தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962), தோட்டக்குறிச்சி (கரூர்)

 
தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962)
-------------------------------------------------------------

பொதுவாக, தமிழ்நாடு என்றோ தமிழகம் என்றோ அழைப்பது வழக்கமாகிவிட்டது. Both are synonyms. ஆய்வேடுகளில், கேரளம், தமிழர் வாழும் இலங்கைத் தீவுப் பிரதேசம், தமிழ்நாடு மாநிலம் (இந்தியா) மூன்றையும் சேர்த்து தமிழகம் என அழைப்பதுண்டு. உ-ம்: பேரா. ஆ. வேலுப்பிள்ளை, பீற்றர் ஷல்க் (உப்சாலா பல்கலை, ஸ்வீடன்) ஆய்வு வெளியீடுகள் ...

தமிழகம் எனப் புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ளது: *வையக வரைப்பில் தமிழகம் கேட்ப* - புறம் 168. தமிழ்நாடு எனப் பரிபாடல் குறிக்கிறது:  *தண்தமிழ் வேலி தமிழ்நாட்டு அகம் எல்லாம்* - பரிபாடல். “இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத், தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி” - சிலப்பதிகாரம்.

மூவேந்தர்களின் நாடுகளில் வாழ்ந்தாலும், நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல் என உறுதிபட முதலில் சாற்றியவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரைவரைந்த இளம்பூரண அடிகள் ஆவார். http://nganesan.blogspot.com/2009/11/ilampuranar.html

க. ப. அறவாணன், சைனரின் இலக்கணப் பணி. பக். 135:
“இளம்பூரணர் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் முதன்மையானவர், தலைமையானவர், சைனர், துறவி. கி.பி. 11-ம் நூற்றாண்டில் தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டறிந்து ஆராய்ந்து நூல் முழுமைக்கும் உரை இயற்றியவர் இவர் ஒருவரே. சைனராகிய இவர்

  “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்”
என்ற நூற்பாவிற்கு உரை எழுதி எடுத்துக் காட்டும் நல்குகிறார். அவ்வெடுத்துக் காட்டுப் பின்வருமாறு:

நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்.

   சைனராய்ப் பிறந்து தலைமை வாய்ந்த தமிழ் நூலிற்கு உரைவகுத்த இளம்பூரணர், அன்று பிரிந்து கிடந்த சேர சோழ பாண்டிய நாடு என்று முப்பிரிவுகளை விடுத்து “என் நாடு தமிழ்நாடு” என்று நெஞ்சுவக்க, உரிமை மணக்க, கை இனிக்க எழுதுகிறார். இவரைப் போலவே சைனராகிய நேமிநாத உரையாசிரியர் (கி.பி. 11-ம் நூற்றாண்டு) நேமிநாத ஆறாம் நூற்பாவுக்கு உரை எழுதும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

     பாலே திணையே வினாவே பகர்மரபே
     காலமே செப்பே கருதிடமே போலும்
     பிறழ்வும் சினைமுதல் ஒவ்வாப் பிறசொல்
     உறழ்வும் சிதைந்த உரை (நேமிநாதம், சொல். 6)

இவ்வெண்பாச் சூத்திரத்திற்கு உரை எழுதுமிடத்து, அதில் “நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்றது ”வினாவாலும் செப்பாலும் வழுவாமல் வந்தது” என்று குறிப்பிடுகிறார்.

    சைனராகிய இவ்விருவரது குறிப்புகளும் மிகவும் முதன்மை வாய்ந்தவை.”

20-ம் நூற்றாண்டில், தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமான வரலாறு
-----------------------------------------------------------------------------------------------

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jan/20/dravida-nadu-to-tamil-nadu-evolution-of-the-states-identity-1759188.html

https://www.kalaignarseithigal.com/opinion/2019/11/01/who-are-the-backbones-for-origin-of-tamilnadu-state
https://tamilthesiyan.wordpress.com/2018/07/18/தமிழ்நாடு-பெயர்-மாற்ற-தீ/

“29.11.1955இல் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் செயற்குழுவில் “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை – மெட்ராஸ் ஸ்டேட்” என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறது. மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும் ” என்று அழுத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக 1956 நவம்பர் 1இல் அறிவிக்கப்பட்டாலும் அவ்வாண்டின் தொடக்கம் முதலே தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கானப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
[...]
முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், காந்தியவாதி என்று அறியப்பட்ட க.பெ. சங்கரலிங்கனார் அவர்கள் 27.07.1956இல் விருதுநகரில் தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினார். காங்கிரசு கட்சி அவரின் போராட்டத்தை கண்டுகொள்ள மறுத்தது.

காங்கிரசின் இந்தப்போக்கு குறித்து வேதனைப்பட்ட சங்கரலிங்கனார் அவர்கள் சாகும் தருவாயில், ஜனசக்தி துணையாசிரியர் ஐ. மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார். அதில் “காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை” என்று எழுதினார். அவரை அண்ணா, ஜீவானந்தம், ம.பொ.சி. ஆகியோர் சந்தித்து உண்ணாநிலையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவரோ உண்ணாநிலையை கைவிட மறுத்து 79ஆவது நாளில் உயிர் நீத்தார்.”  இன்றைய தமிழ்நாட்டின் எல்லை அமைந்த நாள் நவம்பர் 1, 1956. அதாவது, தமிழ்நாடு பிறந்த நாள் நவம்பர் 1 ஆகும். தமிழகம் தனியரசு ஆகும் நாள் எனக் கொண்டாடினார் சிலம்புச்செல்வர் மபொசி கட்சியினர்.

தமிழ்நாட்டின் அமைச்சர் சி. சுப்பிரமணியம் முதன்முதலாக, 24 பிப்ரவரி 1961 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என ஆங்கிலத்தில் உள்ள இடத்தில் எல்லாம் “தமிழ்நாடு” என எழுதலாம், பேசலாம் என்று அறிவித்தார். அதுவே பின்னர் இந்திய மாநிலப் பேராக நிலைகொண்டது. அறிஞர் அண்ணா தீர்மானம் நிறைவேற்றினார்.

பாரதரத்தினம் சிஎஸ் காமராஜ் கேபினெட் மந்திரி. இருப்பினும், முதலமைச்சர் காமராஜர் தமிழ்நாடு என்பது வெளிநாட்டாருக்குப் புரியுமா என்ற கேள்விகளை பொதுமக்கள் கூட்டங்களில் அவ்வப்போது எழுப்பிக்  கோண்டிருந்தார்.
“தமிழ்நாடு என்ற பெயரின் பின்னணி குறித்துப் பேசிய அவர், ”தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியினர் மெட்ராஸ், மதராஸ், சென்னை என மூன்று பெயர்களைப் பயன்படுத்தி வந்தனர். இதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னபோது, வேறு நாட்டினர் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்று காமராஜர் சொன்னார்.

அந்தக் காலகட்டத்தில் ப்ளீடிங் மெட்ராஸ் என்று ஒரு துணி இங்கிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. எனவே மெட்ராஸ் என்றால்தான் வெளிநாட்டினருக்குத் தெரியும், தமிழ்நாடு என்று வைத்தால் எப்படி அவர்களுக்கு புரியும், இந்தத் துணி விற்பனை ஆக வேண்டாமா, நமக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடக்க வேண்டுமென்றால் மெட்ராஸ் என்ற பெயர்தான் சரியாக இருக்கும், தமிழில் வேண்டுமானால் சென்னை என்று வைத்துக் கொள்வோம் என காமராஜர் சொன்னார். ” தோழர் தியாகு https://www.bbc.com/tamil/articles/cl48g45v1jgo

அண்ணாவின் விருப்பமாக, மதறாஸ் ஸ்டேட்/ராஜ்ஜியம் என்பதை மாற்றித் தமிழகம் என்று பெயர் சூட்ட விரும்பியுள்ளார். கலைஞர் மு. க. இதை ஆவணப்படுத்தியுள்ளார்:
“''அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற உடன் சென்னை ராஜ்ஜியம் என்கின்ற பெயரை மாற்றி ''தமிழ்நாடு'' என்கிற பெயரை உருவாக்கி - இருந்த பெயரை அறிமுகப்படுத்தி 'தமிழகம்' என்று பெயரிடலாமா? என்ற சர்ச்சை எழுந்த பொழுது டெல்லியிலே இருந்தவர்கள் 'தமிழகம்' என்று சொன்னால் எங்களால் சொல்ல அவ்வளவு சுலபமாக இருக்காது. எனவே தமிழ்நாடு என்றே இருக்கட்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கேற்ப, பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்கின்ற பெயரை நம்முடைய மாநிலத்திற்கு சூட்டுகிற நிகழ்ச்சியை கோலாகலமாகக் கொண்டாடி சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.'' (ஆதாரம்: கருணாநிதி அவர்கள் எழுதிய பாரதி பதிப்பகத்தின், ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா! புத்தகத்தில் பக்கம் எண்.100)”
https://www.hindutamil.in/news/tamilnadu/929834-karunanidhi-said-tamil-nadu-is-anna-s-wish-narayanan-tirupati-report.html
Note: In The Hindu tamil newspaper, C. Subramaniam's announcement to use Tamil Nadu in State Legislative Assembly is wrongly given as 24-12-1961. The correct date is 24-02-1961.

தமிழ்நாடு பற்றிய முதல் கல்வெட்டு: தோட்டக்குறிச்சி (கரூர்), 1962
-------------------------------------------------------------------------------------------------

இன்றைய தமிழ்நாட்டில் மூவேந்தர்களின் தலைநகரங்கள் அடங்கியுள்ளன. சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி என்னும் கரூர். சோழர் தலைநகர் உறையூர் என்னும் திருச்சி. பாண்டியர்களின் மதுரை. சேரர் தலைநகர் கரூர் அருகே உள்ள தோட்டக்குறிச்சியில் அதன் எம்.எல்.ஏ. ஆக இருந்த டி. எம். நல்லசாமி 1962-ல் தமிழ்நாடு என்று கல்வெட்டுப் பொறித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் கல்வெட்டு ட்விற்றர் பக்கங்களில் கிடைக்கிறது. 

தமிழ்நாடு என்று வருகிற முதல் கல்வெட்டு இதுதான். சங்க காலச் சேரர் தலைநகர் ஆகிய வஞ்சி (கரூர்) அருகே உள்ள தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு 16-7-1962 தேதியிட்டது. அதன் பின்னர், 1966-ல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு என்ற பெயர்காட்டும் கல்வெட்டு. இக் கல்வெட்டுகள் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்தில் நிலைகொண்ட வரலாற்று மைல்கல்களாக விளங்குபவை.




தமிழ்நாடு பற்றிய முதல் கல்வெட்டு: தோட்டக்குறிச்சி (கரூர்), 1962
-------------------------------------------------------------------------------------------------

தமிழ் வரலாறு பற்றிப் பலரும் அறியாத செய்திகள். 
(1) தமிழகம் (புறநானூறு), தமிழ்நாடு (பரிபாடல்) 20 நூற்றாண்டுகட்கு முன்னர் உள்ள சான்று கொடுத்துள்ளேன். தமிழ் கூறு நல்லுலகம் என்பார் தொல்காப்பியர். பின்னர் சிலம்பு, சேக்கிழார், கம்பன், ...  First Milestone
(2) இடைக்காலத்திலே இளம்பூரண அடிகளும், நேமிநாத உரையிலும், வினாவுக்கு வழுவாமல் விடை அளித்தல் என்பதற்கு
’நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்’ என எழுதியுள்ளனர். Second Milestone
(3) மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என 1938-ல் முழங்கினர். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின. அவ்வமயம் தமிழ்நாடு எனப் பெயர் வைக்கக் கோரிக்கைகள் எழுந்தன. சங்கரலிங்கம் உண்ணாநோன்பு நோற்று உயிர்துறந்தார். பிரஜா சோசலிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ஆக இருந்த பி.எஸ். சின்னதுரை ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானத்தை தமிழ்நாடு பேரவையில் 30-ஜனவரி 1961-ல் கொணர்ந்தார். காங்கிரஸ் கட்சி ஆதரவு இல்லாமல் தோற்றது. ஆனாலும்,  24-பிப்ரவரி-1961ம் நாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம் (பொள்ளாச்சி) தமிழ்நாடு எனப் பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வமாக எம்.எல்.ஏ. அசெம்பிளியில் அறிவித்தார். இதுவே, தமிழ்நாடு என்ற பெயர் சுதந்திர இந்தியாவில் முதல் அரசாங்கத்தின் ஏற்பு ஆகும். சிஎஸ் அவர்கள் தமிழ்நாடு பட்ஜெட் (1961) எனத் தமிழ்நாடு என்ற பெயரைப் பயன்படுத்தவும் செய்தார். Third Milestone
(4) 1961 அரசாங்க அறிவிப்பின் பின்னர், மக்களில் சிலர் பயன்படுத்தத் தொடங்கினர். அவ்வகையில் இரு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. 1962-ம் ஆண்டில் ஏற்பட்ட கரூர் தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு, 1966-ல் ஏற்பட்ட திருநெல்வேலிக் கல்வெட்டு “தமிழ்நாடு” என்ற பெயர் நிலைகொண்டதைக் காட்டும் சான்றாதாரங்கள். 
சோழன் மெய்க்கீர்த்தியிலேயே தண்டமிழ்நாடன் என்று கல்வெட்டில் உண்டு. ஆனால், தமிழ்நாடு என்று வருகிற முதல் கல்வெட்டு தோட்டக்குறிச்சியில் தான். சங்க காலச் சேரர் தலைநகர் ஆகிய வஞ்சி (கரூர்) அருகே உள்ள தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு 16-7-1962 தேதியிட்டது. அதன் பின்னர், 1966-ல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு என்ற பெயர்காட்டும் கல்வெட்டு. இக் கல்வெட்டுகள் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்தில் நிலைகொண்ட வரலாற்று மைல்கல்களாக விளங்குபவை.
மேலும் அறிய,
”After many agitations for renaming the State, the then Finance Minister C Subramaniam announced in the Assembly on February 24, 1961 that the State which was written as ‘Chennai Rajyam’ in Tamil would be thereafter be referred to as ‘Tamilnadu’.  However, this could be done only within the State and in official correspondences to the Central government and foreign countries, it is mentioned only as Government of Madras.  The Dravida Munnetra Kazhagam opposed this partial arrangement and insisted that the State should be declared as ‘Tamil Nadu’.”

“இதற்கு மறுநாள் தமிழக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் அமைச்சர் சி.சுப்பிரமணியம்.
'தமிழ்நாட்டு அரசின் வரவு செலவினை சமர்ப்பிக்கிறேன்' என்றார்.”


”Then on January 30, 1961, the Socialist Party MLA Chinna Durai brought a resolution for a name change. Chinna Durai had requested ruling party members to vote in favour and asked for support from the Congress party, which led to then CM Kamarajar postponing the discussion on it for a month. In response, the DMK boycotted the Assembly for three days.

A month later, the resolution failed again after it was tabled, without the support of the Congress party. The then State Finance Minister C Subramaniam offered a compromise and said that the state government will use the term Tamil Nadu in its communication in Tamil. He also said that the ‘Madras state’ term can be used in communications in English.

A debate in Parliament

Around the same time, Member of Parliament and Communist leader from West Bengal, Bhupesh Gupta, moved a Bill in Parliament for renaming Madras State as Tamil Nadu. At that time, CN Annadurai, who was a Rajya Sabha member, supported the move. ”

---------------
மொழிவாரி மாநிலமாக, தமிழ்நாடு - அப்போதைய பெயர் மெட்ராஸ் மாகாணம் - 1- நவம்பர் - 1956-ல் தோன்றியது. அப்போதே, சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுகோள் வைத்தார். 27. 12 .1956 அன்று தமிழ் ஆட்சி மொழி மசோதா சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டது.  மசோதாவை சமர்ப்பித்த அமைச்சர் சி.சுப்பிரமணியம் தமிழன்னை அரியாசனத்தில் அமரும் திருநாளாகவே இதனை பார்க்கிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு இதனை வரவேற்று ஆதரித்து நிறைவேற்றிக் கொடுத்தனர். ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்ட அடிமை வாழ்வு நமது தாய்மொழியாம் தமிழ் மொழியை ஒரு பணிப்பெண் நிலைமையிலே தான் வைத்திருந்தார்கள்... இன்று நம் தாய்மொழி அரசு மொழியாக அரியாசனத்தில் அமருகிறது... என்று குறிப்பிட்டு அவர் பேசியபோது அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி தங்களின் அமோகமான ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். (ஆனால், இன்றைய தமிங்கில வளர்ச்சி திகைக்கச் செய்கிறது.) https://www.maalaimalar.com/news/sirappukatturaigal/maalaimalar-special-articles-kamarajar-made-tamil-official-language-557706 
 மதறாஸ் ராஜ்ஜிய சட்டசபையில், 24 பிப்ரவரி 1961-ம் நாள், நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் தமிழ்நாடு என்று எழுதலாம் என அறிவித்தார். அடுத்த நாளே, தமிழ்நாடு வரவுசெலவுக் கணக்கு என மாகாண பட்ஜெட்டைச் சமர்ப்பித்தார். https://twitter.com/PritlApp/status/835059297658761216
24 பிப்ரவரி 1961 சட்டமன்ற அறிவிப்பால், தமிழ்நாடு என்ற பெயர் கல்வெட்டுகளில் பொறிக்கப்படலாயிற்று. அவ்வகையில், தன் சக எம்.எல்.ஏவும், நண்பரும் ஆன தோட்டக்குறிச்சி எம். நல்லசாமி அவர்கள் 1962-லேயே தமிழ்நாடு என்று கல்வெட்டு வெளியிட்டார். இது தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அமைந்ததில் மிக முக்கியத்துவம் உடையது. பின்னர் 1966-ல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலும் இதே போல், தமிழ்நாடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர், நிதியமைச்சர் சிஎஸ் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் செய்த தமிழ்நாடு பெயர் அறிவிப்பை அண்ணாதுரை, ராஜ்யசபை உரையில் மேற்கோள் காட்டிப் பேசினார். அண்ணாதுரை டெல்லிக்கு ராஜ்யசபா எம்பி ஆனபோது, தமிழ்நாடு என்ற தீர்மானத்தை முன்னெடுக்க அண்ணாவுக்கு வழிமுறைகளைச் சொல்லித்தந்தவர்களில் முக்கியமானவர் சிஎஸ் அவர்கள். நேரு காலத்திலேயே, மத்திய சர்க்காரின் மந்திரியாக ஆகி நிறைய அனுபவம் பெற்றவர் சிஎஸ் தன் அறிவிப்பு டெல்லி சர்க்கார் சட்டம் ஆக்க திமுகவினருக்கு உதவினார். சிஎஸ் அவர்களை அரசியலில் முன்வரச் செய்தவர் ராஜாஜி. மூதறிஞர் ராஜாஜி 1967 தேர்தலில் திமுக கட்சிக்கு ஆதரவு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ், அண்ணா ராஜ்யசபையில்: http://andhimazhai.com/news/view/030202014-cm-2.html
“நாடாளுமன்றத்தில்..: இந்தக் கோரிக்கை இந்திய அரசியலில் பேசுபொருளாகக் காரணம் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார் குப்தா. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி தாக்கல் செய்வதாக இருந்தது.
ஆனால், அன்றைய தினம் அவர் அவையில் பங்கேற்க இயலாததால் குப்தா தாக்கல் செய்தார். “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்த காங்கிரஸ், தமிழ்நாடு என்று மாநிலத்துக்குப் பெயர் சூட்ட ஏன் மறுக்கிறது?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.” https://www.hindutamil.in/news/opinion/columns/927809-tamilnadu-naming-history.html

~NG

---------------------

https://dhinasari.com/general-articles/115131-தமிழ்நாடு-முன்னெடுத்தத.html

தமிழ்நாடு - முன்னெடுத்தது யார்?
Nov. 3rd, 2019

1. மாநில எல்லைகளைச் சீரமைப்பதற்காக பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை குறித்து 21.11.1955 முதல் 26.11.1955 வரை தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் சி.சுப்பிரமணியம் கொல்லங்கோடு , கொள்ளேகால், தோவாளை, அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் சென்னை மாகாணத்தோடு இணைக்கப்பட வேண்டும் எனப் பேசினார் அப்போது திமுக சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கவில்லை.

2. மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த போது (1956) தமிழ்ப் பேசும் பகுதிகளைத் தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும் என்று குரலெழுப்பியவர் ம.பொ.சி. 1946 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று அவர் தமிழரசுக் கழகம் என்ற அமைபைத் தொடங்கினாலும் அது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தமிழ்ப் பண்பாட்டு இயக்கமாக, ஓர் உட்பிரிவாகத்தான் செயல்பட்டு வந்தது. காமராஜ் தலைவராக இருந்த போது காங்கிரசிலிருந்து ம.பொ.சி வெளியேறப்பட்ட பின்னர்தான் அது தனி அரசியல் அமைப்பாயிற்று. எனவே ம.பொ.சியைக் காங்கிரஸ்காரர் எனச் சொல்வதில் பிழை இல்லை

3. ம.பொ.சி.யின் போராட்டங்களால் உந்தப்பட்ட சங்கரலிங்கம், 1956 ஜூலையில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அவரும் காங்கிரஸ்காரரே. அப்போது முதல்வராக இருந்த காமராஜ் அந்தப் போராட்டத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 77 நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு இறந்து போனார். இறக்கும் முன் தன் விருபங்களை எழுத்து மூலமாகத் தெரிவித்தது மயாண்டி பாரதி என்ற கம்யூனிஸ்ட் தலைவரிடம்

4. தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி, 30.1.61 அறப்போர் அறிவித்தார். டி.கே. சண்முகம், எம்.ஏ.வேணு, ஏ.பி. நாகராஜன், கா.மு.ஷெரீப், புலவர் கீரன் போன்றோர் பங்கெடுத்ததால் இது பெரும் கவனம் பெற்றது. இதில் 1700 பேர் கைது செய்யப்பட்டனர். திமுக இந்த அறப்போரில் பங்கெடுக்கவில்லை. ஆனால் ஆதரித்தது

5. இந்தப் போராட்டத்தை அடுத்து சட்டமன்றத்தில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று அறிவிக்க வேண்டும் என்று தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். அதை ஏற்று பிப்ரவரி 24, 1961 சி.சுப்பிரமணியம் ” மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு சென்னை ராஜ்யம் என்று தமிழில் எழுதி வருகிறோம். இனித் தமிழில் எழுதும் போது சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்கு பதிலாக தமிழ்நாடு என்று எழுத வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று அறிவித்தார்.

அதாவது அரசைப் பொறுத்தவரை 1961லிலேயே தமிழ்நாடு உருவாகி விட்டது!

அப்போது திமுக ஆட்சியில் இல்லை. ஆனால் திமுகவிற்குச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் தீர்மானம் கொண்டுவரவில்லை.

இதைக் குறித்து அண்ணா ராஜ்ய சபையில் பேசியதாவது:
For the sake of informing this house, I may inform you, Sir, that on the 24th February 1961, the Leader of the House in the state assembly stood up to say that he was accepting part of the non-official resolution brought forward not by the DMK or any other political party which is considered to be inimical to the Congress but by a PSP member. That PSP member brought forward a non -official resolution for renaming Madras as Tamilnad and it was discussed for many days and finally the then Finance minister and the leader of the house Mr.C.Subramaniam stood up to say that he was accepting a part, or the spirit of the resolution and added that thereafter all the publications of Madras Government would appear in the name of Tamilnadu Government

6. அண்ணா இதைப் பேச வாய்ப்பளித்தது, ராஜ்யசபையில் கொண்டு வந்த ஒரு தனி நபர் மசோதா. அந்த தனி நபர் மசோதாவைக் கொண்டு வந்தவர் பூபேஷ் குப்தா என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர். அண்ணா அப்போது ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தும் அவர் இது குறித்து மசோதாவோ, தீர்மானமோ கொண்டு வரவில்லை

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள் செய்தவர்கள் யார் என்று இவற்றைக் கொண்டு நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)

NG> CS announced in Tamil Nadu assembly that the name, Tamil Nadu can be used henceforth in 1961. Have u read the archives?

<<<
1957ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் தீர்மானம் ஏன் தோல்வி அடைந்தது
1961ல் அந்தத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது 
வர்த்தக ரீதியில் உபயோகப் படுத்தலாம் என்று காமராசர் இறங்கி வந்தார்
தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட வேண்டுமென்று CS உறுதியாக இருந்திருந்தால் அவர் அமைச்சரவையிருந்தும் காங்கிரசிலிருந்தும் ராஜினாமா செய்து இருக்க வேண்டும்
கடைசியில் திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் தமிழ்நாடு பெயர் தீர்மானம் நிறைவேறியது
>>>

எல்லாவற்றிற்கும் காரணம், காமராஜர் தமிழ்நாடு என்ற பெயரை ஒத்துக்கொள்ளவில்லை. இது தான் பெரிய பிரச்சினை.

> வர்த்தக ரீதியில் உபயோகப் படுத்தலாம் என்று காமராசர் இறங்கி வந்தார்

அதுவும் செய்யக் காமராஜ் ஒத்துக்கொள்ளலை. வர்த்தகம் பாதிக்கும் என்றார் முதல்வர்.

தமிழ்நாட்டின் நிதிஅமைச்சர் சி. சுப்பிரமணியம் முதன்முதலாக, 24 பிப்ரவரி 1961 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என ஆங்கிலத்தில் உள்ள இடத்தில் எல்லாம் “தமிழ்நாடு” என எழுதலாம், பேசலாம் என்று அறிவித்தார். அதுவே பின்னர் இந்திய மாநிலப் பேராக நிலைகொண்டது. அறிஞர் அண்ணா தீர்மானம் நிறைவேற்றினார்.

பாரதரத்தினம் சிஎஸ் காமராஜ் கேபினெட் மந்திரி. இருப்பினும், முதலமைச்சர் காமராஜர் தமிழ்நாடு என்பது வெளிநாட்டாருக்குப் புரியுமா என்ற கேள்விகளை பொதுமக்கள் கூட்டங்களில் அவ்வப்போது எழுப்பிக்  கோண்டிருந்தார்.
“தமிழ்நாடு என்ற பெயரின் பின்னணி குறித்துப் பேசிய அவர், ”தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியினர் மெட்ராஸ், மதராஸ், சென்னை என மூன்று பெயர்களைப் பயன்படுத்தி வந்தனர். இதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னபோது, வேறு நாட்டினர் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்று காமராஜர் சொன்னார்.

அந்தக் காலகட்டத்தில் ப்ளீடிங் மெட்ராஸ் என்று ஒரு துணி இங்கிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. எனவே மெட்ராஸ் என்றால்தான் வெளிநாட்டினருக்குத் தெரியும், தமிழ்நாடு என்று வைத்தால் எப்படி அவர்களுக்கு புரியும், இந்தத் துணி விற்பனை ஆக வேண்டாமா, நமக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடக்க வேண்டுமென்றால் மெட்ராஸ் என்ற பெயர்தான் சரியாக இருக்கும், தமிழில் வேண்டுமானால் சென்னை என்று வைத்துக் கொள்வோம் என காமராஜர் சொன்னார். ” தோழர் தியாகு https://www.bbc.com/tamil/articles/cl48g45v1jgo

மபொசி அவர்களின் தமிழரசுக் கழகம், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பெருந்தலைவர் காமராஜர் செயல்பட்டிருந்தால் இன்னும் பெரும்புகழ் பெற்றிருப்பார். ஏனோ செய்யவில்லை. 1961-ல் தமிழ்நாடு எனப் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்போடு நிறுத்திக்கொண்டது காங்கிரஸ் கட்சி.

NG> தமிழ்நாடு என்று வருகிற முதல் கல்வெட்டு இதுதான். சங்க காலச் சேரர் தலைநகர் ஆகிய வஞ்சி (கரூர்) அருகே உள்ள தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு. 1962.

Meignani wrote:
> 👏👏
> 1962 இலேயே கல்வெட்டில் "தமிழ்நாடு" என்று எழுதிவைத்த
> அந்த மாமனிதனை வணங்குகிறேன்.


24 பிப்ரவரி 1961-ம் ஆண்டு, தமிழ்நாட்டின் நிதியமைச்சர் சிஎஸ் (பின்னாளில் பாரதரத்தினம்) தமிழ்நாடு என்ற பெயரை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் எனச் சட்டமன்றப் பேரவையில்  அறிவித்தார். அவரது நண்பரும், சக எம்.எல்.ஏவும் ஆகிய தோட்டக்குறிச்சி மு. நல்லசாமி அவர்கள் தான் “தமிழ்நாடு” என்ற பெயரைக் கல்வெட்டில் பொறித்து, தமிழக முதல்வர் கு. காமராஜை அழைத்து அக் கல்வெட்டைத் தம் ஊரில் திறக்கச் செய்தார். அக் கல்வெட்டின் ஒளிப்படம் இங்கே காணலாகும், 
http://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-thottakurichi.html

தோட்டக்குறிச்சி மு. நல்லசாமி தமிழில் நல்ல ஆர்வம் உடையவர். கருவூர் அரசினர் கலைக்கல்லூரி அமைக்கும் குழுவில் துணைத்தலைவர். இல்லத்துக்கு “அருள்நிலை” என்ற பெயர் வைத்தவர். பார்த்தருளுக: http://www.gackarur.ac.in/docs/college_history_doners.pdf

தமிழ்நாடு என முதன்முதலாக, 20-ம் நூற்றாண்டில் கல்லில் பொறித்த நல்ல மனிதர் தோ. மு. நல்லசாமியின் ஒளிப்படம் இணைக்கிறேன். மேலும் அறிய,

பிற பின்!
NG

0 comments: