எண்ணாயிரம் - காளமேகத்தின் ஊர்

காளமேகப் புலவரின் ஊர் என்ன என்று 17-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றின் மூலம் புலப்படுகிறது. அக்கல்வெட்டு காஞ்சி வரதராசப்பெருமாள் கோவில் இராயகோபுரத்தில்
தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கண்டறிந்தனர்.

கல்வெட்டில் நேரிசை வெண்பா:

         மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்த
         கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்
         அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே;
         இவனுக்கூர் எண்ணா யிரம்!


வெண்பாவின் சுவையும், சிலாலிகிதம் ஆன பெற்றியையும் நோக்குங்கால் காளமேகத்தின் பாடலே என எண்ணத் தோன்றுகிறது. கண்ணபிரானுக்கும், காளமேகத்திற்கும் உள்ள ஒப்புமைகளை இயம்புகிறது: கண்ணன் என்றால் கருப்பன் எனப்பொருள் (கிருஷ்ண > கண்ஹ, பிராகிருதத்தில்). காளமேகம் வரையாது வழங்கும் கருமுகில். கண்ணபெருமானுக்கு திருவரங்கம் ஒன்றுதான் ஊராம். ஆனால், காளமேகத்துக்கோ ஊர் எண்ணாயிரம் (8000!) என்கிறது
பழைய கல்வெட்டு. இன்றைய எண்ணாயிரம், டாக்டர் இரா. கலைக்கோவன் கட்டுரை:
http://www.varalaaru.com/Default.asp?articleid=359

திருவானைக்கா உலா: 3 பதிப்புகள் உண்டு. 1870கள், பின்னர் மு. அருணாசலம், இன்னும் ஒருபதிப்பு - சைவ ஆதீனம். இருக்கின்றன, தட்டெழுதலாம்.

சித்திரமடல்: 1880-ல் அச்சானது. பின்னர் ஆழ்வார் திருநகரிப் பிரதிப்படி வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் 1948-ல் பெ. தூரனின் கோவை புதுமலர் நிலையம் மூலம் பதிப்பானது. இரண்டும் ஒப்பிட்டு 1978-ல் கழக வாயிலாகவும் வெளியானது. தட்டெழுதலாம்.

அன்புடன்,
நா. கணேசன்

2 comments:

குமரன் (Kumaran) said...

எண்ணாயிரமா இவர் ஊர்? அறியத்தந்ததற்கு நன்றி ஐயா.

Thangamani said...

வணக்கம். தமிழ்பதிவுகள் உலகத்துக்கு வருக.