ஒரு தமிழ்நாட்டுக் கல்லூரி வலைப்பதிவர் பட்டறைப் பயிலரங்கம் வலையொளிபரப்பு ஆவது தமிழ்க் கணிமை வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இன்னும் பல கணிப் பயிலரங்குகள் கல்லூரிகளில் இருந்து நேரடி ஒளிபரப்பாகி இணையத் தமிழ்மணம் கமழச் செய்ய தமிழாசிரியர்களுக்கு வேண்டுகோள்!
தமிழர்கள் இணையத்தில் வலையாடப் பல்லாண்டுகளாய் உதவிவரும் பழைய குழுமம் தமிழ்-உலகம். அதன் மட்டுறுத்துனர்களில் ஒருவரான ஆல்பர்ட் பெர்னாண்டோ சங்கமம் குழுவினரால் வலையொளிபரப்புச் செய்ய ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள். அருமை நண்பர் ஆல்பர்ட் அவர்களுக்கும் கேஎஸ்ஆர் தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கும் இந்நிகழ்ச்சியைத் தமிழ் கூறும் நல்லுலகம் உலகெங்கும் கண்டுகளிக்க வாய்ப்பளித்தமைக்காக என் நன்றிகள்!
திருச்செங்கோடு தமிழ் இணையப் பயிலரங்கு பற்றிய செய்தி:
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=856&Itemid=31
நிகழ்ச்சியின் புகைப்படங்கள்:



Thanks for the info. The broadcast is on.
ReplyDelete