சந்திரயான் சொற்பொருள் விளக்கம்,
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html
திருமதி & திரு. மயில்சாமி, சந்திரயான் திட்ட இயக்குநர் அண்ணதுரையின் பெற்றோர்.
சந்திரயான் திட்டத்துக்கு இந்தியா செலவிட்ட தொகையைவிடப் பலமடங்காக மதிப்பு உலக அளவில் இந்தியர்களுக்குக் கூடியிருக்கிறது. மத்தியகிழக்கு நாடுகளின் கத்தார் நாட்டுப் பத்திரிகையில் வந்த கட்டுரை:
http://indiantides.blogspot.com/2008/11/indian-space-prowess-in-eyes-of-arab.html
அதன் வாக்கியங்களை இம்மடலின் இறுதியில் கொடுத்துள்ளேன்.
நா. கணேசன்
நிலா இனி நமக்குத் தொட்டுவிடும் தூரம்தான்
நன்றி: "குமுதம் ரிப்போர்ட்டர்" -13-11-2008
நிலா இனி நமக்குத் தொட்டுவிடும் தூரம்தான். இஸ்ரோ அனுப்பிய `சந்திரயான்' விண்கலம் நிலவை நெருங்கிச் சுற்றி வர ஆரம்பித்து விட்டது. உபயம்: நம் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
சரி! இந்த சந்திரயான் சாதனைத் திட்டத்துக்கும், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியிலுள்ள கோதவாடி என்ற குக்கிராமத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா? ஏன் இல்லை? `சந்திரயான்' என்ற சாதனைத் திட்டத்தைச் சாத்தியமாக்கி இருக்கும் இஸ்ரோவின் திட்ட இயக்குனர் அண்ணாதுரையின் சொந்த கிராமம் இந்த கோதவாடிதான். அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் `அ, ஆ,' வை ஆரம்பித்த அண்ணாதுரைதான், இன்று இஸ்ரோவின் திட்ட இயக்குனராகி அனைவரையும் `ஆ'வென வாய்பிளக்க வைத்திருக்கிறார்.
அண்ணாதுரை தற்போது மனைவி, மகனுடன் பெங்களூர்வாசி ஆகிவிட்டாலும், அவரது பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் கோவையில்தான் வசித்து வருகிறார்கள். கடந்த வாரம் கோதவாடி அரசு நடுநிலைப் பள்ளியில் அண்ணாதுரையின் பெற்றோருக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அடுத்ததாக அண்ணாதுரை கோவை வரும்போது அவருக்கு அமர்க்களமான வரவேற்பளிக்க, கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளும் ஜரூராகத் தயாராகி வருகின்றன. ஆனால் அண்ணாதுரை அவருக்கு இருக்கும் அலுவல் நெருக்கடியில் கோவை வர வேண்டுமே? இந்தநிலையில் கோவை, பீளமேடு ராதாகிருஷ்ணா மில் காலனியில் ஒரு சாதாரண வீட்டில் வசிக்கும் அண்ணாதுரையின் பெற்றோர் மயில்சாமி, பாலசரஸ்வதி தம்பதி, அண்ணாதுரையின் தம்பி மோகனசுந்தரம் ஆகியோரை நாம் அணுகினோம். நம்முடன் மிக இயல்பாக உரையாடினார் மயில்சாமி.
``கோதவாடிதான் என் சொந்த ஊர். எனக்கு மூன்று மகன்கள். இரண்டு மகள்கள். அண்ணாதுரைதான் மூத்தவன். என் அப்பாவுக்கு நெசவுத் தொழில். குடும்பத்தில் அதிகபட்சமாக எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த நான், கோதவாடி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆனேன். 1957_ல், அதுவும் ஓராசிரியர் பள்ளி ஒன்றில் வேலை பார்க்கும் எனக்கு என்ன பிரமாதமான சம்பளம் இருக்கும்? இருந்தும் ஐந்து பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தையல் தொழிலும் செய்து வந்தேன்.
அண்ணாதுரை அப்போதே படிப்பில் சூரப்புலி. எட்டாவது படிக்கும்போதே அரசு உதவித் தொகை பெற ஆரம்பித்த அவன், இன்ஜினீயரிங் படிப்பு வரை தொடர்ந்தான். கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ.யும், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.இ.யும் (அப்ைளடு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்) படித்து முடித்தான். அவன் படிப்பை முடித்த உடனேயே புதுச்சேரியிலுள்ள `ஆரோலெக்' என்ற பிரெஞ்சு கம்பெனி வேலை தரத் தயாராக இருந்தது. ஆனால் அரசுப் பணத்தில் படித்து விட்டு அடுத்த நாட்டுக்காரர்களுக்கு வேலை பார்ப்பதா? என்ற எண்ணத்தில் அந்த வேலையை அவன் உதறித் தள்ளி விட்டான். அடுத்த மூன்று மாதத்தில் இஸ்ரோவில் அவனுக்கு வேலை கிடைத்தது. அங்கே ஓயாத ஆராய்ச்சிகள் மற்றும் `சந்திரயான் திட்டம் மூலம் இன்று உலகமே அவனைப் பற்றிப் பேசுகிறது. தூரத்து நிலவை இந்தியா தொடப்போவது பெருமைதானே?'' என்றார் மயில்சாமி.
