பாரதியார் பாடலில் ஒளியின் வேகம் - சாயணர் ரிக்வேத பாஷ்யத்தில் ஓர் ஆய்வு

2016 ஓம்சக்தி (கோவை) தீபாவளி மலரில் வெளியாகியுள்ள என் கட்டுரை. பாரதியார் ஒளியின் வேகத்தைச் சாயணர் எழுதிய ரிக்வேத பாஷ்யத்தின் சூத்திரத்தைத் தமிழாக்கித் தருகிறார். சாயணர் சூத்திரத்தில் யோஜனை என்னும் தூர அளவையைக் காதம் என்று பயன் படுத்துகிறார். அதாவது, ஒரு யோசனை = ஒரு காதம் எனக் கொள்கிறார் பாரதியார். சுமார் 10 மைல் = ஒரு காதம் என்கிறது சென்னைப் பல்கலைப் பேரகராதி.

இந்த சாயணர் பாஷ்ய சூத்திரம் பிரக்‌ஷிப்தம் எனப்படும் இடைச்செருகல் என விளக்கியுள்ளேன். 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் தொலைநோக்கிகள் (Telescopes) கொண்டு ஆராய்ந்து முடிவெடுத்த இயற்பியல் உண்மை ஒளியின் வேகம், https://en.wikipedia.org/wiki/Speed_of_light இவை இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களால் பள்ளிகளில் அறிமுகம் செய்தபோது யாரோ வடமொழிவாணர் ஒருவர் சாயணபாஷ்யத்தில் எழுதிச் சேர்த்துள்ளார் என்பது வெள்ளிடைமலை.

காதம்/காவதம்:
’பாரதியின் வேதமுகம்’ போன்ற நூல்களின் ஆசிரியர் சைவத்திரு. சு. கோதண்டராமன் அவர்கள் மின்தமிழ் குழுவில்
12/10/2010 அன்று குறிப்பிட்டுள்ளார்:
நாகைக்கும் காரைக்கும் காதம், 
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம், 
காழிக்கும் தில்லைக்கும் காதம் என்று
ஒரு வழக்கு அந்தப் பகுதிகளில்- நாகப்பட்டினம், காரைக்கால்,
திருக்கடையூர், சீர்காழி, சிதம்பரம்- கேட்டிருக்கிறேன்.
சொல்லப்பட்ட ஊர்களுக்கு இடையேயுள்ள தூரம்
ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் உள்ளது.”

கொங்குநாட்டார்களிடையே நீண்ட காலமாக ஒரு சொலவடை வழக்கத்தில் உள்ளது. கொங்குப் புலவோர் அ.மு.குழந்தை, பெ.தூரன் போன்றோர் எழுதியும் உள்ளனர். மலைகளால் சூழப்படுவது அகல்விளக்கின் விளிம்பு போலவும் (Edges of the earthen lamp),முவ்விழைகள் கொண்ட திரி அந்த அகல்விளக்கில்! நொய்யல், ஆன்பொருனை, பவானி சேர்ந்து அகண்ட காவிரி ஆகிக் கொங்கிலிருந்து சோழநாட்டை வளமாக்கச் செல்கிறாள் பொன்னிப்பாவை. இதனால் அகல்நாடு என்று கொங்குநாட்டைக் கூறுவர். அகல் திரியின் முகம்/மூக்கு பெரிய காவேரி திருச்சி-தண்செய் சமவெளிக்கு விரிந்து பாய்ந்து ஒளிமயமான வாழ்க்கையைத் தமிழர்களுக்கு அத்திரி (காவிரி) அளிக்கிறது.

சங்ககாலச் சேரர்களின் தலைநகர் காவிரிக் கரையில் உள்ள வஞ்சி. விளக்கி நூலெழுதியவர் மகாவித்துவான் ரா. ராகவையங்கார். பின்னர், தினமலர் கிருஷ்ணமூர்த்தி கண்டெழுதின நாணயங்கள், ரா. நாகசாமியின் ரோமன் கரூர், ... எல்லாம் நிரூபித்துவிட்டன. காதம், காவதம் என்ற கன்னடச் சொற்களை அறிமுகம் செய்த இளங்கோ அடிகள் கொண்டது 10 - 14 மைல் எனலாம். சமணக் குரத்தி கவுந்தி அடிகளின் கதாபாத்திரத்தை தன் சமண சமயத்தை விவரிக்கத் தன் நாவலில் படைத்துக்கொள்கிறார். சீன மொழியில் Journey to the West போலவும், ஜப்பானிய மொழியில் Tale of the Genji போல, செம்மொழி தமிழில் உள்ள முதல் நாவல் சிலப்பதிகாரம். காவிரி பாயும் கங்கர்களின் நாட்டை ஆளுமைக்குள் வைத்திருப்பதைச் சோழர்கள் எப்பொழுதும் விரும்பினர். அணைகள் போன்றவை கட்டிவிட்டால் நீர்வரத்து திருச்சி-தஞ்சை டெல்ட்டா பாசனத்துக்கு குறையுமே. அதுபோல், சோழன் ஒருவனின் ஆட்சிக்குள் காவிரிநதி பாயும் எல்லா இடங்களும் இருந்தன என்று நாடுகாண் காதையில் கூறி, மதுரைக்கு வடக்கே 30 காதம் (= ~360 மைல்) தொலைவில் கோவலன் கண்ணகி கௌந்தி அடிகள் இருப்பிடத்தில் சந்தித்து, பின்னர் சீரங்கபட்டினம் வந்து, அந்தசரணரைத் தொழுது, பின் உறையூர் வந்துசேர்வதாகப் பாடியுள்ளார். பலரைச் சந்திப்பது எல்லாம் கண்டவியூக சூத்திரத்தை மாதிரியாக வைத்துச் செய்தது. வஞ்சியில் இருந்து கன்னட நாடு சென்று சமண சமய குரவர்களிடம் இளங்கோ அடிகள் அதன் தத்துவங்களைக் கற்றிருக்கலாம்.

