`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு - செயலர் தேவிதார் அறிவிப்பு

இந்திய அரசாங்கம் யூனிக்கோட் எழுத்துருவை தமிழ் போன்ற எல்லா இந்திய மொழிகளுக்கும் பயன்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தச் சில காலம் செல்லலாம். செம்மொழி மாநாடு இதைச் சாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

சொற்பகுப்பாய்வு பற்றிப் பத்ரி சேஷாத்ரியின் பதிவில் பார்த்தேன்.
http://thoughtsintamil.blogspot.com/2010/04/blog-post_17.html
முனைவர் மு. இளங்கோ அரசு நிறுவனங்களில் இணையம் பற்றி உண்மைநிலையை பின்னூட்டம் செய்திருந்தார்:
பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் கணினி மொழியியல் முயற்சி வறண்ட பாலைநிலைத்தில் ஒரு சுனை நீருக்குச் சமம்.பெரும்பாலான ஆசிரியர்கள் கணினியில் ஆர்வம் காட்டவில்லை. அரசு நிறுவனம் ஒன்றுக்குப் பேசுவதற்குச் சென்றேன்.

வீடியோ கான்பரசிங் வசதி உண்டு என்று அழைத்துச் சென்றனர்.மிகப்பெரிய கற்பனையில் சென்ற எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.இருந்த பல கணினிகள் யாவும் பழுது.பிளக் பாயிண்டு கூட சரிவர இல்லை. நூலாம்படை படிந்து கிடந்தது.இந்த நிலையில்தான் தமிழ் இணையத்தை நாம் அறிமுகம்
செய்யவேண்டியுள்ளது.


யாப்பாய்வு, சொல்லாய்வு போன்றவற்றில் தமிழர் மிகுதியாக ஈடுபடக் கல்லூரிகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் உலகத்தரமான இந்திய அரசின் மின்னாளுகை நடைமுறையானால் வாய்ப்புண்டு.

செ. ச. செந்தில்நாதன் முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணனைப் பேட்டி கண்டு 2007-ல்
காலச்சுவட்டில் எழுதியிருந்தார். அப்போது முனைவர் மு. ஆ. கூறியிருந்தார்:
http://valai.blogspirit.com/archive/2007/02/28/science.html
”இப்படித்தான் கணித்தமிழ்மீதும் ஈடுபாடு வந்ததா?

அந்த ஈடுபாட்டில்தான் கணிப்பொறியியல் துறையில் ஆரம்பத்திலிருந்து (நான் நியூயார்க்கில் இருக்கும்போது), தமிழை எப்படிக் கணிப்பொறியில் பயன்படுத்த முடியும் என்று ஆராய்ந்தேன். அப் போது நானே கணிப்பொறி வாங்கிவைத்து, சின்னச் சின்ன எழுத்துகளை உருவாக்க முயற்சித்தேன். பெரிய "ப" எழுத்து போட்டு. 'ஆ! தமிழ் உருவாகிடுச்சு' என்று மகிழ்ச்சி அடையக்கூடிய நிலைமை. மொழி நம்முடைய மொழி. கலைஞர், முரசொலி மாறன் போன்றோர்களிடம் அடிக்கடி சொல்வேன்:. 15ஆம் நூற்றாண்டில் அச்சுப் பொறி வந்தது. எந்தெந்த மொழிகள் அந்த அச்சுப்பொறியில் பயன்படுத்தப்படவில்லையோ அதெல்லாம் செத்து மடிந்துபோய்விட்டன. அச்சில் வராத மொழி அழிந்துபோனது. அது மாதிரி இன்றைக்குக் கணிப்பொறி. ஓரளவுக்கு எளிமையான முறையில் பலரும் பயன்படுத்தக்கூடிய வகையில் கணிப்பொறியில் தமிழ் வந்தால்தான் தமிழ் மொழியினுடைய மதிப்பு, தமிழனின் செயல்பாடு இதெல்லாம் உயரும். இல்லையெனில் ஆங்கிலம் படித்தவன்தான் கணிப்பொறியைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை வரும். இதனால் 100க்கு 95 சதவீத மக்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் எட்டாமல் போய்விடும். அல்லது கணிப்பொறியைப் படிப்பதற்குத் தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலமே படிக்கலாம் என்ற நிலைமை உருவாகும். அது தமிழுக்குக் கேடு.

நான் எதிர்பார்த்த அளவுக்கு கணித்தமிழ்த் துறையில் நாம் இன்னும் முன்னேறவில்லை என்பது வேறு விஷயம். எந்த அளவு வந்திருக்க வேண்டும், ஏன் வரவில்லை, அதனால் என்ன பிரச்சினை . . . இதையெல்லாம் பார்க்க வேண்டும். இருந்தாலும் அதை எப்படி அரவணைத்து, இருக்கிற சர்ச்சைகளைக் குறைத்து, ஈடுபாட்டைப் பெருக்குவது என்பதை என் முழு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருந்தேன்.

இன்றைக்கு இருக்கிற நிலைமையில் சர்ச்சைகளையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு நாம் எல்லோரும் ஒருங்கிணைத்து முன்னேற்றிச் செல்ல முடியும். நேரத்தை வீணாகக் கழிக்கக் கூடாது. இல்லையென்றால் தொழில்நுட்பம் மக்களுக்கு எட்டாமல் போயிடும். அது வளர்ந்த நிலையில் எட்டுவது மிகவும் கடினம். எல்லோரும் தமிழ் படிக்காமல் கணிப்பொறிக்காக ஆங்கிலம் படிக்கப் போனால், மீண்டும் அந்தத் தலைமுறை மக்களைத் தமிழ் படிக்க அழைப்பது கடினம் என்று சொன்னேன்.”


தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளில் அரசு அலுவலகங்களில் யூனிகோடு எழுத்துரு வருவதாக அரசின் ஐ.டி. தொழிநுட்ப செயலாளர், திரு. தேவிதார் அறிவித்துள்ளமை தெரிகிறோம். தினத்தந்தி செய்தி:

http://www.dailythanthi.com/article.asp?NewsID=557283&disdate=4/1/2010
[விக்கி] ”போட்டி எப்படி?

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள், தமிழகத்தில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், விக்கிபீடியாவில் இடம்பெறத்தக்க கட்டுரைகளை, 250 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல், இன்டர்நெட் மூலமாக தமிழில் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக ஆன்லைனில் எங்கள் இணையதளத்திலேயே (http://ta.wikipedia.org) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் கட்டுரைகள், சொந்தமானவையாக இருக்கவேண்டும். தனிப்பட்ட நபர்கள், அரசியல், மத விமர்சனம் போன்ற ஆட்சேபகரமானவற்றை அனுப்பக்கூடாது. அவரவர் படிக்கும் துறை பற்றி எழுதலாம். தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (யுனிகோட்) அமையவேண்டும். வெற்றி பெறுவோருக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு

``இணைய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் 8,300 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு விரைவில் பரிசுகள் அளிக்கப்படும்'' என்று அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

``விக்கிபீடியா என்பது தனி அமைப்பு. தமிழக அரசுதான் இதில் முதல்முறையாக அக்கறையெடுத்து மாணவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. தமிழக அரசு அலுவலகங்களில் `யூனிகோட்' எழுத்துருவை `பான்ட்' கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இதனால் இணையதளத்தில் தமிழில் அனுப்பப்படும் தகவல்களை தமிழ் எழுத்துரு இல்லாமலேயே ஒருவர் அப்படியே படித்துவிட முடியும். அதை படிப்பதற்காக ஒரு எழுத்துருவை `டவுன்லோடு' செய்ய தேவையில்லை. யூனிகோட் மிக எளிமையானது). இதுபற்றி முடிவெடுக்க 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ் மாநாட்டுக்கு முன்னதாக இப்பணி முடிக்கப்படும்'' என்று டேவிதார் தெரிவித்தார்.

அப்போது கவிஞர் கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.”

20 ஆண்டுகளாக கணித்தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டு, இணைய மாநாடுகளை தலைமையேற்றுச் சிறப்பாக நடத்தும் முனைவர் ஆனந்தகிருஷ்ணன் குழு பரிந்துரை செய்து தேவிதார் அறிவிக்கும் யூனிகோட் எழுத்துரு தமிழ்நாட்டில் வெறும் இணையத்திற்கு மாத்திரம் இல்லாமல், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், மின்னாளுகையிலும் இடம்பெறச் செய்ய இயலும். முனைவர் மு.ஆ. குழு அறிக்கை தமிழ்நெட்99 போன்ற ஒரு ஃபோனெடிக்-ஒலியனியல் விசைப்பலகை மின்னாளுகையில், அரசாங்கத் துறைகளின் கோப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசாணைக்கு அடிக்கோள் நாட்டவேண்டும்.

அவ்வறிக்கை ஒரு வழிகாட்டும் என்று நினைக்கிறேன்.

நா. கணேசன்


செ.ச. செந்தில்நாதன், இணையம், 2007:
http://ezilnila.com/archives/597

*செம்மொழி மாநாடு இன்னும் 76 நாள்கள்:- கம்பியில்லா இணைய வசதி வளாகமாகிறது 'கொடிசியா'*

தினமணி, 8 ஏப்ரல் 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி உடைய வளாகமாக மாற்றப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் ​நடத்தப்படுகிறது. கான்பூர் ஐ.ஐ.டி தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தமிழ் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தற்போது குளிரூட்டப்பட்ட வசதி உள்ள 'இ' பிளாக் அரங்கம் இணைய மாநாட்டுக்கு ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இணைய மாநாட்டையொட்டி பள்ளி,​​ கல்லூரி மாணவர்களுக்கு இணைய ​போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இணைய மாநாடு நடைபெறும் அரங்குக்கு இணையதள இணைப்புக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூலமாக கம்பி இழை கேபிள்கள் அமைக்கப்படுகின்றன.

இணைய மாநாடு நடைபெறும் அரங்கம்,​​ பத்திரிகையாளர்களுக்கான அரங்கம்,​​ பொது தகவல் மையம் ஆகியவற்றில் துரித இணைய இணைப்பு வசதியுடன் கூடிய கணினிகள் நிறுவப்படுகின்றன.

மேலும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் முழுவதும் கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநரும்,​​ இணைய மாநாட்டின் உறுப்பினருமான சந்தோஷ் பாபு,​​ கொடிசியா தொழிற்காட்சி ​வளாகத்தை வியாழக்கிழமை (08/04/10) பார்வையிட்டார்.

இணைய மாநாட்டுக்குத் தேவையான வசதிகளைச் செய்வது தொடர்பாக பி.எஸ்.என்.எல், தேசிய தகவல் மைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இணையதள இணைப்பு,​​ அலைபேசி சேவை ஆகியவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்


3 comments:

Kannan said...

மிக்க நன்று . நல்ல பதிவு.

S.Gopalakrishnan said...

I have innovated "Thanini", the simplified and rationalized Tamil script suitable for computer use. Conventional Tamil letters have 108 shapes to produce 247 letters. Just 32 shapes of Thanini will create these 247 letters. Inclusive of the Tamil letters borrowed from Grantha, Tamil has 126 shapes, against which Thanini has only 45 shapes. So Thanini can be easily covered in the keyboard of computer which has 2x26=52 buttons. I have submitted this to Tamil Virtual University. You can see and download the full article in http://thanini.blogspot.com.

S.Gopalakrishnan said...

I have innovated "Thanini", the simplified and rationalized Tamil script for computer use. Tamil has 108 shapes to produce 247 letters. 32 shapes of Thaninic can create all these 247 letters. Inclusive of the letters borrowed from Grantha, Tamil script has 126 shapes; but 45 shapes in Thanini will do. I have submitted my Paper to Tamil Virtual University. You can download the full paper from http://thanini.blogspot.com.