அடுத்துப் பேசினார் அண்ணாதுரையின் தம்பி மோகனசுந்தரம். கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி முதல்வரான இவர், தமிழகப் பள்ளிகளுக்கான கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை எழுதி, தமிழக முதல்வரின் கையால் பாராட்டுப் பெற்றவர். அண்ணனைப் பற்றி ரொம்பவே சிலாகித்தார் அவர்.
``அண்ணன் படிப்பில் கெட்டிக்காரர் மட்டுமல்ல, அபார ஞாபகசக்திக்காரர். எட்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் பாடப்புத்தகத்தை ஒரே ஒரு முறை மட்டும் படித்து தேர்வில் கலக்கி முதல் மாணவனாக வந்துவிடுவார். எம்.ஏ., எம்.எஸ்.சி. படிப்பவர்களுடன் விவாதித்து கேள்விமேல் கேள்வி கேட்பார். கணிதமேதை ராமானுஜத்தின் நிரூபணமாகாத தேற்றங்களை (தியரிகளை) நிரூபிக்க முயல்வார்'' என்றவர், தனது அண்ணனைப் பற்றி இன்னும் சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
``இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் சந்திரனைச் சுற்றி ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பியிருந்தாலும், அவை நிலவின் நடுப்பகுதியை மட்டும்தான் ஆய்வு செய்திருக்கின்றன. ஆனால், இந்தியா அனுப்பியிருக்கும் சந்திரயான் விண்கலம் சந்திரனின் துருவப்பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் அண்ணன் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்குள்ள பத்திரிகைகளில் எல்லாம் அண்ணனின் படத்தை அட்டையில் வெளியிட்டு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தார்கள். கத்தார் போன்ற அரபுநாடுகளில் கட்டட வேலை செய்யப் போகும் இந்தியத் தொழிலாளர்களை இளப்பமாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் இப்போது அங்கிருந்து வெளிவரும் `கத்தார்' என்ற பத்திரிகை, `இந்தியாவில், சந்திரயான் விண்கலத்தை ஏவிய அண்ணாதுரை போன்ற நல்ல அறிவுத்திறமையுள்ள மக்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு நம்மிடம் அறிவு இல்லை. எனவே இனியாவது இங்கே வேலை செய்யும் சாதாரண இந்தியர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' என எழுதியிருக்கிறது.
நம் நாட்டைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள், இப்போது அமெரிக்காவின் `நாஸா' விண்வெளி ஆய்வுக்கழகத்தில் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாஸா அமைப்பு அண்ணனுக்கு எத்தனையோ முறை அழைப்பு அனுப்பியும் அவர் போக மறுத்துவிட்டார். அதுபோல `தமிழில் படித்தால் விஞ்ஞான அறிவு வளராது' என்ற கருத்துக்கு அண்ணன் எதிரானவர். தமிழ்வழியில் படித்த அவர்தான் இன்று இஸ்ரோவின் திட்ட இயக்குனராகவும், விஞ்ஞானியாகவும் இருக்கிறார்'' என்று சொல்லிக் கொண்டே போனவரை நாம் இடைமறித்து, ``கடைசியாக அவர் இங்கே எப்போது வந்து சென்றார்?'' என்ற கேள்வியைக் கிளப்பினோம்.
``அண்ணன் கோவை வந்து ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எங்கள் தங்கை மகளின் திருமணத்துக்குக் கூட அவரால் வரமுடியவில்லை. சீமந்தத்திற்காவது வருவாரா என்பதும் தெரியவில்லை. `3.8 லட்சம் கி.மீ. தூரத்துக்கு சந்திரயானைச் செலுத்தி, அதை நிலவுக்கு நூறு கிலோ மீட்டர் தூரத்தில் வட்டப்பாதையில் சுற்ற வைக்க வேண்டும். அது சாத்தியமான பின் வருகிறேன்' என்று அண்ணன் சொல்லிவிட்டார். அவரது வருகையை எதிர்பார்த்து இப்போது வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார் மோகனசுந்தரம்.
``சந்திரன் என்றால் நிலா. யான் என்றால் ஊர்தி. வாஜ்பாயும், அப்துல்கலாமும் அண்ணாதுரையிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் இந்த `சந்திரயான்' என்ற சமஸ்கிருத வார்த்தை, இந்தியாவின் நிலாப் பயணத் திட்டத்துக்குப் பெயரானதாம்.
நாம் விஞ்ஞானி அண்ணாதுரையுடன் தொலைபேசியில் பேசினோம். ``சந்திரயான் 1 விண்கலத்தை 100 கி.மீ. வட்டப்பாதையில் நிறுத்திய பின் அது இரண்டாண்டுகாலம் நிலாவை ஆராய்ந்து அங்கு கதிரியக்கம் உண்டா? நீர்நிலைகள், தனிமங்கள் உண்டா? நிலாவின் பருவநிலை என்ன என்பது பற்றியெல்லாம் ஒன்றுவிடாமல் ஆராய்ந்து, தகவல் அனுப்பும். அதன்பின் ஏவப்பட இருக்கும் சந்திரயான் 2, நிலாவில் எங்கே இறங்குவது என ஆராய்ந்து அங்கே ஓர் ஆய்வுக்கூடத்தை நிறுவி சந்திரயான் 1 செய்த ஆய்வுகள் சரிதானா என ஆராயும். அதன்பின் சந்திரயான் 3! அது நிலாவிலிருந்து எதையெல்லாம் எடுத்து வரமுடியும்? அங்கிருந்து வேறு கோள்களுக்கு விண்கலம் அனுப்ப முடியுமா? என ஆய்வு செய்யும். சந்திரயான் 4, நிலாவிலேயே காலனி அமைக்க முடியுமா? என ஆராயும்'' என்றார் அவர் அடக்கமாக.
