தமிழறியும் ராஷ்டிரபதி இதுநாள் வரை தமிழ்க் கலைக்களஞ்சிய வெளியீட்டு விழாக்கள் ஆங்கிலத்தில் நடைபெற்று வந்தன. தமிழ் தெரியாதவர்கள் முன்னிலையில் விழாக்கள் நடந்ததால் ஆங்கிலத்திலேயே நடத்த நேரிட்டன. இப்போது தமிழ் தெரிந்த ராஷ்டிரபதி வந்திருப்பதால் தமிழிலேயே விழா நடத்துவதாக தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு. டி.
எஸ். அவினாசிலிங்கம் தமது வரவேற்புரையில் கூறினார் (கைதட்டல்). [நவ இந்தியா, 5-1-1963]
”ஜனாதிபதி கலைக் களஞ்சியத்தை வெளியிட்டு எங்களை ஆசீர்வதிப்பது பாரதமே எங்களை ஆசீர்வதிப்பதற்குச் சமம். டாக்டர் ராதாகிருஷ்ணன் நமது நாட்டின் தத்துவம், கலைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கலைக்களஞ்சியமாகவே இருக்கிறார் என ஸ்ரீ பெரியசாமி தூரன் தமது வந்தனோபசார உரையில் குறிப்பிட்டார். [சுதேசமித்திரன், 5-1-1963]. முதல் தொகுதி 1954-ல் சி.எஸ் அவர்களாலும் 5-ஆம் தொகுதி 1958-ல் இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேருவாலும் வெளியிடப்பெற்றன.
பாலவநத்தம் ஜமீந்தார் பாண்டித்துரைத்தேவர் துணைநிற்க ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி ஒன்றுதான் தமிழில் 100 ஆண்டுக்கு முன்பிருந்த கலைக்களஞ்சியம். அது புராணக்கதைகளை அறிய உதவியது, ஆனால் நவீன விஞ்ஞானத்தைத் தமிழில் விரிவாகச் சொல்ல ஒன்று வேண்டுமே என்று ஆழ்ந்து சிந்தித்து ‘தமிழிசையறிஞர்’ ம. ப. பெ. தூரன் அவர்கள் கலைக்களஞ்சியத் திட்டம் தயாரித்தார். கல்வி அமைச்சர் தி.சு. அவினாசிலிங்கம் துணைநின்றார். சிங்காரவேலுக்குப் பாண்டித்துரை போலவே, தூரனுக்கு அவினாசிலிங்கம் வாய்த்தது தமிழின் ஆகூழ். வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் வாங்குவதன் முன்நாளில் (14-8-1947) தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. செயலாளர் பெ. தூரன். 1948-லிருந்து 14 ஆண்டுகள் தூரன் கலைக்களஞ்சிய எடிட்டராக உழைத்தார். 15000 கட்டுரை, 1000+ ஆசிரியர்கள் எழுதினர். 10 தொகுதி, மொத்தம் 7500 பக்கம், எண்ணிறந்த படங்கள். 25000 தொழில்நுட்புச் சொற்கள். இந்தச் சொற்கள் எல்லாம் கணினியுகத்தில் பரவவேண்டுமாயின், யுனிகோட் எழுத்துருவில் வெள்ளுரையாக (plain-text) இணையப் பல்கலை அல்லது அவினாசிலிங்கம் பல்கலை (கோவை) வலைத்தளம் ஏறவேண்டும். அப்பொழுதுதான் கணித்துழாவி எந்திரங்களில் இவ்வார்த்தைகள் சிக்கும்.
கடைசித் தொகுதியை வெளியிட்ட ராஷ்ட்ரபதி எஸ். ராதாகிருஷ்ணன் தனக்கே உரிய தத்வார்த்த உரை ஆங்கிலத்தில் நிகழ்த்தியருளினார். ‘வேதம் தமிழ் செய்த மாறன்” என்னும் ப்ரபந்நஜநகூடஸ்தர் நம்மாழ்வார் புகழைப் பேசும்போது நாலாயிரப் பிரபந்த வரியைத் தமிழில் சொன்னதும் ஆடியன்ஸில் கரகோஷம் எழும்பியது. அவர் உரை பற்றித் தமிழ்ப் பத்ரிகைகளில் 1963-ல் வந்த சில செய்திகள்:
” குறுகிய நோக்கங்கள் எதுவும் இல்லாதிருந்த காலத்தில் தென்னகத்தின் புகழ் உலகெங்கணும் பரவியிருந்தது. கம்போடியாவில் அதன் மன்னரது கொடியில் மூன்று கோபுரச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவில் சிவன் பெயராலும், விஷ்ணு பெயராலும் கோயில்கள் உள்ளன. ஜாதி, சமய வேறுபாடுகள் தலைகாட்டாத நேரத்தில் தென்னாட்டு மக்கள் பரந்த நோக்கமும், விரிந்த சிந்தையும் உள்ளவர்களாக இருந்த காலத்தில்தான் நமதுபுகழ் உலகளாவி இருந்தது. அந்தப் பழமைச் சிறப்பை நாம் மீண்டும் அடைய வேண்டும்.” (சுதேசமித்திரன், 5-1-1963).
"அறிவு என்பது நிரந்தரமாக வளர்ச்சி அடைந்துவரும் தன்மையது. அதன் ஒரே தடை அறியாமைதான். அறிவு வளர்ச்சியைத் தடை செய்து நிற்கும் அறியாமையைத் தகர்க்கவேண்டும். அப்போதுதான் சுறுசுறுப்பாக இயங்கும் உள்ளங்கள் அறிவைப் பெருக்கிக்கொண்டே போக முடியும். முற்போக்குக் கலாசாரம் என்பதற்கு இது ஒரு சோதனை.
ஆகவே நமது கலாசாரம் முற்போக்கானதாகக் கருதப்பட வேண்டுமானால் இதர கலாசாரங்களிலுள்ள சிறந்த, உயரிய அம்சங்களை நமதாக்கிக்கொள்ளும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். பௌதிகம், கணிதம், ரசாயனம், வான சாஸ்திரம் போன விஞ்ஞானதுறை ஒவ்வொன்றிலும் இதரர்கள் பிரமாத சாதனைகளைப் புரிந்திருக்கின்றார்கள். நாம் அவர்களனைவரது வாரிசாக வேண்டும்.”
”கம்போடியா கொடியில் கோபுரம் பொறிக்கப்பட்டிருப்பதையும், இந்தோனேஷியாவில் சிவன் விஷ்ணு ஆலயங்கள் இருப்பதையும் அவர் எடுத்துக்காட்டினார். தற்போதுள்ள பரம்பரை ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது பரந்த கண்ணோட்டம் கொள்ள வேண்டும். கடந்த கால பெருமையை நிலைநாட்ட விரும்பினால் இன்னமும் உள்ளத்தைப் பீடித்துக் கொண்டிருக்கும் சில்லரை எண்ணங்களை அகற்ற வேண்டும்” என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறித்தினார்.” (தினமணி, 5-1-1963).
--------------------------
தமிழால் எதுவும் முடியும்: தமிழ் கலைக்களஞ்சியமே சான்று. எம். பி. தூரன் பாராட்டு விழாவில் சி. சுப்பிரமணியம் பேச்சு. முடியுமா என்பதல்ல; முடிப்போம் முறையாக முடிப்போம் - காமராஜ் (நவ இந்தியா, 11.2.1963)
(இடமிருந்து வலம்) திரு. பெ. தூரன், சி. சுப்பிரமணியம், எம். ஏ. முத்தையா செட்டியார், 2012-ல் நூற்றாண்டு விழாக்காணும் டாக்டர் மு. வ.
சென்னை, பிப். 11
“உழைப்பில் இன்பம் காண்பவர்; விளம்பரத்தை விரும்பாது ஏற்ற பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிய கர்மவீரர்; தமிழ் உள்ளளவும், தமிழ் மக்களும் தமிழ்நாடும் உள்ளளவும் அவர் புகழ் இருக்கும்.” என்று திரு எம். பெரியசாமி தூரன் பாராட்டப்பட்டார்.
நீதிபதிகளும், அமைச்சர்களும், பேராசிரியர்களும் திரண்டிருந்த பாராட்டுக் கூட்டத்தில் திரு. பெரியசாமி தூரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. கே. காமராஜ் ரூ. 63,500 கொண்ட பணமுடிப்பை விழாக் குழுவினர் சார்பில் வழங்கினார்.
15 ஆண்டு உழைப்பினைத் தொடர்ந்து தமிழ் வரலாற்றில் முதன்முதலாக உருவாகியிருக்கும் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியரான திரு. பெரியசாமி தூரனுக்கு பாராட்டும் நிதி அளிப்பு வைபவமும் சென்னை அசோக் ஓட்டலின் திறந்தவெளி அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.
சி. சுப்பிரமணியம்
யூனியன் கனரகத் தொழில் அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்ற நாளன்று தமிழ் வளர்ச்சிக் கழக்த்திற்கு வித்தூன்றப்பட்டு கலைக்களஞ்சியம் உருவாக்கத் திட்டமிட்ட வரலாற்றை திரு. சி. சுப்பிரமணியம் விவரித்தார். ”கலைக்களஞ்சியத்தின் ஆட்சிக் குழு, திரு. பெரியசாமித் தூரனை ஆசிரியராக ஏற்றது. 15 ஆண்டு சலியாத பேருழைப்பினால் ஒன்பது தொகுப்புகள் கொண்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் இப்போது உருப்பெற்றுவிட்டது. உலகில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அவற்றில் காணக் கிடக்கின்றன. நவீன கருத்துக்களுடன், நம் நாட்டுப் பழங்கால கருத்துச் செல்வங்களும் கலைக் களஞ்சிய தொகுப்புக்களில் பொதிந்துள்ளன. எந்தவித நவீன விஞ்ஞான, தத்துவக் கருத்துக்களையும் தமிழில் விளக்க முடியும் என்பதை களஞ்சியம் பகர்கிறது” என்று அவர் பாராட்டினார்.
தமிழால் எதுவும் முடியும்: இக் களஞ்சியமே சான்று
மேலும் பேசுகையில் அமைச்சர் திரு. சுப்பிரமணியம் கூறியதாவது:
பழங்கருத்துக்களுடன் புதுக்கருத்துக்களையும் தெரிந்துகொள்ளா விட்டால் பின்னடைந்து விடுவோமோ என்ற எண்ணம் பொதுவாக ஏற்படுவது இயல்பு. இந்த எண்ணக் குழப்பத்தை நீக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினால் எடுத்த காரியம் நடக்கும். அதை இந்தக் கலைக்களஞ்சியம் சாதித்திருக்கிறது. முடியும் என்று நிரூபிக்கிறது. இக்கால விஞ்ஞானக் கருத்துக்களைத் தமிழில் விளக்கமுடியும் என்று களஞ்சியம் விளக்குகிறது. நம்பிக்கையும் ஊட்டுகிறது.
நவீன கருத்துக்களை விளக்கும் சக்தியும், தெளிவும், திறனும் தமிழுக்கு உண்டு என்கிறது களஞ்சியம். ஆனால் கலைச் சொற்களை தமிழில் ஆக்க முடியுமா? என்பது ஒரு பிரச்சினை; இச் சிக்கல் எல்லா மொழிகளுக்குமே உண்டு. அந்தந்த மொழியிலேயே கலைச்சொற்களும் இருத்தல் வேண்டும் என்பது எல்லா மொழிகளுக்கும் சாத்தியம் அல்ல. ஆங்கில மொழியில் பயன்படும் கலைச் சொற்கள் அனைத்துமே அந்த மொழிக்கு சொந்தமானவையல்ல. பிற மொழிகளில் இருந்து இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கலைச்சொற்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதில் நமக்குக் குழப்பம். சர்வதேச கலைச் சொற்களை எல்லாம் தமிழில் உருவாக்கி ஏற்க முன் வந்தால் இந்தச் சங்கடம் தீரும். தனித்தமிழ் வேண்டும் என்பவர்களாலும் தாங்கள்தான் தமிழை வளர்க்கிறோம் என்று கூறுபவர்களாலுமே தமிழ் வளர்ச்சிக்குத் தடை.
அந்நிய மொழி மோகம் தவறு
மேலும் அந்நிய மொழி மூலம் தான் அறிவுபெற முடியும் என்ற போக்கு சரியன்று. நகர்ப்புற மக்களுக்கு இது ஓரளவு சாத்தியப்பட்டாலும் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் இதரர்கள் அந்நிய மொழியைப் பயின்று அறிவைப் பெற வேண்டும் என்றால், அது நடவாத காரியம். தமிழ் மூலம் கருத்துக்களைச் சொன்னால் தரம் குறையும் என்பது ஆராய்ச்சிக்கு உரியதுதான். தமிழால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தக் கலைக் களஞ்சியமும் இனிவரும் கலைக்களஞ்சியங்களும் இதற்கு விடைபகரும்.
ஆங்கிலமா? தமிழா? எது வேண்டும் என்று கூறுபவர்களானாலும் அனைவரது குறிக்கோளும் ஒன்றுதான். மக்கள் அறிவுபெற வேண்டும் என்பதே அவர்களது லட்சியம்.
அறிவை எந்த வகையில் வழங்க வேண்டும் என்பதில் அவசரப்படாமல் நிதானமாக யோசித்துப் பணியாற்ற வேண்டும். தேக்கமோ பின்னோட்டமோ இன்றி மெள்ள மெள்ளப் படிப்படியாகவேனும் பணியாற்றி வெற்றி காண வேண்டும் என்று திரு. சி. சுப்பிரமணியம் விருப்பம் தெரிவித்தார். வரும் தலைமுறையினரும் திரு. பெரியசாமி தூரனைப் புகழ்வர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மன உறுதிதான் தேவை: காமராஜ் அறிவுறுத்தல்.
தமிழ் வளமான மொழி; தமிழால் எதுவும் முடியும்; முடியாதது எதுவும் இல்லை; எதையும் முடிப்போம் என்ற மன உறுதியே இதற்கு ஆதாரம் என்று முதலமைச்சர் திரு. காமராஜ் பண முடிப்பை திரு. பெரியசாமி தூரனுக்கு அளித்துப் பாராட்டுகையில் தெரிவித்தார்.
நல்லதைச் செய்வதிலும் அவசரம் கூடாது
தொடர்ந்து பேசுகையில் அவசரப்பட்டு எதையும் செய்து விடுதல் கூடாது என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.
15 ஆண்டு உழைப்பின் பின்னர் இம்மாபெரும் கலைக் களஞ்சியம் உருவாகியிருக்கிறது. 10 பேரைக் கூப்பிட்டு சில குறிப்புகளை மொழிபெயர்க்கச் சொல்லி அச்சு ஏற்றிவிட்டால் ஒரு ஆண்டிலேயே நூலாகியிருக்கும். ஆனால் யார் படிப்பர்? பாராட்டுவர்? யாருக்குப் பிரயோஜனம் சிலர் குழப்பம்செய்து பார்த்தனர்
உலகம் வேண்டுவது சமதர்மம். அது நல்ல லட்சியம். குழப்பம் உண்டாக்கி அந்த உயர்ந்த சமதர்ம ஆட்சியைப் பெறலாமா? குழப்பம் செய்தும் சிலர் பார்த்தனர். ஆனால் அது சரியா? பொது மக்களும் அதை அங்கீகரிக்கவில்லை. எதையும் நிதானமாகவே சாதிக்க வேண்டும். சரியான பாதையில் போகிறோமா என்பதே பிரச்சினை. எதையும் நன்முறையில் ஒழுங்காகச் செய்தலும் வேண்டும். இப்படி நிதானப்படுத்திச் செய்வது தவறு அல்ல. ஆதலால் தமிழால் முடியுமா என்பது அல்ல. முடியும் முடிப்போம் என்ற மன உறுதியோடு கடமை புரிவோம் என்று திரு. காமராஜ் கூறினார்.
சிறுவர்களுக்கென தனி கலைக்களஞ்சியம்
கலைக்களஞ்சியம் உருவாக்கிய தூரனின் பணி முடிந்து விடவில்லை என்றும், சிறுவர்க்கான கலைக் களஞ்சியம் உருவாக இனி அவர் உழைத்தல் வேண்டும் என்றும் முதலைச்சர் கேட்டுக்கொண்டார்.
திரு. தி. சு. அவிநாசிலிங்கம் பேசுகையில் கலைக்களஞ்சியம் உருவாக உதவிய அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார். உயர்நிலைப் பள்ளிப்படிப்பைப் பூர்த்திசெய்த மாணவன் இத்தொகுப்புகளைப் படித்தால் பட்டதாரிகளையும் மிஞ்சும் அறிவு பெற முடியும் என்று டாக்டர் மு. வரதராசனார் கூறினார்.
பாராட்டுக்குத் தக்க முறையில் பதிலளித்த திரு. பெரியசாமி தூரன் கலைக்களஞ்சியத்தில்
ஏதேனும் பிழை காணப்படின் பார்ப்பவர்கள் அறிவித்தால் மறுபதிப்புகளில் திருத்திக் கொள்கிறோம் என்று கூறினார். தனக்கு ஏற்பட்ட பல இன்னல்களுக்கிடையே சோர்வின்றிப் பணியாற்றியவர் திரு. தூரன் என்று நீதிபதி திரு. எம். அனந்தநாராயணன் புகழ்ந்துரைத்தார்.
திருமதி. சௌந்தரா கைலாசம் பேசுகையில் களஞ்சியம் உருவாக்கிய திரு. தூரன் தனது பெயரை அத் தொகுப்புகளில் எங்குமே பொறித்துக் கொள்ளாதது அவரது அடக்கத்தைக் குறிக்கிறது என்று பாராட்டினார் [1].
திரு. நா. மகாலிங்கம் எம்.எல். ஏ. நன்றி கூறினார். ஆரம்பத்தில் திரு. எம். ஏ. முத்தையா செட்டியார் அனைவரையும் வரவேற்றார்.
திரு. கே. சாமிநாதன் இறைவணக்கமும், திரு. டி. கே. சண்முகம் தேசிய கீதமும் பாடினர்.
செய்திகளுக்கு நன்றி:
தமிழ் வளர்ச்சிக் கழகம், http://tamilvk.com
[1] 1990களில் சிஎஸ், கவிதாயினி சௌந்தரா கைலாசம்
கலைக்களஞ்சியம் தந்த பெரியசாமித் தூரனுக்குப் பாராட்டுவிழா (1963)
Posted by
நா. கணேசன்
at
0
comments
1000 ஆசிரியர் தொகுத்த கலைக்களஞ்சியம் - சி.டி. வெளியீட்டு விழா - தமிழ் வளர்ச்சிக் கழக வரலாறு
கல்வியமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், பாரதரத்னா சி சுப்பிரமணியம் போன்றோர் தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையில் அமைச்சர்களாக விளங்கிய காலத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிக் கழக வரலாற்றின் சில ஒளிப்படங்களைக் காண்போம். அதன் முக்கிய சாதனை இந்திய மொழிகளிலே முதன்முதலாகக் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளாய் வெளியிட்டதாகும். தமிழிசை அறிஞர் ம. பெரியசாமித் தூரன் தலைமையில் 1000 ஆசிரியர்களும், தமிழறிஞர்களும் கலைக்களஞ்சியத்தை எழுதிக் குவித்தார்கள். அச்சுப் புத்தகமாகவே இருப்பதால் தேவையுள்ள மக்களுக்கு அது கிடைப்பதில்லை. இக்குறையைப் போக்க குறுந்தகடு வடிவில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விழா நடக்கிறது.
மேதகு. அவிநாசிலிங்கம் ஐயாவும், பத்மபூஷண் பெ. தூரன் அவர்களும் சேர்ந்து தமிழுக்கு இன்னொரு ஆய்வுக்கொடையை வழங்கினார்கள். செந்தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காத்த தமிழ்த் தாத்தா உவேசா அவர்களின் ப்ரதமசிஷ்யர், வாகீசகலாநிதி கிவாஜ ஐயர் கொங்குநாட்டில் காவிரிக்கரை ஊரில் பிறந்த தமிழறிஞர். கிவாஜ தமிழாய்வின் தலைவராய் 20-ஆம் நூற்றாண்டில் தமிழ்ப்புலமை நடாத்தினார்கள். அவரைக் கோயம்புத்தூருக்கு அழைத்து, தங்கவைத்து, விருந்தோம்பிச் சீராட்டி ‘திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு’ 1963-ல் வெளியிட்டவர்கள் அவிநாசிலிங்கமும், தூரனும் ஆவர். சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு பூர்த்தியின் போது வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பும், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் (பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் - 641020) 2004-ஆம் ஆண்டில் வெளியிட்டதுதான். பாரதக் குடியரசுத் தலைவர் இராஜேந்திரபிரசாத் 1950-ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் நிறைவடைய 12 ஆண்டுகள் சென்றன. இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டவை பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அளித்த குறளின் பழைய உரைகள். தமிழ்மொழி என்று ஒன்று இருப்பதையே உலகுக்குக் காட்டிய பெருமை திருவள்ளுவருக்குண்டு. அவரது குறளின் இறைவாழ்த்து, துறவின் மேன்மை, புலாலுண்ணாமை, ,,, இவற்றை ஆராய்ந்த தமிழறிஞர்கள் வள்ளுவரைச் சமணசமயம் சார்ந்தவர் என்பார்கள். புலவர்கள் கொண்டாடிய திருவள்ளுவர் திருவுருவும் சமணமுனி வடிவிலுள்ளது, கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் சமணர் திருக்குறளைப் பொறித்துள்ளனர். 20-ஆம் நூற்றாண்டில் வெளிவந்துள்ள திருக்குறள் ஆய்வுகளில் கிவாஜ செய்த புத்தகம் மிக இன்றியமையாதது,
முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் தமிழ் இணையப் பல்கலை நிறுவனர். தலைவராகச் செயல்பட்டு வருகிறார்கள். ஏராளமான நூல்களை இணையப் பல்கலை பிடிஎஃப் கோப்புகளாகவும், தட்டச்சு வடிவிலும் வழங்கவேண்டும். 19-ஆம் நூற்றாண்டு நூல்கள் கணிவருடியால் ஸ்கான் செய்யாவிட்டால் அழிபடும். டாக்டர் வா.செ.கு. ஐயா அனுப்பிய தமிழ் வளர்ச்சிக் கழக விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். இந்த சி.டி.களில் உள்ள நூல்கள் யாவும் யுனிகோடில் தமிழ் இணையப் பல்கலை தளத்தில் இலங்குமாறு செய்ய அப் பல்கலைக்கழக அதிகாரிகளை வேண்டுகிறோம். அப்பொழுதுதான் கலைக்களஞ்சியத்தில் உள்ள சொற்கள் தமிழ் இணைய இளைஞர் சமுதாயத்திடையே வெகுவாகப் புழங்கும்.
நா. கணேசன்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் வளர்ச்சிக் கழக இணைய தளத்தில் ‘எழுத்துச் சீர்மை’ சொற்பொழிவு இருப்பதைக் கேட்கலாம். தமிழ் எழுத்துச் சீர்மை கணினி, உலாவிகள், தமிழ் வலைத்தளங்கள் செயல்பட தமிழ் வளர்ச்சிக் கழகம் முயற்சி மேற்கொள்ள வேண்டுகோள்.
இப் புத்தகங்களை வாங்க, திரு. ஆண்டோ பீட்டர் பதிவு உதவுகிறது:
------------------------------------------------------------------------------
சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சிக்கழகம் பல ஆண்டுகளாக அறிவியல் தமிழ் பணிக்காக இயங்கி வருகிறது. இதன் தலைவராக அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.வி.சி.குழந்தைசாமி பணியுற்றி வருகிறார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பதிப்பு பணிகள் பெரும்பாலும் அறிவியல் கலைக்களஞ்சிய தமிழ் நூற்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இக்கலைக்களஞ்சிய நூல்கள் உலகில் எந்த பதிப்பகத்திலும் இல்லை. தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் உள்ள முக்கிய கலைக்களஞ்சியங்கள் பின்வருமாறு: மருத்துவக் கலைக் களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் மருத்துவக் கலைக் களஞ்சியம் 12 தொகுதிகள் மற்றும் மருத்துவ கலைச்சொல் அகராதி ஆகும். அதன் 12 தொகுதி நூல்கள் பின்வருமாறு: உடல்நலம், தாய் சேய்நலம், புலனுறுப்புகள் 1, புலனுறுப்புகள் 2, மூளை, மனநலம், செரிமான மண்டலம், தொற்று மற்றும் பால்வினை நோய்கள், இதய இரத்தநாள மண்டலம், சிறுநீரகம், எலும்பியல், மரபியல் மற்றும் மருத்துவ கலைச்சொல் ஆகியன ஆகும். இந்த 13 நூல்களின் விலை. ரூ.3750/- ஆகும். இந்த 13 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும் சித்த மருத்துவக் களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சித்த மருத்துவ தமிழ் நூல்கள் ஏழு தொகுதிகளாக உள்ளன. அவை சித்த மருத்துவ வரலாறு, அடிப்படைகள், சிறப்பியல், வாதம் 1, வாதம் 2, பித்தம், கபம், குழந்தை மருத்துவம் ஆகும். இந்த ஏழு நூற்களின் மொத்த விலை.ரூ. 1710/- ஆகும். இந்த 7 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு திருக்குறள் 5 உரைகள் அடங்கிய குறுவட்டு இலவசமாக அளிக்கப்படும். தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சித்த மருத்துவ ஆங்கில நூல்கள் ஏழு நூற்களாகும். இந்த ஆங்கில தொகுப்பின் விலை. ரூ. 1540/- ஆகும். இந்த 7 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும் அறிவியல் நூல்கள் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் அறிவியல் நூல்கள் செயற்கைகோள், உயிரியல் தாளமுறை, மனிதன், சுற்றுச்சூழல், பரம்பரை தொடரும் பாதை ஆகும். இவற்றுடன் சாஃப்ட்வியூவின் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுங்கள், Web Directory, தமிழும் கணிப்பொறியும், கம்ப்யூட்டர் வைரஸ், கம்ப்யூட்டரில் என்ன படிக்கலாம்?, கணினி வேலைக்கு ரெடியா? ஆகிய நூல்கள் தொகுப்பாக அளிக்கப்படுகிறது. இந்த 10 நூல்களின் விலை. ரூ.522/- ஆகும். இந்த 10 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு ‘உலக கண்டுபிடிப்புகள்’ குறித்த சிடி இலவசமாக அளிக்கப்படும் இயற்கை அறிவியல் நூல் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இயற்கை அறிவியல் நூல்கள் நீரியல் நீர்வளம், தமிழக நீர்வளம், வேளாண்மை, வனவியல் ஆகிய நான்கு நூற்களாகும். இதன் மொத்
த விலை. ரூ.900/- ஆகும். இந்த 10 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு ‘என்சைக்ளோபீடியா’ சிடி இலவசமாக அளிக்கப்படும் யோகாக் கலை நூல் தொகுப்பு பெங்களூர் சுந்தரம் பதிப்பகத்தின் வலிப்பும் வனப்பும், சுந்தர யோகா சிகிச்சை, ஆனந்த ரகசியம், ராஜ யோகம், சூர்ய நமஸ்காரம், சந்திய காயத்ரி, ஜெபயோகம், சாந்தியோகம், ஆரோக்கிய உணவு, யோகா சார்ட், Yogic Therapy, The Secret of Happiness, Diet & Digestion ஆகிய 12 நூல்களின் விலை.ரூ. 1720/- ஆகும். பெங்களுர் சுந்தரமே யோகாக்கலையின் முன்னோடி ஆவார். இந்த 13 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும். குழந்தைகள் கலைக்களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 நூல்களாகும். இவை தற்போது நூலாக இல்லாமல் குறுவட்டாக வெளியாகியுள்ளது. இதன் விலை. ரூ.300/- ஆகும்.
தமிழ் வளர்ச்சிக்கழகம் மற்றும் யோகாக்கலையின் நூற்களுக்கு சாஃப்ட்வியூ நிறுவனமே அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் ஆவர். சென்னையில் நடைபெறும் புத்தக்கண்காட்சியில் இந்நூற்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை புத்தக்கண்காட்சியில் சாஃப்ட்வியூ நிறுவனத்தின் கடை எண் 331 ஆகும். சாஃப்ட்வியூ நிறுவன அலுவலக முகவரி: 118. நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-29. தொலைபேசி: 044-23741053 மின்னஞ்சல் : softviewindia@gmail.com இணையம்: www.softview.in.
---------------------------------------------------------------
தமிழ் வளர்ச்சிக் கழக வரலாற்றில் சில ஒளிஏடுகள்:
Photos from http://www.tamilvk.com/
Posted by
நா. கணேசன்
at
0
comments
ஓ உயிரெழுத்தின் பழைய வடிவமும், பிள்ளையார்சுழியின் ஓங்காரநாதமும்
தமிழ் எழுத்து வரிவடிவங்களில் (1) உ, ஒ எழுத்துக்களின் உறவு (2) ஒ எவ்வாறு உ வடிவினின்றும் கிளைத்தது? (3) ஒ உயிரெழுத்தின் பழவுரு பிள்ளையார்சுழியுடன் ஒப்பீடு - என்பவற்றை இங்கே ஆராய்வோம். தியான எழுத்தாகிய பிரணவம் தமிழில் மோனவெழுத்து, அல்லது ஊமையெழுத்து எனப்படுகிறது. குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் நால்வேதத்திலும் முதலாய்க் கிடப்பது ஊமையெழுத்து (ௐ) என விளக்குகிறார். திருமந்திரத்தில் இத் தனியெழுத்து பிற எழுத்துக்களுடன் சேராது தனியாய் நிற்பதன் விளக்கத்தைக் காண்கிறோம். ௐ எழுத்து அ உ ம் என்ற 3 எழுத்துக்களின் கூட்டு என்று பல வேதாந்த, சித்தாந்த விளக்கங்கள் சமணம், பௌத்தம், ஹிந்து, சீக்கிய (இந்திய மதங்கள் அனைத்திலும்) சாத்திரங்களில் உள்ளன. முத்துசாமி தீட்சிதரின் வாதாபி கணபதிம் பஜேஹம் என்ற கிருதியைக் கொண்டுதான் கர்னாடக சங்கீதக் கச்சேரிகள் பலவும் தொடங்குகின்றன. தீக்ஷிதர் பிள்ளையார்சுழி என்பது தும்பிக்கை வடிவு என்றோதுகிறார்: ”வாதாபி கணபதிம் பஜேஹம் ... பிரணவ சொரூபம் வக்கிரதுண்டம்”. வாதாபி கணபதியின் துதிக்கை பிள்ளையார்சுழி (பழைய உ/ஒ வரியுரு) போலிருப்பதனையும், தமிழில் 12-ஆம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சார்யர் இயற்றிய கந்தபுராணச் செய்யுள் கொண்டும் பிள்ளையார்சுழியின் ஓசை ஓங்காரநாதம் என்றும் இச் சித்திரக்கட்டுரை விளக்குகிறது. வேதம், அதன் பின் தோன்றிய எல்லா இந்திய சமயங்களில் ஓங்காரம் முக்கிய இடம் பெறுகிறது. ஓங்காரத்தைச் சிந்து சமவெளி நாகரீக ஆளுநர்களாக விளங்கிய திராவிடர்களிடம் இருந்து வேத இலக்கியங்கள் பெற்றன.
Summary: The origin of the PiLLaiyAr suzhi sign in Tamil from the testing of palm leaves with the iron stylus while preparing the leaves for writing is explained by Dr. Jaybee. Watch the video , Edum EzhuttANiyum, esp. during the time time between 4:12 and 4:53. For a question raised by Dr. Jean-Luc Chevillard about the sound of this PiLLaiyAr suzhi, this posting. PiLLaiyAr cuzhi name as Mona ezhuttu or Uumai ezhuttu because PraNava mantra's association with dhyAna is explained with a 12th century verse from Kandapuranam. The famous Carnatic music kriti, Vatapi Ganapatim and the elephant trunk shape of PiLLaiyaar suzhi can be seen in the following illustrations and a beautiful rare photo of Vatapi Ganapati icon from the 7th century. In Sanskrit philosophy and religion, OM sound is borrowed from Dravidian [1]. The linguistic sign, PiLLaiyArsuzhi, having OM sound is like the other ancient linguistic signs in Indian civilization. To compare with the linguistic nature of PiLLaiyArsuzhi, four additional examples are given that seem to be linguistic signs associating physical symbols with Dravidian words and concepts - fish "miin", crocodile "mokara/mokara", time "kaal-", satii "kai-"
Old vowel letter O from the related vowel U letter's glyph:
It can be easily observed that the Tamil Grantha vowel letter O glyph that it has roots in the older form of the related vowel U(உ) to which a middle ridge is added to the horizontal line.
(Image from Grantha lessons by Vinodh Rajan)
(http://agamaacademy.org)
PiLLaiyAr suzhi - Vatapi Ganapati's trunk:
(Photo: http://ganapati.perso.neuf.fr/tn/images/p104%20304a.html )
”Vatapi Ganapatim Bhajeham ... praNava svarUpam vakra tuNDam" - Muthuswamy Dheekshitar. Before Dheekshitar, it was the 12th century Kandapuranam that we have the very first evidence of PiLLaiyAr suzhi's connection with Ganesha.
mōṉamē kuṟiyatu ām mutal eḻuttu aruḷiya
ñāṉam ām matalai pāl naṇṇavē pūta vem
cēṉai āyiṉa aruḷ ceytu ciṟparai yoṭum
āṉai mā mukaṉoṭum amalaṉ mīṇṭu aruḷiṉāṉ.
Because of its connection with meditation, OM is called "mOna ezhuttu"/"uumai ezhuttu". For example, KuRRAlat talapurANam: "maRai nAnkin mutaRkiTanta Umaiezhuttu". Tamil dictionaries (e.g., Jaffna dictionary by N. Kadiraivel Pillai, pg. 1032) has the entry: PiLLaiyAr suzhi = uumai ezhuttu.
TiruvaruTpaa (VaLLalaar) - 1901 book, the first letter is PiLLaiyArsuzhi:
Ancient Indian linguistic signs:
This interesting linking of PiLLaiyArsuzhi/letter-o shape to OM sound has some ancient precedents in India & Let us look at some linguistic signs (1) In Indus era seals, the fish sign, due to Dravidian homophones, is said to stand for "star/deity" by Indologists. (2) Recently, an Indus sign is identified as standing for sky-crocodile (Parpola's paper on IVC crocodile cult, 2011, Tokyo). It clearly shows the "high walk" of freshwater crocodiles (known as "muggers"), and the four legs of the mugger are explicit in the sign. Let me suggest the linguistic sound for this crocodile sign, it is mokaray (connected with mogara/mogra, makara/magar - modern Indic names for crocs) (Ref. [2]), I derive mokaray from mok- (DEDR 5127 + DEDR 4897) and aray (DEDR 228). (3) The widow dying by immolation when her husband dies is performed even by monkeys in Sangam Tamil. This custom is known as sati, and the memorial stones (called as "thii-p-paayntaaL kallu", "maa-sati-kal" are found in Tamil Nadu, Karnataka, ...) See the Rajasthan sati memorials. In all these sati stones, a palm of the lady's hand is depicted and this "kai" (hand) seems to do with "kaimmai" (widowhood), "kaimpeN" (widow). See the Sati memorial stone photio here. (4) In Indian languages, Time is "kaala", the same word in Dravidian means "leg" (eg., kaal in Tamil). In Indian epic literature, use of legs of the bull of Dharma for the symbolism of yugas & how many legs of Dharma were standing in each yuga are significant which shows the connection between Dravidian "kaal-" (leg) and "kaala" (time) concept. Even fractions (1/4 kaal -"one leg out of 4", 2/4 = 1/2 "arai 'cutting into half, also hip', or "irukaal" (2/4 literally, "2 legs out of 4" (of a cow), 3/4 mukkaal - "3 legs", are named in association with the 4 legs of a cow (Ref. [7]). Note that "kaala" (Time) in all Indian languages has a Dravdiian origin. In old Tamil, "kaal" is "to move, that moves" & so, kaal = leg, wind. kaalam (T=Time) also passes by and is never static and like, leg or wind (kaal), kaala (Time) is always in motion.
A contemporary design of OM (Nagari) with a side-view of Ganapati (Note OM starting with PiLLaiyaar suzhi (elephant trunk):
References:
[1] Asko Parpola, "On the Primary Meaning and Etymology of the Sacred Syllable OM", Studia Orientalia (Finnish Oriental Society) vol 50, 1980.
http://www.scribd.com/doc/15050686/Parpola-Om
Parpola's Om thesis:
Om's original meaning: Om in the Vedic ritual = 'yes', om = tathâ = 'yes' also in ordinary conversation, and in the Chandogya Upanishad ôm is expressly said to be a word expressing agreement. Etymology: < Dravidian âm < âkum 'yes' < 'it is (fitting, suitable)', â labialized by the following m as Jaffna Tamil ôm < âm.
[2] N. Ganesan, A Dravidian Etymology for Makara - Crocodile,
Prof. V. I. Subramonium commemoration volume, ISDL, Tiruvananthapuram, Kerala, 2011.
[3] Text of "Vatapi Ganapatim"
http://www.sahityam.net/wiki/Vatapi_ganapatim
[4] Carnatic kaccheri renditions of Vatapi Ganapatim:
M.S.
http://www.youtube.com/watch?v=dG1v8PccduI
Semmangudi:
http://www.youtube.com/watch?v=ud-QqxtbixY
Jesudas:
http://www.youtube.com/watch?v=eYJVBhV50UQ
Saxaphone (Kadiri):
http://www.youtube.com/watch?v=YrQCsTOuxcA
[5] Tamil OM sign proposal:
http://std.dkuug.dk/jtc1/sc2/wg2/docs/n3119.pdf
[6] ஓம் பற்றித் திருமந்திரம்:
ஓமெனு மோங்காரத் துள்ளே யொருமொழி
ஓமெனு மோங்காரத் துள்ளே யுருவரு
ஓமெனு மோங்காரத் துள்ளே பலபேதம்
ஓமெனு மோங்கார மொண்முத்தி சித்தியே.
ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்காரா தீதத் துயிர்மூன்று முற்றன
ஓங்காரம் சீவ பரசிவ ரூபமே.
பழுத்தன வைந்தும் பழமறை யுள்ளே
விழித்தங் குறங்கும் வினையறிவா ரில்லை
எழுத்தறி வோமென் றுரைப்பர்க ளேதர்
எழுத்தை யழுத்து மெழுத்தறி யாரே.
[7] Rich F. Gombrich, Ancient Indian Cosmology, pp. 110-142 in
Ancient cosmologies (Ed.: C. Blacker, M. Loewe, George Allen & Unwin, 1975)
pg. 120-1
" I shall now present in extenso a passage from the Mahabharata, as systematised by Prof. Frauwallner, because it is a relatively early passage which gives a not untypical cosmogony combined with a basic cosmology of both space and time. This account occurs in the Inquiry of 'Suka, a section in the twelfth book of the Mahabharata, and it is closely related to that in the first book of Manu. It rests on the theory of the four ages of the world, the four yuga. The yuga are named after the four throws of the dice, 4, 3, 2, 1; in descending order they are called kRta, tretA, dvApara and kali. These four dicing terms are already referred to the four yuga by an ancient commentator on a Brahmana text, so this theory probably antedates even the Mahabharata. The first, the kRta, is the golden age, whereas we live in the kali yuga, which started with the great war which is the main theme of the MBh; this date was later identified as 17 February, 3102 BC. I cannot here describe the golden age when the bull of Dharma, cosmic rightness, stood on all four feet; and the kali yuga we know all too well; I must confine myself to temporal proportions and dimensions. The golden age lasts 4,000 years, with a dawn and twilight of 400 years each; during it, men live to an age of 400 years. The four yuga are related in the proportion 4:3:2:1, so that the maximum life-span is now 100 years." [...]
[8] சித்தர் சிவவாக்கியர்
எட்டுயோக மானதும் இயங்குகின்ற நாதமும்
எட்டுவக்கரத்துளே உகாரமும் மகாரமும்
விட்டலர்ந்த மந்திரம் வீணாத்தண்டினூடு போய்
அட்டவர்க்கரத்துளே அமர்ந்ததே சிவாயமே.
Posted by
நா. கணேசன்
at
0
comments
சிந்து சமவெளித் தமிழ்-திராவிட பண்பாட்டு ஆதாரங்கள்: கலிபோர்னியா பிரிமாண்ட் நூலகச் சொற்பொழிவு
சென்ற 27-12-2011 மாலைவேளையில் நண்பர்கள் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிச் சொற்பொழிவாற்ற என்னைப் பணித்தனர். ப்ரிமாண்ட் நூல்நிலையத்தில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து கேட்டுக் கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
சுமார் 30 ஸ்லைட்ஸ் கொண்டு சிந்து சமவெளிக் கலைப்படைப்புகள் விளக்கப்பெற்றன. மீன், முதலைகள் (முக்கியமாக, விடங்கர்/இடங்கர் என அழைக்கப்படும் gharial), விடங்கர்-கொற்றவை தம்பதியர் சிந்து நாகரீக வேளாண் சமூகச் சமயத்தில் பெற்றிருந்த பங்கு பற்றியதாகப் பேச்சு அமைந்திருந்தது. இந்தியாவில் 3 முதலை இனங்கள் வாழ்கின்றன: (1) நன்னீர் முதலை “mugger crocs” (2) கரா "saltewater or estuarine crocs" (3) இடங்கர் "gharial". இந்த மூவினங்களையும் புறநானூற்றிலும், தொல்காப்பியச் சூத்திரத்து உரையில் பேராசிரியரும் மூவகைச் சாதிகள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நிலம்-நீர் வாழ் ஊரிகள் (reptiles) சார்ந்த மகரமுதலைகள் எவ்வாறு சிந்து சமவெளிக் கலைகளில் முக்கிய இடம் வகித்தன என்பதுபற்றி விரிவாக சிந்துமுத்திரை ஒளிப்படங்கள் கொண்டு உரைத்தபின்னர் கேள்விநேரம் அமைந்தது. இடைவேளைக்குப் பின்னர் ”சங்க இலக்கியத்தில் இயற்கை” என்ற இரண்டாம் உரையில் இந்திய தொன்மங்களுக்கும் சங்க இலக்கியங்கள் காட்டும் சில உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பு காட்டப்பெற்றது. சங்க இலக்கியப் பறவைகளில் கவைத்தலைப்புள் என்னும் கண்டபேருண்டப்பட்சி பற்றியும், பாலூட்டிகளில் மரையான் (Nilgai) எனப்படும் விலங்கு எவ்வாறு சிந்து சமவெளியியில் Unicorn சின்னம் ஆனது, அந்த யுனிகார்ன் சின்னம் ஐரோப்பாவிற்கும், சீனாவிற்கும் பரவிய வரலாறு, மரையா மறைய, மறைய கருமா எனப்படும் கிருஷ்ணம்ருகம் (Blackbuck) ஆக மாறியது (உ-ம்: கலைக்கோட்டுமுனி எனக் கம்பன் அழைக்கும் ருசியசிருங்கர் சரிதம்) பயன்பாடு பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கிழக்கு இந்தியாவின் முண்டா மொழிகளில் முதலைகளின் ஆதியான பெயர்கள் வடமொழியில் புகவில்லை என்பதும் சிந்து நாகரீக மேல்குடிகள் யார்? எனும் ஆய்விற்குப் பயன்படும்.
நிகழ்ச்சி விவரம்:
-----------------------------
Dear Friends,
You are invited for a lecture by Dr. N. Ganesan.
Topics : 1) Tamil-Dravidian Culture in Indus Valley Civilization
2) Nature in Classical Tamil Literature
Place : Fremont Main Library
2400 Stevenson Blvd
Fremont, CA 94538
Date : Dec 27th, 2011
Time : 6:00 PM to 8:00 PM
------------------------------------------
References:
(1) A. Parpola, Crocodile in the Indus civilization and later South Asian traditions, Edited by T. Osada and H. Endo, Indus Project, Research Inst. for Humanity and Nature, Kyoto, Japan, 2011.
(2) N. Ganesan, Gharial god and Tiger goddess in the Indus valley: Some aspects of Bronze Age Indian Religion, 2007.
(3) N. Ganesan, A Dravidian Etymology for Makara - Crocodile,
Prof. V. I. Subramonium commemoration volume, ISDL, Tiruvananthapuram, Kerala, 2011.
Abstract: The Indus valley Bronze Age saw the flourishing of the largest agriculture based civilization in the ancient world, and reached its classical era about 4200 years ago. The seals unearthed throughout the 20th century CE cover a wide geographical area of the Indus Valley Civilization (IVC) and the glyptic art featured in the IVC seals show the importance of land and aquatic fauna in the cultural life. The characteristic fish sign pointing to the Dravidian language spoken by the elite Harappans has long been explored from the days of Fr. H. Heras, SJ. However, the importance of crocodiles in IVC culture is just coming to light [1]. Ananda K. Coomaraswamy was the first scholar to show that makara in the earliest stages referred to the Indian crocodile. This paper explores the importance of the crocodile as an equivalent of Proto-Varuṇa portrait in the IVC religion, and its relationship with the tiger-goddess, Proto-Durgā by analyzing the linked imagery in IVC art. A Dravidian etymology for the Sanskrit word, makara from (i) the names of the marsh crocodile in all the Dravidian languages, and (ii) the names of the crocodile in Sindh and Gujarat regions is offered. In particular, it is shown that the names in South Munda languages prevalent in Orissa are loan words from Dravidian, and they do not form part of the Austroasiatic heritage.
KoRRavai and Mahisha in Indus Valley:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
Posted by
நா. கணேசன்
at
1
comments
அகநானூறு 241 (பாலைத்திணை)
241. பாலை
[பிரிவிடை வேறுபட்ட தலைமகள், வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.]
துனியின் றியைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம அவரென முனியாது
நல்குவர் நல்ல கூறினும் அல்கலும்
பிரியாக் காதலொடு உழைய ராகிய
நமர்மன் வாழி தோழி யுயர்மிசை (5)
மூங்கில் இளமுளை திரங்கக் காம்பின்
கழைநரல் வியலகம் வெம்ப மழைமறந்து
அருவி யான்ற வெருவரு நனந்தலைப்
பேஎய் வெண்தேர்ப் பெயல்செத் தோடித்
தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை (10)
புலம்பெயர்ந் துறைதல் செல்லா 1தலங்குதலை
விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
வட்டக் கழங்கில் தாஅய்த் துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும் (15)
2நன்மர மருங்கின் மலையிறந் தோரே.
-காவன் முல்லைப் பூதனார்.
(சொ - ள்.) 5. தோழி-, வாழி-,
1-5. முனியாது நல்குவர் - என்னை வெறாது அருளுவார் ஒருவர், துனி இன்று இயைந்த துவரா நட்பின் - வெறுப்பின்றி ஒன்றிய என்றும் பிளவுபடாத நட்பினையுடைய, இனியர் - இனிய குணங்களையுடையர், அவர் என - நம் தலைவர் என, நல்ல கூறினும்-அவரது நற்குணங்களைப் பாராட்டிக் கூறினும், அல்கலும்-என்றும், பிரியாக் காதலொடு-நம்மை விட்டுப் பிரியாத காதலுடன், உழையர் ஆகிய-நம் பக்கலில் உள்ளார் ஆகிய, நமர் - நம் காதலர் (இப்பொழுது);
5-16. உயர் மிசை-மலையின் உச்சிக்கண்ணே யுள்ள, மூங்கில் இளமுளை திரங்க-மூங்கிலின் இளைய முளை வதங்கவும், காம்பின் கழை நரல் வியல் அகம் வெம்ப-மூங்கில்தண்டு ஒலிக்கும் பெரிய பாறையின் இடங்கள் வெம்பவும், மழை மறைந்து - மழை பெய்யாது மறந்து போதலின், அருவி ஆன்ற - அருவி இல்லையாகிய, வெருவரு நனந்தலை -அச்சம் வரும் அகன்றஇடத்தே தோன்றிய, பேஎய் வெண் தேர்பெயல் செத்து ஓடி-வெள்ளிய பேய்த்தேரை மழையென்று கருதி ஓடி, தாஅம் பட்ட தனி முதிர் பெரு கலை - தாகம்பட்ட தனித்த முதிர்ந்த பெரிய கலைமான், புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது-அவ்விடத்தினின்றும் மீண்டு உறைதல் மாட்டாது, அலங்கு தலை விருந்தின் வெம் காட்டு - அப் பேய்த்தேர் அசையும் இடமாய புதியவெவ்விய காட்டின்கண்ணே, வருந்தி வைகும்-வருத்தமுற்றுத் தங்கிக்கிடக்கும், அத்தம் நெல்லி தீம் சுவை திரள் காய்-பாலைநிலவழியில் உள்ள நெல்லியின் இனிய சுவை பொருந்திய திரண்ட காய்கள் ஆகிய, வட்ட கழங்கில் - வட்டமான கழங்குகளைக் கொண்டு, துய் தலை செம்முக மந்தி தாஅய் ஆடும்-பஞ்சு போன்ற மயிரையுடைய தலையினையும் சிவந்த முகத்தையுமுடைய மந்தி தாவி விளையாடும், நல்மர மருங்கின் மலையிறந்தோர் - நல்ல மரங்கள் பொருந்திய பக்கத்தையுடைய மலையினைக்கடந்து சென்றார் ஆதலின் ஆற்றகில்லேன்.
(முடிபு) தோழி! வாழி! முனியாது நல்குவர், ஒருவர் ‘நட்பின் இனியர் நம் தலைவர்’ என நல்ல கூறினும், பிரியாக் காதலோடு உழையர் ஆகிய நமர், மலையிறந்தோர்; ஆதலின் ஆற்றகில்லேன் என்றாள்.
(வி - ரை.) முனியாது நல்குவர் என்றது, தோழியைப் பிறர் போற் கூறியதாகும். இனி அவர் நட்பின் இனியர், நல்குவர் என நீ முனியாது நல்ல கூறினும் என்றுரைத்தலுமாம். மறந்து-மறத்தலால். பேஎய்த்தேர் - வெண்டேர் எனவும்படும். தாகம் என்றது தாஅம் என விகாரமாயிற்று. புலம்-வேறு நற்புலம் என்றுமாம். அலங்குதலை-வருந்துதற் கேதுவாகிய இடமுமாம்.
(பாடம்) 1.அலங்கு நிலை. 2. நீன்மரம்
[பதிப்பு: பாகனேரி மு. காசிவிசுவநாதன் செட்டியார், மறுபதிப்பு: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.]
Notes:
kalai - refers to the stag of blackbuck. (kalaimAn2, is the vehicle of Durga in art and literature, and we know it is the black buck from Tamil sculptures). The stag in this Akam 241 poem is chasing after a mirage, that is what the talaivi thinks of his pursuits, perhaps.
The pAlai-t-tiNai poem Akam 241under discussion is very similar in contents with the pAlai poem 151. Note the similarity of the poets' names as well. Same kalaimAn2 (blackbuck stag) appears in both and stands for the hero. Also, the talaivi < - > palli in 151 where as talaivi < > manti in 241.
Note that the "cemmuka manti" which is the female of the special bonnet macaques (macaca r. diluta. current range: extreme south of India). I think the cemmuka manti stands for the talaivi herself, the manti (female monkey) plays nellik kAy-s just like she is playing with kazaGku beans back home, with her heart being tossed up and down in the emotional times when he has gone off to far away places leaving her behind.
பொதிகைமலைச் செம்முக மந்தி (அரிய இனம்):
"துய்த்தலைச் செம்முக மந்தி” (அகம் 241). Even though this special bonnet monkey
(macaca r. diluta) is now restricted to extreme South, in Sangam times, its historic range could have included entire south India):
பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி
மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்
(புறநானூறு 200)
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
(புறநானூறு பாடல் 378)
கடுவன்
முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்தில் களவினில் புணர்ந்த
செம்முக மந்தி செல்குறி கருங்கால்
பொன்இணர் வேங்கைப் பூஞ்சினை
(நற்றிணை 151)
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க
(நற்றிணை 95)
வட்டக் கழங்கில் தாஅய்த் துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும்
(அகநானூறு 241)
கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி
பருவிரலாற் பைஞ்சுனைநீர் தூஉய்ப்-பெருவரைமேற்
றேன்றேவர்க் கொக்கு மலைநாட! வாரலோ
வான்றேவர் கொட்கும் வழி
(திணைமாலை நூற்றைம்பது)
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
(சம்பந்தர், முதல் திருமுறை)
கைம்மகவேந்திக் கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
(சம்பந்தர், திருமுறை)
Choice 2: ஊர்க்குரங்கு (அ) நாட்டுக்குரங்கு (macaca r. radiata): சினைக்காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் மந்திகளின் நிறம் சற்றுச் சிவப்பாயிருக்கும். They are called Bonnet moneys and endemic in south India.
செம்முகக் குரங்கு (Rhesus macaque}:
http://en.wikipedia.org/wiki/Rhesus_macaque The rhesus monkeys are very, very rare in south India, but whether they existed in the South in sangam times is unknown.
To learn more,
The special bonnet monkey (macaca r. diluta)
http://www.flickr.com/photos/anujnair/3500620860/
http://www.drkrishi.com/tag/macaca-diluta
Common bonnet monkey:
http://obiologoamador.blogspot.com/2010/10/macaco-de-barrete-macaca-radiata.html
http://www.treknature.com/gallery/Asia/India/photo228119.htm
The Bonnet Macaque Revisited: Ecology, Demography and Behaviour - Anindya Sinha
http://oldwww.wii.gov.in/envis/primates/page30.htm
------------------------
கலை மான் (Blackbuck stag): antilope cervicapra
http://en.wikipedia.org/wiki/Black_buck
கலைமான் (ஆண்) திருகுகொம்பு உடையது. பெண்மாண்களுக்குத் திருகுகொம்பு இல்லை (female blackbucks have little spikes only, if at all they show up.)
இந்தியாவிலே உருவான மான் குடும்பம் - கலைமான் (கிருஷ்ணமிருகம்).
ஆசியா வரைபடத்தில் உலகிலேயே இந்தியாவில் மட்டுமே கலைமான்
இயற்கையின் நன்கொடை.
இந்தியாவில் தோன்றி வாழும் மான்களில் இலக்கியங்களிலும் கலைச்சிற்பங்களிலும் முக்கிய இடம்பெறுவது கலைமான் ஆகும். கலை (கலைமான்), இரலை என்பன கருநிற மானாக விளங்கும் ஆண்பாலைக் குறிக்கும் பெயர்கள். இந்த வகை மான்களில் கருநிறத்தில் அல்லாமல் பழுப்பு நிறமாக பெண்ணினம் இருக்கும். ஆணும், பெண்ணும் சேர்த்துப் பொதுவாக இம் மானினத்தைப் புல்வாய் என்கிறோம்.
ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2
(தொல். பொருள். மரபியல்)
கல்-/கரு- ‘black' > கலை, இரலை (Cf. ஈரல்) - இரண்டும் கருமான் ஆகிய புல்வாய்-ஏறு ஆகும்.
கருமை நிறமல்லாத பெண்-புல்வாய்க்கு கரியபொருள் தரும் கலை அல்லது இரலை என்ற பெயர் பொருந்தாது அன்றோ? எனவே, ஆணும், பெண்ணும் சேர்த்துப் பொதுவாய் முழு இனத்தையும் குறிப்பிடப் புல்வாய் என்னும் சொல்லைத் தொல்காப்பியர் ஆளுகிறார்.
இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய.
(தொல். பொருள். மரபியல் 46)
துர்க்கை/கொற்றவை சிந்து சமவெளிக் காலத்திலிருந்து தொல்தமிழர் வணங்கும் தெய்வம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
கொற்றவையின் வாகனம் கலைமான் (Blackbuck stag) என்று தமிழ் இலக்கியமும் சிற்ப வரலாறும் காட்டிநிற்கிறது.
[Photo Courtesy: Dr. Michael Rabe, St. Xavier University, Chicago.
Durga with black antelope as vahana. From Chennai museum, originally from Tanjore district. Note that Durga sculptures with black antelope are found only in Tamil Nadu in India.]
சிலப்பதிகார வேட்டுவ வரியில், எயினர் மறக்குலப் பெண்ணான சாலினியைக் கொற்றவையாகக் கோலம் புனைந்து திரிதரு கோட்டுக் கலைமான் ஊர்தியில் ஏற்றுவது வர்ணிக்கப்பட்டுள்ளது.
வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரிய திரிகோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் (சிலம்பு)
சிவபெருமானின் கையில் கணிச்சி மழுவும், கலைமானும் (கருமான்) விளங்குகின்றன. தேவாரச் செய்யுள்களில் ”கையமரும் மழு நாகம் வீணை கலைமான் மறியேந்தி மெய்யமரும் பொடிப் பூசி”, “கலைமான் மறி ஏந்து கையா!” என்றும், ”கரியின் னுரியுங் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம்”, ”செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்
கையர் கனைகழல் கட்டிய காலினர்” ”மைஞ்ஞிறமான்”...
சிவன் கிருஷ்ண அஜினம் அணிவது ஏன்? கையில் கலைமான் ஏந்துவது ஏன்?
Presence of 'Siva, S. Kramrsich, Princeton University press, pg. 338
"The consecrating magic of the black antelope skin was vested in the black antelope, Rudra's victim. "Once upon a time the sacrifice escaped the gods, and having become a black antelope roamed about. The gods having thereupon found it, and stripped it of its skin" ('Satapatha Brahmana 1.1.4.1) [25].
[...]
Even so it was the skin of the black antelope (kRSNaajina) that sanctified and was homologized with the brahman (KB 4.11). The gods flayed the animal; Rudra had shot it.
Ironically though, by unerring logic, Rudra, who was excluded from the sacrifice, was the cause of the sacrificial, sanctifying magic emanating from the flayed skin of the black antelope, his victim.
Ritually, the black antelope was the sacrifice. Mythically and ritually, Prajapati was the sacrifice. "With the sacrifice the gods sacrifice to the sacrifice" (Rgveda 10.90.16; VS 31.16; 'SB 10.2.2.2). The antelope was Prajapati and, from the beginning, Rudra's animal skin."
பிரமனுக்கும் கலைமான் உரி உண்டு, சிவன் மனைவி கொற்றவை, பிரமனின் கலைமகள் இருவருக்கும் கலைமான் ஊர்தி. வட மொழியில் கலைமான் (கருமான்) க்ருஷ்ணமிருகம்
என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கருமான் = கிருஷ்ண மிருகம். ஈஸ்வரன் (பிரமனும்தான்) விரும்பி எப்போதும் அணிவது கிருஷ்ணமிருகம் எனப்படும் கலைமான் (கருமான்) தோலையே. சிவன், பிரம்மா சிலைகளில் யக்ஞோபவீதத்தில் கலைமான் தலை இருக்கும்.
பிரமன், சிவன் அணிவதால் அவர்கள் துணைவியர் கலைமகள், கொற்றவை இருவருக்கும் கருமான்/க்ருஷ்ணமிருகம் வாகனமும் ஆகும். ”கருமானின் உரியதளே உடையா வீக்கி” தேவாரம்.
காளமேகப் புலவர் சிவபிரானின் திருவீதி உலாவையும் - தமிழரின் 10 சாதிகளையும் சிலேடையாகப் பாடும் பலருமறிந்த செய்யுளில் கருமான் என்பது கம்மாளனுக்கும்,கலைமான் ஏற்றைக்குமாய் வருகிறது.
கட்டளைக் கலித்துறை
வாணியன் வாழ்த்திட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி
சேணியன் போற்றத் திரைப்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
கோணியன் தாழக் கருமான் துகிலினைக் கொண்டணிந்த
வேணிய னாகிய தட்டான் புறப்பட்ட வேடிக்கையே!
கலைமான் கறுப்பு நிறத்தினால் ஏற்பட்ட பெயர் என்று காட்ட மேலும் இரு விலங்குகளுக்கும் கலை என்ற பெயர் காட்டலாம். முசு (Tufted gray langur, லாங்கூலம்/நாங்கூழை) குரங்கில் விசேடமாக ஆணுக்கு கலை எனப் பெயர். முசு ஆங்கிலத்தில் Madras langur (or) Malabar langur எனப்படுகிறது. முசுவுக்கு மைம்முகன் என்ற பெயரை நிகண்டு கொடுக்கிறது. வடநாட்டில் இதற்கு நெருங்கிய உறவுடைய முசுவை ஹனுமான் குரங்கு என்கிறார்கள்.
http://www.birding.in/mammals/presbytes_01.htm
http://hannahz.hubpages.com/hub/7-Fun-Facts-on-the-Gray-Langur-Indias-Most-Widespread-Monkey
இந்துமகாசமுத்திரத்தை வாழிடமாகக் கொண்ட சுறா மீன்களுக்கும் கலை என்ற பெயர். கலைமான் போலவே பெரும்பகுதி கருமை காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Tiger_shark
http://www.ehow.com/info_8432415_types-sharks-indian-ocean.html
நா. கணேசன்
Posted by
நா. கணேசன்
at
2
comments