கன்னடம், தெலுங்கு இரண்டு மொழிகளின் பண்டை இலக்கியங்களைச் "செம்மொழி இலக்கியங்கள்" என்று மத்திய அரசு சென்ற நவம்பர் ஒன்றாம் தேதி அறிவித்துள்ளது. தேர்தலுக்குச் சில மாதங்களே இருப்பதால் கர்நாடக, ஆந்திர மாநில அரசுகள் கொடுத்த அரசியல் அழுத்தங்களினால் இந்த அரசாணை (Government Order) கிடைத்துள்ளது. முதன்முதலில் இத்தகுதியை இந்திய அரசு அறிவித்தது தமிழுக்குத்தான். ஓர் ஆண்டு கழித்தே வடமொழியைச் செம்மொழி என்று 2005-ல் அறிவித்தது. தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்கள் கிடைத்ததாலும், தமிழ்நாட்டு அரசாங்கம் எடுத்த முயற்சிகளாலும், ஏறத்தாழ 100 ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியர்கள் உலகப் பல்கலைக் கழகங்களில் நடாத்திய ஆராய்ச்சி முடிபுகளாலும் தமிழைச் செம்மொழி என்ற அரசாணையைப் பெறுதல் சாத்தியம் ஆனது. மேலைநாட்டார் என்று எடுத்தால், எல்லீஸ், கால்டுவெல், போப், தொடங்கி இன்று இருக்கும் பேராசிரியர்கள் சுவலபில், பார்ப்போலா, ஹார்ட் போன்றோரின் பணி நினைவுக்கு வருகிறது. நண்பர் ஜார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி) எழுதிய தமிழின் செம்மொழித் தகுதி பற்றிய கடிதம் இணைய உலகிலும், அரசியல் அரங்கங்களிலும் வெகுவாகப் பேசப்பட்டது.
http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilClassicalLanguage/TamilClassicalLgeLtr.html
இன்னும் சில திராவிடவியல், தமிழ்ப் பேராசிரியர் பீடங்களைப் பல்கலைக்கழகங்களில் நடுவணரசும், தமிழ்நாட்டு அரசும் மக்களும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படுத்த 2004-ன் செம்மொழி அறிக்கை காலப்போக்கில் உதவும்.
தமிழ்நாட்டின் அரசாங்கம் செம்மொழி அறிவிப்பை டெல்லியிலிருந்து பெற முயற்சிகள் மேற்கொண்டபோது சில கன்னடப் பேராசிரியர்கள் தமிழ் இலக்கியத்தின் தொன்மை குறித்தே சில கேள்விகள் எழுப்பித் தடைகள் போட முயன்றனர் என்பதை 'அவுட்லுக்' இதழின் கட்டுரை (2004) தெரிவிக்கிறது. ஆனால் தமிழுக்கு அத்தகுதி கிடைத்ததும், கன்னடத்துக்கும் வேண்டும் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.
திராவிட மொழிகளின் முதல் கல்வெட்டு, இலக்கியங்கள்:
K. Zvelebil, The Smile of Murugan - On Tamil literature of South India. Leiden: E. J. Brill, 1973. The Chart I in page 9 is reproduced below:
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9802&L=INDOLOGY&P=R5787
கன்னட கவிராஜமார்க்கம் (கி.பி. 850), தெலுங்கு நன்னய பட்டரின் மகாபாரதம் (11-ஆம் நூற்றாண்டு), மலையாள இராமசரிதம் (14-ஆம் நூற்றாண்டு) - முதல் இலக்கியங்கள் காலத்தால் பிற்பட்டும், பாடுபொருள் ஆரியமொழி இதிகாசங்களையும், இலக்கணத்தையும் அடியொற்றி இருப்பதைக் காணலாம்.
2004-ஆம் ஆண்டு மத்திய அரசின் செம்மொழி அறிவிப்பின் ஏற்படும் விளைவுகளை மொழியியலார் மா. சு. திருமலை எழுதியிருந்தார்:
http://www.languageinindia.com/oct2004/classicaltamil1.html
இந்த அறிவிப்பின் பின்னர் தெலுங்கு, கன்னட நாட்டார் தங்கள் மொழிகளைச் செம்மொழிகள் (classical languages) என்னும் அரசாணை பெற முயற்சிகளை முடுக்கி விட்டனர்; தம் இலக்கியங்கள் 2000-2400 ஆண்டுகள் பழமை உடைத்து என்று அவ்வரசுகளும், ஆசிரியர்களும் அறிவித்தனர். (உண்மையில் இந்தச் சிலாலிகிதங்கள் பிராகிருதத்தால் ஆனவை, கன்னடமோ தெலுங்கோ அல்ல என்பது வேறு விஷயம். பாரத, இராமாயணங்களின் வழிநூல்கள், சம்ஸ்க்ருத இலக்கணம் பாணினீயத்தின் எழுத்துக்களை அப்படியே ஏற்பதால் வடசொற்கள் ஏராளமாகக் கன்னடம், தெலுங்கில் உள்ளன. வடமொழிச் சொற்கள் இல்லாமல் தமிழைத் தவிர ஏனைய மூன்று திராவிட மொழிகளும் இயங்கா.) உதாரணமாக, தெலுங்கு 2400 ஆண்டுப் பழமைக்கு உரித்தனாது என்றனர்!!
Telugu is 2,400 years old, says ASI
கன்னட நாட்டினர் செம்மொழிக்கு வேண்டிய நான்கு தகுதிகளும் கன்னடத்திற்கு உள்ளது என்றனர்:
http://www.hindu.com/2005/05/27/stories/2005052703230500.htm http://www.hinduonnet.com/2006/08/08/stories/2006080812740300.htm
மத்திய அரசு முன்பே நிர்ணயித்துள்ள நான்கு தகுதிகளும் என்னென்ன? என்று பார்ப்போம்.
Criteria For Classical Language
New category of languages as `Classical Languages' was created by Government of India, and the following criteria were laid down to determine the eligibility of languages to be considered for classification as a `Classical Language':-
i) High antiquity of its early texts/recorded history over a period of 1500-2000 years.
ii) A body of ancient literature/texts, which is considered a valuable heritage by generations of speakers.
iii) The literary tradition be original and not borrowed from another speech community.
v) The classical language and literature being distinct from modern, there may also be a discontinuity between the classical language and its later forms or its offshoots.
Only two languages, viz. Tamil & Sanskrit have been declared as `Classical languages' originally.
மத்திய அரசின் நிபந்தனைகளில் முக்கியமானது செம்மொழி என்றால் அதன் இலக்கியம் தனித்தன்மை பொருந்தியதாயும் 1500 ஆண்டுகளாவது பழமை உடையதாகவும் இருத்தல் அவசியம். அந்த நிபந்தனைகளைக் கன்னட, தெலுங்குப் பண்டை இலக்கியங்கள் பூர்த்தி செய்வதில்லை. இதனாலேயே தமிழ்ப் பேரா. மு. இளங்கோவன் தன் வலைப்பதிவில் "புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கொண்ட கதை" என்று குறித்துள்ளார்.
அரசியல் அழுத்தம், கிளர்ச்சிகளால் அடைந்த கன்னடச் செம்மொழி அறிவிப்பு கர்நாடகாவில் ராஜ்யோத்சவக் கொண்டாட்டங்களில் ஒரு பங்காக இந்த ஆண்டு இருந்தது. அது பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியைப் பார்க்கலாம். ஆயினும், சென்னை உயர்நீதி மன்றில் தகுதி நிபந்தனைகளைப் பற்றி வழக்குத் தொடுத்துள்ளனர். அவ்வழக்கின் முடிவு என்ன? நீதிபதிகளின் தீர்ப்பைக் கூர்ந்து படிக்கவேண்டும். மத்திய அரசு நியமித்த அறிஞர் குழுவின் உறுப்பினர் முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் இருமொழிகளும் செம்மொழி நிபந்தனைகளுக்குப் பொருந்தாமையை விளக்கியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி,
http://timesofindia.indiatimes.com/India/Telugu_Kannada_get_classical_tag/articleshow/3660666.cms
" The formal declaration would take place on the occasion of the Rajyotsava day in Karnataka and Andhra Pradesh formation day that falls on November 1. However, the decision is subject to the outcome of a pending writ petition in Madras high court.