ஜனத்தொகை மிகுந்துவரும் மாநிலங்களில் நீர் என்பது ஒரு நேஷனல் ரிஸோர்ஸ். சரியான முறையில் பங்கீடு செய்தல் வேண்டும். வரலாற்றையும் கணக்கில் எடுத்து. இதனையெல்லாம் தெளிவாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் நாடுகாண்காதையில் காவிரி பாயும் நாடு, அதன் உரிமைகள் எல்லாம் சொல்லிவிட்டார். சோழன் மேலாளுமையில் இருந்த சீரங்கம் (இப்பொழுது சீரங்க பட்டினம்), அங்கே இருந்த சமண சமயம் எல்லாம் விளக்குகிறார். அந்தச் சோழன் யார் என்றால் கரிகால் சோழன்காலத்திலிருந்து என அடியார்க்குநல்லார் குறிப்பிடுகிறார். காதம் ~12 மைல் என்பது கன்னட, தமிழ் நாடுகளில் உள்ள சான்றுகளால் தெளிகிறோம். முப்பது காதம் ~360 மைல் மதுரைக்கு வடக்கே கவுந்தி அடிகளின் தவப்பள்ளியைச் சொல்லி, குடநாட்டில் (வடபெருங்கோடு) பொழில்மண்டிலமும் குறிப்பிடுகிறார். ஐம்பொழில் (ஐஹொளெ), பொழில்நரசபுரம் (ஹொளெநர்ஸிபுர), என பொழில்மண்டிலம் என சையமலைப் பகுதிகளைக் குறிப்பிடுகிறார். அந்த மலைகளில் கரும்பாலைப் புகை மேகங்கள் போலச் சூழும் வேளாண் வளமும் குறிப்பிடுகிறார். அங்கிருந்துதான் கரும்பு அதியமான் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து பயிரிடச் செய்கிறான் என்பது சங்க இலக்கியம். சமண சமயத்தின் தெய்வங்களை சீரங்க பட்னத்தில் சந்தித்து, அங்கே மொழிந்த மந்திரங்களை பின்னர் தமிழ்நாட்டு திருச்சி (திருவரங்கம்) வந்தும் சொல்கின்றனர். சீரங்கத்தில் நிகழ்ந்தது திருவரங்கத்திலும் நினைவுக்கு வருதல் இயற்கை. சீரங்கம், திருவரங்கம் இரண்டுக்கும் இடையே நிகழும் நிகழ்ச்சிகளை நாடுகாண்காதையில் பேசுகிறார். இளங்கோ வாழ்ந்த காலத்தில் (~கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) தலைக்காவேரி உள்ளிட்ட பகுதிகள் தமிழகம் தான். ஆனால் ஏனோ, இருபதாம் நூற்றாண்டு உரைகள் நாடுகாண் காதையின் இன்றைய கர்நாடகப் பகுதிகளை விரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டன. ஆனால், கண்டவியூக சூத்திரம் படித்தாலும், காதம்/காவதம் கணக்கீட்டாலும், பொழில்மண்டிலம், வடபெருங்கோடு, ... என்ற குறிப்பிட்ட பொருளுடைய சொற்கள் காவிரி உற்பவிக்கும் பகுதியைச் சார்ந்தனவாகும். சையமலையும், தலைக்காவேரி, சீரங்கம் என்பதும் கர்நாடகம், சீரங்கம் அருகே தான் கங்கர்களின் தலைக்காடு. சீரங்கம் கங்கர் ராஜ்யம்; ஆனால், திருவரங்கம் என்பது திருச்சி எனவும் கணக்கில் எடுத்தால் நாடுகாண்காதையின் பொருள் தெளிவாக விளங்கும்.  ஆழ்வார் யாரும் திருவரங்கத்தைச் சீரங்கம் என்பதில்லை. இரண்டு இடங்களும் வெவ்வேறு. சோழனின் இறையாண்மைக்குக் கீழிருந்த பகுதிகள் இவை என்பதால் நாடுகாண்காதையில் காவிரிநாடு முழுக்கப் பாடியுள்ளார். மேல்கொங்கிலே காவிரி தடைபடாமல் இருந்தால்தான் தங்கள் நாட்டு வேளாண்மை செழிப்பாக இருக்கும் என்பதில் சோழர்கள் மிகக்கவனம் செலுத்தினர். இப்போதைய மாகாண எல்லைகள் இல்லாத காலம் சிலம்பின் காலம். இப்போது காவிரிநாட்டின் பகுதிகள் கர்நாடகா என்றாலும், பழங்காலத்தில் அதன் வரலாறும், மன்னர்களையும் உ. வே. சாமிநாதையர் விளக்குவதைப் பார்ப்போம்.

கொங்குநாட்டில் தலைக்காடு என்ற இடத்தில் கங்கர்கள் என்ற ஒருவகையரசர்கள் இருந்தார்கள். அவர்கள் புலவர்களை ஆதரித்து வந்தார்கள். தளக்காடு என்பது பிற்காலத்தில் தலைக்காடு என்று வழங்கப்படுகிறது. நன்னூல் இயற்றிய பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கன் அந்தக் கங்கர்களில் ஒருவனே. அவர்கள் சைனர்கள். நன்னூல், அதற்குரிய மயிலைநாதர் உரை, நேமிநாதம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நம்பியகப்பொருள், இவற்றின் உரைகள், பெருங்கதை, வச்சணந்திமாலை முதலியன அவர்கள் இயற்றுவித்த நூல்களாகும். சீவக சிந்தாமணியும், சூளாமணியும் சில உபகாரிகள் வேண்டுகோளால் சைன பண்டிதர்கள் இயற்றிய காப்பியங்களே.”(பக்கம் 129, உவேசா, சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், என்னிடம் உள்ள பிரதி: நூலின் முதலச்சு 1928-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு).

அன்புடன்,
நா. கணேசன்

சந்தன விடுதூது - ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயில் விழாக் காணொளிகள்

திருச்சிப் புலவர் இராம. இராமமூர்த்தி, சந்தன விடுதூது யாத்தவர், உரை:


கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் உரை:

இரு சொற்பொழிவுகளுக்கு முன்னர் நூல் வெளியீடும்,
முனைவர் நா. கணேசனின் அறிமுகவுரையும்:


சந்தனவிடு தூது ஹூஸ்டன் விழாப் படங்கள்

http://nganesan.blogspot.com/2016/10/sandalwood-as-messenger-prabandham.html

பல ஆண்டுகளுக்கு முன்னர், தென்றல் ஆசிரியர் மதுரபாரதியும், கவிமாமணி இலந்தையாரும் மீனாட்சி கோவிலுக்கு வந்திருந்தனர். யூனிகோட் குறியீடு தமிழுக்கு இணையத்தில் ஏற்றம் பெற்ற காலம் அது. காசி ஆறுமுகத்தைக் கொண்டு சந்தவசந்தம் கூகுள்குழுவில் யாகூ குழு மடல்களை தானாக ஒருங்கு குறியீட்டில் மாற்றும் நிரலி எழுதச் செய்து வெளியிட்டோம். அப்போது கனடா நாட்டுக் கவிஞர் அனந்த் பாடிய வெண்பா நினைவில் இருக்கிறது:

         பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
         வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
         பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
         காரணமாய் நின்றார் களித்து!

தமிழர் இணையும் யூனிக்கோடு!


சந்தவசந்தத்திலும், இணையவெளியிலும் நல்ல பல மரபுக் கவிஞர்கள் இருக்கிறார்கள். 1500 ஆண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ் பக்தி இலக்கியங்களாகவோ, அல்லது புதுத் துறைகளிலோ பிரபந்தங்கள் என்னும் நீண்ட சொற்கட்டுடைய நல்லிலக்கியங்களையும் புதிதாக, தமிழுக்கு சந்தவசந்தக் கவிஞர்களும், தமிழ்நாட்டில் உள்ள கவிஞர்களும் செய்யத் தூண்டுவதாக புலவர் இராமமூர்த்தி அவர்களின் மீனாட்சி சந்தனவிடு தூது அமைந்துள்ளது. பெண்தெய்வம் ஒன்றுக்குத் தனித் தூது அமைவது தமிழில் இதுவே முதன்முறை!

சந்தனவிடு தூது ஹூஸ்டன் விழாப் படங்கள்












மீனாட்சி சந்தனம் விடுதூது - ஹ்யூஸ்டனில் புதிய பிரபந்த நூல் அரங்கேற்றவிழா (அக்டோபர் 2, 2016)




Bharathi Kalai Manram and
Sri Meenakshi Temple, Houston Jointly Present

A Grand Nool Arangetram (Prabandham Release) of
Sri Meenakshi Chandanam Viduthuuthu

மீனாட்சி சந்தனம் விடுதூது
by the Tamil scholar
Vidwan Rama. Ramamoorthy, Tiruchy

and introducing
Tamil Translation of Sanskrit verses by
Kavimamani Ilandhai Ramasamy

  Date: Sunday, October 2, 2016, 10:30 AM
Venue: Saraswathi Hall
Sri Meenakshi Temple, Pearland, Texas

For more information – Contact:
Tupil Narasiman – TNarasiman@gmail.com, Naga Ganesan  naa.ganesan@gmail.com


                 அமெரிக்கை ஆக அமெரிக்க மீனாட்சி 
                 சந்தனத் தூதடைந் தாள்!


     மதுரை மீனாக்ஷி!
     இலந்தை இராமசாமி
இரட்டை ஆசிரிய விருத்தம்

கொங்குதிகழ் பூமலர் தங்கிவளர் கூடலின்
   கோமகள் தேவி உமையே
   கோலா கலத்தமிழே நாலா புறம்திகழக்
   கொண்டாடும் கூடல் இறையே
திங்கள்முடி எம்பிரான் பங்கில்வளர் அம்மையே
   தேனாட்சி மீனாட்சியே
   செந்தமிழ் பேசிடும் பைந்தமிழ்ச் செல்வியே
   சித்திரச் சீமாட்டியே
சங்கமுயர் மதுரையில் பொங்குதமிழ் ஆய்ந்திடத்
   தான்விருந்தேற்கு மணியே
   சத்தியத் தடாதகை இத்தரை உலாவிய
   சக்தியே தேவதேவி
தொங்குமெழில் உச்சியில் தங்குமுகில் கோபுரச்
   சோதியே ஞான வடிவே
   சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
   சுந்தரி மீனாக்ஷியே! (1) 

