மதியம் சனி, ஏப்ரல் 24, 2021

ராஜாளியார் வாழ்த்து - வித்வான் ம. கோபாலகிருஷ்ணையர்

 தொல்காப்பியருக்கு அரிய சிலை வடித்து உதகை மாவட்டக் குன்னூரில் நிறுவி 10- செப்டம்பர்-1911-ல் பெரிய விழா எடுத்தவர் தமிழ்ப் புரவலர் அரித்துவாரமங்கலம் இரகுநாத இராசாளியார் ஆவார். அரித்துவார மங்கலம் தேவார காலத்தில் அரதைப் பெரும்பாழி என்ற பாடல் பெற்ற சிவத்தலம். 10-செப்டம்பர்-1911-ம் தேதி உதகை மக்கள் வாசித்தளித்த வரவேற்புப் பத்திரத்தின்படி, தொல்காப்பியர் சிலை ஒரு முனிவரைப் போல இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆனால், ஒரு ஐம்பது, அல்லது அறுபது ஆண்டுகளாக அதனைக் குன்னூரில் கண்டார் இல்லை. http://nganesan.blogspot.com/2021/04/tolkappiyar-statue-coonoor-september.html

ஒருவேளை, பழைய இத் தொல்காப்பியர் சிலையின் ஒளிப்படம் எங்காவது இருந்து வெளிச்சத்துக்கு எதிர்காலத்தில் வரலாம்.

பனம்பாரனார் பாடிய பாயிரத்தில் ’முந்துநூல்’ என்பது என்ன என ஆர்தர் கோக் பர்னல் தொடங்கிப் பல அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். “மயங்கா மரபின் எழுத்து முறை காட்டுதல்” என்பது தமிழி (அ) தமிழ் பிராமி என்னும் சங்ககாலக் கல்வெட்டுகளில் புள்ளிக் கோட்பாடு எனத் தெரிய வருகிறது. முத்தாய்ப்பாகப், பனம்பாரனார் ’படிமையோனே’ எனத் தன் பாயிரத்தை நிறைவு செய்கிறார். படிமை (< படிமா) என்று தவவொழுக்கத்தைக் குறிக்கும் சொல்லானது சமணர்கள் இடையே மட்டும் இருப்பதை அவர்கள் நூல்கள் அறிவிப்பதாலும், ஓருயிரில் இருந்து ஆருயிர் ஈறாக உயிரிகளைப் பகுக்கும் கோட்பாடு சமண நூல்களில் இருப்பதாலும், தொல்காப்பியர் அச் சமயம் சார்ந்தவர் என்ப. சங்க காலத் தமிழ்க் கல்வெட்டுகளை மதுரை, கொங்குப் பகுதிகளில் ஆராய்ந்தாலும் இம்முடிபு சரியே எனக் காட்டிநிற்கின்றன.

தொல்காப்பியர் சிலை முதலில் நிறுவப்பெற்று 110 ஆண்டுகள் சென்றுவிட்டன. இன்று ஆறாம் திணையாகிய இணையம், திறன்பேசி யுகம் மலர்ந்துவிட்டது. உலகமெலாம் தொல்காப்பியர் புகழைப் பரப்பும் வகையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவை (http://fetna.org) ஒவ்வோர் ஆண்டும் சித்திரை முதல்நாளைத் தொல்காப்பியர் திருநாள் எனக் கொண்டாடுகிறது. இசை நிகழ்ச்சிகள், தமிழ் இருக்கைகளுக்கு ஆதரவு, அருவி என்னும் இதழின் தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் (14 ஏப்ரல் 2021) எனப் பல்வேறு வகையான விழாக்களை எடுத்துப் பரப்பிவருகிறது. முதல் தொல்காப்பியர் திருநாள் தொடர்பாக, பேரவை நடாத்திய ஜேம்ஸ் வசந்தன் குழுவினரின் இலக்கியத் தமிழிசை நிகழ்ச்சி:  https://www.youtube.com/watch?v=kKETavfXgZY . தினமணியில் அச்சான கட்டுரை:  http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

மதுரை வித்வான் திரு. ம. கோபாலகிருஷ்ணன் பாரதியாருக்குப் பல்லாற்றானும் உதவியவர். ஆங்கிலப் பாக்களைத் தமிழில் தருவதில் நிகரற்றவர். மதுரையில் செந்தமிழ்ப் பாடசாலை, இலக்கியப் பத்திரிகைகள் நடத்தியவர். ராஜாளியார் கொடைத் திறத்தை அறியப் புலவர் ம.கோ. பாடல்கள் உதவுவன.  தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவரால் ’மதுரை மாப்பிள்ளை’ என்று அழைக்கப்பெற்ற ராஜாளியாரை வாழ்த்திப் புலவர் கோபாலகிருஷ்ணையர் இயற்றிய பாக்களை, அதன் மூல அச்சு நூல் ஆகிய அரும்பொருட்டிரட்டில் இருந்து குடவாயில் பாலு அவர்கள் அனுப்பினார்கள். அன்னாருக்கு என் மனங்கனிந்த நன்றி. 

அமெரிக்கப் பேரவையின் அருவி இதழின் தொல்காப்பியர் திருநாள் சிறப்பிதழ் முகப்போவியமும், கட்டுரைகளின் பொருளடக்கமும் இணைத்துள்ளேன். தொல்காப்பியர் திரு ஓவியம் வரைந்த மணியம் செல்வன் அவர்களுக்கு நன்றி.

10-செப்டம்பர்-1911 உலகில் முதன்முதலாக, நீலகிரிக் குன்றூரில் தொல்காப்பியர்க்குச் சிலை ராஜாளியார் நிறுவினார் எனக் குறிப்பிடும் நேரிசை வெண்பா.

               வாழ்த்து

திருமால் திருப்பதியெண் சேர்த்துமே லொன்று

வருநாளில் குன்னூரில் வாழுந் திருவாளர்

நாட்டியரா சாளியார் நற்புத் தகசாலை

நாட்டினிலே வாழ்கநெடு நாள்!

 குறிப்பு:

விஷ்ணு திருப்பதி எண் = 108, 108+1 = 109.

அதாவது:

வருஷம் - விரோதிகிருது - 45

மாதம் - ஆவணி - 5

தேதி - 25

கிழமை - ஞாயிறு - 1

நட்சத்திரம் - உத்திரட்டாதி - 26

இலக்கினம் - துலாம் - 7

45 + 5 + 25 + 1 + 26 + 7 = 109.

இதற்குச் சரியான ஆங்கில காலண்டர் தேதி: 10-செப்டம்பர்-1911 ஆகும்.

https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=10/09/1911

 ஆங்கிலத் தேதி 10-9 (1911)-க்கு இணையாக, 109 என்ற எண்ணைக் கணக்கிடும்போது தமிழ்ப் பஞ்சாங்கமும் இணைந்திருப்பது அருமை. 