Decision to grant classical status has come after pressure from politicians of Karnataka and AP. PM's Office had refused to get involved into the emotive issue. Asked for guidance by the culture ministry, PMO said experts group view would be final. A source in the expert group pointed out how VC Kulandai Swamy, a member of the committee, strongly argued that both the languages did not fulfill criterion of antiquity set by the government.
Both the languages have failed on other criterion also. These include: a body of ancient literature which is considered a valuable heritage, literary tradition be original and not borrowed from another speech community and that classical language should be distinct from its modern form."
செம்மொழி அரசாணை அரசியலை 4 ஆண்டுகளாய் அவதானித்ததில் ஒன்று மனத்திற்குப் புலப்பட்டது. கலைஞர் தன் நிலைப்பாட்டைச் சொல்லும் அறிக்கையை நேற்றுப் பார்த்தேன். தமிழரின் ஒற்றுமையின்மை நெல்லிக்காய் மூட்டையாக இருக்கிறது. ஒருவேளை ஈழவர் தெலுங்கோ கன்னடமோ பேசுபவராக இருந்திருப்பரேல் இந்நேரம் டெல்லியில் நம் அண்டை மாநிலத்தவர் அவர்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொடுத்திருப்பர்.
மலையாளத்துக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் வேண்டிக்கொண்டுள்ளார். செம்மொழி அரசாணை பெறும் அரசியலை நோக்கும்போது இனிவரும் ஆண்டுகளில் எழுத்தும் பண்டை இலக்கியங்களும் இல்லாத தோடா, பிரகுவி, துளு, முண்டா மொழிகளான கசி, சாந்தாலி இன்ன பிறவும் செம்மொழி அறிவிப்பைப் பெற வாய்ப்புக்கள் உள்ளன.
~ நா. கணேசன்
மேலும் உசாவ,
http://www.chennaitvnews.com/2008/11/classical-joke.html http://www.hinduonnet.com/fline/fl2122/stories/20041105004310600.htm
திராவிட மொழிகளில் செம்மொழி - தகுதியும், அரசாணையும்
Posted by
நா. கணேசன்
at
11
comments
சந்திரயான் = திங்கட்செலவு/நிலவூர்தி
தமிழின் பல வலைப்பதிவுகளில் 'சந்திராயன்' என்று எழுதப்படுகிறது. அது பிழையானது. அனேகமாக இந்தச் சொற்பிழை பத்திரிகைகளின் வழியாகப் புகுந்திருக்கலாம். நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள உந்தியின் பெயர் 'சந்திரயானம்', இது வடமொழிச் சொல்லாகும்.
யாநம் - சம்ஸ்க்ருத அகராதி தரும் பொருள்:
yAna mfn. leading , conducting (said of a road ; `" to "' gen. or adv. in %{-trA4}) RV. ; (%{yA4nI}) f. a path , course TS. MaitrS. Ka1t2h. (cf. g. %{gaurA7di}) ; n. (ifc. f. %{A}) a journey , travel ; going , moving , riding , marching &c. to (loc. or comp.) or upon (instr. or comp.) or against (acc. with %{prati}) Mn. MBh. &c. ; a vehicle of any kind , carriage , waggon , vessel , ship , litter , palanquin RV. &c. &c. ; (with Buddhists) the vehicle or method of arriving at knowledge , the means of release from repeated births (there are either 3 systems , the %{zrAvaka-yAna} , the %{pratyeka-buddha-y-} or %{pratyeka-y-} , and the %{mahA-y-} ; or more generally only 2 , the %{mahA-yAna} or `" Great method "' and the %{hina-y-} or `" Lesser method "' ; sometimes there is only `" One Vehicle "' , the %{eka-yAna} , or `" one way to beatitude "') SaddhP. Dharmas. 2 (cf. MWB. 159 &c.)
ஹரி சென்ற வழி = ஹரியானம். இதுவே ஹரியானா மாநிலப்பேர். (பஞ்சாப் = ஐயாறு, பிகார் = புத்த விகாரைகள் நிறைந்த நாடு.) மகாயாநம், ஈனயாநம் - பௌத்த மதப் பெரும்பிரிவுகள். மகாயானம் - பெரிய/உயர்ந்த பாதை/ஊர்தி (போதிசத்துவர்களைத் தேவதைகளாக வழிபடும் வழி ~ ஒருவகை பக்திமார்க்கம்). மஹாயானத்தில் பல சூத்திரங்கள் வடமொழியில் உள. ஹீனயானம் - சிங்களர்களின் தேரவாதம், இழிந்த/தாழ்ந்த வழி/ஊர்தி - இது நாத்திக அடிப்படையினால் இப்பெயரை மஹாயானத்தார் அளித்தனர். மஹாயானம் - வடநாடுகள் ஜப்பான், கொரியா, சீனா, நேப்பாளம். ஹீனயானம் - தென் இலங்கை, அங்கிருந்து பர்மா, தாய்லாந்து.
மேலும், சில சொல்லாய்வுச் செய்திகள்:
சந்திரயானில் சூரியஒளி இல்லாத இருட்பகுதியில் ராடார் மூலம் படம் எடுக்கும் கருவிகள் இருக்கின்றன. இதில் அமெரிக்காவின் ஜான்சன் விண்நிலையத்தின் பங்கும் உண்டு. சந்திரயான் (= திங்கட்செலவு/நிலவூர்தி) திட்டத்தின் இயக்குனர் திரு. மயில்சாமி அண்ணாதுரை பொள்ளாச்சி அருகே உள்ள கோதைவாடி என்னும் ஊரினர். கோவை பொறியியற் கல்லூரிகளில் பயின்றவர். கோதை சேரர்களுக்கான குடிப்பெயர். கோதை மன்னர்களின் பாடி (முகாம்) இருந்த இடப்பெயர். கொங்குநாட்டின் ஆண்பெயர்களில் -சாமி என்னும் விகுதியைப் பரக்கக் காணலாம். பெரியசாமி, சின்னச்சாமி, மயில்சாமி, பழனிச்சாமி, குழந்தைசாமி, .... தமிழ் இலக்கியத்தில் முதலில் இவ்வாறு இடம்பெறுவதும் கொங்குவேளிரின் பெருங்கதையில் சீவகசாமி தான். பின்னர் சீகாழி அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனையில் ராமசாமி என்பார்.

பொள்ளாச்சி போன்ற ஊர்களில் நடக்கும் வாரச் சந்தைகளில் வணிகருக்குப் பக்கத்தில் உதவியாக வேலைக்கு இருக்கும் ஆட்களுக்கு 'அள்ளைக்கை' (அள்ளக்கை) என்பது கலைச்சொற்பெயர்(technical vocabulary). இதை நன்கு விளக்கியுள்ள பதிவை இரசித்துப் படித்தேன்.
http://naiyaandinaina.blogspot.com/2008/09/blog-post_24.html
"முதலாளித்துவம் பரவியுள்ள இந்த சமூகத்தில், சந்தைக்கு செல்லும் பெரும் முதலாளிமார்கள் ஒரு சரக்கை ( சாராயம் அல்ல) தகுதி ஆராய எடுத்து பார்க்க வேண்டி வரும், அந்த வேளையில் குனிந்து சரக்கு எடுக்க முடியாது, அதற்கு அவர்களின் தொப்பையும் இடம் கொடுக்காது, அவர்களின் கையும் அழுக்கு ஆகிறும், மேலும் அவர்களின் பை திருட்டு போகும் வாய்ப்பும் அதிகம் அதனாலே அவங்க தங்களோட ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போவாங்க, அவர் அவர் கையாலே அள்ளி முதலாளியிடம் காண்பிப்பார்கள். அவர்களே பின்னாளில் அள்ள-கை என்று அழைக்கப் பட்டார்கள். பின்னாளில் இதுவே மாறி அல்லக்கை என்றாகி விட்டது. வெகு நாளுக்கு பிறகு ஏவிய வேலை செய்யும் அனைவரையும் அல்லக்கை என்று அழைக்கலானார்கள் மக்கள்."
அள்ளைக்கை போலவே, சந்தை வணிகத்தில் இருந்து தமிழ்ப் பயன்பாட்டுக்கு வந்த இன்னொரு தொடர்: "கூறுகெட்ட பையல்". "காய்கறிகளை தரம் பிரித்து கூறு கூறாய் கட்டி வைப்பார்கள், அந்தக் கூறுகளை அதன் தரத்துக்கேற்ப விலை சொல்வது அந்தக் காலத்து சந்தைகளில் வழக்கமாய் இருந்தது, அதை நானும் என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஆகவே கூறு என்பது தரம் என்னும் பொருளில் வருகிறது, மற்றும் காய்களில் பெரிய காய்களான பூசணி, சேனைக்கிழங்கு போன்றவைகளை கூறு போட்டு விற்பார்கள், இங்கு கூறு போடுதல் பிளத்தல், அல்லது அறுத்தல் என்று பொருள் வரும். ஆகவே தரம் கெட்டுப் போனவர்களை, நல்ல வழக்கங்களிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு தீய வழக்கத்துக்கு ஆளானவர்களையும் 'கூறுகெட்ட பயல்' என்று அழைப்பது வழக்கத்திற்கு வந்திருக்கிறது." (தமிழ்த் தேனீ, மின்தமிழ்).
முதலில் திரைப்படங்களில் கோவை மாவட்ட நடிகர்கள் கவுண்டமணி, சத்தியராஜ் போன்றோரால் அறிமுகம் ஆகி பின்னர் பதிவுலகில் அடிக்கடி பயனாகும் சொல்: அள்ளைக்கை. இதனை 'அல்லக்கை' என்று எழுதுதல் சரியல்ல. அள்ளை = அடுத்திருப்பது (side). தமிழில் நிறையச் சொல்தொகுதிகளில் இரண்டாவது அட்சரமாக -ள்-/-ட்-/-ண்-/-ண்ட்- வரும். அச் சொற்றொகுதிகளின் பொருளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கும். உதாரணம்:
(அ) குளம்/குடம்/குட்டை/குண்டா
(ஆ) வளை-/வடம்/வணங்கல்/வண்டி
(வண்டி - வளைந்த சக்கரம் உடையது. வடம் = கயிறு. கயிறு போன்ற விழுதுகள் நிலம் நோக்கித் தொங்குவதால் ஆலமரத்துக்கு 'வட விருட்சம்' என்றே வடமொழிப் பெயர்.)
அதேபோல், அள்ளைக்கை எனுஞ் சொல்லில் இருக்கும் "அள்ளை":
(இ) அள்ளை/அடுத்த/அட்டை/அண்டை.
அன்புடன்,
நா. கணேசன்
கிருஷாங்கினி கவிதைகளில் - அள்ளையில் தோன்றும் சிறகுகள்
பிரம்ம விருட்சம்
------------------------
கிருஷாங்கினி
இடைவெளி இன்றி அந்த உயர
மரத்தில் அடுக்கப் பட்டிருந்தன
கம்பளிப் பூச்சிகள்-
நெருக்கி யடித்தாலும் கனவுகள் சுமந்தபடி.
எட்டா உயரத்தில்
ஏணி ஏறி, உச்சி வெயிலில்
எட்டிவந்தன தீயின் கங்குகள் சுற்றிலும்;
அங்கிங்கென்று அலைந்து சிதறியவை
ஒன்றன்மீது ஒன்றேறி-
கொதித்துக் கொத்தாகிக் குவியலாயின.