 வண்டாடும் தென்பாண்டி மண்டலம் குண்டலம்
   மாவண்டம் முகமண்டலம்
   வால்விழிப் பார்வையில் கால்கொளும் செந்தமிழ்
   மாதாநின் தாள்மந்திரம்
பண்பாண்ட கூடலின் மண்பூண்ட பேறுநின்
   பாதம் பதிந்ததன்றோ
   பாராளும் வேந்தெனத் தாராள மாகவே
   பரமன் வதிந்ததன்றோ?
திண்டாடும் நெஞ்சங்கள் கொண்டாட எத்தனை
   சீர்விளை யாடல்களே
   தேன்மழை சிந்திடும் வான்பரஞ் சோதியின்
   தீந்தமிழ்ப் பாடல்களே
தொண்டாளும் உள்ளங்கள் சூழாது கள்ளங்கள்
   ஜோதியே ஞானவடிவே
   சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
   சுந்தரி மீனாக்ஷியே!  (2)

ஓடுகிற இப்புவி கூடுகிற யாவையும்
   ஓடிடச் செய்பவள்நீ
   ஓங்குதிரை நீர்ப்புனல் வாங்கிமுகி லாகவே
   ஊற்றிடப் பெய்பவள்நீ
பாடுகிற என்மொழி போடுகிற வார்த்தையில்
   பாவமாய் நிற்பவள்நீ
   பாவனை யாகவே பாருளோர் கண்முனே
   பாசமாய்க் கற்பவள்நீ
தேடுகிற மெய்ப்பொருள் வீடுபெறச் செய்பொருள்
   ஜீவன் உருப்பொருள்நீ
   சித்தாந்தம் யாவையும் கொத்தாக வேபதம்
   சேர்க்கும் கருப்பொருள்நீ
சூடுபெறு தீயினை நீடுபெறு கையிலே
   சூறையிடு வான்தேவிநீ
   சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
   சுந்தரி மீனாக்ஷியே!          (3)

வந்துவிழும் செந்தமிழ் சந்தமியல் நாடகம்
   வளர்கொங்கை மூன்றாக்கினாய்
   வந்தபதி நாடகம் தந்தபதி ஆகையால்
   மற்றதை நீபோக்கினாய்
சந்தமுயர் குருபரன் தந்ததமிழ் கேட்டுநீ
   தத்தியே வந்த தத்தை
   சன்னயிள முறுவலொடு சின்னதொரு பெண்ணாகத்
   தந்தனை கொத்து முத்தை
சிந்தனையிலே பொருள் வந்தணையச் செய்தனை
   செந்தமிழிலே பெய்தனை
   சேல்விழிப் பெண்மையே கோல்நெறி வழுவாத
   தெய்வமே மீனாக்ஷியே!
சொந்தமென உன்னையே வந்தனைகள் செய்பவர்
    தோல்வியே காணமாட்டார்
    சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
    சுந்தரி மீனாக்ஷியே!  (4)

பெண்மையும் ஆள்வதாய் மண்ணில் விதைத்ததோர்
   பேற்றினைக் கண்டவள்நீ
   பித்தனும் உன்மனச் சித்திலுன் மத்தனாய்ப்  
   பீடுறக் கொண்டவள்நீ
உண்மையேதண்ணளி வண்மையேசிறுமியாய்
   ஓர்வேள்வி பூத்தவள்நீ
   உலகாளும் நாயகிநிலபாரம் தாங்கியே
   ஓர்குடை காத்தவள்நீ
கண்விழிப் பார்வையில் எண்ணிலா உயிர்களைக்
   காத்துப் பிடித்தவள்நீ
   கண்முதல் தேவர்க்கும் பெண்முதல் கௌரவம்
   கற்றுக் கொடுத்தவள்நீ
தொண்டர் மனக்குறை கண்டு பொறுத்திடாச்  
   சோதியே மீனாக்ஷியே
   சொக்கனும் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
   சுந்தரி போற்றி போற்றி!     (5)
--------------------------------------------------


கடம்பவனவல்லி பதிகம்
(கட்டளைக் கலித்துறை)

தூமேவு வீரந் திருஞான மூன்றையுந் தொண்டரெல்லாம்
தாமேவு வண்ண மளிப்பாயென் றான்றவர் சாற்றுதல்கேட்
டேமேவு நின்சரண் சார்ந்தேனிவற்றை யெளிதருள்வாய்
மாமேவு வானவர் வாழ்த்துங் கடம்ப வனவல்லியே.   [1]

வலக்கண் டிருவிடக் கண்வாணி நெற்றியில் வாய்த்தொளிரும்
புலக்க ணறிவு மகளென நூல்கள் புகல்வதுகேட்
டலக்கண் விலக்குநின் றாளடைந் தேனரு ளன்பர்கள்மும்
மலக்கண் ணடைப்புறுங் கண்டீர் கடம்ப வனவல்லியே. [2]

விந்தா டவிக்கின்றி நின்பாத தாமரை மேவுறலென்
சிந்தா டவிக்கியை யாதுகொ லோசெக மீன்றவன்னே
சந்தா டவிசண்ப காடவி கற்ப தருவடவி
வந்தா ரடவி பலசூழ் கடம்ப வனவல்லியே. [3]

தாயா முனக்குத் தமியேன் குறைகளைச் சாற்றனன்றே
ஈயார் தமிழ்ச்சுவை யாயா ரிறுமாந் திருப்பவர்பாற்
போயா சகஞ்செய விட்டுவி டேலென்றன் புத்தமுதே
வாயார வாழ்த்த வருள்வாய் கடம்ப வனவல்லியே. [4]

புத்தியி லேன்விழ லுக்கிறைப் பேனின்றன் பொன்னடிசேர்
பத்தியி லேனெனி னுஞ்சரண் சார்ந்தனன் பார்த்தருளெண்
சித்தி தருமமிழ் தக்கட லின்மணித் தீவகத்தின்
மத்தியில் வில்வ வனஞ்சார் கடம்ப வனவல்லியே. [5]

ஊனார் மயறீர் வியாத னுதிட்டிர னோங்குவிறற்
கூனார் சிலைவிச யன்னன்றி நின்புகழ் கூறுவதற்
கியானா ரெனினுஞ் சரண்புகுந் தேனகற் றென்குறையை
வானார் முகில்படி யுஞ்சீர்க் கடம்ப வனவல்லியே. [6]

ஆவா நினதடி யெண்ணாமல் வீண்செய லாற்றிவெய்ய
தீவாய் விழுபுழுப் போலநொந் தேனின்று தேர்ந்தடைந்தேன்
தேவாதி தேவ னிடத்தாய் நினையன்பிற் சேவைசெய
வாவா வினிதரு ளீவாய் கடம்ப வனவல்லியே. [7]

பாரிற் றருவென மாந்தரைப் பாடிப் பயனின்றியே
தாரித்த லின்றிநின் பாலே யடைக்கலஞ் சார்ந்தனனால்
ஏரிப் புனலன்ன பொன்னே யருட்புய லேயமிழ்த
வாரித் தடமணித் தீவக் கடம்ப வனவல்லியே. [8]

அன்பே யிலாதவர் செய்யுங் கொடிய வவமதிப்பால்
துன்பே யடையு மனத்தேனை யாளத் தொடங்குவையோ
இன்பே செறிமது ராபுரி யன்ப ரிதயமுற்றோய்
வன்பே சமைமணித் தீவக் கடம்ப வனவல்லியே. [9]

காணிக்கை வைத்தம ரேசர் வணங்குநின் கான்மலரைப்
பேணித் தொழுது நினைக்க வருள்செய் பெரியம்மையே
ஆணிப்பொன் வில்லி தனக்கமிழ் தேயகி லாண்டம் பெற்ற
மாணிக்க மேமணித் தீவக் கடம்ப வனவல்லியே. [10]

நற்றவர் கற்றவர் நாவலர் காவலர் ஞானமிகப்
பெற்றவர் தம்முண் மகிடனைப் போற்றவப் பேறுதனை
உற்றவ ராரவன் சென்னிநின் றாள்பெற் றுரைக்குமல்லால்
மற்றவ ரார்சொல வல்லார் கடம்ப வனவல்லியே. [11]