தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012

உடன்பிறப்பே,


பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூறுகளையும், ஆதார மற்ற குற்றச்சாட்டுகளையும் சொல்லும்போது உரிய பதில் அளிப்பதற்கும் பேரவைத் தலைவரோ, ஆளுங்கட்சியோ வாய்ப்பு அளிக்காத நிலையில், ஏற்கனவே திட்ட மிட்டபடி, அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பேசுமாறு  பேரவைத் தலைவரே 19-4-2012 அன்று அழைக்கிறார்.   உடனே அவர் எழுந்து,  அரசைப் புகழோ புகழ் என்று  புகழ்ந்து பேச, அதைத் தொடர்ந்து   முதலமைச்சர் ஜெயலலிதா  எழுந்து,  ஒரு நீண்ட அறிக்கையினைப் படித்ததோடு, அதனைச் செய்தியாளர் களுக்கும் அளித்துள்ளார்கள்.   அந்த நீண்ட அறிக்கை முழுவதும்  தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு நான் அடுக்கடுக்கான  ஆதாரங்களோடு  எழுதிய தற்கும், ஜெயலலிதா தெரி வித்த பதில்கள் எல்லாம் எவ்வளவு தவறானவை என்பதை நிரூபித்து எழுதியதற்கும் விளக்கம் என்ற பெயரால் எழுதிப் படித்த “சமாளிப்புகள்” தானே தவிர அடிப்படையில்  அவற்றில்  எதுவும் உண்மை இல்லை.

அரசு விழாவில் ஜெயலலிதா பேசும்போது,  தமிழ் மொழியை உலகம் முழுவதும்  பரப்பு வதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி னோம் என்று சொன்னதால்,  தி.மு. கழக ஆட்சிக் காலத்திலும் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினோமே,  அதுமட்டும்  தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற் காக அல்லவா? என்று கேட்டிருந்தேன். அதற்கு நேரடியாகப் பதில் சொல்லத் தெரியாத ஜெயலலிதா,  கோவையில் நடைபெற்ற மாநாடு கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட “தன்னல தம்பட்ட மாநாடு” என்றும்  பேரவையிலே  கூறியிருக்கிறார்.

பொதுவாக பேரவையில் 110வது விதியின் கீழ் அறிக்கை படிக்கும்போதும், யாரோ ஒரு உறுப்பினர் ஒரு ஐயத்தை எழுப்பி அதற்குப் பதில் அளிக்கின்ற போதும் குற்றச்சாட்டுகள் இருக்கக் கூடாது என்பது மரபு. மரபுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? அவர்களுக்கு மரபாவது, மண்ணாங்கட்டியாவது? இருந்தாலும் முதல் அமைச்சர், பேரவையிலேயே படித்திருக்கிறாரே;  நான் விளக்கம் தராமல் இருக்கலாமா?    அம்மையார் ஜெயலலிதா நடத்திய தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டிலே பாடிய வாழ்த்துப் பாடலிலேயே  ஜெயலலிதா பெயரை  பல இடங்களிலே பாராட்டிக் குறிப்பிட்டே பாடப் பட்டது.   ஆனால் கழக அரசு நடத்திய கோவை மாநாட்டில்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பா என்னால் எழுதப்பட்டதே தவிர, அந்தப் பாடலில் என்னைப் பற்றிய பாராட்டு எதுவுமே கிடையாது.  தஞ்சையில் அம்மையார் ஜெயலலிதா நடத்திய மாநாட்டிற்காக வருகை தந்த  இலங்கைத் தமிழ் அறிஞர் கா. சிவத்தம்பி உட்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்ள  அனுமதிக்கப்படவே இல்லை.   இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம்  விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது.    ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு  ஜார்ஜ் ஹார்ட்,  அஸ்கோ பர்போலா,  வாசெக்,  கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத்,  கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி,  ஆண்ட்ரீஸ் கத்தோலியஸ்,  சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி,  தாமஸ் லேஇல்லை.   இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம்  விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது.    ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு  ஜார்ஜ் ஹார்ட்,  அஸ்கோ பர்போலா,  வாசெக்,  கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத்,  கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி,  ஆண்ட்ரீஸ் கத்தோலி யஸ்,  சீன நாட்டைச் சேர்ந்த கலையரசி,  தாமஸ் லேமன் ஆகிய வெளி நாட்டு அறிஞர்கள் எல்லாம்  வருகை தந்து பாராட்டினார்கள். முன்வரிசையிலே அமர்ந்திருந்தார் கள்.  ஆனால் ஜெயலலிதா, முன் வரிசையிலே என் குடும்பத்தினரும்,  தி.மு.க.வைச் சேர்ந்த “தலை சிறந்த தமிழறிஞர்களும்” அமர்ந்திருந்ததாக கிண்டல் செய்துள்ளார்.   என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசையிலே அமர்வதே பழித்துப் பேசப்படக்கூடிய பாவகரமான ஒன்றா? தி.மு.க.வில்  தமிழறிஞர்களே கிடையாதா?  அ.தி.மு.க.விலே தான் தலை சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் இருக்கிறார் களா?   என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசை யிலே அமரலாமா என்று கேட்கின்ற ஜெயலலிதா  சட்டப்பேரவையிலே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தன் உடன்பிறவாச் சகோதரியை அழைத்து வந்து மரபுக்கு மாறாக  துணை சபாநாயகர் அமர வேண்டிய இடத்திலே உட்கார வைத்தாரே,  அது எந்த வகை யிலே சரியானது? ஜெயலலிதாவே  பேரவைத் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டாரே;  அது எவ்வகை மரபு என்பதை ஜெயலலிதாதான் விளக்க வேண்டும்.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பேசிய ஜெயலலிதா பௌர் ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ,  அந்த நட்சத்திரத்தின் பெயர்தான் மாதத்தின் பெயராக அமைந்துள்ளது என்று கூறியதையொட்டி,  சித்திரை, கார்த்திகை மாதங்களைத் தவிர  மற்ற மாதங்கள் எல்லாம்  நட்சத்திரங்களின் பெயர்களில் இல்லையே  என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்து மாதங்களாகி விட்டன என்று வழக்கம்போல சமாளிக்கப் பார்த்திருக்கிறார். உதாரணமாக  விசாகம் என்பது வைகாசியாகவும்  -  அனுஷம் என்பது  ஆனியாகவும்  - பூராடம் என்பது ஆடியாகவும்  -  திருவோணம்  என்பது ஆவணியாகவும்  -   மிருகசீர்ஷம் என்பது  மார்கழியாகவும் -  பூசம் என்பது  தையாகவும் - மகம் என்பது  மாசி மாதமாகவும் - உத்திரம் என்பது பங்குனியாகவும் வார்த்தைகள் திரிந்து விட்டதாகச் சொல்லி யிருக்கிறார்.

தமிழறிஞர்கள்  இந்த மேதா விலாச விளக்கத்தை  ஏற்க  முடிந்தால் சரி!   சென்னப்பட்டி னம் சென்னை என்று மருவியதைப் போலத்தான் இந்தச் சொற்கள் எல்லாம் மாறிவிட்டன என்கிறார்.  நன்றாகவே  காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்! நான் மேலும் கேட்கிறேன்;  நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம்  திரிந்துதான் மாதங்களின் பெயர்களாக உள்ளன என்று கூறும் ஜெயலலிதா அவர்களே,  இந்தப் பெயர்கள் எல்லாம் திரிந்தன என்றால்,  நட்சத்திரங்களின் பெயர்களை மட்டும் ஏன் பழைய பெயரிலேயே உச்சரிக்கிறார்கள்?   நட்சத்திரங்களின் பெயர்களும் அல்லவா திரிந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்?

தொல்காப்பியர் “திங்கள் முன்வரின் இக்கே சாரியை”  -  இகர ஈற்று மாதப் பெயர்கள்  (ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி, பங்குனி) -  “இக்கு” சாரியை பெறும் என்றும்  “திங்களும்  நாளும்  முந்து கிளந்தன்ன”  ஐகார ஈற்று மாதப் பெயர்கள் (சித்திரை, கார்த்திகை, தை) முன் சொன்னவாறு  இக்கு சாரியை பெறும் என்றும் கூறியுள்ளாரே, அப்படியென் றால்  இந்தப் பெயர்கள் எல்லாம் தொல்காப்பியர் காலத்திலேயே திரிந்து விட்டன என்று ஜெயலலிதா சொல்கிறாரா?

அதுபோலவே சங்க இலக்கியங்களில் எல்லாம் மாதப் பெயர்கள் இடம் பெற்றுள்ளனவே, அப்படியென்றால்  சங்க இலக்கியங்களுக்கு முன்பாகவே ஜெயலலிதா சொல்வதைப்போல நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம் இத்தகைய மாதப் பெயர்களாக திரிந்து விட்டனவா?

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரிலே  சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய  ஒரு கட்டுரையை அம்மையார் ஜெயலலிதா  மேற்கோள் காட்டிப் பேசியிருந்த  காரணத்தால்,  அதே கட்டுரையின்  முதல் பகுதியில்,  அதே சிறுவை நச்சினார்க்கினியன்  தை மாதம்  பற்றி  எழுதியதை அப்படியே வரி பிறழாமல்  குறிப்பாக   “நாம் தைத் திங்களையே ஆண்டின்  முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்து வோம்”  என்று அவர் எழுதியிருக்கிறார் என்று நான் பதிலாகத் தந்திருந்தேன்.  தற்போது அம்மையார் முன் பக்கத்தில் சிறுவை நச்சினார்க்கினியன்    என்று தெரிவித்துள்ள கருத்தைப் பற்றி தான் எதுவும் சொல்லவில்லை என்று அப்படியே புறமுதுகிட்டுள்ளார்.   நச்சினார்க்கினியன் பற்றி நூற்றாண்டு விழா மண்டபத்திலே முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டாரா இல்லையா? அதே நச்சினார்க் கினியன்  தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாகச் செயல்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறாரா இல்லையா?  அதைத் தான்  தி.மு. கழக அரசு,  தமிழறிஞர்கள்  சொன்னதையெல்லாம் ஒப்புக்கொண்டு சட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதே தவிர தானாக இட்டுக்கட்டி எதையும் செய்துவிடவில்லை.

