ஹூஸ்டன் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியர் இருக்கை ஒப்பந்தம்

யுனிவெஸிட்டி ஆஃப் ஹூஸ்டன் பிரெசிடெண்ட் ரேணு கட்டோர், வைஸ்-சான்சிலர் எலாய்ஸ் ப்ரைஸ், அகடமிக் டீன் டில்லிஸ் என்னும் உயர் அதிகாரிகளுடன், ஹூஸ்டன் தமிழ் ஸ்டடீஸ் சேர் குழுமம் 2 மில்லியன் டாலர்கள் தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ் கற்பிக்கும் பேராசிரியரின் சம்பளம் டெக்சாஸ் அரசாங்க நிதியுதவியுடன் ஹூஸ்டன் பல்கலை அளிக்கும். இருக்கைக்குத் தமிழர்கள் அளிக்கும் பணத்தின் வருவாய் ஆராய்ச்சிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப் பெறும். பெர்க்கிலி பல்கலை, ஹார்வர்ட் பல்கலை, மூன்றாவதாக ஹூஸ்டன் பல்கலையில் தமிழர்கள் நிதி அளிக்கை மூலம் தமிழ்ப்பீடங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. சங்கத் தமிழ், தமிழ் இலக்கியங்களுக்கும் தொல்லியல், இந்திய சமயம், சமூகம், தமிழரின் உலகளாவிய பராவல், அடுத்த தலைமுறையினர் தமிழில் வல்லுநர்கள் ஆதல், ஒப்பீட்டு திராவிட மொழியியல், சிந்துவெளி - திராவிடர் தொடர்புகள், ... போன்ற பல்வேறு துறைகளில் கல்வி, ஆராய்ச்சி, கருத்தரங்குகள் நிகழ்த்த வாய்ப்பாக ஹூஸ்டன் பல்கலை தமிழ் இருக்கை அமையும்.



ஹூஸ்டன் யுனிவெர்ஸிட்டி வைஸ்-சான்சிலர் ப்ரைஸ் “நன்றி”
எனத் தமிழை நவில வைத்தோம் :-) 😊 😊 😊
Press Release from Houston Tamil Studies Chair, Inc.,. This was widely reported in the media (TV and print) both in Tamil Nadu and in Texas, USA.

UH Receives $2 Million Commitment to Support Study of Tamil Language and Culture

HOUSTON, Oct 1, 2019- A Gift agreement was signed on October 1st 2019  to Establish Endowment for Research, Endowed Professorship to support study of Tamil language and culture.


A Texas nonprofit organization with a mission to promote Tamil language, culture and literature has made a $2 million commitment to the University of Houston to establish an endowment supporting the study of Tamil heritage. The Tamil language is considered the oldest in the world — spoken by more than 70 million people worldwide — primarily in India, Sri Lanka, Malaysia and Singapore.

Houston Tamil Studies Chair, Inc., (HTSC)  which is the donor, is a nonprofit that was founded in 2019 with the goal of establishing the Tamil studies chair at the University of Houston and providing a forum for the growing population of Tamil-Americans in the United States — approximately 250,000 people.

Dr. Renu Khator, Chancellor, UH System spoke about the long term relationship between UH and HTSC’s board members. Sockalingam Sam Kannappan spoke that Kaniyan Pungundranar’s poem starts with the lines of “Yaadhum Oore Yavarum Kelir” speaks about unity. Indian Prime Minister Modi ji spoke about these lines in the United Nations Organization on September 27th 2019. Dr. S.G Appan talked about achievements of Tamil Americans. Tupil Narasiman presented the financial status of HTSC.
The initial $1 million pledge will create The Houston Tamil Studies Chair, Inc. Research Endowment in the UH College of Liberal Arts and Social Sciences. These funds will support research program costs, equipment and seminars with invited scholars who are experts on Tamil societies and the Tamil diaspora in the United States.
The donor will later pledge an additional $1 million and the endowment will be renamed The Houston Tamil Studies Chair Inc. Endowed Professorship. The educator who will hold this professorship will be a global research trailblazer with expertise on the rich diversity of Tamil culture and its global diaspora, according to Antonio D. Tillis, dean of the College of Liberal Arts and Social Sciences.

“This gift serves as a new resource for global research opportunities for our faculty and students,” said Tillis. “It affords expanding knowledge on a region that has interdisciplinary academic appeal with local and global contexts.”  

Houston Tamil Studies Chair Inc. was established through the vision of its founding members Sockalingam Sam Kannappan; Dr. S.G. Appan; Sockalingam Narayanan; Perumal Annamalai; Dr. Nagamanickam Ganesan; Tupil V Narasiman and Dr. Thiruvengadam Arumugam. They have been leading community fundraising efforts in the Greater Houston area, Texas and beyond.
 “Tamil has a rich social and political history. Through exploring Tamil traditions, we are facilitating understanding of a special and unique culture,” said Eloise Brice, vice president for University Advancement.

According to Dr. S.G Appan “As Tamil-American families assimilate into the fabric of the multi-cultural society in this great Nation, and as all our children get educated in American Universities, HTSC takes great pride in leading this initiative to expand awareness of the rich Tamil culture, language and literature within an educational setting.”

Dr. Naga Ganesan says “Tamil, one of the two classical languages of India along with Sanskrit, is vibrant and growing in American culturescape. We are proud to endow a professorship at University of Houston to study Tamil in all its aspects across the globe.”

----------
https://www.thehindu.com/news/national/houston-university-receives-2-mn-commitment-to-support-tamil-language/article29592339.ece
NATIONAL

Houston University receives $ 2 mn commitment to support Tamil language


The Houston Tamil Studies Chair’s mission is to promote the oldest language, spoken by more than 70 million globally, a release said


The Houston Tamil Studies Chair (HTSC) has made a $ 2 million pledge to the University of Houston to establish an endowment supporting the study of Tamil heritage.
The HTSC is a non-profit organisation founded 2018 to establish the Tamil studies chair at the Houston University and provide a forum for the growing population of over 250,000 Tamil-Americans in the United States, a release said.
Its mission is to promote the oldest language, Tamil, which is spoken by more than 70 million globally.
HTSC founding members Sockalingam Sam Kannappan, Dr S G Appan, Sockalingam Narayanan, Perumal Annamalai, Nagamanickam Ganesan, Tupil V Narasiman and Dr Thiruvengadam Arumugam have been leading community fundraising efforts in the Greater Houston area, Texas and beyond, it said.
“As Tamil-American families assimilate into the fabric of the multi-cultural society in this great nation, and as all our children get educated in American Universities, HTSC takes great pride in leading this initiative to expand awareness of the rich Tamil culture, language and literature within an educational setting,” said Sam Kannappan who is also the board president of HTSC said.
“Through this generous gift, we are able to enrich our academic programmes and introduce our students to Tamil’s special and unique culture,” said Eloise Brice, vice president for University Advancement.
The initial $ 1 million pledge will create HTSC research endowment in the UH College of Liberal Arts and Social Sciences.
Funds will support research programme costs, equipment and seminars with invited scholars who are experts on Tamil societies and the Tamil diaspora in the United States.
An additional $ 1 million will rename the endowment HTSC Endowed Professorship.
The educator who will hold this professorship will be a global research trailblazer with expertise on the rich diversity of Tamil culture and its global diaspora, according to Antonio D Tillis, dean of the College of Liberal Arts and Social Sciences.
“This gift serves as a new resource for global research opportunities for our faculty and students,” said Tillis.
“It affords expanding knowledge on a region that has interdisciplinary academic appeal with local and global contexts.”
The gift is part of the ‘Here, We Go’ campaign, the University of Houston’s first major fundraising campaign in more than 25 years.
The University has raised more than $ 1 billion to address key priorities, including scholarships, faculty support and strengthening the university’s partnership with Houston and the momentum continues as UH moves beyond its original billion dollar goal.

https://www.hindutamil.in/news/world/518561-houston-university-receives-usd-2m-commitment-to-support-tamil-language-culture.html

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை: தமிழர்கள் முயற்சியால் ரூ.14 கோடி நிதி திரண்டது


ஹூஸ்டன்
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ளஅ ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென தனியாக இருக்கை உருவாக்குவதற்காக தமிழர்கள் மேற்கொண்ட முயற்சியால் இதுவரை ரூ.14.17 கோடி (20 லட்சம் டாலர்கள்) நிதி திரட்டப்பட்டுள்ளது.
இதற்கான பணியா தி ஹூஸ்டன் தமிழ் கல்வி இருக்கை (ஹெச்டிஎஸ்சி) செய்து வருகிறது. அமெரிக்காவில் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கென ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை உருவாக்க ஹெச்டிஎஸ்சி அமைப்பு முயன்று வருகிறது. கடந் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு அரசு சாராத ஒரு தொண்டு நிறுவனமாகும்.
இந்த ஹெச்டிஎஸ்சி அமைப்பின் உறுப்பினர்களான சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், டாக்டர் எஸ் ஜி அப்பன், சொக்கலிங்கம் நாராயணன், பெருமாள் அண்ணாமலை, நாகமாணிக்கம் கணேசன், துபில் வி நரசிம்மன், டாக்டர் திருவேங்கடம் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் இந்த நிதி திரட்டும் பணிகள் கிரேட் ஹூஸ்டன் பகுதி, டெக்சாஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்தது.
உலகத் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இதையடுத்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான பணிகளை அங்குள்ள தமிழ்ச் சங்கம் மூலம் தமிழர்கள் தொடங்கினர்.
ஹூஸ்டன் பல்கலைக்கழக்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.42 கோடி தேவைப்படுகிறது. இதில் ரூ.21 கோடியை அமெரிக்க அரசு தரும் நிலையில், தமிழர்கள் சார்பில் ரூ.21 கோடி அளிக்க வேண்டும். அந்தவகையில் தற்போது ரூ.14.71 நிதி திரட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹெச்டிஎஸ்சி அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பன கூறுகையில், "அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பன்முக கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும், அவர்களின் குழந்தைகள் அமெரிக்கப் பல்கலை.யில் படித்தாலும், ஹெச்டிஎஸ்சி அமைப்பு, செழுமை மிக்க தமிழ் கலாச்சாரம், மொழி, இலக்கியம் ஆகியவற்றைத் தமிழர்கள் மட்டுமின்றி அமெரிக்க மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.
தமிழின் சிறப்பையும், தனித்துவமான கலாச்சாரத்தையும் நமது மாணவர்கள் கற்கவும், பல்வேறு விஷயங்களையும் அறியவும் இந்த தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடக்கத்தில் 10 லட்சம் டாலர் சேரும் பட்சத்தில் ஹூஸ்டன் பல்கலை.யில் ஹெச்டிஎஸ்சி ஆய்வுத்துறை உருவாக்கப்படும். அதன் மூலம் திட்டங்களுக்கான செலவு, ஆய்வுகளுக்கான செலவு, கலந்துரையாடல் நிகழ்ச்சி, சொற்பொழிவுகள், சிறப்பு விருந்தினர்களை அழைத்துப் பேசுதல் போன்றவை செய்யப்படும்.
கூடுதலாக 10 லட்சம் டாலர் திரட்டுதல் என்பது, ஹெச்டிஎஸ்சி அமைப்பை தமிழ் இருக்கையாக மாற்றுவதாகும். இந்தத் தமிழ்த் துறையில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் உலக அளவில் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட முடியும்.
பிடிஐ

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கையொப்பம் இட்ட சிறப்பு நாள் .

October 3, 2019, Dinamalar, Chennai.

 “எண்ணிய முடித்தல் வேண்டும்
   நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
   தெளிந்த நல்லறிவு வேண்டும்
நண்ணிய உரிமை வேண்டும்
   நாமதை பெறவும் வேண்டும்
கண்ணிலே ஒளியும் வேண்டும்
  கன்னித்தமிழைக் காக்க வேண்டும்” - பாரதியார்

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை பல மாதங்களாய் நடந்து கொண்டிருந்தது. அதன் விளைவாக நேற்று அக்டோபர் 1ம் தேதி, இதற்கு உழைத்த காரணகர்த்தாவாக தலைவர்கள் இணைந்து உறுதியளித்து கையொப்பமிடும் விழா நிகழ்ச்சி, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் சமூக அறிவியல் மற்றும் கலைத்துறை பிரிவின் டீன் திரு.அன்டோனியோ டில்லிஸ் மற்றும் ஹிஸ்பானிக் ஆய்வுப்பிரிவின் பேராசிரியர் திரு. ஆண்டர்சன் வரவேற்புரை ஆற்றினர்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை இன்று நிலைபெற்றிருக்க பெரும் காரணமாய் இருக்கும், தமிழ் மேல் தீரா பற்றுக் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் தாய்மொழியை மறவாதிருக்க தொடர்ந்து அருந்தொண்டு ஆற்றிவரும் திரு. சாம் கண்ணப்பன் அவர்களும், டாக்டர் திரு.அப்பன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

அதன் பின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பிரெசிடெண்ட் திருமதி. ரேணு கதோர் உரை ஆற்றுகையில் தான் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாகக் கூறினார். பின்னர் காத்திருந்த அந்த கையொப்பமிடும் தருணம் இனிதே நிகழ்ந்தேறியது.தமிழ் சார் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

சோழன் காசுகள் (தமிழ் கிரந்த எழுத்தில்)

கல்வெட்டு ஆய்வாளர் துரை சுந்தரம் (கோவை) அவர்களிடம் இரண்டு முக்கியமான சோழன் பொற்காசுகளின் ஒளிப்படங்கள் அளித்தேன். அவற்றில் உள்ள விருதுப் பெயர்களை ஒவ்வொரு எழுத்தாக விளக்கினார். அவருக்கு என் நன்றி.

’முடிகொண்டசோழன்’ என எழுதிய காசில், ‘ட’ 11-ஆம் நூற்றாண்டில் தமிழிலும், தமிழ் கிரந்தத்திலும் இருந்த வடிவைப் பார்க்கலாம். அப்படியே, முடிகொண்ட என்ற தமிழ் வார்த்தையை எழுத்துப்பெயர்ப்பாய் (transliteration) வெளியிட்டுளனர். சோழர்கள் தாம் சமணர்கள் உருவாக்கிய வட்டெழுத்தைக் கைவிட்டு, கிரந்த லிபியைத் தமிழுக்கு முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள். சேர நாட்டில் அதற்கப்புறமும் வட்டெழுத்து சில காலம் வாழ்ந்தது. அதனால், இணையம், அச்சு நூல்களில் பயன்பாட்டில் உள்ள ஜ, ஶ, ஷ, ஸ, ஹ ஐந்தெழுத்தையும் வடவெழுத்து எனத் தொல்காப்பியர் வழியில் குறிப்பிடல் முறையானதாகும். தமிழல்லா நூல்களை, சொற்களைத் தமிழ்லிபியில் எழுத இவ்வைந்து வடவெழுத்தும் அவசியம் எனத் தமிழறிஞர் தெரிந்தெடுத்துக் கணிகளிலும், அகராதிகளிலும் தந்துள்ளனர். இவற்றின் விழுக்காடு எவ்வளவு உள்ளது என வடமொழி நூல்களின் தமிழ்லிபிப் பதிப்புகளில் கணிஞர்கள் ஆராய்ந்து தெரிவிக்கலாம். அதே போல, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ... போன்ற நூல்களின் தமிழ்லிபிப் பதிப்புகளில் வடவெழுத்தின் எத்துணைப் பங்கு என ஆராயலாம்.

‘முடிகொண்ட சோழன்’ காசில் பாண்டியன் மீன் சின்னமும், சோழன் புலிச் சின்னமும் உள்ளது. எனவே, “பாண்டியன்” முடிகொண்ட சோழன் என்பது பொருள். பாண்டியநாடு முற்றாக சோழர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டது.

இவைபோல, இன்னும் பல காசுகளின் எழுத்துகளை எழுத்தெண்ணிக் கற்போம்.

நா. கணேசன்

----------

சோழர் கால நாணயம்- முடிகொண்ட சோழந்

வணக்கம்.


நீங்கள் அனுப்பிய சோழர் கால நாணயத்தின் படம் அருமையான எழுத்துப்பொறிப்புகளைக் கொண்டுள்ளது. எழுத்துகள்,  சோழர் காலத்தில் வழக்கிலிருந்த கிரந்த எழுத்து வகையைச் சார்ந்தவை.  ”முடிகொண்ட சோழன்”  என்னும் பெயர் எழுதப்பட்டுள்ளது.   கிரந்தத்தில், தமிழின் சிறப்பு  “ழ”கரமும் ”றன்ன”கரமும் இல்லாமையாலும்,  சோழர் காலத்தில் ஒகர ஓகார இரு உயிர் மெய்யெழுத்துகளுக்கும் பொதுவில் ஒற்றைக்கொம்பு மட்டுமே பயன்பாட்டில் இருந்தமையாலும் , ”முடிகொண்ட சோழன்” என்னும் சொல்  கிரந்தத்தில் ”முடிகொண்ட சொளந்”  என எழுதப்படும். அதுவே, இந்த நாணயத்திலும் எழுதப்பட்டுள்ளது.



முடிகொண்ட சோழந் - நாணயம்

https://thehinduimages.com/details-page.php?id=133226134
Caption : CHENNAI, 18/05/2012: A gold coin belonging to 1014-1-44 CE of Rajendra Chola which was found in Dharmapuri district is on display at Egmore Museum on the occasion of 150th year celebration of the Archaeological Survey of India, on May 18, 2012. Photo: S.R. Raghunathan


மேற்படி நாணய எழுத்துகளில்,  “ண்ட”  ஆகிய இரு எழுத்துகள், தமிழ் எழுத்துப்போல் தனித் தனியே எழுதப்படாமல் கூட்டெழுத்தாக (ஒன்றின் கீழ் ஒன்றாக) எழுதப்பட்டுள்ளது.  ”ண” கரத்தை ஒட்டி வரும் ”ட” கரம் கிரந்த வழக்கில் மெல்லோசையுடைய  வர்க்க எழுத்தான மூன்றாம் ”ட” கர எழுத்தாகவே எழுதப்படுதல் மரபு. இந்த நாணயத்தில், அம்மரபு  காணப்படவில்லை.  மாறாக, வர்க்க எழுத்தில் முதல் “ட”கர எழுத்து எழுதப்பட்டுள்ளது.  அதுபோலவே, ”முடி”   என்னும் சொல்லிலும் வர்க்க எழுத்தில் முதல் “ட”கர எழுத்து எழுதப்பட்டுள்ளது. “சோளந்”   என்னும் சொல்லில்  “சொ”  என்பதை எழுத ஒற்றைக் கொம்பு, சகரம், கால்  என்னும் முறையில் எழுதவேண்டும். ஆனால், கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் சில இடங்களில், ”கால்” என்னும் ஒட்டு, தனியே எழுதப்படாமல்   முதன்மை எழுத்துடன் சேர்த்து எழுதப்படுதல் உண்டு. அவ்வாறே, இந்த நாணயத்திலும் எழுதப்பட்டுள்ளது.

கிரந்த எழுத்துகளின் வரிவடிவம் பல்லவர் உருவாக்கியதாகும்.  பின்னர் சோழர் காலத்தில் அந்த வரிவடிவம் சற்று மாற்றம் பெறுகிறது. அது போலவே, பாண்டியர் காலத்திலும், விஜய நகரர் காலத்திலும்  மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது,  நிலை நிறுத்தப்பெற்ற அச்சு வடிவ  எழுத்துகளின் வரிவடிவத்தில், “முடிகொண்ட சொளந்”  என்பது  எவ்வாறு எழுதப்படுகிறது என்பதைக் கீழே காணலாம்.  நான்கு வரிகளில் எழுதப்பட்ட இச்சொல்லின் வரிவடிவங்களில் முதலாவது, இந்த அச்சு வடிவம். திருவனந்தபுரத்தில் இயங்கிவரும் “திராவிட மொழியியல் கழகம்”  (DRAVIDIAN LINGUISTICS ASSOCIATION) என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள  "THE GRANTHA SCRIPT"  என்னும் நூலை (நூலாசிரியர்: பி.விசாலாட்சி) அடிப்படையாய்க் கொண்டு இந்த அச்சு வடிவம் எழுதப்பட்டுள்ளது. அடுத்து, இரண்டாம் வரியில், நாணயத்தில் எழுதப்பட்ட வரிவடிவம் அமைகிறது. மூன்றாம் வரி இன்றைய தமிழ் எழுத்து வடிவம். நான்காம் வரியில்,  ஆங்கில எழுத்துகளில் உரிய  ஒலிக்குறிப்புடன் எழுதப்பட்ட வடிவம் உள்ளது.


கீழ்வரும் பகுதியில் சோழர் கால கிரந்த எழுத்துகள் சிலவற்றின் வடிவங்கள்  தரப்பட்டுள்ளன. இவை, தொல்லியல் துறையில் (1935-1965)  பணியாற்றிய தொல்லியல் அறிஞர் சி. சிவராமமூர்த்தி அவர்கள் எழுதிய "INDIAN EPIGRAPHY AND SOUTH INDIAN SCRIPTS"  என்னும் நூலையும்,  தஞ்சைக் கல்வெட்டுகளையும்  பார்வையிட்டுப் பெற்ற  எழுத்துச் சான்றுகளாகும்.



1       “ம”   எழுத்தின் வரிவடிவம்

இது தஞ்சைக் கல்வெட்டொன்றில் காணப்படும் வடிவம்.


தஞ்சைக்கல்வெட்டில்  கிரந்த எழுத்து “ம”


கீழுள்ளது  நூலில் குறிப்பிடப்பெறும் வரிவடிவம்.








”ம”  கிரந்த எழுத்தின் மாற்று வடிவங்கள்



2      ”க”   எழுத்தின் வரிவடிவம்



தஞ்சைக்கல்வெட்டில்  கிரந்த எழுத்து “க”







3    “ட”   எழுத்தின் வரிவடிவம்


இராசேந்திர சோழன் கால எழுத்து-திருவாலங்காட்டுச் செப்பேடு


நூலில் குறிப்பிடப்பெறும் வடிவம் 
இந்த “ட”  எழுத்து  (வர்க்க எழுத்துகளில் முதலாவது) ,  நாணயத்தில் எழுதப்பட்டுள்ளது.

4      ”ண்ட”  - கூட்டெழுத்தின் சரியான வடிவம்

மேலே,
”ண” கரத்தை ஒட்டி வரும் ”ட” கரம் கிரந்த வழக்கில் மெல்லோசையுடைய  வர்க்க எழுத்தான மூன்றாம் ”ட” கர எழுத்தாகவே எழுதப்படுதல் மரபு. இந்த நாணயத்தில், அம்மரபு  காணப்படவில்லை.  மாறாக, வர்க்க எழுத்தில் முதலாம்  “ட”கர எழுத்து எழுதப்பட்டுள்ளது - என்று குறிப்பிட்டுள்ளேன்.

மரபுப்படி,   ”ண்ட”  - கூட்டெழுத்தின் சரியான வடிவத்தைக் கீழ்க்கண்ட சான்று மூலம் அறியலாம்.


”ண்ட”  - கூட்டெழுத்தின் சரியான வடிவம்

”ட” கரத்தின் மூன்றாம் வர்க்க எழுத்தின் வடிவத்தைக் கீழுள்ள  எழுத்து காட்டும்.


நூலில் குறிப்பிடப்பெறும் வடிவம் 


”ம”, ”க”, “ட”(ta)  ஆகிய மூன்று கிரந்த எழுத்துகளின் வரி வடிவத்தையும் கீழுள்ள  கல்வெட்டுச் சொல் குறிக்கும்.




மகுடம் -  MAKUTAM

இராஜேந்திர சோழனின் நாணயம்





நீங்கள் அனுப்பிய இராஜேந்திர சோழனின் நாணயத்தின் படத்தில் வட்டச் சுற்றில் எழுதப்பட்ட எழுத்துகளின் நேர் வடிவம்  கீழே தரப்பட்டுள்ளது.






இந்த எழுத்துகளில்,  முதல் எழுத்தான “ர”கர நெடிலுக்குரிய கால் “ர”கர எழுத்துடன் சேர்த்தே எழுதப்பட்டுள்ளது. இது “முடிகொண்ட சொளந்”  நாணயத்தில் உள்ள முறையிலேயே அமைந்துள்ளது. “சொ” எழுத்திலும் அவ்வாறே.  ஒற்றைக்கொம்பு  சற்று மாறுபட்ட தோற்றம் பெறுகின்றது;  எனினும்,  ஒற்றைக்கொம்புதான் என எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் அளவிலேயே எழுதப்பட்டுள்ளது.  ”ஜ”  எழுத்தும்  எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.  “ந்த்ர”    ("NDRA")   என்பது கூட்டெழுத்து முறையில் எழுதப்பட்டுள்ளது.  


சுந்தரம், கோயமுத்தூர்.

225 Years of College of Engineering, Guindy (now Anna University)

225 Years of College of Engineering, Guindy (now Anna University)

It is 225 years since our college, CEG in Chennai began. Its Vice-Chancellor is with us today in Dallas, Texas, an eminent professor from Indian Institute of Science (I got my first Masters in Engg. from IISc, popularly known as Tata Institute in Bangalore & Mysore areas).


Alumni Associations all over USA (Chicago, San Francisco, Dallas, etc.,) are celebrating our VC's visit. I will be giving the inaugural speech. Please let Guindy and Anna University graduates know & they can invite Prof. M. K. Soorappa can visit their cities.

N. Ganesan
 September 12, 2019

Some pictures from the event. Houston Tamil Chair effort was hightighted in the event.










































தாமரை பூத்த தடாகமடி! Eclectic Sculpture of Adinatha near Vanji City

தமிழிசை வளர்த்த எம். எம். தண்டபாணி தேசிகரின் பழைய பாட்டை இந்த அற்புதமான காணொளி நினைவுக்குக் கொணர்கிறது.

தாமரை பூத்த தடாகம்!


பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=-ED15sfhssw [1]

கொங்குநாட்டிலே அதன் சங்ககாலத் தலைநகர் வஞ்சி மாநகர் அருகே ஓர் அரிய சமணச் சிற்பம் கிட்டியுள்ளது. அதுபற்றி முக்குடை இதழில் ஓர் கட்டுரை எழுதினேன்: http://www.vallamai.com/?p=87447

முன்னணிப் பத்திரிகைகளில் இது பாகுபலியும், அவரது சகோதரிகளும் என்று செய்திகள் மார்ச் மாதம் வெளியாயின. சிற்ப அமைதியால் பெண்கள் இருபுறமும் நிற்கின்றனர் என்பது  அவ்வூர்ப் புறங்களின் பொதுமக்கள் கருத்து. இது பாகுபலி அல்லர். ஆதிநாதரும், அவர் மகள்களும் என்று அப்போது குறிப்பிட்டேன். ஆகஸ்ட் 30, 2018 டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் இது ஆதிநாதர் சிற்பம் என்று வெளியாகியுள்ளது. பேரா. க. அஜிததாஸ் அவர்கள் இக்கருத்தை முன்மொழிந்துள்ளார்கள். வாழ்த்துக்குரிய சிறப்பான மாற்றம்.

பேரா. கனக. அஜிததாஸ் ஐயா மடல்களில் தீர்த்தங்கரர் அருகே நிற்பவர்கள் சாமரதாரிகள் என்ற கருத்தை இந்தியாவில் உள்ள மற்ற சாமரதாரிகளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். அவர் இச்சிற்பத்தின் தெளிவான ஒளிப்படங்கள் எடுத்து அனுப்பி வைத்துள்ளார்கள். அவருக்கு எம் நன்றிகள் கோடி. அவற்றைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். இச் சிற்பம் பெண்கல்வியை வலியுறுத்தும் ஓர் ‘எக்லெக்டிக்’ (Eclectic sculpture) என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து சில குறிப்புகள் எழுதியுள்ளேன்.

எல்லா சமண துறவிகளுக்கும் சாமரை வீசுவோர் உண்டு. அதை ‘மாடல்’ ஆக வைத்து இந்த ‘எக்லெக்டிக்’ சிற்பம் படைத்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. ஆனால், வெறும் வேலைக்காரர்கள் என்னும் கவரி வீசுபவர்கள் தானா இவர்கள் என்ற கேள்வி எழுகிறது. ”பேதையிளம் பெண்கள் இவர்கள், எண்ணும், எழுத்தும் சில ஆண்டுகளுக்கு முன் ஆதிநாதரிடம் கற்றோர்”. முக்கியத்துவம் கருதித் தீர்த்தங்கரர் உயரத்தில் வடிக்கப்பட்டுள்ளனர். மார்பகம் வயசுக்கு வராத, பேதைப் பருவப் பள்ளிச் சிறுமியர் எனக் காட்டுமாறு சிலை செய்துள்ளனர். மேலும், பெதும்பை போன்ற பெண்களைப் பெருத்த நகில்களுடன் காட்டினால் ஆதிநாதர் + பள்ளிச் சிறுமியர் என இல்லாமல், பாகுபலி + பருவம் அடைந்த பெதும்பை போன்ற மூத்த பெண்கள் என்று மக்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்பதால் இவ்வாறு ~10 வயதுப் பெண்களைக் காட்டியுள்ளனர் எனக் கருதுகிறேன்.








































ec·lec·tic
əˈklektik/
adjective
adjective: eclectic; adjective: Eclectic
  1. 1.
    deriving ideas, style, or taste from a broad and diverse range of sources.

    "her musical tastes are eclecti
    synonyms:wide-rangingbroad-basedextensivecomprehensiveencyclopedicMore
  2. 2.
    PHILOSOPHY
    of, denoting, or belonging to a class of ancient philosophers who did not belong to or found any recognized school of thought but selected such doctrines as they wished from various schools.
noun
noun: eclectic; plural noun: eclectics
  1. 1.
    a person who derives ideas, style, or taste from a broad and diverse range of sources.
Origin










late 17th century (as a term in philosophy): from Greek eklektikos, from eklegein ‘pick out,’ from ek ‘out’ + legein ‘choose.’
பழைய வரலாறுகளை ஆராய்கையில் இன்றைய கருத்துகளை மாத்திரம் கொண்டு அவற்றை அடைக்க முடியாது. ஏனனில், ஆரியர் வருகை, சிந்து வரலாறு, லிங்க வழிபாடு, ... என்று ஒன்றுமே சொல்லமுடியாது. ஆத்திசூடி யார் என்றும் சமணவழிக் காட்டமுடியாது.
சமணத்தில் மிகப் பழங்காலத்திலேயே இரண்டு பிரிவுகள் தோன்றிவிட்டன என்பார்கள். என்சைக்க்ளோப்பீடியா பிரிட்டானியா போன்றவற்றில் இரு பிரிவினரும் சொல்வது பல செய்திகள் குளறுபடியாக உள்ளன என்பர். 
Because the accounts of both sects are highly partisan and unreliable and were written long after the events discussed, the origins of the sectarian division remain obscure.According to the earliest written Digambara account (from the 10th century CE), the two sects formed in the 4th century BCEfollowing a migration of Jain monks southward from the Ganges River (or from Ujjain) to Karnataka in response to a serious famine during the reign of Chandragupta MauryaBhadrabahu, the leader of the emigrants, insisted on the observance of nudity, following the example set by Mahavira, the last of the Jain Tirthankaras (Ford-makers, i.e., saviours). Sthulabhadra, the leader of the monks who remained inthe north, allowed the wearing of white garments, possibly, according to the Digambara account, as a concession to the hardships and confusion caused by the famine. The Digambara legend places the schism quite early in Jain history, but the formation of the two sects was more likely a gradual development. By the 1st century CE, the debate over whether it was possible for a monk who owned property (e.g., who wore clothes) to achieve moksha (spiritual release) divided the Jain community. This division was formalized at the Council of Valabhi (453 or 466 CE), which codified Jain scripture without the participation of Digambara monks. 

”Jainism got divided into two sects after around 160 years of Lord Mahavira’s death. At the time, Acharya Bhadrabahu was the Principal Guru (Shrut Kevali).
There was a severe famine in the north which forced Bhadrabahu to migrate to south along with twelve thousand of his followers. Others remained in North under the guidance of Acharya Sthulabhadra who was the disciple of Bhadrabahu.
At this point, you have to remember that Jain texts weren’t written.”
https://www.jainworld.com/jainbooks/antiquity/digasvet.htm
இவ்வாறு சிக்கல்கள் உடைய ஜைந சமயத்தின் பழைய வரலாற்றில் இந்தப் பழைய சிற்பம் கொங்குநாட்டிலே கிடைத்துள்ளது. அங்கே பல சமண தலங்களும் விரிவாகி, திகம்பர ஜைநர்கள் வழிபாட்டில் இருக்கையில், பெரிய சிற்பம் - சுமார் 8 அடிக்குப் 10 அடி, நெடுந்தூரம் தெரிவது - ஏன் வழிபாட்டிலோ, யாரும் அறிந்ததாகவோ இல்லை என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம். 

நன்னூல் எழுதிய முனியைப் புரந்தவன் சீயகங்கன். கொங்குநாட்டான். கன்னட நாட்டு சேனாபதியாக இருந்தவன். அதேபோல, சாமுண்டராயன் கொங்குநாட்டார். காமிண்டன்/காமுண்டராயன் என்ற பெயர் சாமுண்டராயன் என்று கன்னடத்தில் வழங்குகிறது. பாகுபலிக்கு சாமுண்டராயன் அமைத்த பெருஞ்சிற்பம் சிரவணபெளகுளத்தில் இருக்கிறது.

கொங்குநாடு கொங்குவேளிர் (பெருங்கதை), இளங்கோ அடிகள் (வஞ்சி மாநகர்), திருத்தக்கதேவர் (தாராபுரம்), பவணந்தி முனிவர், அடியார்க்குநல்லார், மயிலைநாதர் என்று ஏராளமான தமிழ்ச் சமணர்களைத் தந்தது. அவ்விலக்கியங்கள் போலவே, இந்தப் பெரிய சிற்பமும் புதிய முறையில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். This eclectic Jaina sculpture, modeled by a genius,  visually narrating the Sripuranam story of the teaching of Brahmi script and Arithmetic in a nutshell. It was not considered  fit for worship by Orthodox Jains. Hence it was abandoned and got forgotten by the Jains of Tamil Nadu. Only now, they start seeing it.
இந்த  eclectic சிற்பம் சாமரதாரிகளுடன் கூடிய தீர்த்தங்கரர்கள் சிற்பங்களைப் பார்த்துச் செய்ததே. ஆனால் முக்கிய மாறுபாடுகள் உண்டு. அவற்றைப் பார்ப்போம்.
(1) பெண்களின் சிறப்பு அணிகலம் தோடு. இச் செய்தி இலக்கியம் கற்ற பலரும் அறிந்ததே. சிவபிரான் மூர்த்தங்களில் இடக்காதில் தோடு உமாதேவியாரின் சின்னமாக அணிவிப்பர். அரவக்குறிச்சி ஆதிநாதர் சிற்பத்தைப் பருவம் எய்தா இருவரும் பெண்கள் என்று காட்ட நான்கு காதிலும் நான்கு தோடுகள். இந்தத் தோடுகள் பழமையானவை. 

(2) பெருத்த மார்பகங்களுடன் ப்ராமி, சுந்தரி இருந்தால் அது பாகுபலியைக் குறிக்கும். ஆனால், இங்கே ஆதிநாதர், அவர் ஆதியில் எண்ணும், எழுத்தும் கற்பித்த பேதையிளம் சிறுமிகள். தமிழிலே பள்ளி என்ற சொல்லே சமணர்கள் கொடை. ஔவைக் குரத்தியின் ஆத்திசூடி, பார்சுவநாதரைத் தொழுதுதான் இன்றும் தமிழ்க்கல்வி தொடங்குகிறது. 5 வயதில் கல்வி கற்பித்த பகவானைத் துறவியான பிறகு, சில ஆண்டுகள் கழித்து வனத்துக்குச் சென்று காணும் காட்சி இஃது.

(3) பொதுஜனங்கள் சிற்ப அமைதியால் பெண்கள் (வள்ளி -தெய்வானை எனல்). திரு. பானுகுமார் போன்றோர் பாகுபலி என்ற செய்தியை ஹிண்டு, இந்தியா டுடே, இண்டியன் எக்ஸ்பிரஸ் எல்லாவற்றிலும் வெளிவரச் செய்துள்ளார்கள். பாகுபலி பருவம் அடைந்தபின் எடுப்பான மார்பகங்களுடன் இருக்கும் பெண்கள் இருப்பர். அதற்கு மாற்றாக, சின்னஞ்சிறு பிராயத்தே இங்கே இப் பெண்கள் காட்டப்பட்டுள்ளனர். இது பள்ளிச் சிறுமியர்;. வயசுக்கு வராதோர். முக்கியம் கருதி பெரிதாகக் காட்டப்படுகின்றனர். இது இந்தியக் கலைமரபு. நாட்டுப்புறப் பொதுஜனங்கள் மொட்டையாண்டவர் என்பது இந்த அரைக்கச்சு அணிந்த உள்ளாடை/கௌபீனம் போலத் தெரிவதால்தான்.

(4) இந்தியா முழுதும்  எந்த சாமரதாரியும், கொங்கு ’எக்லெக்டிக்’ சிற்பத்தின் அளவிலே நிற்கும் ஆதிநாத தீர்த்தங்கரர் உசரத்தில்  வடிக்கப்படுவதில்லை. அது மட்டுமில்லை. தங்கள் ஆசான் கூறும் சுருதி வசனங்களைக் கூர்ந்து கேட்குமாறு தலைசாய்த்த நிலையில் தோடணியும் மாதர் வடிக்கப்பட்டுள்ளமை காண்க. சாதாரணமான வேலைக்காரர்கள் அல்லர் இப்பெண்டிர் என்பது கரதலாமலகம். 

(5) நிற்கும் ஆதிநாதர் சிற்பங்களில் தெளிவாக இலிங்கம் காணலாகும். நூற்றுக்கணக்கான ஆதிநாதர் சிலைகள் அவ்வாறே பாரதக் கண்டம் முழுதும் உள. பெண்கள் அருகிருப்பதால்  ஆதி பகவன் பிறந்த மேனியில் இல்லை. உள்ளாடை அணிந்த தோற்றம். அவ்வாறு அமைத்தல் சமண சிற்ப மரபில் இந்தியா முழுதும் உண்டு. கொடுக்கப்பட்டுள்ள ஆதிநாதர் சிற்பத்தில் அரைக்கச்சையும், மொழுக்கென்று இலிங்கம் மூடியநிலையையும் காண்க.  பாரதக் கலைமரபிலே பெண்கள் அருகில் இருந்தால், முக்குடைக் கீழே நிற்கும் ஆதிநாதர் ஆடை அணிந்த நிலையில் இருப்பார். அவ்வாறே கொங்குச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதனை "diaphanous cotton garments" என்பர் கலைவரலாற்று நிபுணர்கள்.

(6) பொள்ளல்பொள்ளலாக இருந்த மிகப் பழைய வாலுணர்வு பெற்ற இடபநாதர் அருகே வாலைப் பெண்டிர் நிற்கின்றனர் என்று காட்ட தோடுகள் முக்கியக் குறியீடு. சிவனுக்கு மகாவீரர், புத்தர் போல வடிகாது. ஒன்றில் பாம்படம் போல வெண்சங்கக் குழை, இன்னொன்றில் ஓலைச்சுருள் வடிகாதில் வட்டமாகச் செருகப்படும்.

இந்தியாவிலே எந்த தீர்த்தங்கரரின் சாமரதாரியும் வாலறிவு பெற்ற அவருக்கு இணையான உயரத்தில் காட்டப்படுவதில்லை. அரசி, அடியார், சக்ரேசுவரி, அம்பிகை என்று ஆதிநாதரின் அருகே பெண்கள் உயரம் குறைந்தே சிறிய அளவில் காட்டப்படுவர். ஆனால், அரவக்குறிச்சி சிற்பத்தில், தலைசாய்த்துக் கூர்ந்து கேட்கும் நிலையில் உள்ளவர்கள் ஏறத்தாழ ஆதிநாதர் அளவிலே காட்டப்படுகின்றனர். 

எல்லாவற்றையும் சிற்பங்களில் காட்டவியலாது. பெண்ணின் உடல் வாகில், நிற்கும் வாலைப் பெண்கள். வயதுக்கு வராத பெண்கள். கை முத்திரை ஏடு பிடிக்கும் நிலையில் உள்ளது. பெண்கள் என்பதால், ஆதிநாதர் - எண்ணும் எழுத்தும் உலகுக்கு அறிவித்த ஆதி பகவன். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” - தேவர் குறள் 1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - தேவர். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - ஔவை. பெண்கல்வியின் முக்கியத்துவத்தால் சுந்தரி, பிராமி என்னும் பள்ளிச் சிறுமியரை வளர்த்தியாய்க் காட்டியுள்ளனர்.

10 வயதுப் பெண்களுக்கு ஏன் தீர்த்தங்கரர் உயரம்? இதுவும் பாரிய பாரதத்தின் கலாஸம்பிரதாயமே.

சைவ நாயன்மார்களைப் பாருங்கள். சம்பந்தர் 3 வயது குழந்தை. அப்பர் முதியவர். ~70 வயதினர். சுந்தரர் தம்பிரான் தோழர். அரசர் போன்றவர். சிவாச்சாரியார். கூடவே, மாணிக்கவாசகரும் இருப்பார். 3 வயதுக் குழந்தையை மற்ற முதியவர்களின் உயரத்தின் அருகிலே காட்டியிருப்பர். சம்பந்தர் சைவம் தழைக்கச் செய்த வெற்றிச்செயல்களால். இதே போலத்தான் எண், எழுத்து, பெண்கல்வி பற்றின முக்கியத்துவத்தால் சிறாரை பெரிதாகக் காட்டியுள்ளனர்.


இன்னும் பல சான்றுகள் தரமுடியும். ஒன்றைக் காட்டுகிறேன். த்ராவிட ஜனங்களின்  4200 ஆண்டு முந்தைய சான்று.
https://nganesan.blogspot.com/2012/05/tnf-convention-2012-lectures-houston.html
தேவாரமும், பல்லவர் கால காப்பியம் கிராதார்ஜுனீயமும் மொழிபெயர்த்த பேரா. இந்திரா பீட்டர்சன் தலைமையில் முன்பு ஆற்றின சொற்பொழிவு. சிந்து சமவெளியில் கொற்றவையும், விடங்கரும்.

விடங்கர் (> இடங்கர்) பாருங்கள். யானை, காண்டாமிருகம் போன்றவற்றை விட 4 பங்கு அளவில் காட்டப்பட்டுகிறது. உண்மையில் கடியால் (https://en.wikipedia.org/wiki/Gharial ) அவ்வளவு வளர்த்தி இல்லை. இது ஏன்? விடங்கரின் முக்கியத்துவம் கருதி அவ்வாறு சிறிய முத்திரையில் காட்டுகின்றனர்.

அவ்வாறே, பெண்கள் எனக் காட்ட தோடு அணிந்த வாலைச்சிறுபெண்கள் அவர்கள் கற்கும் கல்வியின் முக்கியத்துவம் கருதி - ஆதி பகவன் இப் பெண்களுக்குத் தான் முதன்முதலில் எண்ணும் எழுத்தும் அறிவித்தார். முக்குடைக் கீழ் நிற்கும் தீர்த்தங்கரர் அருகில் வளர்த்தியாய்க் காட்டப்படுகின்றனர். தலைசாய்த்து தங்கள் குருவின் சுருதி வசனங்களைக் கேட்கும் நிலை. பேரா. அஜிததாஸ் கொடுத்த எந்த சாமரதாரியும் இவ்வாறு இல்லை. அந்தச் சாமரதாரிகளில் சாமரை விரிவாக இருக்கும். இங்கே சிறு அளவில் சிமிட்டி. பழைய போட்டோக்களில் இன்னும் சிறிதாய் தாமரை நாளத்தின் பொகுட்டு (கர்ணகம்) உள்ளது.

(7) கர்ணகம் என்றால் தாமரைப் பொகுட்டு (Pericarp of the Lotus). லக்ஷ்மிக்கு கர்ணகா, கர்ணகீ என்பது இதனால். பவித்திரா என்னும் வடமொழிப்பெயர் தமிழிலே பவித்திரை என்றாதல்போல, கர்ணகா கர்ணகை என்பதை உள்வாங்கிக் கோவலன் மனைவிக்கு இளங்கோ அடிகள் பெயரிட்டார், கர்ணகா/கர்ணகீ > கர்ணகை/கர்ணகி > கண்ணகி தாமரை நாளத்தின் பொகுட்டில் வீற்றிருப்பவள். கோவலன் கண்ணபிரான்/விஷ்ணு பெயரில் அமைந்ததால் இப்பெயர். குருக்கத்தி = மாதவி. முல்லைத் திணை கற்புக்குச் சின்னம். முல்லைக்கு ஸப்ஸ்டிட்யூட் மாதவி (குருக்கத்தி). எனவே, கணிகைக்கு மாதவி எனச் சிலம்பில் பெயரிட்டார். கனகர், விஜயர் - வடக்கே நடந்த மகாபாரதப் போரில் ஹரி என்றால் பொன், விஷ்ணு. விஜயன் அர்ஜுநன். பகவத் கீதை நாயகர்கள் பெயர்கொண்டு அமைந்த கற்பனை வடநாட்டு மன்னர் பெயர்களாக சிலம்பு நாவலில் எழுதினார் இளங்கோ அடிகள். முருகனுக்கு குன்றக்குரவை, துர்க்கைக்கு வேட்டுவவரி, கண்ணபிரானுக்கு ஆய்ச்சியர்குரவை என்றெல்லாம் பாடிய இளங்கோ அடிகள், பிரமன், பிராமி (சரஸ்வதி) உரிய தாமரை நாளம் கொண்டு பனையோலை, தாமரை இலை, தாழை மடல், யா மரம் (சால மரம் என்பர் வடமொழியில்) பட்டை போன்றவற்றில் எழுத்து எழுதுமாறு தாமரைநாணை பள்ளிச்சிறுமியர் வைத்துள்ளதாக இச் சிற்பத்தில் செய்துள்ளனர். இளங்கோ அடிகள் காலமும், இச் சிற்பத்தின் காலமும் ஒன்றானதாக இருக்க வாய்ப்புண்டு. "ஒரு நாள் ஆதி பிரம்மாவாகிய சுவாமி கொலுமண்டபத்தில் அரியணையின்மீது அமர்ந்திருந்து கலை, விஞ்ஞானம் முதலியவற்றை உலகுக்கு வெளியிடுவோம் என்று நினைத்தார். அச்சமயத்தில் உருவம், அழகு முதலிய குணங்களால் விளங்கிய இலக்குமி, சரசுவதி போன்ற பிராமி, சுந்தரி என்னும் பெண்கள் மங்கல ஆபரணங்கள் பூண்டு, அவ்விடம் வந்து பணிவுடன் மூவுலக நாதனின் திருவடிக் கமலங்களை வணங்கி நின்றனர்.” (ஸ்ரீபுராணம், தமிழில் அஜிததாஸ்).

சிந்து சமவெளிக் காலத்தில் இருந்து இவ்வாறு எளிதில் அழியும் பொருள்களில் எழுத்துகளை வரைந்தனர். இன்றும் கன்னடத்தில் “வரைக” (Baraha) என்றால் எழுதுதல். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிரமனின் தாமரைத்தண்டை “எழுத்து இயல் நாளம்” என்கிறார். திருவரங்கத்தந்தாதிப் பாடலுமுண்டு. சிந்து முத்திரை தாமரை நாளத்தில் அனைத்து உயிர்களும் தோன்றுதலைக் காட்டுகிறது, Indus seal showing Life originates in the pericarp of the Lotus, see the Unicorns and the Bodhi fig tree leaves emanating from the pericarp of the lotus at the very center of the Universe.

இந்தியக் கலைகளிலே முக்கியமான பொருள் என ஒன்றைக் குறிப்பிடலாம் என்றால் அது தாமரை என்பார் கலாயோகி ஆனந்த குமாரசாமி. அந்தத் தாமரை நாளத்தை சுந்தரி, ப்ராமி கல்வி கற்கும் அதிசயப் படைப்பில் பயன்படுத்துவதில் வியப்பில்லை.


Summary: The eclectic and significant Jaina sculpture, modeled by a genius, is not just simple Chamaradhari-s. It records the Sripuranam story of the teaching of Brahmi script and Arithmetic to little girls in a nutshell. Remember Brahmi script reaches Tamil country from the North via Kongu (Kodumanal, Porunthal etc.,). A rare sculpture stressing the importance of Education to young girls, which we see in Tamil Jaina literature often. This important art creation must have happpened during the reign of Kalabhras who came from Karnataka. Its time is quite early, and this art creation, I think, follows what was happening in Buddhism at that time. To spread Buddhism, instead of just Buddha vachana-s in Pali language (as Theravada) orally, Mahayana religionists start to develop Visual techniques in sculpture and painting. Likewise, here is a Visual mode of teaching the Sripurana story by Jainas on the origin of Literacy. Since literacy among the general public was pretty low then, it is always better to teach by Visual means, and that is what this Sripurana sculpture does. In the NaaDu kaaN kaathai chapter, Ilango AdikaL follows the GaNDavyUha sUtra model of Mahayana Buddhism, to describe the entire Kaveri country from its birth in Sahyadri to the sea. Being eclectic, and not found in ancient Prakrit canon of Jain religion, this masterpiece was not considered  fit for worship by Orthodox Jains. Hence it was abandoned and got forgotten by the Jains of Tamil Nadu. Only now, they start seeing it.

அண்மையில், திருக்குறள் பற்றி நாகசாமி எழுதிய நூலைப் பார்த்தேன். அதில் ஐராவதத்தின் முக்கிய கட்டுரை ஆகிய எல்லிஸ் வெளியிட்ட வள்ளுவர் காசைப் பற்றி எழுதுகையில் “இது விஷ்ணு” என எழுதியுள்ளார். அது தவறு. அரவக்குறிச்சி ஆதிநாதர் சிற்பத்தின் அருகே உள்ளோரை ஆய்ந்தால் சாமரதாரிகளை விட ஸ்ரீபுராண சரிதம் கூறும் சிற்பம் என்று கருதத் தோன்றுகிறது. அதே போல, நாகசாமி கூறும் விஷ்ணு என்பதை விட, ஐராவதம் கூறும் வள்ளுவர் என்பது பொருந்துகிறது. கட்டுரை எழுதிடலாம்,

நா. கணேசன்
[1]
தாமரை பூத்த தடாகமடி - செந்
    தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதடி - ஞானத்

பாமழையால் வற்றாப் பொய்கையடி - தமிழ்ப்
   பைங்கிளிகள் சுற்றிப் பாடுதடி - ஞானத் 

தாமரை பூத்த தடாகமடி -செந்
 தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதடி - தாமரை

காவியச் சோலைஅதன் கரையழகே - பெருங்
  கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே
ஆவி மகிழும் தமிழ்த் தென்றலதே - இசை
 அமுதினைக் கொட்டுதுபார் இதனருகே! - ஞான......