~ நா. கணேசன்






மதியம் திங்கள், ஏப்ரல் 19, 2021

தொல்காப்பியர் திருநாள் – நினைவலைகள் (பேரா. கு. சிவமணி ஆய்வுக் கட்டுரை)

தொல்காப்பியர் திருாள் – ினைவலைகள்

கு.சிவமணி

மேனாள் முதல்வர், கர்தைப்புலவர் கல்லூரி,தஞ்சாவூர்/திருவள்ளுவர்கல்லூரி,பாவாசம்;

ஆய்வறிஞர், செம்மொழித் தமிழாய்வு மத்திய ிறுவனம், சென்னை.

தொல்காப்பியரின் ாளும் காலமும் குறித்துக் கட்த ஒரு ூற்றாண்டு வரலாற்றில் சிலவற்றை ினைவுகூர்்து தொல்காப்பியர் திருாளை ிலையுறுத்துவதே இக்கட்டுரையின் ோக்கம்.

இற்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன் ீலகிரி- குன்னூரில் ூலகக் காதலரான தஞ்சை மாவட்டத்துப் பெருிலக்கிழார் ஒருவர் ஒரு ூலகத்தை ிறுவி அதற்குப் பத்தாயிரம் ரூபாய் ன்கொடை அளித்தார் –அத்துடன், அூலக வளாகத்தில் தொல்காப்பியர் சிலையை  10.9.1911 அன்று ிறுவி  அ்தாளைத் தொல்காப்பியர் திருாள் எனக் கொண்டாடினார். அவர் - தமிழ், ஆங்கிலம், சமற்கிருத மொழிகளில் வல்லவர்; இசை, சித்த மருத்துவம், யோகம் முதலாய பலகலைகள் பயின்றவர். அவர்காலத்திய சென்னை மாகாண ஆளுர் சர். ஆர்தர் லாலி, மாவட்டத் துணையாட்சியர் ஆஸ்டின் போன்ற ஆங்கில ஆட்சியாளர்களின் ெருங்கிய ண்பர்; புதுதில்லியில் 12.12.1911 அன்று ஐ்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டிக்கொண்டபோது சிறப்பு விரு்தினராகக் குடும்பத்தோடு அழைக்கப்பெற்றவர்; தமது இனத்தைக் குற்றப்பரம்பரைச் சட்டத்திலிரு்து விடுவிக்க வேண்டி மன்னரிடம் ேரடியாக  வாதுரைத்து வெற்றிக்கு வித்திட்டவர்; தமது சிற்றூரில் காரனேசன் ூலகம் என்ற ஒரு பெரிய ூலகத்தை உருவாக்கி, அரிய ூல்களையும் ஓலைச் சுவடிகளையும் திரட்டிக் காத்துப் பின்னாளில் சங்கூல் பதிப்பித்த டாக்டர் உ வே. சாமிாதையர், ஔவை துரைசாமிப்பிள்ளை, பின்னத்தூர் ாராயணசாமிஐயர் போன்ற பலருக்கும் அவற்றைக் கொடுத்துதவியவர்; சுற்றுப்புறத்துள்ள 50 சிற்றூர்களின் லம் கருதி ஔடதசாலை அமைத்தவர்; பெரும்புலவர் சோழவ்தான் அரசஞ்சண்முகனார் பிணிீக்கி உயிர்காத்து அவரது தொல்காப்பியப் பாயிரவிருத்தி ூலைத் தாமே பார்வையிட்டு வெளிட்ட புலமைலஞ் சான்ற புரவலர்.  அவரே அரித்துவாரமங்கலம் கோபாலசாமி இரகுாத இராசாளியார் எனும் மாிதிக் கிழவர். (சிதை்துள்ள அச்சிலையையும் ூலகத்தையும் தமிழக அரசு பேணிக் காக்கவேண்டும் எனும் தீர்மானத்தைத் திருவள்ளுவர் இலக்குவனார் அரசுக்கு அனுப்பினார்.)

1902இல் தொல்காப்பியம் பற்றிய முதல் கட்டுரையை மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் செ்தமிழ் இதழில் ரா.இராகவையங்கார் எழுதினார். பின்னர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியாரின் தொல்காப்பியச் சொல்லதிகார ஆய்வுக் குறிப்புகள் என்ற ஓர் ஆய்வேட்டுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. இவற்றினுடைய ோக்கம் தொல்காப்பியம் சமற்கிருதத்துக்குக் கடன்பட்டது என்பதை ிறுவுவது ஆகும். புலமைப்போர் தொடங்கியது. டாக்டர் சாத்திரியாரின்  ஆய்வை வரிக்கு வரி மறுத்துத் தொல்காப்பியத்தின் தமிழியல் வேர்களைக் கண்டறி்து கர்தைத் தமிழ்ச் சங்கத்துத் தமிழ்ப்பொழில் – 21 இதழ்களில் தொடர்கட்டுரைகளை எழுதியவர், தொழில்முறையில் பேராசிரியர் அல்லர், காவல் உதவி ஆய்வாளர்,  மன்னார்குடி ா. சோமசு்தரம் பிள்ளை. இது இடைக் காலிலை;  தொல்காப்பியர் காலம் பற்றிக் கருத்து மோதல்கள் இருப்பினும் அவரது ாள் பற்றி இராசாளியாரைத் தவிர, யாரும்அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. 20ஆம் ூற்றாண்டு இறுதியில், அதாவது- 1975க்குப் பின், தொல்காப்பியம்- சங்க இலக்கிய ஆய்வுகள் வெறும் ஐ்து விழுக்காட்டுக்குக் கீழ் இரு்தன.

ிலையில் 21ஆம் ூற்றாண்டுத் தொடக்கத்தில்  அதாவது 2004ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய ிறுவனம் தோற்றம் பெற்றது. அப்பொழுது தமிழ் முதுகலை மாணவர்கள், ஆய்வியல்ிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களிடம் சங்க இலக்கியம் - தொல்காப்பியம் பற்றிய ஆர்வம் பெரிதாக இல்லை. செம்மொழி ிறுவனத்தின் அன்றைய முதல் பொறுப்பலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் தலைமையில் ஒரு திட்டம் வகுக்கப்பெற்றது. அதற்கிணங்க, ஓர் ஐ்தாண்டுகளில்   ஒரு கருத்தரங்கம்(3-ாள்), பயிலரங்கம்(10-ாள்) என்ற அளவில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட தமிழியல்  ிகழ்வுகள் ்தன. . ாளொன்றுக்குக் குறை்தது 5 அறிஞர்கள் . . ஏறத்தாழ 1800 ாட்கள்.. 9000 ஆய்வுரைகள் ிகழ்்தன. ஓர் அரங்கத்திற்குத் தொடக்கத்தில்  ஆய்வாளர் எண்ணிக்கை 60,  காலப்போக்கில் 100 என உயர்்து 25000 ஆய்வுமாணவர்கள் பயன்பெற்றனர். பயிலரங்க ிறைவுாளில் ஆய்வாளர் ஒவ்வொரு வருக்கும் 3000 ரூபாய் விலைமதிப்புள்ள சங்க இலக்கியத் தொகுதி அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. தமிழகம் மட்டுமன்றிக்    கேரளம், ஆ்திரம், கர்ாடகம் ஆகிய அண்டை மாிலங்களிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், இ்த ிகழ்ச்சிகள் டைபெற்றன செம்மொழி ிறுவன ஆய்வறிஞர் எனும் ிலையில் கட்டுரையாளர் 60க்கும் மேற்பட்ட ிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக அமை்து திறம்பட டத்தினார். இதன் விளைவாக இளம் ஆய்வாளர்களிடையே ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் புரட்சி ஏற்பட்டு, 2010இல் தொல்காப்பியம் - சங்க இலக்கிய ஆய்வுகள்  வியக்கத்தக்க வகையில் 85 விழுக்காட்டை  எட்டிப் பிடித்தன .

 செம்மொழி ிறுவனம் தொல்காப்பியர் கருத்தரங்கம்/பயிலரங்கம் என்ற வகையில் 40 ிகழ்ச்சிகளை டத்தியிரு்தது அப்போதெல்லாம் அறிஞர்கள் தொல்காப்பியரின் காலத்தையும் ாளையும் வரையறுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தனர். 2009இல் இவ்வேண்டுகோள் மிகவும் வலுப்பெற்ற ிலையில், கோவிலூர்த் திருமடத்தின் ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் ாச்சியப்ப தேசிகர் அவர்கள் அதனை முன்மொழியவே, செம்மொழித் தமிழாய்வு ிறுவனம் கோவிலூர்த் திருமடத்துடன் இணை்து 26, 27, 28 செப்டம்பர் 2009 ஆகிய ாட்களில் தொல்காப்பியர் கருத்தரங்கைக் கோவிலூரில் டத்தியது. சென்னைத் தலைகர்த் தமிழ்ச்சங்கம் முதல் குமரி மாவட்டத் தமிழ் அமைப்புக்கள் வரை பல்வேறு ிறுவனங்களும், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்களும் தனிிலையில் தொல்காப்பிய  அறிஞர்களும் இிகழ்ச்சியில் பங்கேற்றனர்; 28 பேர் கட்டுரை வழங்கினர்; ஏனையோர் உரை ிகழ்த்தினர்; வேனிற்காலத்தில் புலவர்கள் கூடல் மாகரில்  ஒருங்கிணை்து தமிழாய்்தனர் என்று கலித்தொகை சுட்டிய மரபுவழக்கத்தை ஒட்டித் தொல்காப்பியர் ாள் சித்திரை முழுமதி ாள்  என்பதில் கருத்தொருமை கொண்டனர்; ஆனால் தொல்காப்பியர் காலத்தில் அன்று. கிமு ஏழாயிரம் முதல் கிமு ூறு வரை எனக் கருத்து வேறுபாடு இரு்தது. பொதுக்கருத்து அடிப்படையில் தீர்மானத்துக்கு அறுதி வடிவம் கொடுக்க இரவு 9மணிக்கு அமர்்த தமிழண்ணலும் கட்டுரையாளரும் அவ்விளக்கத்தை எழுதிமுடித்தபோது விடியல் கோழி கூவிற்று. 8 பக்கம் கொண்ட அ்தத் தீர்மானம்(ப.1) + விளக்கம்(ப.7) ஆகியவற்றைத் தமிழண்ணல் 20 மணித்துளிகள் படித்து முன்மொழி்தார்; கட்டுரையாளர் அதனை வழிமொழிகையில் ிறைய வினாக்கணைகள் தொடுக்கப்பட்டதால் அவற்றிற்கெல்லாம் விடைகூறுதற்கு  ஒன்றரை மணிேரம் பிடித்தது. ிறைவாக, ஆய்வாளர்கள் தொல்காப்பியர் காலத்தைப் பொறுத்து அவரவர் கருத்தையே கொண்டாலும், கீழ்எல்லை 711 என்றும், தொல்காப்பியர் ாள்  சித்திரை முழுிலவுாள் என்றும்  ஒப்புகை செய்தனர்.

 அதற்குமேலும்  கட்டுரையாளர் தமது சொ்தக் கருத்தாகப் பின்வருவனவற்றை அவையினருக்குத் தெரிவித்தார், அவை வருமாறு: இன்றைய ிலையில் சித்திரை முழுிலவு ாள் என்பது (1) உலகெங்கும் புத்த பூர்ணிமா எனவும், (2) 1965 காலகட்டத்தில் சிலம்பொலி செல்லப்பனார், சேலம் (திருச்செங்கோடு) தி. மு. காளியண்ணன்  முயற்சியினால் திருச்செங்கோட்டில்  சிலப்பதிகாரவிழா- குறிப்பாகக் கண்ணகி விழா எனவும், (3) தமிழகத்தில்  சித்திரைத் திருவிழா எனவும்  கொண்டாடப்படுகின்றது. மேலும், இளங்கோ அடிகள் ாள் என அமையச் சிற்த ாள் சித்திரைப் பௌர்ணமி ஆகும்: “சிலப்பதிகாரத்தை முடிமன்னர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், தேசியக் காப்பியம், கலைமிளிர் காப்பியம் என்று ாடெங்கும் பரப்பிய ம் சிலம்புச்செல்வர் ம.பொ.சி., அவர்கள், சென்னையில் 24.04.1956 இல்  செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில் முதன் முதலாகச்  சென்னை மாவட்டத் தமிழரசுக் கழகத்தாரால் இளங்கோ விழாவைத்  தொடங்கி வைக்கச் செய்தார். 

  இ்த வகையிலும், சிலப்பதிகாரத்தில் 28 ாள் ிகழ்்த இ்திர விழவூரெடுத்த காதையில் குறிப்பிடப்படும்  சித்திரைத் திங்களின் சித்திரை முழுிலவைக் கருதியும்  எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு இ்திரா விழாவின் இறுதி ாளான ஏப்ரல் 24ம் ாளில் இளங்கோவடிகள் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. ” (இதயத்தை அள்ளும் இளங்கோ அடிகள், ஔவை அருள்).

உலக அளவிலும் தமிழகத்திலும் வேறு பல விழாக்கள் சித்திரை முழுிலவு ாளில்  இடம்பெறுவதால், ’பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று’ எனும் ாட்டுப்புற மொழிக்கேற்ப, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் திருாளையும் அவற்றுடன் சேர்ப்பது சிறப்பாகாது.

 ஏனென்றால் தொல்காப்பியத்துக்கு மற்றெவற்றுக்கும் இல்லாத் தனிப்பெரும் புகழும் பெருமிதமும் உண்டு. இன்றியமையா எடுத்துக்காட்டாக இரண்டைக் குறிப்பிடலாம்: (1) 2000-ஆண்டில் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகப் மொழியியல்வாணர்கள் ஏ.எல்.பெக்கர், கெய்த் டெய்லர், இ்திய மொழியியலாளர் ஏ.கே இராமானுசன் ஆகியோர் ஒரு ேர்காணலில்  தொல்காப்பியத்தின் ுட்பங்கள் பலவற்றையும் விய்துரைத்தனர்; அமெரிக்க ூலகங்கள் தோறும் தொல்காப்பியர் சிலை ிறுவப்படவேண்டும் என்றனர்; ஏனென்றால், ’ தீர்முடிவாக, தொல்காப்பியர் ஒரு மொழியியல் குருாதர்’ (you would call (Tolkappiyar) a linguist’s ’ultimate Guru’)  எனப் புகழாரம் சூட்டினர் என்பதும் ினைவில் கொள்ளத்தக்கதாகும். (2) உலகச் செவ்வியல்மொழிகளுள் தமிழ்மொழி தனிச்சிறப்பும் தலைமையும் பெற்றது என மொழிஞாயிறு தேவேயப்பாவாணர் ஒப்பியன் மொழிூல் (1940), The Primary Classical Language of The World(1966) ூல்கள் எழுதியபோது இங்குள்ள மொழிூலாருள் பலர் முகஞ்சுளித்தனர்; ஆனால், மாற்றிலக்கணக் கோட்பாட்டுத் த்தை என மொழியியல் உலகம் மதித்துப்போற்றும் ோவாம்சோம்ஸ்கி, 22.11.2001 அன்று கல்கத்தாப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமது இலக்கணக் கோட்பாட்டை எடுத்தியம்பி அவற்றுடன் பொரு்துகிற ஒரு மொழி முதற்படியாகத் தமிழ்மொழி என  விளம்பியபோது அவர்கள் மௌனஞ்சாதித்தனர். சோம்ஸ்கியின் ஆய்வு முடிபுக்கு அடித்தளமாக அமை்தது தொல்காப்பியம்.

 இன்று உலகெங்கும் காதலர் ாள், த்தையர் ாள், அன்னையர் ாள் போன்றவை இ்தாளில்தான் எனத் திட்டவட்டமாக அமைகின்றன. அதுபோன்று தொல்காப்பியர் திருாளும் தனிாளில் அமையவேண்டும்; எனவே சித்திரை முதல்ாள் தொல்காப்பியர் திருாள் எனக் கொள்ளலாம். மேலும் முழுிலவுாளை அடுத்துத் தேய்பிறை தொடங்குகிறது. ‘கல்லெனக் கவின்பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் புல்லென்ற களம் போல’ எனக் கலித்தொகை(5) கூறுவதைப் போன்று, திருவிழா முடி்த  மறுாளே மகிழ்ச்சி அலைகள் மறை்து மனம் வெறிச்சோடுகிறது. அதுமட்டுமன்றிப் பஞ்சாங்கத்தின்படி முழுிலவுாள் ஆண்டுதோறும் மாறக்கூடியது. சித்திரைத் திங்களில் எப்போது வேண்டுமானாலும் அமையும். சித்திரை முதல்ாள் என்றால் அன்று முகிழ்க்கும் மகிழ்வுணர்வு பிறைிலா போல வளர்்து முழுிலாாள் வரையிலும் தொடர்்து முழுமைபெறும். ஆகவே சித்திரை முதல்ாளே தொல்காப்பியர் திருாள் என்பதை அறிஞர்கள் சி்திக்கலாம் என ஒரு வேண்டுகோளையும் கட்டுரையாளர் முன்வைத்தார். இதுகாறும் கட்டுரையாளரின் இக்கருத்து காற்றலைகளில் தவழ்்துகொண்டிரு்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப் பெற்றது. அதன் அறிவுரைஞர் ிலையில் பல ிகழ்ச்சிகளில் கல்துகொண்ட கட்டுரையாளர் தொல்காப்பியர் காலமும் ாளும் பற்றிச் சொற்பொழிவாற்றிய ஆய்வுரையை, அதன் செயலாளர், முனைவர் மு. இளங்கோவன் ஆவணப் படமாக்கி யிரு்தார். அண்மையில் வகுப்புத்தோழர் பேரா.செ.வை.சண்முகம் தொல்காப்பியர்ாள் பற்றிய கருத்தைப் பகிர்்து கொண்டார்;  பொள்ளாச்சி முனைவர் ா. கணேசன் (அமெரிக்கா) இதுபற்றிக் கட்டுரை எழுதத் தூண்டினார். இன்று தமிழர்கள் உலகெங்கணும் பரவியிருக்கிறார்கள்; அவர்கள் எ்த ாட்டில் வாழ்்தாலும் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பதில் கருத்தூன்றுகிறார்கள்;  வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆண்டுதோறும் தமிழ்த் திருவிழா கொண்டாடுகின்றனர். அவர்கள் தனிச்சிறப்புமிக்க தொல்காப்பியருக்கு உலகளாவிய ிலையில் திட்டவட்டமாக தனித்துவமாகச் சித்திரை முதல்ாள் அமையவேண்டும் எனும் முயற்சியை முன்னெடுத்துச் செல்வதை அறிய மிக்க மகிழ்ச்சி, அவர்களுக்கு இனிய ல்வாழ்த்துக்கள்.

       ’சித்திரை முழுிலவுாள் என்று ஏற்கனவே உள்ளதை மாற்றலாமா’ எனச் சிலருக்கு ஐயம் எழலாம். 1921இல் திருவள்ளுவர்ாள் தைப்பொங்கலை ஒட்டியாள் எனத் திட்டப்படுத்திய கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய மறைமலையடிகளார், அதற்கு முன்பு வைகாசி,அனுசமே ’திருவள்ளுவர் திருாள்’ எனக் கொண்டாடியதையும் ினைவுகூர்தல் லமாகும். ’மாற்றம் ஒன்றே மாறாதது.’ தைப் பொங்கல் முதலிலே திருவள்ளுவர் தொடராண்டும், திருவள்ளுவர் திருாளும் அரசால் சிறப்புச் செய்யப்படுவது போலவே, சித்திரை முதல்ாள் ’தொல்காப்பியர் திருாள்’ என அரசாணையில் மலர வேண்டும். வாழையடி வாழையென உலகளாவிய இளைய தமிழர்கள் தாய்த்தமிழ் மொழி பயில என்றும் துணைசெய்யும்.

                              தொல்காப்பியர் திருாள் - சித்திரை முதல் ாள்!

             இம்முழக்கம்  யாண்டும் பரவுக!                       முயற்சிகள் யாவும் வெல்க!

மதியம் ஞாயிறு, ஏப்ரல் 18, 2021

முதல் தொல்காப்பியர் சிலை, குன்னூர், 10-செப்டம்பர்-1911

அரித்துவாரமங்கலம் வா. கோபாலசாமி இரகுநாத ராசாளியார் சாதனைச் சரித்திரம்

இந்த அரிய நூலை எனக்களித்த கரந்தை திரு. ஜெயக்குமார், தஞ்சை சரசுவதி மகால் வித்துவான் திரு. மணிமாறன் இருவருக்கும் என் நன்றி. 

Rajaliyar’s Tolkappiyar Library is near St. Anthony’s School, Coonoor. We can check the building and also see if the Coonoor Club, At. Anthony’s, Ooty long time residents have the photograph of Tolkappiyar that Tiru. Reghunatha Rajaliyar (Fellow, Theosophical Society & land lord, Haridvara Mangalam, Tanjore district) installed in the premises on 10th September 1911. One of the first instances when patrons honored Tamil poets in public thereby leading to Tamil renaissance in the 20th century.  Please read the two pages from the book compiled on the contributions of Tiru. Rajaliyar at the end of this posting.

தொல்காப்பியர் திருநாள் என அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டுப் பேரவை (http://fetna.org ) 2021-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் யாண்டும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடுகிறது. முதல் தொல்காப்பியர் திருநாள் தொடர்பாக, பேரவை நடாத்திய ஜேம்ஸ் வசந்தன் குழுவினரின் இலக்கியத் தமிழிசை நிகழ்ச்சி:  https://www.youtube.com/watch?v=kKETavfXgZY .தினமணியில் அச்சான கட்டுரை:  http://nganesan.blogspot.com/2021/02/chithirai-1st-tolkappiyar-tirunaal.html

மலைமீது தொல்காப்பியன் சிலையை வைத்தாய்!
   மனதினிலே நீங்காது நிலைத்து நின்றாய்!

 ~நா. கணேசன்

         வாழ்த்து 

   வெல்லத்தமிழ் வானந்தனில் ஒளிர்நூல்களின் நடுவே
   எல்லோனெனச் சுடர்பொக்கிடம் தொல்காப்பியம் வாழ்க!
   வல்லோர்பலர் புகழ்சித்திரை முதல்நாளினி மேலே
   தொல்காப்பியர் திருநாளென அரசாணையில் மலர்க!

                                                                             - பேரா. சு. பசுபதி, கனடா

10-9-1911-இல் நீலகிரி மாவட்டக் குன்னூரில் உள்ள 'இராஜாளியார்' நூல் நிலையத்தின் முன்பு தொல்காப்பியரின் உருவச் சிலைதனை நிறுவித் திறந்துவைத்த இராஜாளியார் அவர்கட்கு நீலகிரி மக்கள் வாசித்தளித்த வரவேற்புரை.

                                           ஆசிரிய விருத்தம்

1. அந்நாளில் சுயநலம்வேட் டொருமுனியைத் தென்மலைமேல்
        அரன்வைத் திட்டான்
பன்னாளும் பொதுநலம்வேட் டரித்வார மங்கலக்கோ
        பால சாமி
பின்னாளில் தமிழ்க்கடலுண்டு  இமயமலை யமிழ்த்துதொல்காப்
      பியர்பேர் பூண்ட
தென்னாரும் ஒருமுனியை நீலமலை மேல்வைத்தான்
      சிறப்பா மீதே

குறிப்புரை :

மேலைக் கடல் உண்டு, விந்தமலை தாழ்த்திய அகத்தியன் போல் தமிழ்க்கடல் உண்டு , வடதிசை இமயமலையை அழுத்தியவன்  தொல்காப்பியன் என்ற பெயர் பூண்டவன்;  தென்திசை  நிறைந்த புகழுடைய ஒருமுனியாகிய  தொல்காப்பியனை  நீலகிரி மேலே ஏற்றிச்   சிலையாக  வைத்தார்  இராசாளியார்.   

சிவபெருமான் சுயநலத்திற்காக, மீனாட்சியைத் திருமணம் செய்தற் பொருட்டு, அகத்தியரைத்  தென்மலை பொதிகைக்கு அனுப்பினான். என்றும் பொதுநலம் கருதும் கோபாலசாமி, பின்னாளில் தமிழ்க்கடல் உண்டு இமயமலையை அழுத்துமாறு இலக்கணம் செய்த தொல்காப்பியரை நீலமலைமேல் வைத்தான். இது சிறப்பானது.

2. ஆசிரியன் குறுமுனிவன் விந்தகிரி தாழ்த்தினன்றொட்
       டவன்முற் சீடன்
தேசவிரும் நீலகிரி யுயர்த்தினன்றான் வீற்றிருந்தே
       திருமா லுக்குத்
தாசரெனுங் கோபால சாமிரகு நாதரா
      சாளி யார்செய்
நேசமிகு உதவிபெறி லெவருமெத னையுமுயர்த்தல்
     நேரா தேயோ?

தொல்காப்பியருக்கு ஆசிரியராகிய அகத்தியர் விந்திய மலையைத் தாழ்த்தினார். ஆனால் அவரைத் தொடர்ந்து இலக்கணஞ் செய்த முதற் சீடன் தொல்காப்பியர் தேசு அவிரும்(ஒளி வீசும்) நீலமலையைத் தான் வீற்றிருப்பதன் மூலம் உயர்த்திவிட்டார். நட்பு மிகும் இராசாளியார் செய்கிற உதவியைப் பெற்றால் எவரும் எதையும் உயர்த்த மாட்டார்களா என்ன? 

3. நீலகிரி குன்னூரில் தமிழபிமா னச்செல்வர்
        நிலவ நாட்டு
மேலுமிசை ராசாளி யார்புத்த கச்சாலை
     யெவற்றி னுக்கு
மேலதென வதனிடையே காட்டுமதன்  றியுமலைமேல்
      விளக்க மென்னு
ஞாலமொழி யுங்காட்டு நாமெடுத்துக் காட்டலெவன்?
      நாட்டுங் காலே

தமிழ் அபிமானி இராசாளியாரின் புத்தகசாலையில் மட்டுமன்றி குன்றூர் (குன்னூர்) மலைமேலே தொல்காப்பியர் சிலையை அவர் நாட்டும் போது ’குன்றின்மேல் இட்ட விளக்கு’ என்னும் பழமொழிக்கு ஏற்ப நாடறியும். வெளிப்படையாக விளங்கும் இச் செய்திகளை நாம் எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ? வேண்டா என்றவாறு.

இது காய் காய் காய் காய் மா தேமா  என்னும் அமைப்புடைய அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

(விளக்கிய கவிமாமணி இலந்தை, புலவர் இராமமூர்த்தி இருவருக்கும் என் நன்றி.)

10-செப்டம்பர்-1911 உலகில் முதன்முதலாக, நீலகிரிக் குன்றூரில் தொல்காப்பியர்க்குச் சிலை ராஜாளியார் நிறுவினார் எனக் குறிப்பிடும் நேரிசை வெண்பா.

               வாழ்த்து

 

திருமால் திருப்பதியெண் சேர்த்துமே லொன்று

வருநாளில் குன்னூரில் வாழுந் திருவாளர்

நாட்டியரா சாளியார் நற்புத் தகசாலை

நாட்டினிலே வாழ்கநெடு நாள்!

 

குறிப்பு:

விஷ்ணு திருப்பதி எண் = 108, 108+1 = 109.

அதாவது:

வருஷம் - விரோதிகிருது - 45

மாதம் - ஆவணி - 5

தேதி - 25

கிழமை - ஞாயிறு - 1

நட்சத்திரம் - உத்திரட்டாதி - 26

இலக்கினம் - துலாம் - 7

45 + 5 + 25 + 1 + 26 + 7 = 109.

இதற்குச் சரியான ஆங்கில காலண்டர் தேதி: 10-செப்டம்பர்-1911 ஆகும்.

https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=10/09/1911

 ~ நா. கணேசன்

 

 



மதியம் வெள்ளி, ஏப்ரல் 16, 2021

கொண்டாடுவோம்! தொல்காப்பியர் திருநாள்!! முனைவர் மு.இளங்கோவன்


கொண்டாடுவோம்! தொல்காப்பியர் திருநாள்!!

முனைவர் மு.இளங்கோவன்

செயலாளர், உலகத் தொல்காப்பிய மன்றம்

புதுச்சேரி, இந்தியா

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாம் தொல்காப்பியம் தமிழர்களின் மொழிச் சிறப்பையும் இலக்கியப் பெருமைகளையும் தாங்கி நிற்கும் அரிய ஆவணம் என்று துணிந்துசொல்லலாம். இந்நூலின் தாக்கம் ஈராயிரம் ஆண்டுகாலத் தமிழ் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் படிந்து கிடக்கின்றது. தொல்காப்பிய அறிவு நிரம்பப் பெற்றவர்களே மிகச் சிறந்த புலவர்களாக மிளிர்ந்து தமிழ்த்தொண்டாற்றியுள்ளனர். தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டே பிற்கால இலக்கண நூல்கள் தமிழில் தோற்றம் பெற்றுள்ளன. பழந்தமிழ் நூலாசிரியர்கள் மட்டுமன்றிப் பிற்கால உரையாசிரியர்களும் தொல்காப்பியத்தில் பேரறிவு பெற்றிருந்தனர். இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், பேராசிரியர், கல்லாடர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் தொல்காப்பியத் தோய்வு பெருமைக்குரியதாகும்.  அடியார்க்குநல்லார் போன்ற பெருமக்கள் தொல்காப்பியத்தை உள்வாங்கிக்கொண்டு, சிலப்பதிகாரத்திற்கு உரைவரைந்துள்ள பாங்கினை நினைக்கும்பொழுது தொல்காப்பிய நூலின் பெருமை எளிதில் விளங்கும். சில காலம் தொல்காப்பியக் கல்வி தமிழகத்தில் அருகி இருந்தமையையும் அறியமுடிகின்றது. ஆயினும் தமிழார்வம் தழைத்த புலவர்கள் தொல்காப்பிய மரபினைத் துலக்கிக்காட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளமையைத் தொல்காப்பிய வரதப்ப முதலியார் வாழ்க்கை வழியாக அறிந்துகொள்ளமுடிகின்றது.

ஓலைச்சுவடிகளிலும், புலவர்களின் மனப்பாடத் திறனிலும் தழைத்து வளர்ந்த தொல்காப்பியம் 1847 இல் முதன் முதல் மழவை மகாலிங்கையரால் (வீர சைவ மரபினர்) அச்சுவடிவம் கண்டது. அதன் பின்னர் சாமுவேல் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, இராசகோபால பிள்ளை, சுப்புராய செட்டியார், பவானந்தம் பிள்ளை, புன்னைவனநாத முதலியார், கா. நமச்சிவாய முதலியார், வ. உ. சிதம்பரம் பிள்ளை, இரா. இராகவையங்கார், கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை, கணேசையர், கு.சுந்தரமூர்த்தி, ஆ.சிவலிங்கனார், அடிகளாசிரியர், ச.பாலசுந்தரனார், இரா.இளங்குமரனார், தமிழண்ணல், க.வெள்ளைவாரணனார், தி.வே. கோபாலையர், ச.வே.சுப்பிரமணியன், ச. திருஞானசம்பந்தம் உள்ளிட்ட  பேரறிஞர்களால் இந்த நூல் பதிப்பிக்கப்பட்டு, உலகப் பரவலுக்கு வழிவகுக்கப்பட்டது. பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார், சி.இலக்குவனார், வ. முருகன், ழான் லூக் செவ்வியார் உள்ளிட்ட அறிஞர்களின் மொழிபெயர்ப்பாலும் அயல்மொழியினர்க்கு அறிமுகம் ஆனது.

தொல்காப்பியப் பயில்வு பெருமைக்குரியதாகவும், தொல்காப்பியம் பயிற்றுவித்தல் பெரும்புலமையின் அடையாளமாகவும் தமிழ்க் கல்வியுலகில் நிலவியது. புலவர் கல்லூரிகள் தொல்காப்பியத்தைப் பரப்பும் அறிவு மையமாகச் செயலாற்றின. அந்தோ! தமிழகத்தில் தமிழ் வணிகப் பொருளான பிறகு பல்கலைக்கழகங்களில் தமிழின் மதிப்பு கோடியாக உயர்ந்தது. தமிழ்த் துறைகளில் இலட்சங்களில் தமிழின் மதிப்பு நிலைநிறுத்தப்பட்டது. கல்லூரியில் சென்று பயிலாதவர்கள் பல்கலைக்கழகங்களில் துறைத்தலைமையையும் புலமுதன்மையையும் கைப்பற்றினர். பணம், சாதி, மதம், அரசியல் போர்வையில் பல்கலைக்கழகப் பணிகளில் பலர் நுழைந்தனர். தமிழ்க் கல்வியின் தரம் தமிழகத்தில் தாழும் நிலை உருவானது. தொல்காப்பியம், சங்கப் பனுவல்கள், திருமுறைகள், பாசுரங்கள், காப்பியங்கள் பயின்றோரின் குரல் ஒடுங்கியிருப்பதை உணர்ந்து, இதனைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளைச் செய்தேன். வள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பாரதி, பாரதிதாசன் பெயர்களில் பல்வேறு தமிழமைப்புகள் தமிழ்த்தொண்டாற்றி வருவதை அறிவேன்.ஆயின் தமிழின் தலைநூலாக விளங்கும் தொல்காப்பியத்தையோ, தொல்காப்பியரையோ உலக அளவில் உரத்துப் பேசும் அமைப்பு இல்லையே  என்ற பெருங்கவலை என் உள்ளத்தை வாட்டியது. அதன் அடிப்படையில் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பை உருவாக்கித் தொல்காப்பிய அறிஞர்களைப் போற்றவும், தொல்காப்பியக் கல்வியைப் புதுவேகத்தில் பாய்ச்சவும் முனைந்தேன். என் முயற்சிக்குத் தமிழறிஞர்கள் பலரும், தமிழ் ஆர்வலர்கள் சிலரும் ஒத்துழைப்பு நல்கினர்.

18.08.2015 இல் உலகத் தொல்காப்பிய மன்றத்திற்கு ஓர் இணையதளம் தொடங்கினோம். புதுச்சேரி செகா கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தகைமிகு து. மணிகண்டன் இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டு, இணையதளத்தைத் தொடங்கிவைத்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு என் முயற்சியை ஊக்கப்படுத்தினர். 27.09.2015 இல் பிரான்சு நாட்டில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழா நடைபெற்றது. குவைத்து நாட்டில் வாழும் முனைவர் கு. இளங்கோவன் அவர்களும் அவர்களின் துணைவியார் தேவிகா இளங்கோவனும் குத்துவிளக்கேற்றி உலகத் தொல்காப்பிய மன்றத்தைப் பிரான்சில் தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்வில் முனைவர் இ. பாலசுந்தரம், முனைவர் ஈவா வில்டன், முனைவர் ழான் லூக் செவியார், சுரேஷ் பாரதி, முனைவர் மு.இளங்கோவன், பாட்டரசர் கி.பாரதிதாசன், செவாலியே இரகுநாத் மனே, பொறியாளர் கோபி இரமேஷ்(நெதர்லாந்து), பொறியாளர் அரிஷ்(இலண்டன்), பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பேராசிரியர் தளிஞ்சன் முருகையன், திருவாட்டி இலெபோ லூசியா, புலவர் வ. கலியபெருமாள், பேராசிரியர் அலெக்சிசு தேவராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2016 ஆம் ஆண்டு சூன் மாதம் 4, 5 நாள்களில் கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின்  கருத்தரங்கம் நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா – வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. த.சிவபாலு, இ.பாலசுந்தரம் ஆகியோரின் பெருமுயற்சியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகப் பொறுப்பாளர்கள், மாணவர்களின் ஆதரவும் கருத்தரங்கைப் பெருமைக்குரியதாக மாற்றின. கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது. மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகவும், சிங்கப்பூர்ப் பேராசிரியர் சீதாலட்சுமி அவர்கள் சிறப்புரையாளராகவும், கனடாவில் வாழும் தமிழாராய்ச்சி அறிஞர்கள் கட்டுரையாளர்களாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மலேசியாவின், செலாங்கூர் மாநிலத்தில் பந்திங், தெலுக் பங்ளிமா காராங் என்னும் ஊரில் 23.12.2017 மாலை 5 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் மலேசியக் கிளை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சபாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு தமிழச்சி காமாட்சி, முனைவர் முரசு, நெடுமாறன், திரு. இராசசேரன், அறிஞர் இர. திருச்செல்வம், டத்தோ சேகரன், பொறியாளர் இரா. பெருமாள், ம. முனியாண்டி, சரசுவதி வேலு உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொல்காப்பிய அறிஞர் இர. திருச்செல்வம் அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி, தொல்காப்பியச் செம்மல் என்னும் விருதளித்துப் பாராட்டப்பட்டது.

                சப்பான் நாட்டின் டோக்கியோ மாநகரில் 03.02.2018 இல் உலகத் தொல்காப்பிய மன்றக் கிளையைத் தொடங்கி, தமிழார்வலர்கள் இயன்ற அளவு தொல்காப்பியப் பரவலுக்கு வழிசெய்துள்ளனர். 

அமெரிக்கா நாட்டில், நியூசெர்சி மாநிலத்தில் உள்ள பிசுகாட்டவேயில் (Piscataway) 16.06.2018 சனி(காரி)க் கிழமை காலை 10:30 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை அறிஞர் நா. க. நிதி அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது. அதன் பிறகு இலண்டனில் 30.06.2018 இல் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை ஈழத்து அறிஞர் சிவச்சந்திரன் தலைமையில் தொடங்கப்பட்டது.  15.04.2018 இல் கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை முனைவர் க.இராமசாமி அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது. முனைவர் செ.வை. சண்முகம், ஆய்வறிஞர் கு. சிவமணி, பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆயிடை, திருச்சிராப்பள்ளியில் பேராசிரியர் இ.சூசை அவர்களின் முயற்சியாலும், சென்னையில் எழுத்தாளர் தமிழியலன் முயற்சியாலும் திருவண்ணாமலையில் அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்களின் முயற்சியாலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற எம் அமைப்புக்கு உரிய வித்தூன்றப்பட்டது. எம் முயற்சியைக் கண்ணுற்ற அன்பர்கள் கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்காப்பியம் பரப்பும் பணியைப் புதிய அமைப்புகளைத் தோற்றுவித்துச் செய்துவருகின்றமை எம் முயற்சிக்குக் கிடைத்த ஏற்பளிப்பாக நினைக்கின்றோம். 

உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கிய நோக்கத்தை நிறைவேற்றும் முகத்தான் ஆராய்ச்சிப் பணிகளிலும் ஆவணமாக்கும் பணிகளிலும் கடுமையாக உழைத்துள்ளோம். இதன் பயனாகத் தொல்காப்பியம் குறித்த அரிய நூல்கள் எழுதி முடிக்கப்பெற்று விரைந்து வெளிவரும் நிலையில் உள்ளன. தமிழறிஞர்களான இரா. இளங்குமரனார். கு.வெ. பாலசுப்பிரமணியம், நாமக்கல் புலவர் பொ. வேல்சாமி, தெ. முருகசாமி, ப. அருளி, ந. இரா. சென்னியப்பனார், பா.வளன் அரசு, வீ.செந்தில்நாயகம், விசயவேணுகோபால், சரசுவதி வேணுகோபால், ப. மருதநாயகம், கு.சிவமணி, ஆ. செல்வப்பெருமாள், இராச. கலைவாணி, இராச. குழந்தைவேலனார், மேரி கியூரி பால் உள்ளிட்டோரின் பேச்சுகளைப் பதிவு செய்து இணையப்பெருவெளியில் வெளியிட்டுள்ளோம். இவற்றை உலக அளவில் 3, 28, 589 பேர் (10.04.2021) பார்வையிட்டுள்ளனர். இன்னும் படத்தொகுப்பு செய்து வெளிவர வேண்டிய காணொலிகளின் எண்ணிக்கையும் மிகுதியாக உள்ளன. ஒலித்தொகுப்பு செய்து வெளிவர வேண்டிய ஒலிக்கோப்புகளும் உள்ளன. வகுப்பறைகளைக் கடந்து தொல்காப்பியம் வானலைகளில் மிதந்து உலகச் சொத்தாக மாறுவதற்கு எம் முயற்சி பெரிதும் உதவியுள்ளது.

