இணையத்தில் உள்ள இதழிகைகள்

இணையத்தில் உள்ள இதழிகைகள் பற்றிய குறிப்பு. யூனிகோட் நாளிகை, இதழிகளை மாத்திரம் தருக. நன்றி!

நா. கணேசன்


(1) வீரகேசரி
http://www.virakesari.lk/VIRA/homeslide.asp

(2) விகடன்
http://www.vikatan.com/

(3) குமுதம்
http://kumudam.com/

(4) நக்கீரன்
http://www.nakkheeran.in/users/frmhome.aspx

(5) விடுதலை
http://files.periyar.org.in/viduthalai/

(6) காலச்சுவடு
http://www.kalachuvadu.com/

(7) தென்றல்
http://www.tamilonline.com/

(8) வார்த்தை
http://vaarththai.com/
(தலைப்பு மாத்திரந்தான் உள்ளது)

(9) உயிர்மை
http://www.uyirmmai.com/

(10) தினமலர்
http://www.dinamalar.com/

(11) தமிழ்மணம் வலைத்திரட்டி
http://tamilmanam.net

யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள் (1993)

தமிழன்பர்களே,

வணக்கம்.

(1) இந்திரகுமாரின் சில நூல்கள்: மறைந்த டொக்டர் நினைவாக, நூலகத்தில் ( http://noolaham.net )அவர் படைப்புகளை அவரின் நண்பர்கள் வைக்கவேண்டும்:
http://kanapraba.blogspot.com/2008/12/blog-post_24.html
(அ) கம்போடியா பற்றி அவர் எழுதிய புஸ்தகம் இன்னும் தாள் வடிவிலே உள்ளதா?
(ஆ) "இலங்கேஸ்வரன்" - அவரது புத்தகம் பிடிஎப் ஆகவோ, ஒளிநகலோ கிடைக்குமா? அனுப்புவோர்க்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்வேன். இந்திரகுமார் அவர்களின் இலங்கேஸ்வரன் புத்தகம் கிடைக்குமா? அமெரிக்க லைப்ரரிகளில் இல்லை.

அவரது திருகோணமலைப் புத்தகமிருக்கிறது, எனவே அதைப் பெற்றுவிடுவேன்.

(2) உங்கள் நண்பர்களிடம் கேட்டு இந்தக் கட்டுரையைப் பெற்றுத் தரமுடியுமா? 'யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள் ' - கலாநிதி.க.செ.நடராசா; ' 'தமிழோசை (கனடா) ' 11-11-1993 தட்டெழுதினதாகவோ, மின்வருடியோ, (அ) என் வீட்டு முகவரிக்கோ.

(3) இலங்கை, இராவணன், அவன் சிவபக்தி, யாழ்மீட்டியது - தொடர்பாக தமிழ் புஸ்தகங்களின்/கட்டுரைகளின் பட்டியல் ஒன்று தயார் (தெரிந்தவர்களைக் கேட்டு) செய்யமுடியுமா?

நூலகம் திட்டத்தில் உள்ள தொகுப்பில் எவையெவை இராவணன் பற்றிக் குறிப்பிடுகின்றன?

யாழ்ப்பாணம் பெயர்க்காரணம் பற்றி நல்ல கட்டுரை தருவேன்,
http://nganesan.blogspot.com/2008/12/yaazh-flag-sangili-mannan-jaffna.html

நன்றி,
நா. கணேசன்

மயிலாடுதுறையில் இருந்து ஒரு ஃபோட்டோ: உதவி தேவை

அண்மையில் தேவாரத்தில் தேவி உமா எப்படி வர்ணிக்கப்படுகிறாள் என்பதைப் பார்த்துக்
கொண்டிருந்தேன். அவளது அங்க அவயவங்களை விவரித்திருப்பர். அப்போதெல்லாம் தேவி உமைக்குத் தனிக்கோயில் இல்லை. பின்னர் 12-14 நூற்றாண்டு அளவிலே பிற்காலச் சோழர், பாண்டியர், விஜயநகர் மன்னர்கள் தான் தனிக்கோயிலைக் கட்டுகிறார்கள். மயிலாடுதுறை பெரிய கோயில் உறைகின்ற அம்மைக்கு அஞ்சொலாள் என்பது தேவாரத்தில் வரும் பழைய பெயர். இதனை 200 ஆண்டுகளாய் நூற்றுக்கணக்கான சுவடிகளை ஆராய்ந்து சைவப்பெருமக்கள் பதிப்பித்த எல்லா தேவார நூல்களும் தெளிவாகச் சொல்லுகின்றன. அதுபற்றி ஒரு கட்டுரை எழுத ஆவல் கொண்டு சில குறிப்புகளைச் சேகரித்தேன்:
http://groups.google.com/group/santhavasantham/msg/13876352b4fd4a1b
http://groups.google.com/group/minTamil/msg/45a14325f0655ee6
http://groups.google.com/group/minTamil/msg/8be3ac24e73d1b9c

பரணீதரன், தீட்சிதர் பாடிய திருத்தலங்கள், விகடன், 2007 (ISBN 978-81-8476-038-5). பக். 99: " மாயூரத்தில் 'பெரிய கோயில்' எனக் கூறப்படுவது ஸ்ரீ மாயூரநாத சுவாமி திருக்கோயிலாகும். இது தொன்மைச் சிறப்பு பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். கிழக்கே உயர்ந்த கோபுரம் கொண்ட இந்தக் கோயிலுக்கு வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் ஸ்ரீமாயூரநாதர். இங்கு உறையும் அம்பிகையை
'அபயாம்பிகை' எனவும், 'அஞ்சல்நாயகி' எனவும் அழைக்கிறார்கள்.தேவாரத் திருப்பாடல்களில் இறைவன் மயிலாடுதுறை அரன், மயிலாடுதுறையன்,அஞ்சொலாள் உமைபங்கன் எனவும், அம்பிகை, அஞ்சொலாள் எனவும் வழங்கப்படுகின்றனர்."




தஞ்சை, நாகைப் பகுதி நண்பர்களை விசாரித்தபோது பழைய எம்எல்ஏ கிட்டப்பா தான் முழுமுயற்சி எடுத்து மாயவரத்தை மயிலாடுதுறை என்று அதிகாரபூர்வமாகத் தேவாரத்தில் வரும் ஊர்ப்பெயரை உலகறியச் செய்தார். அதுபோல, நாமும் தேவாரத்தில் வரும் தேவியின் திருப்பெயரை உலகறியச் செய்தல் கடன். என்ன உதவி வேண்டுமோ கேளுங்கள். தருமை ஆதீனமும் என்றும் கொள்வது அஞ்சொலாள் என்னும் திருநாமமே. சரியாக, வடமொழியில் மொழிபெயர்த்திருந்தால், சாருவசனி என்பதுபோல் ஒரு பெயர் அமைந்திருக்கும்.

மயிலாடுதுறை அம்பிகை பெயர்தரும் தேவாரப் பாடல் இதுதான்:

வெஞ்சினக் கடுங்காலன் விரைகிலான்
அஞ்சிறப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயிலாடு துறையுறை
*அஞ்சொலாள் உமை*பங்கன் அருளிலே. 5.39.4


இந்திய சுதந்திரத்தின்பின் பல கோயில்களில் தேவாரத்தைக் கருங்கல்லில் எழுதி வைத்தனர். இப்பொழுது பளிங்குக் கல்லில் எழுதுகின்றனர். மயிலாடுதுறை (மாயவரம்) பெரிய கோயிலில் அம்பிகை கருவறையிலோ, அல்லது ஈசன் சன்னதியிலோ இருக்கும். அதைப் பார்த்து அம்பிகையின் திருப்பெயர் வரும் பாட்டின் புகைப்படம் எடுத்து அனுப்ப முடியுமா? நன்றி.

நா. கணேசன்

பி.கு.: விகடனின் அண்மைக் கட்டுரையொன்றில் ந. கிட்டப்பாவின் வெற்றியை அண்ணா எப்படிக் கேட்டார் என்றுள்ளது.


உன்னோடு போனதே அண்ணா...

'அ'... மொழிக்கு முதல் எழுத்து. அண்ணா... பல கட்சிகளுக்கு முன்னெழுத்து. இன்றைய அரசியல்வாதிகள் பலருக்கும் அவர்தான் தலையெழுத்து!

அசாதாரண மனிதர்களையே ஆச்சர்யப்படவைத்த அண்ணாவுக்கு இது நூற்றாண்டு விழா தொடங்கும் நேரம்!

இன்றும் அந்த மனிதரைக் கொண்டாடுவதற்கு, அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மட்டும்தான் காரணமா? இல்லை, அத்துடன் அவரிடம் இருந்த அரசியல் நாகரிகமும் பண்பாடும்தான் காரணம். தனக்குக் கீழே இருந்த தம்பிகளை மதித்தார். அதிகாரத்தைப்
பங்கிட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை அரவணைத்தார். குடும்பம் வேறு,
கட்சி வேறு என்று நினைத்தார். அவர் வளர்த்த நாகரிகம் இன்றைய அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டால், சமூகமே மேம்படும்!

அண்ணாவின் கதையைத் தேடினால், 'உன்னோடு போனதே அண்ணா!' என்றுதான் சொல்லத் தோன்றும். அந்த ஏக்க காலத்தின் சில சொச்சங்கள் மட்டும் இங்கே...

பழிக்குப் பழி!: தி.மு.க. அப்போது எதிர்க்கட்சி. அறிவிக்கப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் ஆகிய ஐந்து பேரை போலீஸ் கைது செய்தது. வண்டியில்
ஏற்றும்போது அண்ணாவின் தோளில் கிடந்த துண்டு கீழே விழுந்தது. அந்த அதிகாரி தனது கையில் வைத்திருந்த தடியால் துண்டைத் தூக்கிஎறிந்தார். குனிந்து எடுத்த அண்ணா, கோபத்தைக் காட்டாமல் தோளில் போட்டுக்கொண்டார். கமிஷனர் அலுவலகம் அழைத்து வரப்பட்ட அண்ணாவை சேரில் உட்கார்ந்து சிகரெட் பிடித்தபடியே விசாரித்தார் அந்த அதிகாரி. அப்போதும் அமைதியாகவே இருந்தார் அண்ணா.

சில ஆண்டுகளிலேயே தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா, முதலமைச்சர் ஆனார். அந்த அதிகாரிக்கு பயம் வரத்தானே செய்யும். தனது பதவியை ராஜினாமா செய்தார். அண்ணா அதை ஏற்க வில்லை. ''எந்த ஆட்சி வந்தாலும் போனாலும், அதிகாரிகள் நிரந்தரமானவர்கள். விலகத் தேவைஇல்லை'' என்று அந்த அதிகாரியை வரச் சொன்னார். வெட்கப்பட்டபடியே அவரும் வந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு... தி.மு.க-வின் முன்னாள் மேயர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், தான் சொல்வதைத்தான் இன்ஸ்பெக்டர் செய்ய வேண்டும் என்று கட்டளை போட்ட தகவல் அந்த உயரதிகாரிக்குத் தெரிய வந்தது. அண்ணாவின் காதுக்குத் தகவலை கொண்டுபோனார். ''இப்படி ஒருவர் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்களோ... அதையே செய்யுங்கள். இனி, என்னைக் கேட்க வேண்டாம்'' என்று உத்தரவு போட்டார் அண்ணா!

கட்சி வேறு, ஆட்சி வேறு!: தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அண்ணா வெளியிட்ட ஓர் அறிக்கை, ஆட்சியாளர்களின் சட்டப் புத்தகமாக அமையும் அளவுக்கு முக்கியமானது.

''கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல்
இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது'' என்றார்.

குடும்பமா... கிட்ட வராதே!: முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள்
யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்.

மறுநாள் நுங்கம்பாக்கத்தில் அண்ணாவின் வீட்டுக்கு அரசு அலுவலர்கள் புதிய நாற்காலிகள், சோபாக்களை கொண்டுவந்து வைத்தார்கள். அதை எங்கே வைக்க வேண்டும் என்று ராணி சொல்லிக்கொண்டு இருக்கும் போது வீட்டுக்குள் நுழைந்த அண்ணா, ''எல்லாத்தையும்
எடுத்துட்டுப் போங்க'' என்றார். விதிமுறைப்படிதான் செய்கிறோம் என்று அலுவலர்கள் சொன்னபோதும் தேவையில்லை என்று அனுப்பிவைத்த அண்ணா, ''ராணி... எனக்கு இந்தப் பதவி நிரந்தரமல்ல. நாளைக்கே ஆட்சி போய்விடும். அப்போது இவர்களே வந்து சோபாவை எடுத்துட்டுப் போயிடுவாங்க. அப்ப உன்னோட மனசுதான் வருத்தப்படும். நமக்கு இந்த நாற்காலியே போதும்'' என்று பக்கத்தில் இருந்த மூங்கில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.

அரசியல் வேண்டாம்!: தி.மு.க. வேர் பிடிக்க ஆரம்பித்த காலம். செ.அரங்கநாயகம் அப்போது பள்ளிக்கூட ஆசிரியர். ''தி.மு.க. சார்பு ஆசிரியர்களை ஒன்றுசேர்த்து ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா?'' என்று கேட்க, அண்ணா மறுத்தார்.

''கல்வி அனைவருக்கும் பொதுவானது. அதில் அரசியலைப் புகுத்தக் கூடாது'' என்ற அண்ணா, மாணவர்கள் அரசியலுக்கு வருவதையும் விரும்பவில்லை. ''அரசியல் ஈடுபாடு இருக்கலாம். ஆனால், படித்து முடித்ததும்தான் பங்கேற்க வேண்டும். அரசியல் என்பது அத்தை மகள் மாதிரி. திருமணத்துக்கு முன் சுத்திச் சுத்தி வரலாமே தவிர, தொட்டுவிடக் கூடாது'' என்றார்.

அண்ணா முதல்வரானதும், ஒரு கோயிலில் அறங்காவலர் விஷயத்தில் சர்ச்சை எழுந்தது. ''கட்சிக் காரர்களை கோயில் அறங்காவலர்களாகப் போடக் கூடாது'' என்று உத்தரவிட்ட அண்ணா, அதற்கு இரண்டு காரணங்களும் சொன்னார்.

''கட்சிக்காரங்களுக்கு கோயில் ஐதீகம், விதிமுறைகள் தெரியாது. இது கோயிலுக்கு இழப்பு. கட்சிக்காரர்களை அறங்காவலராப் போட்டா, அவங்க கோயில்ல தர்ற பொங்கலைச் சாப்பிட்டுட்டு, அங்கேயே தூங்கிடுவாங்க. இது கட்சிக்கு இழப்பு!'' என்றார்.

தனது குறைபாட்டை தானே சொன்னார்!: 'யாருக்கும் பயப்பட மாட்டேன்... எதிர்ப்பு எனக்கு தூசு!' என்றுதான் தலைவர்கள் பேசுவார்கள். தலைவர்கள் யாரும் தங்களின் குறைபாட்டை மறந்தும் சொல்ல மாட்டார்கள். அண்ணா அதற்கு நேர் எதிர்!

''எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாய சூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது'' என்றார்

நோயை ஒப்புக்கொண்டார்!: தலைவர்கள் இப்போதெல்லாம் சாதாரணமாக மருத்துவமனைக்குப் போனால்கூட, அது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். நடிகர்களைவிட தலைவர்கள்தான் 'இமேஜ்' பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். ஆனால், அண்ணா தனது உடல்நலம் பற்றி பகிரங்கமாக எழுதினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்ணா மறைந்தது 1969-ல். ஆனால், அதற்கான அறிகுறிகள் பத்தாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. இதற்கான அறிகுறி வந்து, டாக்டரைப் போய் பார்த்துவிட்டு வந்ததும் பக்கம்பக்கமாக திராவிட நாடு பத்திரிகையில் எழுதினார். 'உன்னிடமின்றி வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்த அண்ணா, கழுத்தின் பின்புறத்தில் கட்டி இருப்பதைச் சொன்னார். ''இடது தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகம் தடித்துப்போய் என்னால் கையைத் தூக்க முடியவில்லை'' என்று சொன்னார். ''என்னுடைய உடலமைப்பே அதிக அளவு அலைந்து கட்சி வேலை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது'' என்றார்.

மாற்றார் மீதும் மதிப்பு!: ''தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். ஆனால், மற்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் சட்டமன்றத்துக்குள் வர வேண்டும்'' - 1967 தேர்தல் பிரசாரத்தின்போது அண்ணா சொன்னது.

தேர்தல் முடிவுகளை டிரான்சிஸ்டர் வைத்துக் கேட்டுக்கொண்டு இருந்தார் அண்ணா. முதல் முடிவு, பூங்கா நகர். கூட்டணிக் கட்சியான சுதந்திரா வேட்பாளர் ஹண்டே வெற்றி. மகிழ்ச்சி அடைந்தார். அடுத்ததாக, மாயவரம் தி.மு.க. வேட்பாளர் கிட்டப்பா வெற்றி. துள்ளிக் குதித்தார். அடுத்ததாக விருதுநகர் காமராஜர் தோல்வி. துவண்டுபோனார் அண்ணா.

''காமராஜர் எல்லாம் தோற்கக் கூடாதுய்யா!'' என்று கலங்கினார். ''ஜெயிச்சது நம்ம கட்சிதானே'' என்று பக்கத்தில் இருந்த கவிஞர் கருணானந்தம் கேட்க, ''காமராஜ் தோற்கக் கூடாதுய்யா.நாட்டுக்காக உழைச்சவரை எப்படித் தோற்கடிக்கலாம்?'' என்றார் அண்ணா. பதவியேற்றதும், ''காமராஜர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டும்'' என்று அவரை நேரில் பார்க்கப் போனார். யாரை வீழ்த்தி தி.மு.க. வெற்றிபெற்றதோ, அந்த முதலமைச்சர் பக்தவத்சலத்தைப் பார்த்து ஆசி வாங் கினார்.

அரசியல் அதிசயமாக நடந்த சம்பவம், பெரியாரையும் பார்க்கப் போனதுதான். பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா, 18 ஆண்டுகள் அவரை எதிர்த்து கட்சி நடத்தினார். இரண்டு இயக்கங்களும் தகுதி குறைந்த விமர்சனங்களைக்கூட செய்துகொண்டன. தேர்தலில் தி.மு.க-வை எதிர்த்து பெரியாரே பிரசாரம் செய்தார். ஆனால், வெற்றி பெற்ற அண்ணா, ''இந்த ஆட்சியே உங்களுக்குக் காணிக்கை!'' என்றபோது பெரியாரால் பேச முடியவில்லை. 'அண்ணா வந்து பார்த்தபோது கூச்சத்தால் குறுகிப்போனேன்' என்றுதான் பெரியாரால் சொல்ல முடிந்தது.

- ஆனந்த விகடன்.

பறை - சொல்விளக்கம் (பறை தருவான் - திருப்பாவை 1)

பறை தருவான் - திருப்பாவை 1
பறை - சொல்விளக்கம்
--------------------------

நாராயணனே, நமக்கே பறை தருவான் - திருப்பாவை 1.
இறைவா நீ தாராய் பறை! ஏலோர் எம்பாவாய். - திருப்பாவை 28


பறை = படி, grain measure originally. Later in Middle East, Indus valley etc., the பறை grain measure was used to make a frame drum. புலை 'meat, stench' : புலி ‘meat-eating tiger', நரை - நரி ’black and white colored coat mammal: https://en.wikipedia.org/wiki/Indian_jackal'.

It is very interesting that Tamil has retained both meanings in old Tamil:
(a) (frame) drum as in the word paRaiyan2. துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந் நான்கல்லது குடியும் இல்லை (புறநானூறு).
(b) grain measure - 'நமக்கே பறை தருவான்' (as yajamAna doling out the grains for his aDiyaar).

The primary meaning of paRai is grain measure (படி). YajamAna (tamil: எஜமான்/எசமான். Old way of paying out the serfs by a lord = Indian jajmani system) giving the weekly (or so) dhAnyam using paRai. From this primary meaning, the secondary meaning of granting grace by god (as in Tiruppaavai) is derived. ANDAL's pun on the two meanings in Tamil - grain measure and frame drum - can be compared to women playing the paRai in Ancient Near East,  https://en.wikipedia.org/wiki/When_God_Was_a_Woman

முதலாந் திருப்பாவையில் ஆண்டாள் பேசுவது, 'விரும்பிய பொருள்' desired object என்ற அர்த்தத்தில். 'என்ன வேண்டுகிறோமோ அதைத் தருவான்.' 'கொஞ்சம் போட்டுக்கொடுங்க' என்று வேண்டினால், பெருமாள் அருள் கூடிக் கிடைக்கும்.

தமிழில் பல சொற்களில் இரண்டாம் உயிர்மெய் எழுத்தில் ற்/ட் போலி இருக்கிறது. தானியக் குவையில் *படிந்து* திவசத்தை அளப்பதைப் படி என்கிறோம். படிதல் பறிதல் என்றும் வரும். உ-ம்: குழி/வங்கு பறித்தல். இந்தப் படி/பறை கூலம் அளந்து கூலியாகக் கொடுத்தல் பறைதருதல் ஆகும். மிகப் பழைய வேளாண்முறை, மாந்தவியலில் Jajmani system of wages என்ப. நிலத்தோடு படிந்து/பறிந்து இருக்கும் கல் பாறை.

இன்னொரு முக்கியமான உதாரணம் தருகிறேன். தமிழ்ச் சொற்களின் இரண்டாம் உயிர்மெய் ற்/ட் போலி. பறபற/படபட என சிறகை விரித்து அடித்து பறவை மேலுந்தும் (Lift) சக்தியை உருவாக்குகிறது. எனவே, படபட/பறபற என்னும் அனுகரண ஓசைச்சொல் தருவது பறவை என்ற பெயர் - பறத்தல் பறவையின் தொழில்.

மடு என்றால் ஆழ்ந்து இருத்தல், பற்றியிருத்தல், அணைந்திருத்தல். "குலசேகரப் பெருமாளிடத்திலே . . . எம்பெருமானார் மடுவிட்டிருப்பது (திவ். பெருமாள். தனியன், வ்யா. பக். 2)." மடி கன்று ஊட்டுவதால் மாடு என்ற பெயர். சுமையை மடுப்பது = சுமடு > சும்மாடு. ஒடுக்குமாடு = கொள்ளைப்பொருள். மாட்டுப்பெண்/மாற்றுப்பெண் - கைம்மாட்டிலே மாமியாருக்கு உதவும் பெண். தலைமாடு, கால்மாடு ~ தலைமாறு, கால்மாறு என்றும் வரும் (ட்/ற் போலி காண்க). ’தற்குறிக்கு மாட்டெறிந்தேன்’ என கல்வெட்டுக்களில் வரும். மாட்டு-மாற்று ஆக கையொப்பம் இடல். இவை மாடு/மாற்று = Substitute என்ற பொருளில் வருவதாகும்.

மாடு-/மாறு- “to do":

DEDR 4797 Ma. māṭuka to build, construct; māṭṭam making. Ko. ma·ṭm (obl. ma·ṭt-) fashion of doing things, action, wonderful thing; ma·ṛ- (ma·ṛy-) to do, act (< Badaga). To. soty mo·ḍ- to swear an oath (< Badaga). Ka. māḍu to do, make, perform, accomplish, cause, effect, prepare, manufacture, construct, build, execute, cultivate as a field; n. doing, making; māḍuvike, māḍuha doing, making, etc.; māḍisu to cause to make, do, perform, build, etc.; māṭa making, doing, work, business, performance, undertaking, manner, way, state of being nicely made, well-finished state, handsomeness, beauty, elegance; mār̤ =māḍu vb.mār̤ke doing, business, manner. Koḍ. ma·ḍ- (ma·ḍi-) to do; ma·ḍï burned clearing in jungle where grain is grown. Tu. māḍā̆vuni to cultivate as land, display, parade. Te. māḍ(i)ki manner, way, mode. Go. (Ko.) māṛ- to make (Voc. 2804). DED(S) 3931.

மாடுதல் - பண்ணுதல், செய்தல்  தமிழ் எதிர்மறையாக "மாட்டேன்" என்பதைப் புழக்கத்தில் வைத்துள்ளது. அவன் இந்த வேலையைச் செய்யமாட்டான். (எதிர்மறைப் பொருள்). உடன்பாட்டுப் பொருளிலே “கல்சா மாடுதி” எனக் கன்னடத்தில் வருகிறது,  இன்னும் கன்னடத்தில் மாடுதல் என்றால் செய்தல் என்னும் பொருள்தருகிறது.

முன்னின பணிமுறை மாற முந்துவார் (கம்பரா. ஊர் தேடு. 49).
இங்கே, கம்பன் மாறுதல் = செய்தல் என்னும் பொருளைப் பயன்படுத்துகிறார்.

கனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென்
தினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப்
பா மாறியார்க்கு உனைப்போற் பாரத் தனமிருந்தாற்
றாமாறி யாடுவரோ தான் (குமரகுருபரர்)
(பனவனுக்காகப் பா மாறியவர் = தருமிக்காகப் பாடல் செய்தவர் ஆகிய சிவபெருமான்.)

ட்/ற் போலி:
சோமாறு = சோம்பல் மிகச்செய்வது/வெளிக்காட்டுவது
தடுமாறு = தள்ளாடுதல், தள்ளாடல் பண்ணுவது
அலமாறு = அலைதலைச் செய்தல்
இவற்றில் எல்லாம் -மாறு < -மாடு 'to do' தொடர்புடையன.

அதேபோல், பறை தானியத்தில் படிந்து அளக்கும் அளவைக்கருவி. அதை நம் முன்னோர்கள் தாளக்கருவி ஆக்கினர்.

Often, the alveolar ṯ is realized as ṭ and ṟ. For example, (1) paṟai/paṭi "frame drum/grain measure" (2) paṭapaṭa/paṟapaṟa ideophone from which paṟa- "to fly", hence paṟavai 'bird'. maaṭu-/maaṟu- pair of verbs in Tamil and Kannada languages seems to contain alveolar ṯ  also. In many instances [1], the word-initial m- is lost, and consider the pair, aaṭu-/aaṟu- vs. maaṭu-/maaṟu-.

நா. கணேசன்

[1] Examples of word-initial m- loss in Dravidian:
முள்ளம்:உள்ளம் மீன் (Indian Salmon fish, Hilsa)

கல்பட்டு நடராசன் அவர்கள் அமெரிக்க சாமன் (Salmon) மீன்
பற்றி விரிவாக எழுதி தமிழில் அறிமுகப்படுத்தி உள்ளார்.
இது நன்னீரில் பிறந்து, கடலின் உப்புநீரில் வாழ்ந்து, நன்னீருக்கு
மீண்டும்வந்து முட்டையிடும் மீன்வகை. இந்தியாவிலும்,
கங்கை நதியில் இந்திய சால்மன் மீன்கள் உண்டு. வங்காளியர்
அதன் சுவைக்காக மிக விரும்பி உண்ணும் மீன் இது.
இந்தியா முழுதும் உள்ள த்ராவிட/தமிழ்ப் பெயர் இந்த ஸால்மன்
மீனுக்கு இருப்பதை இங்கே ஆராய்வோம்.

தமிழ்ச் சொற்களில் முதலாக உள்ள ம்-
தமிழில் பல சொற்களிலே ம்- முதலில் வரும், பின்னர்
அந்த ம் அழிபட்டுச் சொற்கள் உருவாவது வழமை.
சில உதாரணங்கள்:
(1) மலர் > அலர்
(2) மாமரம் > ஆமர > ஆம்ர (வடமொழிகளில் தமிழ்ச்சொல்)
(3)  முழ்-/முட்டை/முண்ட > மண்டை > அண்ட ‘egg'; 
(இன்னும் வேதத்தில் அண்டம் என்ற சொல்வேர் தேடிக்கொண்டுளர்!)
(4) முன்னு-தல்  > உன்னு-தல்
(5) மோய்தல்:ஓய்தல்
(6) மோடு(முகடு) > ஓடு,  
(7) மிழ்-/மிண்டு/மிடுக்கு > மேழம் (மிழ்- மிஷ்- என வடசொல் ஆகிறது
மிஷதி - ஆட்டுக் கிடாக்கள் மிண்டுதல், சண்டையிடல்)
மேழகம் > ஏழகம் (சிலப்பதிகாரத்தில்).
(8) மூழ்கம் > ஊழ்கம் (= தியானம்)
(9) மடுத்தல் =  தீ மூட்டுதல் To kindle; 
கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).
மடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.
மடுப்பு  > அடுப்பு
(10) முத்தி > உத்தி
...
இன்னும் பல. உங்களுக்கு தெரிந்த காட்டுகள் தரலாம்.

முள் என்ற சொல்லே ”உள்” என சொன்முதல் ம் இழந்து, பின்னர்
“உல்” என்றாகியது. முள்- “sharp edge". இது தச்சரின்
இழைப்புளி போன்றவற்றில் வரும் உளி (< முளி).
எனவே, முள் > உள்/உல் 
உல் ul , n. (J.) 1. Sharp stick or iron to peel coconuts; தேங்காயுரிக்குங் கருவி. 2. Impaling stake; கழு.
உல்லியம் [ ulliyam ] கிணறு.  முள் (> உள்/உல்) போன்ற கூர்நுனி கொண்ட ஆயுதங்களால் தோண்டும் கூவல். (கூ(ர்) ஆயுதங்களால் தோண்டுவது கூ+அம் = கூவல்/ம்).
உல்லியர் [ ulliyar ] கூவநூலோர். (water diviners)
உல்லுகம் [ ullukam ] கொள்ளி.
(நா. கதிரைவேற்பிள்ளை அகராதி)

முள்ளல்:உள்ளல் மீன் (Hilsa):

வங்காளிகள் முள்ளம்/உள்ளம் மீனை மச்சராஜா
என மீன்களின்மன்னன் எனக் கொண்டாடுகின்றனர்.
அதன் ஊன் மிகச் சுவையாக இருப்பதால், வசந்த 
நவராத்திரி என்று ஏப்ரல் மாதம் வரும் திருவிழாவில்
உள்ளம் என்னும் மீன்கள் இரண்டைப் படையலாக
சரசுவதிக்கு வைத்து வழிபட்டு எல்லா ஜாதியினரும்
 உண்கின்றனர். முட்கள் நிறைந்த மீன் உள்ளம்/உல்லம் ஆகும்.
முள்களில் இருந்து ஊனைப் பிரித்துண்ண நல்ல பயிற்சி வேண்டும்.
உள்ளம் என்ற பெயர் முள்ளம் என்ற ஆதிப்பெயரில் இருந்து பெற்றது 
என்பது வெள்ளிடைமலை. முள்கள் நிறைந்த முள்ளம் > உள்ளம்/உல்லம்
என்ற மீனைப் பற்றி மேலும் அறிய:



MTL:
உள்ளம் = 1. Hilsa, silvery shot with gold and purple, Clupea ilisha; உல்லம். 2. A sea-fish, silvery shot with yellow and purple, Clupea toli; உல்ல மீன்வகை.

உல்லம் ullam, n. cf. உள்ளல். [T. ullāku.] 1. Hilsa, silvery shot with gold and purple, Clupea ilisha; மீன்வகை. உள்ளத்தை விற்று உல்லத்தைக் கொள். 2. A sea-fish, silvery shot with yellow and purple, Clupea toli; கடல்மீன்வகை.

Obviously, this "uLLam" (hilsa fish) has nothing to do with "heart, mind". Sometimes, this fish is called uLLal as MTL records. 

“Deboning a hilsa is one of the most challenging tasks because in all other fish, there is only one central bone and other side bones. There is really nothing between the flesh. In a hilsa, there are bones in the flesh itself. It takes a lot of time to master the removal,” explains Rupam Banik, executive chef, The Peerless Inn.

"They are also caught in the sea, but some consider the marine stage of the fish as not so tasty. The fish has very sharp and tough bones, making it problematic to eat for some."

"The Hilsa is full of tiny bones which require trained eaters/hands to handle."

James Hornell, Fishing in many waters:
See how a fisherman in Kaveri floats and spreads a net to catch uLLal fish.
Hilsa is fund in Godavari, Kavaeri, Indus, Ganges, ... in Indian subcontinent.

Given all these, I suggest that, like many examples with m-, muLLam/uLLam (or) muLLal/uLLal is the name of hilsa fish in Tamil where m- is lost over time.

M. Winslow:
உல்லம், [ ullam, ] s. The sable fish, shad, ஓர்மீன். (c.) உள்ளத்தை விற்று உல்லத்தைக் கொள். Sell what you have and buy sable fish. [prov.]
உல்லங்கருவாடு, s. The salted sable fish.
கடலுல்லம், s. A kind of sable fish.
ஆற்றுல்லம், s. Another kind of the same.

Hobson-Jobson dictionary:
HILSA , s. Hind. hilsā, Skt. ilīśa, illiśa; a rich and savoury fish of the shad kind (Clupea ilisha, Day), called in books the 'sable-fish' (a name, from the Port. savel, quite obsolete in India) and on the Indus pulla (palla). The large shad which of late has been commonly sold by London fishmongers in the beginning of summer, is very near the hilsa, but not so rich. The hilsa is a sea-fish, ascending the river to spawn, and is taken as high as Delhi on the Jumna, as high as Mandalay on the Irawadi (Day). It is also taken in the Guzerat rivers, though not in the short and shallow streams of the Concan, nor in the Deccan rivers, from which it seems to be excluded by the rocky obstructions. It is the special fish of Sind under the name pulla or palla, and monopolizes the name of fish, just as salmon does on the Scotch rivers (Dr. Macdonald's Acct. of Bombay Fisheries, 1883).
[...]
1810. -- "The hilsah (or sable-fish) seems to be midway between a mackerel and a salmon." -- Williamson, V. M. ii. 154-5.

1813. -- Forbes calls it the sable or salmon-fish, and says "it a little resembles the European fish (salmon) from which it is named." -- Or. Mem. i. 53; [2nd ed. i. 36].

----------------

It is interesting that "pulai/pulavu" a word used for meat, stench, blood etc., in Dravidian languages is the name of the fish in Indus and also in Andhra.
Telugus call the muLLam/uLLam 'hilsa' as pulasa/polasa fish. In Sind, it is pulla or palla fish, while in Gujarat it is palva or pulva which is obviously from Dravidian pulavu/pulai (DEDR 4552; see also DEDR 4547)
4552 Ta. pulai animal food, stench; pulaicu raw meat; pulavu, pulāl flesh, raw meat, fish, smell of flesh or fish; pulavu (pulavi-) to smell raw flesh; pulaval smell of flesh or fish. Tu. poralů, poraḷů fishy smell; (B-K.) purāḷů bad smell as of a boil. Te. pola, polasu flesh, smell of flesh. / Cf. Skt. pala-, palala- flesh, meat. DED 3718.

Often, -u in first syllable changes to -i in spoken languages. For example,
pul "grass" becomes "pil" in spoken Tamil (புல்லு > பில்லு ‘grass' in ST). Similarly, muLisai/uLisai "the fish with many sharp bones = hilsa" has changed to iLisa in Bengali language. 