“வாழ்வியற் களஞ்சியம்”  என்ற  நூலில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றுதான் குறிப் பிடப்பட்டிருக்கிறதே தவிர, “தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும்” என்று குறிப்பிடப்பட வில்லை என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா!   என்ன செய்வது?   ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் முதலமைச்சராக வருவார்கள், அவர்களுக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வரும் என்பது அந்த நூலாசிரியருக்குத் தெரியவில்லை போலும்!   ஆனால் நான் இந்தப் பதிலை எழுதும்போது  கொட்டை எழுத்துக்களில், தமிழ் ஆண்டின் தொடக்கமே  தை  முதல்  நாள் என்றும்,  அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படு கின்றது என்றும் அந்த நூலிலே உள்ளது என்பதை எழுதிக் காட்டியிருக்கிறேன்.     இந்தப் பொருள் புரியாமல்  தை பிறந்தால் வழி பிறக்கும் என்றுதான் அதிலே உள்ளது என்று ஜெயலலிதா பேரவையில் உண்மைக்குப் புறம்பாகச் சொல்லியிருக்கிறார்.

அடுத்து  ஜெயலலிதா “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” என்ற நூலினை  மேற் கோள் காட்டி,  அந்த நூலில்  தமிழாண்டின்  தொடக்க மாதம் தை என்று குறிப்பிட்டிருப்ப தாகக் கூறியிருக்கிறார்  திரு. கருணாநிதி,  அந்த நூலில்  113வது பக்கத்தில்  “இச்செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது” என்றிருப்பதை தனக்கு வசதியாக  திரு. கருணாநிதி மறைத்துவிட்டார்” என்று  பேரவையிலே  படித்துக் காட்டியிருக்கிறார்.    தமிழக அரசினால் -  தமிழக அரசின் செலவில் - முதலமைச்சர் ஜெயலலிதாவின் அணிந் துரையுடன் வெளியிடப்பட்ட  “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே  தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்,  திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம்”  என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.   அந்தச் செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா.   சொற்பிறப்பியல் பேரகர முதலியில்  பொரு வெளியிடப்பட்ட  “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே  தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்,  திருவள்ளுவ ராண்டின் தொடக்க மாதம்”  என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.   அந்தச் செய்தி  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா.   சொற்பிறப்பியல் பேரகர முதலியில்  பொருள் கூறும்போது,  அதை எந்தப் புத்தகத்திலிருந்து  எடுத்தாண்டு இருக்கிறோம் என்பதை விளக்கியிருக்கிறார்கள். அதிலே என்ன தவறு? இன்னும் சொல்லப்போனால்,  அம்மையார்  அரை வாக்கியத்தைத்தான் எழுதியுள்ளார்.  முழு வாக்கியத்தையும் நான் கூறுகிறேன்.  அதாவது  “திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் இயற்றிய திருவள்ளுவர் ஆண்டு அல்லது  தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து இச்செய்தி தொகுக்கப் பட்டது”  என்று உள்ளது. ஆக  நான் கூறியதற்கு மற்றும் ஓர் ஆதாரமாக புலவர் இறைக் குருவனார் அவர்களும் தை மாதம்  தமிழாண்டின் தொடக்க மாதம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே  அம்மையார் ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இறைக்குருவனார் போன்ற புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனையை ஏற்றுத்தான் இந்தச் சட்டத்தை நான் பிறப்பித்தேன் என்பது உறுதியாகிறதா; அல்லவா? இறைக்குருவனார் கருத்தை யேற்றுத்தானே அந்த நூலில் அந்தப் பொருளை இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.   அந்த நூலை முழுவதும் படித்து விட்டுத்தானே  முதலமைச்சர்  ஜெயலலிதா அம்மையார் அந்நூலுக்கு  அணிந்துரை கொடுத்தார்?  இப்போது அவரே அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளலாமா?  தமிழ்நாட்டில் இருக்கின்ற  தமிழ் அறிஞர்களே, புலவர்களே,  சான்றோர்களே  அம்மையார் வைத்த வாதம் சரியா? நான் தருகின்ற விளக்கம் சரியா? என்பதை  சமன்  செய்து சீர்தூக்கும் கோல் போல் இருந்து நீங்களே  பதில்   கூறுங்கள்.

அடுத்து  முதலமைச்சர் ஜெயலலிதா மிகத் தெளிவாக ஒரு ஐயத்தைக் கேட்டிருக்கிறார்.   1963ஆம் ஆண்டு  நான் சட்டப்பேரவையில் உரையாற்றியதைக் குறிப்பிட்டு, அப்போதே திருவள்ளுவர் தை மாதத்தில்தான் பிறந்தார் என்று கூறி ஏன் விடுமுறை நாளாக அந்த நாளை அறிவிக்குமாறு கேட்கவில்லை என்று கேட்டுள்ளார்.   தமிழறிஞர்களும், புலவர்களும்  என்னிடம் 1963ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தக் கோரிக்கையைச் சொல்லியிருப்பார்களானால் நான் அப்போதே அதைக் கூறியிருக்க முடியும்.   அவர்களிடம் இதைக் கேட்டால், 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு அண்ணா மறைந்து நீ முதலமைச்சராக ஆவாய் என்று எங்களுக்கு எப்படித் தெரியும் என்பார்கள்? இந்தக் கேள்விக்குத்தான் நான் மயிலை கூட்டத்திலேயே தெளிவாக; “சூரியன் கிழக்கே உதிக்கிறது, மேற்கே மறைகிறது என்று முன்பு சொன்னார்கள்.  பிறகுதான் விஞ்ஞானிகள் அது தவறான கூற்று,  சூரியன் ஒரே இடத்தில் தான் இருக்கிறது;  பூமிதான் தன்னைத் தானே சுற்றிக்  கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது என்று கூறியபிறகு அதை ஏற்றுக் கொண்டோம். அதைப்போலவே  பூமி தட்டையாக உள்ளது என்று சொல்லப்பட்டது.  பிறகு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துச் சொன்ன பிறகு, பூமி உருண்டை என்பதை ஏற்றுக் கொண்டோம். ஏன் இதை முன்பே சொல்ல வில்லை என்றா கேட்க முடியும்?”  என்று குறிப்பிட்டேன்.

அதுமாத்திரமல்ல; இதிலே எந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது என்பது பிரச்சினையல்ல.    “தினமணி” நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த திரு. சாமி தியாகராசன் எனக்குக் கூட கடிதம் ஒன்றை, 1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் பேசி முடிவெடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையே என்று எழுதியிருந்தார்.   எப்போது முடிவெடுத்தார்கள் என்பதைவிட என்ன முடிவெடுத்தார்கள் என்பதுதான் முக்கியம்.    முடிவெடுத்தவர்கள் யார் என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில்தான் கழக ஆட்சியில் முடிவெடுக் கப்பட்டது.  இதிலே உள்ள முக்கிய குறையே;  தமிழர்களுக்கு என்று முறையான வரலாறு இல்லை என்பதுதான்.  இந்தக் குறை என்னால் மாத்திரமல்ல; நம்முடைய தமிழறிஞர்கள் பலராலும், வரலாற்றுப் பேராசிரியர்களாலும்  உணரப்பட்டது.
பொறியாளர் வே. வரதராசன் அவர்கள் எழுதிய “தமிழர் நாகரீகம்” என்ற நூலில் “1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ் அறிஞர்களும், சான்றோர் களும், புலவர்களும் ஒன்று கூடி ஆராய்ந்து திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதென முடிவெடுத்தனர்.  திருவள்ளு வர் காலம் கி.மு. 31  என்றும் அதையே திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம், தைத் திங்கள் முதல் நாள் (பொங்கல் திருநாளில்) எனவும் முடிவெடுத்தனர்” என்றுள்ளது.
1937ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் - தந்தை பெரியார், உமாமகேசு வரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியன், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்,  தமிழ்த்  தென்றல் திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. ராஜன்,  ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி போன்றோர் கலந்து கொண்ட அவையில்  - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்  என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் தனது தலைமையுரையில் வலியுறுத்தியிருக்கிறார்.
9-5-1971இல் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற  தமிழகப் புலவர் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா என முடிவு செய்யப்பட்டது.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக நமது “விடுதலை” நாளிதழில் அமெரிக்காவில் நாசா விண் மையத்தில் பணியாற்றும் பிரபல விஞ்ஞானி முனைவர் நா. கணேசன் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில்  இந்தப் பொருள் பற்றி விரிவான விளக்கங்களையும், எந்தெந்தப் புலவர்கள், தமிழறிஞர்கள் கடந்த காலத்தில்  தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்தார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையிலே தான் -  எந்த ஆண்டு அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதால்  2008இல் நான் இவற்றையெல்லாம் அறிந்து ஆய்ந்த பிறகு முடிவெடுத்து  அறிவித்தேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.   

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் விடுத்துள்ள அறிக்கையில்  நான் முறையாக எதையும் ஆய்வு செய்யாமல், தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக சட்டத்தை இயற்றினேன் என்று கூறியிருக் கிறார்.   தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு  என்பதை தற்போது சித்திரைத் திங்கள் என்று அம்மையார் மாற்றியிருப்பது தான் எதையும் ஆய்வு செய்யாமல் காழ்ப்புணர்வோடு செய்யப்பட்ட செயல். அவர்தான் தன்னிச்சையாக, தான்தோன்றித் தனமாக தமிழினத்தைத் திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பதைத்  தமிழக வரலாறு ஒருநாள்  நிச்சயமாக மெய்ப்பிக்கும்!   தமிழர்களின் சரியான அடையாளத்தை அழித்திட முற்படுவது அக்என்பதை தற்போது சித்திரைத் திங்கள் என்று அம்மையார் மாற்றியிருப்பது தான் எதையும் ஆய்வு செய்யாமல் காழ்ப்புணர்வோடு செய்யப்பட்ட செயல். அவர்தான் தன்னிச்சையாக, தான்தோன்றித் தனமாக தமிழினத்தைத் திசை திருப்பும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்பதைத்  தமிழக வரலாறு ஒருநாள்  நிச்சயமாக மெய்ப்பிக்கும்!   தமிழர்களின் சரியான அடையாளத்தை அழித்திட முற்படுவது அக்கிரமம்! அதற்குப் பொய்யான நியாயம் கற்பித்திட முயலுவதும்  புல்லர்கள் சிலர் புயம் தட்டிப் புறப்படுவதும் அராஜகம் என்பதை உண்மைத் தமிழர் விரைவில் உணர்ந்தே தீர்வர்!

அன்புள்ள,
    மு.க.




திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்


Navalar Somasundara Bharathiyar (with Chozhavandan R. Srinivasavaradan and Madurai V. G. Srinivasan. Photo courtesy: R. A. Padmanabhan, Chithira Bharathi, Publisher: Pollachi N. Mahalingam).

In Tamil Nadu, there is a raging controversy between Jayalalitha and M. Karunanidhi about Tiruvalluvar AaNDu. I wrote a piece in Vallamai e-zine giving some details on who gave the Thai Pongal date:
http://www.vallamai.com/literature/articles/19155/
Subsequently it was printed in Tamil Nadu in Viduthalai, a magzaine started by Periyar EVR, and Kalaignar M. Karunanidhi read the essay and quoted it in Kalaignar TV & he mentioned about it also in his daily letter to UdanpiRappu in Murasoli paper (22-April-2012).

After the Vallamai article, "TiruvaLLuvar tirunAL tanta Naavalar Somasundara Bharathiyar" I wrote another in the series for Vadakkuvaasal, a print magazine from Delhi, suggesting a compromise: Tiruvalluvar TirunaaL on Pongal day, and Tolkaappiyar TirunaaL on Chitthirai 1 (traditional Tamil New Year day). Note that I mention extensively Jaina contributions to Tamil, and the North-South megalithic expansion into sites like KoDumaNam & Porunthal (Kongu), Adichanalluur (Porunai) etc.,

Next article I'm writing is about the Tamil month name, தை (tai) which is a word of pure Tamil/Dravidian origins. and is not a Sanskrit word as evidenced from Sangam literature.

Any learned comments welcome,
N. Ganesan


திருவள்ளுவர் பிறந்தநாள் தேர்வில் நாவலர் பாரதியார் பங்கு: தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் இரு தமிழ்ப் பேராசிரியர்கள் முக்கியமானவர்கள். அவர்களில் முதல்வர் சென்னையில் வாழ்ந்த மறைமலை அடிகளார். இரண்டாமவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராய் வீற்றிருந்த பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 – 1959). நாவலர் பாரதியாரும், பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும் பள்ளித் தோழர்களாய் எட்டயபுரத்தில் வளர்ந்தபோது இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை ஈழப்புலவர் வழங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரிடம் தூத்துக்குடியில் பணிபுரிந்து காந்தியடிகளைத் தென்தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து சொற்பொழிவு நிகழ்த்தியவர் நாவலர். நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஆனால், இராஜாஜி அரசாங்கம் 1937-ல் பள்ளிகளில் இந்தியைப் புகுத்தியபோது காங்கிரசை விட்டு விலகி இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைவரானார். சென்னையில் 1937-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் இவருக்கு ஆசிரியர். எனவே, தனித்தமிழில் அழகிய நூல்கள் பல எழுதினார், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்துக்குப் புத்துரையும், கம்பன் திறனாய்விலும் புகழ்பெற்றவர். அறிஞர் அண்ணா கம்பன் காப்பியத்தை எரிக்க வேண்டும் என்றபோது அதை மறுதலித்து சேலத்தில் வாதாடியவர் நாவலரே. ’கம்பனிற் சிறந்த கவி தமிழில் இல்லை’ என்ற கொள்கையுடைய தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் சோமசுந்தர பாரதி ஆவார். ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் 1944-ல் நாவலர் என்ற பட்டத்தை வழங்கியது. ஈழத்துப் புலவர் சங்கத்தாரால் பாராட்டப்பெற்ற தமிழ்நாட்டுப் புலவர் முனைவர் சோமசுந்தர பாரதி ஒருவரே.
திருவள்ளுவர் தொடராண்டு தை முதல் நாள் என்றும், திருவள்ளுவர் பிறந்தநாள் எனத் தை இரண்டாம் தேதி என தமிழ்நாடு அரசாங்கம் 1971-லிருந்து செயல்படுத்தக் காரணம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தின் தமிழறிஞர்கள் முன்னெடுத்த முயற்சிகள் ஆகும். 1981-ல் எம்ஜிஆர் மதுரை உலகத் தமிழ் மாநாட்டின்போது அரசின் எல்லா அலுவல்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த ஆணையிட்டார். 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தியிலும் திருவள்ளுவர் திருநாள் இடம்பெறுகிறது:
“உழுவார் உலகத்தாருக்கு அச்சாணி என்பது உலக பொதுமறை தந்த வள்ளுவப் பெருமானின் வாக்கு. வள்ளுவரின் வாக்குக்கிணங்க உலகுக்கு உணவூட்டும் உன்னத தொழிலாம் உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த தமிழ் மக்கள் திருவள்ளுவர் திருநாளையும், உழவர் திருநாளையும் ஒன்றன்பின் ஒன்றாக உவப்புடன் கொண்டாடி வருகிறார்கள். தை முதல் நாளை பொங்கல் திருநாளாகவும், தை 2-ம் நாளை திருவள்ளுவர் திருநாளாகவும், தை 3-ம் நாளை உழவர் திருநாளாகவும் கொண்டாடுகின்ற மரபு பொருள் பொதிந்த மரபாக விளங்குகின்றது. இந்த பொங்கல் திருநாளில் காவிரி நீரில் நமக்குரிய பங்கை நாம் பெற்றே தீருவோம் என உறுதி ஏற்போம்.”
”மறைமலை அடிகளார் தை மாதம் பற்றியோ, தமிழ்ப் புத்தாண்டைப் பற்றியோ குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. 1935-ல் இந்தக் கூட்டத்தில், திரு.வி.க. உட்பட மிகப் பெரிய தமிழ் சான்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் என்பதுதான்.” என தமிழறிஞர்களைப் பாராட்டி விருதளித்த 2012 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். வரலாறு.காம், தமிழ்ஹிந்து (பால. கௌதமன்) வானியல், பழந்தமிழ், கல்வெட்டுக்கள் துணையுடன் இணையதளங்களில் எது தமிழ்ப் புத்தாண்டு? என்ற வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ”வள்ளுவர் பிறந்த மாதமாக மறைமலையடிகள் குறித்த வைகாசியை, திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் கொண்டாடிய வைகாசியை, பக்தவத்சலம் தலைமையிலான தமிழக அரசு அறிவித்த வைகாசியை, அண்ணா உடன்பட்ட வைகாசியைக் கருணாநிதி மாற்றி, திருவள்ளுவர் தினமாகத் தை இரண்டாம் நாளை 1971-ஆம் ஆண்டு அறிவித்தார். கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முந்திப் பிறந்தவர் திருவள்ளுவர் என மறைமலையடிகள் சொல்லிய ஆண்டை மாற்றாத கருணாநிதி, அடிகள் குறித்த வைகாசி மாதத்தை மட்டும் மாற்றித் தை என அறிவித்தார்.” (சாமி. தியாகராசன், திராவிடச் சான்றோர் பேரவையின் தலைவர் கட்டுரை, தினமணி, 14 ஏப்ரல் 2012).[1]
ஆனால், தைப் புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள் 20-ஆம் நூற்றாண்டுத் தேர்வில் நாவலர் பாரதியார் போன்ற தனித்தமிழ் இயக்கப் புலவர்களின் பங்களிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் மறைமலை அடிகள் தந்தார். 1935-ல் அடிகள் திருவள்ளுவர் திருநாள் கழக மாநாட்டின் தமது தலைமை உரையில் “கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” எனக் குறிப்பிடுகின்றார். “தமிழர்க்கெனத் தனி ஆண்டுமுறை வேண்டும் என்றும், அவ்வாண்டு முறை உலகம் போற்றும் ஒப்பற்ற மறை நூலை ஆக்கிய தமிழ்ப் பேராசிரியர் திருவள்ளுவர் பெயரால் அமைதல் வேண்டும் என்று ஆராய்ந்த அடிகள் அதன் காலத்தை கி.மு. 31 எனத் தீர்மானித்தார். திருவள்ளுவர் திருநாள் வைகாசித்திங்கள் பனை (அனுஷம்) நாள் எனவும் திடப்படுத்தினார்” (அடிகளின் மகன் எழுதிய மறைமலை அடிகள் வரலாறு). இரண்டு ஆண்டுகள் கழிந்தபின்னர் 1937-ல் திருச்சியில் நடந்த மாநாட்டில் அடிகளின் மாணவர் ஆன நாவலர் சோமசுந்தர பாரதியார் திருவள்ளுவர் பிறந்தநாளையும், தொடராண்டின் முதல்நாளையும் தைப் பொங்கலுக்கு மாற்றுகிறார் என்பது இருக்கும் சான்றாதாரங்களால் தெரிய வருகிறது. நாவலர் மறைவின் பின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் பிறந்தநாளாகத் தை இரண்டாம் நாள் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டிய புலவர்களுள் தலைமை வகித்தவராய் விளங்குகின்றார்.
திருவள்ளுவர் பிறந்தநாள், திருவள்ளுவர் ஆண்டாகத் தைப் பொங்கல் ஆன 20-ஆம் நூற்றாண்டுச் சரிதம்: 1937 டிசம்பர் 26-இல் திருச்சியில் ‘அகில இந்தியத் தமிழர் மாநாடு’ நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாவலர் பாரதியார் தலைமையில் சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது நினைவுகூரலாம். திருச்சி மாநாட்டில் பெரியார் ஈவேரா, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேரா. கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், மதுரை பி.டி. இராசன், ஆர்க்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக் கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். மறைமலை அடிகளார் போன்றோர் கொண்ட தமிழறிஞர் அவையில் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் திருநாள் என மாட்டுப்பொங்கல் தினத்தைக் கொண்டாடவும் நாவலர் விழாவின் தலைமை உரையில் வலியுறுத்தினார். 1949 தைப் பொங்கலின் போது சென்னையில் திருக்குறள் மாநாடு பல தமிழறிஞர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்துள்ளது. திருவள்ளுவருடன் தைப்பொங்கல் பெரிய அளவில் தமிழறிஞர்களால் இணைக்கப்படுவது 1949-ஆம் ஆண்டிலேதான் தொடங்குகிறது [2]. பள்ளிக் கல்வி இல்லாத தமிழர்களுக்கும் தனித்தமிழ் இயக்கத் தேர்வாகிய தைப்பொங்கலுடன் திருவள்ளுவரைச் சேர்த்தலை 1949-ஆம் ஆண்டுப் பொங்கலின் திருக்குறள் மாநாடு ஆரம்பித்தது என்று கருதலாம்.
சங்க இலக்கியங்களை அழிவில் இருந்து காத்து அருமையாக அச்சிட்ட உ. வே. சாமிநாதய்யர் அவர்களும் தமிழ்ப் பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் திருவள்ளுவர் வரலாற்றாராய்ச்சியைப் பாராட்டிய நிகழ்ச்சி 1939-ல் நடந்திருக்கிறது. அதைப் பற்றி விளக்கமாகப் பதிவு செய்துள்ளவர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆவார். கோயம்புத்தூரில் ’திருவள்ளுவர் படிப்பகம்’ என்ற அமைப்பு அவரை அழைத்து நீண்ட சொற்பொழிவை பிப்ரவரி 1953 ஏற்பாடு செய்தனர். பிரபல விஞ்ஞானி ஜி. டி. நாயுடு அவ்விழாவில் முத்தமிழ்க் காவலரின் பேச்சை ஒலிநாடாக்கருவி (spool tape recorder) கொண்டு பதிவுசெய்துள்ளார். அப்பேச்சை ஒலிநாடாவில் கேட்டு எழுதி 1953 நவம்பரில் திருவள்ளுவர் படிப்பகத்தார் கோவை மாநகரில் அச்சுப் புத்தகமாகப் பிரசுரித்தனர். அது பின்னர் பாரி நிலையத்தாரால் பல பதிப்புகளாய் வெளியாயின. வள்ளுவர் திருநாள், ஆண்டு உருவாக்கத்தில் நாவலர் பாரதியாரின் பெரும்பங்கு இந்நூலால் பெரிதும் தெரிய வருகிறது. 2012-ல் நூற்றாண்டு காணும் மு.வ.வும், ஔவை துரைசாமிப் பிள்ளையும் நூலுக்கு முன்னுரை அளித்துள்ளனர். எனவே, விரிவாக கி. ஆ. பெ. விசுவநாதம், வள்ளுவரும் குறளும், (கோவை, 1953) இங்கே பதிவு செய்வதில் மகிழ்வெய்துகிறேன்:
வள்ளுவரும், குறளும் (முதற்பதிப்பு: 1953, கோவை. 8-ஆம் பதிப்பு 1966, சென்னை பாரிநிலையம்)

