கொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.
Friends, There is Nanban Enterprise, they teach a financial strategy
(for free) to grow your money in your account. Nanban Foundation is a
non-profit organization tasked with providing free, high-quality
financial education to all. Every quarter, Nanban Foundation conducts
webinars that offer the opportunity to learn GK Level-1 and Level-2
strategies for free. By the end of the webinars, participants can
immediately apply the strategies to their own accounts in order to
generate cash flow. Our vision is to bring “complete financial freedom”
to our Nanbans and celebrate the journey together.
Upcoming GK Strategy Level 1&2 Webinar Info : DATE > JAN 22nd 23rd, 29th & 30th of 2022 TIME > 11AM CST ( 3 hours each day of the 2 weekends.) *Please click the below link to join our Telegram interest group:* https://t.me/+pcr6k41p4os2MGMx
There is Nanban Enterprise (Dallas, TX) run by three - S. Gopalakrishnan (GK), Mani and Sakthi in Dallas. The Fund Factor | GK Strategies for Generating Consistent Passive Income Please listen to GK, https://youtu.be/KyKkcsELMOw How GK financial strategy won more than 25,000 people’s confidence? https://www.youtube.com/watch?v=3tSUGScBPn4 Making A Killing With Index, Options, and The AND Asset with CEO of Nanban Investments https://www.youtube.com/watch?v=lXsvLwzVyxw
Arun Ponnusamy interviews GK, https://www.youtube.com/watch?v=3tSUGScBPn4 Mr. Gopala Krishnan (GK) will share his story on how he started Nanban Enterprise and impacting 1000s of families with his FREE investment strategy education and helping busy people get high returns through his proven strategy.
There
is an India team teaching GK strategy to do the same strategy in Indian
stock market. Attending this Webinar is needed to take that Webinar
class also.
Please share with your family and friends, as this will help grow their savings. Thanks!
This is an important Vaamanakkal inscription found in Kundur near Trichy. Engineer Tiru. S. C. Bose published it in Pazhangkaasu journal edited by Prof. M. Rajasekara Thangamani (Dept. of History, Karur Arts College). Note the Vaamana Trivikrama with an umbrella of Rgvedic Brahmins (Cf. Nambuthiris of Kerala) made of pandanus leaves (thaazangkuDai), Vaamana wears a panchakaccam veshTi, holds a kamaNDalam and sports puuNuul/yagnopavitam in his chest. This paper is from 2001, subsequently more Vaamanakkal boundary stones with and without writing have been discovered.
Thanks to Sri. S. C. Bose for sending me this important find. ~N. Ganesan
[திருவாரூரில்
(2. 3. 1969) கும்பம் 16 அன்று தொடங்கி நடந்த திருவள்ளுவர் ஈராயிரமாண்டு விழாவில்
முதல்நாள் நடந்த பாட்டரங்கத்தின் தலைமையுரை. கனிச்சாறு - எட்டாம் தொகுதி.]
பேரன்புடைய
பெரியோரே! தாய்மாரே!
சீரன்பு கொண்டிருக்கும் மாணவச் செல்வங்காள்!
பாட்டரங்கம் ஏறவந்த பாவலர்காள்! அன்பர்காள்!
கூட்டிருக்கும் ஆவி குழைய வணங்குகிறேன்.
அன்ன
பெரும்புலவர்க் கான்ற திருவிழவில்
என்னை, சிறியேனை, எற்றுக்கும் பற்றாத
துன்னுஞ் சிறுதுரும்பைத் தூணென்று கொண்டது போல்
மன்னும் பெருவிழவின் மன்றத் தலைவனெனக்
கொண்டு புகழ் கொண்டீர் கூற்றிற் குறைபொறுப்பீர்!
தொண்டே எம் வாழ்வெனலால் தோல்வியும் எம் வெற்றியன்றோ?
கல்லாத
நூலில்லை; கண்ட அறம் பல்கோடி!
என்றாலும் நாமோ இருந்தபடி யேயிருப்போம்!
குன்றாத செல்வம்! குலையாத நல்விளைவு!
தெய்வங்கள் கோடி! திருவிழா பல்கோடி!
மெய்யாக எண்ணுங்கள்! மேன்மை அடைந்தோமா?
என்ன நிலையால், என்ன நிகழ்ச்சியினால்
என்னபடி நாமுயர்ந்தோம் என்றே உரைப்பீர்கள்?
நாம்பெற்ற நாகரிகம் எல்லாம் அயல்நாட்டார்
தாம்கண்டு ஈந்த தவப்பயனா இல்லையா?
இத்தகைய
அன்பெங்கே? இற்றை அறமுண்டா?
பொத்தகத்துள் அல்லாமல் போக்கினிலே பண்புண்டா?
எங்ஙன் பயன் கிடைக்கும்? ஏனிவ் விழிந்தநிலை
உங்கள் மனமழுந்த எண்ணி உரைத்திடுங்கள்!
வள்ளுவரைக் கொண்டாடி வான்முட்டப் பேசிடுவோம்!
கொள்ளளவே அவ்வுரையை நம்முளத்துக் கொண்டோமா?
Role of Two Tamils in Indic Computing:IIT, Kanpur was formed as a pioneer engineering institution with a model quite different from traditional engineering colleges under the Indian university system. The consortium model was advocated by the first director, Dr. P. K. Kelkar in 1960. Prof. P. Kashinath Kelkar was instrumental in securing USA's technical collaboration in the
establishment of IIT Kanpur, by persuading the then USA ambassador, John Kenneth Galbraith to locate the fledgeling institution on the outskirts of Kanpur, in North India. Just a fresh PhD from University of Minnesota, Prof. M. Ananthakrishnan joined the IIT, Kanpur in Civil Engineering department. In his late years played a role in making the Unicode encoding the only encoding for Tamil in the internet, by convincing the Tamil Nadu government. This happened in 2010 at the World Classical Tamil Conference, Coimbatore. Prior to that, I was also involved in all of INFITT proposals to improve Tamil in Unicode, originally modeled on ISCII. ISCII was developed by Prof. Vai. Rajaraman, IIT, Kanpur and his students.
"Both Rajaraman and Mahabala had obtained their computing education on the fly, without formal training. They subsequently spent time at leading centers of academic computing in the United States under the auspices of the Kanpur Indo-American Program—Rajaraman at UC Berkeley and Mahabala at MIT. Despite their extensive experience in U.S. universities, the program they conducted at Kanpur was much different than those conducted in the United States. Rajaraman and Mahabala undertook research, but their focus was teaching—teaching not only IIT students, but education more broadly. Rajaraman, who came to be recognized as the leading figure in computing education in India, wrote an introductory textbook on programming and usage in 1969 and later authored books on FORTAN and COBOL programming. While Rajaraman and Mahabala published research, they never specialized narrowly. Instead they covered a wide range of areas and acted to facilitate Indian computing in whatever ways were necessary." (from Ross Bassett, Aligning India in the Cold War Era: Indian Technical Elites, the Indian Institute of Technology at Kanpur, and Computing in India and the United States. Technology and Culture, Volume 50, Number 4, October 2009, pp. 783-810)
Soon after the five IITs were set up, Prime Minister Pandit Jawaharlal Nehru had realized that to keep pace with the ever changing world of science and technology, it is necessary to collaborate closely with the outside world. The Kanpur Indo-American Programme (1962-1972) at IIT-Kanpur was a stride in this direction. Now India is a powehouse in software of about ~ 200 billion $. Here, I include two rare photos of PM Nehru's visit to USA in November, 1961. It was during this visit that American academic collaboration was consolidated with Govt. of India officials.
பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் - மலரஞ்சலி: --------------------------------------- தமிழுக்கு
யூனிகோட் எழுத்துரு என்னும் ஐஎஸ்ஓ தரப்பாடு உருவாகியதால் தான் இன்று
திறன்பேசிகளிலும் நல்ல முறையில் தமிழ் இயங்குகிறது. இந்தியாவின் பாரிய
லிபிகள் யாவும் ISCII (https://en.wikipedia.org/wiki/Indian_Script_Code_for_Information_Interchange ) என்னும் தரமுறையில் முதலில் ஒருங்கு குறியீட்டை அமைத்தனர். ISCII ஏற்பட, பேரா. வை. ராஜாராமன் ( https://en.wikipedia.org/wiki/Vaidyeswaran_Rajaraman
) போன்றோர் காரணர்கள். இன்றும், பேரா. ராஜாராம் எங்கள் ஐஐஎஸ்சி
கம்ப்யூட்டர் லேபுக்கு (வெங்காலூர்) வருகிறாராம். அண்மையில் மறைந்த பேரா.
மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைந்த உத்தமம் (http://infitt.org)
ISCII வழிவந்த யூனிகோட் தரப்பாட்டை மேம்படுத்தியது. யூனிகோட் நிறுவனம்
ஏற்றுக்கொண்ட தமிழ் புரப்போசல்கள் எல்லாவற்றிலும் என் பங்கு உண்டு. என்
மடல்களுக்கு ”Brilliant" எனப் பதில் எழுதுவார். அவரும், நானும் எண்ணற்ற
பலரும் பயின்ற அண்ணா பல்கலையில், பேரா. வா. செ. குழந்தைசாமி பரிசு நான்,
பிரேமா நந்தகுமார், சலபதி - (ரூ. ஒரு லக்ஷம் ஒவ்வொருவர்க்கும்) பெற்றபோது
வந்து ஆசீர்வதித்தருளினதை மறக்கவியலாது. தமிழில் பிரணவ மந்திரத்தை
வெள்ளுரையில் ஓர் எழுத்தாக எழுத யான் எழுதிய ஆவணம்: ஐஎஸ்ஓ தளத்தில் http://std.dkuug.dk/jtc1/sc2/wg2/docs/n3119.pdf ; அதுவே, யூனிகோட் தளத்தில் https://www.unicode.org/L2/L2006/06184-tamil-om.pdf பாரதியார்
பாடலில் ௐ இருப்பதைக் காட்டியிருந்தேன்: ௐசக்தி ௐசக்தி ௐசக்தி. ௐசக்தி
பத்திரிகையில் வெளிவர தமிழ்ப் புரவலர் அருட்செல்வர் நா.ம. உதவினார்.
2007-ல் எழுதி இருந்தேன்: https://groups.google.com/g/mintamil/c/ynsHZ-zap2M/m/0aTBiHlV7jUJ தமிழ்நாட்டிலே,
கோயிற் கருவறைகளிலும், டி-சட்டைகளிலும் இந்தி ௐ போட்டுக்கொண்டு திரிவது
பரவிவருகிறது. தமிழ் ௐ நிலைப்படுத்த சில முயற்சிகளை மேற்கொண்டோம். முக்கியமாக,
யுனிகோடில் வைத்துவிட்டால் வரும் தலைமுறைக்கு மறக்காதல்லவா? இதில்
வெற்றியும் கிடைத்துள்ளது, இந்தி ௐ என்பதற்கு சரிநிகர் சமானமாகத் தமிழ்
ௐ-உம் காலமெல்லாம் விளங்கும். ஹூஸ்டன் மீனாட்சி ஆலயத்தில், மதுரை
சிவாச்சாரியர்கள் பழைய தமிழ் அருச்சனை செய்வர். மீனாட்சி அர்ச்சனை, ௐ
எழுத்துடன், http://nganesan.blogspot.com/2011/04/meenakshi-tamil-archanai.html தமிழ்நாட்டுக் கோவில்களில், பேரூர் திருமடம், குன்றக்குடி அடிகளார் எடுத்த முயற்சிகளால் தமிழ் அர்ச்சனை ஏற்பட்டது.
மு.
ஆனந்தகிருஷ்ணன் ஐயா மறைவால் தமிழ்க் கணிமைத் தேவைகளை அரசாங்க
மந்திரிகளுக்கு தெரிவிக்கும் ஒரு நல்ல எஞ்சினீரை, நெறியாளரை நாங்கள்
இழந்தோம்.
பிராமி லிபியை யூனிகோடில் எழுதும்போது தொல்காப்பியர் தரும் தமிழ்-ப்ராமிப் புள்ளி/விராமம்:
இப்போது
யூனிகோட் டெக் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டு, பிராமி லிபியில் தமிழ்
எழுத ஆறு எழுத்துக்கள் தனி கோட்பாய்ண்ட் பெறுவதில், தொல்காப்பியர் கால
நிர்ணயம் (கி.பி. 2-ம் நூற்றாண்டு, ஐராவதம் மகாதேவன், ஹார்வர்ட் பல்கலை
தமிழ் எபிகிராபி நூல்) செய்யும் தமிழ் பிராமிப் புள்ளியை அநுஸ்வாரத்துடன்
சேர்த்துவிட்டார்கள். அது வேண்டாம், தனியாக தமிழ் பிராமிக்குப் புள்ளி
வேண்டும் எனக் கேட்டிருந்தேன். ஏற்றுக்கொண்டு, இனி தொல்காப்பியர் புள்ளி
தமிழ் பிராமி இலிபியில் தமிழை இணையத்தில் பொறிக்க ஒருங்கு குறியீட்டில்
இயங்கும். யூனிகோட் டெக் குழுவில் இன்று எழுதினேன்:
Just taking a
look at the six characters (L2/19-402) to represent Tamil language in
the Brahmi fonts of Unicode. They are encoded from Unicode 14.0 onwards.
This will enable those who want to write Tamil in Brahmi script. The
Beta Review Draft the new Tamil Brahmi characters are at, https://www.unicode.org/charts/PDF/Unicode-14.0/U140-11000.pdf
Back
in the year 2012, I mentioned the problems of LLA in Northern Brahmi
and in Tamil Brahmi and their origin and evolution being quite
different. Now, I am glad that Tamil Brahmi characters are getting
encoded atomically: http://unicode.org/L2/L2012/12165-brahmi-lla.pdf Just
taking a look at the six characters (L2/19-402) to represent Tamil
language in the Brahmi fonts of Unicode. They are encoded from Unicode
14.0 onwards. This will enable those who want to write Tamil in Brahmi
script. The Beta Review Draft the new Tamil Brahmi characters are at, https://www.unicode.org/charts/PDF/Unicode-14.0/U140-11000.pdf
நவ்வி மரை (Chinkara Antelope) – சங்க இலக்கியத்தில் Abstract: 'navvi', the name of the Chinkara anteope in Tamil Sangam literature is analyzed. 'marai' is the name for antelopes in Tamil, as ‘tiruku-marai’ is spiraling screw in Tamil. The defining feature of “marai” (= antelope) is that their horns are screwed in to their skulls always. On the other hand, for deer, the branching antlers 'kavaik kōḍu' are shed and then the antlers regrow each year. Tolkāppiyam sūtra-s relevant to the deer and antelope species are discussed.
மரை (antelope):
கலை - கருமை நிறத்தால் வரும் பெயர். Kalai, due to black color, is applied both for antelopes (Blackbucks) as well as deer (Sambur). கலைமானில் இருவகை: (i) மரை (=antelope) இனத்தில் இரலைக்கு வரும். மரை எனும் பெயர் கொம்பு மண்டையோட்டில் நிரந்தரமாய் இருப்பதால். ‘அவனுக்கு மரை கழன்று போனது’, மரையாணி (=திருகாணி), மரையாடு (=கேழையாடு, muntjac) (ii) மான் (deer) இனத்தில் கடமானுக்கு வரும். கடமான் கலை நிறத்தில் (=கலங்கிய கரு நிறம்). சங்க இலக்கியத்தில் கலை என்ற சொல்லை ஆராய்ந்த தெளிவு இஃது. 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்). இரலை (Cf. இருள்) = Blackbuck [Ref. 1]. புல்வாய் = மரை (antelopes) + கலை (deer, esp. Sambur = kalaimān); பொதுப்பெயர். புல்வாய் இப்போது நாம் மான் என்று உபயோகிக்கிறோமே, அப்பொருளில் வழங்கிய பழம்பெயர்: pulvāy, an all encompassing term for deer and antelopes (Tolkāppiyar says so.)
தொல்திராவிடர்கள் வைத்த கலைச்சொல்: மரை = antelope. மரையா/மரையான் (lit. “cow-like antelope”, Nilgai), கன்னடத்தில் மராவு, மரவி என்கிறார்கள். ஆக, antelope என்பதற்கு மிகப்பழைய த்ராவிட வார்த்தை ‘மரை’ என்பது உறுதி.
For representative, typical species in zoology, we see the scientific names repeated twice: Axis Axis deer (puḷḷi mān), Gazella Gazella (African gazelle) etc., https://en.wikipedia.org/wiki/List_of_tautonyms#Mammals அதுபோன்ற நூற்பா மேற்சொன்ன தொல்காப்பிய நூற்பா ஆகும். தமிழகத்தில் உள்ள Antelopes-ல் சிறந்த இரலை-யும், Deer-ல் சிறந்த கடமானையும் குறித்து, புல்வாய் என்பது இரண்டையும் சேர்த்த பொதுப்பெயருள் அடங்கும் என்கிறார்: 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்). பல இடங்களில் மனிதன் என்றால் பெண்ணையும் சேர்த்துத்தான். அதுபோன்ற சூத்திரம். Mankind என்றால் பெண்ணும் உளப்படத் தானே.
பின்னர், இருபாலுக்கும் பொதுவான பெயர் கொண்ட நவ்வி (chinkara), உழை (spotted deer) இரண்டுமே புல்வாய் என்பதாகவும் ஒரு சூத்திரத்தில் சொல்கிறார். அதாவது, இங்கே முன்னர் சொன்ன ராஜ-மரை (representative antelope) ஆகிய இரலை, ராஜ-மான் (representative deer) ஆகிய கடமான் இரண்டையும் விட்டுவிட்டு நவ்வி மரை + புள்ளிமான் இரண்டும் புல்வாய் என்கிறார். இது பேராசிரியர் உரையால் தெரிகிறது. ”தொல்காப்பிய மரபியலில், “யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே” என்று வரும் சூத்திரத்திற்கு (தொல்-மரபு-12) உரை கூறும் பேராசிரியர் ’நவ்வியும் உழையும் புல்வாயும் அடங்குமன்றே. அவற்றை மூன்றாக ஓதியதேன்?’ என்று தாமே கேள்வி கேட்டு விடை கூறுவது போலப் புல்வாயில் மடனுடைய நவ்வி யெனவும், இடைநிகரன உழை எனவும் கொள்க என்று எழுதுகிறார்.” (பி. எல். சாமி).
இரண்டு சூத்திரங்களாலும் புல்வாய் என்பது பொதுப்பெயர். சில இடங்களில் சிறப்புப் பெயராக இரலைக்கும் வரும் என அறியலாகிறது. கலை என்பது கருமை நிறம்பற்றின பெயர். இது கடமானுக்கும், இரலைக்கும் பெயராக சங்க இலக்கியத்திலும் பின்னரும் வரும். மரை (Antelope) நிலையான கொம்புகள் பொருந்தியவை. ஆனால், deer உள்துளை உள்ள "அறுகோடு" (deer's antlers) ஆண்டுதோறும் விழுந்து முளைப்பவை, கவைகள் (branches) கொண்டவை. கலைமான் என்னும் கடமானுக்கும், புள்ளி மானுக்கும் உள்ள கவைக்கொம்பு அறுகோடு (வினைத்தொகை) என்கிறது சங்க இலக்கியம். கலை என்னும் கடமாவின் கவைக்கோடு போல புள்ளிமானுக்கும் உண்டு. சங்க நூல்களில் கலைக்கு முன்னே புகர் (அ) புள்ளி எனக் குறிப்பிட்டிருந்தால் அந்த மான் Axis deer (புள்ளிமான்). புள்ளிமா கருமை இல்லையே, ஏன் கலை என்றனர் என்ற கேள்வி எழலாம்: எண்ணெய் (எள் +நெய்) மற்றவற்றிற்கும் எண்ணெய் (Oil) ஆவது போல. கலை கருமையால் இரலைக்கும், கடமாவிற்கும் முதலில் உருவாகி, புள்ளிக்கலை என்று பொருள் விரிந்தது. அராகம் என்று மனத்தைப் பண்படுத்தும் பண் சிவப்பு நிறத்தால் ஏற்பட்டு, மற்ற எல்லா நிறங்களுக்கான பண்களுக்கு பொதுப்பெயர் ஆக இசையில் ராகம் என்று ஆனாற்போல எனக் கொள்க (Cf. Rāgamālā paintings). உழை என்பது புள்ளிமானுக்குப் பெயர். உழுகிற உழவுக் காலத்தில் (before sunrise, until sun gets hot) மேயும் புல்வாய் இது. தொல்லியல் அகழாய்வுகளில் மான் கொம்புகள் கலப்பையின் கொழுவாகப் பயன்பட்டமை கிடைக்கிறது. கலூஉழ் என்பது கலூஷ (Th. Burrow), திருவிழாவை திருவிஷா எனல், சூரியன் ஒரு நட்சத்திரத்தில்/ராசியில் வீழ்வது விழு (>> விஷு, ஸம்ஸ்கிருதம், மலையாளம்), இதனால் விழவு/விழா எனப்பெயர்கள். இவற்றை எல்லாம் நோக்குங்கால், உழை “மான் மேயுங் காலம், உழவன் உழுங் காலம்” என்பது உஷத் காலம் என ஸம்ஸ்கிருதம். இக் கருதுகோளை உறுதிப் படுத்த ஆப்கானி, பாரசீக மொழிகளில் உஷத் காலம் இல்லையா எனப் பார்க்கணும்.
நாவு/நவ்வு என்பதன் பொருள் அங்குமிங்கும் அசைதல். நாவு- < நேமி/நேம்பு- (Cf. நேமிநாத தீர்த்தங்கரர்) இதில் இருந்து நவ்வி என்ற சிறிய (நுண்ணிய), மடம்பொருந்திய, எழில் மரைக்கான பெயர் தோன்றியிராது. அப்படிப் பார்த்தால் நவ்வி என்பது எல்லா மானுக்கும் பொருந்தும் பொதுச்சொல் ஆகிவிடும். சங்க இலக்கியம் தெளிவாக நவ்வி/நௌவி என்றால் Chinkara மரைக்கே பொருந்தும் எனக் காட்டுகிறது.
கோவை/கொவ்வை கனி, மோது-/மொத்து- ... போல, நூவு/நுவ்வு என்றால் எள், தினை எனும் நுண்கூலங்கள் என அறிவோம். எனவே தான் மரையா/ன் (= Nilgai, மாடு போன்றது), இரலை (Blackbuck, Ref. 1) போன்ற மரைகளை விட, அளவில் சிறுத்ததும், அழகுடையதுமான மரைக்கு நுவ்வி என்ற பெயர் ஏற்பட்டு, சங்க காலத்தில் நவ்வி என மாறிற்று என்ற கருதுகோள் வலுப்பெறுகிறது. விவசாயம், மக்கட்டொகை பெருக்கத்தால், நுவ்வி/நவ்வி மரையினம் தென்னிந்தியாவில் அழிந்துவிட்டது. யா என்னும் (ராஜ)சாலம், அகில் போன்ற மரங்கள் இன்று தென்னிந்தியாவில் இல்லை. அதுபோன்றதுதான். முதலைகளில் மூன்று இனங்கள் என்பார் பேராசிரியர் உரையில்: “மூன்று சாதிகள்”. இன்று அவை தமிழ்நாட்டில் இல்லை: முதலை, இடங்கர், கராம். மகர இனங்களில் விடங்கர்/இடங்கர் (Gharial) இல்லை, கராம் “உவர்நீர் முதலை” கடற்கரையில் இல்லை. அதுபோல் தான் நுவ்வி/நவ்வி மரையும் அருகிற்று. புல்லி > பல்லி போல, நுவ்வி > நவ்வி.
Ref. 1: இரலை ரோஹிணீ நக்ஷத்ரத்தின் சின்னமாக 4700 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய வானியலில் இருந்தமை பற்றி ஆராய்ந்து அறிவித்துள்ளேன். This Blackbuck as the mount/symbol of Koṟṟavai (< kol-), later Durgā, has an amazing continuity in Tamil country: http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html
சங்க நூல்களிலும், பின்னரும் நவ்வி மரை: நவ்வி (= Chinkara) நளினம் மிக்க மரை இனம் இது. வட நாட்டில் மெலிசாகத் தும்முவது என்ற பொருளில், சிங்காரா எனப் பெயர். இக்கட்டுரையில் உள்ள காணொளியில் நவ்வி மரை தும்மக் காணலாம். நவ்வி/நௌவி மரையைத் தும்முமரை, தும்மு செம்மரை என்றலும் பொருத்தமே. கருமரை என்பது இரலை. கருமரை பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் புராணத்தில் ஆளப்பெற்ற பழைய பெயர். செம்மரை என்பது நவ்வி. https://en.wikipedia.org/wiki/Chinkara இந்த மரையைச் “சிறுதலை நவ்வி” என்றார் சங்கப்புலவர். “நாறு உயிர் நவ்வி” என்பதும் சங்கம். நாறு உயிர் = தும்முவது போல மூச்சு விடல். இங்கே, உயிர் = மூச்சு. எதற்கும் அஞ்சித் தாவும். இந்த நவ்வி மரையைப் பெண்களுக்கு உவமை கூறுவர்.
கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக, வரும் பாடல் முரஞ்சியூர் முடி நாகராயர் பாடல். புறநானூற்றின் மிகப் பழைய பாடல்கள் முதலில் கோக்கப்பட்டுள்ளன. எனவே, புறம் முதலாம் பாடலில் பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்த உதியன் சேரலாதனைப் போற்றும் பாடல். இதில் தான் முதன் முதலாக, அச்சமும், மடப்பமும் உடைய நவ்வி மரை பற்றிச் சங்க இலக்கியங்களில் பேசப்படுகிறது. நான்மறை அந்தணர்கள் வேள்விகளை இமயமலைச் சாரலில் வேட்கின்றனர். குளிர் காய்ந்து நவ்வி மரையின் பிணை (பெண்மான்) துஞ்சுகின்றனவாம். மரையான் (Nilgai), இரலை (Blackbuck), மரையாடு (கேழையாடு, Muntjac), நாற்கோட்டு மரை (Chousinga), சருகுமான் (mouse deer), கலை (Sambur), புள்ளிக்கலை (Spotted deer) இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, துடுக்குற்று திடுமென்று பாய்ந்து தாவி ஓடிவிடும் நவ்வி மரைகளைச் (Chinkara antelope) முடி நாகராயர் பாடியிருப்பது பாடலின் சிறப்புகளில் ஒன்று. பாரத உபகண்டத்தின் தம்பங்களாக விளங்கும் வட, தென் குலபருவதங்களைக் குறிக்கும் பாடலில் நௌவி இடம்பெறுதல் அருமை. சேர மன்னன் ஆகட்டும், வடக்கே அரைசன் ஆகட்டும் அறவழிப்பட்ட ஆட்சியில் நவ்வியும் அச்சமின்றி இருந்தது என்பது குறிப்பு. ”சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை, அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற், றுஞ்சும் பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!” - புறம் 2 (சோறு அளித்த சேரன், கிவாஜ).
மரை இனங்களில், மடப்பத்தை உடையதும், எதையும் கண்டவுடன் துடுக்குற்று அஞ்சுவதும், பெரிய கண்களை உடையதும் ஆகியது நவ்வி மரை ஆகும். சிறு கூட்டங்களாக மேயும், https://youtu.be/ew-lxbMuoK0 . அதன் தும்மும் குணாதிசயத்தை, “நாறு உயிர் நவ்வி” என்று அகநானூறு 7-ம் பாட்டில் காண்கிறோம். உயிர் என்பது மூச்சுக்காற்று. தும்மும் ஓசை ’நாறு உயிர்’. நவ்வி - அழகுக்குத் தமிழில் ஓர் பெயர் (திவாகர நிகண்டு). " ... இன்சிலை ஏறுடை இனத்த நாறுயிர் நவ்வி வலைகாண் பிணையில் போகி” அகம் 7
ஒரு காட்சியைக் கண்டதும், துடுக்குற்று, திடுமெனக் குதித்துக் காற்றில் பாய்ந்து வேற்றிடத்துக்குச் செல்லும்: “கட்படர் ஓதி நிற்படர்ந் துள்ளி அருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப் பரந்துபடு பாயல் நவ்வி பட்டென” - அகம் 39
The scientific name of the chinkara is "gazelle bennettii". There are at least 4 subspecies, one subspecies has the longest horn among them. E. T. Bennett was secretary, London Zoological Society: https://en.wikipedia.org/wiki/Edward_Turner_Bennett
இந்தச் செம்மரைகளில் இருபாலுக்கும் வளையங்கள் கொண்ட கொம்புகள் உண்டு. நௌவி என்ற பாடபேதமும் நவ்வி என்ற இந்த மரையின் பேருக்கு உண்டு (உ-ம்: மதுரைக்காஞ்சி). தொல்காப்பிய நூற்பா உதாஹரணமாக, நௌவி எனப் பழைய உரைகளில் காட்டுவர். http://www.tamilvu.org/slet/l0121/l0121oin.jsp?st=1722&ed=1722&sno=61 "61. கதந பமவெனு மாவைந் தெழுத்து மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. [..] நந்து நாரை நிலம் நீலம் நுகம் நூல் நெய்தல் நேமி நைவளம் நொச்சி நோக்கம் நௌவி எனவும், படை பால் பிடி பீடு புகழ் பூமி பெடை பேடை பைதல் பொன் போது பௌவம் எனவும், மடி மாலை மிடறு மீளி முகம் மூப்பு மெலிவு மேனி மையல் மொழி மோத்தை மௌவல் எனவும் வரும்."
நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன, கவ்வை கூர்தரச் சானகியாம் கடிகமழ் கமலத்து அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்தடைந்த தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை! - கவிச்சக்கிரவர்த்தி கம்பர்
”எழில் தொண்டைச் செவ்வாய் நவ்வி” தொண்டைக்காய் போலும் எழிலையுடைய செவ்விய வாயினையுமுடைய நவ்வி. செம்மரையின் முகத்தில் தொண்டைக் காய்கள்போல வரிகள் உள்ளன என உவமிக்கிறார் மணிமொழியார். இது நவ்வி மரை என்றால் Chinkara என உறுதிப்படுத்த நல்ல சான்று. இந்தியாவின் மற்ற மரையினங்களாகிய மரையான், இரலை, மரையாடு (Muntjac) இவற்றுக்கு முகவாயில் தொண்டைக்காய் போன்ற வரிகள் இல்லை. https://growerjim.blogspot.com/2014/08/tindora-coccinia-grandis.html
இலங்கையில், வவுனியா பகுதியில் நவ்வி என்ற நெய்தல் பிரதேசம் இருக்கிறது. இது நவ்வி மரை (Chinkara antelope) காரணமாக வைத்த இடப்பெயர்.
நவ்வி (< நுவ்வி) :: பெயர் ஆய்வு -------------------------------------
நூ-/நோ- மெலிதலைக் குறிப்பது. நோ(ய்)தல்/நோலுதல்/நோற்றல் நோன்பு (பட்டினி-விரதம்) . நூ - எள்; நூநெய் நூனெ என்றால் எண்ணெய். எள் - நுண்ணிய விதை எனவே, நூ(வு) என்ற பெயர். நுவணை = எள்ளுண்டை, இடித்த மாவு. நுண்ணியது என்ற பொருளில், ”நூஞாயம் பேசறாள்” என்பது நுணையாடல். -ல் விகுதி ஏற்று, நூல் ‘thread' என்ற சொல் தோன்றுகிறது. சிலந்தி வாயில் நூல் பிறக்கும். நூல்- என்றாலே முன்பு குருமுகமாகக் கேட்டுப் பயில்வதுதான். குரு தன் நூலை நுவல்வார். நூல்- > நுவல்-தல்.
நூ = நுண்ணிய என்ற வேர். உ-ம்: நூ- : நூல். நூ = மிகச்சிறு கூலம். நூல் = எள் எனவுமுண்டு. நூலை/நோலை = எள்ளுருண்டை “புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து துணங்கையர் குரவையர் அணங்கெழுந்தாடி” - (சிலம்பு: 5: 68 - 70) நோலை < நூலை = எள்ளுருண்டை.
நோய்தல்.- பெருமாள் முருகனின் மேத் திங்கள், 2000-ஆம் ஆண்டு பிரசுரமான “கொங்கு வட்டாரரச் சொல்லகராதியில்” உள்ள வினைச்சொல் இதனைச் சற்று ஆராய்வோம். பக். 110, “நோய்(தல்) - வி. உராய்தல். ‘எதுக்கு இப்படி மேல வந்து நோயற?’ கொங்குநாட்டுப்புறத்தில் இந்த வினைச்சொல்லை சாதாரணமாகக் கேட்கலாம். இன்னொரு உதாரணம்: “கழுதை குட்டிச்செவுத்தில நோஞ்சிட்டிருக்கு”. நோய்தல்/நோஞ்சுதல் = உரைசுதல்/உராய்தல்/உரோசுதல் என்னும் பொருளில் வழங்கும் தொன்மையான வினைச்சொல். நோப்பு- உரசுதல் - ரோஷம், கோபம், சினம்.
கொங்கு வட்டார நாவல்கள், சிறுகதைகளை ஆராயும் ஆய்வேட்டில், சில சொற்கள் உள்ளன. நோப்பாளம் = ரோஷம். http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/106531/13/13_appendix%201.pdf MTL: நோப்பாளம் nōppāḷam , n. < நோ-. Irritation, anger, offence; கோபம். ’உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்’. பெருமாள் முருகன் அகராதி: நோப்பாளம் - பெ. பிணக்கு. ‘என்ன சொல்லீட்டன், நோப்பாளம் வந்திருச்சு.’ நொய்யல், நொய்மணல் கொண்ட கொங்கு நாட்டின் ஆறு.
நூப்பு nūppu , n. perh. நூக்கு-. Reduction, subduing, abatement; தணிப்பு. (யாழ். அக.) நூதல் nūtal, n. cf. நுது-. Being extinguished; அவிகை. (யாழ். அக) நூபுரம் ‘சிலம்பு, பாதசரம்’: நூபுரம் nūpuram, n. < nūpura. 1. Anklets formed of little bells; பாதகிண்கிணி. (திவா.) 2. Tinkling anklets; சிலம்பு. (சூடா.) ஆடுவார் பொருவி னூபுரத்தை (கம்பரா. நகர. 56). நூ- என்னும் தாதுவுக்கு தாழ்ந்த, மெல்லிதான என்ற பொருளை, ஒலிக்கு ஏற்றி “நூபுரம்” என்ற சொல் தோன்றியுள்ளது. நூப்புரம்/நூபுரம்: தூம்பு தூபு என்றே சோழர் கல்வெட்டுகளில் காண்கிறோம்.
சிறிய/நுண்ணிய தலை, வாய் உடைய மரை, நூவு- > நுவ்வி எனப் பெயர் அமைந்திருக்கும். புல்லி > பல்லி ஆவது போல, நுவ்வி > நவ்வி ஆகிறது. இதற்கோர் காரணம் உண்டு. நுவ்வை = நும் + அவ்வை (தமக்கை) என்ற உறவுப்பெயர் வழங்கிய காலம். ”நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே” http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai172.html#.YMZmukxOnVI நுவ்வை, நுவ்வி இரண்டும் பொருள்மயக்கம் உண்டாக்கும். எனவே, அப்போதே அருகி வந்த நுவ்வி மரையை, நவ்வி மரை என அழைக்கலாயினர் எனக் கருதவேண்டி உள்ளது.
மான் வகைகள்:
கலைமா (black buck), மரைமா (antelope), கடமா (sambur), உழை (axis deer)These are all the four major mān jāti-s of India's forests.
இப்பாடல் சுந்தரரின் பின்வரும் தேவாரத்தில் ஒரு பாடலின் முதலடியில் முதற்சீர் மாவும் எனத் தொடங்கும் எனத் தெளிவிக்கிறது. சுந்தரர் தேவாரம்: ---------------------- தமிழிலே மூன்று அன்றில் பறவைச் சாதிகளுக்கும் உள்ள பெயரை விளக்கினேன்: https://groups.google.com/g/houstontamil/c/_4FfKRzq0ww/m/Lrp1CwW-AQAJ அப்போது (WA group), சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் இரண்டைக் குறிப்பிட்டேன்,
சுந்தரர்: (clearly, distinction between deer "mā/mān" vs. antelopes "marai" is made)
மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும் தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே
மற்ற அடிகளின் எதுகையை நோக்கினால், முதல் அடி “மாவும்” எனத் தொடங்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆ/ஆன், மா/மான் என்பதாக மாவும் = மான்களும் என்ற பொருளில் இருந்த பாட்டில், காலப்போக்கில் ஏடுபெயர்த்தோர் மாவும் என்பதை “மானும்” எனத் திருத்திவிட்டார்கள். கவரிமா (குறள்) கவரிமான் ஆகிறது. அது போல.
கீழ்வரும் அதே பதிகப் பாடலில் “மானும் மரை இனமும்” வருகிறது. எதுகை சரியாக இருக்கிறது. ஆனால், மேலே கொடுத்துள்ள பாடல் "மாவும் மரை இனமும்" எனத் தொடங்க வேண்டும். மாவும் = மானும் எனப் பொருள். எனவே, மாவும் என்பதை மானும் என்று திருத்தத் தேவையே இல்லை.
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும் மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம் தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே
நவ்வி மரை தென்னிந்தியாவில் கி.பி. 1000-க்குப் பின்னர் அழிந்துபோனது. எனவே, நவ்வி என்ற பழைய விலங்கினப் பெயர் மான் என்ற பொதுப்பொருள் ஏற்றது. எ-டு: புள்ளி நவ்வி (திருப்புகழ்)
References: (2) பி. எல். சாமி, சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1970 (அதிகாரம்: மான்கள்).
(4) Dookia, S. and Goyal, S. P. (2007). Chinkara or Indian Gazelle. In “Ungulates of Peninsular India” (Eds. K. Sankar and S. P. Goyal), ENVIS Bulletin, Wildlife Institute of India. 103-114 pp.
பொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர். Interests: Classical Tamil texts, premodern literature & prabandhams in palm leaves, Indology, Indus in Bronze era, Dravidology research in Universities, Tamil old print book bibliography, Indic scripts in Unicode
தமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009