Award at 48th TNF Convention, Mesquite, Texas

There was a grand 48th National Annual Convention of the Tamil Nadu Foundation conducted on May 27-29, 2022 at Mesquite, Texas. $ 1.8 million will be donated to Tamil mediums schools run by the Government all over Tamil Nadu. We sincerely thank the organizers for their grand fund raising efforts.  For the purpose of 1) poorest of the poor Tamil Nadu government school children to reduce the dropout ratio and help slow learners and 2) all the 22 Tamil Nadu government schools for the challenged children. The fund will be deposited as an Endowment and only the annual interest will be used for the above 2 needs.

I was honored with a prestigious award by TNF at the event for researches into the research on the relations of the Iron Age Tamil country with the Indus Civilization. BTW, Tamil name for Mesquite wood is Parambai. There is a town called ParambaikkuDi in Ramnad district. It is now ParamakkuDi.





















Mesquite :: பரம்பை மரம்
------------------------

ஆங்கிலத்தில் மெஸ்கிட் எனப்படும் மரம் பாலை நிலங்களில் வளர்வது. தமிழில் பரம்பை மரம் எனப்படுவது. பொள்ளாச்சியை வளப்படுத்தும் பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத்திட்டம். இதில், பரம்பிக்குளம் பரம்பை (mesquite) மரம் இருப்பதால் பெற்ற பெயர்.  வடமொழியில், சமி, வஹ்னி/வன்னி மரம்.

பரம்பை (Indian Mesquite tree), அதன் பெயரால் அமைந்த பரம்பைக்குடி - கல்வெட்டு:
https://groups.google.com/g/minTamil/c/FMwwYRRi22g/m/yUrGtENcAAAJ

English has its own rhythm, Look at the genus of Mesquites all across the World,
there are 40+ species of Mesquite trees,
https://en.wikipedia.org/wiki/Mesquite
Parambai is one such Mesquite, and Tamil botanists choose that English name to write in English. Let me give some examples from Madras Tamil Lexicon. கண்டி - சிந்தி மொழியில், தெலுங்கில் ஜம்மி <சம்மி < சமி .. கன்னடம் : பெரும்பெ, மலையாளம் : பரம்பு, தமிழ் - பரம்பை. https://www.flowersofindia.net/catalog/slides/Khejri%20Tree.html
https://en.wikipedia.org/wiki/Prosopis_cineraria

Prosopis specigera (Parambai) - Salem District Manual, vol. 2 1883
https://books.google.com/books?id=_ZEIAAAAQAAJ&
Also, see Gamble (Flora of Madras Presidency).

சீமைப் பரம்பை ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வருவது.
Seemai parambai = Prosopis juliflora
https://www.flickr.com/photos/dinesh_valke/2222290893
https://www.flickriver.com/photos/dinesh_valke/2275699043/

கதிரம் என்னும் கருங்காலி (அ) அசுவத்தம் என்னும் அரைசு - இரண்டும் தாய்த்தெய்வம் கொற்றவைக்கு உரியவை என்பது இந்திய மரபு. அரைசி என்னும் பெயரே அதனால் ஏற்பட்டது. அரை என்பது அரச மரம் (தொல்காப்பியம்).

பரம்பை என்னும் வன்னி மரம் சிவனுக்கு உரியது. பல சிவ ஸ்தலங்களில் வன்னி (=பரம்பை) மரம் ஸ்தல விருட்சம். வன்னி (வஹ்னி) என்னும் வடசொற் பெயர் சங்க காலத்திலே தமிழ்நாட்டில் வந்துவிட்டது. இடுகாட்டில் விடங்கர் வழிபாடு, முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன. அப்போது வன்னி மரம் குறிப்பிடப்படுகின்றது. அந்தச் சங்கப் பாடலை விரிவாகக் காண்போம்.

ஞெலிகோல்: வேள்வியில் தீ உருவாக்கும் முறை:
http://www.indictoday.com/long-reads/journey-here-to-eternity-vedic-ritual/
https://www.researchgate.net/figure/Instrument-used-for-production-of-yajna-agni_fig1_314550047
பாஞ்ஞல் கிராமம் (பாலக்காடு) அதிராத்ரம், 1975.
மிக அரிய ரிக்வேத வேள்வி இங்கே தான் இன்னமும் இருக்கிறது
ப்ரிட்ஸ் ஸ்டால் (மறைந்துவிட்டார்), பார்ப்போலா போன்றோர் பதிவு செய்த அதிராத்ரம்
https://www.hindu-blog.com/2011/04/kerala-panjal-vedic-yajna-athirathram.html
https://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/article28961667.ece#
கதிரம் (அ) அரசு கட்டையும், பரம்பை (= சமி/வன்னி, mesquite)  மரக்கட்டையும்
நெரித்து வேள்வித் தீயைத் தொடங்குவர். அரணி என்னும் வேத ஞெலிகோலில்
கதிரம் (பெண்), வன்னி (ஆண்) பாகங்கள் உள்ளன.பாம்பை, கருங்காலி மரங்கள் ஒரேவிதமான இலைகள் கொண்டவை.

பரம்பை என்னும் வன்னி மரம் பற்றிய சங்க இலக்கியச் செய்தியும்,
விடங்கர் வழிபாடு இடுகாட்டில் பரம்பையினோடு என்பதற்குப் பொருளும்
பின்னர் காண்போம். தேவாரத்தில் 50 இடங்களில் பரம்பை (=வன்னி) மலர்
சிவன் சூடுவதாக வரும், காரணம் இதுவே.

முதலில், கொற்றவையின் பூசகன் அட்டணங்கால் போட்டு கதிரை (கருங்காலி)
மர வாதில் வீற்றிருந்து வாகனமான புலியை ஏவும் சிந்து முத்திரைகள் பல
கிடைத்துள்ளன.
https://groups.google.com/forum/#!topic/houstontamil/Zu7hoFi9cbI  
 இவை கருங்காலி மரம் என்று ஆய்ந்து முதலில் எழுதியவர்
நியூ யார்க் மாகாண விவசாயியும், தொல்லியல் அறிஞருமான வால்ட்டர் ஃபேர்செர்விஸ்
ஆவார்.

வாலையின் பூசகன் சேலை மரத்தில் கொற்றியின் புலியை ஏவும் காட்சி:
Figure 11. Shaman on the tree and an attentive tiger below,
https://archive.org/stream/IVCReligionByNagaGanesan2007/IVC_religion_by_Naga_Ganesan_2007#page/n5/mode/2up

சேலை - சீலை - உறையைப் பட்டையாக உடுத்த வேலமரங்கள்.
கதிரம் - வடமொழியில் வழங்குவது, கதிரகாமம் - இம்மரங்கள் கொண்ட வனம். கதிராமங்கலம் - சோழர் குலதேவதை வனதுர்க்கை கோயில் உள்ள இடம், அங்கே, இராஜராஜன் சார்த்திய உடைவாள் இருக்கிறது என்பர்.

வேள்விகள் தொடங்க, பரம்பை என்னும் வன்னிக் கட்டையையும்,
அரசு (அ) கருங்காலிக் கட்டையையும்ஞெலிகோலாகக் கடைந்து தீ எழுப்புவது
மரபு. 3500 ஆண்டுகளாய்ப் பதிவாகியுள்ள “அரணி”யால் தீக்கடைதல் இது.
நாலாயிர பாசுர விளக்கங்கள், உபநிஷதங்களைப் பற்றிய உரைகளில்
அரணிக்கு பரம்பை (வன்னி) தவறாது இடம்பெறுகிற மரம் ஆகும்.
முண்டக உபநிஷதத்தில் அரணி என்பதன் விளக்கத்தில் பரம்பை
என்று குறிப்பிடப்படுதலை முன்னர் கொடுத்துள்ளேன்.

அரசு, கருங்காலி (acacia catechu) - தாய்த்தெய்வத்துடன் தொடர்புடையது.
சிந்து முத்திரைகளிலே கருங்காலி மரக் கிளையில் அம்மையின் பூசகன்
அமர்ந்து, கீழே உள்ள புலியை (வாகனத்தை) ஏவுவதைக் காணமுடியும்.
அரச இலைகளால் இயன்ற தோரணத்தின் (கோயிலின்) கீழே அரைசி/கொற்றவை நிற்கிறாள். இதனை ஹரப்பா முத்திரை காட்டுகிறது.
Prof. Rich Meadow (Harvard University) sent me this picture, what he found in Harappa.
Look at the girl standing under the arch of Arasu (Bodhi) tree leaves:
http://3.bp.blogspot.com/_TqVEWBx7H0U/SZXxjPS7XwI/AAAAAAAAAUw/cTGJavzqvzI/s1600/Terracotta_tablet-2sides-H95_2485.jpg  
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html  
http://dakshinatya.blogspot.com/2008/11/zebu-buffalo.html  

பரம்பை மரம் போர், இறப்பு இவற்றுடன் தொடர்புடையது. விஜயதசமியின் போது
மன்னர்கள் பரம்பை மரத்தை வணங்குவர். பரம்பை என்பதற்குப் பதிலாக,
வன்னி என்ற வடசொல்லை சங்க இலக்கியம் ஆள்கிறது. போர் வர்ணனை (புறப்பாடல்),
முதுமக்கள் தாழி இடும் காடு (பதிற்றுப்பத்து) - இரண்டு இடங்களிலே இந்த வன்னி
என்னும் பரம்பை மரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். மழுவாள் நெடியோன்
என்னும் வருணன் இறத்தலுக்கு அதிபதி தெய்வம். அவனது மழுவாள் நெடியோன்
வடிவத்தைப் பெருஞ்சிற்பமாக முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் நாட்டி வழிபாடுகள்
வன்னி மன்றத்தில் நடந்துள்ளன. விடங்கர் வழிபாட்டின் அமிசமாக இருந்த
வன்னி தேவார காலத்தில் சிவன் அணியும் முக்கியமான மலராக ஆகிவிட்டது.
ஏராளமான சிவ ஸ்தலங்களில் பரம்பை (= வன்னி, வடசொல்) ஸ்தல வ்ருக்ஷம் .

    பரம்பை - வன்னி மரம் (அ) சமி மரம். நூற்றுக்கணக்கான ஆவணங்களில் பார்க்கலாம்.
    அருணகிரிநாதர் சித்த வைத்தியம் பற்றி ஓர் அரிய வகுப்புப் பாடியுள்ளார்.
    சித்துவகுப்பு. அரிய உரை தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை அருளினார்.

    http://kaumaram.com/vaguppu/vgp16.html
    அகில்ப ரம்பை காரை துடரி தும்பை சூரை
    அலரி சம்பு நாவல் மருது சிந்து வாரம்  ...... 13
    (அருணகிரிநாதர் சித்துவகுப்பில் பரம்பை மரம் பற்றிக் குறிப்பிடல்).

    பரம்பை - 13: இது ‘வன்னி மரம்’. இதனால் ‘வளிசன்னி, முப்பிணி, நஞ்சு, சொறி நீங்கும். ‘வாத சந்தி தோடமறும் ...’ விடமும் கபமும் சொறியும் போம்’ - (அ.கு.)
    (தணிகைமணி வ.சு.செ., முருகவேள் பன்னிரு திருமுறை, தொகுதி 4, பக்கம் 527 இணைத்துள்ளேன்.)

0 comments: