உலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு (கோவை, ஜூன் 2010)

உலகத் தமிழ் மாநாடு - உலகத் தமிழராய்ச்சி நிறுவன ஒப்புதலைப் பெற அரசு முடிவு
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 22, 2009, 11:29

சென்னை: அடுத்தாண்டு [ஜூன்] மாதம் கோவையில் நடைபெறவுள்ள 9வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக விரைவில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் நொபுரு கரசிமாவை தொடர்பு கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் செயலதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து உரிய ஒப்புதலைப் பெற நிறுவனத்தின் துணைத் தலைவரான வி.சி.குழந்தைசாமி ஏற்பாடு செய்வார்.

இதுதொடர்பாக தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு முறைப்படி முதல்வர் கருணாநிதியும் கடிதம் எழுதுள்ளார்.

மேலும், உலகத் தமிழ் மாநாடு தொடர்பான தகவல்கள் அடங்கிய இணையதளமும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்த முடிவுகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தி்ல் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் இணைய பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் குழந்தைசாமி, முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன், உலகத் தமிழராய்ச்சி நிறுவன பொருளாளர் முத்துக்குமாரசாமி, தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், கனிமொழி கருணாநிதி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0922-govt-to-seek-approval-from-iatr-for-world.html
------------------
உலகத் தமிழ் மாநாடு ஜுன் இறுதிக்கு ஒத்திவைப்பு
தினமணி 29 செப். 2009

சென்னை, செப்.29: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவதாக இருந்த ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு ஜூன் மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு தொடர்பான ஆய்வரங்கக் கலந்தாய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழறிஞர்களும், ஆய்வாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். எனினும் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும் கூடுதல் அவகாசம் கிடைத்தால் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பெரும்பாலானோர் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே போதுமான கால அவகாசம் எடுத்துக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கி அளிக்கவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ளவும் வசதியாக 2010 ஜனவரி இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மாநாடு 2010 ஜுன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நடைபெறத் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விவரம்:

நிதி அமைச்சர் அன்பழகன்
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்
தலைமைச்செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி
முனைவர் வா.செ.குழந்தைசாமி
முனைவர் மா.ராசேந்திரன்

ஐம்பெருங்குழு உறுப்பினர்கள்

முனைவர் ஒளவை நடராசன்
மணவை முஸ்தபா
கவியரசு வைரமுத்து
பேராசிரியர் ராசராசேசுவரி
கவிஞர் கனிமொழி எம்பி

எண்பேராய உறுப்பினர்கள்

முனைவர் மா.நன்னன்
கவிக்கோ அப்துல்ரகுமான்
முனைவர் சிலம்பொலி செல்லப்பன்
கவிவேந்தர் வேழவேந்தன்
பேராசிரியர் சாலமன் பாப்பையா
து.ரவிக்குமார் எம்எல்ஏ

சிறப்பு அழைப்பாளர்கள்

முனைவர் பொன்.கோதண்டராமன்
முனைவர் அறவாணன்
ஐராவதம் மகாதேவன்
இரா.முத்துக்குமாரசாமி}பொருளாளர், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்
முனைவர் சுப்பராயலு} ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்


-----------------

http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=8c07b7c0-bacd-4e15-b398-aca05e7bae44&CATEGORYNAME=TCHN

9ஆம் உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகள்
சென்னை, செப்.18 (டிஎன்எஸ்)

சென்னை தலைமைச் செயலகத்தில் செப்.17, 18 தேதிகளில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரையில் உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்துப் பேசியதாவது:

"இந்த மாநாட்டில் பெரும் சிறப்பாக, நாம் உலகத் தமிழ் மாநாட்டைத் தமிழகத்தில் - கோவை மாநகரில் - ஜனவரி-பிப்ரவரித் திங்களில் நடத்துவது என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றோம். எது மறந்தாலும், உலகத் தமிழ் மாநாடு நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தை உருவாக்கிய கூட்டம் இந்த மாவட்ட ஆட்சியர்களுடைய கூட்டம் என்ற அந்த வரலாறு நிலைத்து நிற்கும். (கைதட்டல்) எனவே, இந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும், அரசு அதிகாரிகளும் 'ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டுத் தீர்மானம் நான் கலந்து கொண்ட கூட்டத்திலேதான் நிறைவேற்றப்பட்டது' - என்று ஆயுள் பூராவும் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறுவதற்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளை நாம் விரைவில் அறிவிக்க இருக்கின்ற பல்வேறு குழுக்கள், குழுக்களின் உறுப்பினர்கள், அந்தக் குழுக்களுக்குத் தலைமை தாங்குகின்றவர்கள், யார் யாரோடு தொடர்பு கொள்ள வேண்டுமோ, அவர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டு வகுத்து வழங்க இருக்கின்றார்கள், அறிவிக்க இருக்கின்றார்கள்.

நான் ஒன்றை உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். உலகத் தமிழ் மாநாடு என்பது ஏதோ பெரிய ஊர்வலங்கள் நடத்தி, பொதுக்கூட்டங்கள் நடத்தி, கலை விழாக்கள் நடத்தி, கலைந்து போகின்ற ஒன்றாக இல்லாமல் - அறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் அவர்கள் நடத்திய உலகத் தமிழ் மாநாடு, சென்னை மாநகரத்தில் பல்வேறு மண்டபங்களில், பல்வேறு அரங்கங்களில், பல்வேறு புலவர் பெருமக்களை, அறிஞர் பெருமக்களை, கவிஞர்களை, பண்டிதர்களை, இவர்களையெல்லாம் அழைத்து, அவர்களை விவாதிக்கச் செய்து, அந்த விவாதத்திலே விளைந்த முத்துக்களைப் பொறுக்கியெடுத்து, அவைகளையெல்லாம் கோர்த்து, மணியாரமாக ஆக்கி, உலகத்திற்கு - உலகத்திலே தமிழர்கள் எங்கெங்கே வாழ்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வழங்கிய மாநாடாக அந்த மாநாடு விளங்கியது என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அதிலே எள்ளளவும் குறையாமல், நாம் நடத்துகின்ற இந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் ஆராய்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், ஏற்கனவே நாம் இந்த உலகத்திலே தனித்து நின்று ஒரு மொழியை வளர்த்தோம் என்ற நாம் கட்டிக் காத்த பெருமைக்கும் சிறிதளவும் மாறுபாடு ஏற்படாமல் நடந்தே தீரவேண்டும் என்ற உறுதியோடு இந்த மாநாட்டை நாம் நடத்த வேண்டும்.

அது மாத்திரமல்ல - இந்த மாநாட்டிலே நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள், எடுக்கின்ற முடிவுகள் எதிர்காலத்திலே - நான் அதிகம் ஆசைப்படுவதாக யாரும் கருதக்கூடாது. நீங்கள் எல்லாம் துணையாக இருக்கிற நேரத்தில் ஆசைப்படுவதில் தவறுமில்லை. அகில இந்திய அளவிலே மத்திய ஆட்சி மொழியாக நம்முடைய தமிழ் இடம்பெற வேண்டும் என்கின்ற அளவிற்கு அரசியல் ரீதியாக அல்ல - நாம் ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வருகின்ற நம்முடைய உணர்வு ரீதியாக அந்த முடிவை நாம் எய்துவதற்கு அந்த மாநாடு 'ஒல்லும் வகையெல்லாம்' நமக்குப் பயன்படுகின்ற அளவிலே நம்முடைய முயற்சிகள் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு, குறிப்பாக, தலைமைச் செயலகத்திலிருந்து மாநாட்டுப் பணிகளைக் கவனிக்க ஒரு தனி அதிகாரி நியமனம் செய்யப்படலாமா? கோவை மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிலையிலே ஒருவர் நியமனம் செய்யப்படலாமா? கோவை நகரில் தங்குமிடங்களுக்கான ஏற்பாடுகள் இவைகளையெல்லாம் எப்படிச் செய்வது, ஆகிய இத்தனை யோசனைகளையும் வடிவமைக்க இந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நிறைவுற்றவுடன், அடுத்தடுத்து அதற்கான பணிகளை நம்முடைய தலைமைச் செயலாளர் மூலமாகவும், அமைச்சர்கள் மூலமாகவும் எடுத்து நடத்திட நாங்கள் முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

மலையாளத்தில் றன்னகரம் (Alveolar ṉ (U+0D29) in Malayalam)

மலையாளம் யூனிக்கோடில் தமிழைப் போலவே றன்னகரம் (ன) இயங்க ஆரம்பிக்கும். தமிழின் 3 ந‍கரங்கள் (டண்ணகரம், தந்நகரம், றன்னகரம்) இருப்பதை அறிவீர்கள் தானே.

P. Visalakshy, The Grantha script, 2003.
pg. 62
"When Malayalam became a separate language, the Vattezuttu practised in the southern Kerala might have been named as Malayanma in order to assert the separate identity of Malayalam from Tamil. The records and correspondences of Travancore Govt. were in Malayanma upto 1819 and it was during the reign of Svati Tirunal Maharaja, the Malayanma script was completely replaced by Malayalam for official purposes. Though a few inscriptions existed in Malayanma like Munciramatham plate, this script was mainly used to write on palm-leaves."

The ancient alveolar letter ṉ (U+0D29) is being made available for use in Malayalam script in Unicode/ISO 10646 web pages.

LARavivarma-alveolar-n

S. J. Mangalam, Palaeography of Malayalam script, Eastern Books, Delhi, 1988
pg. 98: " Additional symbols in Malayalam

There are two conjunct symbols in Malayalam representing different phonemes which are not found in the Grantha or other systems of writing. The first of these is ṉṯa . To write this, the unvowelled ṉa, the first of the four symbols mentioned above, is subjoined by the letter RRA. Here the actual pronunciation should be ṉRRA, but in Malayalam it is pronounced ṉṯa ." etc.,

A Malayalam script user should be able to use alveolar ṉ & alveolar ṯ individually or in conjuncts in Unicode. will be very useful to transliterate Tamil texts etc.,

N. Ganesan


Isaac Taylor (1829-1901), The alphabet: an account of the origin and development
of letters. Vol. 2, page 356,
"From this lapidary alphabet two scripts were developed, a cursive and literary script. The first is represented by the Tamil, while the other has developed into the Grantha or 'book' alphabet used by the Tamil Brahmans for the Sanskrit transcriptions of their sacred books. From it are derived two vernacular alphabets which are used on the Malabar coast; one is the Tulu Grantha (line 23), and the other the Malayalam, from which several characters were borrowed by the Christians of St. Thomas in order to supplement the Syriac (Karshuni) alphabet which they obtained from the Nestorian missionaries (see vol. i., p. 293.)

The great Tamil alphabet occupies the extreme south of India."

Student's Brittanica India, 5 volumes, Editors: Dale Hoiberg and Indu Ramchandani,
pg. 349 has the entry on Malayalam language.

Of particular interest is the fact that Malayalam is also written using Tamil Grantha
script that includes all the 5 Dravidian letters - e, o, llla, nnna and rra.

pg. 349, Malayalam language:
"The earliest record of the language is an inscription dated to AD c. 830. An early extensive influx of Sanskrit words influenced the Malayalam script (derived from the Grantha script, itself derived from Brahmi): it has letters to represent all the Sanskrit sounds, besides the Dravidian sounds. The language also uses a script called Kolezhuttu (Rod script), which is derived from the Tamil writing system. The Tamil Grantha script is used as well."

My Grantha proposal, L2/09-141r, encodes the Tamil Grantha script, that includes all the Dravidian letters. The main difference is the Vowel markers the Tamil Grantha consonants take on, and also the Chillus which Tamil script does not have.

---------

Dravidian letters in Grantha script - history

Some social factors that Dravidian letters came to be written inside Grantha script are described by prof. S. N. Sadasivan that may be of interest.

Dr. S. N. Sadasivan, A social history of India, A. P. H. Publishing Co., N. Delhi, 2002, pg. 604
" Malayalam rose from the status of a dialect to an independent language in the 9th cnetury. The first script of Malayalam, as a dialect, was Vattezuttu (circular or spherical writing) of Njanamonam which was the contribution of Buddhists. Between the 3rd century AD and the 9th century, Vattezuttu was the only alphabet and even in the early part of the 19th century, it was used for official records. By the 15th century, another script came into vogue, the Kolezuttu (long script) which however could not replace the Vattezuttu nor could it become popular. A third group of letters the Grantha-lipi (book script) was said to have been introduced at the instance of the Brahmins because they wanted to dissociate from the Buddhist Vattezuttu and the later Kolezuttu obviously of non-Brahmin origin.

However by the 16th century the non-Brahmins, the Sudras and the Ezhavas in particular, avidly learned the Grantha lipi and used it for extensive writing. Modern Malayalam script is the reformed Grantha letters popularized by Tunchat Ezhuttaccan."

Ezhuttaccan, was of low caste origins then (Now, there's no caste in India). Francis Whyte Ellis, a young collector of Madras, and who died (was killed?) due to antimony poisoning in the food, was the first man who wrote the theory on Dravidian languages family to be distinct and not a derivative of Sanskrit (Indo-Aryan) languages. After the demise of F W Ellis (1777 - 1819), posthumously was published his article in "Indian Antiquary " in 1878. In that path breaking article F.W. Ellis articulated the evolution of Malayalam ("Malayanma") and other south indian languages. F. W. Ellis said this on Tunchat Ezhuttaccan, father of Malayalam (then called Malayanma): "he enriched the Malayalam with the translations, all of which, it is said, he composed under the immediate influence of intoxication...."
http://en.wikipedia.org/wiki/Thunchaththu_Ramanujan_Ezhuthachan

I predict that same phenomenon described by S. N. Sadasivan will happen to Grantha script once it is encoded in Unicode. There will be transliterators from Malayalam web pages (Grantha script was used to write Malayalam too.) and Tamil blogs. Vedic learning and discussions may be in 1000s of blogs and e-lists.

