அறவாழி அந்தணன் - பேரா. கனக. அஜிததாஸ் கட்டுரை

 அறவாழி அந்தணன்

பேரா. Dr. கனக. அஜிததாஸ், M.Sc., M.Phil., D.H.Ed., Ph.D.,

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
                          திருக்குறள் என்ற ஒப்பிலா நூல் மெய்ப்பொருள் காட்டி உயிர்களனைத்துக்கும் அரண் செய்து வழிகாட்டும் ஓர் உயிர்த்துணை நூல். துன்பங்களின்று விடுதலை காண வழிகள் கூறும் உபாய நூல்; மனிதனை எவர்க்கும் - ஏன்? இறைவர்க்கும் அடிமையில்லை என்று சிந்திக்க வைத்துத் தன்முயற்சி யாளனாக்கும்  உறுதி உரைக்கும் நூல். இத்தகு சிறப்பு வாய்ந்த திருக்குறள் போற்றும் நெறி எது? போற்றும் கடவுள் யார்? என்பதை அறிய கடவுள் வாழ்த்தில் முதலில் புகுவதைத் தவிர்த்து உட்புகுதல் வேண்டும். ஏனெனில் திருக்குறள் வாழ்த்தில் குறிப்பிடப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய பெயர்களில் திருக்குறள் போற்றும் நெறிகள் அடங்கியுள்ளன. திருக்குறள் நெறியை உள்ளவாறு அறியாதவர்களுக்கு இப்பெயர்களில் அடங்கியுள்ள மறைபொருள் அறியப்படாத ஒன்றே! 
                          கொல்லாமை, வாய்மை, புலால் உண்ணாமை, உயிர்ப்பலி ஓம்பாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, அவாவறுத்தல்,  மிகுபொருள் விரும்பாமை, உழவின் மேன்மை, இருவினை, தவத்தின் மாட்சி, தீவினையஞ்சுதல், தவமுடையார்க்கு உடம்பும் மிகை என்ற திகம்பரத் துறவு முதலானவற்றையெல்லாம் பட்டியலிட்டுப் பரத கண்டத்தின் சமயங்களில் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு மேற்குறிப்பிட்ட கொள்கைகளை முன்னுக்குப்  பின் முரண் என்பதே இல்லாமல் முக்காலத்தும்,  எவ்விடத்தும் முழுதுமாகத் தம் நெறியின் அடிப்படை-அச்சு இவை என உறுதிபடக்கூறும் தகுதி படைத்த சமயம் எது என வினவினால் ஒரே ஒரு நெறியினர்-அருகர் நெறியினர் மட்டுமே-இக்கொள்கைகள் எமது எனக் கூறமுடியும். அஃது அறவாழி அண்ணலாகிய ஆதிபகவன் காட்டிய நெறியாகும்.
                          திருக்குறளின் சுவடுகள், திருக்குறளார் வழி வந்த நூல்களில் - சிலம்பில், சிந்தாமணியில், சூளாமணியில், நாலடியில், அநநெறிச் சாரத்தில், அருங்கலச் செப்பில், ஏலாதியில், சிறுபஞ்ச மூலத்தில், வளையாபதியில், மேருமந்தரத்தில், ஸ்ரீபுராணத்தில்,  மகாபுராணத்தில், இரத்தினகரண்ட சிராவகாசாரத்தில்,  சமயசாரத்தில், தத்வார்த்த சூத்திரத்தில் என எல்லாவற்றிலும் அருக-நெறி நூல்கள் அனைத்திலும் மிகத் தெளிவாக உள்ளன. சிலவற்றில் திருக்குறளின் அதிகாரங்கள் அப்படியே உள்ளன! அருக நெறியினர்க்கு இதுவியப்பல்ல! திருக்குறளின் சுவடுகள்-திருக்குறளின் பிரதி பிம்பங்கள் பின்னரெழுந்த சமண நூல்கள் அனைத்தும். அப்படியெனில் திருக்குறள்? ஆம்! ஆதிபகவன், அறவாழி அந்தணன் உரைத்த அறநெறிகளின் பிரதிபிம்பமே திருக்குறள்! எனவேதான் திருக்குறளின் ஆசிரியர் - தம் பெயர் குந்தர் குந்தர் என்றபோதிலும், ஆக்கியோன் தான் எனத் தன் பெயரிடாது பேரறம் புரிந்தார்! என்னை? ஆம்! ஆதிபகவனே; அறவாழி அந்தணனே திருக்குறளின் மூலாசிரியன்! பேராசிரியன்!
                          இனி, ‘அறவாழி அந்தணன்’ என்ற பெயரின் மறை பொருளையும், இப்பெயருக்குரிய பெரியோன் யார்? என்பதையும் காண்போம். திருக்குறள் போற்றும் இறைவனது பெயர்கள் அருகநெறியினர் நன்கு அறிந்தவையாகும். நாள்தோறும் செய்யப்படும் வழிபாட்டில் கையாளப்படும் சொற்களே இவை. ஜினாலயங்கள் சிலவற்றில் எழுந்தருளியிருக்கும் அருகப் பெருமானது பெயர்களில் (ஆதிபகவன், ஆதிபட்டாரகன், ஆதிநாதன் எண்குண இறைவன்), தத்தம் குழந்தைகளுக்கு சூட்டி மகிழும் பெயர்களில் திருக்குறள் பெயர்களும் (ஆதிநாதன், அறவாழி) உள்ளன. திருக்குறள் இறைவன் பெயர்கள் சமணர் நூல்களில் எல்லா மொழி நூல்களிலும் மிகவும் சரளமாகக் கையாளப்படும் பெயர்களே.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
                          என்பது அருகப் பெருமானை நன்றியின் பொருட்டுத் தேவர் பெருமான் போற்றி வணங்கும் பாடலாகும். 
                          அறவாழி என்பது யாது? அறவாழி என்பதற்கு அறக்கடல் என்றும் அருட்சக்கரம், தரும சக்கரம் என்றும் இருபொருள்கள் தரப்படுகின்றன. திருக்குறளாசிரியர், இங்குக் குறிப்பிட்டுள்ளது அருட்சக்கரத்தையே என்பது கீழ்க்கண்ட பலகாரணங்களால் தெளிவாகிறது. இச்சான்றுகளை அறிந்து கொள்ள ஊகமோ, ஆழ்ந்த சிந்தனையோ, பிறர்கூறுவதில் நம்பிக்கையோ தேவையில்லை. நேரடியாக, தம் கண்களால் பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம்! என்னதாம் அச்சான்றுகள்? இந்த அறவாழி என்பது எல்லா ஜிளாலயங்களிலும் (அருகப்பெருமான் ஆலயங்களில்) உலோக பிம்பமாக சமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தரும சக்கரம் என்பர். இது ஜிநதருமமத்தின், அருக நெறியின் பிரதி பிம்பமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஜினாலயத்திலும் நவதேவதை (அ) உயரிய ஒன்பது என்ற வழிபாடியற்றப்படும் படிமங்கள் உள்ளன. இந்த உயரிய ஒன்பதாவன:   அருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள் ஆகிய பஞ்ச பரமேஷ்டிகள், ஜிநதருமம் (தருமசக்கரம்) ஜிந ஆகமம், ஜிநர் படிமம், ஜினாலயம் என்பனவாகும். இவற்றில் ஜிநதருமம் என்பது தரும சக்கரமாகவே உருவகப்படுத்தப் பட்டுள்ளதை நேரடியாக, கண்களாற் கண்டு அறிந்து கொள்ளலாம். வழிபட ஓதும் மந்திரங்களைக் கேட்டு உண்மையைத் தெளியலாம். எனவே அறவாழி என்பது தருமசக்கரம். அருகர் நெறியின் பிரதி பிம்பம் என்பதே உண்மை. இதுமட்டுமன்றி, தரும சக்கரம் என்பது தனிப்படிமமாகவே உருவாக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்படுவதையும் இன்றும் ஜினாலயங்களில் காணலாம். 
                          ஜினாலயங்களில் உள்ள கொடித்தூண் (துவஜஸ்தம்பம்) அடிப்பாகத்தில் பொறிக்கப்படும் திருஉருவங்களில் அறவாழியும் ஒன்றாகும். ஜினாலயங்களில் உள்ள அருகர் படிமைகளின் வலப்புறத்தில், அப்பெருமான் பக்கத்தில் அறவாழி நிறுவப்பட்டுள்ளதைக் கண்கூடாகக காணலாம். அருகப் பெருமான் திருவுருவம் உள்ள பீடத்தில் அறவாழி பொறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.
வழிபடும் ஓவியத்தில் அறவாழி:
                          தீர்த்தங்கரர் ஆகக் கூடிய வினை பெற்ற மாபெரும் துறவி, வாலறிவு பெற்றவுடன் அருகப் பெருமான் எனப் போற்றப்படுகிறார். அப்போது அவர் அறமுரைத்திட சமவசரணம் என்னும் ஒப்பரிய திருநிலையம் ஏற்படுத்தப்படுகிறது. ஆங்கே அந்தத் திருநிலையத்தின் மையத்தில் அமைந்துள்ள மூன்று மேடைகளில் உச்சி மேடையில் தாமரை மலர் மீது நான்கு விறற்கடை விட்டு மேலே அருகப் பெருமான் எழுந்தருளி அறவுரைபகர்வார். இத்தகு சிறப்பு வாய்ந்த மூன்று மேடைகளில் - அடியில் உள்ள முதல் மேடையின் நான்கு புறங்களிலும், தர்ம சக்கரங்கள் பக்கத்திற்கு ஒன்றாக இருக்கும். இதனைத் தேவர்கள் தாங்கி நிற்பர் (மஹாபுராணம், ஸ்ரீபுராணம், கிரியாகலாபம், மேருமந்தரபுராணம்). இந்தச் சமவசரண அமைப்பு ஜைனர்களின் இல்லங்களிலும்,  ஜினாலயங்களிலும், திருமலை போன்ற மலையில் உள்ள குகை ஓவியங்களிலும் காணலாம். சமவசரணம் வழிபாடு செய்யப்படுவதை, வணங்கப்படுவதைத் திருக்குறள் ஆராய்ச்சி அறிஞர்கள் தம் கண்களால் கண்டு மகிழலாம். மேலும், அருகப்பெருமானாகிய அறவாழி அந்தணன், ஆதிபகவன் அறஉரை பகர பல இடங்களுக்கும் எழுந்தருளும்போது அவர்முன் அறவாழி செல்லும்  என்பதைச் சமண சமய சமஸ்க்ருத, தமிழ் நூல்கள் விவரிக்கின்றன. 
                          இவ்வாறு அறவாழி என்பது தருமசக்கரமாக, அருட்சக்கரமாக, அருகப் பெருமானுடைய மங்கலச் சின்னங்களில் ஒன்றாக, பொருள் கொள்ள அழுத்தந்திருத்தமாக ஆதாரங்கள் பல உள்ளன. ஊகத்துக்கு இடமின்றி, நேரடியாகக் கண்டு அறிந்து கொள்ளக் கூடிய ஆதாரங்கள் இவை. எனவே அறவாழி என்பது அருட்கடல் அறக்கடல் என்று உரைப்பது. இங்கு, திருக்குறளில் பொருத்தமாக இல்லை. ‘கௌ’ என்றபதத்திற்கு நீர், வாக்கு, பூமி, பசு, திக்கு, மயிர், வஜ்ரம், ஆகாசம், அம்பு, கிரணம் ஆகிய பல பொருள்கள் இருப்பினும் வழக்கத்தில், பழக்கத்தில் இருப்பதைக் கொண்டு ‘பசு’ என்று பொருள் கொள்வதுதானே சிறப்பு; உயிரின் குணங்கள் பலவாயினும் அதனைக் குறிப்பிடும்போது ‘அறிவுள்ளது’ என்று கூறுவது தானே சாலப் பொருந்தும். எனவே திருக்குறளில் ஆளப்பட்டுள்ள அறவாழி என்ற சொல் தருமசக்கரத்தையே குறிக்கும் என்பதில் ஊகத்திற்கு சிறிதும் இடமில்லை.  திருக்குறளாசிரியர் அருகநெறியாளர். அவர் முன்னோர் அருகப் பெருமானை எவ்வாறு கண்டனரோ, சிறப்பித்தனரோ, வியந்து வாழ்த்தினரோ அவ்வாறே இவரும் தன் ஒப்பற்ற ஞானத்தினால் அருகப் பெருமானை காண்கிறார்-சிறப்பிக்கிறார் -வாழ்த்துகிறார்.  திருக்குறளாசிரியர் பின் வந்த அருகநெறியினரும் இவர் போன்றே இன்றும் ஆதிபகவனை அறவாழி அண்ணலாகவே காண்கின்றனர். சிறப்பிக்கின்றனர், விதந்து போற்றுகின்றனர். பரிமேலழகரும், பிற சான்றோர்களும் அறவாழி என்பதற்கு வேறு பொருள் உரைக்கிறார்களெனில் அது ‘அறிபவருடைய அபிப்ராய’மாகும்.
                          திருமால் கரத்தில் ஆழி உள்ளதே! அது அறவாழியாகாதோ? என்று கருதுவது இயற்கையே ! திருக்குறள் கூறும் நெறி ‘தவத்தோர்க்கு உடம்பும் மிகை’ என்ற முழுத்துறவு நெறி! இப்படியிருக்க, பகையாக எண்ணும் சில உயிர்களை வதை செய்யவே திருமால் கையிலேந்தப்பட்ட ஆழியைத் திருக்குறளார் குறிப்பிடுவது எங்ஙனம்? எனவே திருக்குறளாசிரியர் குறிப்பிடும் ஆழி ஆதிபகவனுடைய -அருகப் பெருமானுடைய அறவாழியே. 
                          அடுத்து, அந்தணன் என்ற சொல் மிகச்சிறந்த உயரிய நெறிகளைக் கைக்கொண்டொழுகும் பெரியோனைக் குறிக்கும். அந்தணன் என்போன் அறவோன்; செந்தண்மை பூண்டொழுகுபவன்; இங்குத் திருக்குறளிள் குறிப்பிடப்பட்டுள்ள அந்தணன், பெரியோர்க்கும் பெரியோன்; அறிவினாலறியாத அறிவன்; அறவேந்தன்; ஏனெனில் இவன் அறவாழியை உடையோன் ஆதலால்; அறவாழி உடைய சிறப்பு அருகப் பெருமான் ஒருவர்க்கே உண்டு. வாலறிவு பெற்ற அந்தணர் ஒருவர்க்கே அறவாழி சிறப்பு உண்டு. ‘ஆதிக்காலத்து அந்தணன்’ என ஆதிபகவனைத் திருத்தக்கதேவர் போற்றி மகிழ்வதை சிந்தாமணியில் காணலாம். அடுத்து பிறவாழி என்பது பிறவிக்கடல் என்றும் பொருள் மற்றும் இன்பக்கடல் என்றும் விளக்கப்படுகின்றது. பிறவிக்கடல் என்று பொருள் கொண்டாலும், பிறவியை ஏற்படுத்தக் கூடிய பொருளும், உலகவியல் இன்பமும் என்றும் பொருள் கொண்டாலும் இக்குறளுக்கு ஒப்ப அமைகிறது. எனினும் கடவுள் வாழ்த்துப் பாக்களில் இறுதிப் பாவாகிய பிறவிக்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் என்பதில் பிறவிக்கடல் என்ற ஆளுகை இருப்பதால், அறவாழி அந்தணன் என்ற குறளில் இதே கருத்தை முன்கூறி பின்னரும் குறிப்பிடுவாரோ ஒப்பற்ற ஞானியாகிய குந்தகுந்தப் பெருமான் என்று வினா எழுப்பாமல் இருக்க முடியவில்லை. இரண்டு இடங்களில் ஒருபொருளை விளக்கினார் என்பதைவிட, ஒவ்வொரு குறளிலும் வெவ்வேறு அறநெறிகளைக் குறிப்பிட்டுள்ளார் என்பது சிறப்பான சிந்தனையன்றோ? நல்வினையையே ஒரு கட்டத்தில் விலக்கும்போது பொருள், இன்பம் இவற்றை விட்டொழிக்க வேண்டுமன்றோ? பொருள் மற்றும் இன்பக் கடலினின்றும் தப்பி வெளியேறிட அற வேந்தன்தாள் துணையாம். அதன்பின் எய்துவது வீடன்றோ?
அறவாழியும் அருகனும், பிறகடவுளர்களும்: ஓர் ஒப்பாய்வு  
                          தமிழில் இலக்கணம், இலக்கியம் போன்றே முக்கியமான அங்கமாக இடம்பெறுவன நிகண்டுகளாகும். அறவாழி அண்ணல் என்பது அருகன் திருநாமங்களில் ஒன்றென நிகண்டுகளில் குறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கண்டபின் வேறெந்தக் கடவுளர்க்கு ஆழி உள்ளதென்பதையும், அது அறவாழியா மறவாழியா என்பதையும் திருக்குறள் நெறிநின்று காண்போம். சொற்களின் பொருள்களை அறிய தெளிவுபெறத் துணையாய் நிற்பவை, நிகண்டுகள் ஆகும்.
நிகண்டுகளில் ‘அறவாழி’ என்ற பெயர் யாருக்கு?     
                          திவாகரத்தில் 43 பெயர்கள் அருகனுக்குக் குறிப்பிடப் பட்டுள்ளன. குறட்பெயர்கள் பலவும் உள்ளன. அவற்றில் அறவாழி அந்தணன் என்ற பெயரும் உண்டு.
அருகன் பெயராக
                          அறவாழி அந்தணன் (திவாகரம்)
                          அருளாழிவேந்தன் (திவாகரம்)
                          அறவாழி வேந்தன் (பிங்கலம், சூடாமணி நிகண்டு)
                          அறவாழி அண்ணல் (கயாதரம்)
                          அறத்தினாழியன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          படையிலி (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          கொல்லாவேதன் (சூடாமணி நிகண்டு)
                          சாது (சூடாமணி நிகண்டு)
                          தருமராசன் (சூடாமணி நிகண்டு)
                          அருட்கொடையாளன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          அறத்தின் மன்னன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          ஆழியன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          கொல்லா மறையோன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          பொறையன் (தமிழ் உரிச்சொல் பனுவல்)
                          இதுவரை அருகனுக்கு அறவாழியந்தணன் என்ற பெயர் எந்தெந்த நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளன என்று பார்த்தோம்.
                          பிறநெறிக் கடவுளர்க்கு இந்தப் பெயர் எந்தெந்த நிகண்டுகளில் உள்ளதென்பதைக் காண்போம்.
சிவபெருமானுக்கு பொருந்துமா?                          
                          சிவபெருமான் குறித்து அறவாழி அந்தணன் என்ற பெயர் திவாகரத்தில் - ஒன்றுமேயில்லை.
                          ஆனால் அரவாபரணன், அழலாடி, அழலேந்தி, ஆனையுரித்தோன், ஈமத்தாடி, கபாலமூர்த்தி, கறைமிடற்று அண்ணல், சடையோன், சுடலையாடி, நாரிபாகன், நீறணிகடவுள், பரசுபாணி, பிறைசூடி, பினாகபபாணி, புலித்தோலுடையோன், பேயோடாடி, மழுவாளி என்ற நாமங்கள் வழங்கியதைக் குறிப்பிடுகின்றன. சிவனார் நெறியின் தத்துவத்தை உணர்த்தும் பெயர்களாக இவை இருக்கும் நிலையில், குறள் நெறிக்கு குறள் அதிகாரங்கள் பலவற்றிற்கு மாறானவை இப்பெயர்கள் என்பதும் வெள்ளிடைமலை. இதுபோன்றே பிற நிகண்டுகளிலும் பிறைசூடிய பெருமானுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன.
திருமாலுக்குப் பொருந்துமா?
                          சக்ராயுதன், ஆழிப்படை உடையவன் என திருமால், திவாகர நிகண்டில் குறிக்கப்படுவதால் அறவாழி அந்தணன் என்ற பெயரை இது குறிப்பிடாதோ என எண்ணுவது இயல்பே. திருமால் தன் கையில் தரித்திருப்பது அறவாழியன்று, அறத்தை நிலைநாட்ட பிறரைக் கொல்வதற்குத் தரித்த மறவாழி என்றே திருமாலின் திருத்தொண்டர்கள் கூறியுள்ளனர் என்பதை அறிஞர் மயிலை சீனி, வேங்கடசாமி அவர்கள் தமது அறவாழி அந்தணன் என்ற கட்டுரையில் தெளிவுபட விளக்கியுள்ளார்.
                          “அடலாழி ஏந்தி அசுரர் வன்குலம் வேர் மருங்கறுத்தாய்” என்றும், “அமர்கொள் ஆழி” என்றும், “கனலாழிப் படையுடையவன்” என்றும், “கொலை ஆழி” என்றும், “கூர் ஆழி” என்றுத் “கனலாழிப் படையுடையவன்” என்றும் “பேராழி கொண்ட பிரான்” என்றும் “ஊன்திகழ் நேமி” என்றும், “ஈர்க்கின்ற சக்கரத்தெம்மான்” என்றும் திருமாலின் ஆழி (சக்கரம்) படை என்றே வர்ணிக்கப்படுகிறது” என்பதை மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள். எனவே அறவாழி யந்தணன் என்ற பெயர் சிவபெருமானுக்குப் பொருந்தாமை போன்றே திருமாலுக்கும் பொருந்தாமை தெளிவாகிறதன்றோ? 
புத்த பிரானுக்குப் பொருந்துமா?
                          புத்த பிரானுக்கு நிகண்டுகளில் அறவாழியன் என்ற பெயரேதுமில்லை யெனினும் மணிமேகலைக் காப்பியத்தில் அறக்கதிராழியுருட்டுவோன் என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. புத்த தேவன் எனும் போதே அருள் வடிவம் தோன்றுவது குறித்து அருள் நெறி சுரக்கும் செல்வன், அருளிடுவோன், அருளின் படிவன், அறத்தின் வேந்தன், தருமன், தருமராசன் என நிகண்டுகள் போற்றுகின்றன. ஆனால் புலால் மறுத்தலை கொல்லாமையை, வினைக் கொள்கையைப் போற்றாமையால், குறள் நெறியும், குறளின் இறைவனது பெயர்களும் இப்பெருமானுக்குப் பொருந்தாமை வெள்ளிடைமலை.
                          எனவே, பழைய நிகண்டுகளில் குறள் வாழ்த்தும் இறைவனது பெயர்கள் அருகதேவனுக்குக் குறிக்கப்பட்டிருப்பதையும், இதே நிகண்டுகளில் குறள் கூறும் இறைவனது பெயர்கள் பிறகடவுளர்க்குக் குறிப்பிடப்படாமையும், அதுமட்டுமன்றிக் குறளின் நெறிக்கு மாறான பொருள் உடைய திருப்பெயர்கள் அருகனல்லா பிற கடவுளர்க்கு அக்காலத்திலேயே வழங்கி வந்துள்ளமையும் திருக்குறள் அருகநெறி நூல் என்பதற்கு அழுத்தமான சான்றாகும்.
                          திருக்குறள் கடவுள் வாழ்த்து அருகக் கடவுளைச் சார்ந்த தென்பதையும் மற்ற அதிகாரங்களில் உள்ளவை அருகநெறிகள் என்பதையும் விளக்கும் பொருட்டே இதர சமயங்களை ஒப்பிட வேண்டியதாயிற்று. இது தெளிவு கொள்ளவே யன்றிப் பிற சமயங்களையோ, பிற கடவுளர் களையோ குறை கூற அல்ல என்பதை உளத்தூய்மையோடு கூறுவதில் மனநிறைவேற்படுவது உண்மை.
                          இப்போது, அறவாழி அந்தணன், அறம் அருளியவன் என்பவை சமண சமய தமிழ், சமஸ்கிருத, பிராக்ருத இலக்கியங்களில், தத்துவ நூல்களில், சரளமாகக் கையாளப்பட்டுள்ளதை காணலாம்.
சீவக சிந்தாமணியில்;
                          ஆதிக்காலத்து அந்தணன் (சீவக. 366)
                          கொலையிலாழி வலனுயர்த்த குளிர் முக்குடையினிழலோய்நீ   (சீவக. 1244)
                          மறுவற வுணர்ந்தனை மலம் அறு திகிரியை (சீவக. 2563)
                          அறவாழி யண்ணல் இவனென்பர் (சீவக.1611)
                          அருமறை தாங்கியி அந்தணர் தாதையை (சீவக.2561)
                          தண்மதிபோல் நேமி அரண் உலகிற்கு ஆய அறிவரன் நீயே  (சீவக. 1246)
                          திருவறம் வளர்க (சீவக. இறுதி வாழ்த்து
                          ஆதிவேதம் பயந்தோய்நீ (சீவக. 1242)
                          உலகமிருள் கெடவிழிக்கும் ஒண்மணி அறவாழி 
                          அலகையிலாக் குணக்கடலை (சீவக. முக்தி 425)
சூளாமணியில்; 
                          ஆதிநாள் அறக்கதிர் ஆழி தாங்கிய சோதியான்                          (சூளா.மந்திர 147)
                          அழல் அணங்கு தாமரை ஓர் அருளாழி உடையகோன் (சூளா-1039)
                          ஆழி அறவரசே (சூளா-1913)
                          ஆர் அழல் அம்சோதி வாய்சூழ்ந்த அருள் ஆழியானை  (சூளா-1907)
                          ஓர் அருள் ஆழியை (சூளா-216)
                          அறவாழி (சூளா-156-158)
                          அருமறையை விரித்தாயை (சூளா-184)
                          விளியாத மெய்ப் பொருளை நீவிரித்தாள் (சூளா-1906)
                          ஊழி மூன்றாவது ஓய்ந்து இறுதி மன்னுயிர்
                          சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
                          ஏழ்உயர் உலகுடன்பரவ ஈண்டு அருள் 
                          ஆழியாங் கிழமையெம் அடிகள் தோன்றினார்  (சூளா394)
                          ஆதி பகவன் குறித்த அற்புத வர்ணனை). இதன் வரலாறு அருகநெறியாளரே அறிகுவர்.
                          அருள்புரி அழலஞ்சோதி ஆழியான் (சூளா.துறவு. (27))
                          அருளாழிமுன் செல்லப் பின் செல்வதென்னோ
                          வடிப்படாதாய் நின்ற வகன் ஞால முண்டோ (சூளா-துறவு-68)
                          தாமரையி னங்கணடி வைத்தருளு மாதியா யாழி
                          யறவரசே யென்று நின் னடிபணிவ தல்லால் (சூளா. துறவு 73)
                          பகைநாறும் அயிற் படைகள் பயிலாத திருமூர்த்தி (சூளா.183)
மேருமந்தர புராணத்தில்; 
                          அறவேந்தனே (மே.பு.634)
                          அறிவன் நீயே (மே.பு.999)
                          மறமிலிவிலாழியுடை மன்னவன் (மே.பு.1042)
                          சம்பவன் முன்பு நின்ற தருமச் சக்கரத்தினும்பர் (மே.பு.1189)
                          பெருமையொடு மங்கலங்களறவாழி (மே.பு.1195)
அப்பாண்டை நாதர் உலாவில்; 
                          சினதர்மசக்கரத்தன் (10)
                          அருட்கடலுமாயினோன் (19)
                          அருளாழியான் (24)
                          அறவாழியான் (24)
                          தருமக்கடலான் (58)
                          நன்மையறவாழி நடக்க (444)
                          அறவாழி வேந்தன் (635)
                          அறவாழி சேர்த்தீசன் (943)
                          அறவாழி முத்தன் (993)
                          படைவாளும் இலான்
திருமேற்றிசை அந்தாதியில்;
                          திருவருளாழி நடாத்தும் குடதிசைச் செங்கனி (347)
திருநறுங்கொண்டை மலைப்பதிகம்; 
                          இடர்திசை நீங்கநின்றார்க்கு அறமாயுதம் (151)
                          படைகளொன்றின்றி இருவினையெனும் பண்டை  முதுபகைபுறங் கண்டவன் 
திருக்கலம்பகத்தில்;
                          சயங்கொள் ஆழியங்கடவுளே (திருக்கல.35)
                          பேரறங்க ணேமி கொண்டு வென்ற சோதி யெங்களாதியே  (திருக்கல.24)
                          உலகமேழும் வந்திறைஞ்ச அருளாழி வலங்கொண்டு
                                                    ஏத்துஞ் சிகர மணிநீல வண்ண (திருக்கல.31)
திருநூற்றந்தாதியில்; 
                          அருளோடெழும் அறவாழி அப்பா (திருநூற்.5)
                          அற ஆழிகொண்டே வென்ற அந்தணனே (திருநூற்.27)
                          அருட்சக்கரம் ஏந்திய சங்கரன் (திருநூற்.67)
திருநறுங்கொண்டைத் தோத்திரமாலை-மந்திரப்பத்து; 
                          தரும சக்கரா (53)
                          தரும சாரணன் (60)
                          மறுவிலா அறவாழி அந்தணனே (68)
நீலகேசியில்;
                          உயிர்கட்கு இடர்தீர்த்து உயிர் இன்பம் ஆக்கும் சொல்லான் தருமச்சுடரான்
                          அங்கம் பயந்தான் அறைந்தசுதக்கடல் (நீல.660)
                          தீதுஇல் நன்னெறி பயந்து (நீல.155)
                          அங்க பூவமது அறைந்தாய் அறிவர்தம் அறிவர்க்கும் அறிவா  (நீல. 157)                                                     
                          அன்னான் பயந்த அறஆர் அமிர்து (நீல. 2)
                          அறங்கூர்மாரி பொழிந்தோய் (நீல.139)
திருவெம்பாவையில்;
                          பள்ளியுணர்ந்திலையோ பாவாய் நீ முன்வந்தென்
                          வள்ள லறவாழி நாதன் மலரடியை
உரைமேற்கோள்;
                          அருள்நெறி நடத்திய ஆதி தன் 
                          திருவடிபரவுதும் சித்தி பெறற் பொருட்டே (உ.மே.44)
                          ஈர்அறம் பயந்த ஓர் அருள் ஆழியை (உ.மே.11)
                          அறவாழியினான் (உ.மே.20)
                          அறவாழியனே (உ.மே.29)
                          படை ஒன்றிலான் (உ.மே.31)
                          அறப்புணையே புணையாக மறுகரைபோய்க் கரைஏறி
                          இறப்பு இலநின் அருள் புரிந்தாங்கு எமக்கு எல்லாம் அருளினையாய்
                          மறவாழி ஒளிமழுங்க மனையவர்க்கும் முனையவர்க்கும்
                          அறவாழி வலன்உயரி அருள் நெறியே அருளியோய்  (உ.மே. 138)
அறவாழியின் அமைப்பு;
                          கனல்வயிரம் குறடு ஆகக் கனல்பைம்பொன் சூட்டுஆக
                          இனமணி ஆரமா இயன்று இருள் இரிந்து ஓட
                          அந்தரத்து உருளும் நின்அலர்கதிர் அறவாழி
                          இந்திரனும் பணிந்து ஏத்த, இருவிசும்பில் திகழ்ந்தன்றே (உ.மே. 39)
                          அல்லல் நீக்கற்கு அறப்புணை ஆயினை (உ.மே. 37)
                          அருளினை நீ (உ.மே. 37)
                          நனைஇல்காட்சி நல்லறத்தலைவ (உ.மே.41)
                          அறமும் நீ (உ.மே.37)
                          அறவன்நீ (உ.மே.40)
சிலப்பதிகாரத்தில்;
                          அருண்முனி
                          அருளறம் பூண்டோன்
                          தரும முதல்வன்
                          தருமன்
யசோதர காவியத்தில்;
                          திருமொழி அருளும் தீர்த்தகரர்களே துயர்கள் தீர்ப்பர்  (ய.சோ.53)
                          தர்மசக்ரம் குறித்து கிரியாகலாபம்-நந்தீஸ்வரபக்தியில் (சமஸ்கிருதத்தில் ஆசார்யர் பூஜ்யபாதர் அருளியது)
                          ஸ்புரதர ஸஹஸ்ரருசிரம் விமலமஹா
                                                    ரத்ந கிரண நிகர பரீதம்
                          ப்ரஹஸித ஸஹஸ்ர கிரணத்யுதி மண்டல
                                                    மக்ரகாமி தர்மஸுசக்ரம் (கிரியாகலாபம் -192- நந்தீஸ்வர பக்தி) 
                          ஜோதி மயமானதும், ஆயிரம் ஆரக்கால்களை உடையதும், மனோகரமானதும், நிர்மலமானதுமான மிகச்சிறந்த மணிகளாலாம் வட்டைகளால் சூழ்ந்துள்ளதும். சூரியன் ஒளியை மிஞ்சத்தக்க காந்தியோடு விளங்குவதும், (சமவ சரணத்தின்)  நாற்புரமும் உள்ளனவுமாகிய சிறந்த தர்மசக்கரம் பகவான் முன் தொடர்ந்து செல்லும்.
இதுவே மேருமந்திரத்தில்;
                          சக்கரன் சாபம் போலத் தனுவில்லை யுமிழச் சென்னி
                          மிக்கமா மணிசெ யாரம் விளங்குமா யிரத்த தாகித்
                          திக்குலாம் பொழுது காத நான்கதாய்ச் செறிந்திருந்தால்
                          விற்கண்மூன்றாய அறப்பேராழி  தான் விளங்கு நின்றே  (மே.பு.1171)     
                          சமவசரணத்தில் மூன்று வில், உயரமுடைய அறவாழி அருகப்பெருமான் ஆங்காங்கே எழுந்தருளும் போது அவருக்கு முன்னே நான்குகாதம் என்னும் தொலைவில் செல்லும்.
அறவாழி அருளட்டும் 
(கிரியாகலாபம்-சாந்தி பக்தி-9)  
                          ஷேமம் சர்வப்ராஜாநாம் ப்ரபவது
                               ...........................................
                          ஜைநேந்த்ரம் தர்மசக்ரம் ப்ரபவது ஸததம்
                                                    ஸர்வ ஸெளக்ய ப்ரதாயி-
                          .................இவ்வுலக உயிர்களனைத்திற்கும்
இன்பத்தைத் தருகின்ற ஜிநேந்திரர்களின் அறவாழி எப்போதும் நிலைப்ப தாகுக.
                          தர்மசக்கரம். அருகத்பரமேஷ்டிக்கு வாலறிவு தோன்றிய உடன் ஏற்பட்ட 24 அதிசயங்களுள் ஒன்றாகும். சமவசரணத்தின் நாற்றிசைகளிலும், பூதங்களால் தரிக்கப்பட்ட ரத்ன மயமான தர்மசக்ரம் நான்கும் திசைக்கு ஒன்றாக விளங்கும். 
 -கிரியாகலாபம்.  
மஹாபுராணத்தில்
                          ஸ்ரீமதே ஸகலக்ஞான சாம்ராஜ்ய பதமீயுஷெ!
                          தர்மசக்ரப்ரதே பத்திரதே நம: சம்சார பீமஷெ!! 
 -மகாபுராணம்-கடவுள் வணக்கம். 
                          சகல ஐஸ்வர்யத்தோடும் கூடி கேவல ஞானப் பேரரசினைப் பெற்றவரும், பிறவித்துன்பத்தினை விலக்குபவரும் தர்மசக்ரத்தை உடையவரும் ஆகிய அருக பகவானை நான் வணங்குகிறேன்.
அமரசிம்மம் அருகன் நாமமாலை
                          அமரசிம்மம் அருகன்பேர்வழி ஸ்லோகத்தில் தர்மசக்ரம், அருள்சக்ரம், அசாதாரணசக்ரம், சித்த சக்ரம், சார்வசக்கரம் கூறப்பட்டுள்ளன.
மஹாபுராணத்தில் 
(மாமுனிவர் ஜினசேனாசாரியாரால் அருளப்பட்டது) 
                          சமஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்ட மஹாபுராணத்தில் அருகப்பெருமானைப் போற்றும் 1008 திருநாமங்கள் உள்ளன. இதில் 64 ஆவது திருநாமம் தர்மசக்ரினே, 840 ஆவது தர்மசக்ராயுதனே! 1008 ஆவது திருநாமம் தர்மசாம்ராஜ்ய நாயகன் என்பனவாகும்.
                          அறவாழி அந்தணன் அருகனைக் குறித்தது என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. இந்நூல் அறவாழி அந்தணன் என்ற பெயருடன் திருக்குறள் கடவுள் வாழ்த்து இறைவன் பெயர்கள் அனைத்தையும் ஆய்வதற்கு உருவாக்கப்படும் நூல் என்பதால் விரிவஞ்சி நிறைவு செய்யப்படுகிறது.
                          “தெருளாமையால் வினவற்பால தொன்றுண்டு
                                                    திருவடிகள் செம்பொனார் அரவிந்தம் ஏந்த
                          இருளாழி ஏழுலகும் சூமொழியின் மூழ்க
                                                    இமையாத ரெங்கண்ணின் இமையோர் வந்தேத்த
                          உருளாழியானும் ஒளிமணி முடிமேற் கைவைத்(து)
                                                    ஒருபாலில்வர, உலகம் நின்றுழைபதாக
                          அருளாழி முன்செல்லப் பின்செல்வகென்னோ?
                                                    அடிப்படாதாய் நின்ற அகன் ஞாலம் உண்டோ? 
 - சூளாமணி                                                        
              அறவாழி அந்தணன்தாள் போற்றி! போற்றி!
******************
தொடர்பு:   பேரா. Dr. கனக. அஜிததாஸ், M.Sc., M.Phil., D.H.Ed., Ph.D., (ajithadoss@gmail.com)

வானத்தில் ஒரு மௌனத் தாரகை - சுஜாதா சிறுகதை (1980)

 வானத்தில் ஒரு மௌனத் தாரகை

              - சுஜாதாவின் சிறுகதை, 1980   

 For the first time in four decades, Indian Air Force Captain Shubhanshu Shukla will journey to the International Space Station aboard a SpaceX rocket. ISRO has paid $ 60 million for this. 

 In 1980, Tamil writer Sujatha penned a short story envisioning Dhruva conducting an EVA (Extravehicular Activity) to repair an INSAT satellite. Dhruva, meaning 'stationary' like the Pole Star, reflects ancient Indian astronomy from Harappan times, which identified the 27/28 Lunar Mansions (Nakshatra) and influenced celestial observations in China and Mesopotamia. Ref.s given. 

 Having worked on Shuttle Missions, I’m thrilled to share this rare story by the celebrated author, accompanied by unique EVA mission images. Wishing India and Capt. S. Shukla triumph in their space endeavors! ~NG

வானத்தில் ஒரு மௌனத் தாரகை

              - சுஜாதாவின் சிறுகதை, 1980

காலையிலேயே போட்டோ எடுக்க வந்தார்கள். துருவா நளினியையும் வினோத்தையும் தொட்டுக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்க, ஸ்டில் காமிராக்கள் 'க்ளிக் க்ளிக் க்ளிக்' என்று பேசின. ஆர்க் விளக்கை ஒருத்தன் உயர்த்திப் பிடிக்க திரைப்படக் காமிராக்கள் விர்ர்ரின

"ஆல்ரைட், ஆல்ரைட், நீங்க போகலாம். அவருக்கு ஏகப்பட்ட வேலையிருக்கு" என்று நாராயண் ராவ் அதட்ட, மேஜைமேல் டெலிபோன் ஒலித்தது.

ராவ் சட்டென்று உஷாரானார். "ஷ்ஷ்" என்று மற்றவர்களை அதட்டினார். "எஸ் ஸார்! இருக்கார் ஸார் ! இதோ ஸார்! கூப்பிடறேன் ஸார்!" என்று டெலிபோனின் வாயைப் பொத்தி 'தலைவர்' என்றார். துருவா பாய்ந்து டெலிபோனை வாங்கிக்கொண்டான்.

"குட்மார்னிங் ஸார்! துருவா ஹியர்!"

தலைநகரிலிருந்து தலைவரின் குரல் துல்லியமாக ஒலித்தது. "குட்மார்னிங் துருவா! எப்படி இருக்கிறாய்?"

"மிகவும் சந்தோஷமாக! மிகவும் ஆர்வமாக!"

"எல்லாம் தயாரா?"

"தயார் ஸார்!"

"துருவா! இந்தத் தேசமே உன்னைப் பற்றிப் பெருமைப்படுகிறது."

"அதெல்லாம் பெரிய வார்த்தைகள். நான் என் கடமையைச் செய்கிறேன் ஸார்! கீழே நீங்கள் இருக்கும்வரை எனக்கு என்ன ஸார் கவலை?"

"உன் துணிச்சலுக்கும் இளமைக்கும் கட்டுப்பாடான மனத்திற்கும் நவீன இந்தியா அஞ்சலி செய்கிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தலைசிறந்த இந்தியர்களின் வரிசையில் நீ பிரதான இடம்பெறுவாய். நீ செய்வது ஒரு மகத்தான காரியம்!"

"உங்களைப் போன்ற சிறந்த தலைவரிடமிருந்து, இந்த நாட்டின் முதல் குடிமகனிடமிருந்து இந்தப் பாராட்டு வார்த்தைகளைப் பெற நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!"

"துருவா! உன் பிரயாணத்தின் ஒவ்வொரு கணத்தையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். உன் மனைவிக்கு என் நமஸ்காரங்கள். உன் மகனுக்கு என் அன்பு முத்தங்கள். ஆண்டவன் உன்னோடு இருக்கட்டும்!”

போனை வைத்தபோது துருவாவுக்குப் பெருமிதம் நெஞ்சு பூரா நிரம்பி வழிந்தது. தலைவர் ! அகில இந்தியாவையே அரசாளும் ஆட்டிப் படைக்கும் ஜெனரல் விக்ரம் என்னை மதித்து என் வீட்டு நம்பருக்கு டெலிபோன் செய்து, அன்பாக விசாரித்து, அவ்வளவு கீர்த்தி பெறுவதற்கு நான் என்னத்தைச் செய்யப்போகிறேன். கேவலம் ஒரு ஸாட்டிலைட்டை, செயற்கைக் கிரகத்தை மேலே சென்று பழுதுபார்க்கப் போகிறேன்.

"மிஸ்டர் துருவா, வாருங்கள்!" என்றார் நாராயண் ராவ். பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட பொதுஜனத் தொடர்பு ராவ் "டெலிவிஷனில் உலகப் பத்திரிகை நிருபர்களைச் சந்திக்கப் போகிறீர்கள். பதில்கள் ஜாக்கிரதையாகவே இருக்கட்டும். என்ன?"

"கவலைப்படாதீர்கள்."

அறைக்குள் நுழைந்தவுடன் மறுபடி, பளிச் பளிச் பளிச்... "மிஸ்டர் துருவா ! எப்படி இருக்கிங்க?"

"சந்தோஷமா!" அறையில் நூறு பேர் இருந்தார்கள்.

"நாளைக்குக் கிளம்பப் போகிறோமோ என்று உங்க மனசிலே கொஞ்சம்கூட ஒரு ஒரு..."

"பயமா? ம்ஹும்!"

"பயம் இல்லை! ஒருவிதமான பதட்டம்.?"

"பதட்டம்கூட இல்லை. ஒருவித எதிர்பார்ப்பினால் என் உடம்பு பூரா ஒரு மின்சாரம் மாதிரி உணர்கிறேன்."

"நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க நளினி?"

"எனக்குப் பயமாத்தான் இருக்குது. நல்லபடியா திரும்பி வந்து சேரணுமேன்னு கடவுளை வேண்டிக்கிட்டிருக்கேன்!"

ஹாரிஸன் ஃப்ரம் நியூயார்க் டைம்ஸ்!

"மிஸ்டர் துருவா நீங்க போகிற மிஷன் தோல்வி அடைவதற்கும் சாத்தியம் இருக்கிறது என்கிறார்களே?"

"இருக்கிறது. ஆனால் வெற்றி அடைய அதிகப்படியான சாத்தியம்?"

"அப்படித் தோல்வி அடைந்தால் நீங்க போய் வருவதே முழுக்க விரயமாகிவிடும். இல்லையா?"

கோபம் வந்தது. நாராயண் ராவ் சைகை செய்யச் சற்று அடக்கிக்கொண்டான். திமிர்! "மிஸ்டர் ஹாரிஸன்! 'இன்ஸாட் ஒன்பது' என்று இப்போது விண்வெளியில் எங்கள் செயற்கைக் கிரகம் ஒன்று பறக்கிறது. 36,000 கிலோ மீட்டரில். இதற்கு மொத்தம் இந்திய அரசாங்கம் செலவழித்தது இருபது கோடி ரூபாய். இருபத்து நாலாயிரம் டெலிபோன் இணைப்புகள். நான்கு டெலிவிஷன் இணைப்புகள்..."

ஹாரிஸன் "எல்லாம் தெரியும் எங்களுக்கு! பிரமாதமான ஸாட்டிலைட்தான். ஆனால், அது வேலை செய்தது..”

"பதினைந்து நாள்"-க்ராலி ஃப்ரம் டெய்லி டெலிகிராஃப் .

துருவாவுக்கு இப்போது சலிப்பு ஏற்பட்டது. இருந்தும் பொறுமை வேண்டும்!

"டெலிகமாண்டுகள் டெலிமெட்ரி மூலம் ஸாட்டிலைட் உயிருடன் இருப்பது தெரிகிறது. ஸோலர் பானல்களில் ஒன்று ஒரு தப்பான ஆணையை எங்கோ பெற்று, தன்னைத்தானே மூடிக்கொண்டு விட்டது..."

"எனவே வானத்தில் உலவும் மௌனத் தாரகையாகிவிட்டது."

"சுலபமாக என்ன தவறு நிகழ்ந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிகிறது. ஒரு மைக்ரோ ஸ்விட்சை அழுத்தி ஒரு ஓவர்ரைடு கொடுக்க வேண்டும். அஞ்சு நிமிஷ வேலை. ஆனால் 36,000 கி.மீ. தள்ளி இருக்கிறதே! ஸோ நியர் பட் ஸோ ஃபார்!" 

"இதற்குப் பதில் புதிய ஸாட்டிலைட்டையே நல்லதாக ஒன்று அனுப்பிவிடலாமே!"

"புதிய ஸாட்டிலைட் செய்வதற்கு மூன்று வருஷம் ஆகும். செலவு இருபத்திரண்டு கோடி ஆகும். இப்போது என்னை, ஒரு முழு இன்ஜினியரை அனுப்புவதற்கு... எவ்வளவு செலவு மிஸ்டர் ராவ்?"

"மூன்றரைக் கோடி."

"எனக்கு விஷயம் தெரியும்.எந்த இடத்தில் பழுது என்பதும் தெரியும். ஸாட்டிலைட்டிற்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்குச் சாத்தியக்கூறுகள் மிக அதிகம்."

"நீங்கள் ஓர் இன்ஜினியர். ராக்கெட் செலுத்தப் பயிற்சி பெற்றீர்கள். அதுபற்றி ஏதாவது...?”

"பயிற்சி பயிற்சி பயிற்சி! ஆறு மாதம் நெக்கு வாங்கிவிட்டார்கள். ஸிமுலேட்டரில், ஸென்ட்ரி ஃப்யூஜில், பற்பல ஜெட் விமானங்களில்..."

"தலைவர் உங்களிடம் என்ன சொன்னார்?"

"'உன்னால் எங்களுக்கு இப்பெருமை' என்றார். எனக்கு உடம்பெல்லாம் பூரித்தது... ஆண்டவன் உன்னோடு இருக்கட்டும் என்று ஆசி கூறினார்."

"ஆண்டவன் என்றா சொன்னார்?"

"ஆம்."

"தனியாகப் போகிறீர்களே, பயமாக இல்லை?" 

“இந்தக் கேள்வி மீண்டும் வருகிறது. ரேடியோ தொடர்பு எப்போதும் இருக்கிறது. டெலிவிஷன் இருக்கிறது. எப்போதும் நான் என் மனைவி மகனிடம் பேச முடியும். பூமித் தொடர்பு அறுகாது." 

"ஸாட்டிலைட்டை அணுகி ரிப்பேர் செய்கையில்?"

"அப்போதுகூட! தாய்க் கப்பலிலிருந்து நான் வெளியே வந்தாலும் ஸாட்டிலைட்டை அணுகும்போது ஒரு தொப்புள் கொடி போலத் தக்க இணைப்பு எப்போதும் இருக்கவே இருக்கும்." 

"தாங்க்ஸ் ஜென்டில்மென்!" என்று வெட்டினார் நாராயண் ராவ். 

நான்கு மணிக்கு லிஃப்ட் ஆஃப். ஒன்பது மணியிலிருந்தே ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. நளினிக்கும் வினோத்துக்கும் டாட்டா காட்டிவிட்டு காங் ப்ளாங்க்கில் நடந்தான். ராக்கெட்டைத் தழுவிக்கொண்டிருந்த எட்டு மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் நுழைந்தான். கண்ணாடி அறைக்குள் சென்று கல்யாண மாப்பிள்ளை போல் அவனை அலங்காரம் செய்ய மூன்று பேர் வந்தார்கள். கண்ணைப் பறிக்கும் வெண்மையில் ஸ்பேஸ் உடை அணிந்தான். அணிந்து அதன் அக்ரிலிக் மூடியிலிருந்து கண்சிமிட்டி, சிரித்தான். ஹெல்மட் தலைமேல் இந்தியச் சிங்கம் பொறித்திருந்தது. அதேபோல் புஜத்திலும். ஆக்ஸிஜன் இணைப்பு முதுகுப் பகுதியில். ஒரு குட்டி டிரான்ஸ்மிட்டர் இடதுகை விரல்களில். செயல்பாட்டில் சின்னச் சின்ன ராக்கெட் குழந்தைகளின் ப்ஸ்ஸ் சப்தம் கேட்க... ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாகப் பகுதி பகுதியாக சாதனங்கள் பொறுத்தப்பட்டு, ராக்கெட்டின் எட்டாவது மாடி உச்சிக்கு மிக மெதுவாகத் திறந்த லிஃப்ட்டில் சென்றான். கீழே டெக்னிஷியன்கள் பலர் அவனுக்குச் சந்தோஷத்துடன் சைகை செய்து விடைகொடுத்தார்கள்.

பம்பர வடிவத்தில் இருந்த உச்சிப் பகுதியில் ஒரு கதவுச் சுளையைத் திறந்து அவனை இறக்கினார்கள். மூடினார்கள். அவனைச் சுற்றிலும் ஒரே டயல்கள், ஸ்விட்சுகள், எண்கள், எழுத்துகள், விளக்குச் சிமிட்டல்கள், மெதுவான "வ்ரூம்.. .காரம்."

அந்தத் தனிமையில் வயிற்றில் சற்றுத் திகிலாக உணர்ந்தான். சற்றுதான்.

ஹம்ஸா !

அதுதான் அவன் செலுத்தப்போகும் கலத்தின் பெயர். இப்போது அவன் ஏற்பாடு செய்ய வேண்டியது அதிகமில்லை. எல்லாம் பிற்பாடுதான். அவனுக்குக் கீழே இருக்கும் ராட்சச மூன்று பகுதி ராக்கெட். தொண்ணூறு சதவிகிதம் பிரயாணத்தை அதுதான் பார்த்துக்கொள்ளப்போகிறது...

காதில் சரிபார்க்கும் சங்கேதங்கள் ஒவ்வொன்றாகக் கேட்டன.

செக் ஃப்யூல் ப்ரெஷர்.

செக் பெர்கஷன் ஸ்விட்ச்.

செக்

மூன்று மணி நேரமாகும். ஆயிரம் விஷயங்கள் பார்க்க வேண்டும்.

10. என் அருமை ஆண்டவனே!

9. எவ்வளவோ நாங்கள்

8. விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும்

7. உன் கருணையின்றி

6. நாங்கள் வெற்றி காண

5. முடியாது

4.திரும்பவும்

3. பத்திரமாய்

2. வந்து சேர அருளும்.

1. வரம் அருளும்.

திடுதிடுவென்று பூமி நடுங்கும் சப்தம். ஜன்னல்கள் அதிர ஏதோ ஒரு சோம்பேறி ராட்சசன் போலப் புறப்பட்டு வாலில் ஆரஞ்சு ஒளி, ஆரஞ்சுக்குள் வெண்மை நெருப்பு, அதற்குள் சிறிய வெண்மை... என்று நடுவானத்தில் ஒரு செங்குத்துக் கவிதை போல ராக்கெட் உயிர்த்து உயர்ந்தது!

துருவாவுக்கு ஜி சக்திகளின் அழுத்தம் வயிற்றைப் பந்தாக்கியது. இன்னும் இன்னும் இன்னும் சக்தி...

இன்னும் இன்னும் வேகம்!

இந்தியா முழுவதும் ரேடியோவிலும் டெலிவிஷனிலும் கேட்டு தெரிந்து கொண்டிருந்த மகத்தான அம்புப் பாய்ச்சல்!

பர்ஃபெக்ட்! ஆல் சிஸ்டம்ஸ் கோ !

பூமியின் ஆகர்ஷணச் சக்தியை மீறும்போது புதிதாகப் பிறந்தது போல உணர்ந்தான். உட்கார்ந்திருந்தும் உட்கார்ந்தது போலில்லாத பஞ்சு நிலை, கனவு மெத்தை நிலை ...

"ஹம்ஸா. கண்ட்ரோல்."

"கம் இன்."

"எப்படி?"

"எல்லாம் ஒழுங்காகச் செயல்படுகின்றன."

"வெரிகுட்."

"நீ மெதுவாக மெதுவாக இன்ஸாட்டை அணுகுகிறாய். நூறு மைல் இருக்கும்போது சொல்கிறேன்."

"அதுவரை ?"

“தூங்கு.”

"என் மனைவியோடு பேசலாமா ?"

"தாராளமாக சானல் தருகிறேன், இரு!"

"நளினி !"

"என்னங்க!”

"பார்த்தியா?”

"பார்த்தேங்க... அப்பா"

"ஹாய் வினோத்!"

"எவ்வளவு ஸ்பீட் போறீங்க?"

"பதினெட்டாயிரம் மைல்."

"நிறைய இல்லை?"

"ஸாரி த்ருவா, கட் பண்ண வேண்டியிருக்கிறது. தலைவர்."

"ஹலோ துருவா!"

"ஹலோ ஸார்!”

"எப்படி உணர்கிறாய்?”

"உலகத்தின் உச்சியில்!"

"எடையற்ற தன்மை எப்படி இருக்கிறது?"

"குளுகுளு என்கிறது. மிதக்கிற மாதிரி இருக்கிறது."

"ரொம்ப நன்றி துருவா. ஜெய்ஹிந்த்!"

அன்புள்ள கடவுளே! என்ன ஓர் அற்புதக் காட்சி. வானம் இவ்வளவு வெல்வெட் கருப்பா? அதில் பதிந்து பதிந்து இதோ எட்டிப் பிடிக்கிற மாதிரி இத்தனை நிறங்களா? பூமி விளிம்பில் இவ்வளவு வெளிச்ச வித்தியாசங்களா? அதோ ஆப்ரிக்கா. என் சுட்டு விரல் அளவு! இது இந்தியா. என் சுண்டுவிரல்! மேகங்களை இவ்வளவு மேலே இருந்து பார்ப்பதில் அந்தத் திட்டுகளின் பிசிறல். கடவுள் ஒரு மாடர்ன் ஆர்டிஸ்ட்!

கடவுள்! என்னை இவ்வளவு தூரம் கொண்டுவந்தவர் அவர்! என்னை அங்குக் கொண்டுசென்று கடமை முடிந்த பின் திரும்ப பத்திரமாக அழைத்துச் சென்று வீட்டுக்குச் சேர்ப்பிக்கப் போகிறவரும் அவரே !

இத்தனை உயரத்தில் இத்தனை விண்வெளி வீச்சில் துருவா தன் வீட்டில் ஓர் அறையில் ஒரு கட்டிலில் உட்கார்ந்துகொண்டு தன் கால் விரல்களைத் தொட்டுத் தொட்டு நளினி நகம் வெட்டும் அந்த இன்பமான 'சுருக்'கை நினைத்துப்பார்த்தான்.

"துருவா! ரெடியா?"

“ரெடி !”

"இன்னும் ஒரு நிமிஷத்தில் நீ இன்ஸாட் ஒன்பதைப் பார்ப்பாய்

"சரி!"

ஐம்பது செகண்டு, நாற்பத்தைந்து செகண்டு..

"கான்டாக்ட்!"

"மை காட்! தேர் ஷி இஸ்?"

"குட்! தெரிகிறதா?"

"நன்றாக."

"துருவா, ஸோலர் பானர்கள் எல்லாம் திறந்திருக்கின்றனவா?"

"ஒரு நிமிஷம். இல்லை. நான்கில் இரண்டுதான் திறந்துள்ளன. இரண்டு மூடியிருக்கின்றன. நாம் நினைத்தது சரியே. என் விரல்கள் துடிக்கின்றன, உடனே போய் அதைச் சரிப்படுத்த!”

அதோ அது!

அவன் கலத்தின் வேகம் குறையக் குறைய அருகே மிக அருகே தொட்டு முத்தம் கொடுக்கிற மாதிரி இன்ஸாட் மிதந்துகொண்டிருந்தது,

"துருவா உன் கலத்தைவிட்டு வெளியே வர ரெடியா?”

"ரெடி."

"படிப்பினை ஞாபகம் இருக்கிறதா?"

"ஒரு வரி விடாமல்."

"எங்கே சொல்லு!"

"முதலில் காரிலேட்டர் பட்டனை அழுத்த வேண்டும்."

“சரி...”

அடுக்கிக்கொண்டே சென்றான். ஒன்பது மாசப் படிப்பினை மறந்துவிட முடியுமா? அவன் செய்ய வேண்டியது மெதுவாக தன் தாய்க் கலத்தைவிட்டு வெளிவந்து, விண்ணில் மிதந்து இன்ஸாட்டை அணுகி, அதைச் சரி பார்த்து... சரி பார்க்க ஒன்பது நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு ஆக்ஸிஜன், அவ்வளவு உணவுமாத்திரைகள் உள்ளன.

ஒன்பது நாட்கள் ஆகாது. சரியாக ஐந்து நிமிஷ வேலை. இங்கிருந்தே தெரிந்தது. ஒரு பெர்க்கஷன் பித்தான் செயல்படாமல் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதை அழுத்தினால் போதும், உள்ளே இருக்கும் மருந்து வெடித்து பானல்கள் இரண்டும் விரிந்து கொண்டுவிடும்.

வேலை முடிந்ததும் தாய்க் கப்பலுக்குத் திரும்பி வந்து கதவை மூடிக்கொண்டால் அப்புறம் வீடு நோக்கிச் செல்லும் பறவைதான்!

"துருவா!"

"கம் இன்."

"தயார் என்றால் நீ வெளியே செல்லலாம். பெஸ்ட் ஆஃப் லக்!"

அவன் வலது கை விரல்கள் செயல்பட, மெதுவாகக் குடுவையின் கதவு திறக்க, துருவா ஓர் எம்பு எம்பி வெளியே மிதந்தான். தங்க நிறத் தொப்புள் கொடி அவனுடன் சுழன்று வந்தது. தாய். நவீன விஞ்ஞானத் தாய் ! அவளுடன் நான் இணைந்திருக்கும் கொடி இது. இது இருக்கும்வரை எனக்குத் தொடர்பு பற்றிக் கவலையே இல்லை. தாய்க் கப்பலிலிருந்து என் உடலைச் சுற்றி இணைக்கப் பட்டிருக்கும் அத்தனை சாதனங்களும் மின் சக்தி!

மெல்ல மெல்ல துருவா இன்ஸாட்டை அணுகினான். வினோத நடனம் அது. வெல்வெட் இருட்டில் எந்தவிதக் கட்டுப்பாடும் ஈர்ப்பும் கவர்ச்சியும் இன்றித் தனியாக மிகத் தனியாக மிதக்கும் உன்னத நிலை. துருவாவுக்கு உற்சாகம் தடம்புரண்டது. எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவன் நான்! இந்தக் காட்சியை அனுபவிப்பதற்கு.. ! முதலில் வந்த காரியத்தைப் பார். அப்புறம் காட்சிகள்...

துருவா தான் பழுது பார்க்கவேண்டிய இன்ஸாட் ஒன்பதின் அருகே வந்து... என்ன ஒரு வினோத சந்திப்பு இது ! பூமியில் பங்களூரில் ஏறக்குறைய ஒரு வருஷத்திற்கு முன் பார்த்தது. இப்போது 36,000 கிலோ மீட்டர் உயரத்தின் தனிமையில் ஒரு ஜியோ ஸ்டேஷனரி சந்திப்பு! விதி. நவீன விதி இருபத்தோராம் நூற்றாண்டு விதி.

மேன்யுல் ஓவர்ரைடு என்று இருக்கும் சாதனம் எங்கிருக்கிறது என்று தெரியும் துருவாவுக்கு. அதை அழுத்தினால் சரியாய்ப் போய்விடும். இங்கே வந்து ஒரு பட்டனை அழுத்த மூன்று கோடி ரூபாய்! மூன்று கோடி ரூபாய் சின்ன மீன். இது இருபது கோடி மீன்! இது செயல்பட்டால் நாட்டுக்கு எவ்வளவு லாபம்! இருபத்தி நான்காயிரம் இணைப்புகள்.

மெதுவாக ஜாக்கிரதையாக அதை அணுகி ஹாண்ட் செட்டைத் திறந்து அந்தச் சிறிய திறப்பில் விசையைச் செலுத்தி அந்தப் பட்டனை அழுத்த...

மௌனமாக ஆனால் வேகமாக அந்த ஸோலார் பானல்கள் விரிந்து திறந்துகொண்டன. அதன்மேல் சூரிய ஒளி பட்டு, புதிய சக்தி பெற்று, ஸாட்டிலைட்டின் பத்து மாத உறக்கம் கலைந்து அது செயல்பட...

பூமியில் கன்ட்ரோல் கேந்திரத்தில் திடுதிப்பென்று கைதட்டல் ஒலி கேட்டது. ப்ரொபசர் சர்மா தன் ப்ரொபசர்தனத்தை மறந்து வாயில் விரல் வைத்து உய் உய் என்று விசில் அடித்தார்...

இன்ஸாட் ஒன்பதுக்கு உயிர் வந்துவிட்டது. அதன் சர்வ சக்திகளும் பெற்று, அதன் சாட்சியாகப் பூமிக் கேந்திரத்தில் பற்பல வண்ண விளக்குகள் கண் சிமிட்ட ...

"ஹீரோ துருவா வாழ்க!"

"துருவா தி கிரேட் !"

" மன்னன்யா! ஒரு நிமிஷத்தில கண்டுபிடிச்சுட்டான் பாரு."

"துருவா!”

மௌனம்.

"துருவா ஃப்ரம் கன்ட்ரோல்!”

மௌனம். ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து கேட்கும் விந்தை மௌனம்.

 "துருவா ஃப்ரம் கண்ட்ரோல்! துருவா... துருவா!”

சர்மா வெடித்தார். "ட்ரை தி ஸ்டான்ட்பை சானல் ! ட்ரை வி எச் எஃப்! 

அந்த இடத்து உற்சாகம் அடங்கிப்போய்ச் சட்டென மௌனம். 

துருவா துருவா துருவா என்று ரேடியோ அலைகள் விண்வெளியில் ஆழப்பதிந்து தேடின.

அதே சமயம் துருவாவும் "கன்ட்ரோல். கன்ட்ரோல்" என்று கூவிக்கொண்டிருந்தான்.

ஏன் பதில் இல்லை? ஏன்? என்ன ஆயிற்று, இந்த மடையர்களுக்கு பதில் சொன்னால் என்னவாம்?

"கன்ட்ரோல், கன்ட்ரோல்!"

ஏன் பதில் இல்...

முதல் தடவையாக அதைப் பார்த்தான். கத்திக்குத்து போல வயிற்றில் உணர்ந்தான்.

தாய்க் கப்பலையும் தன்னையும் இணைக்கும் தங்க நிறக் கொடி அறுந்திருந்தது!

எப்படி? எப்படி இது சாத்தியம்?

ஸோலார் பானல்கள் திடுதிப்பென்று விரிந்து திறந்து கொண்டபோது... அந்த வேகத்தில் அந்தக் கூர்மையான முனைபட்டு அறுந்துபோயிருக்கிறது...

அறுந்தால் என்ன?

பூமியுடன் என் செய்தித் தொடர்புதானே அறுந்துவிட்டது! அதனால் என்ன? பேசாமல் மிதந்து தாய்க் கப்பலுக்குப் போய் விடலாம்.

அதோ தாய்க்கப்பல். அதோ தெரிகிறது! அதோ என் தாய்!

வெட்ட வெளியில் நீந்தி அதை அடைய வேண்டும், அவ்வளவுதானே?

அவன் கையைக் காலை உதைத்துக்கொள்ள, அவன் என்னதான் செய்தாலும் அவனுக்கும் தாய்க்கப்பலுக்கும் தூரம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. விண்வெளியின் வினோத பௌதிகத்தில் காற்றற்ற நியூட்டன் விதிகளின் ஆதிக்கத்தில் கையைக் காலை உதைத்து மெதுவாக மிக மெதுவாக தாய்க்கப்பலை அணுகினான்.

கிட்ட வந்ததும் அவனுக்குத் திகீர் என்று வயிற்றில் தீப்பற்றிக் கொண்டது.

அதன் சுளைக் கதவு மூடிக்கொண்டிருந்தது. அந்தக் கொடி இணைப்பு அறுந்ததில் ஏற்பட்ட குழப்பமான ஆணைகளில் கதவுமூடும் ஆணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டு...

அய்யோ!

நான் எப்படி உள்ளே நுழைவேன்? என்ன செய்வேன்? யாரைக் கூப்பிடுவேன்! ரேடியோத் தொடர்பு அற்று தாயின் மடிக்குத் திரும்ப முடியாமல் தனியாக மிகத் தனியாக அவன் சர்வ அங்கங்களும் சிலிர்க்க ஸ்பேஸ் உடைக்குள் குப்பென்று வியர்த்தது. மூளைக்குள் உஷ்ணம் பரவி முப்பத்தாறாயிரம் கிலோ மீட்டரில் மிதந்தான். 

துருவா ! துருவா! பயப்படாதே! முதலில் நீ சுதாரித்துக்கொள். என்ன ஆகிவிட்டது இப்போது?

அவர்கள் உன்னிடமிருந்து சென்ற பதினைந்து நிமிஷமாகச் செய்தி ஒலிக்கவில்லை என்றால் என்ன செய்வார்கள்? டெலிகமான்ட் மூலம் அந்தக் கதவைத் திறக்க முயற்சிப்பார்கள் ! அப்படி முடியவில்லை என்றால், ஒன்றுமே சாத்தியமில்லை என்றால், இன்னொரு ரிலீஃப் ராக்கெட் அனுப்புவார்கள்! பொறு பொறு!

எவ்வளவு நாளாகும்?

ஒன்பது நாள்.

ஒன்பது நாளைக்கு என்னிடம் முதுகில் ஆக்ஸிஜன் இருக்கிறது. உணவு மாத்திரைகள் இருக்கின்றன. மற்றொரு கலம் வந்து என்னைக் காப்பாற்றும்வரை நான் உயிர் வாழ்ந்தால் போதும்!

காத்திருக்க வேண்டும். பதறாதே! மறுபடி அந்தக் கதவை முயன்றுபார். முயற்சி முயற்சி. அவர்கள் உன்னை அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தானே நீ இந்தப் பிரயாணத்திற்கு ஒப்புக்கொண்டாய்?

ப்ரொபசர் சர்மாவின் அசகாய சூரர்கள் எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிடுவார்கள். நிச்சயம் அவர்கள் மாய வித்தைகளில் ஒன்றைச் செய்து மற்றொரு ராக்கெட் அனுப்பமாட்டார்களா?

தலைவர் என்னை எவ்வளவு விரும்புகிறார்! இந்நேரம் தலைவருக்குத் தகவல் தெரிந்திருக்கும்.

ப்ரொபசர் சர்மா! என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், துருவா திரும்ப வேண்டும் என்று அடித்துச் சொல்லிவிடுவார்!

******************************

பூமியில் கன்ட்ரோல் சென்டரிலிருந்து பத்திரிகை டெலிவிஷன் ஆசாமிகள் நீக்கப்பட்டார்கள். "அனாவசியக் கூட்டம் வேண்டாம். வெறும் கம்யூனிகேஷன் தொடர்பு சாதனத்தில் பழுது என்று நினைக்கிறோம். கூடிய விரைவில் துருவாவுடன் பேசலாம். பேசிவிடுவோம்! அதுவரை எங்களைத் தனியாகவிடுங்கள். விஞ்ஞானிகளுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் தொந்தரவு ஏதும் கூடாது. ப்ளீஸ்! வெளியே வெளியே !"

சர்மாவின் ஒரு புருவம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. ஒயர்லஸ் டெலிபோன் ஒலித்துக்கொண்டிருந்தது. தாய்க் கப்பலில் பொருந்தியிருந்த டெலிவிஷன் காமிராவின் மூலம் தெரிந்த பிம்பம் அவருக்குப் பிரமிப்பை அளித்தது. கதவு மூடியிருக்கிறது. கலம் காலியாக இருக்கிறது. எப்படிச் சாத்தியம்?'

துருவா இன்ஸாட்டைச் சரி பண்ணிவிட்டான். சரி பண்ணும்போது ஏதாவது விபத்து நிகழ்ந்து கொடி அறுந்திருக்குமோ? அதுதான். அதுதான் எந்தத் தொடர்பும் இல்லை! ஓ மை காட்! அப்படி என்றால்? துருவாவை எப்படிக் காப்பாற்றுவது?

"கதவைத் திறப்பதற்கு ஆணைகள் கொடு" என்று கதறினார்.

"முயன்று பார்த்துவிட்டோம் டாக்டர். ஆணைகளை எடுத்துக் கொள்ளமாட்டேன் என்கிறது."

"எல்லா விஞ்ஞானிகளையும் உடனே கூப்பிடுங்கள்."

"ஸார், தலைவர் ஜெனரல் விக்ரம்!" என்று அவர் அருகில் ஒரு டெலிபோனைக் காட்டினான் ஒருவன்.

அதை எடுத்து,

“எஸ் ஸார்... எஸ் ஸார். நாங்கள் எங்களால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறோம்... இன்னும் இல்லை... ஸாட்டிலைட் சரியாகி விட்டது. ஐந்து நிமிஷத்தில் சரிபண்ணிவிட்டான்!"

"நாங்கள் இப்போது கூடிப் பேசி முடிவெடுத்து அரை மணி நேரத்தில் உங்களுக்குத் தகவல் சொல்கிறோம் ஸார்... அவனால் இன்னும் ஒன்பது நாட்கள் பதினேழு மணி நேரம் உயிர் வாழ முடியும்."

டெலிபோனை வைத்துவிட்டு கான்ஃப்ரன்ஸ் அறைக்கு ஓடினார் சர்மா.

நீண்ட சதுர மேஜை. சுவரில் பற்பல ராக்கெட்டுகளின் படம்.  வரைபடங்கள். சாதனைப் பட்டியல்கள். சோதனைப் பட்டியல்கள்.

டாக்டர் சர்மா தன் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றார்.

"ஜெண்டில்மென் நாம் எதற்கு இங்குக் கூடியிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு கேள்வி, 'துருவாவை எப்படிக் காப்பாற்றுவது?' இப்போதுதான் ஜெனரல் என்னிடம் பேசினார். அவர் நம் பதிலுக்குக் காத்திருக்கிறார். டாக்டர் பிரகாஷ்?"

டாக்டர் பிரகாஷ் எழுந்து "டாக்டர் சர்மா கேட்டது ஒரே ஒரு கேள்வி. அதற்கு ஒரே ஒரு பதில்தான் இருக்க முடியும்.  அவனைக் காப்பாற்ற மற்றொரு ராக்கெட் அனுப்ப வேண்டும்."

அதன் முனையில் ?" "

"இருவருக்கான விண்வெளிக் கப்பல்."

"பரணி இரண்டா?"

"ஆம்."

“அது நம்மிடம் ஒன்றுதான் இருக்கிறது. அதுவும் சரியாக சோதிக்கப்படவில்லை.”

"பறக்கிறது அல்லவா?"

"பறக்கும். ஆனால் இன்னும் முற்றுப்பெறவில்லைங்களே !"

"என்ன முற்றுப்பெறவில்லை?”

"ரேடியேஷன் ப்ரூஃபிங்"

"பரவாயில்லை. இப்போது நாம் போராடுவது காற்றுடன். ஒரு முக்கியமான இந்தியனின் உயிரைக் காப்பாற்ற இருப்பது ஒரே ஒரு வழி. பரணியை அனுப்புவது!”

"டாக்டர் ஃபெர்னாண்டஸ்! எத்தனை நாளாகும் உங்களுக்கு ராக்கெட்டுகளைக் கிளப்ப?"

"ஏழு நாட்கள்."

"எக்ஸ்லண்ட் ஜெண்டில்மென்! இதில் நம்மிடம் எந்த அபிப்ராய பேதமும் இல்லையல்லவா?"

"துருவாவைக் காப்பாற்ற மற்றொரு ராக்கெட் செல்லும். அதன் முனையில் பரணி."

"யார் ஓட்டப்போகிறார்கள்?"

"எட்டுப் பேர் காத்திருக்கிறார்கள்."

'இருப்பதற்குள் சிறந்த ஆசாமியை அனுப்பலாம். போகும்போது ஒன்றியாகச் செலுத்த வேண்டும்."

"விங் கமாண்டர் ஜெயசீலன்!"

"வெரிகுட், நான் தலைவருக்குச் சொல்லிவிடுகிறேன். அவரிடமிருந்து அனுமதி வேண்டும்."

அந்தச் சிவப்பு டெலிபோனில் தலைவர் ஜெனரல் விக்ரமை மறுபடி அழைத்தார் டாக்டர் சர்மா.

"ஸார்! டாக்டர் சர்மா ஹியர்."

"எஸ் டாக்டர் சர்மா! துருவாவுடன் தொடர்பு ஏற்பட்டதா?"

"இல்லை. இன்னும் இல்லை."

"பின் என்ன செய்வதாக உத்தேசம்?"

"அவரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழி மற்றொரு ராக்கெட் அனுப்புவதுதான். இன்னும் எட்டு நாட்களில் அது சாத்தியம்!"

"வாட்? மற்றொரு ராக்கெட்டா?"

"ஆம். அதன் முனையில் பரணி என்னும் கலம் அமைத்து அதில் மற்றொரு விண்வெளி விமானியை அனுப்ப வேண்டும். பரணியில் இரண்டு பேர் உட்காரலாம்..!"

"பரணி! என்ன, அது புதுப் பெயர்?”

"இன்னும் இது முழுவதும் பரிசோதிக்கப்படாத கலம் "

"பறக்குமா? அல்லது நீங்கள் தொடர்ந்து அனுப்பும் டப்பாக்கள் போல ஏதாவது கோளாறு ஏற்பட்டுப் பாதியில் நின்றுபோய்ப் பரணியைக் காப்பாற்ற மற்றொரு தரணியை அனுப்ப வேண்டுமா?"

"அப்படி நடக்காது சார்." சர்மாவுக்குப் புருவங்கள் அதிகம் துடிக்க ஆரம்பித்தன.

“அப்படி நடக்காது என்று எப்படிச் சொல்ல முடியும் உங்களால்? முதலில் இருபது கோடி செலவழித்தோம். இன்ஸாட் ஒன்பது என்ன ஆச்சு? பதினைந்து நாள். பதினைந்தே நாள்! சரி! 'அதில் ஒரு சின்ன பழுது. ஒரு ஆளை அனுப்பினால் சரியாகிவிடும்' என்றீர்கள். மூணு கோடி செலவழித்து ஒரு ஆளை அனுப்பியாயிற்று. அதிலும் கோளாறு. இப்போது பரணி! இதற்கு எவ்வளவு செலவாகும்?"

"நான்கு கோடியாவது ஆகும் ஸார். துருவா சென்றதன் குறிக்கோள் நிறைவேறிவிட்டதல்லவா? இன்ஸாட் சரியாகிவிட்டது."

"சரியாகிவிட்டது. ஆனால் ஆள் திரும்பவில்லையே..."

"அது ஒரு அம்ப்லிக்கல் கார்டில் வெட்டு ஏற்பட்டு.."

"லுக் ப்ரொபசர்! உன் விஞ்ஞான வியாக்கியானத்தைக் கேட்டுக் கேட்டு அலுத்துப்போய்விட்டது. ஸாட்டிலைட் சரியாகிவிட்டது. நிறைய டெலிவிஷன் டெலிபோன் இணைப்புகள் ஏற்பட்டுவிட்டன. ரொம்ப நல்லது. துருவாவை அனுப்பிய காரியம் நிறைவேறிவிட்டது. சரி அவ்வளவுதான்! விட்டுவிடுங்கள்!"

"ஸார்! துருவா?" என்றார் அதிர்ந்து.

"துருவா அங்கேயே இருக்கட்டும். இன்னொரு நாலு கோடி செலவழித்து அவனை நம்மால் மீட்க முடியாது. மிக அதிகச் செலவு. அவன் சென்ற காரியம் நடந்துவிட்டது."

"ஸார் இது அநியாயம். மனிதத்தன்மை அற்ற செயல். தப்பாக ஏதாவது ஆகிவிட்டால் நாம் எப்படியாவது அவனைக் காப்பாற்றுவோம் என்கிற நம்பிக்கையில்தான் துருவா சென்றிருக்கிறான். நம்பிக்கை மோசடி!"

"அந்த மாதிரி பொதுப் பணத்தை விஞ்ஞான முன்னேற்றம் என்று செலவழித்து வார்த்தைகளை வைத்து ஏமாற்றுவது எவ்வளவு நியாயம்? எவ்வளவு மனிதத்தனம்? எவ்வளவு நம்பிக்கைக்குரிய காரியம்?"

"ஸார் அவன் ஒண்டியாக அங்கே சுற்றிக்கொண்டிருக்கிறான்." 

“சுற்றட்டும்.”

"நாம் அவனுக்கு உதவி அனுப்பப் போகிறோம் என்று எதிர்பார்த்து ஆவலுடன்...” 

"எதிர்பார்க்கட்டும் ! ப்ரொபசர், இந்த நாடே என்னை எதிர்பார்த்து இருக்கிறது. நூறு கோடி மக்கள் ! அவர்களில் இன்னும் எவ்வளவு வறுமை, எவ்வளவு ஏழ்மை தெரியுமா ? அரசியல்வாதிகள் சென்ற இருபது வருஷங்களாக நாசம் பண்ணி வைத்துவிட்டுப் போன இந்த நாட்டை எடுத்து நடத்தி ஏதோ ஒப்பேற்றி வைத்திருக்கிறேன். இப்போதுதான் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறோம். இருந்தும் வெட்டிச் செலவு இரட்டித்திருக்கிறது. கம்யூனிகேஷன் முக்கியம். ஒப்புக்கொள் கிறேன். 24,000 இணைப்புகள் முக்கியம். நீங்கள் தரப்போகும் டெலிவிஷன் இணைப்புகள் முக்கியம். எல்லாம் எனக்குத் தேவை. கல்விக்கு, பிரச்சாரத்திற்கு, சமூக மாற்றத்திற்கு. ஆனால் அந்தத் துருவா? அவன் இப்போது எனக்கு முக்கியமில்லை. அவன் நாட்டுக்குச் செய்ய வேண்டியதைச் செய்தாகிவிட்டது. இனி அவனுக்காக நான்கு கோடி செலவழித்தால் இந்த ஊதாரித்தனத்தினால் சோறு கிடைக்காமல் கீழே இறக்கப்போகும் இந்தியர்களுக்கு யார் பொறுப்பு? எனவே, துருவா சுற்றட்டும்! ஒன்பது நாளோ பத்து நாளோ சுற்றிவிட்டு இறந்துபோகட்டும்! அவனுக்கு எல்லா மரியாதைகளும் செய்வோம். அவன் மனைவிக்கு பென்ஷன் அளிப்போம். மகனுக்கு நல்ல கல்வி தருவோம். அவன் பெயரில் ஒரு நினைவுச்சின்னம் அமைப்போம். ஒரு தெருவுக்குப் பெயரிடுவோம். அவ்வளவுதான். கேட்கிறதா? அதற்குமேல் ஒன்றும் கிடையாது."

ஸ்தம்பித்த ப்ரொபசர் சர்மா, "ஸார் மன்னியுங்கள். நான் உங்களுடன் உடன்படவில்லை."

“உங்கள் துரதிருஷ்டம் ப்ரொபசர்!"

"நான் இந்த நிமிஷமே ராஜினாமா செய்கிறேன்."

"சந்தோஷம். இந்த நிமிஷமே உங்களைக் கைது செய்வதற்கு ஏற்பாடு செய்கிறேன். ஜெய்ஹிந்த்!"

*****************

"அம்மா! அப்பா எப்பம்மா திரும்பி வருவா?"

"வினோத் தொந்தரவு செய்யாதே."

நளினி நடுங்கும் விரல்களால் இருபதாவது முறையாக ஸ்பேஸ் நிலையத்திற்கு டெலிபோன் செய்தாள்.

ஊம் ஊம் ஊம் என்று பிஸி டோன் நளினிக்குப் புரியவில்லை.

ஏன் டெலிவிஷனில் நிகழ்ச்சியை மாற்றிவிட்டார்கள்?

ஏன் விண்வெளிக் கேந்திரத்துடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை?

"அம்மா, அப்பா எப்பப் பேசுவா ? எப்ப வருவா ?"

"வந்துருவார்! வந்துருவார்!”

**********

முப்பத்தாறாயிரம் கிலோ மீட்டரில் துருவா சுற்றிக்கொண்டிருந்தான். ஒன்பதாவது உணவு மாத்திரையை விழுங்கினான். மெதுவாக மூச்சுவிடு. பிராணவாயுவை விரயம் செய்யாதே. வந்துவிடுவார்கள். இன்னும் ஒன்பது நாள்! நிச்சயம் வந்துவிடுவார்கள்!

                                                                            - 1980


ரெடியா கலாம் ? –சுஜாதா (with an English translation)

இன்று (23-4-2025) உலகப் புத்தக தினம்! இருவரும் புஸ்தகப் பிரியர்கள். சேர்ந்து புத்தகம் எழுதுவதாக இருந்தது. 

ரெடியா கலாம் ? –சுஜாதா

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் (சென் ஜோசப்) பி.எஸ்ஸி. படிப்பில் என் வகுப்புத் தோழர். அந்தக் கல்லூரியில் மதிய இடைவேளைகளில் லாலி ஹால் என்னும் பெரிய அரங்கத்தில் பெல் அடிக்கும் வரை அரட்டையடித்துக் கொண்டிருப்போம். அப்போதிலிருந்தே அப்துல் கலாமை எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதிகம் பேச மாட்டார். ஏதாவது கலாட்டா செய்தால் சிரித்து மழுப்பிவிடுவார். எங்களுடன் சினிமாவுக்கெல்லாம் வரமாட்டார்.

பி.எஸ்ஸி. படிப்புக்குப் பிறகு நான் எம்.ஐ.டி-யில் எலெக்ட்ரானிக்ஸ் சேர்ந்தபோது அதே வருடம் அவர் ஏரோநாட்டிக்ஸில் சேர்ந்தார். இருவருக்கும் பொதுவாக இருந்த தமிழ் ஆர்வத்தால் அடிக்கடி சந்தித்துப்  பேசியது நினைவிருக்கிறது. பாரதி பாடல்களிலும் திருக்குறளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அப்போதே அவருக்கு விமான இயல், ராக்கெட்ரி போன்ற துறைகளில் எதையாவது நடைமுறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததை அறிய முடிந்தது. எம்.ஐ.டி-யின் ஜெர்மானிய ப்ரொபசர் ரெபந்தின், பேராசிரியர் பண்டாலே போன்றவர்கள் வழிகாட்ட (நாட்டிலேயே முதன் முதலாக என்று எண்ணுகிறேன்), ஒரு கிளைடர் என்னும் எஞ்சின் இல்லாத விமானத்தை செய்து முடித்தார்கள். அதை மீனம்பாக்கத்துக்கு பார்ட் பார்ட்டாக கழற்றி எடுத்துச் சென்று மறுபடி பூட்டி ‘விஞ்ச்’சின் மூலம் இழுத்து காத்தாடி போல உயர்த்த, அது தர்மலை (உஷ்ணக் காற்றைப்) பிடித்துக் கொண்டு பறந்தபோது கல்லூரியில் நாங்கள் அனைவரும் பெருமிதத்தில் பறந்தோம். கலாம் அதில் பங்கு வகித்தார்.

எம்.ஐ.டி-யில் இயற்பியல் பேராசிரியர் ராகவாச்சாரி, தமிழில் ஈடுபாடு உள்ளவர். அவர், தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு போட்டி வைத்தார். நானும் கலாமும் அதில் கலந்து கொண்டோம். கலாம் எழுதிய கட்டுரை ‘ஆகாய விமானம் கட்டுவோம்‘ என்பது. நான் எழுதியது ‘அனந்தம்‘ என்னும் Infinity Mathematics பற்றிய கட்டுரை. கலாமுக்குப் பரிசு கிடைத்தது. எழுதுவதுடன் நிறுத்தி விடவில்லை. பிற்காலத்தில் விமானம் என்ன, ராக்கெட்டே கட்டி முடித்தார்.

எம்.ஐ.டி-க்குப் பின் சில வருடங்கள் அவருடன் தொடர்பு இல்லை. இடைவருடங்களில் விக்ரம் சாராபாய் போன்றவர்களின் கண்காணிப்பில் அவர் வளர்ந்திருக்கிறார். நாசாவில் பயிற்சி பெற்றிருக்கிறார். கலாமை நான் பாரத் எலெக்ட்ரானிக்ஸில் சேர்ந்ததும் மீண்டும் வேலை தொடர்பாக சந்திக்க வாய்ப்புக்கள் கிடைத்தன. அவர் ஐ.எஸ்.ஆர்.ஓ-வின் ‘எஸ்.எல்.வி’ போன்ற ராக்கெட்டுகளின் வடிவமைப்பில் பங்கு கொண்டிருந்தார். அப்போதே கடினமான உழைப்பின் அடையாளங்கள் தெரிந்தன. கலாம், அரசாங்க ஏணியில் விரைவாக உயர்வார் என்பதை சுற்றுப்பட்டவர்கள் அப்போதே சொன்னார்கள். பின்னர் அவர் ஸ்பேஸ் டிபார்ட்மெண்டிலிருந்த ஐதராபாத் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று இந்திய அரசின் ‘ப்ருத்வி’, ‘அக்னி’ ‘ஆகாஷ்’, ‘நாக்’ போன்ற ஏவுகணைகளின் வடிவமைப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அதன்பின் டெல்லியில் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அரசின் மிகமிக தாமதமாகிவிட்ட எல்.சி.ஏ. விமானத்தை ஹாங்கரைவிட்டு வெளியே இழுத்து வந்து பறக்கவைத்ததில் கலாமின் பங்கு கணிசமானது.

எங்களுடன் அந்த பாட்ச்சில் எம்.ஐ.டி-யில் படித்த மற்றவர்களுடன் ஒப்பிட்டால் கலாமின் வளர்ச்சி பன்மடங்கானது. நாங்கள் யாரும் ‘பாரத ரத்னா’ ரேஞ்சுக்கு உயரவில்லை. கலாமின் வெற்றிக்கு முக்கியக் காரணம், செய்யும் தொழில் மேல் பக்தியும் அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும்தான்.

கலாம், டி.ஆர்.டி.ஓ-வில் இருந்தபோது  அவர் நடத்திய   ரெவ்யூ மீட்டிங்குகளில் கலந்து கொண்டிருக்கிறேன். மிகச் சுருக்கமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காரியம் நடந்ததா என்று அந்தந்த ப்ராஜெக்ட் லீடரைக் கேட்பார். தாமதமானால் கோபித்துக்கொள்ளவே மாட்டார். சத்தம் போட மாட்டார். எப்படியோ அவரிடம் கொடுத்த வாக்குத் தவறுவதில் சங்கடத்தை உண்டு பண்ணுவார். அவரே அவ்வளவு கடுமையாக 24/7/365 என்று வேலை செய்யும்போது மற்றவர்கள் அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது கட்டாயமாகியது. Leading by example.

அவருடைய சொந்தத் தேவைகள் எளிமையானவை. பிரம்மச்சாரி. சைவ உணவு. எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. இதனுடன் ஆதாரமான முஸ்லீமின் நல்லொழுக்க குணங்களும் சேர்ந்து அவரை அத்தனை பெரிய பதவியின் சபலங்களிலிருந்து வெகு தூரம் தள்ளிவைத்தன. தெஹல்கா டேப்களில் கலாம் பெரிய இடத்து லஞ்சங்களுக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

ஒரு சம்பவம் எனக்குத் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஐதராபாத்தில் அவருடன் ஒரு மீட்டிங் சென்றிருந்தபோது சில ரஷ்ய தொழில்நுட்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு பஞ்சாரா ஓட்டலில் ஒரு டின்னர் இருந்தது. என்னையும் அழைத்திருந்தார். ரஷ்யர்கள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மகிழ்ச்சியில் இருந்தனர். கலாம் கையில் ஒரு வோட்காவைத் திணித்து வற்புறுத்தினார்கள். கலாம் எந்தவித லாகிரிப் பழக்கமும் இல்லாதவர். சங்கடத்துடன் அவசரமாக என்னை அணுகி ‘கையில என்ன?’ என்றார். ‘வாட்டர்.. ஜஸ்ட் வாட்டர் கலாம்’ என்றேன். ‘கொண்டா’ என்றார். நான் வைத்துக் கொண்டிருந்த கிளாசை மின்னல் வேகத்தில் பிடுங்கிக் கொண்டு வோட்கா கிளாசை என் கையில் திணித்தார்.

‘சாப்பிட மாட்டேன்னு சொன்னா அவங்களுக்குப் புரிய மாட்டேங்குதுய்யா…’ சற்று நேரத்தில் ‘சியர்ஸ்’ என்று வோட்கா கிளாஸ்களுடன் கலாமின் தண்ணீர் கிளாஸும் சேர்ந்து க்ளிங்கியது.

கலாமும் நானும் இணைந்து ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருக்கிறோம். இந்திய ராக்கெட் இயல் பற்றித் திப்புசுல்தான் காலத்திலிருந்து ஆரம்பித்து எழுதலாம் என்றார். ‘நான் ரெடி…நீங்க ரெடியா கலாம்?’ என்று எப்போது பார்த்தாலும் கேட்பேன். ‘இதோ வந்து விடுகிறேன்…அடுத்த மாதம் துவக்கிடலாம்யா’ என்பார்.

இப்போது அவர் ஓய்வெடுத்த பின் அந்தப் புத்தகத்தை எழுதிவிடுவார் என்று எண்ணுகிறேன். இந்திய அரசும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அரிமா ரோட்டரி சங்கங்களும் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் அவரை விட்டு வைத்தால்!

------------------

What made Kalam great: In the words of his classmate Sujatha

Hindustan Times, Jul 31, 2015. Translated from Tamil by N. Madhavan

(The following is a translation of a piece by celebrated Tamil writer, the late S Rangarajan, who wrote under the pseudonym Sujatha – after his wife. “Sujatha” (https://en.wikipedia.org/wiki/Sujatha_Rangarajan) was a classmate of A.P.J Abdul Kalam through their university years and is also the inventor of the electronic voting machine for Bharat Electronics Ltd, where he worked, apart from being a script writer for hit movies by Tamil film maker Mani Rathnam. This piece was written before Kalam became the President of India)

APJ Abdul Kalam was my classmate in the BSc course at Trichy’s St Joseph’s College. During lunch breaks in the big assembly hall, we used to banter until the bell rang for the lectures. I remember him from those times. He would not talk much then, and if someone poked fun, he would gently laugh it off. And he would not come with the rest of us to watch movies.

After our BSc,, when I joined the Madras Institute of Technology to study electronics, I saw him join the aeronautics course in the same year. We both shared a common passion for Tamil and I recall our frequent meetings on that count. I recall his interest in the songs of Subramania Bharathi (nationalist poet) and Tirukkural (Tirvalluvar’s omnibus of couplets). Right at that stage, it was clear that he wanted to accomplish something practical in the field of aeronautics or rocket science. Our professors (one German, one Indian) showed the way – and I think it was the first time in India. They made an engineless-glider and took it to the Meenambakkam airport – part by part – and put it all together again. Then they used a winch to pull it and hoisted it like a kite in the sky. It caught the hot winds and soared. And so did our feelings in the college. Kalam played a role in that.

Professor Raghavachari, who taught us physics, was passionate about Tamil. He held a competition that invited essays in Tamil on science. Kalam and I took part, of course. Kalam’s essay was titled “We will build a plane”. Mine was on Infinity Mathematics, titled “Anantham.” He got the prize.

Kalam did not stop with his writing. Forget the plane. He built a rocket!

I lost touch with him for a few years after our MIT days. In the interval, he grew up under the supervision of figures such as Vikram Sarabhai, training in NASA. After I joined Bharat Electronics Ltd, I found opportunity to meet him on many counts for official work. He was a part of ISRO’s SLV rocket project. I could now see strong signs of hard work. There were people saying right then that he was destined to climb the ladder in the government hierarchy. Later, he moved to become the head of the DRDO (Defence Research and Development Organisation) at Hyderabad in the Department of Space. He successfully accomplished a series of missile projects: Prithvi, Agni, Akash, Nag et al. Then he became advisor to the prime minister and played a significant role in the stalled light commercial aircraft (LCA) project, pulling it finally out of the hangar and actually making it fly.

If I were to look back and compare ourselves with our batch mate, Kalam’s rise is manifold. None of us quite rose to become a Bharat Ratna. The main reason for his success was his dedication towards work, tireless labour and self-confidence.

When he was in the DRDO, I have taken part in his review meetings – and they were brief. He would ask a project head if a certain task was done. If it was delayed he never got upset. No shouting – but somehow he would make the person responsible for missing the deadline squirm in discomfort. When he was working 24/7/365, others were compelled to match up. He led by example.

His personal needs were few. He was a bachelor and a vegetarian with no “bad” habits. To top this he had a devout Muslim’s sense of good conduct. These kept him away from the temptations of a big office. In all of Tehelka’s tapes that exposed doings inside the government, he came out as a figure who stood in the way of corruption in high places.

I particularly recall one incident. When I went to Hyderabad for a meeting with him, some Russian technicians were visiting and there was a dinner at the Taj Banjara. I was invited as well. The Russians were gloating in the joy of having signed an agreement and forced a glass of vodka on Kalam, who avoided any intoxicant. He approached me quickly and asked in an embarrassed tone, “What’s that in your hand?”.

“Water. Ice water, Kalam,” I replied.

“Give it to me,” he said.

In a flash he had taken my glass and thrust the vodka glass into my unsuspecting hands.

“Those guys simply don’t understand that I don’t drink,” he said.

In a while I heard them say “Cheers” – and a glass of ice water went up with the vodkas!

Kalam and I plan to write a book together. He said we could do one on India’s rocket science since the times of Tipu Sultan. “I am ready, Kalam. Are you?” I would ask him. “I am almost ready. Let us start next month,” he would say – everytime.

Now that he has retired, I expect him to write it – if only the Indian government, US universities, colleges, Lions and Rotary clubs, schools and social organizations would leave him alone!

Translated by N. Madhavan

From Kattradhum Pettradhum (The Learned & The Received), a collection of Sujatha’s writings, published by Ananda Vikatan Publications.


Indus Makara Crocodile sign in Stone Bangles (Mohenjo Daro) and in a Rakhigarhi seal

 Indus Makara Crocodile sign in Stone Bangles (Mohenjo Daro) and in a Rakhigarhi seal

------------------------------------------------------------------------------------

There is an important Crocodile "Makara Viṭaṅkar" sign in the Indus script. It represents the Crocodile of the Sky "the Pole Star". His spouse is the Earth goddess "Kolli/Koṟṟavai" with Tiger or Blackbuck as her symbol. Stone bangles were a specialty of the Indus civilization. From Mohenjo Daro, two stone bangles have the Makara sign, at the right most position.  Source: https://x.com/Vritrahan2014/status/1453705462612852740









.




Mohenjo Daro bangle (stoneware). 3 signs (a) crab (b) man with javelin (c) makara (L to R).
A bangle from Mohenjo Daro, Sindh with three characters of Sarasvati-Sindhu/ Harappan Script on it. A rare & beautiful find. Should be of Integration Harappan period ~2800-2000 B.C.E. Bangles are still popular among Hindus of the subcontinent. © Irshad Ali Solangi
The bangle below shows two right most signs: a man, Makara.


IVC religion in Iron Age Tamil Nadu:
Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai. https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Indus Makara sign variants (A. Parpola)



Indus Creation Mythology in the Iron Age Tamil Nadu:
https://cenkantal.medium.com/indus-creation-mythology-in-the-iron-age-tamil-nadu-e4834c8ecbd7
This year (2024) excavations by Dr. S. K. Manjul's team have yielded a small seal of the Harappans from Rakhigarhi. It shows a Sindh wild goat (Sindh ibex = Capra aegagrus blythii) or a Himalayan ibex with a single sign of the Indus script above the animal. The sign is the Makara Viṭaṅkar sign. A very important find.




https://www.induscaravan.com/blog/sindh-ibex-hingol-national-park/

https://www.wilddocu.de/sindh-wild-goat-capra-aegagrus-blythi/

https://link.springer.com/article/10.1007/s10344-024-01776-5