அகநானூறு 241 (பாலைத்திணை)

241. பாலை

[பிரிவிடை வேறுபட்ட தலைமகள், வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.]

துனியின் றியைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம அவரென முனியாது
நல்குவர் நல்ல கூறினும் அல்கலும்
பிரியாக் காதலொடு உழைய ராகிய
நமர்மன் வாழி தோழி யுயர்மிசை (5)
மூங்கில் இளமுளை திரங்கக் காம்பின்
கழைநரல் வியலகம் வெம்ப மழைமறந்து
அருவி யான்ற வெருவரு நனந்தலைப்
பேஎய் வெண்தேர்ப் பெயல்செத் தோடித்
தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை (10)
புலம்பெயர்ந் துறைதல் செல்லா 1தலங்குதலை
விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய்
வட்டக் கழங்கில் தாஅய்த் துய்த்தலைச்
செம்முக மந்தி ஆடும் (15)
2நன்மர மருங்கின் மலையிறந் தோரே.

-காவன் முல்லைப் பூதனார்.

(சொ - ள்.) 5. தோழி-, வாழி-,

1-5. முனியாது நல்குவர் - என்னை வெறாது அருளுவார் ஒருவர், துனி இன்று இயைந்த துவரா நட்பின் - வெறுப்பின்றி ஒன்றிய என்றும் பிளவுபடாத நட்பினையுடைய, இனியர் - இனிய குணங்களையுடையர், அவர் என - நம் தலைவர் என, நல்ல கூறினும்-அவரது நற்குணங்களைப் பாராட்டிக் கூறினும், அல்கலும்-என்றும், பிரியாக் காதலொடு-நம்மை விட்டுப் பிரியாத காதலுடன், உழையர் ஆகிய-நம் பக்கலில் உள்ளார் ஆகிய, நமர் - நம் காதலர் (இப்பொழுது);

5-16. உயர் மிசை-மலையின் உச்சிக்கண்ணே யுள்ள, மூங்கில் இளமுளை திரங்க-மூங்கிலின் இளைய முளை வதங்கவும், காம்பின் கழை நரல் வியல் அகம் வெம்ப-மூங்கில்தண்டு ஒலிக்கும் பெரிய பாறையின் இடங்கள் வெம்பவும், மழை மறைந்து - மழை பெய்யாது மறந்து போதலின், அருவி ஆன்ற - அருவி இல்லையாகிய, வெருவரு நனந்தலை -அச்சம் வரும் அகன்றஇடத்தே தோன்றிய, பேஎய் வெண் தேர்பெயல் செத்து ஓடி-வெள்ளிய பேய்த்தேரை மழையென்று கருதி ஓடி, தாஅம் பட்ட தனி முதிர் பெரு கலை - தாகம்பட்ட தனித்த முதிர்ந்த பெரிய கலைமான், புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது-அவ்விடத்தினின்றும் மீண்டு உறைதல் மாட்டாது, அலங்கு தலை விருந்தின் வெம் காட்டு - அப் பேய்த்தேர் அசையும் இடமாய புதியவெவ்விய காட்டின்கண்ணே, வருந்தி வைகும்-வருத்தமுற்றுத் தங்கிக்கிடக்கும், அத்தம் நெல்லி தீம் சுவை திரள் காய்-பாலைநிலவழியில் உள்ள நெல்லியின் இனிய சுவை பொருந்திய திரண்ட காய்கள் ஆகிய, வட்ட கழங்கில் - வட்டமான கழங்குகளைக் கொண்டு, துய் தலை செம்முக மந்தி தாஅய் ஆடும்-பஞ்சு போன்ற மயிரையுடைய தலையினையும் சிவந்த முகத்தையுமுடைய மந்தி தாவி விளையாடும், நல்மர மருங்கின் மலையிறந்தோர் - நல்ல மரங்கள் பொருந்திய பக்கத்தையுடைய மலையினைக்கடந்து சென்றார் ஆதலின் ஆற்றகில்லேன்.

(முடிபு) தோழி! வாழி! முனியாது நல்குவர், ஒருவர் ‘நட்பின் இனியர் நம் தலைவர்’ என நல்ல கூறினும், பிரியாக் காதலோடு உழையர் ஆகிய நமர், மலையிறந்தோர்; ஆதலின் ஆற்றகில்லேன் என்றாள்.

(வி - ரை.) முனியாது நல்குவர் என்றது, தோழியைப் பிறர் போற் கூறியதாகும். இனி அவர் நட்பின் இனியர், நல்குவர் என நீ முனியாது நல்ல கூறினும் என்றுரைத்தலுமாம். மறந்து-மறத்தலால். பேஎய்த்தேர் - வெண்டேர் எனவும்படும். தாகம் என்றது தாஅம் என விகாரமாயிற்று. புலம்-வேறு நற்புலம் என்றுமாம். அலங்குதலை-வருந்துதற் கேதுவாகிய இடமுமாம்.

(பாடம்) 1.அலங்கு நிலை. 2. நீன்மரம்

[பதிப்பு: பாகனேரி மு. காசிவிசுவநாதன் செட்டியார், மறுபதிப்பு: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.]

Notes:

kalai - refers to the stag of blackbuck. (kalaimAn2, is the vehicle of Durga in art and literature, and we know it is the black buck from Tamil sculptures). The stag in this Akam 241 poem is chasing after a mirage, that is what the talaivi thinks of his pursuits, perhaps.

The pAlai-t-tiNai poem Akam 241under discussion is very similar in contents with the pAlai poem 151. Note the similarity of the poets' names as well. Same kalaimAn2 (blackbuck stag) appears in both and stands for the hero. Also, the talaivi < - > palli in 151 where as talaivi < > manti in 241.

Note that the "cemmuka manti" which is the female of the special bonnet macaques (macaca r. diluta. current range: extreme south of India). I think the cemmuka manti stands for the talaivi herself, the manti (female monkey) plays nellik kAy-s just like she is playing with kazaGku beans back home, with her heart being tossed up and down in the emotional times when he has gone off to far away places leaving her behind.

பொதிகைமலைச் செம்முக மந்தி (அரிய இனம்):



"துய்த்தலைச் செம்முக மந்தி” (அகம் 241). Even though this special bonnet monkey
(macaca r. diluta) is now restricted to extreme South, in Sangam times, its historic range could have included entire south India):



பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு
சிறந்துசேண் விளங்கி
மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்
(புறநானூறு 200)

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
(புறநானூறு பாடல் 378)

கடுவன்
முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்தில் களவினில் புணர்ந்த
செம்முக மந்தி செல்குறி கருங்கால்
பொன்இணர் வேங்கைப் பூஞ்சினை
(நற்றிணை 151)

ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க
(நற்றிணை 95)

வட்டக் கழங்கில் தாஅய்த் துய்த்தலைச்
செம்முக மந்தி
ஆடும்
(அகநானூறு 241)

கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி
பருவிரலாற் பைஞ்சுனைநீர் தூஉய்ப்-பெருவரைமேற்
றேன்றேவர்க் கொக்கு மலைநாட! வாரலோ
வான்றேவர் கொட்கும் வழி
(திணைமாலை நூற்றைம்பது)

சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ
டுழிதரும் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
(சம்பந்தர், முதல் திருமுறை)

கைம்மகவேந்திக் கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
(சம்பந்தர், திருமுறை)


Choice 2: ஊர்க்குரங்கு (அ) நாட்டுக்குரங்கு (macaca r. radiata): சினைக்காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் மந்திகளின் நிறம் சற்றுச் சிவப்பாயிருக்கும். They are called Bonnet moneys and endemic in south India.












செம்முகக் குரங்கு (Rhesus macaque}:
http://en.wikipedia.org/wiki/Rhesus_macaque The rhesus monkeys are very, very rare in south India, but whether they existed in the South in sangam times is unknown.
















To learn more,
The special bonnet monkey (macaca r. diluta)
http://www.flickr.com/photos/anujnair/3500620860/
http://www.drkrishi.com/tag/macaca-diluta

Common bonnet monkey:
http://obiologoamador.blogspot.com/2010/10/macaco-de-barrete-macaca-radiata.html
http://www.treknature.com/gallery/Asia/India/photo228119.htm

The Bonnet Macaque Revisited: Ecology, Demography and Behaviour - Anindya Sinha
http://oldwww.wii.gov.in/envis/primates/page30.htm



------------------------
கலை மான் (Blackbuck stag): antilope cervicapra
http://en.wikipedia.org/wiki/Black_buck



கலைமான் (ஆண்) திருகுகொம்பு உடையது. பெண்மாண்களுக்குத் திருகுகொம்பு இல்லை (female blackbucks have little spikes only, if at all they show up.)





இந்தியாவிலே உருவான மான் குடும்பம் - கலைமான் (கிருஷ்ணமிருகம்).
ஆசியா வரைபடத்தில் உலகிலேயே இந்தியாவில் மட்டுமே கலைமான்
இயற்கையின் நன்கொடை.




இந்தியாவில் தோன்றி வாழும் மான்களில் இலக்கியங்களிலும் கலைச்சிற்பங்களிலும் முக்கிய இடம்பெறுவது கலைமான் ஆகும். கலை (கலைமான்), இரலை என்பன கருநிற மானாக விளங்கும் ஆண்பாலைக் குறிக்கும் பெயர்கள். இந்த வகை மான்களில் கருநிறத்தில் அல்லாமல் பழுப்பு நிறமாக பெண்ணினம் இருக்கும். ஆணும், பெண்ணும் சேர்த்துப் பொதுவாக இம் மானினத்தைப் புல்வாய் என்கிறோம்.

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2
(தொல். பொருள். மரபியல்)

கல்-/கரு- ‘black' > கலை, இரலை (Cf. ஈரல்) - இரண்டும் கருமான் ஆகிய புல்வாய்-ஏறு ஆகும்.

கருமை நிறமல்லாத பெண்-புல்வாய்க்கு கரியபொருள் தரும் கலை அல்லது இரலை என்ற பெயர் பொருந்தாது அன்றோ? எனவே, ஆணும், பெண்ணும் சேர்த்துப் பொதுவாய் முழு இனத்தையும் குறிப்பிடப் புல்வாய் என்னும் சொல்லைத் தொல்காப்பியர் ஆளுகிறார்.

இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய.
(தொல். பொருள். மரபியல் 46)

துர்க்கை/கொற்றவை சிந்து சமவெளிக் காலத்திலிருந்து தொல்தமிழர் வணங்கும் தெய்வம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

கொற்றவையின் வாகனம் கலைமான் (Blackbuck stag) என்று தமிழ் இலக்கியமும் சிற்ப வரலாறும் காட்டிநிற்கிறது.


[Photo Courtesy: Dr. Michael Rabe, St. Xavier University, Chicago.
Durga with black antelope as vahana. From Chennai museum, originally from Tanjore district. Note that Durga sculptures with black antelope are found only in Tamil Nadu in India.]

சிலப்பதிகார வேட்டுவ வரியில், எயினர் மறக்குலப் பெண்ணான சாலினியைக் கொற்றவையாகக் கோலம் புனைந்து திரிதரு கோட்டுக் கலைமான் ஊர்தியில் ஏற்றுவது வர்ணிக்கப்பட்டுள்ளது.

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரிய திரிகோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் (சிலம்பு)

சிவபெருமானின் கையில் கணிச்சி மழுவும், கலைமானும் (கருமான்) விளங்குகின்றன. தேவாரச் செய்யுள்களில் ”கையமரும் மழு நாகம் வீணை கலைமான் மறியேந்தி மெய்யமரும் பொடிப் பூசி”, “கலைமான் மறி ஏந்து கையா!” என்றும், ”கரியின் னுரியுங் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம்”, ”செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்
கையர் கனைகழல் கட்டிய காலினர்” ”மைஞ்ஞிறமான்”...

சிவன் கிருஷ்ண அஜினம் அணிவது ஏன்? கையில் கலைமான் ஏந்துவது ஏன்?

Presence of 'Siva, S. Kramrsich, Princeton University press, pg. 338
"The consecrating magic of the black antelope skin was vested in the black antelope, Rudra's victim. "Once upon a time the sacrifice escaped the gods, and having become a black antelope roamed about. The gods having thereupon found it, and stripped it of its skin" ('Satapatha Brahmana 1.1.4.1) [25].
[...]
Even so it was the skin of the black antelope (kRSNaajina) that sanctified and was homologized with the brahman (KB 4.11). The gods flayed the animal; Rudra had shot it.

Ironically though, by unerring logic, Rudra, who was excluded from the sacrifice, was the cause of the sacrificial, sanctifying magic emanating from the flayed skin of the black antelope, his victim.

Ritually, the black antelope was the sacrifice. Mythically and ritually, Prajapati was the sacrifice. "With the sacrifice the gods sacrifice to the sacrifice" (Rgveda 10.90.16; VS 31.16; 'SB 10.2.2.2). The antelope was Prajapati and, from the beginning, Rudra's animal skin."

பிரமனுக்கும் கலைமான் உரி உண்டு, சிவன் மனைவி கொற்றவை, பிரமனின் கலைமகள் இருவருக்கும் கலைமான் ஊர்தி. வட மொழியில் கலைமான் (கருமான்) க்ருஷ்ணமிருகம்
என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கருமான் = கிருஷ்ண மிருகம். ஈஸ்வரன் (பிரமனும்தான்) விரும்பி எப்போதும் அணிவது கிருஷ்ணமிருகம் எனப்படும் கலைமான் (கருமான்) தோலையே. சிவன், பிரம்மா சிலைகளில் யக்ஞோபவீதத்தில் கலைமான் தலை இருக்கும்.
பிரமன், சிவன் அணிவதால் அவர்கள் துணைவியர் கலைமகள், கொற்றவை இருவருக்கும் கருமான்/க்ருஷ்ணமிருகம் வாகனமும் ஆகும். ”கருமானின் உரியதளே உடையா வீக்கி” தேவாரம்.

காளமேகப் புலவர் சிவபிரானின் திருவீதி உலாவையும் - தமிழரின் 10 சாதிகளையும் சிலேடையாகப் பாடும் பலருமறிந்த செய்யுளில் கருமான் என்பது கம்மாளனுக்கும்,கலைமான் ஏற்றைக்குமாய் வருகிறது.

கட்டளைக் கலித்துறை

வாணியன் வாழ்த்திட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி
சேணியன் போற்றத் திரைப்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
கோணியன் தாழக் கருமான் துகிலினைக் கொண்டணிந்த
வேணிய னாகிய தட்டான் புறப்பட்ட வேடிக்கையே!

கலைமான் கறுப்பு நிறத்தினால் ஏற்பட்ட பெயர் என்று காட்ட மேலும் இரு விலங்குகளுக்கும் கலை என்ற பெயர் காட்டலாம். முசு (Tufted gray langur, லாங்கூலம்/நாங்கூழை) குரங்கில் விசேடமாக ஆணுக்கு கலை எனப் பெயர். முசு ஆங்கிலத்தில் Madras langur (or) Malabar langur எனப்படுகிறது. முசுவுக்கு மைம்முகன் என்ற பெயரை நிகண்டு கொடுக்கிறது. வடநாட்டில் இதற்கு நெருங்கிய உறவுடைய முசுவை ஹனுமான் குரங்கு என்கிறார்கள்.

http://www.birding.in/mammals/presbytes_01.htm
http://hannahz.hubpages.com/hub/7-Fun-Facts-on-the-Gray-Langur-Indias-Most-Widespread-Monkey










இந்துமகாசமுத்திரத்தை வாழிடமாகக் கொண்ட சுறா மீன்களுக்கும் கலை என்ற பெயர். கலைமான் போலவே பெரும்பகுதி கருமை காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Tiger_shark
http://www.ehow.com/info_8432415_types-sharks-indian-ocean.html








நா. கணேசன்

2 comments:

சத்ரியன் said...

உரிய விளக்கங்களுடன், அற்புதமான பகிர்வு.

பாராட்டுக்கள்

கண்மணித்தமிழ் said...

கட்டுரை தரமாக உள்ளது என்பதற்கு மற்றவர் அதைப் பயன்படுத்துவதே சான்றாகிறது.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்
சக