தொல்காப்பியம் தமிழ் மொழியமைப்பைக் கூறுவதுடன் இலக்கிய உருவாக்கம் பற்றியும் எடுத்துரைக்கின்றது. இதில் இடம்பெறும் நூற்பாக்களைக் கொண்டு தமிழகத்தின் நில அமைப்பு, இயற்கை அமைப்பு, வழக்கில் இருந்த அளவை முறைகள், வாழ்க்கை முறை, போர்முறை உள்ளிட்ட பல செய்திகளை அறிந்துகொள்ள முடிகின்றது. மழை(கார், கூதிர்), பனி (முன்பனி, பின்பனி), வெயில் (முதுவேனில்,இளவேனில்) கொண்டு ஓர் ஆண்டினை ஆறு கூறுகளாகப் பிரித்துள்ளமையையும், ஒரு நாளின் பொழுதுகளை ஆறு கூறுகளாக்கிக் கணக்கிட்டமையும் (வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்) நினைந்து வியப்பே மேலிடுகின்றது. அதுபோல் தொல்காப்பியர் வெளிப்படுத்தும் மாந்தனுக்குத் தோன்றும் எண்வகை மெய்ப்பாடுகளும் அதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கமும் மேல்நாட்டு நாடக மாந்தர்களும் சிந்திக்காத அறிவுவெளிப்பாடு எனலாம். இத்தகைய சிறப்பு மிக்க நூலின் பெருமை பற்றி நம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது காலத் தேவையாகும்.

தொல்காப்பியர் குறித்த முழுமையான வரலாறோ, அவர் காலம் பற்றிய துல்லியமான குறிப்போ ஆய்வுலகில் பதிவுறாமல் போனமை நம் போகூழ் ஆகும். எனினும் ஒவ்வொரு அறிஞர்களும் தொல்காப்பியர் காலத்தை மதிப்பிடுவதிலும் அவர்தம் ஊரினை அடையாளம் காட்டுவதிலும் கருத்து முரண்பட்டு நிற்கின்றனர். கட்டுரைகளிலும் நூல்களிலும் தொல்காப்பியர் பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் மாறுபட்ட கருத்துகள் அறிஞர் பெருமக்களால் முன்வைக்கப்பட்டு வந்துள்ள நிலையில் கோவிலூர் மடத்தின் ஏற்பாட்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்ற கருத்தரங்கில் (2009, செப்டம்பர், 26,27,28)  அறிஞர்கள் முன்னிலையில் பெரும் பேராசிரியர்கள் தமிழண்ணல், கு. சிவமணி, ஆறு.அழகப்பன் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் கி.மு. 711 ஐத் தொல்காப்பியர் காலமாக வரையறுத்துள்ளமையை நாம் ஏற்றுக்கொள்ளலாம். மேலும், தொல்காப்பியரின் பெருமையை ஆண்டின் ஒரு நாளில் நினைவுகூர்வதற்கு ஒரு நாளினை முன்மொழியும்பொழுது தமிழகத்தில் வழக்கில் இணைந்துவிட்ட சித்திரை மாதத்தின் முதல் நாளினைத் தேர்வுசெய்யலாம். எனவே சித்திரை முதல் நாளினை ஆண்டுதோறும் தொல்காப்பியர் திருநாளாக அமைத்துக் கொண்டாடுவது பொருத்தமாகத் தெரிகின்றது. அறிஞர்கள் சிலர் விண்மீன் அடிப்படையிலும், முழுமதி அடிப்படையிலும் வேறு நாள்களை அமைக்க முற்படுகின்றனர். இதில் நாள் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. முழுமதி நாளில் கண்ணகி விழா நடைபெறுகின்றது. எனவே, இந்த ஆண்டு முதல் சித்திரை மாதம் முதல் நாளினைத் (ஏப்ரல் 14) தொல்காப்பியர் திருநாளாகக் கொண்டாடுவதற்கு உலகத் தமிழர்களும், தமிழ்நாட்டு அரசும் முன்வர வேண்டும். உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு உழைக்கவேண்டும் என்பது எம் விருப்பம்.

தமிழ் உணர்வாளர்களால் தழைத்து நிற்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஆண்டுதோறும் அமெரிக்காவில் தமிழ் விழாக்களை நடத்தியும் தமிழ்க் கல்விக்கு அரும்பணியாற்றியும் பெருந்தொண்டாற்றி வருகின்றது. தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் நூற்றாண்டு விழாக்களை நடத்துவது, தமிழறிஞர்களை அழைத்துச் சொற்பொழிவாற்றச் செய்வது, தமிழகத்துக் கலைஞர்களை அழைத்துத் தமிழ்க் கலைநிகழ்வுகளை நடத்துவது என்று தமிழ் வளர்ச்சிப்பணிகளைத் தொடர்ந்து செய்துவருவதை நான் நன்கு அறிவேன். அத்தகு பெருமைக்குரிய வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை இந்த ஆண்டின் சித்திரை முதல் நாளினைத் தொல்காப்பியர் திருநாளாகக் கொண்டாட முன்வந்தமைக்கு எம் உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பிலும் உலகத் தமிழர்களின் சார்பிலும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழகத்திலும், உலகின் பிற நாடுகளிலும் உள்ள தமிழமைப்புகளும் தமிழர்களும் தங்கள் பகுதிகளில் சித்திரை முதல்நாளில் தொல்காப்பியர் திருநாளைக் கொண்டாடுமாறு வேண்டுகின்றேன். மேலும், உலகத் தமிழர்களின் வேட்கையை எடுத்துரைக்கும் வகையில், சித்திரை மாதம் முதல் நாளினைத் தொல்காப்பியர் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடும் சிறப்பு ஆணையைப் பிறப்பிக்க வழி காணுமாறு தமிழ்நாட்டு அரசினை வலியுறுத்த அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். சித்திரை முதல் நாளினைத் தொல்காப்பியர் நாளாகக் கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டு உழைக்கும் பெருமக்களை உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் ஆரத் தழுவிப் போற்றுகின்றேன். 

அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவில் தொல்காப்பியம் குறித்த சிறப்பு அரங்கினை ஏற்பாடு செய்து, தொல்காப்பியக் கண்காட்சி நடத்தவும், தொல்காப்பியம் குறித்த சிறப்புரை நிகழவும், தொல்காப்பியக் கலைநிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யுவும் அதன் பொறுப்பாளர்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். இம்முயற்சி அடுத்த தலைமுறைக்குத் தொல்காப்பியத்தை அறிமுகம் செய்வதற்கு வழிகோலும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. 

அனைவரும் இணைந்து தொல்காப்பியம் பயில்வோம்; பரப்புவோம்! அனைவரும் இணைந்து தொல்காப்பியர் திருநாளைக் கொண்டாடுவோம்.