புரட்சிக்கவிஞர் 1926-ல் பாடிய மணக்குள விநாயகர் திருப்புகழ்

மணக்குள விநாயகர் மேல் பாரதியார் நான்மணிமாலை பாடியுள்ளார். கவிஞர் பாரதிதாசன் முதலில் எழுதி வெளியிட்ட மூன்று நூல்கள் மயிலம் முருகன் மீது பாடப்பெற்றவை:
(1) மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு (1920)
(2) மயிலம் ஸ்ரீ ஷண்முகக் கடவுள் பஞ்சரத்நம் (1925)
(3) மயிலம் சுப்பிரமணியர் துதியமுது (1926). இதில் புதுவை மணக்குள விநாயகரைத் துதிக்கும் சந்தப்பாடலை முதலில் துதியாகப் பாடிச் சேர்த்துள்ளார்.

  மணக்குள விநாயகர் திருப்புகழ்
பாரதிதாசன் (கனகசுப்புரத்தினம், 1926)



சந்தக் குழிப்பு:
தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதானா



உலகுதி னமுனெழில் மலரடி
உளமதி னினைகுவ தெனிலவர்
உறுவினை எவைகளு மிலையென இனிதாமால்
உமையவள் தருமுதன் மகனுனை
உளமொழி மெய்களினி லடியவன்
உவகையொ டுதொழுகு வதையினி மறவேனே



மலியவல் பொரியொடு பயறுகள்
மதுநிகர் கனிவகை யனுதினம்
வரையென நிறையவு னதுதிரு வடிமேலே
மனமகி ழஇடுவ னருள்ககு
மரனழ ஒருகனி யையரனை
வலமிடு வதிலுணு மரிமகிழ் மருகோனே



மலைமத கரிஇடர் புரியுமொர்
மதியிலி அசுரனை ஒருநொடி
மடியவ மரர்துயர் களையுமொர் அடல்வீரா
வருபுதை யலினிதி யெனமலை
வழியரு வியெனவெ னதுகவி
வளமொடு புதியன வெனவிரி புவிமேலே



பொலிதர அவைபுகழ் பெறமிகு
புலவரெ வருமினி தெனநனி
புவியினர் உளமதி லொளிதர அருள்வாயே
புரைதவிர் தெருவரி சையொடமர்
புனிமொ ழியரிவை யர்களுறை
புதுவையி லமர்கய முகமுறு பெருமாளே

  மணக்குள விநாயகர் திருப்புகழ்
பாரதிதாசன் (கனகசுப்புரத்தினம், 1926)



சந்தக் குழிப்பு:
தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதானா



உலகு தினம் உன் எழில் மலர் அடி
உளம் அதில் நினைகுவது எனில் அவர்
உறு வினை எவைகளும் இலை என இனிதாமால்
உமையவள் தரு முதல் மகன் உனை
உளம் மொழி மெய்களினில் அடியவன்
உவகையொடு தொழுகுவதை இனி மறவேனே



மலி அவல் பொரியொடு பயறுகள்
மதுநிகர் கனி வகை அனுதினம்
வரை என நிறைய உனது திருவடி மேலே
மனமகிழ இடுவன் அருள்க
குமரன் அழ ஒரு கனியை அரனை
வலமிடுவதில் உணும் அரி மகிழ் மருகோனே



மலை மதகரி இடர் புரியும் ஒர்
மதியிலி அசுரனை ஒரு நொடி
மடிய அமரர் துயர் களையும் ஒர் அடல் வீரா
வரு புதையல் இனிதியென மலை
வழி அருவி என எனது கவி
வளமொடு புதியன என விரி புவி மேலே



பொலி தர அவை புகழ்பெற மிகு
புலவர் எவரும் இனிதென நனி
புவியினர் உளம் அதில் ஒளிதர அருள்வாயே
புரைதவிர் தெரு வரிசையொடு அமர்
புனி மொழி அரிவையர்கள் உறை
புதுவையில் அமர் கயமுகம் உறு பெருமாளே


வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமிலாது! அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம் கிருத யுகந்தான் மேவுகவே.
~ மகாகவி பாரதியார்

அன்புடன்,
நா. கணேசன்

பி.கு.: (1) இட்டவி : இட்டலி, வ > ல பிறழ்ச்சி கல்வெட்டுப் படிப்போரால் ஏற்பட்டாற்போல், ”உளமதி னினைகுவ தெனிலவர்” - வ என்பது ல என்று அச்சாகியுள்ளது. இது “உளமதில் நினைகுவது எனில் அவர்” என்று பதம் பிரிக்கவேண்டும். 'தொழுகுவது' என்றும் அடுத்து அதே வரியில் வருவதால் 'நினைகுவது' என்று கொள்க. ”நினைகுலது” என்றால் பொருள் இல்லை.

(2) இரண்டாமடியில் “வடிமேலே” என்பது பிழையாக “வடிவேலே” என்று அச்சாகி உள்ளது. “திருவடி மேலே” என்றால் தான் பொருள் உண்டு. வடிவேல் என்று முருகனை இங்கே குறிக்க இடமில்லை என்பதுணர்க.

--------------------

அன்னையும் விநாயகரும்!
வெள்ளி, 14 செப்டம்பர் 2007
Webdunia

ஸ்ரீ அரவிந்தருடன் ஆன்மீக மாமுயற்சியில் ஈடுபட்ட அன்னை அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் யோக பயிற்சிகள் குறித்து சாதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், சாதகி ஒருவர் விநாயகரைப் பற்றிய கேள்வி எழுப்பினார். இறைவன் அப்படிப்பட்ட உருவத்தி்ல் வருவாரா? அது உண்மையா? என்று அன்னையை வினவினார்.

அதற்கு பதிலளித்த அன்னை, "என்னுள்ளும் இந்தக் கேள்வி எழுந்தது. அதில் ஆழமாக தியானித்தேன். அப்பொழுது நான் சற்றும் எதிர்பாரா வண்ணம் ஆம் என்பது போல விநாயகர் - நீங்களெல்லாம் பார்க்கின்றீர்களே அதே ரூபத்தில் - என் முன் தோன்றினார்.

என்ன வேண்டும் என்று வினவினார்.எனக்கு எப்படி உதவுவீர்கள் என்று கேட்டேன்.

எல்லா வழியிலும்... செல்வத்தில் இருந்து காரியங்கள் வரை என்னால் உதவ முடியும் என்று பதில் கூறினார். அப்பொழுது ஆசிரமத்தை நடத்துவதில் நிதி ரீதியாக பெரும் சிக்கல் இருந்தது. அதனைத் தீர்க்க முடியுமா என்று அவரைக் கேட்டேன். ஆகட்டும் என்றார்.

அதன்பிறகு, ஆசிரமத்தின் நிதிப் பிரச்சனை முற்றிலுமாகத் தீர்ந்தது. ஒவ்வொரு முறையும் நிதிச் சிக்கல் எழுவதும், பிறகு அதற்கு தீர்வாக நிதி வருவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

ஆசிரமத்தை விரிவுபடுத்துவதிலும் அவருடைய உதவியை நாடியுள்ளேன். இந்த ஆசிரமத்தின் வளர்ச்சியில் அவருடைய பங்கு மகத்தானது" என்று அன்னை விரிவான பதிலளித்து முடித்தார்.

இதனை அன்னையின் நினைவுகள் (Vignettes of the Mother) என்ற ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் வெளியிட்ட புத்தகத்தில் காணலாம்.

அன்னையினுடைய மேஜையில் விநாயகரின் திருவுருவச் சிலையும், அதேபோல முருகரின் திருவுருவச் சிலையும் எப்போதும் இருந்ததாக ஆசிரமவாசிகள் புதிவு செய்துள்ளனர்.

புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் உள்ளது மணக்குள விநாயகர் கோயில். மிகப் பிரசித்திப் பெற்ற இத்திருக்கோயிலை விரிவாக்கம் செய்திட அக்கோயிலின் அறங்காவலர்கள் முடிவு செய்தபோது, அதற்கு இடம் தேவைப்பட்டது. கோயிலிற்கு அடுத்ததாக இருந்த கட்டடம் ஆசிரமத்திற்குச் சொந்தமானது. கோயில் அறங்காவலர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியை கோயிலிற்கு அளித்தார் அன்னை. கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கோயிலின் தென்மேற்கு மூலையில் அன்னையின் கொடை குறித்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமிக்கு 80-ஆம் பிறந்தநாள்!

DSC05122A


தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையை நிறுவி அதன் முதல் இயக்குநராகப் பணியாற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழரின் - முக்கியமாகப் பல்லவர், சோழர் காலக் கலைக்கு - நிபுணத்துவமான புத்தகங்களை எழுதிவரும் டாக்டர் இரா. நாகசாமிக்கு 80-ஆம் பிறந்தநாள் அண்மையில் கோலாகலமாய்க் கொண்டாடப்பட்டது. கல்வெட்டுத் துறையில் ஏராளமான மாணவர்களைப் பயிற்றுவித்து, பல புதிய கலைச்சொற்களைப் படைத்தவர் நம் முனைவர்.
Nagaswamy Honoured (Coimbatore 2007)

The veteran Archaeologist Dr. R. Nagaswamy, Formerly Director of Archaeology and Former Vice Chancelor Kanchipuram University, was honoured with a Copper plate citations at the meeting of the Tamilnadu Arcaeological Society at its meeting at Coimbatore on the 21-7-2007 in the midst of a very large gathering of research scholars and historians. Professor Noboru Karoshima paid rich tributes to Dr. Nagaswamy for his all-round contribution to Archaeology in Tamilnadu and said that he knew Dr.Nagaswamy from 1963 onwards and realized his Sound scholarship and indefatigable works. Iravatham Mahadevan said that he has come specially to felicitate Nagaswamy for his services to the younger generations. Professor Subbarayalu paid great encomium on the distinguished scholar for training many batches of Epigraphists and all those who are today as the foremost epigraphists were trained by him. Nagaswamy made Archaeology and Epigraphy so popular that there is a great interest throughout the length and breadth of Tamilnadu, Subbarayalu said. He also commended Nagaswamy for making use of modern technology like Computer, long before any Government agency or University ever thought of utilizing them and brought the Tamil antiquities and epigraphy to the notice of the world of Scholars. Pulavar Raju who composed the Copper plate renderings said he was privileged and proud to study under Dr.R.Nagaswamy as his principal student and mentioned he was his guru. There were many other speakers who spoke about his untiring work even to this day in all fields of Art, History and Culture Including Music and Dance. The citations, inscribed in a traditional manner on Copper Plates, were read and presented to him. The presentation which is in Tamil Poetic form composed by Pulavar Raju is reproduced below.

வாழ்த்து
புலவர் Dr. செ. இராசு, ஈரோடு

ஐம்பது ஆண்டுஆக அருந்தமிழ் கலைகளோடு கற்பொறிகள்
இயல் இசை நாடகம் ஆம் அத்துணை துறைகள் தோறும்
அயர்விலா துழைத்துலகு எங்கிலும் சீர்த்தி யோடு
மக்கள் தம் மத்திதன்னில் அறிவினை வளர்த்த செல்வர்
சிலை மீட்ட செம்மல் என்றும், கலைமா மணியே என்றும்
தமிழகத் தொல்லியல் தன்தந்தையே என்று இலங்கும்
ஈடிலா அறிஞர் டாக்டர் இரா நாகசாமிப் பெரியோருக்கு
தமிழகத் தொல்லியல் கழகம் சேர்ந்த செம்மையோர் இசைந்துகூடி
பெருமையோ டளித்த செப்புப்பட்டயச் செய்யுள் ஈதாம்

தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்

கங்கையில் புனிதமாய காவிரிக்கரையில் ஓங்கி
கொங்கு மேல் அரைய நாட்டில் குலவிய ஊஞ்சலூரில்
பங்கமில் குலத்தில் தோன்றிப் பலகலை கற்றுயர்ந்தே
எங்கள் தொல்லியல் குடும்ப ஏந்தலாம் நாகசாமி
பல்விதம் அதை வளர்த்துப் பாங்குடன் விரிவதாக்கி
நல்லாலி ன்விழுது போல நாடெங்கும் கிளை பரப்பி
எல்லையில் பணிகள் செய்தார்.
கல்வெட்டு கல்வி தந்து காசியல் விளக்கம் தந்து
பல்லோலை சுவடித் தேடிப் பன்னூல்கள் பதிப்புச் செய்து
கல் செப்புப் படிமம் ஆய்ந்து கட்டிடக் கலையும் தேர்ந்து
நல்லோவியங்கள் போன்று நற்கலை விளக்கம் செய்தார்.
பட்டயப் படிப்பினோடு பயில் கோடைப் பயிற்சி எல்லாம்
திட்டமாய் தந்தீர் அஃதால் தொல்லியல் ஆய்வர்கூட்டம்
பட்டாளம் எனக் கிளம்பி பல்திசை எங்கும் தேடி
கொட்டியே குவிக்கின்றார்கள் குறைவிலாத் தொல்பொருட்கள்
இயற்றமிழ் துறைகள் கண்டு இசைப்பாடல் பலவும் பாடி
நயமிகு நாட்டியத்தின் நாடகம் பலவும் தந்து
பயனுலகு அறியச் செய்து பாரெல்லாம் புகழும் உம்மை
வியன்நற் றமிழின் நல்ல வித்தகர் எனப்பகர்வோம்.
பத்தூர்ஆ னந்தக்கூத்தர் பரங்கியர்க்கும் அருள வேண்டி
புத்தூரில் சென்றே அங்கு புகுந்தனர் அங்கே சென்றே
பத்தியால் வாதில் வென்றே பண்புடன் கொணர்ந்த உம்மை
வித்தகமாய்ச் சிலைமீட்ட செம்மல் எனப்புகழ்வர்
கச்சி மாமுனிவர் கண்டகவின் கலைக்கழகம் தன்னில்
நச்சியே துணை வேந்தர் என்று நல்கினர் பதவி தன்னை
மெச்சியே பன்னாட்டார்கள் மேன்மையாய் அழைத்து உம்மை
உச்சிமேற் கொண்டு உயர்வாய் மெச்சியே புகழ்ந்துரைத்தார்
எல்லையில் காலம் எல்லாம் எம் நாகசாமியின் பேர்
கல்லிலே எழுத்துப்போல கவின் செப்புப் பொறிப்புப் போல
அல்லிலும் நிலவுப் போல ஆதவன் நிலவும் போல
நல்விதம் என்றும் நிற்க நயமுடன் வாழ்த்துகிறோம்

இவண்
தமிழகத் தொல்லியல் கழகத்தார்.
கோவை விழாநாள் 21-07-2007

-----------------------------------------------------------

நேர்காணல்: திரு. இரா.நாகசாமி (நன்றி:தீராநதி, ஜூன் 2005)


‘தீராநதி’ இதழில் வெளியான தமிழகத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் திரு.இரா.நாகசாமி அவர்களுடைய நேர்காணலின் முக்கியத்துவம் கருதியும், யுனிகோடில் பதிவு இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

இரா.நாகசாமி தமிழகத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர். வரலாற்றுத்துறையில் நேர்மையுடனும் திறமையுடனும் அரும்பணி ஆற்றிவரும் மிகச் சிலருள் ஒருவர். தமிழக வரலாற்றுக்கு அடிப்படையாக உள்ள அரிய பல சான்றுகளாக விளங்கும் கல்வெட்டுகள், பட்டயங்கள், சிற்பங்கள், படிமங்கள், கட்டடங்கள் மற்றும் ஓவியங்கள் முதலானவற்றை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர். கோவை மாவட்டம், ஈரோடு தாலுகா, ஊஞ்சலூரில் 1930 _ ல் பிறந்த நாகசாமி, சமஸ்கிருத மொழியில் முதுகலைப் பட்டமும் டில்லி மத்திய தொல்பொருள் ஆய்வுப் பள்ளியில் அகழ்வாய்வு, பண்டைய சின்னங்களைப் பழுது பார்த்தல் முதலிய பயிற்சிகளையும் பெற்றவர். சென்னை அருங்காட்சியகக் கலைப்பிரிவின் தலைவராகவும் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். இவரது மாமல்லபுரம் தொடர்பான ஆராய்ச்சி உலகப்புகழ் பெற்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கம்போடியா, தாய்லாந்து நாடுகளில் நடைபெறும் தொல்லியல் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காகக் கட்டுரைகளைத் தயாரித்துக் கொண்டிருந்த நாகசாமியை சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

தீராநதி: உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் தொடங்கலாம்.

இரா. நாகசாமி: எனது சொந்த ஊர் கரூர் பக்கத்தில் உள்ள பாண்டி கொடுமுடி. நால்வர் பாடல் பெற்ற ஸ்தலம் அது. காவேரிக்கரையில் அமைந்துள்ளது. சிறுவயதிலிருந்தே எனக்கு தேவாரப் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. நூற்றுக்கணக்கான சங்கப் பாடல்களை ஆழ்ந்து படித்துள்ளேன். நாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கல்கி ‘பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கள்வனின் காதலி’ முதலிய நவீனங்களைத் தொடராக எழுதிக்கொண்டு வந்தார். அவரது எழுத்துக்களை எல்லாம் தொடர்ந்து படித்து வந்தேன். தேசிய விடுதலைப் போராட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த காலகட்டம். பாரதியின் பாடல்களைத் தெருவில் பாடிக்கொண்டே ஊர்வலமாகப் போவார்கள். இவையெல்லாம் சேர்ந்துதான் வரலாறு தொடர்பான ஈடுபாட்டை எனக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

தீராநதி: சென்னை அருங்காட்சியகத்தில் கலைப்பிரிவு தலைவராகப் பணியாற்றியுள்ளீர்கள். அங்கே நீங்கள் பெற்ற அனுபவம் பற்றி?

இரா.நாகசாமி: சென்னை அருங்காட்சியகம், உலகின் பெரிய அருங்காட்சியகங்களுடன் ஒப்பிடத்தக்க மாபெரும் அருங்காட்சியகம். உலகின் பெரிய அறிஞர்கள், கலைஞர்கள் எல்லாம் அங்கு அடிக்கடி வருகை தருவார்கள். அங்கு வருபவர்களுக்குக் கலைப் படைப்புகள் பற்றி பலமுறை, மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லியதில் அவை தொடர்பான என்னுடைய புரிதல் வளர்ந்திருக்கிறது.

எந்தவொரு கலையையும் அல்லது வரலாற்றையும் பற்றிச் சொல்லும்போது உணர்ச்சி பெருக்கினால் சொன்னால் போதாது. சான்றுகளின் அடிப்படையில் சொல்லவேண்டும். “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தக்குடி நாங்கள்’’ என்று சொன்னால், அதற்கு என்ன ஆதாரம் என்றுதான் முதலில் கேட்பார்கள். இதற்கான சான்றுகள் பண்டைக்கால கல்வெட்டுகள், கோயில்கள், சிற்பங்கள் ஆகியனவற்றில் உள்ளன. இந்தச் சான்றுகளைத் தேடி எடுத்து ஆராயும் துறைதான், தொல்லியல் துறை; விஞ்ஞானபூர்வமான ஆய்வு நெறிமுறைகள் கொண்ட ஒரு துறை.

தீராநதி: நீங்கள் பார்த்த தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் முற்காலத் தமிழகம் பற்றிய ஒரு விளக்கத்தைத் தர முடியுமா?

இரா. நாகசாமி: போக்குவரத்து, வேளாண்மை, நீதி, நிர்வாகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் நமது முன்னோர்கள் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். உயர்ந்த பண்பாடுடைய நாடாக நமது நாடு இருந்திருக்கிறது. அவர்கள் நிலங்களை அளந்தது போல் துல்லியமாக, வேறு எந்த நாட்டினரும் அளந்ததில்லை. சாலையோரங்களில் கல் நடுவது வெள்ளைக்காரன் நமக்குத் தந்தது என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறது. அது தவறு. ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே, சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் கற்களை நட்டு, அடுத்த ஊர் இன்னும் எத்தனை காததூரம் இருக்கிறது என்று எழுதி வைக்கும் பழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் உணர்த்துவதன் பொருட்டு, மைல்கற்களில் துளை போட்டு அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ராஜேந்திர சோழன் காலத்தில், வங்கக்கடலில், ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டிச் சென்று போரிட்டு, வெற்றி கண்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் கல்வெட்டில் ஆதாரங்கள் இருக்கின்றன. நிலத்தை எவ்வாறு அளந்தார்கள் என்பதும் அந்த அளவுகளும் கல்வெட்டில் இருக்கின்றன. அதனைப் பார்த்து, மெச்சி, “இவர்கள் போல் உலகில் வேறு எவரும் நிலத்தை அளந்ததில்லை” என்று வெள்ளைக்காரனே எழுதியிருக்கிறான்.

இந்த நம்முடைய பெருமையோ, கடல்கடந்து பெற்ற வீரச்செயலோ இன்றைக்கும் நமது குழந்தைகளுக்கான வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இல்லை. அதற்கு மாறாக வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டபோது உருவாக்கிய, வரலாற்றுப் புத்தகங்களைத்தான் நாம் படித்துக்கொண்டும், குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டும் வருகிறோம். நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களின் ஒரே நோக்கம் இந்நாட்டிலுள்ளவர்களை என்றென்றைக்கும் அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். அதற்குத் தக்கபடி, அடிமை மோகத்தை வளர்க்க, இங்கிருக்கும் எல்லாமே, ‘அவன் கொண்டு வந்ததுதான், அவன் சொல்லிக் கொடுத்ததுதான்’ என்கிற மாதிரி வரலாற்றுப் புத்தகங்களை எழுதினான்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், செங்கல்லில் எட்டு மாடி கட்டியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். தஞ்சாவூர் கோயிலில் இருக்கிறது. அதனை அளவு எடுத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி அப்போது, 720 அடி உயரத்துக்கு, இரண்டு பக்கமும் துல்லியமான சம அளவுடன் அதனைக் கட்டினார்கள்? நமது கட்டடக்கலைத் தொழில்நுட்பம் அது. ஆனால் நாம் அதனை விட்டுவிட்டு ஏதோ ஒரு நாட்டுக்காரனின் கட்டடக்கலை தொழில்நுட்பத்தை நமது மாணவர்களுக்குச் சொல்லித் தந்துகொண்டிருக்கிறோம்.

தீராநதி: அதுபோல் தமிழகத்தின் பண்பாட்டு அம்சங்கள் சிலவற்றை இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள் உரிமை கொண்டாடுவதும் நடக்கிறது.உதாரணமாக மோகினியாட்டம் தஞ்சைக்கே உரித்தானது. தஞ்சையிலிருந்து தாசிகள் திருவாங்கூர் சென்று அங்குள்ளவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக திருவாங்கூர் அரச ஆவணங்கள் எழுத்துபூர்வமாகக் கூறுகின்றன. ஆனால் இன்று அக்கலை மலையாள ஆட்டமாக மாறிவிட்டது.

இரா.நாகசாமி: கேரளத்துக்காரர்கள், சாக்கியார் கூத்தையும் எங்கள் ஊர் கூத்து என்றுதான் சொல்கிறார்கள். ராஜராஜசோழன் காலத்தில் நமது ஊரில் சாக்கியார் கூத்து இருந்திருக்கிறது. ஊர்க்காரர்கள் சாக்கியாருக்கு என்று நிலத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ஐந்து முதல் ஏழு நாள்களுக்கு இரவு தினமும் சாக்கியார் கூத்து நடந்திருக்கிறது. கல்வெட்டில் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது.

தீராநதி: இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு தென்னிந்தியாவில்தான் கிடைத்துள்ளன. ஆனால், அவற்றில் பாதிக்குமேல் இன்னும் பதிப்பிக்கப் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இது எந்தளவு உண்மை?

இரா. நாகசாமி: மொத்தமுள்ள 25,000 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் 8,000 கல்வெட்டுகள் மட்டும்தான் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மற்றவற்றையும் பதிப்பிக்க அரசு பணம் ஒதுக்கவேண்டும். ஆனால், “அதற்குப் பணம் தரமாட்டேன்” என்கிறார்கள். அதன் முக்கியத்துவத்தை உணரமாட்டேன் என்கிறார்கள். நான் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குனராக இருக்கும்போது அரசின் மொத்தவருவாயில் தொல்லியல் துறைக்கு ஒதுக்கப்பட்டது 0.004சதவிகிதம்தான்.

தீராநதி: இதனை மாற்ற முயற்சித்தீர்களா?

இரா.நாகசாமி: நான் இருந்தபோது, மேலிடத்திலிருந்தவர்கள் அனைவரையும் சந்தித்து கல்வெட்டுகளைப் பதிப்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்ல வாய்ப்புகள் இருந்தன. எம்.ஜி.ஆர். ஒரு முறை, “உங்களுக்கு என்னதான் வேண்டும். இவ்வளவு உணர்ச்சிகரமாகப் பேசுகிறீர்களே” என்று கேட்டார். “இந்த நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு என்று பெரிய ஆய்வுக்கூடம் ஒன்றை உருவாக்க வேண்டும். கட்டடக் கலையில் ஒன்றும் இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள், நூறுஅடி அமைப்பைப் பெரியதாகக் கோடுபோட்டுக் காண்பித்து, பெருமையைத் தட்டிச் செல்கிறார்கள். நம்மிடம் 720 அடி உயரமுள்ள பெரிய அமைப்பு இருக்கிறது. ஆனால் காண்பிக்க முடியவில்லை’’ என்றேன். “எவ்வளவு ரூபாய் ஆகும்?’’ என்றார். “எண்பது லட்சம்’’ என்றேன். உடனே அதே இடத்தில் கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டார். ஆனால் எனக்குப் பின் வந்தவர்களுக்கு அது புரியவில்லை; என்ன செய்வதென்றும் தெரியவில்லை. பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அது வேறு விஷயம்.

இப்போதும், “கல்வெட்டு என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்’’ என்று கேட்கிறார்கள். இப்போது நாம், நமது நிலத்தை இன்னொருவருக்குக் கொடுக்கும் போது பத்திரப்பதிவு செய்வதுபோல், அப்போதும் செய்திருக்கிறார்கள். அரசனுடைய பெயர், ஆண்டு, உட்பிரிவு, கிராமம், எல்லை, எவ்வளவு விளையக்கூடியது?, வரிகள், நீக்கப்பட்ட வரிகள் இத்தனை விஷயங்களும் கல்வெட்டில் இருக்கிறது. எல்லையைக் குறிப்பிடும்போது, வடக்கு எல்லை, தெற்கு எல்லை, கிழக்கு எல்லை, மேற்கு எல்லை என்று எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போது நமக்கு அவனுடைய பொருளாதாரம், வேளாண்மை, அந்த நிலத்துக்கு எங்கேயிருந்து தண்ணீர் வந்தது ஆகியவை உட்பட எல்லாம் தெரியும்.

தீராநதி: இதுவரைக்கும் பதிப்பானவற்றை மட்டும் வைத்துக் கொண்டுதான் நமது வரலாறு எழுதப்பட்டுள்ளதா?

இரா. நாகசாமி: ஆமாம்.

தீராநதி: பதிப்பிக்கப்பெறாத கல்வெட்டுகளைப் பதிப்பிக்க அரசிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா?

இரா. நாகசாமி: இல்லை.

தீராநதி: தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளை எடுத்துக் கொண்டால், ஆரம்பத் தொகுதிகளில் உள்ள பதிப்பின் தரம், விளக்கங்கள் முதலியன இப்போது வெளிவருபவற்றில் இல்லை; சில தொகுதிகளில் மூலம் மட்டுமே இருக்கின்றன? ஏன் இந்த நிலை?

இரா. நாகசாமி: தொடக்க காலத்திலும் இதுமாதிரி செய்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு. அதற்குக் காரணம் அப்போது இருந்தவர்களுக்கு வடமொழி தெரியும். இப்போதுள்ளவர்களுக்குத் தெரியாது. அதுபோல் டச்சு, பிரஞ்சு உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் எவ்வளவோ செய்திகள் நமது நாட்டைப் பற்றி இருக்கின்றன. அந்த மொழிகளைத் தெரிந்தவர்கள் இருந்தால் அவற்றை மொழிபெயர்த்து, என்ன இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் பிற மொழிகள் மீது வெறுப்பை வளர்த்து, அவற்றை மாணவர்களைப் படிக்கவிடாமல் செய்துவிட்டார்கள்.

தாய்லாந்து நாட்டில் அரசனுக்கு பட்டாபிசேகம் செய்யும்போது தேவாரம், பிரபந்தம் முதலிய நமது பாடல்களைச் சொல்லுகிறார்கள். தாய்லாந்து மொழியைப் படிக்க நமது நாட்டில் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்கள் கம்போடியாவுக்குக் கப்பலில் போயிருக்கிறார்கள். அதைப்பற்றியும், அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பைப்பற்றியும் ஆராய கம்போடி மொழி தெரிந்தவர்கள் யாராவது நம்மிடம் இருக்கிறார்களா? கம்போடி மொழியைக் கற்றுக்கொள்ள இங்கே ஏதாவது வசதி இருக்கிறதா? நம்மைச்சுற்றியுள்ள நாடுகளுடன் தொடர்புகொள்ள அந்த நாட்டின் மொழிகளைப் படிக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டும். பன்மொழிகளை வளர்க்க வேண்டும். அதுபோல் நமது மொழியை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். நாம் மற்றவர்களிடம் இருந்து நம்மைத் துண்டித்துக் கொண்டிருக்கிறோம்.

மொழி தொடர்புக்கான ஒரு ஊடகம். இதில் அந்த மொழி உயர்ந்தது, இந்த மொழி தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது. நமது நாட்டில் அதிகம் பேர் தமிழ் பேசுவதால் தமிழை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்கென்று மற்ற மொழிகள் மீது துவேஷத்தைக் கொண்டிருக்க தேவையில்லை.

தீராநதி: சமீபத்தில் தமிழகத் தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்ட புத்தகத்தில் ஒரு கட்டுரை பேரூர் மண் ஓடுகளைப் பற்றி புகழ்ந்து கூறுகிறது. சாதாரணமான ஒருவர் அவ்வோடுகளை நேரில் பார்த்தாலே அவை தற்காலத்தவை, போலியானவை என்று கூறிட முடியும். பேரூர் போலிமண் ஓடுகளிடம் தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறை ஏமாந்தது போன்ற தவறுகள் எப்படி நடக்கின்றன?

இரா. நாகசாமி: உலக அளவில் ஏமாற்றுவது என்பது இப்போது புதியதாக தோன்றியிருக்கிறது. அவர்கள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் செய்கிறார்கள். கேரளா எல்லைப் பகுதியில் உள்ள பழைய ஓடுகளை எடுத்து வந்து அதில் எழுதி, அந்த எழுத்து பழையதா, புதியதா என்று கண்டுபிடிக்க முடியாதபடி, அதற்குமேல் நன்றாகத் தேய்த்து, ஒவ்வொன்றாக வெளியே விடுகிறார்கள். சில நேரங்களில் பாதியை முதலில் வெளியிட்டுவிட்டு, பிறகு மற்றொரு பாதியை வெளியிடுகிறார்கள். முதலில் பார்ப்பவர்களுக்கு மிகவும் பழையதாக இருக்கிறதே என்று தோன்றும். 2, 4, 6. 8, 16 என்று அதிகரித்துக்கொண்டே போகும்போது, ஆய்விலும் இது ஏமாற்று வேலை என்பது தெரிந்துவிடும். இதற்குக் கொஞ்ச காலம் எடுக்கிறது. முதலில் ஒன்றிரண்டு வெளியே வந்த போது உண்மையானவை மாதிரிதான் இருந்தன. ஆனால் மிகவிரைவில் அவை போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

தீராநதி: காவல்துறையின் நடவடிக்கைக்குப் பிறகும் மும்பையிலும் டில்லியிலும் அந்த ஓடுகள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

இரா. நாகசாமி: ஏமாற்று வேலை என்பது எல்லாத் துறையிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த ஓடு உண்மையானதா, போலியா என்று சந்தேகம் இருக்கும்போதும் கூட அது கையை விட்டுப் போய்விட்டால் என்ன செய்வது என்று உடனே வாங்கிவிடுவார்கள்.

தீராநதி: நீங்கள் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநராக இருந்தபோது, பள்ளி ஆசிரியர்களைப் புதிய கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தும் திட்டமொன்றைச் செயல்படுத்தினீர்கள். அந்தத் திட்டம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருந்தது?

இரா.நாகசாமி: எல்லா மாவட்டங்களிலும் இருந்து மொத்தம் 40 ஆசிரியர்களைத் தேர்வு செய்தேன். சரித்திரத்தை எப்படிச் சொல்லித்தர வேண்டும் என்பதற்கான ஒரு கோட்பாட்டை உருவாக்கி, வரலாற்றுச் சின்னங்கள் இருக்கும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றேன். விஞ்ஞானப் பாடத்தில் எவ்வாறு செயல்முறையுடன் சொல்லித் தருகிறார்களோ அவ்வாறு சொல்லித் தந்தேன். அதற்கு நல்ல பயன் இருந்தது. 12 வருடம் தொடர்ந்து இதனைச் செய்தோம். பயிற்சி முடிந்து திரும்பிச் சென்ற ஆசிரியர்கள், அவர்கள் பகுதிகளில் கேட்பார் இல்லாமல், வெளி உலகுக்குத் தெரியாமல் கிடந்த ஏராளமான கல்வெட்டுகளையும் சிற்பங்களையும் கண்டுபிடித்து எங்களுக்கு அனுப்பித் தந்தார்கள். தர்மபுரியில் ஒரு அருங்காட்சியகத்தையே உருவாக்கினோம். இத்திட்டத்துக்கு அப்போது 1000 ரூபாய் கொடுத்தார்கள். இப்போது ஒரு லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால் யாரும் மகாபலிபுரத்தைத் தாண்டிச் செல்வதில்லை.

தீராநதி: ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிபுணர்கள் சிலர் தமிழக கல்வெட்டுகளை டிஜிட்டலைஸ் செய்து கொண்டிருப்பதாகவும், அத்திட்டத்தில் நீங்களும் இருப்பதாக அறிகிறோம். அத் திட்டத்தில் உங்களது பங்களிப்பு என்ன?

இரா. நாகசாமி: இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பற்றி, எந்த ஆண்டு, எந்த ஊரில் படியெடுக்கப்பட்டது முதலிய விவரங்கள் ஏற்கெனவே ஆங்கிலத்தில் இருக்கிறது. அதனை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் அப்படியே கணிப்பொறியில் போடுகிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அதனுடன் சம்பந்தமில்லாமல், நான் தனியாக www.tamilartsacademy.com என்று ஒரு இணையதளத்தைத் தொடங்கி, தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்களில் கல்வெட்டைப் படியெடுத்திருக்கிறார்கள், எப்போது படியெடுத்தார்கள் என்ற விவரங்களை அதில் போட்டுக்கொண்டு வருகிறேன். இலவச இணையதளம் அது. இதுவரைக்கும் வெளிவந்துள்ள கல்வெட்டுகளின் சுருக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. நான் அவற்றை தமிழில் மொழிபெயர்த்து இந்த இணையதளத்தில் போட்டிருக்கிறேன்.

தீராநதி: இலங்கையில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அதன் வரலாறு நமது வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. நிறையத் தமிழ் கல்வெட்டுகள் இலங்கையில் உள்ளன. இந்நிலையில் நமது தொல்பொருள் ஆய்வுத்துறையும் இலங்கைத் தொல்பொருள் ஆய்வுத்துறையும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு அல்லது கலந்தாலோசனை இல்லையே?

இரா. நாகசாமி: நமது நாடு ஒரு பெடரல் அமைப்பு. நாம் வெளிநாட்டவர்களுடன் தொடர்புகொண்டு ஒரு காரியத்தைச் செய்யவேண்டும் என்றால் மத்திய அரசின் ஓப்புதல் வேண்டும். அதற்கு மத்திய அரசில் நமக்கு இணக்கமானவர்கள் இருக்க வேண்டும். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உறவு மோசமாக இருந்தால் எதுவுமே செய்யமுடியாது.

தீராநதி: அதுபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நம்மைச் சுற்றியிருக்கும் மாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களுடனும் ஆய்வு ஆலோசனைகள் நடைபெற்றதாகத் தெரியவில்லையே?

இரா. நாகசாமி: அதற்கு நான் முயற்சி செய்தேன். சோழர்களுடைய தொடர்பு ஆந்திரா, மைசூர் உட்பட விசாகப்பட்டினம் வரைக்கும் இருந்திருக்கிறது. தமிழக வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தது போல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்க நினைத்தேன். இங்கே பயிற்சி பெற்றவர்கள் அங்கே போகும்போதும், அல்லது அங்குள்ளவர்கள் இங்கு வரும்போதும் அதற்கான சான்றுகளை இன்னும் அதிகம் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்றேன். ஆனால், அதிகாரிகள், “வேண்டாம்” என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்கள்.

தீராநதி: பொதுவாக தமிழில் ஆய்வுத் துறை முந்தின தலைமுறையுடன் ஒப்பிடும் போது பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்று சொல்லலாம். வையாபுரிப் பிள்ளை, மு.இராகவையங்கார் போன்றவர்கள் இனி உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்கிறார்கள். இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

இரா. நாகசாமி: தமிழைப் படிப்பதில்லை என்பதுதான் தமிழ்ப் பேராசிரியர்களின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம். இன்று சங்ககால தமிழ் இலக்கியத்தைப் படிப்பதற்கு ஆள் கிடையாது. புறநானூறு, பத்துப்பாட்டு, கலித்தொகை, பரிபாடல் ஆகியவற்றில் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தால் நான் யாரைப் போய் கேட்கமுடியும். பழைய ஆசிரியர்களுக்குக் குறைந்த பட்சம் ஆயிரம் பாடல்களாவது மனப்பாடமாகத் தெரியும். கொஞ்சம் சமஸ்கிருதமும் அவர்கள் படித்திருந்தார்கள். இன்று தமிழ் இலக்கியம் படித்த யாரையாவது நானூறு பாடல்களைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்; அல்லது தேவாரம் படித்தவர்கள் யாரையாவது காட்டுங்கள். அப்படிப்பட்ட ஒரு தலைமுறையை நாம் உருவாக்கவே இல்லை. நூறு பாடல்களாவது மனப்பாடமாக ஒருவருக்குத் தெரிந்தால்தான் அவருக்கு சொல்வளமும் எழுத்துவளமும் வரும். சொல்லே தெரியாதவன் எப்படி ஆராய்ச்சி செய்யமுடியும். கண்ணதாசன் சொல்கிறார்: “நான் மிக நன்றாகப் பாடுகிறேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள்; அதற்குக் காரணம் நாலாயிர திவ்யபிரபந்தம் முழுவதும் எனக்குத் தெரியும் என்பதுதான். அப்போது சொல்லும் ரிதமும் வந்து விழும்.’’ இப்போதுள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் எவரையாவது தக்கயா பரணிக்குப் பொருள் சொல்லச் சொல்லுங்கள், நிச்சயம் அவர்களுக்குத் தெரியாது. காரணம், யாரும் படிப்பதில்லை. இன்று தமிழ்ப் பேராசிரியர்கள், செய்யுள் நடத்தும்போது சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளைச் சொல்லுவதே இல்லை. அந்த மரபு அழிந்துவிட்டது.

சந்திப்பு: தமிழ்ச்செல்வன், தளவாய் சுந்தரம்
படங்கள்: சித்ரம் மத்தியாஸ்

சீர்மை வடிவில் - எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்? (மாதவராஜ் பதிவ‍ృ)

எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்?
நன்றி: http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post.html

அப்ப‍ృறம் எங்கள‍ృக்க‍ృம் அந்த பைத்தியம் பிடித்தத‍ృ. சிற‍ృபத்திரிக்கை ஆரம்பிக்க‍ృம் எண்ணத்தைத்தான் சொல்கிறேன். (அத‍ృ ஒர‍ృ தனி அன‍ృபவம். அதில் வந்த படைப்ப‍ృகள், ச‍ృவராஸ்யமான விஷயங்களை இங்கே ஒர‍ృ தொடராக எழ‍ృத‍ృம் எண்ணம் இந்த நேரத்தில் தோன்ற‍ృகிறத‍ృ. பார்ப்போம்.)

இத‍ృ நடந்தத‍ృ 1992 இற‍ృதியில். அப்போத‍ృ கம்ப்ய‌ூட்டர் கிடையாத‍ృ. அதனால் டிடிபி கிடையாத‍ృ. கையாலே அச்ச‍ృக் கோர்க்க வேண்ட‍ృம். டிரெடில் மெஷின். சாத்த‌ூரில் இர‍ృந்த‍ృ அப்படியொர‍ృ ப்த்திரிக்கையின் வடிவமைப்ப‍ృக்க‍ృ என்னவெல்லாம் சாத்தியங்கள் உண்டோ அதையெல்லாம் ம‍ృயன்ற‍ృ பார்த்தோம். மிகச் சின்ன அச்சாபீஸ் அத‍ృ. பிட் நோட்டீஸ், சின்ன போஸ்டர்கள் மட்ட‍ృம் அடித்த‍ృக் கொண்டிர‍ృந்த அந்த இடத்தில் கதைகள‍ృம், கவிதைகள‍ృம், எங்கள் சிந்தனைகள‍ృம் ந‍ృழைந்தன. பெரிய ஆபிஸ் என்றால் அவர்கள் சொன்ன நேரத்த‍ృக்க‍ృத்தான் கிடைக்க‍ృம். நம் அவசரம் ப‍ృரியாத‍ృ. நம் ரசனைய‍ృம் ப‍ృரியாத‍ృ.

அதன் உரிமையாளர‍ృம் அங்கே தொழிலாளியாய் இர‍ృந்தார். இன்னொர‍ృவர் அச்ச‍ృக் கோர்ப்பார். இரண்ட‍ృ பேர‍ృமே எங்கள‍ృக்க‍ృ மிகவ‍ృம் நெர‍ృக்கமான நண்பர்களாகி விட்டனர். அச்ச‍ృக் கோர்ப்பவரின் பெயர் மறந்த‍ృவிட்டத‍ృ. ஏச‍ృவடியான் என்றே தவறாய் ஞாபகத்தில் வந்த‍ృ கொண்டிர‍ృக்கிறத‍ృ. (எப்போத‍ృம் எங்கள‍ృக்க‍ృள் மதம் க‍ృறித்த தர்க்கங்கள் வர‍ృம். ஆவியெழ‍ృப்ப‍ృம் க‌ூட்டங்கள் பக்கத்தில் எங்காவத‍ృ நடந்தால் போய் விட‍ృவார்.) என்னைப் பார்த்தத‍ృம் சிரித்த‍ృ விட‍ృவார். “சார் வந்த‍ృட்டாலே சந்தோஷம்தான்..” என்பார். டீக்கள் வாங்கி, க‍ృடித்த‍ృக் கொண்டே அரட்டையோட‍ృ வேலைகள் நடக்க‍ృம்.

அவரத‍ృ கைகளையே பார்த்த‍ృக் கொண்டிர‍ృப்பேன். இர‍ృம்ப‍ృ வார்ப்பிலான ஒவ்வொர‍ృ எழ‍ృத்த‍ృக்கள‍ృம் சின்னச் சின்னக் கட்டங்களாய் இர‍ృக்க‍ృம் ஒர‍ృ மரத் தட்டில் அட‍ృக்கி வைக்கப்பட்டிர‍ృக்க‍ృம். கண்கள் தாள்களில் இர‍ృக்க‍ృம் எழ‍ృத்த‍ృக்களைப் பார்க்க‍ృம். கைகள் மிகச்சரியாய் அந்த எழ‍ృத்த‍ృக்களைத் தானேத் தேடி இர‍ృம்ப‍ృச் சட்டத்தில் கோர்க்க‍ృம். மிகத் த‍ృரிதமான, தன்னிச்சையான இந்தக் காரியங்கள் பெர‍ృம் அதிசயம் போலத் தோன்ற‍ృம். இந்த ந‍ృட்பத்திலிர‍ృந்த‍ృதான் டைப்ரைட்டர், கணிணியின் தட்டச்ச‍ృ ம‍ృறைகள‍ృம் உர‍ృவாகியிர‍ృக்க வேண்ட‍ృம்.