தப்பிக்கும் எண்ணத்தில்
சற்றே பின் நாளில் வெளிவரும் உமிழ்நீர்
உடனே சுரக்கக் கூட்டுப்புழுவாக
முயன்று தோற்றுத் தொங்கின
இழை முடிவில் வாய் வழியே-
கொத்தாகிக் குவியலாயின கொதித்து.
அள்ளையில் இறகு முளைத்து
வண்ணம் பல பரப்பி
அனைவரையும் ஈர்க்கும் -அவை
வண்ணத்துப் பூச்சிகள் ஆகாமலேயே
நிணநீர் வெளிவர, பச்சை ரத்தம்
பொசுங்கப் பரவிய சதை மணத்துடன்
கொதித்துக் கொதித்துக்-
கொத்தாகிக் குவியலாயின.
பின் விளைவு
-----------------
க்ருஷாங்கினி
மேல் வறண்டு வேருக்குள் உயிரோடி
காத்திருக்கும் அருகம்புல்லும்
சிறுபரப்பில் மண் தேங்கி, விருட்சம்
உள் உறிஞ்சி வேர்விட உறங்கும்
அரசும் ஆலும்.
ஆங்காங்கே மேல் மண்ணில் தூவித்தூவி
பறந்து காற்றில் படரும் வேருக்கும்
வெளவால், பறவை கழிவுடன்
வேரையும் உடன் இருத்தி மேலிருந்து
புவி விசையில் கீழ் இறங்கும் கனவிதையும்,
எப்போதும் நசநசத்த ஈரப்பரப்பில்
வேறற்ற காளானும் பாசியும்கூட
மண்ணுக்குள் வீடுகட்டி மேலெழும்பி
மற்றதை அரித்துத் தின்னும்
அள்ளையில் அன்றே முளைத்து, பறந்து
திரிந்து, சில மணியில்
செத்துமடியும் கரையானுக்கு
ஒளித்துளியாய் இறக்கையும்
முளைவிடக் காரணமானது
மழையின் பின்-விளைவு.
Posted by
நா. கணேசன்
at
12
comments
ஒளிச்சேர்க்கை அறிவியல் அளிக்கும் மின்சாரம்
உலகத்தில் சூரிய ஒளியின் ஆற்றலை ஒளிச்சேர்க்கை (Photosynthesis) என்னும் செயலால் தமக்குப் பயன்படும் ஆற்றலாகத் தினந்தோறும் தாவரங்கள் மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் ஓர் ஐம்பது ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்து போகும் நிலை, சொல்பம் மிச்சம் இருந்தாலும் எட்டாத உச்சிக் கொம்புக்கு அதன் விலை ஏறிவிடும். எனவே, ஒளிச்சேர்க்கை செயல்படும் விஞ்ஞானத்தை அறியப் பலவகை ஆய்வுகள் நடக்கின்றன.
அமெரிக்காவிலே முதன்மையான பொறியியற் கல்லூரி ஆய்வகம் MIT. அங்கே பணியாற்றும் வேதியியல் பேராசிரியர் டேனியல் நோசீரா தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜன் வாயுவைப் பிரித்தெடுக்கும் எளிய, செலவு அதிகம் ஆகாத மின்பகுப்பு (electrolysis) முறைக்குப் புதிய ஒரு வினையூக்கியை (catalyst) கண்டுபிடித்துள்ளார். இக் கிரியாஊக்கியைப் பாவித்தால் தற்போதுள்ள முறைக்கு ஆயிரத்தில் ஒரு பங்கே செலவாவதாலும், சாதாரணமான அழுத்தம், வெதுமம், பிஎச் எண்களில்(room pressure, temperature, pH value) வேதிவினை நிகழ்வதாலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு சாதனை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
இவ்வரிய கண்டுபிடிப்பால் சூரியஒளியில் இருந்து சோலார் நுட்பத்தால் ஆக்கப்படும் மின்சக்தியை இரவில் உபயோகிக்க வழிவகை கிடைத்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில் நுட்பத்தின் பலனாக, ஒரு வீட்டின் மின்தேவையைப் பூர்த்திசெய்யும் சோலார்+மின்கலம் அமையம் (photovotaic + fuel cell system) சில இலட்சம் ரூபாய்களுக்குச் சந்தைக்கு வரும்.
http://web.mit.edu/newsoffice/2008/oxygen-0731.html
http://www.sciencemag.org/cgi/content/abstract/1162018v1
Posted by
நா. கணேசன்
at
3
comments
துணைவேந்தர் Dr. S. அகத்தியலிங்கம்
முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவின் வாயிலாக, பேரா. ச. அகத்தியலிங்கம் (மாரியப்பாநகர், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) வாகனவிபத்தில் இறந்தார் என்றறிய நேர்ந்தது:
http://muelangovan.blogspot.com/2008/08/blog-post_05.html
அவரது புத்தகங்களின் பட்டியலை அடுத்துத் தருகிறேன். தினத்தந்தி நாளிதழிலும் செய்தி வெளியாகியுள்ளது (தினத்தந்தி போன்றவை யூனிக்கோடுக்கு மாறினால் அவ்விதழ்ச் சேதிகள் விரைவில் பலருக்கும் சென்றடையும். தமிழ்நாட்டுப் பத்திரிகை நிர்வாகத்தை அறிந்தோர்கள் குமுதம், விகடன் போலவே மற்றவற்றையும் யூனிகோடு குறியேற்றத்திற்குச் செல்லத் தூண்டுங்கள். பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.)
http://www.dailythanthi.com/article.asp?NewsID=430053&disdate=8/5/2008
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மனைவியுடன் விபத்தில் சாவு கார் டிரைவரும் பலியானார்
வானூர், ஆக. 5, தினத்தந்தி
புதுவை அருகே நடந்த விபத்தில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மனைவியுடன் பலியானார். கார் டிரைவரும் மரணம் அடைந்தார்.
முன்னாள் துணைவேந்தர்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அகஸ்தியலிங்கம் (வயது 75). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகர். அகஸ்தியலிங்கம் நேற்று பகலில் சென்னையில் இருந்து மனைவி பொன்னம்மாள் (70), பேத்தி லதா (19) ஆகியோருடன் ஒரு காரில் சிதம்பரத்துக்கு வந்துகொண்டு இருந்தார். காரை ஜீவபாலன் (33) என்பவர் ஓட்டிவந்தார்.
பகல் 12.50 மணி அளவில் கிளியனூருக்கும், தைலாபுரத்துக்கும் இடையே கார் வந்துகொண்டு இருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதியது.
விபத்தில் பலி
இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த முன்னாள் துணைவேந்தர் அகஸ்தியலிங்கம் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக செத்தார்
அவரது மனைவி பொன்னம்மாள், பேத்தி லதா, கார் டிரைவர் ஜீவபாலன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
ஆஸ்பத்திரியில் 2 பேர் சாவு
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பொன்னம்மாள், கார் டிரைவர் ஜீவபாலன் ஆகியோர் இறந்தனர். படுகாயம் அடைந்த லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Posted by
நா. கணேசன்
at
0
comments
மரு. சுதீர் பால் - எய்ட்ஸ் சிகிச்சைச் சாதனை
ஹ்யூஸ்டனில் உள்ள டெக்சாஸ் மருத்துவக் கல்லூரியில் இந்திய டாக்டர் சுதீர் பால் தலைமையில் இயங்கும் ஆராய்ச்சிக் குழுவினர் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரசை அழிப்பதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளனர்.
விலங்கு மாதிரிகளில் (models) நோயைத் தடுத்துக் காட்டியுள்ள மரு. சுதீர் பால் அவர்களின் மருந்துமுறைகள் மனிதர்களிடத்திலும் நோயைக் குணமாக்கலாம். அதற்குப் பல பரிசோதனைகள் இன்னும் மீதமிருக்கின்றன.
Posted by
நா. கணேசன்
at
0
comments