முதற்பதிப்புரை:
வள்ளுவன் வாய்மொழி குறளோடு நிற்கின்றது. அது வாழ்வோடு ஒன்ற வேண்டும் என்பது எங்கள் கருத்து. அறம் வளர, அமைதி நிலவ, இன்பம் பெருக, குறள்நெறி தழைக்க வேண்டும். வள்ளுவர் படிப்பகம் அதற்கென்றே தொண்டு செய்து வருகின்றது.
“வள்ளுவரும் குறளும்” என்ற இந்நூல் படிப்பகத்தின் ஆண்டுவிழாவில் அறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் பேசியது. அது ஓர் சிறந்த நூலாக அமைந்திருக்கிறது. சிறியர், பெரியர், செல்வர், வறியர், ஆண், பெண் ஆகிய அனைவருடைய வாழ்வுக்கும் வேண்டிய செய்திகள் பல இந்நூலில் குவிந்து கிடக்கின்றன. ஆண்டு விழாவுக்கு வந்திருந்து, விழாவைச் சிறப்பித்து, இப்பேச்சினை ஒலிப்பதிவு செய்து அச்சிட்டு வழங்கிய வள்ளல் தமிழகத்தின் அறிஞர், உலக விஞ்ஞானி, உயர்திரு. G. D. நாயுடு அவர்களின் அருந்தொண்டிற்கு எங்கள் அன்பு கலந்த நன்றி.
அணிந்துரையும் முன்னுரையும் வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு வணக்கம்.

கோவை -                                                                                                                                                              தங்கள்,
1-11-1953 –                                                                                                                    திருவள்ளுவர் படிப்பகத்தார்
வள்ளுவரும் குறளும்

அன்பும் பிரியமும் உள்ள தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே!
உங்கள் அனைவருக்கும் இந்த நல்ல நாளிலே எனது தாழ்மையான வணக்கம். கோவை அனுப்பர்பாளையம் திருவள்ளுவர் படிப்பகத்தின் மூன்றாவது ஆண்டு விழா, பெரியோர்களாகிய உங்கள் முன்பு இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவிலே பங்குபெறும் பேறு எனக்குக் கிடைத்தமைக்காக உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை ஒரு பெரும் பேறாகவும் கருதுகின்றேன். திருவள்ளுவர் படிப்பகம் மூன்று ஆண்டுகளாக இந்நகரில் நடந்து வருவதும், ஆங்கிலம் படித்து அலுவல்களிலே இருக்கின்ற நல்ல தமிழ் இளைஞர்கள் இதிற்பங்கு பெற்றுத் திருக்குறள் வகுப்பை நடத்தி அதிற் படித்து வருவதும், எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்திகளாகும்.
திருவள்ளுவர் படிப்பகத்தையும், திருவாளர்கள் சி. கே. சுப்பிரமணிய முதலியார், சி. எம். இராமச்சந்திரன் செட்டியார், அ. கந்தசாமிப் பிள்ளை போன்ற பழம்பெரும் புலவர்களையும் கொண்டது இந்த நகரம். சிறந்த புலவர்களைக் கொண்டு திருக்குறள் வகுப்பை நடத்திக் கொண்டு வருகின்ற கழகத்தைச் சேர்ந்த நீங்கள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் தெரிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் என்றாலும் என்னை அழைத்து இதைச் சொல்லும்படி செய்ததைவிட, ஒரு புலவரை யழைத்துச் சொல்லச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. மற்றும் என்னை ஏன் அழைத்துச் சொல்லச் சொன்னீர்களென்றால், திருக்குறள் புலவர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல, புகையிலை வியாபாரிகளுக்கும் சொந்தம் என்று காட்டுவதற்காக அழைத்திருக்கின்றீர்கள் என்றே நான் கருதினேன். அது உண்மையானால், புலவர்களிடத்திலிருந்து திருக்குறளைக் கொள்முதல்செய்து பொதுமக்களிடம் விற்பதுதான் வியாபாரிகளின் கடமையாக இருக்கும்.
நான் அறிந்த மட்டில் சில ஆண்டுகள் ஆராய்ந்து கண்டுபிடித்த சில செய்திகளைக்கொண்டு எனது கருத்தை உங்கள் முன்பு கொட்டிக் குவிக்கலாம் என்று எண்ணுகிறேன். இங்கு பேச்சாளர் பலரைப் போடவில்லை. “பலரைப் போட்டால் ஒருவரிடமும் ஒன்றாவது சரியாகக் கேட்க முடிவதில்லை. ஆகவே, ஒருவன் தான் பேச வேண்டும். அதுவும் நெடுந்நேரம் பேசவேண்டும்” என்று படிப்பகத்தின் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்படியே பேச ஒப்புகிறேன், பேச்சு முடிகிற நேரம் எதுவென்று எனக்குத் தெரியாது. யாராகிலும் ஒருவர் இருவர் அப்படி எழுந்திருந்து போகத் தலைகாட்டுவதுதான் நான் பேச்சை நிறுத்தும் நேரம் என்று முன்னதாகவே இப்பொழுது உங்களிடம் சொல்லிக் கொள்ளுகிறேன். பேச்சின் தலைப்பு “வள்ளுவரும் குறளும்” என்பது. பேச்சின் குறிக்கோள் ‘நீங்கள் அனைவரும் திருக்குறளைப் படிக்க வேண்டுமென்பது. பேசுவதின் கருத்து ‘வள்ளுவர் உயர்ந்தவர், குறள் சிறந்தது’ என்பது. பேச்சினுடைய பலன் இனிமேல் உங்களிடத்திலே நாங்களெல்லாம் கண்டு மகிழப் போவது.
முதலில் பேசவேண்டுவது வள்ளுவரைப்பற்றி. அவரைப்பற்றிச் சொல்லவேண்டியது சில சொற்கள்தான். வள்ளுவர் பலர்; திரு சேர்ந்த வள்ளுவர் ஒருவர். குறள் பல; ஆனால், திரு சேர்ந்த குறள் ஒன்றுதான் உண்டு. திரு அடைமொழியாகச் சேர்ந்து தனிச்சிறப்பை யளிக்கின்ற பெயர்கள் தமிழ் நாட்டிலே பல உள. பல கோவை உண்டு நூல்களிலே. திரு சேர்ந்த கோவை ஒன்றே ஒன்றுதான். அது திருக்கோவை. பதிகள் பல உண்டு தமிழ்நாட்டிலே; ஆனால் திரு சேர்ந்த பதி திருப்பதி ஒன்றுதான். வாசகம் பல; ஆனால் திரு சேர்ந்த வாசகம் ஒன்றே ஒன்று. அது திருவாசகம். வள்ளுவர் என்று சாதியாலும் பெயராலும் பலர் இருந்தார்கள். வள்ளுவர் என்றால் பலரைக் குறிக்கும். திரு சேர்ந்த அந்தப் பெயருக்கு உரியவர் ஒருவர்தான். ‘திரு’ தனிச் சிறப்பு. அதைப் பெற்ற வள்ளுவர் திருவள்ளுவர்.
அவர் நமது நாட்டிலே கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். இன்று (15-2-1953) கிறிஸ்து பிறந்து ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து மூன்று ஆண்டுகளாயின. அதற்கு முன்னே பிறந்தவர் வள்ளுவர். அவர் பிறந்து 1984 ஆண்டுகளாயின. அவரைப் பற்றிய கதைகள் தமிழ்நாட்டிலே பல. அவையனைத்தும் அறிஞர்களாலே வெறுத்து ஒதுக்கப் பெற்றவைகள். திருவள்ளுவரைப் பற்றித் தமிழ்நாட்டில் வழங்குகின்ற கதைகள் கணக்கற்றவை. மயிலாப்பூரில் பிறந்தார் என்பது ஒரு கதை; ஆதி என்ற புலைக்குடி மகளுக்கும் பகவன் என்ற உயர்குடி மகனுக்கும் பிறந்தார் என்பது மற்றொரு கதை. ஏலேலசிங்கனாலே எடுத்து வளர்க்கப் பெற்றார் என்பது இன்னொரு கதை. அவர் மயிலாப்பூரில் கோயில் கொண்டார் என்பது வேறொரு கதை. அவர் வாசுகி என்ற ஒரு பெண்ணை மணந்தார்; அந்த அம்மாள் கிணற்றிலே தண்ணீரை இறைத்தார்கள்;‘அடி!’ என்பார். குடத்தை விட்டுவிட்டு ஓடி வருவார்கள்; திரும்பிப் போய்த்தான் பாதியில் தொங்கும் குடத்தை இழுப்பார்கள் என்பது இன்னொரு கதை. எத்தனையோ கதைகளைத் தமிழ்நாட்டில் புகுத்தி வைத்தார்கள். இந்தக் கதைகளால் உங்களுக்கும் நமக்கும் ஆவதென்ன? “உண்மையான வரலாறு எது?” என்ற ஐயப்பாடு தமிழ்நாட்டிலே உள்ள புலவர் பெருமக்களுக்குத் தோன்றியது.
“வள்ளுவர் வரலாறு எது?” என்று அறியப் புலவர்கள் அனைவரும் கூடினார்கள். கூடிய நகரம் சென்னை; கூடிய இடம் பச்சையப்பன் கல்லூரி; கூடிய நாள் 1939 மார்ச் 31. தலைமை வகித்தவர் மகாம்கோபாத்தியாய உ. வே. சாமிநாதய்யர். வந்திருந்த புலவர்கள் 530-க்கு மேற்பட்டவர்கள். பேசியவர் 11 பேர். 10 பேர் பேசியும் கூட எவரும் சரி என்று ஒப்பவில்லை. பதினொன்றாவதாகப் பேசியவருடைய பேச்சுதான் வள்ளுவருடைய உண்மையான வரலாறாக இருக்கவேண்டுமென்று கூட்டத்தினர் ஒப்பினர். கூட்டத்தினர் என்ன? தலைமை வகித்திருந்த உ.வே. சாமிநாதய்யர் அவர்களே எழுந்திருந்து ‘இது தான் சரி’ என்று பேசியவரை நெஞ்சோடு நெஞ்சம் இறுகத் தழுவிக் கட்டிக்கொண்டு மக்களுக்கு அறிவித்தார். அப்புறம் வசிஷ்டரே இராஜரிஷி என்று ஒப்புக்கொண்ட பிறகு உங்களுக்கும் நமக்கும் அதிலே கருத்து வேறுபாடு எதுவும் இருக்க முடியுமா? ஒப்ப வேண்டியதுதான். அப்படிப் பேசிய பெருமகன் பசுமலைப் பேராசிரியர் சோமசுந்தர பாரதி. அந்தப் பேச்சினை, உடனே மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் குறித்துக்கொண்டு, மதுரைக்குச் சென்று அச்சடித்து வழங்கினார்கள். உரிமையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். விலை நான்கணா விதிக்கப் பெற்றது. இப்படிச் சொன்னதனாலேயே நீங்கள் ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிடாதீர்கள், புத்தகம் வேண்டுமென்று. பதிலே வராது. நேரிலே போய்க் கேட்கலாம் என்று துணிந்து போனால் புத்தகம் அங்கு இருக்காது. நாங்கள் அச்சடிக்கிறோம் என்று கேட்டாலும் அச்சடிக்கிற உரிமையும் கொடுக்கமாட்டார்கள். இது இன்று அவர்கள் செய்யும் நல்ல தமிழ்த்தொண்டு!
அவ் வரலாற்றினுடைய தொகுப்பு இதுதான். “வள்ளுவர் ஒரு சிறந்த தமிழ் மகன். நல்ல வேளாண்குடி மரபினர். அவர் பிறந்தது, வாழ்ந்தது, இறந்தது அனைத்தும் மதுரை. அவர் பாண்டிய மன்னனுக்கு அரசனது உள்படு கருமத் தலைவராக (Private Secretary) இருந்தவர். அதாவது, அரசனது கருத்தை மக்களுக்கு அறிவிக்கும் தொழிலைப் பெற்றிருந்தவர். இந்தத் தொழில் காரணமாகவே வள்ளுவர் என்ற பட்டத்தைப் பாண்டியனால் பெற்றவர். நல்ல வேளாண்குடி மகளை மனைவியாய்ப் பெற்றவர். உலகத்தை நோக்கி ஒரே நூலை நன்றாகச் செய்து கொடுத்து நம்மை விட்டு மறைந்தவர்.” இதுதான் அந்நூலின் தொகுப்புக் கருத்து. வள்ளுவரைப்பற்றி அறிய இது போதும்.”'

————————————————————————————————————————————————————————–
நாவலர் 1959-ல் மறைந்துவிட்டார். அவர் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தவர் திருவள்ளுவர் தொடராண்டு என எடுத்த முடிவுகளைக் கி. ஆ.பெ. விசுவநாதம், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரா. கா. சு. பிள்ளை, டாக்டர் மு.வ., முனைவர் சி. இலக்குவனார் போன்றோர் பரப்புரை இடையறாது 1960களில் செய்துவந்தனர். 49 தமிழ் அறிஞர்களும் புலவர்களும் சான்றோர்களும் [3] கொண்ட தமிழகப் புலவர் குழு 9.5.1971இல் திருச்சியில் நடந்த கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் பொங்கல் பெருநாள் ஒரு வாரம் முழுதும் விழாவாகக் கொண்டாடல் வேண்டும் என்று முடிவு செய்தது. அதன்படி பொங்கல் பெருநாள். தமிழர் திருநாள் -பொங்கல் பெருநாள்: மார்கழி இறுதி நாள் : போகி விழா, தை 1 : தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா, தை 2 : திருவள்ளுவர் விழா, தை 3: உழவர் விழா, தை 4 : இயல்தமிழ் விழா, தை 5: இசைத்தமிழ் விழா, தை 6 : நாடகத் தமிழ் விழா.
1971-ல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பில் திருவள்ளுவராண்டு செயல்படத் தொடங்கியது. தமிழறிஞர் பலர் பாராட்டினர். டாக்டர் மு. வ. அவர்கள் புதிதாக பொங்கலில் பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டுப் புத்தாண்டு பற்றி எழுதினார்: ”இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடை யெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால்தானே உண்டாகின்றன.
சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.
இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.” (1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்).

ஆய்வு உசாத்துணை:
[1] 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி:

[2] 1949-ல் பொங்கலின் போது நடந்த திருக்குறள் மாநாடும், பங்கேற்ற தமிழறிஞர்களின் சொற்பொழிவுச் சுருக்கங்களும்:

[3] சங்கத் தமிழ்ப் புலவர்கள் 49 பேர் என்பது இடைக்காலச் சைவ இலக்கிய மரபு. முதலில் இம் மரபை திருவள்ளுவமாலையில் காண்கிறோம். 49 என்னும் எண் வடமொழியின் எழுத்தெண்ணிக்கை ஆகும். இந்த எண்ணைக் கொண்டு கற்பனையான புலவர் பெயர்களைத் தருகிறது திருவள்ளுவமாலை. இப் புராணக்கதையின் வளர்ச்சியைத் திருவிளையாடல் புராணத்தில் ‘சங்கப் பலகை அளித்த படலம்’ அழகாகப் பாடுகிறது. ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா உரையுடன் மேலும் ஆராய விரும்புவோருக்காக என் வலைப்பதிவில் தந்துள்ளேன் – நா. கணேசன்


--------------

வல்லமை இணைய இதழிலும், பெரியார் தோற்றுவித்த விடுதலை (சென்னை) இதழிலும் அச்சான கட்டுரை.

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பாரதியார் விழா 2012


மகாகவி பாரதியார் பெயரில் நடக்கும் இலக்கிய, ஆய்வு, கலை விழா!

பாரதி பக்தர்கள் பலரும் தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொள்கின்றனர்.  தமிழ்நாட்டில் தமிழ் ஆசான்களிடையே கணிமையும், வலைப்பதிதலும் பற்றிச் சில ஆண்டுகளாய் பட்டறைகள் நடத்திக் கற்பித்துவரும் முனைவர் மு. இளங்கோவன், கொழும்பில் வாழும் சர்வேசுவரன் போன்றோர் ஈழத் தமிழரைக் கணினி யுகத்தில் படைப்பாளிகளாகச் செய்யத் துணைபுரிய இவ்விழா போன்றவைகள் மிக உதவும். விழா நிகழ்ச்சிகளை பேரா. வவேசு, மு. இளங்கோ, புதுவை அறிவுநம்பி, ...  விரிவாகப்  பதிவு செய்ய வேண்டுகிறேன். பேரா. கவிஞர் வ. வெ.  சுப்பிரமணியன் கலந்துகொள்கிறார். அவர் தலைமைக் கவிதை வாசிக்கிறார்.

பாரதியார் சங்கத் தலைவர் ரா. காந்தி எங்கள் ஊர்க்காரர். கொழும்புத் தமிழ்ச் சங்க வேண்டுகோளை ஏற்று பாரதியார் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் விழாக்களை நடத்தலாம். அமெரிக்காவில் பெட்னா, தமிழ்நாடு அறக்கட்டளை, ... போன்றன ஆண்டுதொறும் கலைவிழாக்களை பல லட்சம் $-ல் சினிமா, டிவி தமிழ் அறிஞர்களை அழைத்து எடுத்துவருவதை மாதிரியாகக் கொண்டு இலங்கை நகரங்களில் செயல்படலாம் - கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேராசிரியர்கள், அறிஞர்கள், கலைவாணர்கள் வருகைதரப் பெருவாய்ப்பாக இவ்விழாக்கள் அமையும்.

ஈழத் தமிழர்கள் டொராண்டோ பல்கலையில் - பேரா. எம்.ஏ. நுஃமான் நண்பர் மகாகவியின் மகன் சேரன் போன்றோர் சேர்ந்து நடத்தும் ஆய்வு மாநாடுகள் ஆண்டுதொறும் நன்கு நடக்கின்றன.  திராவிட மொழியியல், சிந்து ஆய்வு, சங்க ஆராய்ச்சி போன்றன சிறக்க டொராண்டோ  பல்கலையில் திராவிடாலஜிக்கு ஒரு பேராசிரியர் பீடத்தை தமிழர்கள் அமைத்திடல் வேண்டும். தேவையான பணம் பெட்னா,  டிஎன்எஃப், ஈழ தமிழர் சங்கங்கள் கொடுக்கும் என நம்புகிறேன். தமிழ்நாட்டில் தமிழாய்வுகள் பெரிதாக இல்லை. இருந்த ஆய்வேடுகளும் அனேகமாக இலாது  போய்விட்டன.  இலங்கை நாட்டில் இக்குறைகளுக்கு நிவாரணம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆண்டுதொறும்  இலங்கைத் தலைநகர் கொழும்பில், யாழில், மட்டக்களப்பில் தமிழ்ச் சங்கத்தார் நடாத்தும் ஆய்வுவிழாவில்  தமிழ்நாட்டு  அறிஞர்கள் கட்டுரை படித்தால் பெருமை என்ற நிலை ஏற்படல் வேண்டும்.
ஆய்வேடுகள் மாநாடு முடிந்தபின் இணையத்தில் ஏற்றப்பட்டால் உலகெங்கும் செம்மொழி ஆய்வு  சிறக்கும்.

இந்தியா போற்றும் ஜனாதிபதி மேதகு. கலாம் அவர்களின் யாழ் விஜயத்தின் போது  தமிழக, ஈழ நாட்டு உறவுகள் மேம்பட ஆலோசனைகள் வழங்கினார்கள். தமிழ்நாடு,  ஈழம் உறவுப்பாலமும், கடற்பாலமும் உருவாக வேண்டும். படகு, கப்பல்  போக்குவரத்தால்  இருபுறமும் வாழும் மக்கள் எளிதில் சென்றுவர வழிகள் பெருகவேண்டும். பேரா. எம். ஏ. நுஃமான் பாரதியை ஆராய்ந்தவர். பாரதியார் சங்கமும்,  கொழும்பு தமிழ்ச்  சங்கமும் அவர் தலைமையில் நடத்தும் முதல் மாநாடு ஆய்வுக்கு உரிய இடம்
அளிப்பதாக! ஐரோப்பா, அமெரிக்கா செல்லுதல் தமிழ்நாட்டு தமிழறிஞர்களுக்கு  சற்றுக் கடினமான செயல் (விசா, செலவு, இன்னபிற). இலங்கை மாநாடுகள்  ஆண்டுதோறும் நிகழ்ந்தால் பங்குபெற்று தங்கள் அரிய ஆய்வுகளை வெளியிட  ஒரு மேடையாக திகழ வாய்ப்புகள் மிகுதி. ஈழத் தமிழர்கள் இந்த முன்னெடுப்பைச் செய்தால் தமிழ்த்தாய் மகிழ்வாள்.

நா. கணேசன்

-------------------

வீரகேசரி, சூன் 1, 2012

சென்னை பாரதியார் சங்கம் இணைந்து
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் பெருவிழா!

பாரதியார் சங்கத்தின் தலைவர் - கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில்!



யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மேதகு அப்துல் கலாம்:


யாழ் சர்வகலாசாலையில் ஜனாதிபதி கலாம்:


ஜூன் 2, 3, 4 ஆம் திகதிகளில் வரலாறு காணாத பெருவிழாவை கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது. 
இந்தியா, இங்கிலாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் பேராளர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளார்கள். பகலில் ஆய்வரங்குகளும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன. 
ஆய்வுக் கட்டுரைகளை அரங்கேற்றுவதற்காக பதினேழு ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. “இலக்கியம் சகம் இன்றும் நாளையும்' என்னும் தொனிப் பொருளில் பல்  துறை சார்ந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. கவிதை, புனை கதை, கணினித் தமிழ், ஊடகம், நாட்டாயல், பெண்ணியம், இலக்கியக் கோட்பாடுகளும் திறனாய்வும், நாடகம் , பல்துறை, மொழி பெயர்ப்பு , சிற்றிதழ்கள், சிறுவர் இலக்கியம் என்று துறை சார்ந்து நூற்றிற்கும் மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர். 
பதினேழு அரங்குகள் ஒவ்வொன்றுக்கும் இருவர் இணைத் தலைவர்களாகவும், மேலும் இருவர் மதிப்பீட்டாளர்களாகவும், ஒவ்வொரு அரங்குக்கும் ஒருவர் இணைப்பாளராகவும் இருந்தும் செயற்படுவார்கள். முன்னூறுக்கு மேல் பேராளர்கள் பங்கு கொள்ளும் உலகத் தமிழ் இலக்கிய விழாவில் சுமார் இரு நூறு பேராளர்கள் ஆய்வரங்குகளில் பங்கு கொள்ள இருப்பது பெரும் சாதனையாகும். பேராசியர்கள், கலாநிதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் துறை சார்ந்தோர், ஆய்வாளர்கள் என்று இலக்கிய விழாவில் சங்கமமாக இருப்பது பெருமை என்பதுடன், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், அன்னியோன்னியமான உறவுகளைப் பேணவும் பேருதவியாக அமைந்துள்ளது. 
உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டின் ஒரு அங்கமாக 2, 3, 4 ஆம் திகதிகளில் மாலை 6.00 மணிக்கு “கலையரங்கம்' என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்கள். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் சங்கமிக்கக் கூடியதாக நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. 
02. 06. 2012 சனிக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடைபெறும் விழாவில் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமாகிய டொமினிக் ஜீவா மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைப்பார். தொடக்கவுரையை பேராசியர் சோ. சந்திரசேகரன் நிகழ்த்துவார். முக்கிய நிகழ்ச்சியாக விஸ்வநாதக் குருக்கள் சிவகுமார் சர்மாவின் மென்டலின் வாத்திய விருந்து அணி சேர் கலைஞர்களுடன் இடம்பெறும். வரவேற்புரையை ஆ. குகமூர்த்தி வழங்க, நன்றியுரையை த. கோபால கிருஷ்ணன் பகருவார். 
கொழும்புத் தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் தம்பு சிவசுப்பிரமணியம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, திருமதி நிலானி கோபிசங்கர் தமிழ் வாழ்த்தினை இசைப்பார். இறுதியாக சங்க கீதத்துடன் முதல் நாள் கலையரங்கம் நிறைவுறும். 
இரண்டாம் நாள் 03. 06. 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சிகள் திருமதி இராஜமனோகரி புலேந்திரனின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும். 
தமிழ் வாழ்த்தினை திருமதி சொர்ணலதா பிரதாபன் இசைப்பார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிதிச் செயலாளர் செல்வ திருச்சந்திரன் வரவேற்புரை வழங்குவார். தலைமையுரையினை மு. கதிர்காமநாதன் செப்ப, பேராசியர் ஆசி. கந்தராசா (அவுஸ்திரேலியா) தொடக்கவுரையை வழங்கிச் சிறப்பிப்பார். 
கலையரங்க நிகழ்ச்சியில் “வீணை விருந்து' இடம்பெறும். இந்திர குமார சிவம் அவரது மாணவிகளும் பங்கு கொள்வர். மேலும் பேராசிரியர் சி. மௌனகுரு வழங்கும் “இராவணேசன்' நாடகம் மேடையேற்றப்படும் க. க. உதயகுமார் நன்றியுரை வழங்குவார். திருமதி. சுகந்தி ராஜகுலேந்திரா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார். சங்க கீதத்துடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சி கள் நிறைவுபெறும். இன்றைய நாள் நிகழ்ச்சியில் முக்கிய அங்கமாக “கலை இலக்கிய வாதிகள் கௌரவிப்பு இடம் பெறும். 
 சிற்பி. சிவ. சரவணபவன், திருமதி. ந. பாலேஸ்வரி, கல்வயல் வே. குமாரசாமி, சக்தி. பால ஐயா, அன்புமணி இரா. நாகலிங்கம், எஸ். ஆர். எஸ். ஹஸன் மௌலானா, ஆசை இராசையா ஆகியோர் கௌரவம் பெற இருக்கிறார்கள். கௌரவிப்பு உரையினை ஜின்னா ஷரிபுத்தீன் வழங்குவார்கள். கொழும்புத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் பேராசிரியர் அ. சண்கமுகதாஸ் நிறைவுரையை முன்வைப்பார்கள். 
கலையரங்கம் நிகழ்ச்சியில் சங்கீத வித்துவான் என். எஸ். வாகீசன் அணி சேர் கலைஞர்களுடன் வீணை இசை வழங்குவார். அதைத் தொடர்ந்து நாட்டிய மணி திவ்வியா சிவநேசனும் அவரது அபிநய சேத்ரா நடனப் பள்ளி மாணவர்களும் இணைந்து நாட்டிய விருந்து அளிப்பார்கள். 
கொழும்புத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் அ. இரகுபதி பாலஸ்ரீதரன் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சித் தொகுப்பினை எஸ். எழில்வேந்தன் வழங்குவார். சங்க கீதத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுபெறும்.   
எழுதியவர்: தம்பு சிவா, வீரகேசரி, சூன் 1, 2012

-------------------------------

கொழும்பைப் புதையுங்கள், பாரதியை வாழவிடுங்கள் - இலங்கை மாநாட்டு சர்ச்சை

 

மக்களைக் கொன்றுவிட்டால், அவர்கள் பேசிய மொழி வாழுமா?- இது அபத்தமான கேள்வி என்றால் கொழும்பில் நடக்கும் மாநாடும் அத்தகைய அபத்தம்தான்!
சென்னையில் உள்ள பாரதியார் சங்கமும், கொழும்பு தமிழ்ச் சங்கமும் இணைந்து இலங்கைத் தலைநகர் கொழும்பில், பாரதி விழாவையும் உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டையும் ஒருசேர நடத்துகின்றன.்

இதில் கலந்து​கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து தமிழறிஞர்கள் சிலர் சென்றதற்கு வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தலைமையில் 50 படைப்பாளிகள் கண்டனம் தெரிவித்து, விழாவையும் மாநாட்டையும் புறக்கணிக்கக் கோரி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

'ராஜபக்சே அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும், தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தொடர்ந்து முயன்றாலும், உலக அரங்கில் வலுவான எதிர்ப்பு அலை அடிக்கிறது. இந்த நிலையில், 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்’ என்ற முழக்கத்துடன் ராஜபக்சேவின் தலைநகரில் இந்திய அதிகாரிகளைக் கொண்டு விழா எடுப்பது, பாரதி என்கிற போராளிக் கவிஞனின் புகழுக்கும் பெருமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். இனவெறி இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்துவதைத் தவிர, இந்த விழா வேறு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. கொல்லப்பட்ட எம் சொந்தங்களுக்கு தாய்த் தமிழகம் ஒருபோதும் துரோகம் செய்யாது என்பதைப் பாரதி அன்பர்கள் நிரூபிக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்கு, மனச்சாட்சியுள்ள எழுத்தாளர்​களாகிய நாங்கள் ஒரு போதும் துரோகம் இழையோம் என உறுதி பூணுகிறோம்’ என்கிறது அறிக்கை.   

இந்த அறிக்கையில் புலவர் புலமைப்பித்தன், இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி, புகழேந்தி தங்கராஜ், கவிஞர்கள் காசி ஆனந்தன், இன்குலாப், புவியரசு, அறிவுமதி, தாமரை, மணிகண்டன், எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், தமிழருவி மணியன்,  கோவை ஞானி, அழகியபெரியவன் சந்திரா, தி.பரமேசுவரி ஓவியர்கள் வீர.சந்தானம், டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட 50 படைப்பாளிகள் கையெழுத்துப் போட்டு இருக்கின்றனர்.

இந்தக் கண்டன அறிக்கையை முன்னின்று தயாரித்த எழுத்தாளர் பா. செயப்​பிரகாசத்தை அணுகினோம்.

''இலங்கையின் மனித உரிமை மீறல்கள், மீள்குடியமர்த்தல், மறுவாழ்வுப் பணிகள் குறித்து வரும் அக்டோபர் மாதம்  ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. கூட்டத்தில் மீண்டும் பரிசீலிக்கப்பட இருக்கிறது. அப்போது, அங்கே எல்லாம் சரியாக இருக்கிறது. இலக்கிய விழாக்கள் நடத்தும் அளவுக்குத் தமிழர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்று உலகுக்குச் சொல்வதற்காகவே இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன. இலங்கை அரசும் இந்தியத் தூதரகமும் இணைந்து இந்த மாநாட்டுக்கு உதவுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து வழக்கறிஞர் காந்தி சென்றிருக்கிறார். இவர் ஒரு காங்கிரஸ்காரர். இவர்தான் பாரதியார் சங்கத்தின் தலைவரும்கூட. கல்கி தொடங்கிய சங்கம் இது. அதன்பின், ம.பொ.சி., பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் இதற்குத் தலைவராக இருந்திருக்கின்றனர். விடுதலை குறித்து பாரதி என்ன கருத்து வைத்திருந்தார் என்பதை அறிந்த பாரதியார் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மற்ற நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? கொழும்பில் உள்ள தமிழ்ச் சங்கத்துடன் இணைந்துதான் இதை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையில் உள்ள சில எழுத்தாளர்கள், கொழும்பு தமிழ்ச் சங்கம் இலங்கை அரசின் ஆதரவில் இந்த மாநாட்டை நடத்தவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், இலங்கை அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த நிகழ்வையும் நடத்த முடியாது என்பதுதான் அங்கே உள்ள உண்மை நிலைமை. கவியரங்கம், பாராட்டு விழா போன்றவற்றை வேண்டுமானால் சுதந்திரமாக நடத்த முடியும். இதுபோன்ற மாநாடுகளை இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் நடத்தவே முடியாது என்பதுதான் நிலைமை.

2010-ல் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நாட்களில் நான் இலங்கை சென்று இருந்தேன். அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'இலங்கை அரசின் ஒப்புதலோடுதான் இந்த மாநாடு நடக்கிறது’ என்று சொன்னார்கள். ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் சிவத்தம்பியே பின்னாளில், 'இந்த மாநாட்டை வேறு நாட்டில் நடத்தியிருக்க வேண்டும்’ என்று கருத்துக் கூறினார்.

சாக்ரடீஸுக்கு மரண தண்டனை விதிக்கப்​படுவதற்கு முன்னால் நீதிபதி அவரிடம், 'உன் கருத்துக்களைத் திரும்பப் பெற்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப்​ போகிறாயா? அல்லது உன் உயிரைவிட்டு உன் கருத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறாயா?’ என்று கேட்டார். சாக்ரடீஸின் மனைவி உட்பட சுற்றத்​தார்கள் அனைவரும், 'உயிர் முக்கியம். ஆகவே கருத்துக்களைத் திரும்பப் பெறுங்கள்’ என்றனர். ஆனால், சாக்ரடீஸ் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் 'என்னைப் புதையுங்கள். என் கருத்துக்கள் உயிர் வாழட்டும்’ என்றார். நான் அந்த நீதிபதி போல கேட்க விரும்புகிறேன். 'பாரதியைப் புதைத்துவிட்டு கொழும்பை வாழவைக்​கப்​போகிறீர்களா? அல்லது கொழும்பைப் புதைத்து பாரதியை வாழவைக்கப் போகிறீர்களா?’ என்பது​தான். என்ன செய்யப்போகிறார்கள் பாரதி அன்பர்​கள்?
 

நன்றி: ஜூனியர் விகடன்

 --------------------------------------------------------------------

 

பாரதிக்கு முதன்மை வழங்கும் கொழும்பு தமிழ்ச் சங்கம் போல் வேறெங்குமில்லை. -இந்தியக் கவிஞர் அறிவுநம்பி!

மக்கள் விடுதலைக் கவிஞன் பாரதிக்கும் அவன் படைப்புகளுக்கும் முன்னுரிமை அளித்து, அவனை முதன்மைப் படுத்தி அவனுடைய படைப்புக்களை பொக்கிஷங்களாக பேணிப் பாதுகாக்கும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தைப் போல, உலகில் வேறெங்கும் ஒரு அமைப்பையோ அல்லது நிறுவனங்களையோ நான் பார்த்ததில்லை என்று, இந்தியாவின் புதுவை பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞருமான முனைவர் அ.அறிவுநம்பி தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ்ச் சங்கமும், இந்தியாவின் சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து நடாத்திய பாரதியார் விழா நேற்று காலை கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகியது. அவ்விழாவில் பங்கேற்று கருத்துரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எட்டயபுரத்துக் கவிஞன் பாரதிக்கு விழாவெடுக்கும் இந்நிகழ்வில் முனைவர் அறிவுநம்பி மேலும் தனது உரையில், "பாரதி வாழ்ந்த காலங்களில் சங்ககாலப் பாடல்கல்களின் எடுகோள்களான காதல், வீரம் போன்றனவற்றைத் தான் நம்முடைய மூத்த கவிகள் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், மக்களின் பாடுகளையும் மனித அவலங்களையும் வாழ்க்கைக் கோலங்களையும் எடுத்துரைக்கும் பாடல்களை பாரதிதான் முதலில் கண்டுகொண்டு தன்னுடைய படைப்புக்களில் வெளிப்படுத்தினான். அன்னியரின் ஆதிக்கத்தினும் அமிழ்ந்திருந்த இந்திய நாடும் மக்களும் அனுபவித்த கொடிய துன்பங்களில் இருந்தும், அறியாமைக்குல்லிருந்தும் அவர்களை வெளியில் எடுப்பதற்கு பாரதி தன்னுடைய பாடல்களின் மூலம் முயற்சி செய்து வெற்றி கண்டான். அப்படிப் பட்ட பாரதிக்கு இந்தியர்கள் கொடுத்த முக்கியத்தை விட, இலங்கையில் கொழும்பு தமிழ்ச் சங்கம் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை இங்கு வந்தவுடனேயே நாங்கள் கண்டு பூரித்துப் போனோம். தமிழ்ச் சங்கத்தின் அலுவலகத்தினுள் நுழைந்தவுடனேயே தென்படுவது பாரதியின் இரு கரங்கள் கூப்பிய படம் தான். அப்போது எங்கள் தத்துவ புரட்சிக் கவிஞன் பாரதிக்கு இங்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் எங்கள் அனைவருக்கும் உள்ளத்தை களிப்பூட்டும் நிகழ்வாக அமைந்தது. அத்தோடு எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு பணிசெய்து வரும் தமிழ்ச் சங்கத்தின் பணியினையும் அது பெற்றிருக்கும் முக்கியத்துவத்தையும் பார்த்து வியப்படைந்தோம். இதனை இப்போது நல்வழிப் படுத்தி கொண்டுனகர்த்தும் இப்போதைய கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் அவர்களுக்கு எமதி சென்னை பாரதியார் சங்கத்தின் சார்பிலும், இந்திய மக்கள் சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவருடைய உரையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த பாரதி விழாவில், இந்தியாவின் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த கவிஞர்களினால் பார்போற்றும் பாரதி என்னும் தலைப்பில் கவிதாஞ்சலியும், பேராசிரியர் முனைவர் இரா.சேதுவின் தலைமையில் புதியன பாடிய புலவன் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், இந்திய பெண் கவிங்கர்களால் பாரதியின் கவிதைகளில் உள்ளம் கவர்ந்த ஓர் அடி என்ற மகளீர் முற்றம் நிகழ்வும், இரு எழுத்தாளர்களின் நூல் வெளியீடும் அத்தோடு பாரதியின் புகழ் பரப்புனர்களை கௌரவிக்கும் முகமாக பாரதி விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் வளர்க்கும் நம்மவர்களோடு இந்தியாவைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் தமிழ்த் துறை ஆர்வலர்களோடு மக்களும் ஊடகத் துறையினரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அறக்கட்டளை மாநாட்டுச் சொற்பொழிவுகள்: (1) குறவஞ்சி நாடகம் (2) சிந்து சமவெளியில் கொற்றவையும், விடங்கரும்





Special Lecture at Tamil Nadu Foundation Convention, 2012
Hilton Houston North on Saturday, May 26, 2012


Kuravanji Dance Dramas: Perspectives on Landscapes and Social Life in 18th and 19th century Tamil Nadu

Dr. Indira Viswanathan Peterson
David B. Truman Professor of Asian Studies
Mount Holyoke College

The Kuravanji, the drama of the wandering Kuratti fortune-teller, is the most popular among the Tamil literary genres that arose and flourished in the 18th and 19th centuries. Written by court poets for Palaiyakkarars and other rulers of small kingdoms, Kuravanji dramas were performed by devadasi dancers at courts and temples. These dramas glorify the patron-king, his town (uur), and the god of the temple, but their central characters, the Kuravanji, a nomadic fortuneteller from the hills, and her birdcatcher husband (Kuluvan), are marginal, “folk” figures from the wilderness, whose activities are described in detail, in relation to the hill and field landscapes and to the upper-class characters. In this lecture I show that the Kuravanji drama’s innovative treatment of Tamil landscapes, and its focus on new and marginal social identities, embody an imaginative response to changing social relations and relations between person and land in the 18th century, an era of migrations and fragmented polities in Tamilnadu. Kuravanjis were written not only in the Tirunelveli region (e.g., Kurralak kuravanji of Tirikutaracappa Kavirayar, 1715), but also at the Thanjavur Maratha court.  The Christian poet Thanjavur Vedanayaka Sastri wrote the allegorical Bethlehem Kuravanji (1820), describing the Bible lands and teaching planetary astronomy through the travels of the Kuratti fortune-teller. The Kuravanji drama represents a flexible, creative, Tamil combination of geography, social history and ethnography. The drama’s perspectives on place and identity are expressed in enduring metaphors of the relationship of human beings with Tamil landscapes.   At the same time, they are embedded in 18th-century social realities and express new geographical visions of an expanding world .

Prof. Indira Peterson's  bio-data:

            Indira Viswanathan Peterson is David B. Truman Professor of Asian Studies at Mount Holyoke College, Massachusetts. She has a B.A. in English Literature from Bombay University, and A.M. and Ph.D. degrees in Sanskrit and Indian Studies from Harvard University. She has held a number of research fellowships, including fellowships from the National Endowment for the Humanities, the Rockefeller Foundation, and the German Alexander von Humboldt Foundation.

            Indira Peterson specializes in Indian literature in Sanskrit and Tamil, Hinduism, and South Indian cultural history and performing arts. She is also a performer of Carnatic vocal music. Peterson is the author of Poems to Shiva: The Hymns of the Tamil Saints (Princeton, 1989; first major translation and study of the Tevaram hymns), and Design and Rhetoric in a Sanskrit Court Epic: The Kiratarjuniya of Bharavi (Albany, 2003), the study of a classical Sanskrit poem. Her other books are: George Michell and Indira Peterson, The Great Temple at Thanjavur: A Thousand Years. 1010 – 2010 (Mumbai: Marg, 2010), on the Brihadisvara temple; Performing Pasts: Reinventing the Arts in modern South India, co-edited with Davesh Soneji (Delhi: Oxford University Press, 2008), on Carnatic music and Bharata Natyam dance; and Tamil Geographies: Cultural Constructions of Space and Place in South India, co-edited with Martha Selby (Albany, 2007). Indira Peterson is editor of Indian literature (500 B.C. to the present) in the Norton Anthology of World Literature (2001). She has just completed Scholar-king of Tanjore: Serfoji II and the Shaping of Indian Modernity, a biography of the Raja Serfoji of Thanjavur.  She is writing a book on the Kuravanji dramas of Tamilnadu, and has translated the Kuraalak kuravanji and other kuravanji plays. She has also translated portions of Kalaimani’s Tamil novel Thillana Mohanambal, and plans a complete translation of the work.

------------------------------------------------------------------------------------------------------


விடங்கர் - கொற்றவை வழிபாடு
Dravidian religion and culture in Indus Valley Civilization

   Dr. N. Ganesan
TNF Convention, Hilton Houston North, Sunday - May 27, 2012

Abstract: The Indus valley Bronze Age saw the flourishing of the largest agriculture based civilization in the ancient world, and reached its classical era about 4200 years ago. The seals unearthed throughout the 20th century CE cover a wide geographical area of the Indus Valley Civilization (IVC) and the glyptic art featured in the IVC seals show the importance of land and aquatic fauna in the cultural life. The characteristic fish sign pointing to the Dravidian language spoken by the elite Harappans has long been explored from the days of Fr. H. Heras, SJ. However, the importance of crocodiles in IVC culture is just coming to light. Ananda K. Coomaraswamy was the first scholar to show that makara in the earliest stages referred to the Indian crocodile. This illustrated slide show and lecture explores the importance of the crocodile as an equivalent of Proto-Varuṇa portrait in the IVC religion, and its relationship with the tiger-goddess, Proto-Durgā by analyzing the linked imagery in IVC art. A Dravidian etymology for the Sanskrit word, makara from (i) the names of the marsh crocodile in all the Dravidian languages, and (ii) the names of the crocodile in Sindh and Gujarat regions is offered. In particular, it is shown that the names in South Munda languages prevalent in Orissa are loan words from Dravidian, and they do not form part of the Austroasiatic heritage. Sangam Tamil literature references on the three species of Indian crocodiles are discussed.

Speaker's bio-data:
Dr. Naga Ganesan, PhD is a specialist in Structural Dynamics of Large Space Structures. He has worked
in the Space industry for 25 years in Houston. Dr. N. Ganesan hails from Pollachi, Tamil Nadu and he stood first in Tamil and Mathematics in many State level  competitions during his school and collegiate years. His first degree is B.E. (Hons) in Mechanical Engineeing from College of Engineering, Guindy in 1981. He has worked as a technical expert for many Space Shuttle Missions since the 90s until the last Space Shuttle mission. He has contributed to the Unicode encoding of several Indian scripts for use in the Web including Tamil and Grantha scripts. One of his main interests is Tamil prabandhams and their print history. His latest paper on Indus religion has been published in Prof. V. I. Subramonium Memorial Souvenir, 2011,
International School of Dravidian Linguistics, Govt. of Kerala, Tiruvananthapuram. His paper with illustrations on Indus religion involving crocodile cult can be downloaded as a PDF from:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9

See you all at the Tamil Nadu Foundation Annual Convention, 2012 at Hilton, Houston North!



ஓவியக்கவிஞர் அமுதோன் என்கிற அமுதபாரதியின் மரபுக்கவிதை

தாயுமானவன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியக்கவிஞர் அமுதோன் சித்திரம் வரைவதில் சிறந்தவர். ஏராளமான தமிழ்நூல்களுக்கு வடிவமைப்புச் செய்தவர். ஹைக்கூ கவிதை முன்னோடி. அமுதபாரதி என்ற பெயரில் பல மரபுக் கவிதைகள் யாத்துள்ளார். ஓவியக்கவிஞர் என்று கண்ணதாசனால் பாராட்டப்பெற்றவர்.

கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்களின் சந்தவசந்தம் குழுவில்  பாரதியார் திருவள்ளுவர் சிந்தனைத் திரட்டு (பேரா. தி. வேணுகோபாலன், 1992) நூல் முழுமையும் கிடைக்கிறது.  பாரதி என்ற தலைப்பின் கலிஃக்ராபியில்
அழகாக பா என்னும் முதலெழுத்தில் பேனாவை அமைத்துள்ளார் சைத்ரீகர் அமுதபாரதி!

                                            பாரதி!
                            பன்னிரு சீர் விருத்தம்

எளிதான சொல்வளைவில் புதிதான பொருள்விளைவில்
                        இனிதான கவிநெய்தவன்!
                        இதுவேஎன் வழியென்றும் பொதுவாகும் உணவென்றும்
                        எல்லார்க்கும் நெறிசெய்தவன்!
மெலிதான மேகத்தின் வேகத்தில் உருவாகும்
                        மழையாக அருள்பெய்தவன்!
                        மெல்லோசை வல்லோசை நல்லோசை யாவிலும்
                        மேவியே மனங்கொய்தவன்!
வலிதான உடல்வாகும் வளமான பொருள்வாகும்
                        வாழ்க்கையின் நலமென்றவன்!
                        வாளா விருப்பவர் தூளாய் விடக்குறிக்
                        கோளாய் குரல்தந்தவன்!
புலிஓடி வருவதென புயல்வேகம் பொழிவதென
                        போர்ப்பாடல் பலகண்டவன்!
                        பலகோடி நூறாண்டு பெயர்வாழும் நிலையாக
                        புகழ்சுப்ர மணிபாரதி!
                                                                    -
                                                                   ~ கவிஞர் அமுதபாரதி, 1992






அமுதபாரதியும் நானும்
      சிறகு இராமச்சந்திரன்
http://puthu.thinnai.com/?p=5287

இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?


தின்ற பழங்கள்
மிஞ்சிய கொட்டைகள்
ஓ! எத்தனை மரங்கள்!
                ~ அமுதபாரதி


இந்த நாட்டில்
எந்த மனிதன்
அடுத்த அமுதோன்?





காணொளியில் இருப்பவர்கள் பாரதி நூல்களைத் தொகுத்து வெளியிட்ட சீனி விஸ்வநாதன், அமுத பாரதி: