தமிழ்நாடு என்ற பெயர் - 2000 ஆண்டுகளில் தமிழில் முதன்முதலாய்க் கல்வெட்டுகளில்!

 தமிழ்நாடு என்ற பெயர் - 2000 ஆண்டுகளில் தமிழில் முதல் கல்வெட்டுகள்
-------------------------------------------------------------------------------------------

பாரத ரத்தினம் சி. சுப்பிரமணியம் சென்னை மாகாண சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு என்ற பெயரை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தலாம் என 24 பிப்ரவரி 1961-ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார். 'டூச் லாண்ட்' (Deutschland) என்று ஜெர்மனியில் அழைக்கிறார்கள். ஜெர்மனிக்கு வெளியே டூச்லாண்ட் (Deutschland)  என்றால் தெரியாது. ஜெர்மனி என்கிறோம். அதுபோல, தமிழ்நாடு என நம் மாநிலத்திலும், வெளியே ஆங்கில அறிக்கை, கடிதங்கள் போன்றவற்றில் Madras State என்றும் பயன்படுத்தலாம்’ எனச் சட்டமன்றத்தில் பேசினார். இதற்காக, அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டியதில்லை என்றார் சிஎஸ். அதன் பின்னர் தான் தமிழ்நாடு என்ற பெயர் கல்வெட்டுகளில் தமிழ்நாடு மாநிலத்தில் பொறிக்கப்படலாயிற்று. அவ்வகையில் கிடைத்துள்ள இரண்டு கல்வெட்டுப் பற்றிய கட்டுரையில் 20-ம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தமிழ்நாடு என்ற பெயர் ஆவணங்களிலும், கல்வெட்டுகளிலும் பதிவாகும் நிகழ்வுப் பின்புலத்தை - இப்பெயரின் 2000 ஆண்டுக்கால வரலாற்றை - ஆராய்ந்துள்ளேன். இலக்கியங்களிலே தமிழ்நாடு, தமிழகம் என்று இருந்தாலும் தமிழ்நாடு என்ற பெயர் கல்வெட்டில் வர 2000 ஆண்டு ஆனது. தண்டமிழ்நாடன் என்ற சொல்லாட்சியை மூவேந்தர் நாடுகளை ஒருகுடைக்கீழ் ஆண்ட சோழன் மெய்க்கீர்த்தியில் காண்கிறோம். ஆனால், தமிழ்நாடு என்று சிலாலிகிதங்களில் முதன்முதலாய் 1962-ல் இருந்துதான் காண்கிறோம்.

கரூர் சஞ்சய் பொன்னுசாமி என் அரிய நண்பர். நான் கேட்டுக்கொண்டதன் பேரில், தோ. மு. நல்லசாமி குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு அக் கல்வெட்டு இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு, நல்ல ஒளிப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளார். தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள அலங்காரவளைவு அருகே, இக்கல்வெட்டை தமிழக முதல்வர் திரு. கு. காமராஜை அழைத்துத் திறந்துவைக்கச் செய்துள்ளார் அப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ தோ. மு. நல்லசாமி.  இந்தியாவின் பல்வேறு சமஸ்தானங்களை இணைத்துச் சாதனை புரிந்த சர்தார் வல்லபாய் பட்டேல் ஞாபகார்த்தக் கட்டிடம் எனப் பெயர் வைத்துள்ளார்கள். பல நாடுகளை நாம் அறிவோம். ‘நாடு ஆகு ஒன்றோ? காடு ஆகு ஒன்றோ?’ - ஔவை. தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடு என்று பயன்படுத்த மதறாஸ் மாகாண அரசாங்கம் அறிவுறுத்திய பின்னர் ஏற்பட்ட முதல் கல்வெட்டு இது. தமிழ் மண்டிலம் ஐந்து என்றார் திருமந்திரத்தில் திருமூலர் (1) சேர நாடு (2) சோழ நாடு (3) பாண்டிநாடு (4) தொண்டைநாடு (5) கொங்குநாடு. கொங்குநாட்டிலே கூட உள் நாடுகளாக 24 நாடுகள் உள்ளன. எல்லா நாடுகளையும் பாரதத்தில் இணைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் போல், தமிழ் நாட்டின் எல்லா உண்ணாடுகளையும் இணைத்துத் தமிழ்நாடு என வழங்குமாறு 1962-ம் ஆண்டின் தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. சர்தார் வல்லபபாய் பட்டேல்:
https://en.wikipedia.org/wiki/Vallabhbhai_Patel
https://en.wikipedia.org/wiki/Vallabhbhai_Patel#/media/File:Statue_of_Unity_in_2018.jpg

> அமரர் சி சுப்பிரமணியம் நிதியமைச்சராக இருந்தபோது மெட்ராஸ் என இருந்த வார்த்தைகளை
> அகற்றிவிட்டு நிதிநிலை அறிக்கை முழுக்க தமிழ்நாடு என மாற்றச் சொல்லி உத்தரவிட்டார் என்பதை
> அப்போதைய அரசுப் பணியில் இருந்த அமரர் அறிஞர் அ ச ஞானசம்பந்தன் குறிப்பிட்டு இருக்கிறார்.
> மரபின் மைந்தன் முத்தையா.

தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962), தோட்டக்குறிச்சி (கரூர்)
http://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-thottakurichi.html

1960களில் தோட்டக்குறிச்சி (1962) மற்றும் திருநெல்வேலி (1966) கல்வெட்டுகள் போலவே, இன்னும் சில இருக்கும். தமிழ்நாட்டார் தேடினால், தமிழ்நாடு என்ற பெயருடன் 1960களில் வெளியான கல்வெட்டுகள் மேலும் கிட்டும் என்பது திண்ணம். உங்களுக்கு அவ்வாறு கிடைத்தால் அனுப்பவும். நன்றி.

நா. கணேசன்

தமிழ்நாடு எனக் கல்லில் பொறித்த முதற்கல்வெட்டு, 1962



 

https://images.news18.com/tamil/uploads/2021/08/kalvettu.jpg
https://tamil.news18.com/news/tamil-nadu/karur-district-todays-dilapidated-condition-of-the-school-opened-by-former-cm-kamarajar-aru-539785.html

இக் கல்வெட்டின் முக்கியத்துவம், வரலாறு பற்றி விரிவாகப் பார்க்கலாம்:
http://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-thottakurichi.html



This weekend I was reading two Tamil books: (1) T. K. Shanmukam (1912 -1973), *enatu nATaka vAzkkai*, 1972, vAnati patippakam (2) C. Subramaniam, *tamizaal muTiyum*, 1962, vaLLuvar paNNai. Both authors record the beginning and the end of the phase respectively of how the name, Tamil Nadu came to replace Madras State officially in Govt. documents and communications and correspondence from the Govt. When the Govt. announced in the State Legislature that Tamil Nadu can be used, it is official announcement. In the mentioned book written in 1962, CS always uses the name Tamil Nadu, never Madras Rajyam, Chennai Arasangam etc., In February 1961, Finance Minister CS announced in TN assembly that Tamil Nadu name will be used. And, in that year itself, inscriptions started appearing in Official functions where Tamil Nadu ministers attended. For example, PWD minister, Sri. Kakkan's meeting in 1961 at Pukaziyuur. Sincere thanks to Sri. Aravindh, Chennai who has located the historic inscription of 1961 where Tamil Nadu gets inscribed for the first time in epigraphs. 

அ. ச. ஞானசம்பந்தன் தமிழக அரசின் பதிப்புத்துறை, செய்தித்துறைகளில் உயர்பதவி வகித்தவர். பேரா. அ. ச. ஞா. 1960களில் காங்கிரஸ் ஆட்சி ஆவணங்களில் தமிழ்நாடு என்னும் பெயர் பயன்படுத்தத் துவங்கியதைப் பதிவு செய்துள்ளார்கள். https://tamil.wiki/wiki/அ.ச.ஞானசம்பந்தன் "சென்னை அகில இந்திய வானொலியில் நாடகத் தயாரிப்பாளராக பணியேற்றார். 1959 முதல் தமிழ்நாடு அரசின் செய்தித்துறையின் மொழிபெயர்ப்புத்துறை இணை இயக்குநராக பணியாற்றினார். தமிழ் வெளியீட்டுத்துறை இணை இயக்குநராகவும் பணியாற்றினார். அ.ச. ஞானசம்பந்தன் 1967 முதல் 1970 வரை தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றினார். 1971-ல் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் மதுரை பல்கலை துணைவேந்தரானபோது அவரது அழைப்பின்பேரில் அ.ச. ஞானசம்பந்தன் மதுரை பல்கலை தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்தார். 1973-ல் ஓய்வுபெற்றார். " சங்க காலம் தொடங்கி இலக்கியங்களில், பாரதியார் செந்தமிழ்நாடெனும் போதினிலே என்னும் பாடலில் பலமுறை *தமிழ்நாடு* என முன்னரே சொல்லியுள்ளார். நவம்பர் 1921-ல் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்படத் தொடங்கிற்று. கன்மேலெழுத்தாய் *1961-ல் தமிழ்நாடு* முதன்முறையாக எழுதப்படலாயிற்று. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு (திசம்பர் 16, 1945 - சனவரி 26, 1957[1]) என்பது முந்தைய இந்திய மாநிலமான ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். https://ta.wikipedia.org/wiki/திருவாங்கூர்_தமிழ்நாடு_காங்கிரசு

 
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
                             - ஔவை அருளின மூதுரை

 Let me first give how Ma. Po. Sivagnanam proposed the use of Tamil Nadu in 1948 and Sri. K. Kamaraj opposed it. This seems to be the reason why EVeRaa preferred the use of Tamilakam (1949) as Ma.Po.Si went for Tamil Nadu in 1948. In the 1948 Coimbatore Tamil MaakaaNa Congress, CS, C. P. Subbiah, Ubayathulla ... requested Kamaraj to allow MaPoSi to tell his views. When the time came (1961), it was CS who announced and implemented Tamil Nadu in the then Govt. documents and correspondence. Anna changed the name officially in English also after DMK came to power. For this Indian Constitution had to be changed to drop Madras State to Tamil Nadu. Nowadays, even the Indian Prime Minister often talks of Tamil's antiquity and special position in India and its history. ~NG 

------------------ 

தமிழ் மாகாண 43வது அரசியல் மாநாடு ( டி. கே. சண்முகம், எனது நாடக வாழ்க்கை, 1972, வானதி பதிப்பகம்) 1948 ஜனவரியில் தமிழ் மாகாண 43-வது அரசியல் மாநாடு கோவையில் நடைபெற்றது. அந்த மாநாட்டு நிதிக்காக 17-1-48இல் நாங்கள் உயிரோவியம் நாடகம் நடித்து அதன் வசூல் ரூ. 1448.00 முழுவதையும் மாநாட்டின் தலைவர் திரு காமராஜ் அவர்களிடம் கொடுத்தோம். முதல் அமைச்சராக இருந்த திரு ஒமந்துர் ராமசாமி ரெட்டியார் அன்று தலைமை தாங்கிப் பேசினார். தலைவர் காமராஜ் அவர்களும் பாராட்டினார். நாடக ஆசிரியர் திரு நாரண.துரைக்கண்ணன் அவர்களுக்கும் பொற் பதக்கமும் வழங்கினார். 

*இருபெரும் தலைவர்கள் போட்டி* 19.1-48இல் நடைபெற இருந்த அந்த மாநாட்டுத்தலைவர் தேர்தலிலே தான் திரு ம. பொ. சி. அவர்கட்கும் திரு காமராஜ் அவர்கட்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. திரு ம. பொ. சி. அவர்கள் பெறும் பதவிக்காகப் போட்டியிடவில்லை. அதை அவரே தமது ‘தமிழ் முரசு’ இதழில் விளக்கமாக எழுதியிருந்தார். வேங்கடமலை குமரி முனைக்குள் அடங்கிய தமிழ் மாகாணம அமைய வேண்டும் என்பதற்காகவே திரு ம. பொ. சி போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. மூன்றில் ஒரு பங்கு வாக்குகளே அவருக்குக் கிடைத்தன. கிடைத்த வாக்குகள் 111. காங்கிரஸ்காரராகிய திரு ம. பொ. சி. தோல்வியடைந்ததிைக், கேலி செய்யும் முறையில் அப்போது நடைபெற்று வந்த ஒரு. காங்கிரஸ் நாளிதழ் ‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தது. 

*‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’* என்ற தலைப்பைப் படித்ததும் என் மனம் வருந்தியது. ஒரு காங்கிரஸ் நாளிதழ் மற்றொரு காங்கிரஸ் ஊழியர் தோல்வி அடைந்ததை இவ்வாறு நையாண்டி செய்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.

*பக்தவத்சலனார் தீர்மானம்* 1948 ஜனவரி 18,19இல் தமிழ் மாகாண அரசியல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நானும் கலந்து கொண்டு துவக்கத்தில் பாடல்கள் பாடினேன். இரண்டாம் நாள் மேடையில் அன்றைய முதல் அமைச்சர் திரு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களும், அன்றையத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், மாநாட்டின் தலைவருமாகிய திரு காமராஜ் அவர்களும், திரு ஜி. டி. நாயுடு போன்ற உள்ளுர்ப் பிரமுகர்களும், ஏனைய அமைச்சர்கள் சிலரும், திரு ம. பொ. சி. அவர்களும் வீற்றிருந்தார்கள். நானும் மேடையில் அமர்ந்திருந்தேன். மாநாட்டிலே அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். இந்தியாவில் மொழி வழிப்பட்ட மாகாணங்கள் அமையும் போது தமிழர் பெருவாரியாக வாழும் தொடர்ந்தாற்போலுள்ள பகுதிகளைக்கொண்ட தனி மாகாணம் அமைக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கூறியது. இது திரு ம. பொ. சி. அவர்களையும் அவரை ஆதரித்த காங்கிரஸ் காரர்களையும் திருப்திப் படுத்துவதற்காகவே கொண்டுவந்த தீர்மானம். ஆனால் தீர்மானம் மொழி வழி மாகாணங்கள் அமைக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்லாமல் அமையும்போது என்று சொல்லப்பட்டது குறித்து திரு ம.பொ.சி. அதிருப்தியடைந்தார். அவர் எழுந்து தம்முடைய கருத்தை அறிவித்தார். அத்தோடு, *வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரி முனையும் உள்ள தமிழ்நாடு வேண்டும்* என்ற திருத்தத்தைப் பிரேரபித்தார். *ஆம்; பின்னால் நடைபெற்ற வட எல்லைப் போராட்டத்திற்கு அன்றே ம. பொ. சி. வித்திட்டா ரென்றே நினைக்கிறேன்.* மாநாட்டுத் தலைவர் *திரு காமராஜ், திரு. ம. பொ. சி. அவர்களின் திருத்தத்தில் வேங்கடம், குமரிமுனை ஆகிய எல்லைகளைப்பற்றிய பகுதியை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தார். *

*கூச்சலும் குழப்பமும்* இந்தியாவிலிருந்து பிரிந்துபோகக்கூடிய ‘தனித் தமிழ்நாடு’ ம. பொ. சி. கேட்பதாக, அவர் பொருள் கொண்டு விட்டார். *காரணமின்றி இவ்வாறு மாதாட்டுத் தலைவர் தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தது எனக்கு மட்டுமல்ல, மாநாட்டில் கூடி யிருந்த பிரதிநிதிகள் யாவருக்கும் வருத்தமாக இருந்தது.* தலைவர் காமராஜ் அவர்களின் தவறான கருத்தைப் போக்குவதற்காக நிராகரிக்கப்பட்ட பகுதிக்கு விளக்கம் தர ம.பொ.சி முனைந்தார். ஆனால், தலைவர் காமராஜ் அவரைப் பேசவிடவில்லை. மேடையில் உட்கார்ந்திருந்த எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது. என்னைப்போல் பிரதிநிதிகள் பலரும் ஆத்திரமடைந்தனார். ‘கிராமணியார் பேசட்டும், கிராமணியார் பேசட்டும்’ என்று சபையில் ‘பெருங்கூச்சல் எழுந்தது. ஆம், திரு ம. பொ. சி. அவர்களைக் கிராமணியார்’ என்றுதான் காங்கிரஸ்காரர்கள் அழைப்பது வழக்கம். அப்போதும் காமராஜர் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. ம. பொ. சி ஒலிபெருக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இடத்தை விட்டு நகராமல் சிங்கம்போல் நின்றார். ஒன்றுபட்ட இந்தியாவைப் போற்றி வரும் ம. பொ. சி. தனி நாடு பிரித்துத் துண்டாட விரும்புகிறார் என்று காமராஜர் பொருள்கொண்டதை யாரால்தான் பொறுக்கமுடியும்? சபையில் கூச்சல் அடங்கவில்லை. பதினைந்து நிமிடங்கள் ஒரே குழப்பமாய் இருந்தது. மேடையில் இருந்தவர்கள் சிலரும், குறிப்பாகத் திரு. சி.சுப்பிரமணியம், திரு சி. பி. சுப்பையா, காலம் சென்ற ஜனாப் உபையத்துலலா முதலியோரும் கிராமணி யாரைப் பேச விடுங்கள் என்று தலைவர் காமராஜரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். முடிவில் ம. பொ. சி. பேச அனுமதிக்கப் பட்டார். 

 *கட்டுப்பாட்டைக் காத்த கண்ணியர்!* “நான் கேட்பது இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் தனி நாடல்ல” என்பதை விளக்கினார். அப்போதும் பிடிவாதமாகத் திருத்தத்தை ஏற்க மறுத்தார் காமராஜர். மீண்டும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் விபரீதம் ஏற்படாமலிருக்கப் போலிஸ் லாரிகள் வந்து பந்தலைச் சுற்றி அணிவகுத்து விட்டன. ஆத்திரப்பட்ட பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும் நிலையில் இருந்தது. பலாத்காரத்தில் இறங்கிவிடும் அறிகுறிகள் தென்பட்டன. இது கண்ட ம. பொ. சி. மீண்டும் ஒலிபெருக்கி அருகில் வந்து நின்று “தமிழ்ப் பெரு மக்களே! நான் காங்கிரஸ்காரன். அதன் கட்டுப்பாட்டை விரும்புகின்ற ஒரு படைவீரன். நான் தலைவரின் நிராகரிப்பை ஏற்கவில்லையென்றாலும், அதனைத் தொடர்ந்து எதிர்ப்பதன் மூலம் இந்தமாநாடு குழப்பத்தில் கலைவதை விரும்பவில்லை. என்ன ஆதரிக்கும் அன்பர்கள் இப்போது என் வேண்டுகோளை ஏற்று, அமைதி காக்குமாறு வேண்டுகிறேன். தலைவர் விருப்பம்போல் நடத்திக்கொள்ளலாம்” என்று கெம்பீரமாகக் கூறிவிட்டுத் தம் இடத்தில் வந்தமர்ந்தார். மேடையிலிருந்த பலரும் அவரைப் பாராட்டினார். தலைவர் காமராஜ் அவர்களும் கட்டுப்பாடு காத்த ம.பொ. சி அவர்களைப் பாராட்டினார். அந்த நிலையில் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த அந்த ஒரு தீர்மானத்திற்கு மட்டும் மறுநாள் காலை ஷண்முகா தியேட்டரில் மாநாட்டைக் கூட்டி அதன் மீது ஒட்டெடுத்து முடிவு கூறப் போவதாகக் காமராஜ் அறிவித்தார். ஆனால் அப்படி ஒரு மாநாடு நடைபெறவே இல்லை. அன்று ம. பொ.சி. அவர்கள்காட்டிய உறுதியும்,கொள்கைப் பற்றும், நாட்டுப் பற்றும் எனக்கு அவர்பால் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தின. மறுநாள் ஜி. டி. நாயுடு அவர்கள் இல்லத்திற்கு நாங்கள் சென்றிருந்தபோது, “நீங்கள் ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு அஞ்சா நெஞ்சுடன் சிங்கம்போல் நின்ற நிலையைக் கண்டு நான் உங்களைக் காதலித்து விட்டேன்” என்று கூறினார் நாயுடு. திரு ம.பொ.சி.க்கு நிதி திரட்ட வேண்டுமென்று 1948இல் திரு சின்ன அண்ணாமலை முயற்சி செய்தார். கோவை தேசபக்தர் திரு சுப்ரி மூலம் 500 ரூபாய்கள் நிதி திரட்டியதாக நினைவு.இதைக் குறித்து திரு ம. பொ. சி. எனக்குக் கடிதம் எழுதினார். “இது என் அனுமதியில்லாமல் நடைபெறுகின்றது. இந்த முயற்சியை நான் விரும்பவில்லை” என்று அறிவித்திருந்தார். இதன் பிறகு திதி திரட்டும் முயற்சி கைவிடப்பட்டது. அப்போது ம. பொ. சி. அவர்களின் ஐம்பதாண்டு நிறைவுநாளில் நானே வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து நிதி திரட்டிக் கொடுத்துக் கெளரவிக்க வாய்ப்பு ஏற்படுமென்று சிறிதும் எண்ணவே இல்லை. T. K. Shanmukam 

 ஆக,  சென்னை ராஜ்ஜியம் போன்றவைகளுக்குப் பதிலாக, தமிழ்நாடு என்ற பெயரை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் 24-2-1961-ம் தேதி தமிழ்நாட்டுச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார். அது முதல், அரசு உருவாக்கும் தமிழ் ஆவணங்களில், கடிதங்களில் “தமிழ்நாடு” என்ற பெயர் பயன்படலாயிற்று. தமிழ்நாட்டு அரசாங்க மந்திரிகள் பங்கேற்கும் விழாக்களில் தமிழ்நாடு முதலமைச்சர் கே. காமராஜ், அமைச்சர் கக்கன், சபாநாயகர் செல்லப்பாண்டியன், ... என்று அறிவிக்கும் கல்வெட்டுகள் பதியப்பட்டன. 2300 ஆண்டுத் தமிழ்க் கல்வெட்டு வரலாற்றில் தமிழ்நாடு என்று பதிக்கப்பெறுவது முதன்முதலாக 1961-ல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளில் நான்கினை அடுத்த பதிவில் தருகிறேன்.

8-8-1957-ல் காமராஜ் கலந்துகொண்ட வாஞ்சிநாதன் மணிமண்டபக் கல்வெட்டு, இதில் சென்னை அரசாங்கம் என்றுள்ளது.

தமிழகம், தமிழ்நாடு இரண்டும் உள்ள கல்வெட்டு, 1973, காஞ்சிபுரம்.

ஆங்கிலக் கல்வெட்டுகளில், Madras State என்றே உள்ளது. அது Tamil Nadu என்று ஆங்கிலத்திலும் எழுதுமாறு 1967-ல் இருந்து திமுக அரசு முயற்சி எடுத்து வெற்றி கண்டது. டெல்லி பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தது.




0 comments: