பாரதமாதா வடிவ உருவாக்கமும், பாரதியாரும்

மகாகவி பாரதியார் நினைவுநாள் (11 செப். 2009) தினமணிக் கட்டுரையைப் பாரதியில் ஆழங்கால் பட்டவர்கள் கூடும் சந்தவசந்தம் குழுவுக்கு அனுப்பிவைத்தேன் [1]. கவிமாமணி இலந்தையார், ஹரிகிருஷ்ணன், ... உட்படப் பலர் பங்கேற்று இழை வளர்ந்தது. பாரதியார் புதுச்சேரி குயவன்பாளையத்தில் செய்த பதுமையை மண்டயம் சகோதர்களிடம் பெற்று இன்றும் பாதுகாத்து வரும் திரு. ந. பாலு ஒளிப்படம் அனுப்பி வைத்தார். அப்படத்தை ஆராய்ந்ததன் விளைவுதான் இக்கட்டுரை.

ரா. அ. பத்மநாபன், சித்திர பாரதி, 1957. இரண்டாம் பதிப்பு: 1982, பாரதி நூற்றாண்டு விழா வெளியீடு: பொள்ளாச்சி நா. மகாலிங்கம்



பாரதியார் செய்த பாரதமாதா பதுமை (ந. பாலுவிடம் உள்ளது)


பாரதிதாசன் பார்வையில் பாரதி, ச சு இளங்கோவன்


மேலே இருக்கும் 3 படங்களைப் பாருங்கள். காலில் விலங்கு பூட்டி, கையைக் கன்னத்தில் முட்டுக்கொடுத்து, கூந்தலை முடியாமல் அவிழ்ந்து அலப்புறும் நிலையில் மவுலி தாங்கிப் பாரதமாதா நின்றகோலத்தில் இருக்கிறார்.

பதுமையில் குஜராத் அருகே கூர்ந்து கவனித்தால் சிங்கம் இருக்கிறது. எனவே துர்க்கா பரமேசுவரியின் அவதாரமாகச் செய்துள்ளனர் எனப் புலப்படும். இன்றும் பரவலாக அவ்வாறே பாரதமாதா வட இந்திய பாரதமாதா கோவில்களில் வடிவம் பெறுகிறாள். உதாரணமாக, நாசிக் நகரருகே கர்கோடி (Gargoti) கனிம (minerals) ம்யூசியத்தில் உள்ள பளிங்குப் பாரதமாதா சிலையைச் சொல்லலாம். மாமல்லையில் சிங்கத்தின் மீதமர்ந்து போரிடும் கொற்றவை அற்புதமான கலை உன்னதம் நினைவுக்கு வரும்.

தொல்பழங்கால இந்தியாவில் கொற்றவை ...

சிந்து சமவெளியிலும் கொற்றவை (பிற்காலத் துர்க்கை) உண்டு. அங்கே வாகனம் புலிதான். சிந்து சமவெளிக்கு 2000 ஆண்டுக்குப் பின்னர் புலி சிங்கமாக மாறினாலும், கொற்றவைக்குப் புலிவாகனமும் இன்றும் பழைய கோவில்களிலும், கலைகளிலும் இருக்கிறது விந்தைதான்.

முதன்முதலாய் பாரதமாதா - வங்காளத்தில்

கிரணசந்திர பந்தோபாத்யாயா 1873-ல் எழுதிய நாடகத்தில் பாரதமாதா எல்லா உடைமைகளையும் இழந்த நிலையில் வர்ணிக்கப்படுகிறாள். பாரதமாதா முதன்முதலாக 1866-ல் பூதேவ முக்கோபாத்யாயாவின் 19-ஆம் புராணம் என்னும் கேலிநாடகத்தில் (satirical drama) அதிபாரதி என்று உருவம் பெறுகிறாள். அதில் ஆர்யசாமி என்பவரின் விதவையாகக் கோலம் கொண்டாள் (இந்திரா சௌதுரி, The Frail Hero and Virile History, ஆக்ஸ்போர்ட், 1998. பக். 99).

பின்னர் பிரசித்தமான பங்கிம் சந்திர சேட்டர்ஜியின் 'ஆனந்தமடம்’ (1882) நாவலில் மா காளியான பாரதமாதா வென்றிப்பாவை துருக்கையாக இறுதியில் உருப்பெறுகிறாள். இதில் இடம்பெறும் வந்தே மாதரம் தோத்திரம் துருக்கையைப் புகழ்வதாக தாகூர் எழுதியுள்ளார்.

In his letter to Subhash Chandra Bose (1937) Rabindranath Tagore wrote, "The core of Vande Mataram is a hymn to goddess Durga: this is so plain that there can be no debate about it. Of course Bankimchandra does show Durga to be inseparably united with Bengal in the end, but no Mussulman can be expected patriotically to worship the ten-handed deity as 'Swadesh' [the nation]. This year many of the special [Durga] Puja numbers of our magazines have quoted verses from Vande Mataram - proof that the editors take the song to be a hymn to Durga. The novel Anandamath is a work of literature, and so the song is appropriate in it. But Parliament is a place of union for all religious groups, and there the song cannot be appropriate. When Bengali Mussalmans show signs of stubborn fanaticism, we regard these as intolerable. When we too copy them and make unreasonable demands, it will be self-defeating." (From Letter #314, Selected Letters of Rabindranath Tagore, edited by K. Datta and A. Robinson, Cambridge University Press).

20-ஆம் நூற்றாண்டில் பாரதமாதா சித்திரங்கள் ....

அவனீந்திரநாத் தாகூர் 1905-ல் தீட்டிய பாரதிமாதா இந்திய நவீன ஓவியத்தின் தொடக்ககாலப் படைப்பு. சாத்வினியாகக் காட்டப்படும் சரசுவதியின் அருகே வெள்ளைக் கமலங்கள் உள்ளன. கைகளில் அக்க மாலை, பனைஓலைக் கிரந்தம், பருத்தித் துணி, நெல்லம்பயிர் காணலாம். இச் சின்னங்களை விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா சிட்சை-தீட்சை-அன்னம்-வஸ்திரம் என்று விளக்கியுள்ளார்:
”A picture which bids fair to prove the beginning of a new age in Indian art." Sister Nivedita (Margaret Noble, an American) says: “In this picture...we have a combination of perfect refinement with great creative imagination. Bharat Mata stands on the green earth. Behind her is the blue sky. Beneath the exquisite little feet is a curved line of four misty white lotuses. She has the four arms that always, to Indian thinking, indicate the divine power. Her sari is severe, even to Puritanism, in its enfolding lines. And behind the noble sincerity of eyes and brow we are awed by the presence of the broad white halo.

Shiksha-Diksha-Anna-Bastra, the four gifts of the motherland to her children, she offers in her four hands. What [Tagore] sees in Her is made clear to all of us. Spirit of the motherland, giver of all good, yet eternally virgin.... The misty lotuses and the white light set Her apart from the common world, as much as the four arms, and Her infinite love. And yet in every detail, of "Shankha" bracelet, and close veiling garment, of bare feet, and open, sincere expression, is she not after all, our very own, heart of our heart, at once mother and daughter of the Indian land, even as to the Rishis of old was Ushabala, in her Indian girlhood, daughter of the dawn.”

Interestingly, Vac (Saraswathi) and Durga are related from Vedic times:
Parpola, Asko, (2000), Vāc as a Goddess of Victory in the Veda and her relation to Durgā, Zinbun, Kyoto University, 34, 2, pp. 101-143. The pdf file can be downloaded at
http://repository.kulib.kyoto-u.ac.jp/dspace/handle/2433/48782

நேதாஜியை ஆசீர்வதிக்கும் பாரதமாதா


இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் எம். எஃப். ஹுசேன் வரைந்த பாரதாமாதா. இங்கும் பராசக்தி என்று காட்ட விநாயகன், முருகனின் மயில் உண்டு. நித்தியமானவள் என்று காட்ட இமையமும், சந்திர சூரியர்களும். அமுத கலசத்திலிருந்து அருள்பொழிகிறாள். கடலும், கப்பலும், தண்டி யாத்திரையில் காந்தி உப்பு சத்தியாக்கிரகமும்.

பாரதியின் பாரதமாதாவுக்கு மூலமான வர்ண அச்சுப்படங்கள்

1907 ஏப்ரல் மாதம் ஆனந்த குமாரசாமி கல்கத்தா மாடர்ன் ரிவியூ இதழில் பாரத் மாதா என்று சிறுகதை எழுதியுள்ளார் (பக். 369 - 371). அதில் அடிமை விலங்கை உடைப்பதைத் தீர்க்க தரிசன வரிகளுடன் சிறுகதையை முடிக்கிறார்: ”And this tale is yet unfinished; but the ending is not afar off, and may be foreseen." பின்னர், 1920-ல் பாரதியின் குருநாதர் அரவிந்த கோஷ் இந்திய விடுதலை பற்றிக் குறித்தார்:
”... the Bharat Mata that we ritually worshipped in the Congress was artificially constructed, she was the companion and favourite mistress of the British, not our mother .... The day we have that undivided vision of the image of the mother, the independence, unity and progress of India will be facilitated."

பாரதியின் பாரதாமாதாவை மீண்டும் ஒருமுறை பார்ப்போம். திரு. ந. பாலு தந்துள்ள பதுமைப் படத்தின் அருகே உள்ள குறிப்பு மிக முக்கியமானது: “Terracota figure of composite unit of India, ... in the year 1916, during their exile at Pondicherry.

The Bharatamata idol, discretely smuggled to Madras and taken in procession during anti-British movements. Lost the Ceylon part which was in the form of a Lotus bud at the feet, during an encounter with the British Police."

கல்கத்தா அச்சகங்கள் பஜார் ப்ரிண்ட்ஸ், காலண்டர்கள், துணிப்பொதிகளில் அச்சிட்டு சித்திரங்களை இந்தியா முழுக்கப் பரப்பினார்கள். குரோமோ-லித்தோகிராப் தொழில்நுட்பம் இந்தியாவில் 1870களில் அறிமுகம் ஆனது. அதில் பாரதமாதா உருவகப் படம் முதன்முதலாய் ஆனந்தமடம் நாவலில் இருந்து கலை, தேசிய இயக்க சின்னமாய் அச்சானது. இந்தியாவில் சினிமா தோன்றாத காலம் அது. இவை சுமார் 1905-1910 வாக்கில் கல்கத்தாவில் அச்சேறத் தொடங்கின. 1920 வாக்கில் அச்சான பாரத மாதாவும், 1940களில் ஆமதாபாத் மில்லில் பயன்படுத்திய பாரதாமாதா படம் காணலாம்.

பாரதமாதா (1920s)


1940களில் துணிப் பொதிகளில் ஒட்டிய ஆமதாபாத் நியூ டெக்ஸ்டைல் மில்ஸ் பாரதமாதா வர்ணப்படம். பாதத்தருகே சிலோன் தாமரை மொட்டாக உள்ளது அவதானிக்கலாம்.


பாரதியார் ‘சுதேசமித்திரன்’ இதழில் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்தார். அவ்விதழின் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரின் தொடர்பால் அவருக்கு விடுதலையுணர்வு ஏற்பட்டது. இதன் பின்னர் 1905 இல் காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு பாரதி சென்று வந்தார். வரும் வழியில் கல்கத்தாவில் விவேகானந்தரின் உதவியாளர் நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரிடம் உபதேசம் பெற்றார். பாரதியாரின் வங்காள விஜயம் அங்கே வெளிவந்த பத்திரிகைகளாலோ, கலர் பிரிண்ட்ஸ் மூலமாகவோ அவருக்கு பாரதமாதாவாகத் துர்க்கையை அறிமுகப்படுத்தி இருக்கவேண்டும். 1909ம் ஆண்டிலேயே ”அரிமிசையே ஊர்வாள் அவள்” என்று பாரதமாதாவை துர்க்கையாகப் பாரதி பாட இந்த வங்கவிஜயம் தூண்டுகோல்.

பாரதமாதா துர்க்கை என்று வங்காளத்தில் 1880-களில் ஆனந்தமடம் நாவல் வழியாகப் பரவல் ஆயிற்று. 1870களில் க்ரோம்லித்தோக்ராப் அறிமுகம் ஆன தொழில்நுட்பம் அதை மேலும் மக்களுக்கு எடுத்துச் சென்றது. பாரதியின் சிலையிலிருந்து 1920 பாரதமாதா (கல்கத்தா) அச்சானதாய் தெரியவில்லை. உ-ம்: அவள் கையில் வைத்துள்ள திரிசூலம் - இது துர்க்கைக்கு உரியது. வங்காள இலக்கியம், ஓவியர்கள் கொடுத்த வடிவம் இது. முதலில் திரிசூலமாக இருந்தது காவிவர்ணக் கொடிக்கும், பின்னர் காங்கிரஸ் (கதர் ராட்டை) கொடிக்கும், அதன் பின்னர் தேசியகொடிக்கும் மாறுகிறது. பாரதியின் சிலை துர்க்கை திரிசூலம் காவி வர்ணக் கொடியாக மாறும் கட்டம். அச்சு அசலாக பாரதியின் பாரதமாதாவும், க்ரோம்லித்தோக்ராப்பும் இருப்பதைப் பாருங்கள். சிலோன் தாமரை மொட்டாக இருக்கிறது அல்லவா? மண்பொம்மைகளில் அப்படி வைத்தால் அது சற்றே கவனம் குறைந்தாலும் உடைந்து பிய்ந்துவிடும் என்பது எதார்த்தம்.

இந்திய துணைக்கண்ட வரைபடத்துடன் பாரதமாதாவைப் பொருத்தி முதல்முதலாய் வரைந்த வங்காளக் கலைஞர் யார்? நந்தாலால் போஸ், ஜைமினி ராய், ... போன்ற புகழ்வாய்ந்த சைத்ரீகரா? அல்லது, பெயர் தெரியா பஜார் ஓவியரா? எந்த அச்சகத்தில் அந்த வர்ண அச்சுப்படம் ஆனது? இந்த ஆய்வுக் கேள்விகள் சுவையானவை. விடையைத் தேடிக் காண்போம்.

க்ரோம்லித்தோகிராப்களுடன், வங்காளத்தில் 1885 - 1910 காலகட்டத்தில் வெளிவந்த பத்திரிகைகள் (வங்காளி, ஆங்கிலம் இரண்டையும்) தேடவேண்டும். சித்திரம் அதில் இருக்கும் என்று நம்புகிறேன். பாரதியார் குயவர் ஒருவரிடம் மண்பதுமை செய்தது நிஜம். ஆனால் வடிவம் அவர் செய்ததாகத் தோன்றவில்லை.

பேத்ரிஸ் ஆர்ட்ஸ் காலேஜில் வாத்தியார். அவர் கல்கத்தா ஸ்கூல் ஆஃப் ஆர்ட் மாணவரா? அப்போது சித்திரம் கற்பிக்கும் கல்லூரிகள் இந்தியா முழுக்க நாலோ, அஞ்சோ தான். அதில் உள்ள மூத்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிமாற்றங்கள் நிறைய. பாரதியார் பேத்ரிஸிடம் பாரதிதாசனுடன் போனதும் பாரதி சொல்ல, பேத்ரிஸ் உடனே ஒரு வங்க லித்தோக்ராப்பை, அல்லது வங்காள பத்திரிகையைக் காட்டியிருக்கலாம். அதை மண்வனைஞரிடம் கொடுக்க அவர் பதுமை இயற்றியிருக்க வேண்டும்.

லித்தோகிராப் வடிவங்களும் பாரதி பதுமையும் ஒன்றே. இது எப்படி ஏற்படும்?
(அ) பாரதியார் வடிவம் வங்காளத்தில் பரவி ஏற்பட்டிருக்கவேண்டும்
அல்லது
(ஆ) பேத்ரிஸ் தான் பார்த்த லித்தோக்ராப் அன்றேல் வங்க பத்திரிகை சித்திரம் காட்ட அதைக் குயவரிடம் பாரதி கொடுத்துச் செய்திருக்கவேண்டும்.

எல்லாவற்றையும் வைத்து யோசித்துப் பார்க்கையில் எனக்கு (ஆ) சாத்தியம் அதிகம் என்று படுகிறது. அதாவது, பாரதி வங்க மூலத்தை கொடுத்து வனையச் சொல்லியுள்ளார் என்றே தோன்றுகிறது.

மேலும் ஆராய்வோம்.

நா. கணேசன்

References:

(a) Erwin Neumayer, Christine Schelberger
Bharat Mata: India's Freedom Movement in Popular Art, 2007
http://www.exoticindiaart.com/book/details/IDK130/

(b) Erwin Neumayer, Christine Schelberger
Popular Indian Art : Raja Ravi Varma and
the Printed Gods of India, OUP, 2003
http://www.thehindu.com/thehindu/mag/2003/08/17/stories/2003081700160200.htm

(c) Christopher Pinney,
Photos of the Gods: The Printed Image and
Political Struggle in India, 2004, London.

(d) Uberoi, Patricia. "From Goddess to Pin-Up:
Feminine Icons in Indian Art." Art Asia Pacific, 1997.

(e) Uberoi, Patricia, Feminine identity and national ethos in Indian
calendar art, Economic and Political Weekly, 1990.

(f) Slow dies the calendar art , The Hindu, 15 July 2005
http://www.hinduonnet.com/thehindu/fr/2005/07/15/stories/2005071501550300.htm

(g) Deepa S. Reddy
Religious identity and political destiny, 2006

(h) Sumathi Ramaswamy
Maps, Mother/Goddesses, and Martyrdom in Modern India
The Journal of Asian Studies (2008), 67:819-853.

3 comments:

KAVIYOGI VEDHAM said...

அற்புதம் அய்யா! கணேசன்...உமது பெயருக்கேற்ப ஆய்வுத் தும்பிக்கையால் பல ஆதாரங்களையும் துளைந்தெடுத்து எங்கட்குப்பரிமாறியுள்ளீர்.. வாழ்க உம் புலமை,அன்பு.பணி,
யோகியார்

கண்மணித்தமிழ் said...

அருமையான பதிவு

SETHUPANTHANAM said...

சிறப்பான பதிவு. மேலும் விரியட்டும், ஆய்வுச் சிறகுகள்!