In many instances, a word-initial h- is added in North India.
For example, Tamil ERu 'male of buffalo' is Heruka in Buddhism (Bihar).
uuLi festival of Sangam is huuLi/hOli in North. aalatti > haarati.
appaLam > happaLam, erumai/emme > heramba 'buffalo' etc.,
Words of negation, like Tamil's alla and illai has also a h- added in
the from in North Dravidian. See:
iLisa, with an addition of h- word-initially, becomes hilisa or hilsa in Hindi.

In sum, "hilsa" one of the tastiest fishes of Indian rivers has Dravidian names all over Indian subcontinent.

N. Ganesan

புஷ்ஷுக்குத் தொடுதோலால் அடி

புஷ்ஷின் மீது தொடுப்பை வீசிய செய்தி பார்த்திருப்பீர்கள்.



(1) வெள்ளையர் தம்மேல் செருப்பை வீசினாலோ அடித்தாலோ அவமானத்தை உண்டுபண்ணச் செய்யும் செயல் என்றறியார். இவையெல்லாம் மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் 4000+ ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மரபுகள்.

(2) வலதுகையால் வாழ்த்துவது - சுமேரிய, மெசோபோடொமிய 4000 வருடச் சிற்பங்களில் காணவியலும். சோற்றாங்கை, பீச்சாங்கை வேறுபாடு வெள்ளையருக்கில்லை. அதனால் தான், வாமாசார வழிபாடு என்றால் இடப்பக்க வழிபாடு, அப்பிரதட்சிணம், பஞ்ச மகர உபயோகம் போன்றன.

பௌத்தத்திலும், தாந்திரீக வழிபாடுகளிலும் இடப்பக்க நடைமுறைகள் உண்டு. அவர்களின் தேவதை இடாகினி. சிலம்பில் இடாகினி வரும். இடாகினி ஒரிஸா போன்ற ஊர்களில் சொல்முதல் இகரம் கெட்டு "டாகினி" என்றாகும். .Daakini is important female wrathful deity in Tantra and Buddhism. இடாகினி திராவிட "இடம்" (left) என்ற தேற்றத்தை
விளக்கி நிறுவுதல் வேண்டும். இன்னும் யாரும் செய்யாதது.

(3) மேலைநாட்டாருக்கு "நாய்" என்றால் இழிவு என்ற கோட்பாடும் இல்லை. நாயேன் என்று திருமுறை, நாலாயிரம் இவற்றில் வரும் வண்ணனைகளை ஓர்க. "நாயே" என்றால் திட்டுகிறான் என்றறியார்.

இன்ன பிற.

நா. கணேசன்

சங்கிலி அரசனின் வீணைக்கொடி

யாழ்ப்பாணம் ஊரின் பெயர், அதற்கான பழங்கதைகளை ஆய்ந்து வருகிறேன். விக்கிப்பீடியா போன்றவற்றில் யாழ்ப்பாணப் பெயர் பற்றிய நல்ல உசாத்துணைகளைக் காணோம்.

17-ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் பாடல் ஒன்றை வைத்துச் சொல்லும் கதை மிகப் பிற்காலத்தது. வெள்ளைக்காரர்கள் அச்சு எந்திரத்தைக் கொடுத்ததும், மிஷனரிமார்களிடம் சொன்ன புனைகதை அதாகும். வீரராகவரின் நாடு சென்னையை உள்ளடக்கிய தொண்டைமண்டலம். திருவள்ளூர் வாழும் வீரராகவப் பெருமாளின் பெயரை அவருக்குப் பெற்றோர் இட்டனர்.

அந்தகக் கவியின் பாடல் இதுதான். அதில் யானையைப் பரிசாகப் பெற்றதாகத் தான் வருகிறது.
http://www.aaraamthinai.com/ilakkiyam/siruvarilakkiyam/feb02siruvar.asp

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன் ''பூசும்'' என்றாள்
மாதங்கம் என்றேன் ''யாம் வாழ்ந்தோம்'' என்றாள்
பம்புசீர் வேழம் என்றேன் ''தின்னும்'' என்றாள்
பகடு என்றேன் ''உழும்'' என்றாள் பழனந்தன்னை
கம்பமா என்றேன் ''நல் களியாம்'' என்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.

மேலும் 2500 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் ஈழத்தில் வதிகிறார்கள். எனவே யாழ்ப்பாணம் எனும் பேர் 17-ஆம் நூற்றாண்டுப் பெயர் என்பது தொல்லியற் சான்றுகளுக்குப் பொருந்தாக் கட்டுக்கதை என்பது தெளிவு.

யாழ்ப்பாணம் என்ற பெயரை ராவணன், சிவ பக்தன், யாழ் மீட்டியது என்ற தொன்மக் கதையுடன் தொடர்புபடுத்துவதும் உண்டு.

For example, see
"The current account of the founding of Jaffna is purely mythical, whether we regard the tale of the blind lutist, or the still more legendary story of Siva, Susangita and the lute of Ravana. " (Sinhalese Place Names in the Jaffna Peninsula By B. Horsburgh, C.C.S.THE CEYLON ANTIQUARY [VOL. II, Part 1] July, 1916 ).

திருக்கேதீச்சரத்தைப் பற்றிக் குறிக்கையில் இராவணன் ஆட்சி, அவனது வீணைக்கொடி பற்றிய தமிழ்ச்சைவக் குறிப்புகளுண்டு [1]. பாளி இலக்கியமான ராஜாவளியில் யாழ்நகர் அருகே இராவணன் இருந்ததைக் கூறுகிறது. Ancient Jaffna By C. Rasanayagam, pg. 9,
"the gods who presided over the destinies of Ceylon became enraged and caused the sea to deluge the land. Once before during the epoch called 'Duvapara yuga' on acoount of the wickedness of Ravana, the whole space from Mannar to Tutucorin in which were the fortress of Ravana with 25 palaces and 40000 streets were swallowed by the sea. So now, in this time of Tissa Raja, king of Calany, 100,000 large towns of the description called Pattunagam (paTTanam), ..."

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம், 1912 (2001 மறுபதிப்பு: க. குணராசா) நூலகம்.நெட் தளத்தில் கிடைக்கிறது. பக். 14,
"யாழ் கொடி: யாழ்பாடியுடைய கொடி யாழைக் கையிலேந்திய சயமகட் கொடி. அது மிதுனக் கொடியெனவும் படும். அதுவே சங்கிலியரசன் இறுதியாகவுள்ள யாழ்ப்பாணத்து அரசரெல்லாம் கொண்ட கொடியாம். யாழ்ப்பாடி சாதியிலே தொண்டை மண்டலத்துயர்குடிச் சைவ வேளாண்முதலி யாழ்ப்பாடியினது திருவுருவச் சிலையைப் [*] பின்வந்த அரசர் தமது கோட்டை வாயிலிலே போற்றி வந்தனர்.

[*] யாழ்ப்பாடி திருவுருவச் சிலையொன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல ஸ்தானத்தில் அமைத்து வைத்தல் நம்மவர் கடனாம்."

மிதுனக்கொடி: கின்னரியாகிய மகரயாழ் அமைந்த கொடி. ஆண் பெண் கின்னர மிதுனங்கள்
இசைப்பது மகரயாழ் (கம்பன்). காமனுக்குக் கொடி மகர மீனாம். செயமகள் = துர்க்கை.

ஈழத்தில் வெற்றி அடைந்தபின்னர் புலிக்கொடி நாட்டிற்கு. யாழ் நகருக்கு மகரயாழ் கொடி சிறப்பு. நானும் ஆய்வுரை நிகழ்த்த ஈழநாட்டுப் பல்கலைக் கழகம் அன்றுச் செல்வேன்.
விரைவில் தமிழ் வடமொழி சான்றுகளைக் கட்டுரை யாத்துத் தருவேன். கவியரசர் கண்ணதாசன் 1970களிலே தீர்க்கதரிசனமாகப் பாடினார்:

குன்றத்தில் உச்சி யேறிக்
கொடும்புலி பாம்பு கொன்று
அன்றந்த இலங்கை நாட்டை
ஆக்கினான் உனது பாட்டன்
இன்றந்த நாட்டில் நீயும்
என் தமிழ்த் தோழர் தாமும்
நன்றிகொள் நாடாள்வோ ராலே
நலிவுற நேர்ந்த தென்றால்

என்னயான் சொல்வேன்? வாழும்
இருபது இலட்சம் பேரும்
என்னவர்! எனது மூச்சு!
இழைபிரித் தெடுத்த பாகம்!
அன்னமே வருந்த வேண்டாம்
அழிவது தமிழே என்று
சொன்னவர் அழியுமாறு
துவக்குக போரை! வெல்வோம்!

குருதியே ஓடி னாலும்
கடல்நிலம் சிதைந்த போதும்
பரிதியில் மாலை வண்ணம்
படைத்தது மண்ணென் றாலும்
வருதுயர் தமிழர்க் கென்றே
'வாழிய' பாடல் பாடி
உறுதியில் இறங்கு! வெற்றி
உனக்கிது! இயற்கை வேதம்!

மொழியின்றி விழிகளில்லை
மூச்சில்லை பேச்சு மில்லை!
கழிசடை உடைமை யாளர்
கருவிலே கயமை தோய்ந்தோர்
இழிமொழி வீசினாலும்
எடுபிடி வேலை செய்து
அழிவுனக் கீந்த போதும்
அஞ்சிடேல் பண்பு குன்றேல்!

நாமெல்லாம் தமிழ் மக்கள்
நமக்குநாம் பாதுகாப்பு!
நாமெல்லாம் அழிவ தால்ஓர்
நாட்டினர் வாழ்வாரென்றால்
நாமெல்லாம் வாழ்வதற்கந்
நாட்டினர் அழிதல் நீதி!
நாமெல்லாம் அழிந்து எந்த
நாடிங்கு வாழும்! பார்ப்போம்!

தமிழர்கள் கெடுவ தொன்றே
தரணியில் முறையா? தூய
அமிழ்தொழித் தரக்கர் கூட்டம்
ஆள்வது சரியா? இல்லை!
தமிழுக்கும் தமிழருக்கும்
தடைபோடும் வெறியர் தம்மை
இமைவேறு கண்கள் வேறாய்
இருநூறு துண்டங் காண்போம்!

ஆ. முத்துத்தம்பியவர்கள் 1912-ல் குறிப்பிடும்,யாழ்ப்பாணச் சங்கிலி மன்னன், அவன் முன்னோரின் யாழ்க் கொடியின் பழைய (அ) 20-ஆம் நூற்றாண்டுப் படங்கள் (யாழ் அரசர்கள் பற்றிய ஏதாவது புத்தகங்களில் கிடக்கும்) தரமுடியுமா?

நன்றி!
நா. கணேசன்

[1] சிவராத்திரி தினத்தில் திருக்கேதீச்சரம் சிவலோகமாகிடும்:
http://74.125.95.132/search?q=cache:KUnRvCJL5f8J:www.forum.vettimani.com/forum/viewtopic.php%3Fp%3D1134+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF&hl=en&ct=clnk&cd=9&gl=us
ஈழத் திருநாட்டில் பாடல்பெற்ற தலங்களில் திருக்கேதீச்சரமும் ஒன்றாகும். இவ்வாலயம் மிகப் பழமையானது, என்பதைத் திருஞான சம்மந்தர் தேவாரமும் சுந்தரர் தேவாரமும் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. திருஞான சம்மந்தர் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டாகும். திருக்கேதீச்சரம் வேத காலத்திற்கு முந்தியது என்பதை இராகு, கேது, வரலாறுகள் மூலம் அறியக் கிடக்கின்றது. மோட்சத்தையும்,பேரின்பத்தையும், தருவது மண்ணுலக சிவவழிபாடாகும், என்பதனைத் திருவாதவூரடிகள் அருளிய 'புவனியிற் போய்ப் பிறவாமை நாள் நாம் போக்குகின்றோம் அவமே" என்ற அடிகள் மூலம் அறியக் கிடைக்கிறது. திருக்கேதீச்சரம் இராவணன் காலத்திலும், சோழர் காலத்திலும், வழிபாட்டுத் தலமாக இருந்தது. இராவணனின் ஆட்சிப்பீடக் காலத்தில் மாந்தை தலைநகரமாக இருந்தது. வீணைக்கொடி பறந்தது. திருக்கேதீச்சரம் பல வீதிகள் கோபுரங்கள் உடைய மூர்த்தி தலம், தீர்த்தம் உடையதாக இருந்தது. சோழர் காலத்தில் மாந்தை புகழ்பெற்ற தலமாகக் காணப்பட்டது. புலிக்கொடி பறந்தது. கடல் கடந்து அரேபியர் போன்ற வணிகர்கள் முத்து, நெல், இரத்தினம், மற்றும் நெடுந்தீவுக் குதிரைகள் பெறுவதற்காக வந்தனர். இதனால் மாந்தை இந்தியாவின் திருப்பெரும்துறையோ என்று கணிக்கும்படி மாந்தைத் துறைமுகம் காணப்பட்டது. காலங்கள் உருண்டோடின, அந்நியரின் பார்வை இலங்கை எழிலிலும், வருமானத்திலும் மயங்கி இலங்கையை தம் ஆட்சிக் குட்படுத்திய காலத்தில் 17ஆம், 18ஆம் நூற்றாண்டளவில் சைவசமய ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டபோது திருக்கேதீச்சரமும் முற்றாக அழிக்கப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், தவத்திரு சிவயோக சுவாமிகளின் ஆசியும், வாழ்த்தும், 1954 ஆம் ஆண்டுகளில் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டது. மகாசிவராத்திரி தினம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது. சிவராத்திரி சிவனுக்குரியது. மாசிமாத அமாவாசைத் தினத்தன்று பஞ்சாட்ச்சரமாகிய திருவைந்தெழுத்து ஓதி ஆகம ஆசாரத்துடன் திருக்கேதீச்சரத்தில் கண்விழிக்க இலங்கையின் மூலை முடுக்குகளில் உள்ளவர்கள் எல்லாம் பேரூந்துகளில் வந்து சேர்வார்கள். சிவராத்திரி தினம் திருக்கேதீச்சரம் சிவலோகத்தைவிட விஞ்சிக் காணப்படும். 1991 முதல் 2002 வரை துயர்மிக்க காலமாகத் திகழ்ந்தது. 2002மீண்டும் சிவராத்திரி தினம் அனுட்டிக்கப்பட்டது. இப்போ மீண்டும் துயரம். இத்துயரம் அகல சிவராத்திரி தினத்தில் மேன்மைகொள் சைவ நீதி விளங்க வழி படுவோம்.

தொல்லியல் நிபுணர் எஸ். ராமச்சந்திரன் கூறுவதைப் பார்ப்போம்:
http://www.sishri.org/ramar.html
"புலஸ்திய ரிஷி கோத்திரத்தைச் சேர்ந்த இராவணன் வீணை இசைப்பதில் தேர்ந்த ஞானம் உடையவன் என்றும் அவனது கொடியில் வீணைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் இராமாயணத்தினால் தெரியவருகிறது. 'சாம கானப் பிரியன்' எனப்பட்ட இராவணன் சாம வேதத்தின் இசை நுட்பங்களைக் கற்றறிந்திருந்த வைதிகனாவான். தவிரவும் கம்பன் இராவணனைக் குறிக்க 'ஆரிய' எனும் சொல்லையே பயன்படுத்துகிறான். கும்பகர்ணன் போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் இராவணனின் காலைத் தொட்டு வணங்கி "ஆரியனே! விடைபெறுகிறேன்" என்று சொல்வதாகக் கம்பன் குறிப்பிடுகிறான். (கும்பகர்ணன் வதைப்படலம், பா. 98.)

இராவணனுக்கும் அகஸ்தியருக்கும் வீணை இசைப்பதில் போட்டி நிகழ்ந்துள்ளதாயும் அந்தப் போட்டியில் இராவணன் தோற்றுவிட்டதால் அவன் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றுவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் இக்கதையைக் குறிப்பிட்டுள்ளார். இக்கதை முழுமையான கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால், இக்கதையிலிருந்து நாம் பெறக்கூடிய ஒரு செய்தியுண்டு. தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் செய்தவராகக் கருதப்படுபவர் அகஸ்தியர் ஆவார். அகஸ்தியரின் இசை மரபும் இராவணன் அல்லது புலஸ்தியரின் இசைமரபும் தம்முள் முரண்பட்டும், மோதியும், ஊடுருவியும், ஒன்றுபட்டும், ஒன்றையொன்று பாதித்தும் வளர்ந்த மரபுகளாகும்."

யாழ்ப்பாணம் பேரும் சிவபக்தன் ராவணன் யாழ்மீட்டியதும்

நண்பர்களே,

யாழ்ப்பாணம் என்ற பெயரை ராவணன், சிவ பக்தன், யாழ் மீட்டியது என்ற தொன்மக் கதையுடன் தொடர்புபடுத்தி ஏதாவது புத்தகம், கட்டுரையில் நீங்கள் படித்ததுண்டா?

நா.கணேசன்

Is there any Tamil version of a myth explaining the name, YaazhppaaNam with RaavaNan playing his lute & singing music to Siva. And because Lanka is the land of Ravana, yaazhpaaNam comes from this myth.

For example, see
"The current account of the founding of Jaffna is purely mythical, whether we regard the tale of the blind lutist, or the still more legendary story of Siva, Susangita and the lute of Ravana. " (SINHALESE PLACE NAMES IN THE JAFFNA PENINSULA By B. Horsburgh, C.C.S.THE CEYLON ANTIQUARY [VOL. II, Part 1] July, 1916 ).

Many thanks,
N. Ganesan

இந்தப் புத்தாண்டில் என்ன சிந்திக்க?

இந்தப் புத்தாண்டில் என்ன சிந்திக்க?
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்

(1994-ல் ஏப்ரல் புத்தாண்டன்று எழுதிய கவிதை)

எனக்குத் தெரியும் என்றாலும்
எதிர்மாடித் தமிழனைக் கேட்டேன்:
'எப்பொழுது தமிழ்ப் புத்தாண்டு வரும்?'
'எப்போழுதும் தமிழ்ப் புத்தாண்டு
ஏப்ரலில் தப்பாது வரும்' - என்றான்.

'கண்ணீர் வடிக்கும் சித்திரையாளுக்கு
கைக்குட்டை கொண்டு போ' - என்றேன்

எங்கும் இன்பத்தமிழ்
ஒலிக்க வேண்டும்.
ஏமாற்றமா?
இல்லவே இல்லை
என் ஆசைக்கு.

காதார தமிழ் பேச்சைக்
கேட்கின்றேன் கல்லறைகளிலிருந்து.

மறைமலை, திருவிக, பாரதிதாசன்
தனித்தமிழில் இனிக்க உரையாடுகிறார்களே
கேட்கலையா உங்கள் செவிகள்.

ஆனாலும் அன்றைய
தொல்காப்பியன் திரும்பி வந்தான்.
மழலையர் பள்ளியில்
ஆங்கிலம் படித்தான்.
அதிலே தவறி
ஐந்தாம் வகுப்பிலேயே
கல்வியை முடித்தான்.

ஆவலினால் வள்ளுவனும்
திரும்பிவந்தான்.
தமிழில் படிக்க
வாய்ப்பில்லாக் காரணத்தால்
தறிக்குழியில் போய் விழுந்தான்.

இங்கு தமிழ்நாடு
சரியில்லை என்பதால்
பள்ளிகளில் அயல்நாட்டைப்
பயிரிடுகிறோம்
பெற்ற பிள்ளைகளையே
மறு பிரசவம் செய்கிறோம்
ஆங்கிலப் பிள்ளைகளாய்...

கோயில்களில் குருக்கள்
தொப்பை தெய்வத்தை
மறைக்க
மந்திரங்கள் தமிழை
மறைக்கும்.

தமிழ்ப்பால் ஊட்டிய
தாய் உமையாள்
தன் மார்புக்கச்சையை
இறுக்கிக்கொண்டு புட்டியில்
வடமொழிப்பால் புகட்டுகிறாள்.

சம்பந்தன் தமிழ்ச்
சம்பந்தம் இழந்தான்.

நியாயத்தைப் பார்க்க
மாட்டேன் என்று
கண்களைக் கட்டிக்கொண்ட
நியாய தேவதை
காதுகளையும் கட்டிக்கொண்டாள்.
தமிழ் கேட்க மாட்டாளாம்...

தமிழுக்குச் சவப்பெட்டியா
இந்த தொலைக்காட்சிப் பெட்டி?
அலைவரிசையெல்லாம்
வேற்று மொழியின்
கைவரிசை.

தமிழை விற்ற காசில்
வேற்று மொழியில் செய்த
விளம்பரங்கள் கடைத்தெருவில்.

தமிழை விற்றவன்
தகப்பனையும் ஒருநாள்
மலிவுவிலையில் விற்பான்.

தாயை விற்க
ஒருநாள் தாமதிப்பான்.

இந்த புத்தாண்டில்
என்ன சிந்திக்க?
இனி தமிழைப் பரப்ப
எங்கும் இடம் கிடையாது.....
எங்கும் தான் பரப்பிவிட்டோம்.......

இந்தப் புத்தாண்டு முதல்
புதிய நாடுகளை உருவாக்கிப்
பூந்தமிழைப் பரப்புவோம்
அங்கெல்லாம்.....
புகட்டுவோம் அவர்களுக்கெல்லாம்
செந்தமிழை.

-தமிழன்பன்
ஏப்ரல் 14, 1994

தமிழ்நாட்டு அரசுத்தளங்களில் தமிழ்நிலை

இன்று ஒரு வலைப்பூவினைப் படித்தேன்:
http://thamizharpaarvai.blogspot.com/2008/12/blog-post_04.html
அங்கே நான் எழுதிய பின்னூட்டு இதோ.

தமிழ் என்பது அதன் தொன்மையில் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியில்தான் உள்ளது என்று கா. சிவத்தம்பி, நண். பெரி. சந்திரா என்றும் வலியுறுத்துவதுபோலத் தமிழை நவீன கணியுலகிற்கு அழைத்துவந்தாயிற்று. தமிழ்மணம் ( http://tamilmanam.net ) 4000 வலைப்பதிவர்களைக் கொண்டு ஏற்கெனவே இயங்குகிறது. இது 10,000 என்றும் 50,000 என்றும் பதிவர்தொகை பெருகவேணும். பெருநகர்கள், கிராமங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களில் இருந்தும் தமிழ்ச் சங்கங்கள் தழைக்கவேணும். தமிழில் எழுதும் பல பதிவுகள் மொக்கைச்சாமிகளின் படைப்பு என்றாலும், தமிழின் விடியல் கணியுலகில் தான். தமிழில் புது அறிவியலை நுழைக்கவும், தமிழரைச் சினிமா, சிற்றரசியல் (petty politics) வளைகளில் இருந்து கடைத்தேற்றவும் கணினிகள்தாம் துணை. மதறாஸ் மீடியா ஈழச் செய்திகளை வலையுலகம் இன்றேல் இந்தளவுக்குக் கூடத் தமிழகத்தில் அறியத்தராது.

இன்று ஒரு பதிவு பார்த்தேன்:
http://thamizharpaarvai.blogspot.com/2008/12/blog-post_04.html
கருத்தூன்றி வாசிக்கவேண்டிய சிந்தனைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ், தமிழ் என்று அரசியல் பிழைப்பு நடத்தினாலும், ஆக்கபூர்வமான செயல்கள் செய்வதில்லை. வெறும் கட்சிக்கூட்டங்களில் 'தமிழ் வாழ்க' என்று சுலோகன்களால் மட்டுமே தமிழ் வளரப்போவதில்லை. அரசியல், சினிமா, சின்னத்திரை என்ற திரிகோணப் புள்ளிகளால் மட்டுமே தமிழ்நாட்டுத் தமிழர் வாழ்க்கையைக் கட்டிப்போடும் வகையில் வெகுசன ஊடகங்கள் கட்டமைப்புப் பணியில் தீவிரமாக இருக்கின்றன. தமிழ் உணர்வுடையோர் அரசியல் எந்திரத்தைக் கணிப்பக்கம் நகர்த்துதல் தலையாய கடமை, காலத்தின் கட்டாயம்.

வெறும் டிவி, அதில் சினிமா நடிக, நடிகையர் கிசுகிசு என்றால் மட்டும் போதாது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் (Panchayath Union) 10-20 கணித்திரைகள், தமிழில் வலையில் பதிவது, பதிவுகள் ஆரம்பிப்பது எப்படி என்று பயிலரங்குகள், பட்டறைகள் தொடங்கினால் பலருக்கும் தமிழில் எழுத ஊக்கம் வரும், அறியாத சொற்கள், மரபுகள், கிளைமொழியியல், வரலாறுகள், பட்டறிவினால் அன்றாட வாழ்க்கையில் தமிழர் கண்டறிந்த விஞ்ஞானம் போன்றவை பதிக்கப்படும். தமிழர் வாழ்ந்தால் நம்முயிர்த் தமிழ் கணினியில் ஏறினால் நம் தலைமுறைக்குப் பின்னரும் தமிழ்ச் சுடரொளி பட்டொளி வீசும்.

(1) தமிழ்நாட்டின் எல்லாப் பள்ளிகளிலும் ஒரு பாடமாகத் தமிழ் கட்டாயமாக்கப்படல் வேண்டும்.
தென்றல் இதழில் முனைவர் வா. செ. குழந்தைசாமி ஐயா அவர்களின் கருத்துக்கு என்விடை மடல் வெளியானது:
http://nganesan.blogspot.com/2008/05/english-medium-effect-on-tamil.html
தமிழில் நன்கு எழுதுவோர் தொகை கூடணும். இப்போது வலைப்பதிவுகளைப் பார்த்தால் இளைஞர் பலருக்கு ர/ற, ன்/ண் (உ-ம்: பெரும்பாண்மை என்று பலர் எழுதுகின்றனர்!!) வேறுபாடுகள், ஒற்று இலக்கணம் ஒன்றுமே தெரிவதில்லை.

(2) தொலைக்காட்சி மாத்திரமல்ல. எல்லா ஊர், நகர் அலுவலகங்கள், நூல்நிலையங்களில் கணினிகள், வேகமான வலையிணைப்பு வசதி தரப்படவேண்டும். தமிழில் எழுதப் பயிற்சிப் பட்டறைகள் நடத்த அரசு கல்லூரிகள் வார இறுதி நாள்களில் கணினி அரங்குகளைத் தரவேண்டும். தமிழ்மணத்தின் மூலம் பட்டறைகள் நடத்திய துய்ப்பறிவினால் சொல்கிறேன், கணிஞர்கள் நடத்தினால் பொதுமக்கள் நல்ல ஆதரவு தருகிறார்கள்.

(3) இந்நிலைமை மாறவேண்டும்:
http://thamizharpaarvai.blogspot.com/2008/12/blog-post_04.html

முதலில் இதற்கு வசதியாக தமிழ் தனக்காக வகுத்துக்கொண்ட தமிழ்99 விசைப்பலகை உபயோகத்தில் பெருகவேண்டும். தமிழ்99 ஒட்டிகளை விசைப்பலகைகளில் ஒட்டச் சொந்தப் பணம், நேரம் செலவு செய்து ஆர்வலர்கள் தயாரித்துள்ளார்கள். அந்த விசைப்பலகை ஒட்டிகளை யாருக்கு வேண்டுமானாலும் அமெரிக்கா, கனடா அனுப்பித்தர நான் பொறுப்பேற்றுள்ளேன். தமிழ்நாடு அரசு தமிழ்99 விசைப்பலகைகளைத் தயாரித்துப் பரவலாக்கணும். கீபோர்ட் செய்யும் நிறுவனங்களுக்கு நிதியுதவி கொடுத்து தமிழ்99 விசைப்பலகைகள் இப்போது விற்கும் விலையில் 50% அல்லது 75% தள்ளுபடி செய்து விற்றுத் தமிழ் தட்டச்சைப் பெருக்கவேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு காலப்போக்கில் தமிழ் டைப்ரைட்டர் முறை தீங்குதரும், அது காலாவதி ஆகி ஒழியவேண்டும். தமிழ்99 விசைப்பலகைகள் அரசு கொடுக்கும் நிதியுதவியால் பரவலாக்கப்படல் மிக அவசியமான தேவை. தமிழ்99 விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது. அதேபோல முக்கியத் தேவை தமிழின் உ/ஊ உயிர்மெய்களின் சீர்மை. அதனை அடுத்துப் பார்ப்போம்.

(4) தமிழறிஞர் பலருக்கும் மிகவும் பிடித்த பணித்திட்டம் தமிழ் எழுத்துச் சீரமைப்பு. அதை எளிதில் இன்று நடைமுறைப்படுத்தும் வழி கணினிகளால் கிடைத்திருக்கிறது. இன்று வா.செ.கு. எழுத்துரு என்றே சீர்மை font இருக்கிறது. அதை வைத்துக்கொண்டால் இ-மெயில்கள், வலைப்பக்கங்கள் எல்லாவற்றையும் உ/ஊ உயிர்மெய்களை உடைத்துப் படிக்க மிக வசதியாக இருக்கிறது. திரு. எம்ஜிஆர் தமிழுக்குச் செய்த பெருங்கொடை பழைய றா, ணா, ளை, ... என்ற 12 எழுத்துக்களைச் சீர்மையாளர் பரிந்துரையின்பேரில் அரசாணையாக்கியது. அப்பொழுதும் சிலர் பூச்சாண்டி காட்டத்தான் செய்தனர், ஆனால் எம்ஜியார் எழு்த்தால் தமிழ் எளிமையாகி வளர்ந்துதானே இருக்கிறது. அதன் தாக்கம் பல நூற்றாண்டுகள் இருக்கும். தமிழை எளியோருக்கும், குழந்தைகளுக்கும் கற்பிப்பதில், எழுதவைப்பதில் எம்ஜிஆர் எழுத்துச் சிறந்தது என்று அனைவரும் ஒப்புகின்றனர். மாற்றுக் கருத்தில்லை. அதுபோல், காலம் கனியும்போழ்து உ/ஊ உயிர்மெய்களைப் பிரித்தும் எழுதலாம் என்ற அரசாணை பெறவேண்டும். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வகையினானே" என்று கொங்குநாட்டுத் தோன்றல் பவணந்தி முனி சூத்திரம் தந்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்தை எளிமைப்படுத்த உ/ஊ உயிர்மெய்களைப் பிரித்துப் படியுங்கள் (உங்கள் உலாவிக்கு எழுதுரு வேண்டுமென்றால் என்னை அணுகுக.) ஆனால், தமிழ் கற்பித்தலுக்கு எளிதாக, உ/ஊ உயிமெய்கள் உடைத்து எழுதப்படல் அவசியம். அப்பொழுதுதான் தமிழ் உயிர்மெய்கள் ஒரு பூரணமான விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது என்று காட்ட முடியும். உ/ஊ உயிர்மெய்களை உடைத்தெழுதக் கிரந்தக் குறியீடோ, வாசெகு பரிந்துரையோ, வேறொரு அழகான வடிவோ வரட்டும், அதை அறிஞர் குழு முடிவெடுக்கட்டும். ஆனால், மலையாளம் போலத் தமிழிலும் உ/ஊ ஏறிய உயிர்மெய்கள் உடைத்து விரும்புவோர் எழுதலாம் என்ற அரசாணையை டாக்டர் வாசெகு போன்றோர் பெற்றுத் தந்தால் அதற்காக வடிவுடைய 50 சீர்மை எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாகத் தமிழருக்கு வழங்க நாங்கள் தயாராய் இருக்கிறோம். இயங்கு எழுத்துருக்கள் (dynamic fonts) மூலம் சீர்மை எழுத்துருக்களால் உ/ஊ உயிர்மெய்களைத் தனியாகக் காட்டும் வசதியும் வலைத்திரட்டி தர எண்ணியுள்ளேன். கணினியில் சீர்மை எழுத்தில் வலைப்பதியலாம், படிக்கலாம், சீர்மையில் இயங்கும் திரட்டிகள் உள்ளன என்ற நிலையை பட்டி தொட்டிகளில் உருவாக்க வேண்டும். இம்முயற்சிக்கு உதவ விரும்பும் கணிப்பொறியாளர்கள் என்னைத் தொடர்புகொள்ளவும். கிவாஜ, பெரியார் என்று பல பெரியவர்கள் பரிந்துரைத்த உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையை நடைமுறையில் பரவலாக்க சீர்மை எழுத்துருக்களும், திரட்டிகளும் உதவும். அடுத்த தலைமுறை சீர்மை முறையில் உ/ஊ உயிர்மெய்களைப் படித்தால் தானாகப் பழகிவிடும்.

தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:



































































































































































































































































































































































க் கா கி கீ க‍ృ க‌ூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ங‍ృ ங‌ூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ ச‍ృ ச‌ூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞ‍ృ ஞ‌ூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ ட‍ృ ட‌ூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ண‍ృ ண‌ூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ த‍ృ த‌ூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ ந‍ృ ந‌ூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ ப‍ృ ப‌ூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ ம‍ృ ம‌ூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ ய‍ృ ய‌ூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ர‍ృ ர‌ூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ ல‍ృ ல‌ூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வ‍ృ வ‌ூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழ‍ృ ழ‌ூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ள‍ృ ள‌ூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ ற‍ృ ற‌ூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ ன‍ృ ன‌ூ னெ னே னை னொ னோ னௌ
ஜ் ஜா ஜி ஜீ ஜ‍ృ ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷா ஷி ஷீ ஷ‍ృ ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸா ஸி ஸீ ஸ‍ృ ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹா ஹி ஹி ஹ‍ృ ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ


[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]

சீர்மை வடிவத் தமிழ்:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

கோயம்ப‍ృத்த‌ூர்: ஒர‍ృ விளக்கம்
கவிஞர் கண்ணதாசன்

கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை ம‍ృழ‍ృவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திர‍ృக்கோவை ந‌ூலொன் ற‍ృண்ட‍ృ
திறமான கவிதொக‍ృத்த கோவை ய‍ృண்ட‍ృ
இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் ப‍ృத்த‌ூர் என்றேன் படைத்தார்!
என்கர‍ృத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இத‍ృதவறென் ற‍ృரைத்தால‍ృம் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாட‍ృம் வஞ்சி நாட்டின்
மன்னர‍ృக்க‍ృ மக்களென இர‍ృவர் வந்தார்
செஞ்சரத்த‍ృ வில்லவனாய் வடபாற் சென்ற
செங்க‍ృட்ட‍ృவன் ஒர‍ృவன்! தமிழெட‍ృத்த‍ృ
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அட‍ృத்தொர‍ృவன்! இவ்விர‍ృவர் க‍ృறிப்ப‍ృம் பார்த்த‍ృ
பிஞ்ச‍ృமகன் அரசாவான் என்ற‍ృரைத்தான்
பேதையொர‍ృ வேதாந்தி! அதனைக் கேட்ட‍ృ
ம‍ృன்னவனே நாடாள வேண்ட‍ృமென்ற‍ృ
ம‍ృடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் க‍ృடிலமைத்தான்!
தனியாகச் சாத்தன‍ృடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த ப‍ృத்த‌ூர்
அங்கோவன் ப‍ృத்த‌ூராய்ப் பேரெட‍ృத்த‍ృ
இந்நாளில் கோயம் ப‍ృத்த‌ூ ராயிற்ற‍ృ!
இயல்பான உர‍ృமாற்றம் சரிதச் சான்ற‍ృ!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்த‍ృ
நெளிந்த‍ృவர‍ృம் தென்றலினை வளையவிட்ட‍ృப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினைய‍ృம் அன்பினைய‍ృம் த‍ృணைவர் ஆக்கி
வாழ‍ృங்கள் எனவிட்டாள் தமிழ் ம‌ூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
ச‌ூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
ச‍ృவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏன‍ృங்க! என்னவ‍ృங்க! ஆமா ம‍ృங்க!
இர‍ృக்க‍ృங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மான‍ృங்க! வேண‍ృங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழம‍ృம் இர‍ృக்க‍ృங்க! எட‍ృத்த‍ృக்கோங்க!
தேன‍ృங்க! கையெட‍ృங்க! சாப்பிட‍ృங்க!
திர‍ృப்ப‌ூர‍ృ நெய்ய‍ృங்க! ச‍ృத்த ம‍ృங்க!
ஏன‍ృங்க! எழ‍ృந்தீங்க! உக்கார‍ృங்க!
ஏ, பையா! பாயசம் எட‍ృத்த‍ృப் போட‍ృ!
அப்பப்பா! கோவையிலே விர‍ృந்த‍ృ வந்தால்
ஆற‍ృநாள் பசிவேண்ட‍ృம்! வயிற‍ృம் வேண்ட‍ృம்!
தப்பப்பா! கோவைக்க‍ృ வரக்க‌ூடாத‍ృ!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவர‍ృக்க‍ృ வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொட‍ృத்தவரை பாட‍ృவ தெம்க‍ృல வழக்கம்
கொடைக்கெனவே படையெட‍ృத்தோர் ப‍ృலவர் பல்லோர்
இனித்தச‍ృவைப் பழங்கொட‍ృத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்த‍ృத் தேன‍ృம் வைத்த‍ృத்
தந்தானைப் ப‍ృகழ்ந்தானே கம்பன் அன்ற‍ృம்
கொட‍ృத்தவனைப் ப‍ృகழ்வத‍ృதான் ப‍ృலவன் பாட்ட‍ృ
க‍ృறையெதற்க‍ృ? நான‍ృமதைச் செய்த‍ృ விட்டேன்.

உ/ஊ உயிர்மெய்ச் சீர்மைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு:

(உங்கள் உலாவியில் தெளிவாகத் தெரிய படத்தைச் சொடுக்கவும்)


இணையம் எங்கும் தமிழ்! கணினி எதிலும் தமிழ்!
இந்நிலை தோன்றிடின்
வெல்லத் தமிழ் இனி வெல்லும்!


நிறைய எழுதலாந்தான், இப்போதைக்கு இத்தோடு நிறைவு செய்கிறேன்.

அன்பொடு,
நா. கணேசன்

மேலும்,
http://news.bbc.co.uk/1/hi/health/3794479.stm
http://news.bbc.co.uk/2/hi/health/3025796.stm

நந்தியாவட்டை
















நந்தியாவட்டை (< நந்த்யாவர்த்த, வடசொல்), நந்தியாவட்டப் பூக்களைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு அப்பெயர் ஏன் வந்தது தெரியுமா?

ஸ்வஸ்திகம் என்னும் வடிவத்தில் இருப்பதால்தான். தமிழில் ஸ்வஸ்திகம் சோத்திகம் என்றாகும். இதனால் நந்தியாவர்த்தநத்தை சோத்திகப் பூ என்றும் அழைப்பதுண்டு. கார்த்திகைப் பூ எனும் காந்தள் ஈழநாட்டாருக்கும் முருகனுக்கும் சிறந்தது. லக்‌ஷ்மீகரமான சுவத்திகத்தைக் கொண்டு பழைய கல்வெட்டுகள் ஸ்வஸ்திஸ்ரீ என்று தொடங்கும்.
















வாதாபிக் கோவில் (Badami) நந்தியாவட்ட விதானம்.














பட்டாடக்கல்லு கோவிலில்.















மதுரை மாநகரம் மீனாக்‌ஷி சுந்தரேசுவரர் கோயிலை மையத்தில் வைத்து உருவான ஊர். அதுபோலும் நகரமைப்பை நந்தியாவட்ட அமைப்பு என்கிறது மானசாரம் என்னும் சில்பசாத்திர நூல். மதுரை நகரமைப்பைப் பற்றி ஜப்பானிய கட்டடக் கலைஞர்கள் எழுதியுள்ள ஆய்வேட்டை அண்மையில் கண்டேன்.

Y. Kiwamu et al., Considerations on spatial formation and segregation of caste groups in Madurai. Journal of Architecture and Planning/ Trans. of the Arch. Inst. of Japan, vol. 605, pp. 93-99 (2006).
http://sciencelinks.jp/j-east/article/200615/000020061506A0509281.php
" Abstract: This paper focuses upon the segregation of the caste groups in the city of Madurai, which is a typical "temple city" in Tamil Nadu, in order to consider the feature of the spatial formation. First, the ideal model of the city is considered by reviewing the historical forming process and the function of festivals. Secondly, it is clarified, the present condition of the caste segregation in Madurai based on the distribution of temples and shops, street names and so on. One of the conclusion is that, Madurai city has the hierarchical co-centric square formation which is similar to "Nandyavarta" described in Manasara, and the arrangement of the caste group's residences also follow it basically."




நந்தியாவர்த்தையைவிட, நந்திபதம் என்னும் சின்னம் இந்தியக் கலாசரிதத்தில் முதன்மை உடையது. அட்ட மங்கலங்களுள் தலையாயது. சாஞ்சி ஸ்தூபி போன்ற பல இடங்களில் "நந்திபதம்" இருக்கிறது. புத்தர் பெருமானை இந்த "நந்திபதம்" ஒன்றாலேயே அரியாசனத்தில் வைத்துக் காட்டுதல் நெடிய இந்தியக் கலைமரபு. இதனை மகிஷமுகம் என்பது சாலப் பொருத்தம் என்னும் தேற்றத்தை அடுத்த ஆய்வுக் கட்டுரையில் படங்களுடன் நல்க உள்ளேன்.

1880களில் தொல்லியல் வல்லுநர் பகவன்லால் இந்திராஜி நந்திபதத்தை "இது காளையின் குளம்படிகள் அல்ல. கிரேக்க தௌரஸ் சின்னம் போன்ற காளைமுகமாக இருக்க வாய்ப்புள்ளது" என்று எழுதினார். இந்திராஜியின் நந்திமுகத் தேற்றம் சரியாக இருக்கலாம் என்று 1935-ல் ஆனந்த குமாரஸ்வாமி தன் Elements of Buddhist Iconography-ல் அறிவித்தார் ஆனால் அப்போது சிந்து சமவெளி நாகரிகம் கண்டறியப்படவில்லை. மேலும் சிந்து நாகரிகத்தொடு திராவிடரைத் தொடர்புபடுத்தும் ஐராவதம், பார்ப்போலா போன்ற அறிஞர்களின் ஆய்வுத் துணிபுகள் உருவாக்கப்பெறாத காலகட்டம் அது. தற்காலத்தில் அவ்வாய்வுகளையும் கணக்கில் எடுத்தால், காளைமுகம் என்பதை விட மயிடமுகம் என்னல் சிறக்கப் பொருந்தும் என்று என் நீண்டகால ஆராய்ச்சியில் கண்டேன். ஐராவதம் மகாதேவன் ஐயா சொல்லும் ஜல்லிக்கட்டுக் காளை என்பது பொருத்தாது, அது எருமைக்கடா (போத்து) என்று போன பொங்கல் நோன்பின்போது குறிப்பிட்ட கட்டுரையைக் காண்க [a]. "Is the so-called Nandipada really a Mahishamukha?" என் ஆய்வு முடிபுகளில் முக்கியமான தேற்றமான இதனை இங்கே தர எண்ணியுள்ளேன். திருவருள் கூட்டி வைப்பதாகுக!

நா. கணேசன்

[a] The identitification of Indus civilization bovine figurines, as to whether it is a zebu or buffalo, has to be carefully looked at. Here are two examples,
http://dakshinatya.blogspot.com/2008/11/zebu-buffalo.html

on Indian svastika:

(1) S.A. Freed, R.S. Freed, Origin of the Swastika, Ceremonies in India have shed new light on an ancient symbol, Natural History, N° 1, 1980, pp. 68-75;

(2) Henry Heras, SJ. India, the empire of the Svastika, 1937 Bombay : Vakil & Sons Printers. Note that it was Father Heras who first said about the fish-star(god) equation in Indus civilisation. Often we find an inverted V, a sort of roof, over the fish sign in Indus script (Cf. vEntu 'king' < vEy- 'to cover (as roof)').

(3) A. L. Srivastava, Svastika symbol, The Journal of Academy of Indian Numismatics & Sigillography, Professor Ajay Mitra Shastri felicitation volume (1988), pp. 114-119.

சந்திரயான் - கத்தார் தேசத்தில் இந்தியர்களின் மதிப்பு

சந்திரயான் சொற்பொருள் விளக்கம்,
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

திருமதி & திரு. மயில்சாமி, சந்திரயான் திட்ட இயக்குநர் அண்ணதுரையின் பெற்றோர்.

சந்திரயான் திட்டத்துக்கு இந்தியா செலவிட்ட தொகையைவிடப் பலமடங்காக மதிப்பு உலக அளவில் இந்தியர்களுக்குக் கூடியிருக்கிறது. மத்தியகிழக்கு நாடுகளின் கத்தார் நாட்டுப் பத்திரிகையில் வந்த கட்டுரை:
http://indiantides.blogspot.com/2008/11/indian-space-prowess-in-eyes-of-arab.html
அதன் வாக்கியங்களை இம்மடலின் இறுதியில் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்


நிலா இனி நமக்குத் தொட்டுவிடும் தூரம்தான்
நன்றி: "குமுதம் ரிப்போர்ட்டர்" -13-11-2008

நிலா இனி நமக்குத் தொட்டுவிடும் தூரம்தான். இஸ்ரோ அனுப்பிய `சந்திரயான்' விண்கலம் நிலவை நெருங்கிச் சுற்றி வர ஆரம்பித்து விட்டது. உபயம்: நம் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

சரி! இந்த சந்திரயான் சாதனைத் திட்டத்துக்கும், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியிலுள்ள கோதவாடி என்ற குக்கிராமத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா? ஏன் இல்லை? `சந்திரயான்' என்ற சாதனைத் திட்டத்தைச் சாத்தியமாக்கி இருக்கும் இஸ்ரோவின் திட்ட இயக்குனர் அண்ணாதுரையின் சொந்த கிராமம் இந்த கோதவாடிதான். அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் `அ, ஆ,' வை ஆரம்பித்த அண்ணாதுரைதான், இன்று இஸ்ரோவின் திட்ட இயக்குனராகி அனைவரையும் `ஆ'வென வாய்பிளக்க வைத்திருக்கிறார்.

அண்ணாதுரை தற்போது மனைவி, மகனுடன் பெங்களூர்வாசி ஆகிவிட்டாலும், அவரது பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் கோவையில்தான் வசித்து வருகிறார்கள். கடந்த வாரம் கோதவாடி அரசு நடுநிலைப் பள்ளியில் அண்ணாதுரையின் பெற்றோருக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அடுத்ததாக அண்ணாதுரை கோவை வரும்போது அவருக்கு அமர்க்களமான வரவேற்பளிக்க, கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளும் ஜரூராகத் தயாராகி வருகின்றன. ஆனால் அண்ணாதுரை அவருக்கு இருக்கும் அலுவல் நெருக்கடியில் கோவை வர வேண்டுமே? இந்தநிலையில் கோவை, பீளமேடு ராதாகிருஷ்ணா மில் காலனியில் ஒரு சாதாரண வீட்டில் வசிக்கும் அண்ணாதுரையின் பெற்றோர் மயில்சாமி, பாலசரஸ்வதி தம்பதி, அண்ணாதுரையின் தம்பி மோகனசுந்தரம் ஆகியோரை நாம் அணுகினோம். நம்முடன் மிக இயல்பாக உரையாடினார் மயில்சாமி.

``கோதவாடிதான் என் சொந்த ஊர். எனக்கு மூன்று மகன்கள். இரண்டு மகள்கள். அண்ணாதுரைதான் மூத்தவன். என் அப்பாவுக்கு நெசவுத் தொழில். குடும்பத்தில் அதிகபட்சமாக எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருந்த நான், கோதவாடி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆனேன். 1957_ல், அதுவும் ஓராசிரியர் பள்ளி ஒன்றில் வேலை பார்க்கும் எனக்கு என்ன பிரமாதமான சம்பளம் இருக்கும்? இருந்தும் ஐந்து பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தையல் தொழிலும் செய்து வந்தேன்.

அண்ணாதுரை அப்போதே படிப்பில் சூரப்புலி. எட்டாவது படிக்கும்போதே அரசு உதவித் தொகை பெற ஆரம்பித்த அவன், இன்ஜினீயரிங் படிப்பு வரை தொடர்ந்தான். கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ.யும், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.இ.யும் (அப்ைளடு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்) படித்து முடித்தான். அவன் படிப்பை முடித்த உடனேயே புதுச்சேரியிலுள்ள `ஆரோலெக்' என்ற பிரெஞ்சு கம்பெனி வேலை தரத் தயாராக இருந்தது. ஆனால் அரசுப் பணத்தில் படித்து விட்டு அடுத்த நாட்டுக்காரர்களுக்கு வேலை பார்ப்பதா? என்ற எண்ணத்தில் அந்த வேலையை அவன் உதறித் தள்ளி விட்டான். அடுத்த மூன்று மாதத்தில் இஸ்ரோவில் அவனுக்கு வேலை கிடைத்தது. அங்கே ஓயாத ஆராய்ச்சிகள் மற்றும் `சந்திரயான் திட்டம் மூலம் இன்று உலகமே அவனைப் பற்றிப் பேசுகிறது. தூரத்து நிலவை இந்தியா தொடப்போவது பெருமைதானே?'' என்றார் மயில்சாமி.

அடுத்துப் பேசினார் அண்ணாதுரையின் தம்பி மோகனசுந்தரம். கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி முதல்வரான இவர், தமிழகப் பள்ளிகளுக்கான கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை எழுதி, தமிழக முதல்வரின் கையால் பாராட்டுப் பெற்றவர். அண்ணனைப் பற்றி ரொம்பவே சிலாகித்தார் அவர்.

``அண்ணன் படிப்பில் கெட்டிக்காரர் மட்டுமல்ல, அபார ஞாபகசக்திக்காரர். எட்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் பாடப்புத்தகத்தை ஒரே ஒரு முறை மட்டும் படித்து தேர்வில் கலக்கி முதல் மாணவனாக வந்துவிடுவார். எம்.ஏ., எம்.எஸ்.சி. படிப்பவர்களுடன் விவாதித்து கேள்விமேல் கேள்வி கேட்பார். கணிதமேதை ராமானுஜத்தின் நிரூபணமாகாத தேற்றங்களை (தியரிகளை) நிரூபிக்க முயல்வார்'' என்றவர், தனது அண்ணனைப் பற்றி இன்னும் சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

``இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் சந்திரனைச் சுற்றி ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பியிருந்தாலும், அவை நிலவின் நடுப்பகுதியை மட்டும்தான் ஆய்வு செய்திருக்கின்றன. ஆனால், இந்தியா அனுப்பியிருக்கும் சந்திரயான் விண்கலம் சந்திரனின் துருவப்பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் அண்ணன் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்குள்ள பத்திரிகைகளில் எல்லாம் அண்ணனின் படத்தை அட்டையில் வெளியிட்டு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தார்கள். கத்தார் போன்ற அரபுநாடுகளில் கட்டட வேலை செய்யப் போகும் இந்தியத் தொழிலாளர்களை இளப்பமாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் இப்போது அங்கிருந்து வெளிவரும் `கத்தார்' என்ற பத்திரிகை, `இந்தியாவில், சந்திரயான் விண்கலத்தை ஏவிய அண்ணாதுரை போன்ற நல்ல அறிவுத்திறமையுள்ள மக்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு நம்மிடம் அறிவு இல்லை. எனவே இனியாவது இங்கே வேலை செய்யும் சாதாரண இந்தியர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' என எழுதியிருக்கிறது.

நம் நாட்டைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள், இப்போது அமெரிக்காவின் `நாஸா' விண்வெளி ஆய்வுக்கழகத்தில் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாஸா அமைப்பு அண்ணனுக்கு எத்தனையோ முறை அழைப்பு அனுப்பியும் அவர் போக மறுத்துவிட்டார். அதுபோல `தமிழில் படித்தால் விஞ்ஞான அறிவு வளராது' என்ற கருத்துக்கு அண்ணன் எதிரானவர். தமிழ்வழியில் படித்த அவர்தான் இன்று இஸ்ரோவின் திட்ட இயக்குனராகவும், விஞ்ஞானியாகவும் இருக்கிறார்'' என்று சொல்லிக் கொண்டே போனவரை நாம் இடைமறித்து, ``கடைசியாக அவர் இங்கே எப்போது வந்து சென்றார்?'' என்ற கேள்வியைக் கிளப்பினோம்.

``அண்ணன் கோவை வந்து ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எங்கள் தங்கை மகளின் திருமணத்துக்குக் கூட அவரால் வரமுடியவில்லை. சீமந்தத்திற்காவது வருவாரா என்பதும் தெரியவில்லை. `3.8 லட்சம் கி.மீ. தூரத்துக்கு சந்திரயானைச் செலுத்தி, அதை நிலவுக்கு நூறு கிலோ மீட்டர் தூரத்தில் வட்டப்பாதையில் சுற்ற வைக்க வேண்டும். அது சாத்தியமான பின் வருகிறேன்' என்று அண்ணன் சொல்லிவிட்டார். அவரது வருகையை எதிர்பார்த்து இப்போது வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார் மோகனசுந்தரம்.

``சந்திரன் என்றால் நிலா. யான் என்றால் ஊர்தி. வாஜ்பாயும், அப்துல்கலாமும் அண்ணாதுரையிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் இந்த `சந்திரயான்' என்ற சமஸ்கிருத வார்த்தை, இந்தியாவின் நிலாப் பயணத் திட்டத்துக்குப் பெயரானதாம்.

நாம் விஞ்ஞானி அண்ணாதுரையுடன் தொலைபேசியில் பேசினோம். ``சந்திரயான் 1 விண்கலத்தை 100 கி.மீ. வட்டப்பாதையில் நிறுத்திய பின் அது இரண்டாண்டுகாலம் நிலாவை ஆராய்ந்து அங்கு கதிரியக்கம் உண்டா? நீர்நிலைகள், தனிமங்கள் உண்டா? நிலாவின் பருவநிலை என்ன என்பது பற்றியெல்லாம் ஒன்றுவிடாமல் ஆராய்ந்து, தகவல் அனுப்பும். அதன்பின் ஏவப்பட இருக்கும் சந்திரயான் 2, நிலாவில் எங்கே இறங்குவது என ஆராய்ந்து அங்கே ஓர் ஆய்வுக்கூடத்தை நிறுவி சந்திரயான் 1 செய்த ஆய்வுகள் சரிதானா என ஆராயும். அதன்பின் சந்திரயான் 3! அது நிலாவிலிருந்து எதையெல்லாம் எடுத்து வரமுடியும்? அங்கிருந்து வேறு கோள்களுக்கு விண்கலம் அனுப்ப முடியுமா? என ஆய்வு செய்யும். சந்திரயான் 4, நிலாவிலேயே காலனி அமைக்க முடியுமா? என ஆராயும்'' என்றார் அவர் அடக்கமாக.

நிலவைச் சுற்றி வரும் சந்திரயான் விண்கலத்தைப் பற்றித்தான் அவரது நினைவு முழுக்க இருந்த நிலையில், அவரது கோவை வருகை, பாராட்டு, பரிசளிப்பு பற்றியெல்லாம் கடைசி வரை நமக்குக் கேட்கத் தோன்றவில்லை.

Indian Space Prowess by Ahmed Ali (GM – Al Watan Gr. of Newspapers, Qatar)

While Indians are making computer chips, Arabs have not gone beyond potato chips.

The exploratory mission of the Indian spaceship to the moon launched on Friday from an island in the Bay of Bengal grabbed my attention

The unprecedented space mission is a historical one in that it aims to send a probe that will go around the planet Earth to study deposits of minerals and other elements deep in the womb of our planet.

This mission reflects the terrific scientific capabilities Indians have acquired to be able to explore the space with their science.

While the Indians have proved their capabilities in manufacturing computer chips and CDs, the Arabs are still unable to produce anything beyond potato chips and Al-Falafel (an Arabic snack of pokoda kind made out of pulses).

Away from the great Arab success in producing Al-Falafel with the Egyptian flavour or with any other flavour, India seeks to enroll itself as a member of the space club through its scientific project. It intends to launch 60 space missions till 2013 aimed at exploring the moon.

What distinguishes the Indian space programme is that it is the cheapest in terms of expenses at the international leve. The Indian budget for the space programme is estimated to be $700 millions compared with US $16 billions.

In appreciation of this Indian achievement, I would like to congratulate all Indians and express my deep respect for them and for their country.

I would like to extend my sincere congratulation to the Indian community in our country, especially to those simple workers who gather in certain areas of Doha at the weekend.

The great Indian scientific achievements pulled off by the indigenous scientific capability should compel us the Arabs to take a critical look at our own poor track record in science and technology and ask ourselves this question: What have we done for our present and for the future? Is our scientific underdevelopment caused by our political regimes or is it the result of the weaknesses of our education system or the bankruptcy of Arab mentality?

While we have become specialists in fabricating conflicts among ourselves, creating disagreements and igniting seditions and divisions, other nations of the world are busy pulling off one scientific feat after another and one civilizational victory after the other.

We have to be frank with ourselves and look for the reasons that have put India in the forefront of scientific and technological march and made it a nuclear power while the Arab mentality has no identity.

What is the reason for the Indian achievements that have become a trademark of the scientific superiority and technological sophistication while the Al-Falafel that used to be the pride of the Arab heavy industries has become an industry that is managed by Asian labourers in all restaurants in the Gulf states.

What makes me feel sad is the bad and wrong impression we have entertained about anything that comes from India to our countries. We though that India has only drivers, kema food or sauce bottles whereas the fact is that a large number of prominent scientists, engineers, managers and thinkers spreading around the world have Indian identity. The Indians have taken a big step towards exploring the space with the launch of their moon mission. In recognition of its scientific achievements, we have to change the way we think of India and Indians and start dealing with them accordingly because they belong to a great nation that has carried its flag into the space.

After India succeeded in launching Chandrayaan, we have to treat simple Indian labourers with greater respect because they deserve that.

What makes us feel jealous is that while there is a stiff competition among several nations in our neighbourhood to explore the space, the Arabs have been specializing in the art of invading one another’s territory; while other nations are vying with one another in reaching out to the stars, Arabs are busy with poems and romance. The only thing we can do well in our lives is singing for the moon, or crying over our sad situation.

(The author is General Manager of Al Watan Group of Newspapers, Doha, Qatar).