இளைஞர்களை அறிவியலுக்கும், கணினிகளுக்கும் உந்திய கவர்ச்சியான தமிழின் சொந்தக்காரர் சுஜாதா (ஸ்ரீரங்கம் ரங்கராஜன்) திருநாட்டுக்கு இன்று எழுந்தருளினார். அன்னாரின் திருமதி அவர்களுக்கும், மக்கள் கேசவபிரசாத், ரங்கபிரசாத் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
எழுத்தாளர் சுஜாதா வாழ்க்கைக் குறிப்பு காண்க.
வணக்கத்துடன்,
நா. கணேசன்
மதியம் புதன், பிப்ரவரி 27, 2008
அமரர் சுஜாதா
Posted by
நா. கணேசன்
at
2/27/2008 06:37:00 PM
Subscribe to:
Post Comments (
Atom)
2 comments:
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய வாசகர்களுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
நீங்கள் தொகுத்தளித்த வாழ்க்கைக்குறிப்பில் பல விஷயங்களை அறிந்துகொண்டேன்.
நன்றி.
வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.
Post a Comment