ஹூஸ்டனில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு - கனலி (Tamil professor at UH, USA)

ஹூஸ்டனில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு

Govt. of India has established the ICCR Chair of Indian Studies at University of Houston. The first visiting professor is Dr. T. Vijayalakshmi, Professor of Tamil, University of Kerala.
https://www.uh.edu/class/news/archive/2023/may/class-welcomes-visiting-professor-and-first-iccr-chair-of-indian-studies-to-promote-cultural-exchange/

https://www.whitehouse.gov/briefing-room/statements-releases/2023/06/22/joint-statement-from-the-united-states-and-india/
"56. The Leaders welcomed the establishment of the Tamil Studies Chair at the University of Houston and reinstating the Vivekananda Chair at the University of Chicago to further research and teaching of India’s history and culture."

https://twitter.com/ANI/status/1672400408722153472
"This is the best time to invest as much as possible in India. The research centre of Google's AI in India will work on more than 100 languages. With the help of the Indian Govt, Tamil Studies chair will be established here at University of Houston" Indian PM

India is funding the establishment of a Tamil Studies Chair at the University of Houston.
https://twitter.com/nsitharamanoffc/status/1672945593831034883
 

பேரா. த. விஜயலட்சுமி தமிழ்ப் புத்தாண்டு பற்றிய நல்ல கவிதை எழுதியுள்ளார்:

ஹூஸ்டனில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு
============================

மழைக்கால இரவின் சிலிர்ப்பு
மரங்களின் இலைகளில் .
அடித்துச் செல்லப்பட்ட வருட
அழுக்குகளின் எச்சங்கள்
ஓடை இடுக்குகளில்.

கார்மேகத்தை விரட்டிய களிப்பில்
வெள்ளை மேக வீரர் கூட்டம்
கண்ணாமூச்சியாடி
சூரியன் வரவு.

மழை ஓய்ந்ததின் மகிழ்ச்சியில்
வானம் எங்கும் விமானங்கள்.
சக்கரத்தைக் களைந்து
அவசரத்தைப் பூண்ட வாகனங்கள்.

மழைக்கு எதிராய் மாநாடு நடத்தும்
மின் கம்பி பறவைக் கூட்டங்கள்.
மழைக்கு நன்றி சொல்லி  
ஓக்கு மரக் கொட்டைகள் பொறுக்கும் அணில் பிள்ளைகள்.

ஆமையாய் நகரும்
சரக்குப் புகைவண்டிகள்.
அடிவானத்தில் ஓவியமாய்
பரவும் ஆலைப் புகைமூட்டங்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கண்ணில் படாத மனிதர்கள்.
கார்களாக மட்டும் தென்படும் நடமாட்டம்.

மனிதர்கள் நிறைந்த குடியிருப்பு;
மயான அமைதி நிலை நிற்பு.
என்றும் இல்லாமல் இன்று..... தூரத்தில்...... யார் அது.?

பயணக் களைப்பு முகத்தில்....
ஓ......இது அரை நாள் தாமதித்து
அமெரிக்கா வந்த சித்திரைப் பெண்ணா?
தாமதிப்பினும் தலைகாட்டிய மகிழ்ச்சியில் தமிழர்...

கோவில் கொண்டாட்டங்களையும்
மாலை மரியாதைகளையும்
பொங்கல் ருசிகளையும்
கை நீட்டக் களிப்புகளையும்

நினைவுக் குவியலில் தோண்டி எடுத்து
துடைத்துக் கழுவி தேனொழுகப் பிள்ளைகளிடம்
அசைபோடும் அப்பாக்கள்...
அறுபட்ட கழுத்தை
அசையாமல் பிடித்துப் பிள்ளைகள்.

ஜிபே கை நீட்டங்கள்
அலையடித்து கோவில்கள்
ஆங்கில வேண்டுதல்கள்
பதாம் பருப்பு பிரசாதங்கள்...!

சரவணபவாக்களில் சலசலப்பு
குமார்சுகளின் கொண்டாட்டம்
உடுப்பிகளின் உற்சாகம்
அப்பப்பா கலைத்து நகர்ந்த சித்திரைப் பெண்

ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்தாள்
மழலை மொழித் தமிழ் கேட்டு.....
அமெரிக்காவில் தமிழ் இருக்கையா......!

இங்கு என்ன சத்தம்.....
ஓ... ஓ.. இது பாப்பையாவா?
பட்டிமன்றம் இன்றிப் புது வருடமா?

இத்தனை நினைவுகளை
இனிதே சுமக்கும் தமிழர்களின் மன எஞ்சினை
உலுக்கி முடுக்கி
அடுத்த வருடத்திற்காய் ரீபூட் செய்தாள்.

போன வருடம் போயிட்டு வரட்டும்
இந்த வருடம் இனிதே இனி வரட்டும்

மங்களம் பொங்க
மனங்கள் குளிர
மனிதம் வளர  
மலரட்டும்  இனிதே இப்புத்தாண்டு.

    வாழ்த்துக்களுடன்
    கனலி’ விஜயலட்சுமி
    ஹூஸ்டன் பல்கலைக்கழகம்