N. Ganesan

தமிழா! உன் கதி இதுவோ? ~ C. N. அண்ணாதுரை, காஞ்சி (இதழ்) 1964

1968ல் சென்னையில் அண்ணாவும், 1981ல் மதுரையில் எம்ஜிஆரும், 1995ல் தண்செயில் (தஞ்சையில்) ஜெயலலிதாவும் நடத்திய உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோவையில் உலகத் தமிழ் மாநாடாய் வரும் 2010 பொங்கலை அடுத்ததாய் நடக்க உள்ளது. 1995 தஞ்சை விழாவில் பேரா. கா. சிவத்தம்பி, ஸ்வீடனின் பீற்றர் ஷல்க், ... உள்ளே விடாது தடுக்கப்பட்டனர். அதற்கு பேரா. ஷல்க்கும் (உப்சாலா), பேரா. ஆ. வேலுப்பிள்ளையும் அனுப்பிய கடிதங்களை இன்று புரட்டிப் பார்க்கிறேன். ஈழத்தில் அதற்குப் பின்னர் எத்தனை அழிவுப் பேரலைகள்!

சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்கண் (1968) எடுத்த ஒளிப்படம் கொடுத்துள்ளேன்.

அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக, என் வேண்டுகோளை ஏற்று, அண்ணா தனது காஞ்சி இதழில் 1964-ல் இலங்கையின் தமிழர் நிலைகுறித்து எழுதியதை அனுப்பியருளிய நசன் அண்ணனுக்கும், தட்டெழுதி அளித்த இளங்குமரனார் அவர்களுக்கு என் மனம்கனிந்த நன்றி.

நா. கணேசன்


===================================================================
மலர் 1 8-11-64 இதழ் 16
===================================================================

நீதி நிச்சயம் நிலைத்திடும்; நேர்மை வென்றிடும்; மனிதாபிமானம் மதிக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

வீட்டின் விளக்கை அணைக்கமாட்டார்கள்; விழியில் நீர் பெருகிடச் செய்யமாட்டார்கள்; வேதனையைத் துடைத்திடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

இனவெறியை அடக்கிடுவார்கள், நிம்மதியான வாழ்வினைப் பெற்றிட வழி செய்திடுவார்கள் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.

எமக்காக வாதாட, பரிந்து பேச, ஆதரவு காட்ட, பெரியதோர் நாட்டுத் துரைத்தனம் இருக்கிறது; எமக்குக் கொடுமைகள் இழைக்கப்படுவது கேட்டு மனம் குமுறவும், இது அறமல்ல! என்று கூறி அக்ரமம் செய்திடுவோரைத் தடுத்து நிறுத்திடத்தக்க தகுதியும் திறமையும் பெற்றவர்கள், பேரரசு நடாத்திக் கொண்டுள்ளனர்; நீதி காத்திட அப்பேரரசு முனைந்து நிற்கும் என்று நம்பினர்; அந்த நம்பிக்கையைத் துணைகொண்டு அவர்கள் சொல்லொணாத இன்னல்களைத் தாங்கிக் கொண்டனர்; காரிருள் மறையும் கதிரவன் உதிப்பான், ஒளி காண்போம் என்று உள்ளூற நம்பிக்கிடந்தனர்.

அவர்கள் தூற்றப்பட்டார்கள் துடுக்குத்தனமாக; பொறுத்துக் கொண்டனர்.

அவர்கள் வேட்டையாடப்பட்டனர், வெறியர்களால்; விம்மினர்; எனினும் நற்காலம் பிறக்கும், இடையே ஏற்படும் இடுக்கணைப் பொருட்படுத்தக் கூடாது; எதையும் தாங்கும் இதயம் கொண்டோராக இருந்திடல் வேண்டும் என்று எண்ணி, உறுதியைத் தருவித்துக் கொண்டனர்.

ஓடு! நாட்டைவிட்டு! பிழைக்க வந்தவனே! பிடி சோற்றுக்கு அலைபவனே! கூலி வேலை செய்பவனே! உனக்கு என்றோர் மொழி! ஒரு மரபு! ஒரு வரலாறு! தூ! தூ!! உன்னை நான் எது செய்திடினும், ஏன் என்று கேட்டிட யார் உளர்! நாதியற்றவனே! நாடற்றவனே! நட! நட! - என்று மிரட்டினர் மமதை கொண்டோர்; மனம் வெந்துபோகும் விதமாக இழிமொழி உமிழ்ந்தனர்; அவர்கள் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டனர்; வெறி அடங்கிடும், நேர்மை பிறந்திடும் என்ற நம்பிக்கையின் துணையை நாடினர்.

அவர்களின் கடைகளைச் சூறையாடினர், இழுத்துப் போட்டடித்தனர்; ஐயா! நான் ஏழை! என் சொத்தே இந்தக் கடைதான்! காலமெல்லாம் பாடுபட்டு, வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சம் பிடித்து இந்தக் கடைவைத்தேன்; இதிலே பாதி கடன்! பாழாக்காதீர்! நாசம் செய்யாதீர் என்று முறையிட்டனர்; வெறியர் மனம் இளகவில்லை; காலில் வீழ்கிறானா அடிமை! அதைத்தான் செய்வான்!! கைகூப்பி நின்கிறானா! கருணை காட்டாதீர்! துரத்து! கொளுத்து! தீ மூட்டு! சூறையிடு! ஓடட்டும், ஒழியட்டும்! - என்று கொக்கரித்தனர் கொடியோர்கள்; எமக்கு வந்துற்ற இந்தப் பாசத்தைத்தடுத்திடும் ஆற்றல் பெற்றோர் உள்ளனரே; இருந்தும் வாளாயிருக்கின்றனரே! ஏன்! ஏன்!!-என்று கேட்டுக் கேட்டு விம்மினர்;

குத்திக் கொன்றனர்; வெட்டிவீழ்த்தினர்; கொளுத்தினர்; கோல்கொண்டு தாக்கினர்; என்ன குற்றம் இழைத்தோம் இந்த நிலை பெற என்று அவர்கள் கேட்டனர்; குற்றமா! கூறுகிறோம் நீ செய்த குற்றத்தை நீ இங்கு இருக்கிறாயே அதுதான் குற்றம்! உழைக்கிறாயே, அதுவும் குற்றம்தான்! உனக்கென ஒரு மொழி உளது என்கிறாயே அது மன்னிக்க முடியாத குற்றம்!! என்று கூறிக் கேலிச் சிரிப்பொலி கிளப்பினர்; ஆதிக்க வெறிகொண்டலைவோர்.

கற்பழித்தனர்! ஆம்! எந்தக் கொடுமையை எவரும் தாங்கிக்கொள்ள முடியாதோ, அந்தக் கொடுமையையும் செய்தனர் வெறியர்கள்! எல்லாம் எதன் பொருட்டு? அவர்களை விரட்ட! ஏன்? அவர்கள், தமிழர்கள் என்பதால்!!

அவர்கள் தமிழர்கள், ஆனால் தமிழகத்தைக் காணாதவர்கள்,

அவர்கள் பேசுவது தமிழ், ஆனால் அவர்கள் பிறந்தது சிங்களத் தீவினில்! அவர்கள் மட்டுமா! அவர்களுடைய முப்பாட்டனார் பிறந்ததே இலங்கைத் தீவினில். பலப் பல தலைமுறைகளாக இலங்கைத் தீவினிலே இருந்து வருபவர்களைச் சிங்கள இனவெறி தலைக்கேறிய நிலையினர் இனி இங்கு உங்கட்கு இடமில்லை! ஓடிடுக உமது நாட்டுக்கு!! என்று உறுமலாயினர்.

எமக்கு இந்நாடன்றி வேறு எந்தநாடும் தெரியாதே! இங்குதான் பிறந்தோம்! இங்குதான் எமது பாட்டனாரின் கல்லறையும் உளது. இங்குதான் நாங்கள் வியர்வையைப் பொழிந்தோம். இங்குதான் எமது உழைப்பினை அளித்தோம்! இந்தநாடு எமக்குச் சொந்த நாடு என்ற உணர்விலேயே வளர்ந்துவந்திருக்கிறோம். இந்த நாட்டில் மற்றவர்க்கு உள்ளது போலவே எமக்கும் உரிமை உண்டு என்று அறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அறிவிக்கிறதே, எம்மை ஏன் வெளியே போகச் சொல்கிறீர்! எங்கு செல்வோம்! காலில் வெள்ளெலும்பு முளைத்த நாள் முதலாய் இங்கல்லவா உழைத்துவந்திருக்கின்றோம். காட்டுமிருகங்களுடன் போராடி அவற்றின் கோரப்பற்களுக்கு இரையாகினரே எமது முன்னோர்! காடு திருத்திக் கழனியாக்கிடக் கடும் உழைப்பைத் தந்தோமே நாங்கள்! மரகதத்தீவு! என்று கவிதா நடையிலே புகழ்கின்றார்களே இந்த நாட்டை; இந்நிலை இந்நாடு பெற்றது எமது ஓயாத உழைப்பினாலன்றோ! இந்நாட்டுடன் நாங்கள் எங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டு விட்டோம்; எமக்கு வேறோர்நாடு எதற்கு? ஏன் எம்மைத் துரத்த எண்ணுகிறீர்! என்று அவர்கள் கேட்டனர். அவர்களின் தொகை பத்து இலட்சம்!!

இலங்கைத் தீவுக்கு உரியவர்கள் நாங்களே! நீங்கள் இங்கு இருக்க இனி அனுமதி இல்லை. காரணம் கூறிடத் தேவையுமில்லை. விருப்பமில்லை! வெளியேறு! நாங்கள் சிங்களவர்! இது சிங்களத்தீவு! எமது கொடி சிங்கக்கொடி!! என்று கடுமொழி புகன்றனர்; சிங்கள சர்க்கார், அந்த வெறியை அடக்கிட முன்வரவில்லை, மாறாகத் தன் புன்னகையாலும் கண்சிமிட்டலாலும், அந்த வெறியை மேலும் தூண்டிவிட்டபடி இருந்தது.

வேறு எங்கேனும், பத்து இலட்சம் மக்கள், அந்த நாட்டிலே உள்ள பெருவாரியான எண்ணிக்கை கொண்ட இனத்தவரால், அவர்தம் அரசினால், இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், இழிவாக நடத்தப்படுகிறார்கள், என்றால், அறம் அறிந்தோர் பதறி எழுவர்; இது இனக்கொலை, இதனை அனுமதிக்கமாட்டோம் என்று முழக்கமிடுவர்.

ஐக்கியநாடுகள் மன்றம் இதுகுறித்துக் கேட்டிடும் உரிமைபெற்றிருக்கிறது; எவ்விதெமனில், நாடுகளின் ‘சுதந்திரம்’ குறித்துமட்டுமல்ல, மக்களின் அடிப்படை உரிமைகள் எங்கேனும் எவராலேனும் அழிக்கப்பட்டால், ஏனென்று கேட்டிட, தடுத்து நிறுத்திட அந்த மாமன்றம் உரிமை பெற்றிருக்கிறது.

எனினும், மொழியால் தமிழராக உள்ள பத்து இலட்சம் மக்களையும், விரட்டியடிக்க இலங்கையில் கொடியதோர், முயற்சி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஐயோ! என்று இரக்கம் காட்டவோ, ஆகாது என்று அறிவுறுத்தவோ, அக்ரமம்! என்று கண்டிக்கவோ, தமிழக அரசு துணிவு கொண்டிடவில்லை; காரணம்? இங்கு அரசு என்று உள்ள அமைப்பு, இத்துறை எம்மிடம் இல்லை; டில்லி அரசிடமே உளது; என்று கூறிக் கைவிரித்துவிட்டது, டில்லி அரசோ, இலங்கைக்குள்ளே நடைபெறும் நடவடிக்கை குறித்து ஏதும் கேட்பது கூடாது; ஏனெனில் அது இலங்கையின் அரசுரிமைத் துறையிலே நுழைந்திடும் அடாத செயலாகிவிடும் என்று விளக்கமளித்துவிட்டது. இலங்கையிலே விம்முகிறார்கள்; இங்கே விளக்கமளிக்கிறார்கள்.

இந்நிலை கண்ட பிறகு, சிங்கள அரசுக்கு ஏற்கனவே பிறந்திருந்த துணிவு பன்மடங்கு வளர்ந்தது; இந்தப் பத்து இலட்சம் ‘பராரிகளை’ என்ன நாம் செய்தாலும், எவரும் குறுக்கிடமாட்டார்கள் என்ற துணிவு, கொடுமை வளர்ந்தது; வளர்ந்து வளர்ந்து, இவர்கள் அனைவரும் இந்தியர்கள், எனவே இவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டியது இந்திய சர்க்காரின் கடமை. இவர்கட்கு இலங்கையில் இடமில்லை; இவர்கட்குச் சொந்த இடம் இந்தியா! எனேவ இவர்கள் இந்தியா சென்றிடுவதே முறை!! என்று கூறலாயினர்.

இவர்கள் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள் இலங்கையின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள்; இவர்கள் இலங்கைக்காரர்கள், இந்தியர்கள் அல்ல! எனவே இவர்களை இந்தியாவிற்கு அழைத்துக்கொள்ளச் சொல்வது முறையுமல்ல, அறமுமாகாது; இது எமது பிரச்சினையே அல்ல!! என்று டில்லி தெரிவித்தது. தமிழக அரசோ, இலங்கைத் தமிழர்பற்றி டில்லி முடிவெடுக்கும் என்று தெரிவித்ததுடன் தனது கடமை முடிந்துவிட்டதாக எண்ணிக்கொண்டது. பத்து இலட்சம் மக்கள், கொந்தளிக்கும் கடலில் பாய்மரமற்ற நாவாய்படும் பாடுபட்டுக்கொண்டு வதைபட்டனர், அவர்களின் வேதனையைக் கண்டு சிங்கள ஆதிக்க வெறியர்கள் கைகொட்டிச் சிரித்தனர்.

எத்துணை கொடுமையாளர்களாயினும், பத்து இலட்சம் மக்களை, இழித்தும் பழித்தும் பேசலாம், இன்னல் பல மூட்டலாம் ஆனால், அவ்வளவு பேர்களையும் படுகொலை செய்துவிட முடியாதல்லவா! பல கொடுஞ்செயல்களைத் தாங்கிக்கொண்டுள்ள இந்தக் குவலயத்தாலேயேகூட, பத்து இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாதல்லவா! அதனால், வெறி மண்டையில் புகுந்து குடைந்திடும் நிலை பெற்றிருந்தபோதிலும், சிங்களவர்களால், பத்து இலட்சம் மக்கள் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, பத்து இலட்சம் தமிழ் மரபினர், தமது உரிமையை இழக்கக்கூடாது என்ற உறுதியுடன், போராடிக்கொண்டு வந்தனர். அவர்களின் உரிமைக் கிளர்ச்சியை ஒடுக்க இலங்கை அரசு அவிழ்த்துவிட்ட அடக்குமுறை பலருடைய உயிரைக் குடித்தது; தியாகம்புரிந்திடத் தயங்காது உரிமைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி நின்றனர் தமிழ் மரபினர்.