நிலவைச் சுற்றி வரும் சந்திரயான் விண்கலத்தைப் பற்றித்தான் அவரது நினைவு முழுக்க இருந்த நிலையில், அவரது கோவை வருகை, பாராட்டு, பரிசளிப்பு பற்றியெல்லாம் கடைசி வரை நமக்குக் கேட்கத் தோன்றவில்லை.
Indian Space Prowess by Ahmed Ali (GM – Al Watan Gr. of Newspapers, Qatar)
While Indians are making computer chips, Arabs have not gone beyond potato chips.
The exploratory mission of the Indian spaceship to the moon launched on Friday from an island in the Bay of Bengal grabbed my attention
The unprecedented space mission is a historical one in that it aims to send a probe that will go around the planet Earth to study deposits of minerals and other elements deep in the womb of our planet.
This mission reflects the terrific scientific capabilities Indians have acquired to be able to explore the space with their science.
While the Indians have proved their capabilities in manufacturing computer chips and CDs, the Arabs are still unable to produce anything beyond potato chips and Al-Falafel (an Arabic snack of pokoda kind made out of pulses).
Away from the great Arab success in producing Al-Falafel with the Egyptian flavour or with any other flavour, India seeks to enroll itself as a member of the space club through its scientific project. It intends to launch 60 space missions till 2013 aimed at exploring the moon.
What distinguishes the Indian space programme is that it is the cheapest in terms of expenses at the international leve. The Indian budget for the space programme is estimated to be $700 millions compared with US $16 billions.
In appreciation of this Indian achievement, I would like to congratulate all Indians and express my deep respect for them and for their country.
I would like to extend my sincere congratulation to the Indian community in our country, especially to those simple workers who gather in certain areas of Doha at the weekend.
The great Indian scientific achievements pulled off by the indigenous scientific capability should compel us the Arabs to take a critical look at our own poor track record in science and technology and ask ourselves this question: What have we done for our present and for the future? Is our scientific underdevelopment caused by our political regimes or is it the result of the weaknesses of our education system or the bankruptcy of Arab mentality?
While we have become specialists in fabricating conflicts among ourselves, creating disagreements and igniting seditions and divisions, other nations of the world are busy pulling off one scientific feat after another and one civilizational victory after the other.
We have to be frank with ourselves and look for the reasons that have put India in the forefront of scientific and technological march and made it a nuclear power while the Arab mentality has no identity.
What is the reason for the Indian achievements that have become a trademark of the scientific superiority and technological sophistication while the Al-Falafel that used to be the pride of the Arab heavy industries has become an industry that is managed by Asian labourers in all restaurants in the Gulf states.
What makes me feel sad is the bad and wrong impression we have entertained about anything that comes from India to our countries. We though that India has only drivers, kema food or sauce bottles whereas the fact is that a large number of prominent scientists, engineers, managers and thinkers spreading around the world have Indian identity. The Indians have taken a big step towards exploring the space with the launch of their moon mission. In recognition of its scientific achievements, we have to change the way we think of India and Indians and start dealing with them accordingly because they belong to a great nation that has carried its flag into the space.
After India succeeded in launching Chandrayaan, we have to treat simple Indian labourers with greater respect because they deserve that.
What makes us feel jealous is that while there is a stiff competition among several nations in our neighbourhood to explore the space, the Arabs have been specializing in the art of invading one another’s territory; while other nations are vying with one another in reaching out to the stars, Arabs are busy with poems and romance. The only thing we can do well in our lives is singing for the moon, or crying over our sad situation.
(The author is General Manager of Al Watan Group of Newspapers, Doha, Qatar).
சந்திரயான் - கத்தார் தேசத்தில் இந்தியர்களின் மதிப்பு
Posted by
நா. கணேசன்
at
2
comments
திராவிட மொழிகளில் செம்மொழி - தகுதியும், அரசாணையும்
கன்னடம், தெலுங்கு இரண்டு மொழிகளின் பண்டை இலக்கியங்களைச் "செம்மொழி இலக்கியங்கள்" என்று மத்திய அரசு சென்ற நவம்பர் ஒன்றாம் தேதி அறிவித்துள்ளது. தேர்தலுக்குச் சில மாதங்களே இருப்பதால் கர்நாடக, ஆந்திர மாநில அரசுகள் கொடுத்த அரசியல் அழுத்தங்களினால் இந்த அரசாணை (Government Order) கிடைத்துள்ளது. முதன்முதலில் இத்தகுதியை இந்திய அரசு அறிவித்தது தமிழுக்குத்தான். ஓர் ஆண்டு கழித்தே வடமொழியைச் செம்மொழி என்று 2005-ல் அறிவித்தது. தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்கள் கிடைத்ததாலும், தமிழ்நாட்டு அரசாங்கம் எடுத்த முயற்சிகளாலும், ஏறத்தாழ 100 ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியர்கள் உலகப் பல்கலைக் கழகங்களில் நடாத்திய ஆராய்ச்சி முடிபுகளாலும் தமிழைச் செம்மொழி என்ற அரசாணையைப் பெறுதல் சாத்தியம் ஆனது. மேலைநாட்டார் என்று எடுத்தால், எல்லீஸ், கால்டுவெல், போப், தொடங்கி இன்று இருக்கும் பேராசிரியர்கள் சுவலபில், பார்ப்போலா, ஹார்ட் போன்றோரின் பணி நினைவுக்கு வருகிறது. நண்பர் ஜார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி) எழுதிய தமிழின் செம்மொழித் தகுதி பற்றிய கடிதம் இணைய உலகிலும், அரசியல் அரங்கங்களிலும் வெகுவாகப் பேசப்பட்டது.
http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilClassicalLanguage/TamilClassicalLgeLtr.html
இன்னும் சில திராவிடவியல், தமிழ்ப் பேராசிரியர் பீடங்களைப் பல்கலைக்கழகங்களில் நடுவணரசும், தமிழ்நாட்டு அரசும் மக்களும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படுத்த 2004-ன் செம்மொழி அறிக்கை காலப்போக்கில் உதவும்.
தமிழ்நாட்டின் அரசாங்கம் செம்மொழி அறிவிப்பை டெல்லியிலிருந்து பெற முயற்சிகள் மேற்கொண்டபோது சில கன்னடப் பேராசிரியர்கள் தமிழ் இலக்கியத்தின் தொன்மை குறித்தே சில கேள்விகள் எழுப்பித் தடைகள் போட முயன்றனர் என்பதை 'அவுட்லுக்' இதழின் கட்டுரை (2004) தெரிவிக்கிறது. ஆனால் தமிழுக்கு அத்தகுதி கிடைத்ததும், கன்னடத்துக்கும் வேண்டும் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.
திராவிட மொழிகளின் முதல் கல்வெட்டு, இலக்கியங்கள்:
K. Zvelebil, The Smile of Murugan - On Tamil literature of South India. Leiden: E. J. Brill, 1973. The Chart I in page 9 is reproduced below:
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9802&L=INDOLOGY&P=R5787
கன்னட கவிராஜமார்க்கம் (கி.பி. 850), தெலுங்கு நன்னய பட்டரின் மகாபாரதம் (11-ஆம் நூற்றாண்டு), மலையாள இராமசரிதம் (14-ஆம் நூற்றாண்டு) - முதல் இலக்கியங்கள் காலத்தால் பிற்பட்டும், பாடுபொருள் ஆரியமொழி இதிகாசங்களையும், இலக்கணத்தையும் அடியொற்றி இருப்பதைக் காணலாம்.
2004-ஆம் ஆண்டு மத்திய அரசின் செம்மொழி அறிவிப்பின் ஏற்படும் விளைவுகளை மொழியியலார் மா. சு. திருமலை எழுதியிருந்தார்:
http://www.languageinindia.com/oct2004/classicaltamil1.html
இந்த அறிவிப்பின் பின்னர் தெலுங்கு, கன்னட நாட்டார் தங்கள் மொழிகளைச் செம்மொழிகள் (classical languages) என்னும் அரசாணை பெற முயற்சிகளை முடுக்கி விட்டனர்; தம் இலக்கியங்கள் 2000-2400 ஆண்டுகள் பழமை உடைத்து என்று அவ்வரசுகளும், ஆசிரியர்களும் அறிவித்தனர். (உண்மையில் இந்தச் சிலாலிகிதங்கள் பிராகிருதத்தால் ஆனவை, கன்னடமோ தெலுங்கோ அல்ல என்பது வேறு விஷயம். பாரத, இராமாயணங்களின் வழிநூல்கள், சம்ஸ்க்ருத இலக்கணம் பாணினீயத்தின் எழுத்துக்களை அப்படியே ஏற்பதால் வடசொற்கள் ஏராளமாகக் கன்னடம், தெலுங்கில் உள்ளன. வடமொழிச் சொற்கள் இல்லாமல் தமிழைத் தவிர ஏனைய மூன்று திராவிட மொழிகளும் இயங்கா.) உதாரணமாக, தெலுங்கு 2400 ஆண்டுப் பழமைக்கு உரித்தனாது என்றனர்!!
Telugu is 2,400 years old, says ASI
கன்னட நாட்டினர் செம்மொழிக்கு வேண்டிய நான்கு தகுதிகளும் கன்னடத்திற்கு உள்ளது என்றனர்:
http://www.hindu.com/2005/05/27/stories/2005052703230500.htm http://www.hinduonnet.com/2006/08/08/stories/2006080812740300.htm
மத்திய அரசு முன்பே நிர்ணயித்துள்ள நான்கு தகுதிகளும் என்னென்ன? என்று பார்ப்போம்.
Criteria For Classical Language
New category of languages as `Classical Languages' was created by Government of India, and the following criteria were laid down to determine the eligibility of languages to be considered for classification as a `Classical Language':-
i) High antiquity of its early texts/recorded history over a period of 1500-2000 years.
ii) A body of ancient literature/texts, which is considered a valuable heritage by generations of speakers.
iii) The literary tradition be original and not borrowed from another speech community.
v) The classical language and literature being distinct from modern, there may also be a discontinuity between the classical language and its later forms or its offshoots.
Only two languages, viz. Tamil & Sanskrit have been declared as `Classical languages' originally.
மத்திய அரசின் நிபந்தனைகளில் முக்கியமானது செம்மொழி என்றால் அதன் இலக்கியம் தனித்தன்மை பொருந்தியதாயும் 1500 ஆண்டுகளாவது பழமை உடையதாகவும் இருத்தல் அவசியம். அந்த நிபந்தனைகளைக் கன்னட, தெலுங்குப் பண்டை இலக்கியங்கள் பூர்த்தி செய்வதில்லை. இதனாலேயே தமிழ்ப் பேரா. மு. இளங்கோவன் தன் வலைப்பதிவில் "புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கொண்ட கதை" என்று குறித்துள்ளார்.
அரசியல் அழுத்தம், கிளர்ச்சிகளால் அடைந்த கன்னடச் செம்மொழி அறிவிப்பு கர்நாடகாவில் ராஜ்யோத்சவக் கொண்டாட்டங்களில் ஒரு பங்காக இந்த ஆண்டு இருந்தது. அது பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியைப் பார்க்கலாம். ஆயினும், சென்னை உயர்நீதி மன்றில் தகுதி நிபந்தனைகளைப் பற்றி வழக்குத் தொடுத்துள்ளனர். அவ்வழக்கின் முடிவு என்ன? நீதிபதிகளின் தீர்ப்பைக் கூர்ந்து படிக்கவேண்டும். மத்திய அரசு நியமித்த அறிஞர் குழுவின் உறுப்பினர் முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் இருமொழிகளும் செம்மொழி நிபந்தனைகளுக்குப் பொருந்தாமையை விளக்கியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி,
http://timesofindia.indiatimes.com/India/Telugu_Kannada_get_classical_tag/articleshow/3660666.cms
" The formal declaration would take place on the occasion of the Rajyotsava day in Karnataka and Andhra Pradesh formation day that falls on November 1. However, the decision is subject to the outcome of a pending writ petition in Madras high court.
Decision to grant classical status has come after pressure from politicians of Karnataka and AP. PM's Office had refused to get involved into the emotive issue. Asked for guidance by the culture ministry, PMO said experts group view would be final. A source in the expert group pointed out how VC Kulandai Swamy, a member of the committee, strongly argued that both the languages did not fulfill criterion of antiquity set by the government.
Both the languages have failed on other criterion also. These include: a body of ancient literature which is considered a valuable heritage, literary tradition be original and not borrowed from another speech community and that classical language should be distinct from its modern form."
செம்மொழி அரசாணை அரசியலை 4 ஆண்டுகளாய் அவதானித்ததில் ஒன்று மனத்திற்குப் புலப்பட்டது. கலைஞர் தன் நிலைப்பாட்டைச் சொல்லும் அறிக்கையை நேற்றுப் பார்த்தேன். தமிழரின் ஒற்றுமையின்மை நெல்லிக்காய் மூட்டையாக இருக்கிறது. ஒருவேளை ஈழவர் தெலுங்கோ கன்னடமோ பேசுபவராக இருந்திருப்பரேல் இந்நேரம் டெல்லியில் நம் அண்டை மாநிலத்தவர் அவர்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொடுத்திருப்பர்.
மலையாளத்துக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் வேண்டிக்கொண்டுள்ளார். செம்மொழி அரசாணை பெறும் அரசியலை நோக்கும்போது இனிவரும் ஆண்டுகளில் எழுத்தும் பண்டை இலக்கியங்களும் இல்லாத தோடா, பிரகுவி, துளு, முண்டா மொழிகளான கசி, சாந்தாலி இன்ன பிறவும் செம்மொழி அறிவிப்பைப் பெற வாய்ப்புக்கள் உள்ளன.
~ நா. கணேசன்
மேலும் உசாவ,
http://www.chennaitvnews.com/2008/11/classical-joke.html http://www.hinduonnet.com/fline/fl2122/stories/20041105004310600.htm
Posted by
நா. கணேசன்
at
11
comments
சந்திரயான் = திங்கட்செலவு/நிலவூர்தி
தமிழின் பல வலைப்பதிவுகளில் 'சந்திராயன்' என்று எழுதப்படுகிறது. அது பிழையானது. அனேகமாக இந்தச் சொற்பிழை பத்திரிகைகளின் வழியாகப் புகுந்திருக்கலாம். நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள உந்தியின் பெயர் 'சந்திரயானம்', இது வடமொழிச் சொல்லாகும்.
யாநம் - சம்ஸ்க்ருத அகராதி தரும் பொருள்:
yAna mfn. leading , conducting (said of a road ; `" to "' gen. or adv. in %{-trA4}) RV. ; (%{yA4nI}) f. a path , course TS. MaitrS. Ka1t2h. (cf. g. %{gaurA7di}) ; n. (ifc. f. %{A}) a journey , travel ; going , moving , riding , marching &c. to (loc. or comp.) or upon (instr. or comp.) or against (acc. with %{prati}) Mn. MBh. &c. ; a vehicle of any kind , carriage , waggon , vessel , ship , litter , palanquin RV. &c. &c. ; (with Buddhists) the vehicle or method of arriving at knowledge , the means of release from repeated births (there are either 3 systems , the %{zrAvaka-yAna} , the %{pratyeka-buddha-y-} or %{pratyeka-y-} , and the %{mahA-y-} ; or more generally only 2 , the %{mahA-yAna} or `" Great method "' and the %{hina-y-} or `" Lesser method "' ; sometimes there is only `" One Vehicle "' , the %{eka-yAna} , or `" one way to beatitude "') SaddhP. Dharmas. 2 (cf. MWB. 159 &c.)
ஹரி சென்ற வழி = ஹரியானம். இதுவே ஹரியானா மாநிலப்பேர். (பஞ்சாப் = ஐயாறு, பிகார் = புத்த விகாரைகள் நிறைந்த நாடு.) மகாயாநம், ஈனயாநம் - பௌத்த மதப் பெரும்பிரிவுகள். மகாயானம் - பெரிய/உயர்ந்த பாதை/ஊர்தி (போதிசத்துவர்களைத் தேவதைகளாக வழிபடும் வழி ~ ஒருவகை பக்திமார்க்கம்). மஹாயானத்தில் பல சூத்திரங்கள் வடமொழியில் உள. ஹீனயானம் - சிங்களர்களின் தேரவாதம், இழிந்த/தாழ்ந்த வழி/ஊர்தி - இது நாத்திக அடிப்படையினால் இப்பெயரை மஹாயானத்தார் அளித்தனர். மஹாயானம் - வடநாடுகள் ஜப்பான், கொரியா, சீனா, நேப்பாளம். ஹீனயானம் - தென் இலங்கை, அங்கிருந்து பர்மா, தாய்லாந்து.
மேலும், சில சொல்லாய்வுச் செய்திகள்:
சந்திரயானில் சூரியஒளி இல்லாத இருட்பகுதியில் ராடார் மூலம் படம் எடுக்கும் கருவிகள் இருக்கின்றன. இதில் அமெரிக்காவின் ஜான்சன் விண்நிலையத்தின் பங்கும் உண்டு. சந்திரயான் (= திங்கட்செலவு/நிலவூர்தி) திட்டத்தின் இயக்குனர் திரு. மயில்சாமி அண்ணாதுரை பொள்ளாச்சி அருகே உள்ள கோதைவாடி என்னும் ஊரினர். கோவை பொறியியற் கல்லூரிகளில் பயின்றவர். கோதை சேரர்களுக்கான குடிப்பெயர். கோதை மன்னர்களின் பாடி (முகாம்) இருந்த இடப்பெயர். கொங்குநாட்டின் ஆண்பெயர்களில் -சாமி என்னும் விகுதியைப் பரக்கக் காணலாம். பெரியசாமி, சின்னச்சாமி, மயில்சாமி, பழனிச்சாமி, குழந்தைசாமி, .... தமிழ் இலக்கியத்தில் முதலில் இவ்வாறு இடம்பெறுவதும் கொங்குவேளிரின் பெருங்கதையில் சீவகசாமி தான். பின்னர் சீகாழி அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனையில் ராமசாமி என்பார்.

பொள்ளாச்சி போன்ற ஊர்களில் நடக்கும் வாரச் சந்தைகளில் வணிகருக்குப் பக்கத்தில் உதவியாக வேலைக்கு இருக்கும் ஆட்களுக்கு 'அள்ளைக்கை' (அள்ளக்கை) என்பது கலைச்சொற்பெயர்(technical vocabulary). இதை நன்கு விளக்கியுள்ள பதிவை இரசித்துப் படித்தேன்.
http://naiyaandinaina.blogspot.com/2008/09/blog-post_24.html
"முதலாளித்துவம் பரவியுள்ள இந்த சமூகத்தில், சந்தைக்கு செல்லும் பெரும் முதலாளிமார்கள் ஒரு சரக்கை ( சாராயம் அல்ல) தகுதி ஆராய எடுத்து பார்க்க வேண்டி வரும், அந்த வேளையில் குனிந்து சரக்கு எடுக்க முடியாது, அதற்கு அவர்களின் தொப்பையும் இடம் கொடுக்காது, அவர்களின் கையும் அழுக்கு ஆகிறும், மேலும் அவர்களின் பை திருட்டு போகும் வாய்ப்பும் அதிகம் அதனாலே அவங்க தங்களோட ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போவாங்க, அவர் அவர் கையாலே அள்ளி முதலாளியிடம் காண்பிப்பார்கள். அவர்களே பின்னாளில் அள்ள-கை என்று அழைக்கப் பட்டார்கள். பின்னாளில் இதுவே மாறி அல்லக்கை என்றாகி விட்டது. வெகு நாளுக்கு பிறகு ஏவிய வேலை செய்யும் அனைவரையும் அல்லக்கை என்று அழைக்கலானார்கள் மக்கள்."
அள்ளைக்கை போலவே, சந்தை வணிகத்தில் இருந்து தமிழ்ப் பயன்பாட்டுக்கு வந்த இன்னொரு தொடர்: "கூறுகெட்ட பையல்". "காய்கறிகளை தரம் பிரித்து கூறு கூறாய் கட்டி வைப்பார்கள், அந்தக் கூறுகளை அதன் தரத்துக்கேற்ப விலை சொல்வது அந்தக் காலத்து சந்தைகளில் வழக்கமாய் இருந்தது, அதை நானும் என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஆகவே கூறு என்பது தரம் என்னும் பொருளில் வருகிறது, மற்றும் காய்களில் பெரிய காய்களான பூசணி, சேனைக்கிழங்கு போன்றவைகளை கூறு போட்டு விற்பார்கள், இங்கு கூறு போடுதல் பிளத்தல், அல்லது அறுத்தல் என்று பொருள் வரும். ஆகவே தரம் கெட்டுப் போனவர்களை, நல்ல வழக்கங்களிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு தீய வழக்கத்துக்கு ஆளானவர்களையும் 'கூறுகெட்ட பயல்' என்று அழைப்பது வழக்கத்திற்கு வந்திருக்கிறது." (தமிழ்த் தேனீ, மின்தமிழ்).
முதலில் திரைப்படங்களில் கோவை மாவட்ட நடிகர்கள் கவுண்டமணி, சத்தியராஜ் போன்றோரால் அறிமுகம் ஆகி பின்னர் பதிவுலகில் அடிக்கடி பயனாகும் சொல்: அள்ளைக்கை. இதனை 'அல்லக்கை' என்று எழுதுதல் சரியல்ல. அள்ளை = அடுத்திருப்பது (side). தமிழில் நிறையச் சொல்தொகுதிகளில் இரண்டாவது அட்சரமாக -ள்-/-ட்-/-ண்-/-ண்ட்- வரும். அச் சொற்றொகுதிகளின் பொருளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கும். உதாரணம்:
(அ) குளம்/குடம்/குட்டை/குண்டா
(ஆ) வளை-/வடம்/வணங்கல்/வண்டி
(வண்டி - வளைந்த சக்கரம் உடையது. வடம் = கயிறு. கயிறு போன்ற விழுதுகள் நிலம் நோக்கித் தொங்குவதால் ஆலமரத்துக்கு 'வட விருட்சம்' என்றே வடமொழிப் பெயர்.)
அதேபோல், அள்ளைக்கை எனுஞ் சொல்லில் இருக்கும் "அள்ளை":
(இ) அள்ளை/அடுத்த/அட்டை/அண்டை.
அன்புடன்,
நா. கணேசன்
கிருஷாங்கினி கவிதைகளில் - அள்ளையில் தோன்றும் சிறகுகள்
பிரம்ம விருட்சம்
------------------------
கிருஷாங்கினி
இடைவெளி இன்றி அந்த உயர
மரத்தில் அடுக்கப் பட்டிருந்தன
கம்பளிப் பூச்சிகள்-
நெருக்கி யடித்தாலும் கனவுகள் சுமந்தபடி.
எட்டா உயரத்தில்
ஏணி ஏறி, உச்சி வெயிலில்
எட்டிவந்தன தீயின் கங்குகள் சுற்றிலும்;
அங்கிங்கென்று அலைந்து சிதறியவை
ஒன்றன்மீது ஒன்றேறி-
கொதித்துக் கொத்தாகிக் குவியலாயின.
தப்பிக்கும் எண்ணத்தில்
சற்றே பின் நாளில் வெளிவரும் உமிழ்நீர்
உடனே சுரக்கக் கூட்டுப்புழுவாக
முயன்று தோற்றுத் தொங்கின
இழை முடிவில் வாய் வழியே-
கொத்தாகிக் குவியலாயின கொதித்து.
அள்ளையில் இறகு முளைத்து
வண்ணம் பல பரப்பி
அனைவரையும் ஈர்க்கும் -அவை
வண்ணத்துப் பூச்சிகள் ஆகாமலேயே
நிணநீர் வெளிவர, பச்சை ரத்தம்
பொசுங்கப் பரவிய சதை மணத்துடன்
கொதித்துக் கொதித்துக்-
கொத்தாகிக் குவியலாயின.
பின் விளைவு
-----------------
க்ருஷாங்கினி
மேல் வறண்டு வேருக்குள் உயிரோடி
காத்திருக்கும் அருகம்புல்லும்
சிறுபரப்பில் மண் தேங்கி, விருட்சம்
உள் உறிஞ்சி வேர்விட உறங்கும்
அரசும் ஆலும்.
ஆங்காங்கே மேல் மண்ணில் தூவித்தூவி
பறந்து காற்றில் படரும் வேருக்கும்
வெளவால், பறவை கழிவுடன்
வேரையும் உடன் இருத்தி மேலிருந்து
புவி விசையில் கீழ் இறங்கும் கனவிதையும்,
எப்போதும் நசநசத்த ஈரப்பரப்பில்
வேறற்ற காளானும் பாசியும்கூட
மண்ணுக்குள் வீடுகட்டி மேலெழும்பி
மற்றதை அரித்துத் தின்னும்
அள்ளையில் அன்றே முளைத்து, பறந்து
திரிந்து, சில மணியில்
செத்துமடியும் கரையானுக்கு
ஒளித்துளியாய் இறக்கையும்
முளைவிடக் காரணமானது
மழையின் பின்-விளைவு.
Posted by
நா. கணேசன்
at
12
comments
ஒளிச்சேர்க்கை அறிவியல் அளிக்கும் மின்சாரம்
உலகத்தில் சூரிய ஒளியின் ஆற்றலை ஒளிச்சேர்க்கை (Photosynthesis) என்னும் செயலால் தமக்குப் பயன்படும் ஆற்றலாகத் தினந்தோறும் தாவரங்கள் மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் ஓர் ஐம்பது ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்து போகும் நிலை, சொல்பம் மிச்சம் இருந்தாலும் எட்டாத உச்சிக் கொம்புக்கு அதன் விலை ஏறிவிடும். எனவே, ஒளிச்சேர்க்கை செயல்படும் விஞ்ஞானத்தை அறியப் பலவகை ஆய்வுகள் நடக்கின்றன.
அமெரிக்காவிலே முதன்மையான பொறியியற் கல்லூரி ஆய்வகம் MIT. அங்கே பணியாற்றும் வேதியியல் பேராசிரியர் டேனியல் நோசீரா தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜன் வாயுவைப் பிரித்தெடுக்கும் எளிய, செலவு அதிகம் ஆகாத மின்பகுப்பு (electrolysis) முறைக்குப் புதிய ஒரு வினையூக்கியை (catalyst) கண்டுபிடித்துள்ளார். இக் கிரியாஊக்கியைப் பாவித்தால் தற்போதுள்ள முறைக்கு ஆயிரத்தில் ஒரு பங்கே செலவாவதாலும், சாதாரணமான அழுத்தம், வெதுமம், பிஎச் எண்களில்(room pressure, temperature, pH value) வேதிவினை நிகழ்வதாலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு சாதனை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
இவ்வரிய கண்டுபிடிப்பால் சூரியஒளியில் இருந்து சோலார் நுட்பத்தால் ஆக்கப்படும் மின்சக்தியை இரவில் உபயோகிக்க வழிவகை கிடைத்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில் நுட்பத்தின் பலனாக, ஒரு வீட்டின் மின்தேவையைப் பூர்த்திசெய்யும் சோலார்+மின்கலம் அமையம் (photovotaic + fuel cell system) சில இலட்சம் ரூபாய்களுக்குச் சந்தைக்கு வரும்.
http://web.mit.edu/newsoffice/2008/oxygen-0731.html
http://www.sciencemag.org/cgi/content/abstract/1162018v1
Posted by
நா. கணேசன்
at
3
comments
துணைவேந்தர் Dr. S. அகத்தியலிங்கம்
முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவின் வாயிலாக, பேரா. ச. அகத்தியலிங்கம் (மாரியப்பாநகர், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) வாகனவிபத்தில் இறந்தார் என்றறிய நேர்ந்தது:
http://muelangovan.blogspot.com/2008/08/blog-post_05.html
அவரது புத்தகங்களின் பட்டியலை அடுத்துத் தருகிறேன். தினத்தந்தி நாளிதழிலும் செய்தி வெளியாகியுள்ளது (தினத்தந்தி போன்றவை யூனிக்கோடுக்கு மாறினால் அவ்விதழ்ச் சேதிகள் விரைவில் பலருக்கும் சென்றடையும். தமிழ்நாட்டுப் பத்திரிகை நிர்வாகத்தை அறிந்தோர்கள் குமுதம், விகடன் போலவே மற்றவற்றையும் யூனிகோடு குறியேற்றத்திற்குச் செல்லத் தூண்டுங்கள். பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.)
http://www.dailythanthi.com/article.asp?NewsID=430053&disdate=8/5/2008
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மனைவியுடன் விபத்தில் சாவு கார் டிரைவரும் பலியானார்
வானூர், ஆக. 5, தினத்தந்தி
புதுவை அருகே நடந்த விபத்தில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மனைவியுடன் பலியானார். கார் டிரைவரும் மரணம் அடைந்தார்.
முன்னாள் துணைவேந்தர்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அகஸ்தியலிங்கம் (வயது 75). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகர். அகஸ்தியலிங்கம் நேற்று பகலில் சென்னையில் இருந்து மனைவி பொன்னம்மாள் (70), பேத்தி லதா (19) ஆகியோருடன் ஒரு காரில் சிதம்பரத்துக்கு வந்துகொண்டு இருந்தார். காரை ஜீவபாலன் (33) என்பவர் ஓட்டிவந்தார்.
பகல் 12.50 மணி அளவில் கிளியனூருக்கும், தைலாபுரத்துக்கும் இடையே கார் வந்துகொண்டு இருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதியது.
விபத்தில் பலி
இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த முன்னாள் துணைவேந்தர் அகஸ்தியலிங்கம் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக செத்தார்
அவரது மனைவி பொன்னம்மாள், பேத்தி லதா, கார் டிரைவர் ஜீவபாலன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
ஆஸ்பத்திரியில் 2 பேர் சாவு
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பொன்னம்மாள், கார் டிரைவர் ஜீவபாலன் ஆகியோர் இறந்தனர். படுகாயம் அடைந்த லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Posted by
நா. கணேசன்
at
0
comments