணவர், பூவிடுவர், தழை விடுவர், தண்ணீர் சுமப்பார், தண்டெடுப்பார், அணுக்கர், கணக்கர், மற்றும் நம் காரியத்துக்குக் கடவர் எல்லோரும் வந்து, - நம் கோதை வீட்டினின்றும் அர்ச்சகர், குடவர், கோவணவர், தண்டெடுப்பார், 'ஸ்ரீ ராமாநுஜ உடையார் வந்தார்கள்' என்று, நாமும் சர்வ பரிகரமும் அனைத்துக் கொத்துள்ளாரையும் எதிரே போகவிட்டு, தம் வீட்டில் உள்ளாரையும் கூட்டிக் காண்பித்துக் கொள்ளும் அடைவிலே காண்பித்துக் கொண்டு, தாம் வரக்காட்டின சம்மானமும் சுவீகரிக்கும் அடைவிலே சுவீகரித்தோம். தாம் வரக் காட்டின சாசனமும் வாசித்துக் காட்ட அறிந்து கொண்டோம். தாம் சொல்லிவரக் காட்டின படியாவது: 'நாம் பதினாறாமாயிரவர் தேவிமாருடனே, பெரிய மண்டபத்திலே, விநோதித்திருந்தோம்' என்று, தம் சுற்றத்துத் தோழிமார் தமக்குச் சொல்ல, அப்பொழுது தாம் புண்ணிற் புளி பெய்தாற் போலேயும், வேலால் துன்னம் பெய்தாற் போலேயும், நெஞ்சு ஊடுருவ வேவுண்டு, நிலையும் தளர்ந்து,

                 'கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
                        கொங்கை தன்னைக் கிழங்கோடும்
                அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
                        எறிந்து என் அழலைத் தீர்வேனே'[3]

என்றும் உள்ளே உருகி நைந்து, தாம் நம்மைப் பொருத்தமிலி என்றும், புறம்போல் உள்ளும் கரியான், பெண்ணின் வருத்த மறியாத பெருமான், 'வஞ்சக்கள்வன் மாமாயன்,' 'பாம்பணையார்க்கும் தம் பாம்புபோல் நாவும் இரண்டுள வாய்த்து நாணிலி'[4] என்றும், தாய் சொல்லிவரக் காட்டினது தாம், மாமிமார் மக்களாகையாலும், நாம் மாமனார் மக்களாகையாலும், நந்திறத்து ஊடல் கண்டு உவப்ப வேண்டிச் சொன்னதாயிருக்கும். நாம் 'முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்ப்பது' காரியம் ஆகவும், தேவரகசியமாகவும், பெரிய மண்டபத்தில் இருந்தோம். தாம் மணவாளர் வைத்த பரிசிலே இருந்தோம் என்றும், நாங்கள் எம்மில் இருந்து ஒட்டி அகச்சங்கம் நானும் அவனும் அறிந்தும் என்றும்.

              'பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு, பண்டு ஒரு நாள்
              மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம்
              தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
              பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே[5]
என்றும்,
            'திண் ஆர்ந்திருந்த சிசுபாலன் தேசு அழிந்து,
            அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த 
             பெண்ணாளன்'[6]

என்றும், 'செம்மையுடைய திருவரங்கர்[7] என்றும் சொன்னபடியே - நாம் தம்மை அல்லது வேண்டுவதில்லை. தம் வீட்டில் உள்ளவர்களைத் தாட்க நிறுத்தி நில்லாமல் வரக் காட்டச் சொன்னபடியே, அவர்களுக்கு வேண்டும் சத்காரங்களும் செய்து, தமக்கு நாம் என்றும் பல்லக்கும், நாம் இருக்கும் குடையும், நாம் பூணும் கண்டமாலை ஆபரணங்களும், பட்டு பருத்தி ஸுகந்த திரவியங்களும் வேண்டுமதும் கொடுத்து, தமக்கு அடுக்களைப் புறமாக நமக்குப் பூர்வம் நடந்து வருகிற சீர்மையில் விட்ட சகாப்தம் 1375 மேல் செல்லாநின்ற ஸ்ரீமுக வருஷம், மீன ஞாயிற்று, பூர்வ பக்ஷத்து, ஏகாதசியும் புதவாரமும் பெற்ற உத்திரத்து நாள், உறங்கா வில்லிதாஸன் ஆன மஹாபலி வாணாத ராயர்— சீர்மையான மதுரை மண்டலத்து, முட்டநாட்டுத் திடியன் ஆன திருவரங்க நல்லூர் எல்லையாவது : மேல் எல்லை, புத்தூர் மலைக்கும் வயிரவன் பற்றுக்கும் கிழக்கு; வட எல்லை, வாரந்தூர்ப் பற்றுக்குத் தெற்கு; கீழ் எல்லை, கருமாத்தூரில் குளத்துக்கு மேற்கு; தென் எல்லை புளியஞ்சோலைக்கும் குத்துக்கல்லுக்கும் வடக்கு; இந் நான்கு எல்லைக்கும் உள்பட்ட, மாவடை, மரவடை, பட்டடை, பதிமுதல் மற்றும் எப்பேற்பட்ட சமஸ்தப் பிராப்திகளும் கைக்கொண்டு, கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளவும். இப்படிக்குத் திருவாய் மொழிந்தருளினமைக்கு அருளால் திருமந்திர ஓலை நாயகம் ஸ்ரீரங்கநாதப் பிரியன் எழுத்து.
 [இராமநாதபுரம் ஜில்லா, ஸ்ரீவில்லிபுத்தூர், சூடிக் கொடுத்த நாச்சியார் கோயிலில் உள்ளது.]
 
(சாசனத்தில் குறித்த மேற்கோள்: 1. நாச்சியார் திருமொழி 1:10; 2. பெரியாழ்வார் திருமொழி 4, 9, 6; 3. நாச்சியார் திருமொழி 13, 8; 4. நாச்சியார் திருமொழி 10,3; 5. நாச்சியார் திருமொழி 11, 8; 6. நாச்சியார் திருமொழி 11:9; 7. நாச்சியார் திருமொழி 11: 10.)
---------------------------------------------
தெரிவு:
நா. கணேசன்