அங்கேயே திர‍ృத்தி, சரி பார்க்க வேண்டியிர‍ృந்ததால், எப்படிய‍ృம் மாதத்தின் கடைசி நான்கைந்த‍ృ நாட்களில் பெர‍ృம்பாலான நாட்கள் அங்கேயே கிடப்பேன். வடிவமைக்க‍ృம் போத‍ృ, “என்ன சார் இவ்வளவ‍ృ இடம் இங்கே ச‍ృம்மா இர‍ృக்க‍ృ. இங்கே என்ன வரண‍ృம்.” என்பார். “அங்க ச‍ృம்மா இர‍ృக்கட்ட‍ృம். அத‍ృதான் அழக‍ృ.” என்றால் ப‍ృரியாத‍ృ. வார்த்தைகளின்றி என்னைப் பார்த்த‍ృச் சிரிப்பார். பத்திரிக்கை சரியாய்க் கொண்ட‍ృ வர‍ృம் அவசரத்தில், பல இரவ‍ృகளில‍ృம் அவர்களை விடாமல் தொந்தரவ‍ృ செய்வேன். விடாமல் அவரத‍ృ கைகள் இயங்கிக் கொண்டிர‍ృந்தன. விரல்கள் எழ‍ృத்த‍ృக்களோட‍ృ பேசிக்கொண்ட‍ృ இர‍ృந்தன.

ஒர‍ృநாள் அவரிடம் கேட்டேன். “இப்படி அச்ச‍ృக் கோர்த்தவர்கள் வாழ்வில் மிகப் பெரிய மனிதர்களாகி இர‍ృக்கிறார்கள் தெரிய‍ృமா?”. “அப்படியா சார்...?” என்றார். “எழ‍ృத்தாளர் ஜெயகாந்தன் உங்களை மாதிரி அச்ச‍ృக் கோர்த்தவர்தான்” என்றேன். அதற்க‍ృம் ஆச்சரியமாய் ஒர‍ృ “அப்படியா” போட்ட‍ృ விட்ட‍ృ வேலையத் தொடர்ந்தார். அச்சாபிஸ் உரிமையாளரிடம் எப்போத‍ృம் கிண்டல் பேசி விளையாட‍ృவேன். அப்போதெல்லாம், ஏச‍ృவடியான் சிரிப்பத‍ృ தெரியாமல் சிரிப்பார். வயச‍ృ அப்போத‍ృ அவர‍ృக்க‍ృ நாற்பத்தைஞ்ச‍ృ இர‍ృக்க‍ృம்.

எங்கள் எழ‍ృத்த‍ృக்களின் ம‍ృதல் வாசகர‍ృம் அவரே. “சார்... அந்தக் கதை ரொம்ப நல்லாயிர‍ృந்த‍ృச்ச‍ృ” என்பார். சிலவற்றை ப‍ృரியவில்லை என்பார். நான் சிரித்த‍ృக் கொள்வேன். ஒவ்வொர‍ృ இதழ் வெளிவர‍ృம்போத‍ృம், அதிலொன்றை தனக்க‍ృக் கேட்ட‍ృ வாங்கிக் கொள்வார்.

நால‍ృ இதழ்கள் வந்த பிறக‍ృ, எங்களால் பத்திரிக்கை நடத்த ம‍ృடியவல்லை. நேரம், நிதி என பொத‍ృவான காரணங்கள்தான். வெவ்வேற‍ృ பணிகளில் வாழ்வ‍ృ ஓட்டமெட‍ృத்த‍ృக் கொண்டிர‍ృந்தத‍ృ. எப்போதாவத‍ృ நாம‍ృம் பத்திரிக்கை நடத்தியிர‍ృக்கிறோம் என ஞாபகம் வந்த‍ృ போக‍ృம். கம்ய‌ூட்டர் வந்தபிறக‍ృ திர‍ృம்பவ‍ృம் அந்த ஆசை தோன்றியத‍ృ. நேரம்தான் திர‍ృம்பவ‍ృம் பயம‍ృற‍ృத்தியத‍ృ. தொழிற்சங்க வேலைகளில் ம‌ூழ்கிப்போயிர‍ృந்தேன்.

சென்ற மாதம் ஒர‍ృநாள் வக்கீல் ஒர‍ృவரைப் பார்க்க நண்பர்களோட‍ృ சென்றிர‍ృந்தேன். எங்களைப் பார்த்தத‍ృம் டீ வாங்கி வரச் சொன்னார். பேசிக்கொண்ட‍ృ இர‍ృந்தோம். டீ கொண்ட‍ృ வந்தவர் என்னையேப் பார்த்த‍ృக் கொண்டிர‍ృந்தார்.

“சார்... என்னயத் தெரிய‍ృதா...”

டீ க‍ృடித்த‍ృக்கொண்டிர‍ృந்த நான் அப்போத‍ృதான் உற்ற‍ృப் பார்த்தேன். சட்டென்ற‍ృ ஞாபகத்த‍ృக்க‍ృ வந்தத‍ృ. எங்கள் எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்த ஏச‍ృவடியான்தான். சட்டென்ற‍ృ உடலெல்லாம் ஆடிப்போன மாதிரி இர‍ృந்தத‍ృ. எழ‍ృந்த‍ృ “எப்படியிர‍ృக்கீங்க...” என்ற‍ృ அவர் கைகளைப் பிடித்தேன். மெலிந்த‍ృ, வயதாகி பாவம் போலிர‍ృந்தார்.

“நல்லாயிர‍ృக்கேன். இங்கேதான், சார் கிட்ட ஆபிஸ் பாயாய் இர‍ృக்கேன்”

“என்னாச்ச‍ృ அச்சாபீஸ்? ”

“எங்க சார் ம‍ృடிய‍ృம்... கம்ப்ய‌ூட்டர் வந்த பிறக‍ృ நம்மை யார் தேட‍ృவா..? அச்சாபிஸை ம‌ூடி பல வர‍ృஷமாச்ச‍ృ”

நான் மௌனமாயிர‍ృந்தேன். “சார்... அந்தப் பத்திரிக்கையெல்லாம் நான் பத்திரமா வச்சிர‍ృக்கேன்..” ம‍ృகம் விரியச் சொன்னார். எனக்க‍ృ அழ‍ృகை வந்த‍ృவிட‍ృம்போல் இர‍ృந்தத‍ృ. அடக்கிக் கொண்டேன்.

வக்கீல் “இவரை உங்கள‍ృக்க‍ృத் தெரிய‍ృமா..” என்றார். நான் சொன்னேன். வக்கீல‍ృக்க‍ృ ச‍ృவராஸ்யம் இர‍ృப்பதாகத் தெரியவில்லை. என்னிடம் உம் கொட்டிக்கொண்டே அவரிடம் “இந்தாப்பா... பழைய கணக்கையெல்லாம் சேர்த்த‍ృ கொட‍ృத்த‍ృர‍ృ” என்றார். நான் சொல்வதை நிற‍ృத்திவிட்ட‍ృ ஏச‍ృவடியானை கவனித்தேன். அவர் காலியான டீ தம்ளர்களை எட‍ృத்த‍ృ வளையம் வளையமான அந்தக் கம்பிகள‍ృக்க‍ృள் கோர்த்த‍ృக் கொண்டிர‍ృந்தார்.

அந்தக் கைகள் லேசாய் நட‍ృங்கிக்கொண்ட‍ృ இர‍ృந்தன. எழ‍ృத்த‍ృக்களின் ஆட்டம்.

***************************************************************

தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:



































































































































































































































































































































































க் கா கி கீ க‍ృ க‌ூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ங‍ృ ங‌ூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ ச‍ృ ச‌ூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞ‍ృ ஞ‌ூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ ட‍ృ ட‌ூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ண‍ృ ண‌ூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ த‍ృ த‌ூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ ந‍ృ ந‌ூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ ப‍ృ ப‌ூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ ம‍ృ ம‌ூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ ய‍ృ ய‌ூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ர‍ృ ர‌ூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ ல‍ృ ல‌ூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வ‍ృ வ‌ூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழ‍ృ ழ‌ூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ள‍ృ ள‌ூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ ற‍ృ ற‌ூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ ன‍ృ ன‌ூ னெ னே னை னொ னோ னௌ
ஜ் ஜா ஜி ஜீ ஜ‍ృ ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷா ஷி ஷீ ஷ‍ృ ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸா ஸி ஸீ ஸ‍ృ ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹா ஹி ஹி ஹ‍ృ ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ


[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]

சீர்மை வடிவத் தமிழ்:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

வெங்காலூரில் வள்ளுவர் கண்திறந்தார் ...

வெங்கால மரங்கள் (button-flower trees) மிகுதியும் இருந்த ஊரு வெங்காலூர். கரூருக்கு அருகே கொங்கின் 24 உள்நாடுகளில் ஒன்று வெங்காலநாடு. அதனால் கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் வெங்காலூர் என்பதன் பெயர் வெளிச்சமாகிறது. இன்று வெங்காலூர் பெங்களூர், இந்தியாவின் கணினித் தொழில் நுட்பத் துறைத் தலைநகரமாகும்.

வெங்காலூரில் இன்று திருவள்ளுவரின் பிரதிமை தமிழ்நாட்டுக் கோவில்களில் சைவமுனிவர் பிரதிமைகள் போலவே, கண் திறந்து வெற்றித் திலகமிட்டுப் பொலிவுடன் மக்களுக்குத் தரிசனம் அளிக்கிறது. பாஜக-திமுக தலைவர்கள் புரிந்துணர்வுடன் இதனைச் செய்துள்ளனர்; எடியூரப்பா & கருணாநிதி சமரச முயற்சி பலளித்துள்ளது. இவ்வுருவம் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் உள்ள வடிவத்தை secularize செய்து ஓவியர் கே. ஆர். வேணுகோபால் 1959-ல் வரைந்தார். திருவள்ளுவரைச் சமண முனிவராகக் காட்டும் மரபு வேணுகோபால் சர்மா சித்திரத்துக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னமே இருந்தது. திராவிட மொழிக் குடும்பங்கள் பற்றிய தேற்றம் தந்த சென்னை கலெக்டர் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் கிழக்கிந்தியக் கும்பெனி சார்பில் சமண முனிவராய்க் காட்டித் திருவள்ளுவருக்குப் பொற்காசுகள் மெட்ராஸ் மிண்ட்டில் வெளியிட்டார். 133 அடி உயரத்தில் நிற்பது போன்ற வள்ளுவர் சிலை (சிலை மாத்திரம் 75 அடி) கன்யாகுமரியில் கணபதி ஸ்தபதி செய்தார். ஆனால் அது அழகான தோற்றப் பொலிவுடன் பார்வைக்கு அமையவில்லை. தமிழ்த் தபதிகளுக்கு அவ்வளவு பெரிய சிலை செய்து பழக்கமில்லாமை அதற்கோர் காரணம். அவற்றையெல்லாம் அடுத்த மடலில் பார்ப்போம்.

வெங்கலப் படிமையாக வள்ளுவர் பெங்களூரில் கண்திறந்தார்! புகழ் பெறப்போகும் வள்ளுவரின் சிலைப் படங்கள் சில. ஆயிரங்காலப் பயிராக, கன்னடர்-தமிழர் ஒற்றுமை ஓங்க முயற்சிகளை மாநில அரசுகள் எடுக்கின்றன. இன்றுபோல் என்றும் வாழ்க வள்ளுவர் புகழ்!

நா. கணேசன்

பதினெட்டு ஆண்டுகள் மூடிக் கிடந்த நார்ஆடி (ஃபைபர்-க்லாஸ்) வள்ளுவர் படிமை:




நார்-கண்ணாடிப் பதுமை இறக்கப்பட்டது:







புதிய வெண்கலச் சிலையாக வெங்காலூர் வள்ளுவர்!










ஒளிப்படம்: சரவணகுமரனுக்கு நன்றி.

--------


கலைஞரின் எண்ணங்கள் - 3 கட்டுரைகள்

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் இந் நாள் என் வாழ்விலோர் திருநாள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெங்களூரில் இன்று நடைபெறும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வாழ்விலோர் திருநாள்”, என்று முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை-

“இன்று வாழ்விலோர் திருநாள்’ என்பார்களே, அப்படிப்பட்ட திருநாள்தான் இன்று!

ஆம், பெங்களூரு நகரத்தில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை திறக்கப்படுகிறது. அய்யன் வள்ளுவருக்கு இங்கே பெங்களூரில் சிலை திறக்கின்ற விஷயமாகட்டும்- தமிழகத்தில் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியாகட்டும்- சென்னை மாநகரத்தில் திருவள்ளுவருக்காக நான் முயற்சியெடுத்து எழுப்பிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா நிகழ்ச்சியாகட்டும்- சென்னையில் சட்டப்பேரவை மண்டபத்தில் வள்ளுவரின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைக்கின்ற நிகழ்ச்சியாக இருக்கட்டும்- அனைத்திலும் என் வாழ்க்கையும் இணைக்கப்பட்ட ஒன்று என்று சொன்னால் அது தவறாகாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வாழ்க்கை நெறி வகுத்துக்காட்டி வள்ளுவரால் வழங்கப்பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள். திருக்குறளும், அதனை யாத்து இவ்வுலகிற்கு வழங்கிய வாலறிவன் வள்ளுவரும், இளமையிலேயே எனக்கு அறிமுகமாகி, என் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உயரத்தையும், தரத்தையும் தந்து வருகின்ற பாங்கினை என்னென்பேன்!

“திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார். அதனை நாம் உலகத்தின் பொதுச் சொத்து என்று எண்ணத்தக்க விதத்தில் பொது கருத்தைப் பரப்ப வேண்டும்” என்று அண்ணா கூறியுள்ளார்.

1948-ல் தந்தை பெரியாரோ திருக்குறள் மாநாடு ஒன்றினையே கூட்டினார். 1953-ம் ஆண்டு மொழியுரிமை காக்க; கல்லக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் நான் இருந்தபோது, கைதிகளாக இருந்த தோழர்களின் மத்தியில் அன்றாடம் பேசும்போது, திருக்குறள் பற்றி உரையாற்றியதும் என் நினைவிலே உள்ளது.

1963-ம் ஆண்டு சட்டப் பேரவையில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, பேரவையில் திருவள்ளுவர் திருவுருவப் படம் ஒன்றினை வைக்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டேன். அப்போது பேரவைத் தலைவராக இருந்த யு.கிருஷ்ணாராவ், அந்தத் திருவள்ளுவர் படத்தினை நான் வாங்கித் தருவதாக இருந்தால், அதை மன்றத்திலே வைப்பதற்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தார்.

நான் அவ்வாறே வாங்கித் தர இசைவு தந்த பிறகு, அந்தப் படத்தினை தாழ்வாரத்தில் தான் வைக்க முடியும், மன்றத்திற்குள் வைத்தால் வேறு சிலர் கம்பர் படத்தினை வைக்க வேண்டுமென்றோ, காளமேகத்தின் படத்தினை வைக்க வேண்டுமென்றோ கோரிக்கை வைக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது.

அதற்கு பதிலாக நான் கூறும்போது, மன்றத்திற்குள் காந்தி படம், ராஜாஜி படம் வைக்கப்பட்டுள்ளது, அதைப்போல படேலுக்கோ, வேறு ஒரு கட்சி தலைவருக்கோ படம் வைக்கப்பட வேண்டுமென்று எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை, எனவே மன்றத்திற்குள் தான் திருவள்ளுவருக்கு படம் வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

ஆனாலும் அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்படாவிட்டாலும், நான் அவையிலே எழுப்பிய அந்த கோரிக்கை 22.3.1964 அன்று பேரவை மன்றத்திற்குள் திருவள்ளுவரின் படத்தினை அன்றைய குடியரசு தலைவர் ஜாகீர் உசேன் திறந்து வைத்தார்.

அதைப் போலவே சட்டப் பேரவையில் நான் பேசும்போது வேறொரு கருத்தையும் தெரிவித்தேன். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள புலவர் பெருமக்கள் எல்லாம் கூடி, குறிப்பிட்டுச் சொல்லும் நாளை திருவள்ளுவர் தினம் என்ற பெயரால் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமென்றும் கூறினேன்.

அதன் பின்னர் 30.10.1969 அன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவினைத் தொடர்ந்து - ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படும் நாளுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் நாள் என்றும், அன்று அரசு விடுமுறை என்றும் முடிவு செய்து அதற்கான அரசாணை 3.11.1969-ல் என்னுடைய ஆட்சி காலத்தில்தான் வெளியிடப்பட்டது.

அதுபோலவே, 1973-ல் திருமயிலை திருவள்ளுவர் நினைவாலயத் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டிய போது, திருவள்ளுவருக்கு தமிழகத் தலைநகரில் அழியாத நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். அது அறிவிப்பாகவே நின்றுவிடாமல், 18.9.1974 அன்று வள்ளுவர் கோட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று, பணிகள் தொடங்கப்பட்டு, திறப்பு விழாவுக்கான தேதியினைக் குறிக்கவும், விழாவினை எவ்வாறு நடத்துவது என்பதற்கான திட்டங்களைத் தீட்டவும் - 8.1.1976 அன்று அரசின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

பிப்ரவரி மாதம் 22, 23 ஆகிய நாட்களில் அந்தத் திறப்பு விழாவை கழக அரசு முன்னின்று நடத்துவதென்று நாளும் குறிக்கப்பட்டது. ஆனால் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவினை தி.மு.க. அரசு நிறைவேற்றுவதற்கு முன்பாகவே ஜனவரி 31-ந் தேதியன்று மாலையிலேயே தி.மு.க. அரசு கலைக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு விட்டாலும், 1976-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் கூட, அப்போது எனக்கு அனுப்பப்படவில்லை. அந்த கோட்டம் திறக்கப்பட்ட நாளன்று, ‘கோட்டம் திறக்கப்படுகிறது, குறளோவியம் தீட்டப்படுகிறது’ என்ற தலைப்பில் முரசொலியில் இரண்டரை பக்கத்திற்கு நான் உடன்பிறப்பு மடல் ஒன்றினைத் தீட்டியிருந்தேன்.

இன்று எப்படி ‘இன்று வாழ்விலோர் திருநாள்’ என்று தொடங்கி கடிதத்தை எழுதுகிறேனோ, அதுபோலவே அன்றும் ‘இன்று சென்னையில் ஒரு விழா! திருவிழா! திருமிகு விழா! திருவள்ளுவர்க்கு எடுக்கும் விழா’ என்று தொடங்கி எழுதியிருந்தேன். அந்த கடிதத்தின் ஒரு சில பத்திகளை மட்டும் இப்போதும் அது பொருந்தும் என்பதால் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய்- காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய்- வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய்- மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய்- நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்- எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது.

மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, காசறு விரையாக, கரும்பாக, தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால், உலகப் பந்தின் மீது எந்த மூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சு புடைத்து நிற்பான்- மகிழ்வான் -தகதகவெனக் குதிப்பான்- தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் -தாமரை, கதிர் கண்டது போன்ற துள்ளல் எழும் என்பதில் ஐயமுண்டோ?

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத் தமிழ்மறைக் கன்றோ பெருமை சேர் விழா, தாயகத்து மண்ணில் திகழ்கின்றது.

இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா? என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள் தானே இந்த நாள்!

‘கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ என்று இடைக்காடர் கூற, ‘அல்ல, அல்ல, அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ என்று அவ்வையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யா மொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா!

சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன் தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன்.

உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும், இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழ முத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பி பின்னழகும், முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காண முடியாமல் மணப் பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒரு விதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்!

என் தங்க உடன்பிறப்பே! அந்த தாயின் மகிழ்ச்சியைத்தான் பெறுகிறேன் இன்று! ஆம் - என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத்திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன்.

உடன்பிறப்பே, அன்றையதினம் நான் அடைந்த அதே மகிழ்ச்சியைத்தான் இன்றும் அடைகின்றேன். அடுத்து, 31.12.1975 அன்று கூடிய தி.மு.க. அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரே உள்ள மற்றொரு பாறையில் 75 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் அதற்கு அடுத்த மாதமே தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் 1989-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. அரசு ஏற்பட்டவுடன் 25.3.1989 அன்று நான் படித்த நிதி நிலை அறிக்கையில் குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்பது பற்றி மீண்டும் அறிவித்தேன். 6.9.1990 அன்று நானே நேரில் சென்று குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்புப் பணியைத் தொடங்கி வைத்தேன். 1991-ல் தி.மு.க. அரசு மாறியது. வள்ளுவர் சிலை அமைப்பு பணியும் சுணங்கியது.

நான்காவது முறையாக முதல்-அமைச்சராக நான் பொறுப்பேற்றதற்கு பிறகு 25.6.1997 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் முடிவெடுக்கப்பட்டு, போதிய நிதி ஒதுக்கப்பட்டு - சுமார் ஒன்பது கோடி ரூபாய் செலவில் 133 அடி உயரமுள்ள வள்ளுவரின் சிலை நிர்மாணிக்கப்பட்டு 1.1.2000 அன்று தி.மு.க. ஆட்சியிலே திறந்து வைக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாக அது கருதப்பட்டு, உலகத்திலிருந்து வருபவர்கள் எல்லாம் அதனை அன்றாடம் கண்டு களித்து வருகிறார்கள்.

‘சுனாமி’ பேரலைக்கே ஈடு கொடுத்து அந்த சிலை தமிழனின் பெருமையை இன்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த சிலையை அங்கே அமைத்திட எனக்கு பெரிதும் உதவியாக இருந்த சிற்பி கணபதி ஸ்தபதிக்கு நான் பலமுறை நன்றி தெரிவித்திருந்தாலுங் கூட, இந்த மடலிலும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குமரி முனையில் நடைபெற்ற அந்த இரண்டு நாள் விழாவிலே நான் கலந்து கொண்டபோது - மறைந்த கோவை செழியன் அந்த விழாவில் பேசும்போது, பெங்களூரிலே பத்தாண்டு காலமாக திருவள்ளுவருடைய சிலை ஒன்று மூடிக் கிடக்கின்றதே, அது என்னவாயிற்று என்று கேட்டார்.

அடுத்துப் பேசிய வாழப்பாடி ராமமூர்த்தி, அதற்காக தான் கடிதம் எழுதியதாகவும், அதற்கு பதில் வரவில்லை என்றும் கூறினார். அதை ஏன் கவனிக்கக் கூடாது என்று என் பக்கத்திலே அமர்ந்திருந்த மக்கள் தலைவர் மூப்பனார் என்னைப் பார்த்துக் கேட்டார்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தனோ, அதைப்பற்றி அந்த மேடையில் கோபாவேசமாகப் பேசினார். அதற்கெல்லாம் பிறகு நான் அந்த விழாவிலே முடிவுரை ஆற்றும்போது, “நான் ஒரு உறுதி எடுத்திருக்கிறேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் சென்னை மாநகரில் வந்து பேசியபோது, ‘தமிழக முதல்வர் கருணாநிதி விரைவிலே எங்கள் ஊருக்கு வரவேண்டும், ஒரு விழாவிலே கலந்து கொள்ளவேண்டும்’ என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

நான் அதற்கு பதிலளித்துப் பேசும்போது, ‘பெங்களூருக்கு ஒரு விழாவிற்காக நான் வருவதென்றால், நான் அங்கே வந்து இனி கலந்துகொள்கின்ற முதல் விழா, அந்த திருவள்ளுவருடைய சிலை திறப்பு விழாவாக இருந்தால்தான் வருவேனே தவிர, வேறு எந்த விழாவிற்காகவும் நான் அடியெடுத்து வைக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தேன்.

உடன்பிறப்பே, பெங்களூரு தமிழ்ச் சங்கம், பெங்களூருவில் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்பு அய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிர்மாணித்து -1.9.1991 அன்று அப்போது கர்நாடக மாநில முதல்-அமைச்சராக இருந்த பங்காரப்பா தலைமையில்- கர்நாடக மாநில அமைச்சராக இருந்த கே.ஜே.ஜார்ஜை கொண்டு திறந்திட ஏற்பாடுகளைச் செய்தது.

ஆனால் 30.8.1991 அன்று பெங்களூரு நீதிமன்றம் விதித்த தடை காரணமாக அப்போது அங்கே திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. சிலை அமைப்பதற்கு பெங்களூரு மாநகர் மன்றம் வழங்கியிருந்த அனுமதியை 21.9.1991 அன்று திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் பிறகு பலமுறை அந்த சிலையைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அது நடைபெறவே இல்லை.

இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே தான் கர்நாடக அரசும், அதன் முதல்-மந்திரி எடியூரப்பாவும் பெரு முயற்சியெடுத்து அடுத்தடுத்துள்ள மாநிலங்கள் நல்லுறவுடன் இருக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடு இந்த சிலையினை இன்று நிறுவியிருக்கிறார்கள். மணவிழா அழைப்புகளில் எல்லாம் உறவினர்களும், நண்பர்களும் முன்கூட்டியே வந்திருந்து வாழ்த்த வேண்டுமென்று அச்சிடுவார்கள்.

அதற்கேற்ப நானும், இந்த விழாவிலே உள்ள மகிழ்ச்சி காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பெங்களூருக்கு வந்திருந்து திருவள்ளுவரின் சிலையினை திறந்து வைக்கவிருக்கிறேன். எனவே ‘இன்று வாழ்விலோர் திருநாள்,’ என்று நான் தொடக்கத்தில் எழுதியது பொருத்தம் தானே?


--------------

இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா? என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள் தானே இந்த நாள்!

"கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'' என்று இடைக்காடர் கூற, "அல்ல, அல்ல, அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'' என்று அவ்வையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யா மொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா!

சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன் தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன்.

உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும், இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழ முத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பி பின்னழகும், முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காண முடியாமல் மணப் பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒரு விதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்!

என் தங்க உடன்பிறப்பே! அந்த தாயின் மகிழ்ச்சியைத்தான் பெறுகிறேன் இன்று! ஆம் - என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன்'' என்று எழுதியிருந்தேன்.

அன்றையதினம் நான் அடைந்த அதே மகிழ்ச்சியைத்தான் இன்றும் அடைகின்றேன். அடுத்து, 31.12.1975 அன்று கூடிய திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரே உள்ள மற்றொரு பாறையில் 75 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த மாதமே திமுக அரசு கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் 1989ம் ஆண்டு மீண்டும் திமுக அரசு ஏற்பட்டவுடன் 25.3.1989 அன்று நான் படித்த நிதி நிலை அறிக்கையில் குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்பது பற்றி மீண்டும் அறிவித்தேன். 6.9.1990 அன்று நானே நேரில் சென்று குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்புப் பணியைத் தொடங்கி வைத்தேன். 1991ல் திமுக அரசு மாறியது. வள்ளுவர் சிலை அமைப்பு பணியும் சுணங்கியது.

நான்காவது முறையாக முதல்வராக நான் பொறுப்பேற்றதற்கு பிறகு 25.6.1997 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் முடிவெடுக்கப்பட்டு, போதிய நிதி ஒதுக்கப்பட்டு- சுமார் ஒன்பது கோடி ரூபாய் செலவில் 133 அடி உயரமுள்ள வள்ளுவரின் சிலை நிர்மாணிக்கப்பட்டு 1.1.2000 அன்று திமுக ஆட்சியிலே திறந்து வைக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாக அது கருதப்பட்டு, உலகத்திலிருந்து வருபவர்கள் எல்லாம் அதனை அன்றாடம் கண்டு களித்து வருகிறார்கள்.

'சுனாமி' பேரலைக்கே ஈடு கொடுத்து அந்த சிலை தமிழனின் பெருமையை இன்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த சிலையை அங்கே அமைத்திட எனக்கு பெரிதும் உதவியாக இருந்த சிற்பி கணபதி ஸ்தபதிக்கு நான் பலமுறை நன்றி தெரிவித்திருந்தாலுங் கூட, இந்த மடலிலும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குமரி முனையில் நடைபெற்ற அந்த இரண்டு நாள் விழாவிலே நான் கலந்து கொண்டபோது- மறைந்த கோவை செழியன் அந்த விழாவில் பேசும்போது, பெங்களூரிலே பத்தாண்டு காலமாக திருவள்ளுவருடைய சிலை ஒன்று மூடிக் கிடக்கின்றதே, அது என்னவாயிற்று என்று கேட்டார். அடுத்துப் பேசிய வாழப்பாடி ராமமூர்த்தி, அதற்காக தான் கடிதம் எழுதியதாகவும், அதற்கு பதில் வரவில்லை என்றும் கூறினார். அதை ஏன் கவனிக்கக் கூடாது என்று என் பக்கத்திலே அமர்ந்திருந்த மக்கள் தலைவர் மூப்பனார் என்னைப் பார்த்துக் கேட்டார்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தனோ, அதைப்பற்றி அந்த மேடையில் கோபாவேசமாகப் பேசினார். அதற்கெல்லாம் பிறகு நான் அந்த விழாவிலே முடிவுரை ஆற்றும்போது, "நான் ஒரு உறுதி எடுத்திருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் சென்னை மாநகரில் வந்து பேசியபோது, "தமிழக முதல்வர் கருணாநிதி விரைவிலே எங்கள் ஊருக்கு வரவேண்டும், ஒரு விழாவிலே கலந்து கொள்ளவேண்டும்'' என்று ஒரு கோரிக்கை வைத்தார். நான் அதற்கு பதிலளித்துப் பேசும்போது, "பெங்களூருக்கு ஒரு விழாவிற்காக நான் வருவதென்றால், நான் அங்கே வந்து இனி கலந்துகொள்கின்ற முதல் விழா, அந்த திருவள்ளுவருடைய சிலை திறப்பு விழாவாக இருந்தால்தான் வருவேனே தவிர, வேறு எந்த விழாவிற்காகவும் நான் அடியெடுத்து வைக்கமாட்டேன்'' என்று சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தேன்.

பெங்களூர் தமிழ்ச் சங்கம், பெங்களூரில் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்பு அய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிர்மாணித்து -1.9.1991 அன்று அப்போது கர்நாடக மாநில முதல்-அமைச்சராக இருந்த பங்காரப்பா தலைமையில்- கர்நாடக மாநில அமைச்சராக இருந்த கே.ஜே.ஜார்ஜை கொண்டு திறந்திட ஏற்பாடுகளைச் செய்தது. ஆனால் 30.8.1991 அன்று பெங்களூர் நீதிமன்றம் விதித்த தடை காரணமாக அப்போது அங்கே திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. சிலை அமைப்பதற்கு பெங்களூர் மாநகர் மன்றம் வழங்கியிருந்த அனுமதியை 21.9.1991 அன்று திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் பிறகு பலமுறை அந்த சிலையைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அது நடைபெறவே இல்லை.

இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே தான் கர்நாடக அரசும், அதன் முதல்வர் எதியூரப்பாவும் பெரு முயற்சியெடுத்து அடுத்தடுத்துள்ள மாநிலங்கள் நல்லுறவுடன் இருக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடு இந்த சிலையினை இன்று நிறுவியிருக்கிறார்கள். மணவிழா அழைப்புகளில் எல்லாம் உறவினர்களும், நண்பர்களும் முன்கூட்டியே வந்திருந்து வாழ்த்த வேண்டுமென்று அச்சிடுவார்கள். அதற்கேற்ப நானும், இந்த விழாவிலே உள்ள மகிழ்ச்சி காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பெங்களூருக்கு வந்திருந்து திருவள்ளுவரின் சிலையினை திறந்து வைக்கவிருக்கிறேன்.

எனவே "இன்று வாழ்விலோர் திருநாள்'' என்று நான் தொடக்கத்தில் எழுதியது பொருத்தம் தானே? என்று அறிக்கையில் கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

-------------

ஆகஸ்ட் 9, 2009, பெங்களூர்: திருவள்ளுவர், சர்வஞ்னர் சிலைகள் திறப்பு மூலம் இரு மாநில மக்களின் இதயங்கள் திறக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.

பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில்,

நான் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் ஒரு சபதம் செய்திருந்தேன். கடந்த 18 ஆண்டுகளாக பெங்களூரில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் அது கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் அவர்களுக்குச் சொன்ன ஒரு செய்தி.. பெங்களூரில் திருவள்ளுவர் சிலை மூடப்பட்டு கிடக்கிறது. அது என்று திறக்கப்படுகிறதோ அப்போது தான் நான் பெங்களூரில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க வருவேன் என்று கூறியிருந்தேன்.

அந்த சபதத்தை நான் நிறைவேற்றவில்லை. கர்நாடக முதல்வர் எதியூரப்பா அந்த சபதத்தை நிறைவேற்றித் தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி.

இந்த விழா வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல. இது இரு மாநிலங்களின் இதயங்களின் திறப்பு விழா.

தமிழகத்தில் நடந்து வரும் எங்கள் திமுக ஆட்சியில் தான் சர்வஞனரின் கருத்துக்கள், கவிதைகளை 'உரைப்பா' என்ற புத்தகமாக மொழிபெயர்த்து வெளியிட்டோம். அப்படிப்பட்ட ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது. அப்போது சர்வஞரின் உரைப்பாவை வெளியிடக் கூடாது என்று எந்த தமிழரும் சொல்லவில்லை.

புரட்சிக் கவிஞரான சர்வஞனர் குறித்து இன்னும் அறிமுகம் செய்ய வேண்டிய நிலை இருப்பதற்குக் காரணம் அவர் மிகவும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தான். அவர் முற்போக்குக் கருத்துக்களை, ஜாதி, மத பேதங்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்த புரட்சியாளர்.

500 ஆண்டுகளுக்கு முன் இங்கே திருவள்ளுவரி்ன் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர் சர்வஞனர்.

இங்கே திருவள்ளுவரின் சிலையைத் திறக்க பெங்களூர் தமிழச் சங்கத்தினர் தமிழக முதல்வரகள், கர்நாடக முதல்வர்கள், நீதிமன்றங்கள், பல கவர்னர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில் தான் தமிழகத்தில் யாரைக் கொண்டு வந்தால், கர்நாடகத்தில் யாரைக் கொண்டு வந்தால் திருவள்ளுவரின் சிலை திறக்கப்படும் என்று கருதி தமிழக மக்கள் என்னையும் கர்நாடக மக்கள் எதியூரப்பாவையும் முதல்வர்களாக்கியுள்ளனர்.

கடந்த மாதம் கர்நாடக முதல்வர் எதியூரப்பா மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளதை அறிந்தேன். நான் தமிழக முதல்வர்.. அவரைப் போய் நான் ஏன் சந்திக்க வேண்டும் என்று நினைக்காமல் அவரை மருத்துவமனையில் வந்து சந்திக்க நேரம் கேட்டேன்.

அதற்கு அவர், என்ன இருந்தாலும் கருணாநிதி மிக மூத்த தலைவர். அவரை நான் போய பார்ப்பது தான் சரி என்று சொல்லி என் வீட்டுக்கே வந்தார். அப்போது பல பிரச்சனைகள் குறித்துப் பேசினோம். குறிப்பாக திருவள்ளுவர் சிலை பிரச்சனை குறித்துப் பேசினோம்.

அப்போது எதியூரப்பா வள்ளுவர் சிலையை திறக்க நான் உதவுகிறேன். சென்னையில் சர்வஞ்னர் சிலை திறப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார். அதற்கு நான் ஐயா.. நாங்கள் எப்போதோ அதற்குத் தயாராகிவிட்டோம் என்று சொல்லி சர்வஞ்னரின் சிலையைத் திறக்க இடத்தைச் தேர்வு செய்யச் சொன்னேன்.

இடத்தை அவர்கள் தேர்வு செய்துவிட்டார்கள். இப்போது அங்கு சர்வஞனரின் சிலை திறப்புக்கான பணிகள் தீவிரமாக நடந்து கொண்டுள்ளன.

எங்களைப் போல விட்டுக் கொடு்த்து நடந்து கொண்டால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்த விழா.

இது அரசியல் விழா அல்ல.. அற விழா. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் எல்லாமே ஒரே உதிரத்திலிருந்து உருவான மாநிலங்கள் தான்.

இந்த சிலை திறப்பு மூலம் இரு மாநில உறவுகள் மட்டுமல்ல இந்திய தேசிய ஒருமைப்பாடும் வலுப்படும் என்பது நிச்சயம். இதை மற்ற மாநிலங்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார் கருணாநிதி.

விழாவில் அல்சூர் பகுதியை உள்ளடக்கிய சிவாஜி நகர் தொகுதி எம்.எல்.ஏ ரோஷன் பெய்க் பேசுகையில், நான் இதே ஆர்.பி.ஏ.என்.எம். பள்ளியில்தான் படித்தேன். சிவாஜி நகர் தொகுதியில் நான் வெற்றி பெற தமிழர்கள்தான் காரணம்.

அன்றும், இன்றும், என்றும் தமிழர்களுடன்தான் நான் இருப்பேன் என்றார்.

முன்னாள் துணை முதல்வர் சித்தராமையா பேசுகையில், உலகிலேயே திருக்குர்ரான், பைபிளுக்குப் பிறகு அதிக மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட சிறப்பான நூல் திருக்குறள்தான்.

திருவள்ளுவரின் சிலை இங்கே திறக்கப்படுவதைப் போல கன்னடக் கவி சர்க்னாவின் சிலை சென்னையில் திறக்கப்படுவது சிறப்பு வாய்ந்தது என்றார்.

----------------

கன்னட முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு: அமைதி காக்க வேண்டுகோள்:
getimage2

சிங்கப்பூருக்கு 44-ஆம் பிறந்தநாள்!

சிங்கப்பூர் 44வது தேசியதின விழா காட்சி


சிங்கைக்க‍ృ வாழ்த்தினைச் செப்ப‍ృ.
அ. கி. வரதராஜன், சிங்கப்ப‌ூர்

நாட்டின் நலங்களை நன்னாள் இத‍ృதன்னில்,
பாட்டின் வழியே பகர்ந்திட‍ృவேன் - க‌ூட்டமாய்
சிங்கையர் ஒற்ற‍ృமையாய்ச் சேர்ந்திங்க‍ృ வாழ்வதனால்
பொங்க‍ృமெம் அன்னை ப‍ృகழ். (1)

ப‍ృகழென்ற‍ృம் போற்றிட‍ృவார் , பொய்ம்மை விலக்கி
அகழ்ந்திட‍ృவார் அன்றாடம் ஆற்றல் - இகழின்றி
இப்பாரில் என்றென்ற‍ృம் ஏற்றம‍ృற‍ృம் நாடிதற்க‍ృ
ஒப்பொன்ற‍ృ கண்டால் உரை. (2)

உரைத்திட உன்னதம் உண்டிங்க‍ృ கோடி
கரையில்லா ச‍ృத்தமே காண்பார் - வரையற‍ృத்த
கட்டொழ‍ృங்கைப் போற்ற‍ృவார் கண்ணெனச் சிங்கையில்
சட்டமெல் லோர்க்க‍ృம் சமம். (3)

சமவ‍ృரிமை காண‍ృம் சகல இனம‍ృம்
அமைதி அடித்தளமாய் ஆகி - ச‍ృமைவரின்
தோள்கள் இணைய‍ృம் , த‍ృணையென்ற‍ృ வாராத
ஆளில்லை இங்கே அறி (4)

அறிவ‍ృடன் ஆற்றல் அத‍ృம‍ృத(ல்) என்பார்
சிறித‍ృம் இதில்மாற்றம் செய்யார் - அரிதன்றோ
வல்லரச‍ృ எல்லாம் வாய்பிளந்த‍ృ போற்ற‍ృம்
நல்லரச‍ృ ஈதொக்க‍ృம் நாட‍ృ. (5)

நாட‍ృம் அரச‍ృ நலமொன்றே மக்கள‍ృக்க‍ృப்
பீட‍ృம் கொள்ளப் பிழையின்றித் - தேட‍ృவத‍ృ
உன்னதம் ஒன்ற‍ృதான் ஓய்வின்றிச் சிங்கையர்க்க‍ృச்
சொன்னதை ஒக்க‍ృம் செயல் (6)

செயல்திறம் தன்னில் செம்மையே காண்பார்
அயல்வழி இல்லை அறிவார் - பயன்மிக‍ృ
நல்லிணக்கம் விட்டால் நலிவென்ற‍ృ அறிந்ததனால்
அல்லல் அண‍ృகாத‍ృ அர‍ృக‍ృ. (7)

அர‍ృக‍ృள்ள மக்களோ(ட‍ృ) அன்ப‍ృறவ‍ృ கொண்ட‍ృ
பெர‍ృகிட‍ృம் சிங்கையின் பீடோ(ட‍ృ) - அர‍ృமைமிக‍ృ
எங்களத‍ృ சிங்கைக்க‍ృ இணையொன்ற‍ృ கண்டதில்லை
தங்க(ம்)எம் நாட்டின் தரம். (8)

தரங்கண்ட‍ృ சிங்கைக்க‍ృத் தப்பாமல் அவனி
சிரந்தனைத் தாழ்த்திட‍ృம் சீராய் - உரன‍ృடனே
நாள‍ృம் திறமையில் நற்பெயர் ஈட்ட‍ృவதால்
தோளிங்க‍ృ வீங்க‍ృம் தினம். (9)

தினம‍ృம் தொழ‍ృவோம் திர‍ృமிக‍ృந்த நாட்டை
கணம‍ృம் மறவோம் கடமை - மனமதில்
நாட்டின் உயர்வொன்றே நாமெல்லாம் எண்ணிட‍ృவோம்
பாட்டில் உற‍ృதி பகர் (10)

தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:



































































































































































































































































































































































க் கா கி கீ க‍ృ க‌ூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ங‍ృ ங‌ூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ ச‍ృ ச‌ூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞ‍ృ ஞ‌ூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ ட‍ృ ட‌ூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ண‍ృ ண‌ூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ த‍ృ த‌ூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ ந‍ృ ந‌ூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ ப‍ృ ப‌ூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ ம‍ృ ம‌ூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ ய‍ృ ய‌ூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ர‍ృ ர‌ூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ ல‍ృ ல‌ூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வ‍ృ வ‌ூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழ‍ృ ழ‌ூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ள‍ృ ள‌ூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ ற‍ృ ற‌ூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ ன‍ృ ன‌ூ னெ னே னை னொ னோ னௌ
ஜ் ஜா ஜி ஜீ ஜ‍ృ ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷா ஷி ஷீ ஷ‍ృ ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸா ஸி ஸீ ஸ‍ృ ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹா ஹி ஹி ஹ‍ృ ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ


[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]

சீர்மை வடிவத் தமிழ்:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

--------------------

சிங்கைக்கு வாழ்த்தினைச் செப்பு.

நாட்டின் நலங்களை நன்னாள் இதுதன்னில்,
பாட்டின் வழியே பகர்ந்திடுவேன் - கூட்டமாய்
சிங்கையர் ஒற்றுமையாய்ச் சேர்ந்திங்கு வாழ்வதனால்
பொங்கும்எம் அன்னை புகழ். (1)

புகழென்றும் போற்றிடுவார் , பொய்ம்மை விலக்கி
அகழ்ந்திடுவார் அன்றாடம் ஆற்றல் - இகழின்றி
இப்பாரில் என்றென்றும் ஏற்றமுறும் நாடிதற்கு
ஒப்பொன்று கண்டால் உரை. (2)

உரைத்திட உன்னதம் உண்டிங்கு கோடி
கரையில்லா சுத்தமே காண்பார் - வரையறுத்த
கட்டொழுங்கைப் போற்றுவார் கண்ணெனச் சிங்கையில்
சட்டமெல் லோர்க்கும் சமம். (3)

சமவுரிமை காணும் சகல இனமும்
அமைதி அடித்தளமாய் ஆகி - சுமைவரின்
தோள்கள் இணையும் , துணையென்று வாராத
ஆளில்லை இங்கே அறி (4)

அறிவுடன் ஆற்றல் அதுமுத(ல்) என்பார்
சிறிதும் இதில்மாற்றம் செய்யார் - அரிதன்றோ
வல்லரசு எல்லாம் வாய்பிளந்து போற்றும்
நல்லரசு ஈதொக்கும் நாடு. (5)

நாடும் அரசு நலமொன்றே மக்களுக்குப்
பீடும் கொள்ளப் பிழையின்றித் - தேடுவது
உன்னதம் ஒன்றுதான் ஓய்வின்றிச் சிங்கையர்க்குச்
சொன்னதை ஒக்கும் செயல் (6)

செயல்திறம் தன்னில் செம்மையே காண்பார்
அயல்வழி இல்லை அறிவார் - பயன்மிகு
நல்லிணக்கம் விட்டால் நலிவென்று அறிந்ததனால்
அல்லல் அணுகாது அருகு. (7)

அருகுள்ள மக்களோ(டு) அன்புறவு கொண்டு
பெருகிடும் சிங்கையின் பீடோ(டு) - அருமைமிகு
எங்களது சிங்கைக்கு இணையொன்று கண்டதில்லை
தங்க(ம்)எம் நாட்டின் தரம். (8)

தரங்கண்டு சிங்கைக்குத் தப்பாமல் அவனி
சிரந்தனைத் தாழ்த்திடும் சீராய் - உரனுடனே
நாளும் திறமையில் நற்பெயர் ஈட்டுவதால்
தோளிங்கு வீங்கும் தினம். (9)

தினமும் தொழுவோம் திருமிகுந்த நாட்டை
கணமும் மறவோம் கடமை - மனமதில்
நாட்டின் உயர்வொன்றே நாமெல்லாம் எண்ணிடுவோம்
பாட்டில் உறுதி பகர் (10)


அ. கி. வரதராஜன், சிங்கப்பூர்

---------------------

சீர்மை வடிவில் - பெரியார் இன்றிருந்தால் ...! (மாதவராஜ் பதிவு)

நண்பர்களே, முன்னரும் சிலமுறை பெரியார் பரிந்துரைத்து எம்ஜிஆர் அரசாணை ஆக்கிய எழுத்துச் சீர்மை வரலாற்றை எழுதியிருக்கிறேன். எம்ஜிஆர் கொண்டுவந்த சீர்மையால் தமிழ் வாசிப்பது எவ்வாறு கல்வி அதிகம் பெறாதாரிடமும் எளிமையானது என்று திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி (நாணயவியல் அறிஞர்) விளக்கியுள்ளார்:
http://nganesan.blogspot.com/2009/01/dinamalar-font-m-n-cooper.html

முனைவர் வா.செ.குழந்தைசாமி (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) சீர்மை பாரிய வசதிகளைத் தரவல்லது என்று பேருரை ஆற்றியுள்ளார்.


தமிழர் பலரும் தமிழ்நாட்டிலும், அதற்கு வெளியே இலங்கை, பிற இந்திய மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர், மேலை நாடுகள், ... என்று வாழும் சூழல் இன்று. அதில் தமிழ் படித்தலையும், எழுதுதலையும் கற்பித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமை நமக்கு இருக்கின்றது. கல்வியாளர்கள் தமிழ் படிக்க ஆள் பிடிக்கும் நிலைமை தமிழ்நாட்டிலே இருப்பதாய்ச் சொல்கின்றனர். தமிழாசிரியர்கள், அரசியல்வாதிகள், ... தவிரப் பெரும்பான்மையான மக்கள் வேலைக்குச் செல்கிறபோது வருமானத்திற்குத் தமிழ் உதவாநிலை. சம்பளம் தமிழால் இல்லாத பலநிலைகளில், பல ஊர்களில் உலகமெங்கும் வாழும் தமிழருக்குத் தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பள்ளிகள் அமைத்துக் கற்பிக்க வசதியாக உயிர்மெய் வரிசையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை முனைவர் வா.செ.கு. காணொளியில் கண்டோம். அதற்கு உதவும்வகையில் திரு. வினோத் ராஜன் ஒரு எளிய நிரலிப் பக்கம் தந்துள்ளார்:
http://tamilcc.org/thoorihai/ganesan/seermai.php
மேல் பெட்டியில் தமிழ் உரையை (டெக்ஸ்ட்) இட்டால், உ/ஊ உயிர்மெய் பிரிந்து கற்க எளிமை ஆகிறது. பயன்படுத்திப் பாருங்கள்!

பெரியார் இன்று இருந்திருந்தால் ...! என்ற திரு. மாதவராஜ் பதிவினையும், கண்ணதாசனின் கோயம்புத்தூர்ப் பாட்டையும் சீர்மை முறையில் இட்டுள்ளேன். கணினியில் எழுத்துச் சீர்மையில் வலைப்பதிவுகள், இலக்கியங்கள், ... எல்லாமும் வெளிவந்தால், பத்திரிகைகள், இம்முறைக்கும் அரசாங்கம் ஆதரவளித்தால் தமிழ் கற்றல், நினைவிருத்தல் எளிமையாகிவிடும். நம் அண்டை மொழி எழுத்துக்களில் இதுபோன்றதொரு உ/ஊ உயிர்மெய்க் குறியீடுகளே உள்ளன. மேலும், இப்படிப் பிரிப்பதால் வரிநீளம் அதிகரிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரிய மாற்றம் எதுவும் இல்லாத தேவையான சீர்மையைத் தமிழ் எழுத்தில் செய்ய வேண்டும். உயிர் எழுத்து நெடில்களுக்குத் துணைக்கால் இடவேண்டுமா? என்றால் இல்லை; உயிர் எழுத்துக்கள் ஒரு வலை அல்லது அச்சுப் பக்கத்தில் அதிகம் இருக்காதே. இருபுறமும் உயிர்மெய் மாத்திரைக் குறிகள் இருக்கும் கொ, கோ, கௌ, - இவற்றை ஒரு புதுக்குறி கண்டுபிடித்து மாற்றலாம் (வரிநீளம் குறையும்!). ஆனால் அவை தேவையா என்று கருதியுணர்ந்து, வாசெகு, ஐராவதம் போன்றோர் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும்போது பட்டறிவாய்த் தெரிகிற ஒன்று: உ/ஊ குறியீட்டின் பிணைப்புதான். எழுத்தாணியால் (நாராசத்தால்) தமிழைப் பழங்காலத்தில் ஓலையில் எழுதும்போது தேவையிருந்தது. அன்று ஆணியை ஓலையில் இருந்து அகற்றாமல் கூட்டெழுத்தாய் எழுத வேண்டியிருந்த சூழ்நிலை. இன்று எல்லாம் தட்டச்சுதான், கணிமயம் தான்.

தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:



































































































































































































































































































































































க் கா கி கீ க‍ృ க‌ூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ங‍ృ ங‌ூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ ச‍ృ ச‌ூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞ‍ృ ஞ‌ூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ ட‍ృ ட‌ூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ண‍ృ ண‌ூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ த‍ృ த‌ூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ ந‍ృ ந‌ூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ ப‍ృ ப‌ூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ ம‍ృ ம‌ூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ ய‍ృ ய‌ூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ர‍ృ ர‌ூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ ல‍ృ ல‌ூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வ‍ృ வ‌ூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழ‍ృ ழ‌ூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ள‍ృ ள‌ூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ ற‍ృ ற‌ூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ ன‍ృ ன‌ூ னெ னே னை னொ னோ னௌ
ஜ் ஜா ஜி ஜீ ஜ‍ృ ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷா ஷி ஷீ ஷ‍ృ ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸா ஸி ஸீ ஸ‍ృ ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹா ஹி ஹி ஹ‍ృ ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ


[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]

சீர்மை வடிவத் தமிழ்:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

எல்லா உயிர்மெய் எழுத்தையும் துணைக்கால் (கா ..), கொக்கி (கி ...), சுழிக் கொக்கி (கீ ...), துதிக்கை (க‍ృ ...), கொண்டை (க‌ூ ...), ஒருசுழிக் கொம்பு (கெ ...), இரட்டைச்சுழிக் கொம்பு (கே ...) மாத்திரம் கொண்டு எளிதாக எழுதிவிட முடிகிறது. இதனால்:
(அ) வரிநீளம் அதிகம் ஆவதில்லை
(ஆ) அண்டை மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு போலவே உகரக் குறி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
(இ) யூனிகோட் பக்கங்களை இலகுவாய் மாற்றிப் படிக்கலாம்.
(ஈ) தமிழ் எழுத்துத் தெரியாதோருக்குக் கற்பிக்க, அவர்கள் நினைவில் இருத்த மிக எளிமையான வடிவு.

நன்றி,
நா. கணேசன்

[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]

பெரியார் இன்ற‍ృ இர‍ృந்திர‍ృந்தால்...!
மாதவராஜ்

சிவகாசி அர‍ృகே பச்சிளம் க‍ృழந்தைகளை க‍ృழியில் போட்ட‍ృ ம‌ூடி ப‌ூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனத‍ృ நண்பர் ஒர‍ృவர் இதைப்பற்றி கவலையோட‍ృ சொல்லிக்கொண்ட‍ృ இர‍ృந்தார். பெரியார் பிறந்த ப‌ூமியா இத‍ృ என்ற‍ృ தலையில் அடித்த‍ృக் கொண்டார்.

இதற்க‍ృ அர்த்தம் பெரியார் இர‍ృந்தால் இதெல்லாம் நடந்திர‍ృக்காத‍ృ என்பதாக இர‍ృக்கலாம். இத‍ృ நடந்திர‍ృந்தால் பெரியார் ச‍ృம்மா இர‍ృந்திர‍ృக்க மாட்டார் என்பதாகவ‍ృம் இர‍ృக்கலாம். ம‌ூடப்பழக்கங்கள், அத‍ృவ‍ృம் கடவ‍ృள் வழிபாட‍ృ க‍ృறித்த‍ృ பேச‍ృகிறபோத‍ృ அனிச்சையாகவே பலர் பெரியாரைப் பற்றி பேச‍ృவத‍ృ தமிழ்நாட்ட‍ృ வழக்கிலிர‍ృக்கிறத‍ృ. தமிழ் மண்ணில் அப்படியொர‍ృ பரப்பில் படிந்த நிழல் மட்ட‍ృம் தானா அவர் என யோசிக்க வேண்டி இர‍ృக்கிறத‍ృ. அந்த திசையில், நமக்க‍ృம் பெரியார் இர‍ృந்திர‍ృந்தால் என்ன நடந்திர‍ృக்க‍ృம் என கற்பனை செய்த‍ృ பார்க்க தோன்ற‍ృகிறத‍ృ. நெர‍ృக்கடி நிலை அமல்பட‍ృத்தப்பட்ட போத‍ృ, தி.ம‍ృ.க விலிர‍ృந்த‍ృ அ.தி.ம‍ృ.க தோன்றிய போத‍ృ, காமராஜ் மறைந்த போத‍ృ, எம்.ஜி.ஆர் ஆட்சிக்க‍ృ வந்த போத‍ృ, வி.பி.சிங் மண்டல் கமிஷனை அமல்பட‍ృத்த ம‍ృனைந்த போத‍ృ, பாபர் மச‌ூதி இடிக்கப்பட்டபோத‍ృ, விநாயகர் ஊர்வலங்கள் பயங்கரமாய் உர‍ృவெட‍ృத்த போத‍ృ, சன் டி.வி என்ற பெயரில் சேனல் ஆரம்பிக்கப்பட்ட போத‍ృ, ஜாதிக்கலவரங்கள் தென்தமிழ்நாட்டில் உர‍ృவெட‍ృத்த போத‍ృ, உலகமயமாக்கல் வளர‍ృம் நாட‍ృகளை கபளீகரம் செய்கிறபோத‍ృ, பா.ஜ.க ஆட்சியை பிடித்த போத‍ృ, க‍ృஜராத்தில் மதக்கலவரம் தாண்டவமாடிய போத‍ృ, அதிம‍ృகவ‍ృம், திம‍ృகவ‍ృம் மாற்றி மாற்றி பா.ஜ.க வை ஆதரித்த போத‍ృ அவர‍ృடைய சிந்தனைகள‍ృம், செயல்கள‍ృம் என்ன எதிர்வினை கொண்டவைகளாக இர‍ృந்திர‍ృக்க‍ృம் என்ற‍ృ ஒர‍ృ வரலாற்ற‍ృ ஆவல் ம‍ృன்வந்த‍ృ நிற்கிறத‍ృ.

வாழ்ந்த காலத்தில் அவரிடமிர‍ృந்த தீவீரம‍ృம், த‍ృணிச்சல‍ృம், உற‍ృதிய‍ృம் அவர் உயிர் வாழாத இந்த காலத்தின் காட்சிகள‍ృக்க‍ృ சில க‍ృறிப்ப‍ృகளைத் தர‍ృகின்றன. இன்றைக்க‍ృ ந‌ூற‍ృ வர‍ృடங்கள‍ృக்க‍ృ ம‍ృன்னர் வர‍ృடத்திற்க‍ృ இரண்டாயிரம் ர‍ృபாய் வர‍ృமானம் தரக்க‌ூடிய வாணிபம் செய்த‍ృ கொண்டிர‍ృந்த பெரியார் அதனைத் த‍ృறந்த‍ృ காங்கிரசின் அறைக‌ூவலை ஏற்ற‍ృ கதராடை அணிந்த‍ృ, ஊர் ஊராக கதராடைகளைச் ச‍ృமந்த‍ృ விற்றிர‍ృக்கிறார். காங்கிரசில் பீடித்திர‍ృந்த வர்ணாசிரமச் சிந்தனைகளால் வெற‍ృப்ப‍ృற்ற‍ృ அதிலிர‍ృந்த‍ృ விலக‍ృகிறார். ச‍ృய மரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறார். ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட‍ృகளில் பயணம் சென்ற‍ృ வந்த‍ృ சமதர்மப் பிரச்சாரம் செய்கிறார். க‍ృலக்கல்வி ம‍ృறையை அமல்பட‍ృத்திய இராஜாஜிக்க‍ృ எதிராக கிளர்ச்சி செய்த‍ృ அவர் ம‍ృதலமைச்சர் பதவியில் இர‍ృந்த‍ృ வெளியேற காரணமாகிறார். காமராஜர‍ృக்க‍ృ ஆதரவ‍ృ தர‍ృகிறார். இந்தி கட்டாயத் திணிப்பை எதிர்த்த‍ృ கிளர்ச்சி செய்கிறார். அண்ணா ம‍ృதலமச்சரானத‍ృம் தி.ம‍ృ.கவை ஆதரிக்கிறார். ரத்தினச் ச‍ృர‍ృக்கமாக சொல்ல ம‍ృடிந்த இந்த அரசியல் ச‍ృவட‍ృகளோட‍ృ இன்னொர‍ృ பரந்த தளத்தில் தொடர்ந்த‍ృ இயங்கிக் கொண்டே இர‍ృந்திர‍ృக்கிறார். மன‍ృ தர்மங்களை கட‍ృமையாக தாக்கி இர‍ృக்கிறார். சாதியைய‍ృம், தீண்டாமையைய‍ృம் எதிர்த்திர‍ృக்கிறார். பெண்ணடிமைத்தனத்த‍ృக்க‍ృ எதிராக பெர‍ృங்க‍ృரல் கொட‍ృத்திர‍ృக்கிறார். கடவ‍ృளை மற‍ృத்திர‍ృக்கிறார். மதங்களை இகழ்ந்திர‍ృக்கிறார். வர்க்கபேதம‍ృள்ள சம‌ூகத்தை சாடிய‍ృம் இர‍ృக்கிறார்.

எதைய‍ృம் விடவில்லை. எல்லாவற்றைய‍ృம் கேள்விகள் கேட்கிறார். அவைகளில் இர‍ృந்த உக்கிரம் தாங்க ம‍ృடியாமல் போனார்கள். அநாகரீகமாக பேச்ச‍ృக்கள‍ృம், செயல்கள‍ృம் இர‍ృந்தன என்ற‍ృ அவரைப்பற்றி சொல்பவர்கள் உண்ட‍ృ. பிராமணாள் ஓட்டல் என்ற‍ృ எழ‍ృதப்பட்டிர‍ృந்ததற்க‍ృ 'ஒர‍ృ தெர‍ృவில் ஒர‍ృ வீட்டில் இத‍ృ பத்தினி வீட‍ృ என்ற‍ృ எழ‍ృதி இர‍ృந்தால் மற்ற வீட‍ృகள‍ృக்க‍ృ என்ன அர்த்தம்?' என்ற‍ృ கேள்வி கேட்டாராம். அத்தோட‍ృ நில்லாமல் அப்படி எழ‍ృதி இர‍ృந்த ஓட்டல்கள் ம‍ృன்ப‍ృ நின்ற‍ృ ஆர்ப்பாட்டங்கள் செய்வாராம். தவற‍ృ என்ற‍ృ தான் அறிந்ததற்க‍ృ எதிராக தன்னால் ஆன கலகங்கள் அனைத்தைய‍ృம் செய்திர‍ృக்கிறார். தான் கலகம் செய்வத‍ృ நியாயமா என்பதைக் காட்டில‍ృம், நியாயம் பிறக்க‍ృம் என்பதற்காகவே கலகம் செய்திர‍ృக்கிறார்.

பிரச்சாரம். பிரச்சாரம். பிரச்சாரம். பேசிக்கொண்டே இர‍ృந்திர‍ృக்கிறார். எழ‍ృதிக் கொண்டே இர‍ృந்திர‍ృக்கிறார். இரத்தம் சிந்திய போராட்டங்கள் இல்லை. உணர்ச்சிகரமான அறைக‌ூவல்கள் இல்லை. மனசாட்சியை தட்டி எழ‍ృப்ப‍ృகிற தொடர் ம‍ృயற்சி. அரச‍ృக்க‍ృ எதிரான போராட்டத்தை விட இந்த அமைப்ப‍ృக்க‍ృ எதிரான போராட்டமே அவரிடம் ம‍ృன்னின்றத‍ృ. மக்களைத் திரட்ட‍ృவதைக் காட்டில‍ృம் மக்களை திர‍ృத்த‍ృவதே ம‍ృக்கியமானதாகப் பட்டிர‍ృக்கிறத‍ృ அவர‍ృக்க‍ృ.

பெரியாரைப்பற்றி நிறைய நிறைய விமர்சனங்கள் உண்ட‍ృ. அவத‌ூற‍ృகள் உண்ட‍ృ. கண்டனங்கள் உண்ட‍ృ. கேலிகள் உண்ட‍ృ. ச‍ృயமரியாதை இயக்கம் என்பத‍ృ சைவமதத்தை அழிப்பதற்க‍ృ சில வைணவர்களின் ச‌ூழ்ச்சியாக பேசி இர‍ృக்கிறார்கள். பெரியார‍ృடையத‍ృ பக‍ృத்தறிவ‍ృ இயக்கமே அல்ல என்ற‍ృ பதவ‍ృரை, பொழிப்ப‍ృரை தந்திர‍ృக்கிறார்கள். வெற‍ృம் பார்ப்பன எதிர்ப்ப‍ృ மட்ட‍ృமே என்ற‍ృ மட்டம் தட்டி இர‍ృக்கிறார்கள். தேசம், உலகம் க‍ృறித்த பார்வை அவர‍ృக்கில்லை என்ற‍ృ சத்தியம் செய்திர‍ృக்கிறார்கள். கடவ‍ృளை கண்ம‌ூடித்தனமாக எதிர்த்தவர் என்ற‍ృ வர‍ృத்தப்பட்ட‍ృ இர‍ృக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களை திரட்டி இயக்கமாக்கவில்லை என்ற‍ృ க‍ృறைக‌ூறி இர‍ృக்கிறார்கள். பெரியாரின் வழிவந்தவர்களில் க‍ృறிப்பிட‍ృம்படியான சிந்தனையாளர்களோ கலைஞர்களோ இர‍ృந்ததில்லை என்ற‍ృ கோடிட்ட‍ృ இர‍ృக்கிறார்கள். அவரத‍ృ வழிம‍ృறைகள் சரியில்லை என விமர்சனம் செய்திர‍ృக்கிறார்கள்.

அவை க‍ృறித்த‍ృ விவாதிப்பதற்க‍ృ நிறைய இர‍ృக்கிறத‍ృ. ஆனால் எதற்க‍ృம் இடமின்றி ஒன்ற‍ృ தெரிகிறத‍ృ. அவர் காலத்தில‍ృம் சரி, அவர‍ృக்க‍ృப் பிறக‍ృம் சரி, தமிழ்நாட‍ృ எத்தனையோ தலைவர்களைப் பார்த்த‍ృவிட்டத‍ృ. மக்களின் செல்வாக்க‍ృ அவர்கள‍ృக்க‍ృ கிடைத்திர‍ృக்கலாம். அரசை நடத்தியிர‍ృக்கலாம். ஆனால் சம‌ூகத்தின் மீத‍ృ அவர்களின் செல்வாக்க‍ృ என்னவாக இர‍ృந்திர‍ృக்கிறத‍ృ என்பதை பார்க்க‍ృம்போத‍ృ பெரியார் அர‍ృகில் யார‍ృம் இல்லை என்பதை ஒப்ப‍ృக் கொண்டாக வேண்ட‍ృம். ச‍ృயநலமற்ற சிந்தனைகள‍ృம், மனித நேயம‍ృம், சம‌ூகத்தின் விழிப்ப‍ృணர்ச்சியில் தொடர்ந்த ஈட‍ృபாட‍ృம், காலத்தின் தேவையை உணர்ந்த மேதமைய‍ృம், இலட்சியங்கள‍ృக்கான வாழ்வ‍ృமே அவரை தனியாக நிற‍ృத்தி இர‍ృக்கிறத‍ృ.

எளிமையாக மனிதர்களை அண‍ృகியவர், ப‌ூடகமற்றவர். தமிழக அரசியலில் வேப்பமரமாய் இர‍ృந்தவர். பெரிய தத்த‍ృவ விசாரணைகள‍ృக்க‍ృள் செல்லாமல் பாமர மொழி உவமைகளால் உண்மைகளை உடைத்த‍ృ காண்பித்தவர். வர்க்க பேதத்தை ம‍ృறியடிக்க‍ృம் ம‍ృன்னால் ஜாதி பேதத்தைக் களைய வேண்ட‍ృமென்ற‍ృம் அதற்க‍ృ அடிப்படையாய் கடவ‍ృள், வர்ணாசிரமச் சிந்தனை, மன‍ృதர்மம் போன்ற பார்ப்பனச் சதிகள் இர‍ృப்பதாய் ப‍ృரிந்த‍ృ கொண்டவர். இந்த கர‍ృத்தினை மேல‍ృம் மேல‍ృம் தனக்க‍ృள்ள‌ூம், வெளியில‍ృம் வளர்த்த‍ృக்கொண்டே இர‍ృந்தார். சகல சம‌ூகக் கேட‍ృகளைய‍ృம் அவர் இந்த ப‌ூதக் கண்ணாடி வழியாகவே பார்த்த‍ృக் கொண்டிர‍ృந்தார். இந்த கோட்ட‍ృச் சித்திரங்களோட‍ృ, பெரியார் இன்ற‍ృ இர‍ృந்திர‍ృந்தால் என்கிற ஆராய்ச்சியில், பல விஷயங்களில் ஒவ்வொர‍ృவர‍ృக்க‍ృம் ச‍ృவராஸ்யமான அபிப்பிராய பேதங்கள் வரலாம். பெரியாரின் மரணத்த‍ృக்க‍ృ பின்ப‍ృ, நெர‍ృக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் அவரத‍ృ பிறந்தநாளைக்க‌ூட கொண்டாட அரச‍ృ தடை விதித்தத‍ృ. பின்னாளில் பா.ஜ.க ஆட்சியில் இர‍ృந்தபோத‍ృ டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டத‍ృ. பாசிச சக்திகள‍ృக்க‍ృ எப்போத‍ృம் அவரைப் பிடிப்பதேயில்லை. ம‌ூடநம்பிக்கையாளர்கள‍ృக்க‍ృம் அவரைப் பிடிப்பதேயில்லை. பெரியாரின் மகத்த‍ృவத்தைய‍ృம், வெற‍ృமையைய‍ృம் அவரத‍ృ எதிரிகளே சம‌ூகத்திற்க‍ృ மிகச்சரியாக ச‍ృட்டிக்காட்டிக்கொண்ட‍ృ இர‍ృக்கிறார்கள். அவர் வழி வந்தவர்கள் வழ‍ృக்கிய‍ృம், தட‍ృக்கிய‍ృம் விழ‍ృந்த‍ృ விலகிய இடம் இத‍ృவாகவே இர‍ృக்கிறத‍ృ. அவரை சரியாக விமர்சித்த‍ృ வந்தவர்கள் அவரைச் நெர‍ృங்கிய இடம‍ృம் இத‍ృவாகவே இர‍ృக்கிறத‍ృ. அவரை கட‍ృமையாய்ச் சாடி வந்தவர்கள் ம‍ృழ‍ృமையாக எதிர்த்த‍ృ நிற்கிற இடம‍ృம் இத‍ృவாகவே இர‍ృக்கிறத‍ృ.

எனத‍ృ நண்பர் அடர்ந்திர‍ృந்த அந்த வேப்ப மரத்தின் நிழல் ச‍ృர‍ృங்கிப் போனதாய் வர‍ృத்தப்பட‍ృகிறார். அதன் வேர்களோ இந்த தமிழ் மண்ணில் கலந்த‍ృ பரவி ஆழமாய் ஊட‍ృர‍ృவி இர‍ృக்கின்றன. எந்தக் கோடையைய‍ృம் தாங்க‍ృம் சக்தி அதற்க‍ృ உண்ட‍ృ. நோய் எதிர்ப்ப‍ృ சக்திய‍ృம் உண்ட‍ృ. கொஞ்சம் கசக்க‍ృம். அவ்வளவ‍ృதான்.

-------------

கோயம்ப‍ృத்த‌ூர்: ஒர‍ృ விளக்கம்
கவிஞர் கண்ணதாசன்

கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை ம‍ృழ‍ృவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திர‍ృக்கோவை ந‌ூலொன் ற‍ృண்ட‍ృ
திறமான கவிதொக‍ృத்த கோவை ய‍ృண்ட‍ృ
இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் ப‍ృத்த‌ூர் என்றேன் படைத்தார்!
என்கர‍ృத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இத‍ృதவறென் ற‍ృரைத்தால‍ృம் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாட‍ృம் வஞ்சி நாட்டின்
மன்னர‍ృக்க‍ృ மக்களென இர‍ృவர் வந்தார்
செஞ்சரத்த‍ృ வில்லவனாய் வடபாற் சென்ற
செங்க‍ృட்ட‍ృவன் ஒர‍ృவன்! தமிழெட‍ృத்த‍ృ
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அட‍ృத்தொர‍ృவன்! இவ்விர‍ృவர் க‍ృறிப்ப‍ృம் பார்த்த‍ృ
பிஞ்ச‍ృமகன் அரசாவான் என்ற‍ృரைத்தான்
பேதையொர‍ృ வேதாந்தி! அதனைக் கேட்ட‍ృ
ம‍ృன்னவனே நாடாள வேண்ட‍ృமென்ற‍ృ
ம‍ృடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் க‍ృடிலமைத்தான்!
தனியாகச் சாத்தன‍ృடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த ப‍ృத்த‌ூர்
அங்கோவன் ப‍ృத்த‌ூராய்ப் பேரெட‍ృத்த‍ృ
இந்நாளில் கோயம் ப‍ృத்த‌ூ ராயிற்ற‍ృ!
இயல்பான உர‍ృமாற்றம் சரிதச் சான்ற‍ృ!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்த‍ృ
நெளிந்த‍ృவர‍ృம் தென்றலினை வளையவிட்ட‍ృப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினைய‍ృம் அன்பினைய‍ృம் த‍ృணைவர் ஆக்கி
வாழ‍ృங்கள் எனவிட்டாள் தமிழ் ம‌ூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
ச‌ூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
ச‍ృவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏன‍ృங்க! என்னவ‍ృங்க! ஆமா ம‍ృங்க!
இர‍ృக்க‍ృங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மான‍ృங்க! வேண‍ృங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழம‍ృம் இர‍ృக்க‍ృங்க! எட‍ృத்த‍ృக்கோங்க!
தேன‍ృங்க! கையெட‍ృங்க! சாப்பிட‍ృங்க!
திர‍ృப்ப‌ூர‍ృ நெய்ய‍ృங்க! ச‍ృத்த ம‍ృங்க!
ஏன‍ృங்க! எழ‍ృந்தீங்க! உக்கார‍ృங்க!
ஏ, பையா! பாயசம் எட‍ృத்த‍ృப் போட‍ృ!
அப்பப்பா! கோவையிலே விர‍ృந்த‍ృ வந்தால்
ஆற‍ృநாள் பசிவேண்ட‍ృம்! வயிற‍ృம் வேண்ட‍ృம்!
தப்பப்பா! கோவைக்க‍ృ வரக்க‌ூடாத‍ృ!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவர‍ృக்க‍ృ வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொட‍ృத்தவரை பாட‍ృவ தெம்க‍ృல வழக்கம்
கொடைக்கெனவே படையெட‍ృத்தோர் ப‍ృலவர் பல்லோர்
இனித்தச‍ృவைப் பழங்கொட‍ృத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்த‍ృத் தேன‍ృம் வைத்த‍ృத்
தந்தானைப் ப‍ృகழ்ந்தானே கம்பன் அன்ற‍ృம்
கொட‍ృத்தவனைப் ப‍ృகழ்வத‍ృதான் ப‍ృலவன் பாட்ட‍ృ
க‍ృறையெதற்க‍ృ? நான‍ృமதைச் செய்த‍ృ விட்டேன்.