இரவாவின் காளமேகப் பாட்டுரை

முத்தமிழ் குழுமத்தில் முனைவர் இர. வாசுதேவன் அவர்களின் உரை.

மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே!


உரை:


நின் பெருமை பொருந்திய கைகளிலே யிருந்து ஒலிக்கும் வளைகளும், வளர்கின்ற சக்கரவாகப் பறவையினைப் போன்றதாக விளங்கும் தன பாரங்களும், அழுத்தமாகப் பொருந்தித் தாக்கிய விடத்துச் சிங்கத்தைத் தாக்கி யழிக்கும் சிம்புள் என்னும் வடிவை மேற்கொண்ட சிவபெருமானின் வலிய திருமேனியும் குழைந்து போயினதே!


அதுதான் எப்படியோ?


உலகத்தைப் படைத்து வளம் பெருக்கி அழகான அறச்சாலையிலே அனைவருக்கும் உணவும் அளித்து உயிர்களைக் காக்கும் பொருட்டாக, ஒப்பற்ற மாமரத்தின் கீழே அமர்ந்து, தவமிருக்கும், கருமை நிறமும், குயிலினும் இனிய குரலும் உடையவளான உமையே! அதனை எனக்குச் சொல்வாயாக!


அன்புடன்
இரவா
http://thamizhkkuil.blogspot.com/
http://thamizmandram.blogspot.com/
www.thamizhkkuil.com

0 comments: