தமிழ் மரபு அறக்கட்டளை விழா, மயிலாப்பூர், ஆகஸ்ட் 30, 2009

phoca_thumb_l_souvenir2

முனைவர் நா. கணேசனுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org/) வழங்கிய ’மரபுச்செல்வர்’ பட்டம். 30ம் தேதி (ஞாயிறு) தமிழ் மரபு அறக்கட்டளை 8ம் ஆண்டு நிறைவு விழா சென்னை மயிலையில் கற்பகாம்பாள் நகர் கே. என். சண்முகசுந்தரம் அரங்கில் நடத்தியது.

விழா முழுக்க இங்கே கேட்கலாம்:
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=234&Itemid=316


வெண்பா விரும்பியின் வாழ்த்து!
(அறுசீர் விருத்தம்)

அறிவிருந்துந் தாயகத்தின் பண்பாடுங் கலைவளமும்
... அறிந்து கொள்ளா
வறியவருந் தனம்பெறுமா றையரைப்போற் பொருள்வழங்கு
... மரபுச் செல்வ
பொறியியலிற் புலவவளப் பொழில்வாய்ச்சி புவிக்கீந்த
... புதல்வ கையில்
எறியயிலேந் திறைதமையன் பெயரேற்ற நினக்கென்வாழ்த்
... தியம்பு வேனே.

ஐயர்=மகாமகோபாத்தியாய ஐயரவர்கள்
வானிலொரு காலூன்றி மரபிலொரு காலூன்றித்
தேனொத்த தமிழ்நூல்கள் சேகரித்து வலையேற்றும்
சேவையினைச் செய்’மரபுச் செல்வர்’நம் கணேசர்க்குப்
பாவழியே பாராட்டைப் பகர்ந்தவரை வாழ்த்துவனே!
~ அனந்தா


phoca_thumb_l_DSC06289

யுகமாயினி ஆசிரியர் சித்தன் அவர்களின் விழாத் தொடக்கவுரை


phoca_thumb_l_DSC06286

பெ. சு. மணி, இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணன், கடலோடி நரசையா


phoca_thumb_l_DSC06293

கடலோடி நரசையா ‘மரபுச் செல்வர்’ விருது பெறுகிறார்


phoca_thumb_l_DSC06295

ரா. ரத்தின சபாபதி (மேனாள் இயக்குனர், பல்லவன் போக்குவரத்துக் கழகம்) டாக்டர் நா. கணேசன் சார்பில் ‘மரபுச் செல்வர்’ பட்டயம் பெறுகிறார்

phoca_thumb_l_DSC06298

’வரலாறு’ அறிஞர் திவாகர் ‘மரபுச் செல்வர்’ ஆகிறார்

phoca_thumb_l_Mr.Indra Parthasarathy2

phoca_thumb_l_on Behalf of Dr.Ganesan

phoca_thumb_l_participants3

விழா அமைப்பாளரும், விருந்தினரும். கடலூர் டாக்டர் தி. வாசுதேவன், அண்ணா கண்ணன் (சென்னை ஆன்லைன் ஆசிரியர்), ...

விழாவைச் சிறப்புற நடத்திய தமிழ் மரபுக் கட்டளைக் குழுவினர் யாவர்க்கும் நன்றி!
நா. கணேசன்

The Hindu writeup on Tamil Heritage Foundation published on Aug. 20, 2009:
http://www.hindu.com/2009/08/20/stories/2009082051520200.htm

நிகழ்ச்சி அழைப்பிதழ்:
http://emadal.blogspot.com/2009/08/blog-post_25.html
இடம்: கே. என். சண்முகசுந்தரம் அரங்கம்
16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர், சென்னை - 600 004.
ஆகஸ்ட் 30, 2009. பிற்பகல் 2 மணி

இந்திரா பார்த்தசாரதி
திருப்பூர் கிருஷ்ணன்
பெ.சு.மணி
கடலோடி நரசய்யா
யுகமாயினி சித்தன்
புதுவை சுகுமாரன்
கடலூர் வாசுதேவன்
இலந்தை ராமசாமி
இன்னம்பூரார்
ஆர். தேவராஜன்
அண்ணா கண்ணன்
கீதா சாம்பசிவம்
திருவேங்கடமணி
...

போன்ற தமிழ்ப் பண்பாடு மீது அக்கறையுள்ளோர் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக்ஸ் சந்திரா (ஒளிப்படங்களுக்கு நன்றி)!

முனைவர் நா. கண்ணன் மின்தமிழ் குழுவில் விழா பற்றி எழுதிய மடல்:

மின்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் மரபுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

வழக்குகள் என்பவை நாம் உருவாக்குவதே!

தமிழ் அன்பகலா டாக்டர் கண்ணன் நடராஜன் தமிழ் மரபு அறக்கட்டளை உருவான நாளை "தமிழ் மரபுப் பெருநாள்" எனக் கொண்டாட மின்மடலிட்டார்.

மின்தமிழ் அன்பர்களுக்கு அது உவப்பாக இருந்ததால் இன்றிலிருந்து ஒரு புதிய வழக்கு (சம்பிரதாயம்) உருவாகிறது. எமது 8வது ஆண்டு நிறைவு விழாவை சென்னை மரபுச்செல்வங்கள் வருகின்ற ஞாயிறு அன்று நடத்த உள்ளனர்.

நம் வலைக்குரு (webmaster) சுபா சொல்லியபடி இன்றிலிருந்து ஞாயிறு வரை இடைப்பட்ட நாளில் தமிழ் மரபு காப்பிற்கு நாம் நம்மால் முடிந்த அளவு என்ன செய்கிறோம் என்பதை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். சிறுதுளிதானே பேராற்று வெள்ளம். உங்கள் சிறு, சிறு செய்கைகளைக் கூட மின் தமிழ் மதிக்கிறது. சரஸ்வதி பூஜை என்பது வேறு என்ன?

இவ்வாண்டு தொடக்கம் தமிழ்மரபு அறக்கட்டளை தமிழ் வளம் மின்னுலகில் நிலைபெற உதவும் தமிழர்களை இனம் கண்டு கௌரவிக்க உள்ளது. அவ்வகையில் மூவர் இவ்வாண்டில் சிறப்புப் பெருகின்றனர்.

1.
தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் 'கடலோடி' நரசய்யா. பெரும்பாலும் வயது ஆகும் போது சக்தி குறையும் என்பார்கள். இவர்கள் குடும்பத்தில் அதற்கு எதிர்மாறு ;-) நான் முதலில் இவரை சந்தித்த போது கணினி மூலம் தமிழை எவ்வளவு சிக்கலான முறையில் தட்டச்சு செய்யமுடியுமோ அவ்வளவு சிக்கலான முறையில், ஆனால் வெகு லகுவாகச் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு வார்ப்பின் மூலகுறியீட்டு முறையில் (பைனரி) அந்த எண்ணை மின்னேற்றம் செய்து கொண்டிருந்தார். அசந்துவிட்டேன். இந்த வயதில் தவழும் பிள்ளை போல் அவர் மின்னுலகில் தளிர் நடை பயில்வது மகிழ்வாக உள்ளது. உண்மையில் நரசய்யாவை வயதானவர் என்று சொல்லக்கூடாது, அவர் மாமா, சிட்டி சுந்தர ராஜன், 90 வயது. அவரை மின்னுலகப் பிரவேசம் செய்ய வைத்திருக்கிறார் பாருங்கள். அது சரித்திரம். சிட்டியாரின் முதல் வலைப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்று நடத்தியது மிக மகிழ்வான செயல். அன்னாரின் உதவியுடன் தமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் (1875) வலையேறி இருக்கிறது. சிட்டி மாமாவை நான் கடைசியில் சென்னையில் பார்த்த போது ஒரு குழந்தையின் வாஞ்சையுடன் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விஜாரித்தார். அதற்குப்பெயர்தான் தமிழ் அக்கறை என்பது! இந்த அக்கறை 90+ பெரியவருக்கு இருந்தது. அது நம் இளைஞர்களுக்கு வர வேண்டும்.

Chitti recollects - http://chitti.blogspot.com/
ஆதியூர் அவதானி சரிதம் (1875) - தமிழின் முதல் புதினம் (நாவல்) -
http://bharani.dli.ernet.in/thf/text/etext/etext.html

அது மட்டுமில்லை, நரசய்யா எனது களப்பணியில் என்னுடன் துணை நின்றார். உ.வே.சா நூலகத்தொடர்பை உருவாக்கி (நன்றி ஆண்டோ பீட்டர்) உதவினார். அதன் பின் தொடர்ந்து எம் மரபுக்காப்பிற்கு உதவி வருகிறார். இ-சுவடி மட்டுறுத்தர்களுள் ஒருவர். மின்தமிழ் ஆர்வலர். இவருக்கு 'மரபுச் செல்வர்' எனும் பட்டமளிக்கிறோம். ஞாயிறன்று நடைபெறும் விழாவில் அவர் கௌரவிக்கப்படுவார்.

2.
டெக்சாஸ் முனைவர் நா.கணேசன்!
மின்தமிழ் (மின்னுலகம்) நன்கறிந்த தமிழ் அறிஞர். மின்னுலகம் உருவாகி, அதில் தமிழ் நிலை பெற்ற காலத்திலேயே காலூன்றி தமிழ்ச் சேவை செய்து வருபவர். தமிழ் ஒருங்குறி கட்டமைப்பில் பெர்க்கிலி பல்கலைக்கழகத்துடன் இணைந்து 90களிலேயே தமிழ் மின்னுலகில் நிலைபெற ராஜபாட்டை போட்டவர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய தனியார் தமிழ் நூலகத்தை வைத்திருப்பவர். பல அரிய சேகரங்கள் இவரிடமுண்டு, 10,000 மேல்! தமிழ் மரபு அறக்கட்டளை உருவான காலத்திலிருந்து எம்முடன் துணை நிற்பவர். இப்போது நம்மையெல்லாம் இணைக்கும் வலைப்பதிவு மன்றம் 'தமிழ்மணம்' நிர்வாகஸ்தர்களில் ஒருவர். பல்பரிமாண பொறியியல் வல்லுநர் அவர். அவர் நம்முடன் துணை நிற்பது நமக்கு பலம். இப்பெரியவரையும் 30 தேதி 'மரபுச் செல்வர்' பட்டமளித்து கௌரவிக்க உள்ளோம்.

3.
'விஜயவாடா' திவாகர். மின்தமிழ் அன்பர்கள் அறிந்த பெயர். தமிழ் மரபின் கூறுகளை புதினமாக்கி இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் தமிழ் வரலாற்றுச் சிற்பி. மின்தமிழின் பரந்துபட்ட மின்னாக்க நோக்கை முதலிலேயே இனம் கண்டு, சிற்பக்கலை ஆர்வமுள்ள சிங்கப்பூர் விஜய் அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தியவர். இன்னும் முக்கியமாக பொன்னியின் செல்வன் ஆர்வலர் பேரவையுடனான நமது உறவை பலப்படுத்துபவர். மின்னாடற்குழுக்களுக்குள் பாலமைக்கும் வல்லுநர். நம் திவாகரை, 'மரபுச் செல்வர்' எனச் செல்லமாக அழைக்கிறோம். தமிழகத்தின் அயலகச் சூழலில் தமிழ் காப்பது அரிதான செயல். விஜயவாடாவில் தமிழ் மன்றம் காத்து, நம்மாவாழ்வாருக்கு விழாவெடுத்து தமிழ்ப்பணி ஆற்றுகிறார். இவரது அனுபவமும், உந்துதலும் த.ம.அக்கு வளம் சேர்க்கும்.

இன்னும் வரும்...

நா.கண்ணன்

--
"Be the change you wish to see in the world." -Gandhi

11 comments:

பழமைபேசி said...

வாழ்த்துகள் அண்ணா!

geethasmbsvm6 said...

அழகான தொகுப்பு, வாழ்த்துகள் விருது பெற்ற அனைவருக்கும்.

கொழந்தவேல் இராமசாமி said...

மனமார்ந்த வாழ்த்துகள், கணேசன்!

நன்றியுடன்,
கொழந்தவேல் இராமசாமி

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் மரபுச் செல்வரே!

KAVIYOGI VEDHAM said...

Very good Tamil Service. My vaazththu to all participants and organisers,
yogiyaar

Dr.N.Kannan said...

உங்கள் வலைப்பதிவிலும் எமது வாழ்த்துக்களை பதிவு செய்கிறோம்.

கோவை சிபி said...

வாழ்த்துக்கள்.

K. Sethu | கா. சேது said...

மரபுச் செல்வருக்கு எனது வாழ்த்துக்கள்.

கா. சேது

அரவிந்தன் நீலகண்டன் said...

வாழ்த்துக்களும் வணக்கங்களும்... தமிழ் மரபு இன்று பெரும் சூழ்ச்சி வலையில் சிக்க உள்ளது. உங்களைப் போன்ற தமிழ் சான்றோர்களும் உண்மையான தமிழ் அறிஞர்களும் அதைக் காப்பாற்றி முன்னெடுத்து செல்லவேண்டும்.

செல்வநாயகி said...

வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

முருக.கவி said...

விருது பெற்றமைக்கும், மேலும் பல அரிய சாதனைகள் படைத்திடவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வணக்கங்களுடன்
கவிதாராணி.