வரலாறு காட்டுகிறது, நெஞ்சு நெகிழத்தக்க பல நிகழ்ச்சிகளை உரிமைக்காகப் போரிடும் உள்ள உறுதி படைத்தவர்களுக்காக, பல்வேறு முனைகளிலிருந்து, உதவிகள் பல்வேறு வழிகளிலே அளிக்கப்பட்டு வந்ததுபற்றிப் படிக்கிறோம்.

இலங்கையில், உரிமைக் கிளர்ச்சியிலே தமிழர்கள் முனைந்து நின்றபோது ஒருதுளி ஆதரவு, ஆதரவான ஒரு சொல் அளிக்கவும் தமிழகம் துணிவு பெறவில்லை; டில்லியோ வேறு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது இந்தப் பிரச்சினையிலா காலத்தைச் செலவிட முடியும் என்று செப்பிவிட்டது.

இந்தப் போக்கு இலங்கை அரசு ஏற்கனவே கொண்டிருந்த துணிவை, இறுமாப்பு அளவுக்கு வளர்த்துவிட்டுவிட்டது. என்ன சொல்கிறீர்கள், இவர்கள் நாடற்றவர்கள் என்று அறிவிக்கிறோம் என்று தெரிவித்தது, எந்த நாட்டிலே பிறந்து வளரந்து உழைத்து வளர்த்து வருகிறார்களோ அந்த இலங்கை நாட்டிலே இவர்கள் நாடற்றவர்கள்!! இத்துடன் விடவில்லை இலங்கை, இவர்களை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தலாயிற்று.

ஏற்றுக் கொள்ளாவிட்டால், என்ன நடந்துவிடும்? பத்து இலட்சம் மக்களையும் படகுகளில் ஏற்றி, கடலிலே தவிக்கவிட்டுவிட முடியுமா?

அங்ஙனம் செய்திடின், பாரே கைகொட்டிச் சிரித்திருக்கும்!!

பத்து இலட்சம் பேர்களையும் கொன்று குவித்துவிடத் துணியுமா இலங்கை அரசு! அந்தப் பிணங்களைக் கொத்தவரும் பெரும் பறவைகளின் சிறகொலியைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது சிங்களவர்களால்.

பத்து இலட்சம் மக்களையும் இந்தியாவில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட முடியுமா? இந்திய துரைத்தனத்தின் வல்லைமயைத் தாங்கிக் கொள்ள இயலுமா சிங்கள சர்க்காரால்!

இவற்றினை எல்லாம்விட மேலானதாக, வலிவுமிக்கதாக வேறொன்றும் உளது, அவர்களின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு பத்து இலட்சம் மக்களை ஒரு அரசு விரட்டிடும் கொடுமை நடப்பதைக் கண்டால் உலகம் சீறி எழாதா! அந்தச் சீற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமா எந்தச் சர்க்காராலும்!

எனவே, மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, தங்கள் எதிர்காலம் என்ன என்ற ஏக்கம் தாக்கிடும் நிலை பத்து இலட்சம் தமிழ் மரபினருக்கு இருந்து வருவது என்றாலும், பத்து இலட்சம் பேர்களை அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக எப்படி வெளி ஏற்ற முடியும்? அவர்களை ஏற்றுக்கொள்ள இந்தியா இடம் கொடுத்தாலொழிய, அவர்களை எப்படி வெளியேற்ற முடியும் என்தே சிங்கள சர்க்காரை வாட்டியபடி இருந்துவந்த பிரச்சினை என்பது நுணுகி ஆராய்வோருக்குப் புலனாகும்.

என்ன செய்வது? என்ற கேள்விக் குறி, பத்து இலட்சம் தமிழர்களையும் மிரட்டிக் கொண்டிருந்தது, சிங்கள சர்க்காரையும் மிரட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் இதிலே உண்மையான சிக்கலும் தவிப்பும் சிங்கள சர்க்காருக்கே அதிகம். ஏனெனில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமானால், பார் தோன்றிய நாள் தொட்டு எவரும் நடத்திடாத படுகொலையை மேற்கொண்டாக வேண்டும், இந்தியா அந்தப் பத்து இலட்சம் பேர்களை இந்தியா வருவதற்கு இடம்தராதிருக்கும் போக்கு நீடிக்குமானால், நிலைத்திருக்குமானால்,

சிங்களச் சர்க்காருக்கு இருந்துவரும் இந்தச் சிக்கலைக் கண்டார் லால்பகதூர்; பாவம்! இதற்கோர் வழி கண்டாகவேண்டும் என்று எண்ணினார். அஞ்சற்க! இதோ நான் இருக்கிறேன் உமது பிரச்சினையைத் தீர்த்துவைக்க; பத்து இலட்சம் தமிழ் மரபினர் பற்றிய சிக்கல் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது; உங்கட்கு இது பெருந்தொல்லையாக இருக்கிறது, உணர்கிறேன். கவலையை விட்டொழிமின்! நான் ஏற்றுக் கொள்கின்றேன் ஐந்து இலட்சம் பேர்களை! மற்றோர் ஒன்றரை இலட்சம் பேர் பிரச்சினையை அடுத்த ஆண்டு கவனித்துக் கொள்ளலாம்; சிக்கலைத் தீர்த்துக் கொள்வோம் என்று கூறிவிட்டார்.

பத்து இலட்சம் தமிழ் மரபினரில் ஐந்து இலட்சத்து இருபத்தைந்தாயிரவரை, பதினைந்து ஆண்டுகளில், இங்கே திரும்பப் பெற்றுக் கொள்வது என்று ஒப்பந்தம் செய்து கொண்டுவிட்டார் லால்பகதூர்.

விழாவாம் இலங்கையில்! ஏன் இராது!! பாராட்டாம், திருமதி பண்டாரநாயகா அம்மையாருக்கு! ஏன் பாராட்டமாட்டார்கள்!! அம்மையாரின் தனித்திறமையால் கிடைத்த வெற்றி இது என்று ஏடுகள் எழுதுகின்றனவாம்! ஏன் எழுதமாட்டார்கள்!! சீனாவிடம் பிடிபட்டுள்ள இடம் யாவும் சீனாவுக்கே என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால், லால்பகதூரின் உருவச் சிலையை பீகிங்கில், மாசே-துங்கே திறந்துவைக்க மாட்டாரா!! இலங்கைத் தலைவர்களும், இதழ்களும் லால்பகதூருடைய நல்லெண்ணத்தையும், பெருந்தன்மையையும் பாராட்டுவதாகத் தெரிகிறது; வியப்பென்ன இதிலே! லால்பகதூர், தமிழர்கள் உரிமையின்மீது ஓங்கி அடித்திடுவது கண்டால், அந்த உரிமை உணர்ச்சியைத் தாக்கித் தாக்கி, பயன் காணாது கிடக்கும் சிங்களத் தலைவர்கட்குக் களிப்பு கொந்தளிக்கத்தானே செய்யும்? பாராட்டுகிறார்கள் லால்பகதூரின் ஒப்பந்தத்தை.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக, என்ன செய்வது என்று தெரியாமல், திண்டாடித் திகைத்துக் கிடந்த இலங்கை சர்க்காருக்கு, லால்பகதூர், வெற்றியைத் தேடிக் கொடுத்துவிட்டார்.

எப்படி ஒழிப்பது தமிழரின் உரிமை உணர்ச்சியை என்று எண்ணித் தடுமாறிக் கொண்டிருந்த இலங்கை சர்க்காருக்கு, லால்பகதூர், வழிகாட்டிவிட்டார்.

இலங்கையிலே பிறந்து வளர்ந்து, அங்கேயே வாழ்ந்துவர விரும்புபவர்களை, இந்தியர்கள் என்று கூறுவது தவறு; அவர்களை இந்தியர்கள் என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம்; அவர்களை என்ன செய்வது என்பது எமது பிரச்சினை அல்ல என்ற கோட்பாட்டில் நேருபண்டிதர் மிக உறுதியாக இருந்துவந்தார். இருந்து வந்ததனால் இலங்கை சர்க்கார் ஏதும் செய்ய இயலாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.

அதே கோட்பாடு தொடர்ந்து இருந்திருக்குமானால் இலங்கைக்கு, ஐக்கிய நாடுகள் மன்றம் சென்று, கேட்பது தவிர வேறு வழி கிடையாது.

மனித அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்துத் தீரவேண்டிய ஐக்கிய நாடுகள் மன்றம், ஒருபோதும், பத்து இலட்சம்பேர்களையும் இலங்கை தன் விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று தீர்ப்பளித்திருக்க முடியாது. அந்தப் பத்துஇலட்சம் மக்களையும் தொடர்ந்து இலங்கை சர்க்கார் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கவும் முடியாது. நேரு உறுதியாகக் கடைப்பிடித்து வந்த கோட்பாடு, இதுவரை அந்தப் பத்து இலட்சம் தமிழ்மரபினருக்குப் பாது காப்பளித்துவந்தது.

நேரு கண்ட அந்தக் கோட்பாட்டை, லால்பகதூர் அழித்தொழித்துவிட்டார். இலங்கை சர்க்கார் மகத்தான வெற்றியைப் பெற்றுவிட்டது.

சேனாநாயகாக்களும் கொத்தலாவலைகளும் முயன்றுபார்த்துத் தோற்றுப் போயினர். அந்தக் கோட்பாட்டை மாற்றிட, லால்பகதூர் வந்தார், நேருவகுத்த அந்தக் கோட்பாடு ஒழிக்கப்பட்டுவிட்டது; இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த சிக்கலைத் தீர்த்துவிட்டேன், பலர் தோற்ற முனையில் நான்வெற்றி பெற்றுவிட்டேன்; இதோ லால்பகதூரின் கையொப்பம்; ஆண்டுதோறும் நாற்பதாயிரம் தமிழர் வெளி ஏற்றப்படுவார்கள் என்று திருமதி அறிவிக்கிறார்; திருவிழாக் கோலம் இலங்கையில்!

முடியாது!முடியாது! என்கிறீர்களே! ஒப்பந்தமாகிவிட்டது தெரியுமா! மூட்டை முடிச்சுடன் தயாராகிக் கொள்ளுங்கள்! இந்தியா செல்ல! இலங்கையை விட்டுக் கிளம்புங்கள்!! என்று சிங்களவர் கொக்கரிக்காமலிருக்க முடியுமா!!

இலங்கையிலுள்ள தமிழ் மரபினர் என்ன நிலையில் உளர்? என்ன நிலை பெறுவர்?

நமக்காகப் பரிந்து பேசுவார் லால்பகதூர் என்றெண்ணிக்கிடந்தோமே! அவர் பண்டார நாயகாவின் கவலையைத் துடைத்திடும் காரியத்தை அல்லவா மேற்கொண்டுவிட்டார். நமது உரிமைக்காக வாதாடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்; நம்மைச் சிங்களத்தாரிடம் காட்டிக் கொடுப்பதுபோல அல்லவா இருக்கிறது அவர் செய்துகொண்ட ஒப்பதந்தம். இதற்கோ இவர்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தோம்! இதற்கோ, இந்திய சர்க்கார் இருக்கிறது எமக்காக வாதாட என்று மார்தட்டிக் கூறிவந்தோம். கனி கிடைக்குமென்றிருந்தோம், கடுவிஷமன்றோ தரப்படுகிறது. ஏற்றம் பெறுவோம் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தோம். நம்மைச் சிங்களவர் எள்ளி நகையாடும் நிலையில் வைத்துவிட்டாரே, லால்பகதூர்! என்றெல்லாம் எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணான நிலைபெற்றுள்ளனர். தமிழர் தலைவர் திரு.செல்வநாயகம் விடுத்துள்ள அறிக்கை தமிழ் மரபினர் எத்துணை வேதனைப்படுகின்றனர் என்பதனை எடுத்துக் காட்டுகிறது.

கசப்பான முடிவு என்று கூறிக் கசிந்துருகியிருக்கிறது தினமணி.

மற்ற மற்ற இதழ்களும் மனவேதனை தரும் நிலை என்ற பொருள்பட எழுதுகின்றன.

திருமதி பண்டாரநாயகாவுக்கு அடுத்தபடியாக இந்த ஒப்பந்தத்தைக் குறித்து மகிழ்ச்சி கொண்டவர் ஒருவர் உண்டு என்றால் அவர் நமது மாநில முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களே!! இலங்கையில் உள்ள தமிழ் மரபினர்களை இந்தியர்கள் என்று கொள்ளமுடியாது என்ற நேரு கோட்பாட்டை ஒழித்திட, லால்பகதூர் எங்ஙனம் உரிமை பெற்றார்? அறிவாற்றலில், நேருவை மிஞ்சுபவர் தாம் என்ற உரிமை கொண்டாடுகிறாரா? நேருவுக்குப் புலனாகவில்லை இந்த வழி, இதோ எனக்கு வழி தெரிகிறது என்று கூறி நேருவிடம் இருந்ததைவிட மேலான நுண்ணறிவு தமக்கு இருக்கிறது என்று வாதாடப் போகிறாரா?

நேரு சிக்கலைத் தீர்த்துவைக்கத் தவறிவிட்டார், இதோ நான் தீர்த்துவிடுகிறேன் என்று கித்தாப்புப் பேச இதுபோலச் செய்தாரா?

இலங்கையிலுள்ள தமிழ் மரபிரனர், எம்மை இந்தியர் என ஏற்றுக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் என்று ஏதாவது இவரிடம் முறையிட்டனரா? அந்த முறையீடு கேட்டு நான் இந்த முடிவை மேற்கொண்டேன் என்று வாதாடப் போகிறாரா? இலங்கையிலுள்ள தமிழ் மரபினரின் கருத்தறிய முயற்சி எடுத்துக்கொண்டாரா? முடிவு, இறுதியாக அங்குள்ள தமிழ் மரபினரின் ஒப்புதல் பெற்ற பிறகே அமுலுக்குக் கொண்டுவரப்படும் என்று கூறுகிறாரா? அவர் பெரியவர்! மிகப் பெரிய நிலையிலும் உள்ளவர்! என்றாலும் கேட்கவேண்டி இருப்பதால் கேட்கிறோம்; இலங்கையிலுள்ள தமிழ் மரபினரின் கருத்தை மதித்திடாமல், அவர்களுடன் கலந்துபேசாமல், அவர்களின் ஒப்புதல் பெறாமல், அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி இலங்கை சர்க்காருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள இவர் யார்?

இவர், இந்தியாவின் பிரதமர்! புரிகிறது! தெரிகிறது!! ஆனால் பிரச்சினை, இலங்கையில் உள்ளவர்களைப் பற்றியது; அவர்கள் ஒப்பம் அளித்தாலொழிய அவர்கள் சார்பாகப் பேசிட, முடிவெடுக்க, இந்தியப் பிரதமருக்கு என்ன உரிமை இருக்கிறது!!

இலங்கை சர்க்காரின் தலைவர்களாக இருந்துவந்த சேனாநாயகா, கொத்தலாவலை ஆகியோருடன் அவ்வப்போது நடத்தப்பட்ட பேச்சுகளும், தீட்டப்பட்ட திட்டங்களும், இலங்கை சர்க்காரின் போக்கின் காரணமாகவே பொருளற்றுப் போய்விட்டன.

இலங்கைக் குடிமக்களாகப் பதிவு செய்துகொள்ள இடமளிக்கிறோம் என்று நேருவிடம் வாக்களித்துவிட்டு, குடிஉரிமை கேட்டவர்களை இழுக்கடித்து, காலொடித்து, சூது செய்ததை யாரறியார்!

நியாயமற்றமுறையில் பலர், குடிஉரிமை மறுக்கப்பட்டது, அம்பலப்படுத்தப்பட வில்லையா?

தமிழர்களைக் குடிஉரிமை பெறவிடாமல் செய்யும் சூட்சியில் சிங்கள அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பது மெய்ப்பிக்கப்படவில்லையா?

இந்த முறை கேட்டினை இலங்கை உயர்நீதிமன்றமே கண்டிக்கவில்லையா?

இவையாவும், எப்படியேனும், இலங்கையிலிருந்து தமிழ் மரபினரைத் துரத்திவிட வேண்டும் என்பதுதான் இலங்கை சர்க்காரின் திட்டம் என்பதைக் காட்ட வில்லையா?

இந்தப் போக்குக்கு உடந்தையாக இருந்திட லால்பகதூர் ஒப்புக்கொண்டு விட்டார் என்பதன்றி இந்த ஒப்பந்தத்துக்கு வேறென்ன பொருள்?

இலங்கைவாழ் தமிழர்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்று கூறினால் மட்டும் போதாது, காட்டிக்கொடுத்துவிட்டார்கள் என்பதுதான் பொருத்தம்.

ஏமாற்றத்தையும் துயரத்தையும் சுமந்துகொண்டு, உழைத்து உருவாக்கிய திருநாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, தமிழகம் வரப்போகிறார்கள் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள்- பசி, பட்டினி, வேலையில்லாக் கொடுமை என்பவைகள் தலைவாயிலில் நிற்கின்றன அவர்களை வரவேற்க. சாவை, அமைதிக்கு அடையாள மென்றும்; வேதனைத் துடிப்பை, வலிவுக்குச் சான்று என்றும், கூறிடும் வித்தகர்களாக உள்ள அமைச்சர்கள் உள்ளனர், வருக! ஒழுங்காக இருந்திடுக! அர்ஜுனன் கதையினைத் தெரிந்துகொள்க! என்று அறிவுரை கூற.

வரப்போகிறார்களாம் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தொகையினர்; உழைத்து உருக்குலைந்தவர்கள்; உரிமை பறிக்கப்பட்ட நிலையினர்; காப்பாற்றப்பட வேண்டியவர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள், காவேரி தென் பெண்ணையை இதற்குமுன்பு காணாதவர்கள்; தமிழ் மரபினர்; தத்தளிக்கும் நிலையினர்!!

காங்கிரஸ் அரசு ஒன்றின்மீது ஒன்றாக நமக்குப் பரிசு அளித்து வருகிறதல்லவா! இது எல்லாவற்றிலும் மேலான பரிசு – ஐந்து இலட்சம் மக்களின் வாழ்வு பறிக்கப்பட்டு, இங்கு அனுப்பிவைக்கப்படும் பரிசு!! ஐயோ! தமிழா! உன்கதி இதுவோ!!

===================================================================
சின்ன காஞ்சிபுரம், 86, திருக்கச்சிநம்பி தெரு, “அல்லி” அச்சகத்தில், (உரிமையாளர்) சி.என்.ஏ.இளங்கோவனால் அச்சிடப்பட்டு வெளியிடப் படுகிறது. ஆசிரியர் சி.என். அண்ணாதுரை.

வரும் பிப்ரவரி 2010-ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் அறிவிப்பு

கோவையில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் அறிவிப்பு
Dinamani First Published : 18 Sep 2009 11:41:00 PM IST

சென்னை, செப். 17: "ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவை நகரில் அடுத்த ஆண்டு நடத்தப்படும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மாநாட்டைத் தொடங்கி வைத்து தமது தலைமை உரையை முடிக்கும் போது, "பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதையேற்று, 9-வது உலகத் தமிழ் மாநாட்டை அடுத்த ஆண்டு நடத்த அரசு முடிவு செய்துள்ளது' என்றார்.

இதன்பின், அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ""1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பீடம் ஏறியதும் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, பல்வேறு நாடுகளிலும் தமிழகத்திலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் கோவை நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் மாதத்தில் சிறப்பாக நடத்தப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை... உலகத் தமிழ் மாநாடு குறித்து சுற்றுலாத்துறை செயலாளர் வெ.இறையன்புடன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

1995-ம் ஆண்டு, தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது விழாவின் சிறப்பு அலுவலராக இறையன்பு நியமிக்கப்பட்டார். அப்போது செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அவரிடம் தலைமைச் செயலாளர் கேட்டறிந்ததாக, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டை நடத்துவதற்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், பல்வேறு குழுக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.

--------

தினமணி தலையங்கம்: உலகளவு உவகை!
First Published : 18 Sep 2009 01:06:23 AM IST

இதனினும் இனியதொரு செய்தி இருக்க முடியாது. 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடைபெறும் என்கிற அறிவிப்பு உண்மையிலேயே தேன்வந்து காதில் பாய்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

இப்போது பாரதி இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பார். பாரதிதாசன் வாழ்ந்திருந்தால் வாழ்த்தி மகிழ்ந்திருப்பார். தவத்திரு தனிநாயகம் அடிகள் கேட்டிருந்தால் பேருவகை அடைந்திருப்பார். இந்த ஒரு செய்தியைக் கேட்கத்தானே தமிழ் நெஞ்சங்கள் ஒரு மாமாங்கமாகத் துடித்தன.

உலகத் தமிழ் மாநாடு என்பது தவத்திரு தனிநாயகம் அடிகளின் எண்ணத்தில் மலர்ந்த அற்புதமான விஷயம். 1964-ம் ஆண்டு தில்லியில் அகில உலகக் கீழ்த்திசை ஆய்வு மாநாடு ஒன்று நடந்தது. அதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மொழி வல்லுநர்கள் வந்திருந்தனர். அந்த அறிஞர் கூட்டத்தில் தமிழ் மொழியின் சார்பில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜுன்பிலயோசா, இங்கிலாந்திலிருந்து டி. பர்ரோ, நெதர்லாந்திலிருந்து எல்.பி.ஜே. கைப்பர், ஜெர்மனியிலிருந்து ஹெர்மன் பெர்கர் போன்றோருடன் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசனார், வ.அய். சுப்பிரமணியம் மற்றும் தனிநாயகம் அடிகளார் போன்றோரும் இருந்தனர்.

அப்போது, தமிழுக்கென்று உலக மாநாடு ஒன்று நடத்த வேண்டும் என்கிற தனது எண்ணத்தைத் தவத்திரு தனிநாயகம் அடிகளார் வெளிப்படுத்தியது மட்டுமன்றி செயல்படுத்தவும் செய்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டதன் பின்னணி அதுதான். தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால்தான் முதல் தமிழ் மாநாடு 1966-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் கோலாலம்பூரில் கோலாகலமாகத் தொடங்கியது.

அந்த முதலாம் உலகத் தமிழர் மாநாட்டுக்கு முதல்வர் பக்தவத்சலம் மட்டும் செல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. நெடுஞ்செழியனும், தமிழரசுக் கட்சித் தலைவரான ம.பொ. சிவஞான கிராமணியாரும் ஏனைய தமிழறிஞர்களுடன் கலந்துகொண்டனர். இரண்டாண்டுக்கு ஒருமுறை இதேபோல உலகத் தமிழ் மாநாடு தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டபோது 1968-ம் ஆண்டு நடைபெற வேண்டிய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்த அன்றைய முதல்வர் பக்தவத்சலம் ஏற்றுக்கொண்டு உறுதி அளித்தார்.

1968-ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தபோதும், பக்தவத்சலத்தின் உறுதிமொழியை அரசியல் பாராட்டி உதாசீனப்படுத்தாமல் சி.என். அண்ணாதுரை தலைமையில் அமைந்த திமுக ஆட்சி நிறைவேற்ற முன்வந்தது. அதுமட்டுமல்ல, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமனின் முழு ஒத்துழைப்பும் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு இருந்தது. அவரே ஒரு கருத்தரங்கத்துக்குத் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர்கள் கு. காமராஜும், பக்தவத்சலமும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். கட்சி மனமாச்சரியங்களை மறந்து "தமிழ்' என்கிற பெயரில் அனைவரும் அண்ணாவுடன் கைகோர்த்து நின்று அந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை வெற்றியடையச் செய்தது தமிழர்தம் சரித்திரத்தில் அழியா நினைவு!

கடந்த உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்து முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள், ஆய்வேடுகள், அடுத்த தலைமுறை தமிழறிஞர்களின் பங்களிப்புகள் என்று மொழி வளம் பெற்றிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல உலகளாவிய தமிழ் ஆராய்ச்சிக்கு ஒரு பொதுமேடை கிடைத்தால் மட்டுமே, ஆரோக்கியமான தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

தவத்திரு தனிநாயகம் அடிகளை இந்தவேளையில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. முதல் நான்கு மாநாடுகளைச் சிறப்பாக நடத்திய பெருமைக்குரியவர் அவர். சிங்கள ஆதிக்கம் அதிகரிப்பதையும், அதனால் இலங்கையில் தமிழர்கள் இன்னலுறுவதையும் பொறுக்காத தனிநாயகம் அடிகள், இலங்கை அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டார். அதனால் அரசு அவரை காவல், கண்காணிப்பு என்று பயமுறுத்த எத்தனித்தது. உடனே, கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தான் தங்கியிருந்த அறையைக் காலி செய்துவிட்டுத் தமிழகம் வந்துவிட்டார் தனிநாயகம் அடிகள். அதன் பிறகு அவரது வாழ்க்கை தமிழ், தமிழ் மொழி என்பதாகவே கழிந்தது.

ஒரு மொழிக்காக உலகளாவிய மாநாடு நடத்தும் முதல் முயற்சிக்குச் சொந்தக்காரர் தவத்திரு தனிநாயகம் அடிகள்தான். உலகிலேயே தமிழ் மொழிக்கு உலகளாவிய மாநாடு நடத்தப்பட்டதற்குப் பிறகுதான் சம்ஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கு மாநாடுகள் நடந்தன.

ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு நடக்கும்போது, அந்தத் திடல் தவத்திரு தனிநாயகம் அடிகளின் பெயரால் வழங்கப்பட வேண்டும். அங்கே ஆய்வரங்கம் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த வ.அய். சுப்பிரமணியம் பெயரால் அமைய வேண்டும். மாநாட்டுப் பந்தல், நூற்றாண்டு விழா கண்ட அறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கி இருத்தல் வேண்டும். இவையெல்லாம் "தினமணி' சார்பில் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கைகள்.

தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் தங்களது தாயகமான தமிழகத்தின்மீது குவிய இருக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை விடுத்து 1966-லும், 1968-லும் இருந்த தமிழ் உணர்வுடன் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பது எதிர்க்கட்சியினருக்கு "தினமணி' விடுக்கும் வேண்டுகோள்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு, சோர்ந்து போயிருக்கும் தமிழனுக்கும், துவண்டு கிடக்கும் தமிழுணர்வுக்கும் புத்துயிர் ஊட்டும் விதமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த முன்வந்திருக்கும் முதல்வர் கருணாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்கூறு நல்லுலகின் சார்பாக முதல்வருக்கு நன்றி... நன்றி... நன்றி!


மாநாடு அறிவிப்பு : கொண்டாட்டத்தில் கோவை
Dinamalar

செப்டம்பர் 18,2009,00:00 IST

கோவை : கோவையில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவதாக அரசு அறிவித்திருப்பது, கொங்கு மண்டல மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு, வருகிற ஜனவரி, பிப்ரவரியில் கோவையில் நடக்கும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி அறிவித்த அறிவிப்பு, தமிழறிஞர்களை மட்டுமின்றி, கொங்கு மண்டல மக்களையும் மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

தமிழ் ஆர்வலர்களாலும், தமிழறிஞர்களாலும் "முத்தமிழ் அறிஞர்' என்று அழைக்கப்படும் கருணாநிதி, முதல்வராக இருக்கும் போது நடத்தப்படும் முதல் உலகத் தமிழ் மாநாடு என்பதில் தி.மு.க.,வினரும் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழுக்கே மரியாதை அளிக்கும் கொங்கு மண்டல மண்ணில் இதுவரை தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்பட்டதில்லை. சர்வதேச அளவில் பஞ்சாலை நகராகவும், தொழில் நகரமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள கோவை மாநகரத்துக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பின்னிப் பிணைந்த தொடர்பு உண்டு. தமிழ்க் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் என்றென்றைக்கும் அங்கீகரிக்கிற பூமியாக கோவை திகழ்ந்துள்ளது. தொழில் மேம்பாடு, கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் அசுர வளர்ச்சி, வெளிமாநிலத்தவரின் குடியேற்றம், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு என சில பல காரணங்களால், சமீபகாலமாக கோவையில் தமிழுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதே உண்மை.

இந்த சூழ்நிலையில், கோவை நகரில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது, இங்குள்ள இளைய தலைமுறையிடத்தில் தமிழ்ப் பற்றையும், தமிழ்ப் பண்பாட்டையும் வேரூன்றச் செய்யும் என்று தமிழ் ஆர்வலர்கள் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்துகின்றனர். அது மட்டுமின்றி, இந்த மாநாடு காரணமாக கோவை நகருக்கு ஏராளமான வசதிகள் கிடைக்கும் என்பதும் கூடுதல் நன்மை. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தமிழறிஞர்கள், தமிழ்ச் சங்கங்களின் தலைவர்கள், மொழி வல்லுனர்கள் கோவைக்கு வருகை தருவர். கவியரங்கம், இயல், இசை, நாடகம், திரைத்துறை நிகழ்ச்சிகள், தமிழ் மொழி ஆய்வு அரங்கங்கள் என ஊரே பல நாட்களுக்கு விழாக்கோலம் பூண்டிருக்கும்.

மாநாட்டுக்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, பல இடங்களில் புதிதாக சாலை, பாலங்கள், விடுதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். கோவை நகருக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். முதல்வர், அமைச்சர்கள் பலரும் பல நாட்களுக்கு இங்கேயே முகாமிடுவர். அப்போது, கோவையில் பல்வேறு பிரச்னைகளும் அவர்களுக்கு தெரியவரும். நீண்ட காலமாக உள்ள பல பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மாநாடுக்கான அறிவிப்பு வந்து விட்டாலும், நடத்த வேண்டிய நிகழ்ச்சிகள், அதற்கான இடங்கள், தீர்மானங்கள் போன்றவை குறித்து முடிவெடுக்க சிறப்புக்குழு விரைவில் அமைக்கப்படும். செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த் துறை, தமிழ் வளர்ச்சித் துறை என பல்வேறு துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் தமிழறிஞர்கள் இதில் இடம் பெறுவர். கோவைக்கு இதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதை விட, தமிழின வரலாற்றில் கோவை நகருக்கு நிரந்தரமான பெயரும் கிடைத்து விடும். பண்டிகைக்கு பல நாட்கள் இருந்தாலும் பந்தக்கால் நடப்பட்டு விட்டதால், இனி தினந்தோறும் திருவிழாக் கொண்டாட்டம்தான்.

கோவை மேயர் வெங்கடாசலம் கூறியதாவது: இந்த அறிவிப்பை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்கிறோம். கோவையில் நாங்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கும்போது, இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கு நாங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். தமிழுக்கே பெருமை சேர்க்கும் முதல்வர் கருணாநிதி காலத்தில் நடத்தப்படும் மாநாடு என்பதால், இந்த மாநாடுக்கு இன்னும் அதிகமான பெருமை இருக்கிறது. கோவையில் இந்த மாநாடு நடப்பதால், கோவைக்கு சரித்திரப் புகழ் கிடைக்கும். சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது உருவான அண்ணா நகர்தான், இன்றைக்கு சென்னையில் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கிறது. அதேபோல, கோவை நகரில் இந்த மாநாடு நடக்கும் இடம், எதிர்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக மாறும். அடுத்த மாநாடு, எப்போது, எங்கே, எப்படி நடக்குமென்று தெரியாது என்பதால், இந்த மாநாட்டில் பங்கேற்கும் மக்கள், கொடுத்து வைத்தவர்கள்தான். இவ்வாறு மேயர் தெரிவித்தார்.

எல்லா மாநாடுகளையும் மிஞ்சும்! கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடப்பது குறித்து ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், கோவை மாவட்ட தி.மு.க., செயலாளருமான பொங்கலூர் பழனிசாமி கூறியதாவது: முதல்வரின் அறிவிப்பு, எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இது கோவைக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். கொங்கு மண்ணுக்கு மிகப்பெரிய பெருமையைச் சேர்க்கும் மாநாடாக இந்த மாநாடு அமையும். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் கோவைக்கு வருவார்கள் என்பது மற்றொரு பெருமிதம். இதற்கான இடங்களைத் தேர்வு செய்வது, செய்ய வேண்டிய பணிகள் குறித்து, இனிமேல்தான் விவாதிக்க வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட 8 உலகத் தமிழ் மாநாட்டையும் மிஞ்சும் வகையில் மிகப் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் இதை நடத்தி முடிப்போம். இவ்வாறு அமைச்சர் பழனிசாமி கூறினார்.

கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் கூறியதாவது: உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் நடத்துவதாக முதல்வர் அறிவித்ததற்கு, கோவை மக்களின் சார்பில், எனது நன்றியை முதல்வரிடம் தெரிவித்தேன். எல்லாரும் பாராட்டும் வகையில், மாநாட்டை நடத்துவோம் என்ற உறுதியையும் முதல்வரிடம் கொடுத்திருக்கிறேன். இந்த மாநாட்டை நடத்துவதற்கு கோவையில் எல்லாவிதமான வசதிகளும், பல்வேறு சிறப்பு அம்சங்களும் இருக்கின்றன. விமான நிலையம், சர்வதேச தரத்திலான ஓட்டல்கள், அரங்கங்கள் என எல்லா வசதிகளும் இருப்பதால், முந்தைய மாநாடுகளை விட சிறப்பாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்வாறு கலெக்டர் உமாநாத் தெரிவித்தார்.

உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை

கடந்த 14 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு கோவையில் நடக்கவிருக்கிறது. தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடு. தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள், பண்பாடு, தமிழ் மொழி வரலாறு, தொல்லியல் ஆய்வுகள், கலைகள், மொழியியல் பற்றி இம்மாநாட்டில் புதிய உண்மைகள் வெளியாகும் என்பதால் தமிழ் அறிஞர்களிடமும் மாணவர்களிடமும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் கடின முயற்சியின் விளைவாக 1964ம் ஆண்டு, டில்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் துவக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்த வேண்டும் என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.

முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஏற்பாடு செய்தார். சர்வதேச தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தில் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது.

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. முதல் மாநாட்டைப் போல் அது ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. நான்காவது தமிழ் மாநாடு, 1974ல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. இம்மாநாட்டுக்கும் தனிநாயகம் அடிகள்தான் ஏற்பாடுகளை செய்தார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆய்வு அமர்வுகளும், தமிழர் பண்பாட்டு பொருட்காட்சி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மண்டபடத்திலும் நடைபெற்றன. முதல் மூன்று மாநாடுகளைப் போல் இம்மாநாடு எளிதாக நடைபெறவில்லை. யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும், இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டது. தமிழ்ப் பகுதியிலிருந்து பொதுமக்கள் மாநாட்டைப் பார்க்க திரண்டு வந்தனர். அப்போது, பருத்தித்துறை வழியாக வந்தவர்கள் சிங்களர்களால் மறிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் வந்தடைந்த பின்னர், யாழ் வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வழிந்தது. காவல்துறையினர் சென்று வர பாதையில்லை என்றுகூறி, தடியடி கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை வீசினர். இதனால் மக்கள் கலைந்து செல்லும்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள்.

ஐந்தாவது மாநாடு, 1981ல் மதுரையில் நடந்தது. அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தார். மதுரையில் உலகத் தமிழ் சங்கம் துவங்கவும், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கவும் அப்போது எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். ஆறாவது மாநாடு, 1987ல் கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில் கருணாநிதி துவக்க நாள் சிறப்புரையாற்றினார். ஏழாவது மாநாடு, 1989ல் மொரிஷியசில் நடந்தது. எட்டாது மாநாடு 1995ல் தஞ்சாவூரில் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். இந்த மாநாட்டில்தான் முத்தமிழ் தவிர அறிவியல் தமிழ் ஒன்றும் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. துவக்கத்தில் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள்தான் முடிவு செய்தனர். அப்போது அரசு வாயிலாக துவங்கப்படவில்லை. காலப்போக்கில் நிதி நெருக்கடி காரணமாக, அரசு உதவியின்றி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் மட்டுமே இம்மாநாடு நடத்துவது கடினமாகிவிட்டது. ஆகவே, தமிழக அரசின் நிதி உதவியை சார்ந்தே இம்மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றன.

பேரூர் மருதாசல அடிகள் வரவேற்பு: "தொன்மையான வரலாறும், சிறப்பான தமிழ்வழிபாடும் நடந்து வரும் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது,' என பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் கூறினார். முதல்வர் கருணாநிதி அறிவிப்பை வரவேற்று, பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் தெரிவித்ததாவது: தொன்மையான வரலாறும், சிறப்பான தமிழ்வழிபாடும் நடந்து வரும் கோவையில் உலக தமிழ் மாநாடு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோம், கிரேக்க நாடுகளிலிருந்து வணிகத்திற்காக வந்து சென்ற கோவையில் உலக தமிழ்நாடு மிகவும் சிறப்புடையதாகும்.

தமிழ்வழிக்கல்வி தழைத் தோங்கிட அரசு புதிய பாடநூல், பாடதிட்டங்களை உருவாக்கி, தமிழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கட்டாய தமிழ் கல்வி கொண்டு வர வேண்டும். தொன்மை மிகுந்த, பாடல் பெற்ற திருக்கோவில்கள் ஆகியவற்றில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப் படவேண்டும். இணைய தள வழியில் பிற மொழியினரும் எளிய வழியில் தமிழ் கற்க புதுப்புது மென்பொருள்களை உருவாக்க வேண்டும்; பழமையான தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பவர்களுக்கு பாராட்டு வழங்கி உதவித்தொகை வழங்க வேண்டும்; ஒருங்கிணைந்த ஓலைச்சுவடிகள் பட்டியலை அறிவித்திட வேண்டும்.

உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் சமுதாய, சமய தாக்குதலில் இருந்து காத்திட அரசு துணை நிற்க வேண்டும். அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் இன அடிப்படையில், தகுதிகளின் அடிப்படையில் நி யமனம் செய்திட வேண்டும். உலக பிரசித்த பெற்ற தமிழ்நூல்களை உலக மொழிகளில் வெளிவரச் செய்ய அறிஞர்களைக் கொண்டு முக்கிய நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும். அரசாணைகளை கட்டாயம் தமிழில் வெளியிடச் செய்வதோடு,அர சு அதிகாரிகள் தமிழில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும். தமிழ்வழி பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு, தொன்மையான சங்ககால தமிழிசை கருவிகளின் மாதிரி அருங்காட்சியம் அ� மத்தும், தமிழிசை கலைஞர்களுக்கு விருது வழங்கியும் அரசு சிறப்பித்திட வே ண்டும். இவ்வாறு, மருதாசல அடிகள் கூறினார்.

உலகத் தமிழ் மாநாடு இடம்; எகிறுகிறது எதிர்பார்ப்பு!

உலகத் தமிழ் மாநாடுக்கு இடங்களை தொலை நோக்குப் பார்வையுடன் தேர்வு செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. வரும் ஜனவரி, பிப்ரவரியில் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்த மாத்திரத்திலேயே, கோவை நகரைச் சுற்றிலும் உள்ள இடங்களுக்கு புது மவுசும், கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் நகர பகுதிகளை விட்டு, புறநகரப் பகுதிகள்தான் மாநாடு அரங்கங்கள், உலகப் பிரதிநிதிகள் தங்குவதற்கான விடுதிகள், நுழைவாயில்கள் அமைக்கப்பட்டன.

சென்னையில் அண்ணாநகர் அப்போதுதான் உருவாக்கப்பட்டது. அந்த மாநாட்டுக்காக அப்பகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது. அதன்பின், அந்தப் பகுதியில் குடியேற்றங்கள் அதிகரித்து, பிற வசதிகளும் செய்து தரப்பட்டு, பரபரப்பான நகரமாக உருவெடுத்தது. மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநாடு நடத்தப்பட்டது. அதற்குப் பின்பே, அப்பகுதி படிப்படியாக வளர்ச்சியைப்பெற்றது. தஞ்சைக்கும் உலகத் தமிழ் மாநாட்டினால் பல வித நன்மைகள் கிடைத்தன. இதேபோன்று, கோவையில் உலகத் தமிழ் மாநாடு நிகழ்ச்சிகளுக்காக தேர்வு செய்யப்படும் இடமும், எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்பது நிச்சயம். ஆனால், இந்த இடங்களைத் தேர்வு செய்வதில் நிதானமும், தொலை நோக்குப் பார்வையும் இருக்க வேண்டியது அவசியம். சுயநலத்தின் அடிப்படையில் ஒரே பகுதியில் இடங்களை தேர்வு செய்யக்கூடாது. போக்குவரத்து வசதிகள் அதிகம் இருப்பதால், பரவலாக நாலா திசைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதுவே, சமச்சீரான வளர்ச்சிக்கு வழி வகுப்பதாக அமையும். கோவையில், "கொடிசியா' அரங்கம், வ.உ.சி.மைதானம் உள்ளிட்ட பல முக்கிய அரங்கங்களும் அவினாசி ரோட்டிலேயே உள்ளன. விமான நிலையமும் இதே ரோட்டிலேயே உள்ளது. நட்சத்திர ஓட்டல்களும் இங்கேயே உள்ளன. எனவே, நீலம்பூர் பை-பாஸ் ரோட்டோரத்தில் காலியாகவுள்ள இடங்களில் மாநாடு நடத்துவதற்கே அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார் மூத்த அரசியல்வாதி ஒருவர். இந்தப் பகுதியை தேர்வு செய்வதற்கு, வேறு சில காரணங்களையும் சிலர் அடுக்குகின்றனர்.

உலகத் தமிழ் மாநாட்டில் ஒரு வாரத்துக்கும் அதிகமான நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், பல இடங்களில் நடத்தப்பட வேண்டும். பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பல ஆயிரம் பிரதிநிதிகளை தங்க வைப்பதற்கு வசதிகள் செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில், தினமும் நிகழ்ச்சிகள் நடந்தாலும் மாணவ, மாணவியரின் கல்வி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. எனவே, புறநகரில் ஒரே பகுதியாக இல்லாமல், சத்தி ரோடு, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு என நாலாபுறங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதற்கான அடிப்படை வசதிகளையும் அந்தந்த பகுதியில் ஏற்படுத்த வேண்டும். கொடிசியா, மாநகராட்சி கலையரங்கம், விஜயா கண்காட்சி அரங்கம் என உள்ளரங்க நிகழ்ச்சிகளையும் திசைக்கு ஒன்றாக நடத்தும்போது, எல்லாப் பகுதியையும் மேம்படுத்துகிற கட்டாயம் ஏற்படும். மாநாட்டுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருந்தாலும், ஓரிரு வாரங்களிலேயே இதற்கான பணிகள் துவங்கி விடும் என்பதால், இப்போதே மக்களிடம் எதிர்பார்ப்பு எகிறத் துவங்கி விட்டது.

அறிஞர் அண்ணாதான் முதன்முதலில் ... டாக்டர் அண்ணா பரிமளம்

1. அண்ணாதான் முதன்முதலில் அரசியலில் ஈடுபட்டும் இலக்கியப் பணியைத் தொடர்ந்தவர்.

2, அரசியலில் இருந்துகொண்டே இலக்கியத்தில் சிறுகதை, நெடுங்கதை, சரித்திர நெடுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், உரையாடல்கள், கடிதங்கள் என எல்லாப் பிரிவிலும் தனி முத்திரை பதித்தவர் - முதன்முதலில்

3. தமிழக இந்தி எதிர்ப்பு வரவாற்றின் முதல் சர்வாதிகாரர் அண்ணாதான் - 1938-ல் இந்தியை எதிர்த்துச் சிறை சென்றவர்.

4. முதன்முதலில் தான் எழுதிய சந்திரோதயம் எனும் சமூக நாடகத்தில் தானே மூன்று வேடங்களில் நடித்து இயக்கி தன் பணிமனைத் தோழர்களையே நடிக்க வைத்தவர்.

5. 1943-ல் முதன்முதலில் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் அடுக்குமொழியைக் கையாண்டவர்.

6. ஓர் இரவு எனும் ஓர் இரவில் நடக்கும் நிகழ்ச்சிகளை அமைத்து ஒரு நாடகத்தை எழுதியவர் - முதன்முதலில் - 1945 ல்.

7. ஓர் இரவு நாடகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிய காட்சிகளாக ((Flash Back) அமைத்தவர் - முதன்முதலில்

8. முதன்முதலில் வேலைக்காரி எனும் நாடகத்தில் வழக்கு மன்றக் காட்சிகளை அமைத்தவர்.

9. தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்த திரு.வி.கல்யாணசுந்தரனார், அண்ணாவைப் பாராட்டுகிறபோது இனி திரு.வி.க நடை என்பது மறைந்து அண்ணாத்துரை நடை என வழங்கும் எனப் பாராட்டினார் - முதன்முதலில் அந்தப் பெருமையைப் பெற்றவர் அண்ணா.

10. அண்ணாதான் முதன்முதலில் ’வேலைக்காரி’ திரைப்படத்தின் மூலம் புதுமைக் கருத்துக்களைச் சொன்னவர்.

11. சமகாலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகர்சாமி போன்றவர்களுக்கு நிதி திரட்டித் தந்தவர், முதன்முதலில் அண்ணாதான் 1946-ல்

12. பாவலர்கள் மத்தியில் இருந்த தமிழை முதன்முதலில் பாமரர்களிடம் கொண்டு வந்தவர் அண்ணா.

13, முதன்முதலில் அண்ணாதான் ஓர் இரவு திரைப்படத்திற்கு ரூ. 20,000 ஊதியம் வாங்கியவர்.

14. கல்கி கிருட்டிணமூர்த்தி என்கின்ற சமகால எழுத்தாளர் முதன்முதலில் பாராட்டியது அண்ணாவைத்தான் - இதோ ஒரு பெர்னாட்சா, இதோ ஓர் இப்சன் என்று.

15. அண்ணாதான் முதன்முதலில், வானொலியில் பல தலைப்புகளில் பல நேரங்களில் சொற்பொழிவு ஆற்றியவர்.

16. அண்ணாதான் தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த சொற்பொழிவாளாராக விளங்கியவர்

17. கம்பராமாயணம், பெரிய புராணம் இவைகளை நன்கு கற்றுத் தேர்ந்து, புலவர்களும், தமிழறிஞர்களும் மறுக்க முடியாத வாதங்களை எடுத்து வைத்து வாதிட்டவர் - முதன்முதலில் ஒரு புதிய கோணத்தில் திறனாய்வு செய்தவர்.

18. அந்தத் திறனாய்வுக் கருத்துக்களை எளிய மக்களுக்கும் புரியவைக்கும் விதத்தில் நாடகமாக்கியவர் - நீதி தேவன் மயக்கம் எனும் பெயரில் - முதன்முதலில் அண்ணாதான்.

19. தான் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் ஈடுபடலாமா என்பதை முடிவெடுக்கக் கழக மாநாட்டில் வாக்குப்பெட்டி அமைத்து மக்களிடம் கருத்து கேட்டவர் முதன்முதலில்.

20. திறனாய்வு செய்கின்ற கோணத்தில், அண்ணாதான் முதன்முதலில் சில நாடகங்களை ஆக்கியவர். அவை, நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், கட்டை விரல், இளங்கோவின் சபதம், பிடிசாம்பல், தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில் ஒமகுண்டம் ஆகிய புதினங்கள்.

21. சொற்பொழிவுகளைக் கட்டணம் செலுத்தி மக்கள் கேட்டது தமிழகத்தில் முதன்முதலில் - அண்ணாவின் சொற்பொழிவைத்தான்.

22. முதன்முதலில் தமிழில் பல புதிய சொற்களைச் சொல்லாக்கம் செய்தவர் அண்ணாதான்.

23. தன் தொண்டர்களைத் ’தம்பி’ என பாசமுடன் அழைத்தது அண்ணாதான். அதேபோல் தன் தலைவனை அண்ணனாகவே பாவித்து அண்ணா என்று தொண்டர் அழைத்தது - முதன்முதலில் இவரைத்தான்.

24. தன் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருந்தபோதே தனக்கு அடுத்து இருந்தவரை, கட்சியின் பொதுச் செயலாளராக்கி தம்பி வா தலைமை ஏற்கவா என விளித்த முதல் அரசியல்வாதி.

25. சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்தபோது அன்றைய முதல்வரைத் தன் தொகுதிக்கு அழைத்து தன் தொகுதிமக்களுடன் நேருக்குநேர் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

26. கட்சி மாநாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி அறிவு விளக்கம் தந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

27. அன்றாட வழக்கில், நடைமுறையில் இருந்த வடமொழிச் சொற்களை நீக்கி, தமிழ்ச் சொற்களைப் புகுத்தியவர் அண்ணாதான் - முதன்முதலில்.

28, இந்த நாட்டு மக்கள் விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும், அரசியல்வாதிகளுக்கல்ல எனச் சொன்ன முதல் அரசியல்வாதி அண்ணாதான்.

29. அரசியல் போராட்டத்தில் கைதாகி நீதிபதி முன் தனக்காகத் தானே வாதாடிய முதல் அரசியல்வாதி அண்ணாதான்.

30. திராவிடநாடு பிரிவினைப்பற்றி இந்தியத் துணைக்கண்ட பாராளுமன்றத்தில் முதன்முதலில் பேசிய தமிழர் அண்ணாதான்.

31. இன்றைய புதுக்கவிதையை முதன்முதலில் புதுப்பா என சொல்லாடல் செய்தவர்

32. அண்ணாதான் முதன்முதலில் ஆளுங்கட்சி காங்கிரசைப் பார்த்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னின்ன திட்டங்களை நிறைவேற்றுங்கள், நான் சார்ந்திருக்கிற திராவிட முன்னேற்றக் கழகம் 15 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாது என அறிவித்த அரசியல்வாதி.

33. அண்ணாதான் முதன்முதலில் தன் காலத்தில் பல துறைகளில் சிறப்புடன் வாழ்ந்தவரை அடைமொழியுடன் அழைத்தார் - அதவே பின்னாளில் நிலைபெற்றது. வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், உத்தமர் காந்தி, கொடுமுடி கோகிலம் (கே.பி.சுந்தராம்பாள்), நடிகமணி டி.வி.நாராயணசாமி, நடிப்பிசைப் புலவர் (கே.ஆர்.ராமசாமி)

34. அண்ணாவின் சிவாஜி கண்ட இநது ராஜ்யம் எனும் நாடகத்தில் முதன்முதலில் சிவாஜியாக நடித்த வி.சி.கணேசன் இன்றுவரை சிவாஜி என்றே அழைக்கப்படுகிறார்.

35. தன் தலைவர் பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய அண்ணா, தான் தொடங்கிய கட்சிக்கு தலைவர் பெரியாரே, தலைவர் நாற்காலி இங்கு காலியாகத்தான் இருக்கும் என அறிவித்து அவ்வழியே நடந்து காட்டியவர் முதன்முதலில் அண்ணாதான்.

36. பெரியாரைப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 20 ஆண்டுகள் தலைவரைத் தாக்காமல் கட்சி நடத்தி அரசையும் கைப்பற்றிப் பகைமை மறந்து, தலைவரைப் பார்த்து இந்த ஆட்சி தங்களுக்கு காணிக்கை என அறிவித்த ஒரே மனிதர் - இவ்வுலகில் அண்ணா ஒருவர்தான் - முதன்முதலில்

37. அண்ணாதான் முதன்முதலில் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து, சுவரொட்டிகளில் மனதில் பதியவைக்கும் கருத்துக்களைச் சுருங்கச் சொல்லிப் பிரச்சாரத்தில் புதிய யுத்தியைக் கையாண்டவர்.

38. முதல்வரான பிறகு இவர்தான் முதன்முதலில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் விழாவுக்கெல்லாம் அவர்களைப் பின்தொடராமல், தங்கள் பணியைச் செய்யலாம் என்று சுற்றறிக்கை அனுப்பியவர்.

39. முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய முதல் தமிழர்.

40. முதன்முதலில் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனும் சட்டத்தைச் செய்தவர் இவர்தான்.

41. ஆங்கிலம் தமிழ் போதும் - இந்தி வேண்டாம் என் இரு மொழி திட்டத்தைக் கொண்டு வந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

42. எரியும் குடிசைகளை அகற்றி ஏழைகளுக்கு எரியா வீடுகளை கட்டிக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்

43. முதன்முதலில் தமிழ்நாட்டில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியவர், தமிழ்ப் போராளிகளுக்குக் கடற்கரையில் சிலை நிறுவியவர்

44. முதன்முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கியவர் ஏழைகளுக்கு.

45. முதன்முதலில் புன்செய் நிலங்களுக்கு வரியைத் தள்ளுபடி செய்தவர்.

46. அண்ணாதான் சீரணி என்ற அமைப்பை முதன்முதலில் தொடங்கினார். பொதுத்தொண்டில் ஆர்வமுள்ள எவரும் எந்த பலனும் எதிர்பாராமல் ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய சிறு சிறு பணிகளில் ஈடுபட்டு தங்கள் உழைப்பை நல்கும் திட்டமிது. நகர் கிராமப்புறம் இரண்டிலும் தன் உள்ளத்தை திறந்துக் காட்டி, எதையும் மறைக்காமல், இயலாததை இயலாது என்றும், தவறாயிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன், திருத்திக்கொள்கிறேன் என்றும் சொன்ன முதல் அரசியல்வாதி.

47. எனக்கென்று எந்தத் தனி ஆற்றலும் இல்லை. என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டுச் சக்தியின் உரிமையாளன் நான் - எனச் சொன்ன முதல் அரசியல்வாதி.

48. அமெரிக்க பல்கலைகழகமான யேல் பல்கலைக்கழகம் சப்பெலோசிப் எனும் சிறப்பை வழங்கியது அண்ணாவுக்குத்தான். அண்ணாதான் இந்த சிறப்பைப் பெற்ற முதல் தமிழர் - முதல் ஆசிரியர்.

49. உலகத்தில் வாழ்ந்த தலைவர்களின் மறைவின்போது, எவருக்கும் சேராத பெருங்கூட்டம் அண்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது - முதன்முதலில் - வரலாற்றில்.

50. அரசு அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தவர்.
( டாக்டர் அண்ணா பரிமளம் )

test ‘எதிரொலி’

தமிழ்மணத்தில் Apostrophe(') குறியைப் பயனித்தால் தலைப்பு காணாமல் போய்விடுகிறது என்று ஜாம்பஜார் ஜக்கு, ஆசிப் மீரான், ... குறிப்பிட்டிருந்தனர். ஒரு தீர்வைக் கண்டேன். பகிர்ந்துகொள்கிறேன்.

இடப்புற ஒற்றை-மேற்கோள்: & lsquo; வலப்புற ஒற்றை-மேற்கோள்: & rsquo; உதவும்.
(when you use, type without any space after & sign. i.e., lsquo; or rsquo; should immediately follow ampersand (=& ) sign without gap).

உ-ம்:
& lsquo;எதிரொலி& rsquo;

(ஒற்றை மேற்கோள் குறிகள் ஆவதற்கு &-க்கு அப்புறம் இடைவெளி இருக்கக் கூடாது.)

பயன்பட்டால் பதில் அனுப்பவும்.
வேறு ஏதாவது முறையும் இருக்கலாம், தெரிந்தால் சொல்லித்தரலாமே.

நா. கணேசன்

rsquo = right single quotation mark = வலப்புற ஒற்றை-மேற்கோள்
lsquo = left single quotation mark = இடப்புற ஒற்றை-மேற்கோள்


http://jambazarjaggu.blogspot.com/2009/08/bug.html
[Begin Quote]
தமிழ்மணத்தில் ஒரு BUG?

இதுல இன்னா பொடி இருக்குதோன்னு டென்ஷன் ஆவாதீங்க தலீவா! மெய்யாலுமே தமிழ்மணத்துல ஒரு bug இருக்கிற மாதிரி கீது!

இன்னா மேட்டருன்னா நீங்க பதிவுக்கு தலைப்பு வைக்கும் போது தலைப்புல ' அப்டீங்கிற எளுத்த (அதான் வாத்யார் apostrophe இல்லாங்காட்டி சிங்கிள் கோட்) யூஸ் பண்ணீங்கன்னு வைங்க தமிழ்மணம் உங்க பதிவ திரட்டும் போது சுத்தமா தலைப்பே காணாம பூடுது!

உதாரணமா இப்டி எல்லாம் தலைப்பு வைச்சீங்கன்னா கண்டிப்பா தமிழ்மண முகப்புல உங்க தலைப்பு தெரியாது!!!

1) Don't Miss it
2) 'அதுவும்', 'இதுவும்'
3) அவரு சொல்றாரு 'ஹி..ஹி'

இன்னா, சொன்னா நம்ப மாட்டீங்களா? சரி ஒரு தபா இப்டி தலைப்ப வச்சு இன்னா ஆவுதுன்னு பாத்து சொல்லுங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
[End Quote]

http://asifmeeran.blogspot.com/2009/08/blog-post_6523.html
[Begin Quote]
பதிவின் தலைப்பு எங்கே?
தமிழ் மணத்தில் இணைக்கப்படும் பதிவுகளில் சில சமய்ங்களில் தலைப்பு காணாமல் போவதை நீங்கள் கண்டிருக்கலாம் சற்று முன்னர் நான் இணைத்த 'காஞ்சிவரம்' திரைப்படத்திற்கான விமர்சனமும் தலைப்பில்லாமல் முண்டமாக (என்னை மாதிரியே) வந்து தொலைத்திருக்கிறது.

ஏன் இப்படி நேர்கிறது?
இதற்கு முன்னர் ஜெஸிலாவின் பதிவிற்கும், பைத்தியக்காரனின் பதிவிற்கும் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. தமிழ் ம்ணத்திடம் ஏன் இப்படி?' என்று கேட்டு முன்னர் எழுதியிருந்தேன்.
சில சமயங்களில் மேற்கோள் குறியிட்டு (",") எழுதினால் இப்படி நிகழ்ந்து விடுவதாகவும் இதை சரிசெய்யும் முயற்சிகளில் தொழில்நுட்பக்குழு தொடர்ந்து இயங்கி வருவதாகவும் சொல்லியிருந்தார்கள். கதை விடுகிறார்களோ என்று நினைத்துத்தான் மேற்கோள் காட்டி தலைப்பு வைத்தான்.

கதையின் நீதி:
உன்னைப் போல எல்லாருமே 'ஃபிராடு' என்று எண்ணாதே!!

பிகு
இதெல்லாம் ஒரு பதிவாடே என்று திட்டாதீர்கள்
எவ்வளவு பெரிய தொழில் நுட்பக் குறிப்பைத் தந்திருக்கிறேனே என்று வாழ்த்தி விட்டு போங்க!
[End Quote]

பாரதியின் இறுதிப் பேருரை (ஈரோடு, ஜூலை 31, 1921)

ethiroli


பெ. தூரன் தாத்தா, விழுப்புரம் ர. அ. பத்மநாபன் போலவே பாரதியின் மறைந்து நிற்கும் எழுத்துக்களைக் கண்டறிதலை வாழ்வுப் பணியாகத் தலைமேற் கொண்ட ‘எதிரொலி’ விசுவநாதனை வாழ்த்தி மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன், பொள்ளாச்சி நா. மகாலிங்கம் போன்றோர் பொன்னாடை அணிவிக்கும் சீர் (பாரதியார் சங்க 61-ஆம் ஆண்டுநாள், ராணி சீதை அரங்கம், சென்னை, செப். 11, 2009). ஈரோட்டில் பாரதியாரின் கடைசிப் பிரசங்கம் நிகழ்ந்தது. அதுபற்றி ஸ்டாலின் குணசேகரன் அவர்களிடம் ச. து. சு. யோகியார் அச் சொற்பொழிவைக் கேட்டபின் எழுதிய கட்டுரையை முழுக்க வாங்கி வெளியிட ஆசை.


நா. கணேசன்



பாரதியின் இறுதிப் பேருரை

த. ஸ்டாலின் குணசேகரன்
தினமணி, செப். 11, 2009

தேசியக் கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், தேசபக்தர், அமைப்பாளர், ஆய்வாளர், செயல்வீரர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகப் பேராளுமை கொண்ட சுப்பிரமணிய பாரதியார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்துள்ளார்.

1921-ம் ஆண்டின் மத்தியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்த பழக்கப்பட்ட யானைக்குத் திடீரென மதம் பிடித்து, வழக்கம்போல் பழங்கள் கொடுக்க வந்த பாரதியை எதிர்பாராத விதத்தில் தனது துதிக்கையால் பிடித்து இழுத்து, கீழே கிடத்திவிட்டது. யானைக்கடியில் கிடந்த பாரதியை அங்கிருந்தோர் பாய்ந்து சென்று இழுத்து வந்து காப்பாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் உருவான அதிர்ச்சியும், ஏற்பட்ட காயங்களால் விளைந்த சுகவீனமும் தொடர் சிகிச்சையால் விடுபட்டது.

குணமடைந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்திலிருந்த பாரதியின் அன்பரும், தேசபக்தருமான வழக்குரைஞர் தங்கப்பெருமாள் பிள்ளையின் அழைப்பின்பேரில், அவர் நடத்திய வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதற்காக ஈரோடு சென்றார் பாரதி.

சுதேசமித்திரன் இதழில் "என் ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் தனிக்கட்டுரை வெளியிட்டார் பாரதி.

""இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்'' என்று தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் பாரதி.

தனது ஈரோடு சொற்பொழிவையே சுதேசமித்திரனின் இன்னொரு இதழில் கட்டுரை வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார் பாரதி.

""மரணமில்லாமல் வாழ்வது குறித்த என்னுடைய கொள்கையைப் பெரிய மகான்கள் கூடியிருக்கிற இச்சபையில் தர்க்கம் செய்யவே வந்திருக்கிறேன். எனது கொள்கையைத் தக்க ஆதாரங்களுடன் ருஜுப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்'' என்று உரையைத் தொடங்கியதாக அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி.

ஹிரணியன், தன் மகன் பிரகலாதனிடத்தில் ""சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே'' என்று கேட்டதையும், அதற்குப் பிரகலாதன் ""நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான்'' என்று பதில் கூறியதையும் குறிப்பிட்டுவிட்டு, அதையொட்டிய தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் பாரதி.

""வல்ல பெருங்கடவுளில்லா அணுவொன்றில்லை. மஹாசக்தியில்லாத வஸ்துமில்லை சுத்த அறிவே சிவமென்றுரைக்கும் வேதம். வித்தகனாம் குரு சிவமென்று உரைத்தார் மேலோர்...'' என்று அடுக்கடுக்காக ஆதாரக் கருத்துகளை எடுத்துரைத்து ""அத்வைத நிலைகண்டவருக்கு மரணமேது? பார் மீது யார் சாகினும் நான் சாகாதிருப்பேன் காண்பீர்'' என்று தனது பேச்சின் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் பாரதி.

"நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்' என்று சித்தரெல்லாம் உரைத்திட்டார். இதனையே ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்களும் தெளிவுபடுத்துகின்றன. சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை. சினங்கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார். சினம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டுத் தாம் செய்தது எண்ணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவர். எனவே சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன'' என்று சாவிற்கான இன்னொரு காரணத்தை விளக்குகிறார் பாரதி.

""அறக்கடவுள் புதல்வன் என்னும் உதிட்டிரனும் இறுதியில் பொறுமை நெறி தவறி இளையாருடன் பாரதப் போர் புரிந்தான். பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது வறுமையையும் கலியினையும் நிறுத்தி வானம் சேர்ந்தான். போரினால் புவியிலுள்ள உயிர்கள் எல்லாம் அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ?'' என்று போரில்லா உலகம் பற்றி அக்கூட்டத்தில் போதித்தார் பாரதி.

""நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்? என்று விஞ்ஞானியாகிய ஜகதீச சந்திர வசு கூறுகின்றான். ஞானானுபவத்தினாலும் இதுதான் முடிவு. கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்: கொடுங்கோபம் பேரதிர்ச்சி; அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும். எனவே கோபத்தை வென்றிடவே பிறவற்றைத் தான் கொல்வதற்கு வழியென நான் குறிக்கிறேன்'' என்று ஒரு ஞானிக்குரிய இலக்கணத்துடன் இக்கூட்டத்தில் எடுத்தியம்பினார் இந்த சுப்பிரமணியக் கவிராயர்.

""மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ? பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை... வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டு. வீட்டினில் தமக்கடிமை பிறராம் என்பவன் நாட்டினில் பிறரை அடிமைப்படுத்த நாடோறும் முயன்று நலிந்து சாவான்'' என்று பெண்ணடிமை புரிவோருக்கு எதிராகப் பிரகடனம் செய்கிறார் பாரதி.

""எல்லா மதங்களின் சாரமும் இதுதான். பூமியிலே கண்டமைந்த மதங்கள் கோடி; யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே. ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்'' என்று மானுட ஒற்றுமையை வலியுறுத்தி "அன்பே அடிநாதம்' என்ற பொருள்பட தனது அன்றைய உரையை அமைத்துக் கொண்டார் மகாகவி.

ஈரோடு நகரில் அன்று நிகழ்த்தப்பட்ட "மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பிலான இந்த உரை அன்று கூடியிருந்தோரை உரக்கச் சிந்திக்க வைத்ததாக அவ்வுரை கேட்டோர் எடுத்தியம்பியுள்ளனர்.

தமிழகத்தின் கீர்த்தி மிக்க தேசபக்தக் கவிஞர்களில் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த ச.து. சுப்பிரமணிய யோகியும் ஒருவர். பாரதியின் ஈரோடு உரையைக் கேட்டவர் அவர்.

பாரதியின் இவ்வுரை குறித்துக் கூறும் யோகியார், ""நெருப்புத் தெய்வத்தை நெஞ்சிலே கொண்ட அவர் பேசும்போது உலகமே "கிடுகிடு' என்று நடுங்குவதுபோல் தோன்றும். மகா காளியே ஆணுருவம் தாங்கி நம்முன் மகா தாண்டவம் செய்வது போலிருக்கும்'' என்று சொல்லிக் கொண்டே வந்து "மூட எண்ணங்கள், முட்டாள் கொள்கைகள், மொண்டி ஞானங்கள், சண்டித் தனங்கள், குற்ற நினைப்புகள், குறுகிய நோக்கங்கள் இவற்றின் மேலெல்லாம் சீறி விழுவார். சள்ளெனக் கடிப்பார். சினத்தோடு சிரிப்பார். வெறி கொண்டவர் போல் குதிப்பார்'' என்று அணுஅணுவாக அனுபவித்து வர்ணிக்கிறார்.

பாரதி பேசத் தொடங்கும் முன் நிலவிய சூழல் குறித்தும், பேச அழைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்தவை குறித்தும் தனது கட்டுரையில் ஓவியமாகத் தீட்டியுள்ளார் யோகியார்.

""மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சுமுட்டும் முக்கடித் தமிழ்; அதுவரையில் பாரதி ஆடவில்லை- அசையவில்லை. சுவாஸம் விட்டாரோ என்னவோ, அது கூடச் சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது; மீசைமுறுக்கும் போதன்று வேறு யாதொரு சலனமும் கிடையாது. ஆனால் அவர் முறை வந்தது; எழுந்தார்... எழுந்தார் என்பது தவறு... குதித்தார். நாற்காலி பின்னே உருண்டது. பேச்சோ? அதில் வாசகசாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்கள் முக்கால் நிமிஷ முடிவுரை கூடப் பெறவில்லை. எடுத்த எடுப்பிலேயே "நான் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்' என்றார். அவ்வளவுதான். பாடலானார். அடாடா! அவர் பாடும் போது கேட்க வேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை இடியின் குரல், வெடியின் குரல், "ஓ ஹோ ஹோ' வென்றலையும் ஊழிக்காற்றின் உக்ர கர்ஜனை; ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக்குரல்"" என்று வியந்து வியந்து கண்ட காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் யோகியார்.

1921-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட சான்றோர்கள் தாம் கூறிய கருத்துகள் குறித்து விவாதித்து ஏகோபித்து அங்கீகரித்ததாகவும், பாரதியாரே பிறகு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட பெரிய வித்துவான்கள், பண்டிதர்கள், தேச பக்தர்கள் யாவரும் அதே ஈரோடு நகரில் உள்ள வாய்க்கால் கரையில் அடுத்தநாள் இன்னொரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகவும், அதிலும் பாரதியார் வந்து உரையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் அதற்குச் சம்மதித்து அக்கூட்டத்தில் "இந்தியாவின் எதிர்கால நிலை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

ஈரோடு நகரில் நடைபெற்ற இந்த இரண்டு உரைகளுக்குப் பின்னர் சென்னை சென்ற பாரதியார் வயிற்றுக் கடுப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு பெரும் துன்புற்றார். மேலும் மேலும் நலிவடைந்து செப்டம்பர் 11-ம் தேதி பின்னிரவு 1 மணியளவில் பாரதியின் உயிர் பிரிந்தது.

ஈரோடு நகரில் ஆற்றிய உரைதான் பாரதியின் இறுதிப் பேருரை! இந்தியாவின் எதிர்கால நிலையைப் பற்றியே எண்ணி எண்ணி வாழ்ந்த இம்மாபெரும் மனிதனுக்கு மரணமென்பதே இல்லை!

(இன்று மகாகவி பாரதியின் நினைவு நாள்)

கட்டுரை தருகிறீர்களா? உத்தமம் கருத்தரங்க (கொலோன், ஜெர்மனி) மின்மஞ்சரிச் சிறப்பிதழ்

நண்பர்களே:

வருகின்ற அக்டோபர் 23-25, 2009 கொலோன், ஜெர்மனி நகரில் நடக்க இருக்கும் தமிழ் இணைய மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் `மின்மஞ்சரி` ஒரு சிறப்பு இதழை தயாரித்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதோர், கருத்தாழமிக்க நல்ல கட்டுரைகள் வைத்திருந்தால் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள அழைக்கிறேன்.

உங்கள் கட்டுரையை உடனே எனக்கு அனுப்பி வைக்கக் கோருகிறேன். இக்கட்டுரை மின் வடிவிலும், அச்சு வடிவிலும் கருத்தரங்கில் விநியோகிக்கப்படும். கருத்தரங்க மலர் என்பதால் தரக்கட்டுப்பாடு கண்காணிக்கப்படும்.

நா.கண்ணன் ,

எனக்கு (naa.ganesan@gmail.com) அனுப்பி வைத்தாலும் மின்மஞ்சரி ஆசிரியர் குழுவுக்கு
அனுப்பி வைக்கிறேன். தமிழ்க் கணிமை பற்றியதான கருப்பொருளில் கட்டுரை இருக்கவேண்டும். உதாரணமாக,
1. Open source software and Localization
2. Tamil enabling in mobile phones
3. Machine Translation, OCR & Voice
recognition
4. Tools for Tamil Computing
5. Tamil Internet & Social Networking
6. E-Learning
7. Databases for Digital libraries
8. Digital archiving of Tamil heritage materials
9. Standards for Tamil Computing

http://www.infitt.org/

Press release about Tamil Internet Conference 2009

INFITT is pleased to announce that the next Tamil Internet Conference TIC 2009 will be held in Europe, at the Institute of Indology and Tamil Studies of the University of Cologne in Germany during October 23-25, 2009.

Tamil Internet Conferences of INFITT are major events for computer professionals and Tamil Diaspora working or interested in Tamil Computing- Information Technology and Tamil Internet Development in various areas. Tamil Internet Conference 2009 is the Eighth in the series, with earlier ones held in Singapore (1997, 2000, 2004) , Chennai (1999, 2003), Kuala Lumpur, Malaysia (2001), San Francisco, California, USA (2002). TIC 2009 will be the first conference to be held in Europe.

Institute of Indology and Tamil Studies (IITS), headed by Prof. Ulrike Niklas is one of the major Tamil Studies and Research Center of Europe. A Tamil teacher and researcher of IITS well known to Tamil community is Dr. Thomas Malten, who led a pioneering effort two decades back to bring Tamil literature in electronic form. IITS of U Koeln also has the unique distinction as the only Tamil Studies Center outside Tamil Nadu to have more than 60,000 Tamil books. So we are delighted to have the next TIC at this key Institution devoted to Tamil Research in Europe.

Tamil Internet 2009 Conference will have a number of technical sessions on Tamil Computing, IT and on Tamil Internet for two and half days. Attendance to the Technical sessions of the conference will be limited. Interested participants are encouraged to register online for this international conference at
http://www.infitt.org/ti2009/ or for details contact ti2009@infitt.org

Following are few topics that are to be addressed:
1. Open source software and Localization
2. Tamil enabling in mobile phones
3. Machine Translation, OCR & Voice
recognition
4. Tools for Tamil Computing
5. Tamil Internet & Social Networking
6. E-Learning
7. Databases for Digital libraries
8. Digital archiving of Tamil heritage materials
9. Standards for Tamil Computing

தமிழ் மரபு அறக்கட்டளை விழா, மயிலாப்பூர், ஆகஸ்ட் 30, 2009

phoca_thumb_l_souvenir2

முனைவர் நா. கணேசனுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org/) வழங்கிய ’மரபுச்செல்வர்’ பட்டம். 30ம் தேதி (ஞாயிறு) தமிழ் மரபு அறக்கட்டளை 8ம் ஆண்டு நிறைவு விழா சென்னை மயிலையில் கற்பகாம்பாள் நகர் கே. என். சண்முகசுந்தரம் அரங்கில் நடத்தியது.

விழா முழுக்க இங்கே கேட்கலாம்:
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=234&Itemid=316


வெண்பா விரும்பியின் வாழ்த்து!
(அறுசீர் விருத்தம்)

அறிவிருந்துந் தாயகத்தின் பண்பாடுங் கலைவளமும்
... அறிந்து கொள்ளா
வறியவருந் தனம்பெறுமா றையரைப்போற் பொருள்வழங்கு
... மரபுச் செல்வ
பொறியியலிற் புலவவளப் பொழில்வாய்ச்சி புவிக்கீந்த
... புதல்வ கையில்
எறியயிலேந் திறைதமையன் பெயரேற்ற நினக்கென்வாழ்த்
... தியம்பு வேனே.

ஐயர்=மகாமகோபாத்தியாய ஐயரவர்கள்
வானிலொரு காலூன்றி மரபிலொரு காலூன்றித்
தேனொத்த தமிழ்நூல்கள் சேகரித்து வலையேற்றும்
சேவையினைச் செய்’மரபுச் செல்வர்’நம் கணேசர்க்குப்
பாவழியே பாராட்டைப் பகர்ந்தவரை வாழ்த்துவனே!
~ அனந்தா


phoca_thumb_l_DSC06289

யுகமாயினி ஆசிரியர் சித்தன் அவர்களின் விழாத் தொடக்கவுரை


phoca_thumb_l_DSC06286

பெ. சு. மணி, இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணன், கடலோடி நரசையா


phoca_thumb_l_DSC06293

கடலோடி நரசையா ‘மரபுச் செல்வர்’ விருது பெறுகிறார்


phoca_thumb_l_DSC06295

ரா. ரத்தின சபாபதி (மேனாள் இயக்குனர், பல்லவன் போக்குவரத்துக் கழகம்) டாக்டர் நா. கணேசன் சார்பில் ‘மரபுச் செல்வர்’ பட்டயம் பெறுகிறார்

phoca_thumb_l_DSC06298

’வரலாறு’ அறிஞர் திவாகர் ‘மரபுச் செல்வர்’ ஆகிறார்

phoca_thumb_l_Mr.Indra Parthasarathy2

phoca_thumb_l_on Behalf of Dr.Ganesan

phoca_thumb_l_participants3

விழா அமைப்பாளரும், விருந்தினரும். கடலூர் டாக்டர் தி. வாசுதேவன், அண்ணா கண்ணன் (சென்னை ஆன்லைன் ஆசிரியர்), ...

விழாவைச் சிறப்புற நடத்திய தமிழ் மரபுக் கட்டளைக் குழுவினர் யாவர்க்கும் நன்றி!
நா. கணேசன்

The Hindu writeup on Tamil Heritage Foundation published on Aug. 20, 2009:
http://www.hindu.com/2009/08/20/stories/2009082051520200.htm

நிகழ்ச்சி அழைப்பிதழ்:
http://emadal.blogspot.com/2009/08/blog-post_25.html
இடம்: கே. என். சண்முகசுந்தரம் அரங்கம்
16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர், சென்னை - 600 004.
ஆகஸ்ட் 30, 2009. பிற்பகல் 2 மணி

இந்திரா பார்த்தசாரதி
திருப்பூர் கிருஷ்ணன்
பெ.சு.மணி
கடலோடி நரசய்யா
யுகமாயினி சித்தன்
புதுவை சுகுமாரன்
கடலூர் வாசுதேவன்
இலந்தை ராமசாமி
இன்னம்பூரார்
ஆர். தேவராஜன்
அண்ணா கண்ணன்
கீதா சாம்பசிவம்
திருவேங்கடமணி
...

போன்ற தமிழ்ப் பண்பாடு மீது அக்கறையுள்ளோர் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக்ஸ் சந்திரா (ஒளிப்படங்களுக்கு நன்றி)!

முனைவர் நா. கண்ணன் மின்தமிழ் குழுவில் விழா பற்றி எழுதிய மடல்:

மின்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் மரபுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

வழக்குகள் என்பவை நாம் உருவாக்குவதே!

தமிழ் அன்பகலா டாக்டர் கண்ணன் நடராஜன் தமிழ் மரபு அறக்கட்டளை உருவான நாளை "தமிழ் மரபுப் பெருநாள்" எனக் கொண்டாட மின்மடலிட்டார்.

மின்தமிழ் அன்பர்களுக்கு அது உவப்பாக இருந்ததால் இன்றிலிருந்து ஒரு புதிய வழக்கு (சம்பிரதாயம்) உருவாகிறது. எமது 8வது ஆண்டு நிறைவு விழாவை சென்னை மரபுச்செல்வங்கள் வருகின்ற ஞாயிறு அன்று நடத்த உள்ளனர்.

நம் வலைக்குரு (webmaster) சுபா சொல்லியபடி இன்றிலிருந்து ஞாயிறு வரை இடைப்பட்ட நாளில் தமிழ் மரபு காப்பிற்கு நாம் நம்மால் முடிந்த அளவு என்ன செய்கிறோம் என்பதை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். சிறுதுளிதானே பேராற்று வெள்ளம். உங்கள் சிறு, சிறு செய்கைகளைக் கூட மின் தமிழ் மதிக்கிறது. சரஸ்வதி பூஜை என்பது வேறு என்ன?

இவ்வாண்டு தொடக்கம் தமிழ்மரபு அறக்கட்டளை தமிழ் வளம் மின்னுலகில் நிலைபெற உதவும் தமிழர்களை இனம் கண்டு கௌரவிக்க உள்ளது. அவ்வகையில் மூவர் இவ்வாண்டில் சிறப்புப் பெருகின்றனர்.

1.
தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் 'கடலோடி' நரசய்யா. பெரும்பாலும் வயது ஆகும் போது சக்தி குறையும் என்பார்கள். இவர்கள் குடும்பத்தில் அதற்கு எதிர்மாறு ;-) நான் முதலில் இவரை சந்தித்த போது கணினி மூலம் தமிழை எவ்வளவு சிக்கலான முறையில் தட்டச்சு செய்யமுடியுமோ அவ்வளவு சிக்கலான முறையில், ஆனால் வெகு லகுவாகச் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு வார்ப்பின் மூலகுறியீட்டு முறையில் (பைனரி) அந்த எண்ணை மின்னேற்றம் செய்து கொண்டிருந்தார். அசந்துவிட்டேன். இந்த வயதில் தவழும் பிள்ளை போல் அவர் மின்னுலகில் தளிர் நடை பயில்வது மகிழ்வாக உள்ளது. உண்மையில் நரசய்யாவை வயதானவர் என்று சொல்லக்கூடாது, அவர் மாமா, சிட்டி சுந்தர ராஜன், 90 வயது. அவரை மின்னுலகப் பிரவேசம் செய்ய வைத்திருக்கிறார் பாருங்கள். அது சரித்திரம். சிட்டியாரின் முதல் வலைப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்று நடத்தியது மிக மகிழ்வான செயல். அன்னாரின் உதவியுடன் தமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் (1875) வலையேறி இருக்கிறது. சிட்டி மாமாவை நான் கடைசியில் சென்னையில் பார்த்த போது ஒரு குழந்தையின் வாஞ்சையுடன் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விஜாரித்தார். அதற்குப்பெயர்தான் தமிழ் அக்கறை என்பது! இந்த அக்கறை 90+ பெரியவருக்கு இருந்தது. அது நம் இளைஞர்களுக்கு வர வேண்டும்.

Chitti recollects - http://chitti.blogspot.com/
ஆதியூர் அவதானி சரிதம் (1875) - தமிழின் முதல் புதினம் (நாவல்) -
http://bharani.dli.ernet.in/thf/text/etext/etext.html

அது மட்டுமில்லை, நரசய்யா எனது களப்பணியில் என்னுடன் துணை நின்றார். உ.வே.சா நூலகத்தொடர்பை உருவாக்கி (நன்றி ஆண்டோ பீட்டர்) உதவினார். அதன் பின் தொடர்ந்து எம் மரபுக்காப்பிற்கு உதவி வருகிறார். இ-சுவடி மட்டுறுத்தர்களுள் ஒருவர். மின்தமிழ் ஆர்வலர். இவருக்கு 'மரபுச் செல்வர்' எனும் பட்டமளிக்கிறோம். ஞாயிறன்று நடைபெறும் விழாவில் அவர் கௌரவிக்கப்படுவார்.

2.
டெக்சாஸ் முனைவர் நா.கணேசன்!
மின்தமிழ் (மின்னுலகம்) நன்கறிந்த தமிழ் அறிஞர். மின்னுலகம் உருவாகி, அதில் தமிழ் நிலை பெற்ற காலத்திலேயே காலூன்றி தமிழ்ச் சேவை செய்து வருபவர். தமிழ் ஒருங்குறி கட்டமைப்பில் பெர்க்கிலி பல்கலைக்கழகத்துடன் இணைந்து 90களிலேயே தமிழ் மின்னுலகில் நிலைபெற ராஜபாட்டை போட்டவர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய தனியார் தமிழ் நூலகத்தை வைத்திருப்பவர். பல அரிய சேகரங்கள் இவரிடமுண்டு, 10,000 மேல்! தமிழ் மரபு அறக்கட்டளை உருவான காலத்திலிருந்து எம்முடன் துணை நிற்பவர். இப்போது நம்மையெல்லாம் இணைக்கும் வலைப்பதிவு மன்றம் 'தமிழ்மணம்' நிர்வாகஸ்தர்களில் ஒருவர். பல்பரிமாண பொறியியல் வல்லுநர் அவர். அவர் நம்முடன் துணை நிற்பது நமக்கு பலம். இப்பெரியவரையும் 30 தேதி 'மரபுச் செல்வர்' பட்டமளித்து கௌரவிக்க உள்ளோம்.

3.
'விஜயவாடா' திவாகர். மின்தமிழ் அன்பர்கள் அறிந்த பெயர். தமிழ் மரபின் கூறுகளை புதினமாக்கி இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் தமிழ் வரலாற்றுச் சிற்பி. மின்தமிழின் பரந்துபட்ட மின்னாக்க நோக்கை முதலிலேயே இனம் கண்டு, சிற்பக்கலை ஆர்வமுள்ள சிங்கப்பூர் விஜய் அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தியவர். இன்னும் முக்கியமாக பொன்னியின் செல்வன் ஆர்வலர் பேரவையுடனான நமது உறவை பலப்படுத்துபவர். மின்னாடற்குழுக்களுக்குள் பாலமைக்கும் வல்லுநர். நம் திவாகரை, 'மரபுச் செல்வர்' எனச் செல்லமாக அழைக்கிறோம். தமிழகத்தின் அயலகச் சூழலில் தமிழ் காப்பது அரிதான செயல். விஜயவாடாவில் தமிழ் மன்றம் காத்து, நம்மாவாழ்வாருக்கு விழாவெடுத்து தமிழ்ப்பணி ஆற்றுகிறார். இவரது அனுபவமும், உந்துதலும் த.ம.அக்கு வளம் சேர்க்கும்.

இன்னும் வரும்...

நா.கண்ணன்

--
"Be the change you wish to see in the world." -Gandhi